தமிழர்களுக்கு செல்வாக்கும் சக்தியுமுள்ள பத்திரிகையில்லை

“நம் நாட்டில் தமிழர்களில் எத்தனையோ யோக்கியர்கள், விவேகிகள், கெட்டிக்காரர்கள் இருந்தா லும் அவர்கள் பொது ஜனங்களுக்குத் தெரியக் கூடாத வராய் இருக்கிறார்கள். இதன் காரணம் தமிழர்களுக்கு செல்வாக்கும் சக்தியுமுள்ள பத்திரிகையில்லை.

மகாத்மா காந்திக்கே தமிழ்நாட்டில் தமிழர் யோக்கியதை தெரிய வேண்டுமானால், ஒரு பிராமணனைக் கொண்டோ, ஒரு பிராமணப் பத்திரிகையைக் கொண்டோ தான் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் யோக்கியதை தமிழ்நாட் டினருக்குத் தெரிய வேண்டுமானால் பிராமணப் பத்திரிக்கையின் மூலமாகத்தான் அறிய வேண்டியிருக் கிறது. இதைவிடத் தமிழர்களுக்கு வேறு இழிவு வேண்டியதே இல்லை. 100-க்கு 90-க்கு மேற்பட்ட ஜனத் தொகையுள்ள கூட்டத்தாருக்கு தங்கள் நாட்டில் தங்களைப் பற்றி தங்கள் சமூகத்தாரே அறிந்து கொள்ள ஒரு சாதனம் இல்லை என்றால் இதைப் பற்றி என்ன நினைப்பது?”

– ‘குடிஅரசு’ 02.08.1925

பெரியார் முழக்கம் 10112022 இதழ்

You may also like...