தகுதி, திறமை என்ற சொல்லே அரசாங்க அகராதியில் இருந்து எடுக்க வேண்டும்

பாஸ் செய்த பின்பு ‘தகுதி, திறமை, தரம்’ எதற்காகப் பார்க்கப்படு கின்றது ? அது எதற்காக வேண்டும் ? அதன் அர்த்தம் என்ன ? அதன் பலன் என்ன? மந்திரிசபையில் பெரிய பதவியில் அதிகாரத்தில் தரமுள்ளவர் களால், திறமை உள்ளவர்களால்’ ஏற்பட்ட நன்மை, பெருமை என்ன ? தகுதி, திறமை, தரம் அற்றவர்களால் ஏற்பட்ட கெடுதி என்ன ? அதிகாரம், உத்தியோகங்களிலும் வகுப்பு, உள்வகுப்பு, உட்பிரிவு, சாதி வகுப்புரிமை வேண்டும். சர்க்காருக்கு 50 கோடி ரூபாய், மது இலாகா மூலம் வருவாய் கிடைத்திருக்கிறது. இது யார், எந்த வகுப்பார் தந்த பணம், இந்த வருவாய் கொடுத்தவர்களை வடிகட்டுவதுதான் பலனா ? இதைக் கவனிக்க வேண்டும்.

கண்டிப்பாய் அரசாங்க அகராதியில் தகுதி, திறமை, தரம் என்ற சொற்களை எடுத்துவிட வேண்டும்.

இது என் சொந்த கருத்து.

விடுதலை 18.07.1972

பெரியார் முழக்கம் 27012022 இதழ்

You may also like...