மிகவும் சிரமமான கேள்வி !

பகுத்தறிவுவாதி : கடவுள் எத்தனை உண்டு ?

ஆத்திகன் : ஒரே கடவுள் தான் உண்டு.

பகுத்தறிவுவாதி : இவ்வளவு மதங்களும் யாருக்காக உருவாக்கப்பட்டது ?

ஆத்திகன் : மனித வர்க்கத்திற்காகத்தான்.

பகுத்தறிவுவாதி : மதத்தால் ஏற்படும் பயன் என்ன ?

ஆத்திகன் : மனிதன் கடவுளை அறியவும், கடவுளுக்கும் தனக்கும் சம்மந்தம் ஏற்படுத்திக் கொள்ளவும், ஆத்ம ஞானம் பெறவும், கடவுள் கருணைக்குப் பாத்திரனாகவும் பயன்படுவதாகும்.

பகுத்தறிவுவாதி : அப்படியானால் ஒரே கடவுள் ஒரே மனித வர்க்கத்துக்கு இத்தனை மதங்களை ஏற்படுத்துவானேன் ?

ஆத்திகன் : இது மிகவும் சிரமமான கேள்வியாக இருக்கிறது. பெரியவர்களைக் கண்டு பேசிய பிறகு பதில் சொல்லுகிறேன்.

– பகுத்தறிவு -1938

(‘சித்திரபுத்திரன்’ என்ற புனைப்பெயரில் பெரியாரால் எழுதப்பட்ட நீண்ட உரையாடலின் சிறு பகுதி)

 

பெரியார் முழக்கம் 23122021 இதழ்

You may also like...