Category: குடி அரசு 1938

கங்கை கொண்ட (காங்கரஸ்)  சாக்கடை

கங்கை கொண்ட (காங்கரஸ்) சாக்கடை

  காங்கரசானது கங்கைக்குச் சமமாக ஒப்பிடப்படுவதுண்டு. கங்கைப் புனித நதியெனப் பெயர் பெறும். காங்கரசும் தேசீயம், சுயராஜ்யம் ஆகிய விஷயங்களில் நாட்டினுக்கும் மக்களுக்கும் அளப்பறிய நன்மை செய்யும் ஸ்தாபனமாகக் கருதப்படுகிறதன் காரணமாகக் கங்கைக்கு உவமானங் கூறப்படுகிறது. கங்கையிலும் சாக்கடைகள் கலக்கின்றன. காங்கரஸ், கங்கையிலும் சாக்கடைகள் கலக்கின்றன, கங்கையில் கலக்கும் சாக்கடைக் கங்கையுடன் ஐக்யமாகிப் புனிதமாகி விடுகிறது. காங்கரஸ் கங்கையில் கலக்கும் சாக்கடைகளோ தாம் புனிதமடைதல் ஒரு புறமிருக்கக் காங்கரஸ் கங்கையையே அசுத்தப்படுத்திவிட்டன. தேசீயம் வேண்டும் சபையில், சுயராஜ்யம் வேண்டும் சபையில், நாட்டினடிமையொழிய விரும்பும் சபையில், நாட்டின் க்ஷேமாபிவிர்த்தியை கோரும் சபையில் இன்று நர்த்தனமிடுபவை எவை எனக் கூர்ந்து நோக்கின் உண்மை வெளியாகும். காங்கரஸ் மகாசபையில் கூடியிருப்போர் அத்தனைபேரும், ஏன் 30 லக்ஷ மக்களும் சுயராஜ்யத் தாகங் கொண்டுதான், தேசீயப் பற்றுக் கொண்டுதான் சேர்ந்து இருக்கின்றனரா என்பதனைச் சிறிது ஆராய்ந்தால் உண்மை புலனாகும். காங்கரஸ் மகாசபையில் இன்று வகுப்பு வாதிகள், பதவி வேட்டைக்காரர்கள்,...

ஆச்சாரியாரும் கதரும்  – கதர் கட்டி அலுத்தவன்

ஆச்சாரியாரும் கதரும் – கதர் கட்டி அலுத்தவன்

  தோழர் கனம் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சட்டசபை பட்ஜட் விவாதத்தின்போது கதர் சம்மந்தமாய் எழுந்த பிரச்சினைக்கு பதில் அளிக்கையில் ” எனக்கு அதிகாரமிருந்தால் கதர் கட்டாததற்கு ஆக சர்க்கார் தொழில் இலாக்கா டைரக்டரை டிஸ்மிஸ் செய்து விடுவேன்” என்று பேசியிருக்கிறார். இது தினசரி பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது. இதுவரை அந்த சேதிக்கு எவ்வித மறுப்பும் வரவில்லை. ஆனதால் கனம் ஆச்சாரியார் அந்தப்படி பேசியிருக்கிறார் என்பது உண்மையேயாகும். இதிலிருந்து காங்கரஸ்காரர்கள் உத்தியோகம் பார்ப்பதின் கருத்தும் அவர்களது நிர்வாக யோக்கியதையும் எப்படிப்பட்டது. என்பது நன்றாய் விளங்கும். அது ஒரு புறமிருக்க அரசாங்க சிப்பந்திகள் கனம் ஆச்சாரியார் பேச்சிலிருந்து என்ன நினைப்பார்கள் என்பதை யோசிப்போம். கதர்கட்டாத ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர் டிஸ்மிஸ் செய்யப்படவேண்டிய அளவுக்கு அயோக்கியராக பாவிக்கப்படவேண்டியவராகிறார். கனம் ஆச்சாரியாரால் அதிகாரமில்லாத காரணத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட முடியாத உத்தியோகஸ்தர்கள் போக மற்றபடி டிஸ்மிஸ் செய்யவோ அல்லது வேறுவிதமாய் தொலைக்கவோ தொல்லை கொடுக்கவோ செய்யப்படக்கூடிய உத்தியோகஸ்தர்கள்...

