தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்கிய ‘நீட்’ முடிவுகள்

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வை எழுதிய 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 39.56 சதவீதம். ஆனாலும் அகில இந்திய சராசரி தேர்வு விகிதமான 56.5 சதவீதத்தைவிட தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் குறைவு.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து தேர்வு எழுதிய 17,630 மாணவர்களில் 2,567 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்னர். இந்தப் பள்ளிகளிலிருந்து தேர்ச்சி பெற்றவர்கள் 4.27 சதவீதம் மட்டுமே.

அரசு மற்றம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்களில் 300லிருந்து 400 மதிப்பெண் பெற்றவர்கள் 23 பேர். தமிழ் வழிப் பள்ளியில் பயின்றவர்கள் 5 பேர் மட்டும்.

இந்தியாவிலேயே 25 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. மொத்தம் 3250 மருத்துவக் கல்லூரிக்கான இடங்களோடு மருத்துவ சேவையில் முன்னிலையில் நிற்கும் மாநிலம் நீட் தேர்வில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

தொகுப்பு: ‘ இரா’

பெரியார் முழக்கம் 13062019 இதழ்

You may also like...