பெரியார் கருத்துகளை சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் திருச்சி சிவா முழக்கம் ‘விதவை’ப் பெண்களைக் காக்க தனிச் சட்டம் கொண்டு வருக!
நாட்டில் “விதவைகள்” நலத்திற்காகப் பொருத்தமான சட்டம் கொண்டுவர வலியுறுத்தி, மாநிலங்களவையில் திருச்சி சிவா (திமுக) தனி உறுப்பினர் தீர்மானம் கொண்டு வந்தார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. வெள்ளிக்கிழமையன்று மாநிலங்களவை உறுப்பினர்களின் தனி உறுப்பினர் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் நாளாகும். இதில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா, நாட்டில் விதவைகள் படும் துன்பங்களை அடுக்கி, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பொருத்தமான சட்டத்தை நிறைவேற்றிட அரசாங்கம் முன்வர வேண்டும் என ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அதன்மீது உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் விதவைகளின் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 61 ஆயிரத்து 278 ஆகும். அதாவது நாட்டின் மொத்த பெண்களின் தொகையில் 7.37 சதவீதமாகும். இது உலகிலேயே அதிகம் உள்ள விதவைகளின் எண்ணிக்கையாகும். விதவைகள் நம் நாட்டில் பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். விதவைகள் மறுமணம் என்பது அபூர்வமாகும். அவர்கள் பொருளாதார ரீதியாக,...