திருவாங்கூரும் பார்ப்பனீய கொடுமையும்

திருவாங்கூரும் பார்ப்பனீய கொடுமையும்

  திருவாங்கூரில் ஸர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்களது ஆட்சி இன்று ஒரு குட்டி ஹிட்லர் ஆட்சியாக நடைபெற்று வருகிறது. அங்கு அடக்குமுறை தாண்டவமாடுவது மாத்திரமல்லாமல் அது ஒரு பார்ப்பன ராஜ்யமாகவே ஆக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. அதன் முழு விபரத்தையும் அங்கு நடக்கும் பார்ப்பன கோலாகலங்களையும் வெளி ஜனங்கள் அறிய முடியாமல் செய்வதற்கு எவ்வளவு சூழ்ச்சி செய்யலாமோ அவ்வளவும் செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள பத்திரிகைகள் உள்ள விஷயங்களை வெளியிட்டதற்கு ஆக ஜாமீன் பறிமுதல் செய்யப்பட்டதோடு பத்திரிகை நடத்த கொடுத்திருந்த அநுமதியையும் கேன்சல் (தள்ளுபடி) செய்யப்பட்டு வருகிறது. அசோசியேட் பிரஸ் என்னும் இந்தியப் பத்திரிகை செய்தி ஸ்தாபனத்தையும் விலைக்கு வாங்கப்பட்டோ அல்லது வேறு வழியில் கைவசப்படுத்தப்பட்டோ அதன் மூலம் விஷயம் வெளியாக்கப்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது. சென்னைத் தினசரிப் பத்திரிகைகள் பெரிதும் பார்ப்பனப் பத்திரிகைகளானாலும் பார்ப்பன நிருபர்களையே கொண்டவைகளானதாலும் விஷயங்கள் வெளியாகாமல் அடக்கிவிடப்படுகின்றன. ~subhead சர்வம் பார்ப்பனமயம் ~shend இந்நிலைமையில் திருவாங்கூர் பிரஜைகள்...

சபாஷ் பரோடா

சபாஷ் பரோடா

  மதத்தின் போல், நமது நாட்டில், பரப்பி வைக்கப்பட்டுள்ள பலவித ஆபாசங்களில் மோசமான, ஆபத்தான ஆபாசம் மாந்திரீகம், யக்ஷணி வசியம் என்பனவாகும். வினைகளைத் தீர்க்கவும், நோய் போக்கவும் கூடாதவரைக் கூட்டி வைக்கவும் போன பொருளை மீட்கவும் புத்திர சந்தானம் உண்டாகவும் மந்திரக்காரனைத் தேடி அலையும் குடும்பங்கள் பல உள்ளன. பேய், பில்லி, சூனியம் முதலிய எண்ணற்ற ஆபாசங்கள், பலருக்கு வயிற்றுப்பிழைப்பு மார்க்கமாகவே போய்விட்டது. நெற்றியில் ஒரு அங்குல அளவு குங்குமப்பொட்டும், கையில் ஒரு உடுக்கையும் வைத்துக்கொண்டு காளி அருள் பெற்றவன், நெற்றி வியர்வை நிலமீது சிந்த, கையில் மண் வெட்டியோ, கோடாரியோ, கலப்பையோ தாங்கி பாடுபடும் பாட்டாளியைவிட பல நூறு மடங்கு செளக்கியமாக வாழுகிறான். மதத்தின் பேரால் முளைத்துள்ள ஆபாசங்கள், பேயர்கள் பலருக்கு, வெறியாட்டத்தையும், களியாட்டத்தையும் தந்து மக்களின் வாழ்வைப் பாழ்படுத்துகிறது. பட்டம் பெற்ற படிப்பாளிகளும், இந்த உடுக்கைக்காக உலுத்தர்களிடம் நம்பிக்கை வைக்கிறார்கள். பூசாரி, சாமி, சுவட்டோலைச் சோதிடன், அநுமார் உபவாசி,...

