மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க மண்டல மாநாடு: திருச்சி மாவட்டக் கழக தீர்மானம்

3.6.2012 அன்று காலை 11 மணியளவில் இளந்தாடி துரைராசன் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தாமோதரன், கருர் மாவட்ட செயலாளர் காமராஜ், தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி சகிலா விடுதியில் மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட இணை செயலாளர் புதியவன், மாவட்ட பொருளாளர் மனோகரன், திருவரங்க நகர செயலர் அசோக், சிரிகாந்த், பழனிவேலு, பொன்னுசாமி, முருகானந்தம் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டம் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் சார்பாக நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சியில் ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் சார்பாக மனு சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மண்டல மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 21062012 இதழ்

You may also like...