எது நாத்திகம்?

நமது நாட்டிலோ, சாமி தாசி வீட்டிற்குப் போகும் உற்சம் வேண்டாம் என்றால், அது நாஸ்திகம்! சமணரைக் கழுவேற்றும் உற்சவம் வேண்டாம் என்றால், அது நாஸ்திகம்! குடம்,குடமாய் நெய்யையும், வெண்ணெயையும் கொண்டு போய் நெருப்பில் போட்டு வீணாக்கும் கார்த்திகை தீப உற்சவம் வேண்டாம் என்றால், அது நாஸ்திகம்! இளங் குழந்தைகளைப் பாலில்லாமல் கஷ்டப்பட வைத்துவிட்டு, குடம் குடமாய்ப் பாலைக் கொண்டு போய்க் கல்லின் மீது கொட்டும் பாலாபிஷேக உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்!

பெரியார், குடிஅரசு – 13.1.1929

பெரியார் முழக்கம் 29062023 இதழ்

You may also like...