மே 25, 27இல் மேட்டூர் – திருப்பூரில் கழக தோழர்கள் கட்டமைப்பு நிதி வழங்குகிறார்கள்

கழகத் தோழர்கள், களப்பணி யாளர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்ச நன்கொடை ரூ.20000/- என்று கழகம் அறிவித்தத் திட்டத்தைத் தோழர்கள் உற்சாகத்துடன் செயல்படுத்தி வருகிறார்கள்.

கழகத் தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான இந்த நிதி திரட்டும் இயக்கத்தின் முதல் கட்டமாக மேட்டூர், திருப்பூரில் நிதி வழங்கும் நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.

மே 25ஆம் தேதி  காலை 11 மணியளவில் மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கழகங்கள் சார்பில் கழகத் தலைவர், பொதுச் செயலாளரிடம் நிதி வழங்கப்படுகிறது.

மே 27 அன்று திருப்பூரில் ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி மாவட்டக் கழகத் தோழர்கள் முதல்கட்ட நிதியை கழகத் தலைவரிடம் வழங்குகிறார்கள்.

கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.

பெரியார் முழக்கம் 09052019 இதழ்

You may also like...