நீதிபதிகள் மீது உரிய நடவடிக்கை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகம் கடிதம்

கொச்சி பார்ப்பன மாநாட்டில் பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி அனிதா சுமந்த், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

“அரசியல் சட்டத்தின்படி விருப்பு வெறுப்பு இல்லாமல் நீதி வழங்குவதாக உறுதியேற்று உயர் பொறுப்பிற்கு வந்துள்ள நீதிபதிகள் தங்களின் ஜாதி சங்க மாநாட்டில் பங்கேற்கலாமா? அதுவும் பிராமணர்கள் இரு பிறப்பாளர்கள், உயர்வானவர்கள் என்று கூறி ஜாதிப் பாகுபாட்டை நியாயப்படுத்துவது அரசியல் சட்டத்துக்கே எதிரானது அல்லவா? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கடிதத்தில் வற்புறுத்தப்பட்டுள்ளது. (கடிதத்தின் முழு விவரம் பின்னர்)

பெரியார் முழக்கம் 01082019 இதழ்

You may also like...