பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்க உதவுங்கள் : சோனியாவுக்கு நீதிபதி கே.டி.தாமஸ் உருக்கமான கடிதம்
ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு தூக்குத் தண்டனை விதித்து உச்சநீதிமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கிய நீதிபதி கே.டி.தாமஸ், காங்கிரஸ் தலைவரும் ராஜிவ் காந்தி மனைவியுமான சோனியாவுக்கு அக்டோபர் 18ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். 1991ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கில் சிறைப் படுத்தப்பட்டுள்ளோரின் தண்டனை குறைப்புக்கு பரந்த உள்ளத்தோடு, சோனியா தனது சம்மத்தை தெரிவிக்க முன்வர வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுள்ளார். அவரது கடிதத்தின் விவரம்: “2014ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, ராஜிவ் கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருக்கும் 7 பேருக்கும் தண்டனைக் குறைப்பு வழங்க தமிழ்நாடு அரசு முன் வந்தபோது மத்திய அரசு எதிர்த்தது. அந்த வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நீங்களும் ராகுல் காந்தியும், வாய்ப்பிருந்தால் பிரியங்காவும் குடியரசுத் தலைவருக்கு தண்டனைக் குறைப்பு வழங்கலாம் என்று உங்கள் சம்மதத்தை தெரிவித்து ஒரு கடிதம் எழுதுவீர்களே யானால், மத்திய அரசு,...