சேலத்துக்கு என்ன பதில்  இது என்ன கத்தரிக்காய் பட்டணமா?

சேலத்துக்கு என்ன பதில் இது என்ன கத்தரிக்காய் பட்டணமா?

  இன்று பதவியில் உள்ள மந்திரிகள் சத்திய கீர்த்திகளாம், மகா யோக்கியர்களாம், தேசாபிமானத்துக்காகவும், மக்களுக்கு நன்மை செய்வதற்குமாகவே மந்திரி வேலை பார்க்கிறார்களாம். அவர்கள் தான் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாம். அதற்கு ஆதாரம் எலக்ஷனில் மெஜாரிட்டி ஓட்டுகளால் அவர்கள் வெற்றி பெற்றிருப்பதுதானாம். மற்றும் அவர்களுக்கு உதவியாய் அவர்களது கட்சியில் காங்கரசின் பேரால் இருக்கிற சட்டசபை மெம்பர்களும் காரியதரிசிகளும்கூட அவர்களைப் போலவே மகா யோக்கியர்களாம், உத்தமர்களாம், கண்ணியம் வாய்ந்த பெரிய மனிதர்களாம். ஆதலால் அவர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் சரியானவைகளாம். அக்காரியங்களைப் பற்றி வேறு யாரும் ஆக்ஷேபணை சொல்லக்கூடாதாம். அப்படி மீறி யாராவது ஆக்ஷேபணையோ குறையோ சொல்லுகிறவர்கள் தேசபக்தர்கள் அல்லாதவர்களாம். தேசாபிமானம் இல்லாதவர்களாம். சுயநலக்காரர்களாம். அவ்வளவு மாத்திரம் அல்லாமல் யோக்கியர்கள் கூட அல்லவாம். கெட்ட எண்ணக்காரர்களாம். இவையும் இவை போன்றனவுமேதான் இன்றைய மந்திரிகள் முதல் அவர்களுடைய காரியதரிசிகள், கூலிகள், பத்திரிகைகள் முதலாகியவர்கள் வரை எல்லோர்களுடைய சகல செய்கைகளுக்கும் சமாதானமாக சொல்லப்பட்டு வருகின்றன. ~subhead பழைய...

ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்  முனிசிபல் ஜில்லா போர்டு தேர்தல்

ஸ்தல ஸ்தாபனத் தேர்தல் முனிசிபல் ஜில்லா போர்டு தேர்தல்

  ஏப்ரல் மாதத்தில் ஸ்தல ஸ்தாபனம் என்னும் முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு ஆகியவைகளுக்கு தேர்தல் நடக்கப் போகின்றது. இத்தேர்தல்கள் சென்ற நவம்பர் மாதத்திலேயே நடந்திருக்க வேண்டியவைகளாகும். ஆனால் நவம்பரில் தேர்தல் நடத்துவதில் காங்கரஸ்காரர்களுக்கு சிறிது கஷ்டமிருந்தது. என்னவெனில் முனிசிபல் ஓட்டர்களாக அப்போது முனிசிபாலிட்டிக்கு வரி செலுத்துகின்றவர்கள் மாத்திரம் இருந்து வந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் பெரும்பாலோர் பார்ப்பனரல்லாதாராய் இருந்ததோடு சிறிது விஷயமறிந்த ஞானவான்களாகவும் இருந்தார்கள். அந்த ஓட்டர்களைக் கொண்டு தேர்தல் நடந்தால் பெரிதும் பார்ப்பனரல்லாதார்களும் அதுவும் முன் இருந்தவர்களில் பலருமே வருவார்கள் என்றும் அதனால் பார்ப்பனர்களோ பார்ப்பனக் கூலிகளோ வர முடியாமல் போய்விடுமென்றும் கருதி அது சமயம் நவம்பரில் நடக்க வேண்டிய தேர்தலை நிறுத்தி விட்டு பெரிதும் பாமர மக்களைக் கொண்ட (அசம்பிளி) மஞ்சள் பெட்டி ஓட்டர்கள் அத்தனை பேரையும் முனிசிபல் ஓட்டர்களாக ஆக்க ஒரு சூò செய்தார்கள். ~subhead சகல பார்ப்பனரும் ஓட்டர்கள் ~shend அப்படிச் செய்தும் பார்ப்பன மந்திரிகள்...

