விஷ்ணுவும் சிவனும் எங்கிருந்து வந்தவர்கள்

இராட்சதர்கள் தபசு செய்தார்கள்; வரம் பெற்றார்கள்; அந்த வரத்தைக் கொண்டு அக்கிரமம் செய்தார்கள் – என்பதெல்லாம் இந்நாட்டுப் பழங்குடி மக்களையும், அவர்கள் தலைவர்களையும் இராட்சதர்கள் என்று சொல்லிக் கொல்லுவதற்குக் கடவுள்களும், தேவர்களும் என்ற பெயர்க்கொண்ட ஆரியர்கள் வழிதேடிக் கொண்ட ஒரு சாக்கே அல்லாமல் அவர்களது வரம் எதுவும் பயன்பட்டதாகத் தெரியவில்லை.

 

விஷ்ணு, சிவன் ஆகியவர்கள் யாவர்? எப்போது உண்டானார்கள்? எப்படி உண்டானார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? – என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது.

 

பெரியார், குடிஅரசு – 20.10.1947

பெரியார் முழக்கம் 22062023 இதழ்

You may also like...