89 வயது பெரியார் தொண்டரின் உணர்ச்சிமிகு கடிதம்

திருவரங்கத்தைச் சார்ந்த பெரியார் பெருந்தொண்டர் ஆ.பெரியசாமி எழுதியுள்ள கடிதம்:

எனக்கு 89 வயதாகிவிட்டது. ‘பெரியார் முழக்கம்’ இதழை எனது முதுமை காரணமாக படிக்க இயலவில்லை. எனவே என் முகவரிக்கு இதழை அனுப்ப வேண்டாம் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதழை படிக்க முடியவில்லையே என்று வருத்தம் மேலிடுகிறது. எங்கள் ஊர் செயலாளர் த.அசோக் வழியாக கழக நிகழ்ச்சிகளை நான் கேட்டு அறிந்து வருகிறேன்.

வயது 89 ஆகிவிட்டாலும், என்னால் முடிந்த அளவு இந்தக் கழகத்துக்கு உதவிட வேண்டும் என்று விரும்புகிறேன்.  உதவியும் வருகிறேன். பெரியார் திராவிடர் கழகத் தொண்டும், (பெரியார் முழக்க’த்தின் செய்திகளும் எனக்கு மிக மிக விருப்பமாக உள்ளது.

பெரியார் அப்படியே நடந்து வருவதுபோலவே – நான் உணருகிறேன். பெரியாரின் உண்மையான தொண்டர் என்ற உணர்வோடு இதைக் கூறுகிறேன்.

– ஆ.பெரியசாமி,

154, சங்கிலி தோப்பு, அம்மா மண்டப சாலை, திருவரங்கம்-4.

பெரியார் முழக்கம் 21062012 இதழ்

You may also like...