எங்கெங்கும் பார்ப்பன ‘மனுதர்மம்’
நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு: மனுதர்மக் காவலருக்கு புகழாரம்! காஞ்சிபுரம் மடத்தின் சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி, மனுதர்மத்தையும் வர்ணபேதத்தையும் வெளிப்படையாக ஆதரித்தவர். அதை தெய்வத்தின் குரல் என்ற தலைப்பில் நூலாக அச்சிட்டு வெளியிட்டு இன்று வரை பரப்பி வருகிறார்கள். அவரது ஜெயந்தியை (அதாவது பிறந்த நாள்) முன்னிட்டு ‘இந்து’ நாளேட் டில் பார்ப்பனர் ஒருவர் ‘மகா சுவாமி’ புகழ் பாடும் கட்டுரை ஒன்றை (ஜூன் 1, 2012) எழுதியிருக்கிறார். அக் கட்டுரையில் சீனியர் சங்கராச்சாரியின் கருத்து ஒன்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. நாடு ‘சுதந்திரம்’ பெற்ற காலத்தில் இவ்வாறு கூறினாராம். ஆட்சியாளர்களுக்கு அரசியல் சட்டமே உயர்வான தர்ம நூல். ஆனால், ஆட்சியாளர், உழைக்கும் மக்கள், வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியது தர்ம சாஸ்திரங்களே என்று ‘மகா பெரியவர்’ கூறியதாகக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். “மகா பெரியவர்” கூறும் தர்ம...