ஓடுகிறார்…. ஓடுகிறார்… நாராயணசாமி ஓடுகிறார்
கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் தலைவர் எஸ்.வி. உதயகுமாருக்கு வெளிநாட்டுப் பணம் ரூ.150 கோடி வந்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து, பொதுக் கூட்டங்களிலும் பேசி வந்தார். அமைச்சர் நாராயணசாமியின் இந்த அவதூறுக்கு எதிராக உதயகுமார், மத்திய அமைச்சர் நாராயண சாமிக்கு தனது வழக்கறிஞர் இராதாகிருடடிணன் வழியாக தாக்கீது அனுப்பியிருந்தார். உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் நாராயணசாமி, தொண்டு நிறுவனங்கள் வழியாக உதயகுமாருக்கு பணம் வருவதாகத் தாம் கூறவே இல்லை என்றும், தான் கூறாத ஒன்றை கூறுவதாக உதயகுமார் கூறி, தன்னை களங்கப்படுத்துவதாகவும், தனது வழக்கறிஞர் வழியாக பதில் அனுப்பியுள்ளார். இதன் மூலம் ‘வீரம்’ பேசிய நாராயணசாமி, தலைகுப்புற சரணடைந்துள்ளார். “உங்களுடைய கட்சிக்காரர் உதயகுமார் கூறியிருப்பதுபோல், அமைச்சர் நாராணசாமி, அவருக்கு எதிராக, எந்தப் புகாரையும் கூறவில்லை. அவர் நடத்தும் தொண்டு நிறுவனம் வரியாக ரூ.150 கோடி பெற்றதாக அமைச்சர் நாராயணசாமி ஒரு...
