ஆந்திர முதல்வரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

தமிழ்நாட்டில் பெரியார் தொடங்கி வைத்த வகுப்புகளுக்கு சமநீதி வழங்கும் சமூகநீதிக் கொள்கையை ஆந்திராவின் முதல்வராகியுள்ள ஒய்.எஸ். ஜெகன்மோகன் (ரெட்டி) பின்பற்றியிருக் கிறார். அவரது சமூகம், முன்னேறிய சமூகம். ஆனால், 5 துணை முதல்வர் பதவிகளை உருவாக்கி, அவற்றை சமூகரீதியாகப் பிரித்து வழங்கியிருக்கிறார். பமுலா புஷ்பா சிறிவேணி (பழங்குடி), டில்லி சுபாஷ் சந்திரபோஸ் (பிற்படுத்தப்பட்டோர்) அல்ல கலி கிருஷ்ணசிறினிவாஸ் (கப்பு சமூகம்), கே. நாராயண சாமி (பட்டியல் இனப் பிரிவு), அம்சத் பாஷா (முஸ்லிம்) ஆகியோர் துணை முதல்வர்கள். அனைவருக்கும் வருவாய்த் துறை, மருத்துவக் கல்வி, பழங்குடி நலன், வரிவிதிப்பு என்று முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி உள்துறை அமைச்சர் எனும் அதிகாரமிக்க பதவிக்கு சுச்சரிதா என்ற பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார். துவக்கம் நன்றாகவே இருக்கிறது.

பெரியார் முழக்கம் 13062019 இதழ்

You may also like...