ஆர்.எஸ்.எஸ்.  பற்றி காமராஜர் , காந்தி

ஆர்.எஸ்.எஸ்.  பற்றி காமராஜர்

“குறிப்பாக அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுக்கு) பயம் என்னைப் பற்றித்தான். இந்த காமராஜ் தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்து தீருவேன் என்றே சொல்கின்றான். அவன்தான் அதிலே தீவிரமாக இருக்கின்றான் என்று நினைக்கிறார்கள். என் வீட்டுக்குத் தீ வைக்கின்றான். ஆனால் நான் இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். என் வேலையை நான் செய்தே தீருவேன்.”

– 11.12.1966 சேலம் பேருரை. நவசக்தி 15.12.1966

ஆர்.எஸ்.எஸ். பற்றி காந்தி

“‘வார்தா’ ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமுக்கு ஆர்.எஸ்.எஸ்.சின் அழைப்பின் பெயரில் காந்தி பார்வையிட சென்ற போது காந்தியின் சீடர் காந்தியிடம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நல்ல சேவைகளை செய் கிறார்கள் என்று சொன்ன போது. காந்தியார் அளித்த பதில் என்ன தெரியுமா?

“ஹிட்லரின் நாசிப்படையும், முசோலியின் பாசிசப் படையும் இதே போல்தான் சேவை செய்தது என்பதை மறந்துவிட வேண்டாம்.”

பெரியார் முழக்கம் 18112021 இதழ்

You may also like...