திருப்பூர் மாவட்டக் கழக முடிவுகள்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் வீரபாண்டி பிரிவு பொருளாளர் துரைசாமி வீட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் காமராசர் பிறந்த நாள் விழாவையொட்டி ஜூலை 14ஆம் தேதி திருப்பூரிலும், 15ஆம் தேதி பல்லடத் திலும், 16ஆம் தேதி மடத்துக்குளம் பகுதி களிலும் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் திருப்பூர் தோழர்கள் துரைசாமி, முகில்ராசு, நீதிராசன், அகிலன், முத்து, தனபால், விஜயகுமார், அய்யப்பன், பரிமளராசன், சிவகாமி, முத்துலட்சுமி, கனல் மதி, பிரசாந்த், நஜ்முன்னிசா, பல்லடம்  கோவிந்தராஜ், சண்முகம், தேன்மொழி, மடத்துகுளம் மோகன், சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 13062019 இதழ்

You may also like...