ஆச்சாரியார் இந்திரஜாலம்!

ஆச்சாரியார் இந்திரஜாலம்!

  சேலம் தகராறு மறுக்கமுடியாத ருஜúக்கள் பொம்மைப் பிரதிநிதிகள் மெளனம்! சேலம் தண்ணீர்த் திட்டத் தகராறு விஷயமாக சுகாதார மந்திரி கனம் டாக்டர் ராஜன் சார்பில் பிரதம மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார் சென்னை அசம்பிளியில் கூறிய சமாதானம் வழக்கம் போல் மழுப்பல் சமாதானமாகவே இருக்கிறது. தகராறு பற்றிய பூரா விஷயங்களையும் அசம்பிளியில் விளக்கிக் கூறாமல் அவரது செயலுக்கு ஆதாரமாக விஷயங்களைத் திரித்துக் கூறுவது காங்கரஸ் ராஜ்ய தந்திர முறையானால் அந்த முறை ஆதரிக்கத்தக்கதா என்பதை சேலம் நகரத்தாரே முடிவு செய்ய வேண்டும். தண்ணீர் திட்டச் செலவு 24 லட்சம் ரூபாயில் 12 லக்ஷத்தைக் கடனாகவும் 12 லக்ஷத்தை மானியமாகவும் சர்க்கார் கொடுப்பதினால் தண்ணீர்த் திட்ட விஷயத்தில் சர்க்கார் அதிக கவலை செலுத்துவதை எவரும் ஆட்சேபிக்கவில்லை. தண்ணீர் திட்டத்துக்கு செலவாகும் 24 லக்ஷமும் பாழாகக் கூடாதென்னும் விஷயத்தில் சர்க்காருக்கு எவ்வளவு கவலையும் பொறுப்பும் உண்டோ அவ்வளவு கவலையும் பொறுப்பும் சேலம் நகரசபையாருக்கும் உண்டு....

பார்ப்பனர்கள் ஆரியர்களா? யூதர்களா? அவர்கள் யூதர்களே!  – ஒரு சந்தேகி

பார்ப்பனர்கள் ஆரியர்களா? யூதர்களா? அவர்கள் யூதர்களே! – ஒரு சந்தேகி

  பார்ப்பனர்களிடம் ஆரியர்கள் என்பதற்கு என்ன குணம் இருக்கிறது? எதைக்கொண்டு அவர்களை ஆரியர் என்பது? யூதர்களது புராதன பாஷையாகி எபிரேய பாஷையில் ” எல் ” என்பது கடவுள் என்ற அருத்தம் கொண்டதல்லவா? இயேசு (தெய்வ குமாரன்) மனுஷ குமாரனாக அவதரிப்பார் என்பது எபிரேய பாஷையில் எழுதப்பட்ட பழய ஏற்பாடு சொல்லுகிறதும் உலகம் அறிந்த விஷயமல்லவா? பழய ஏற்பாட்டின்படி ” ஜெஹோவா” பிரதானமான ஒரே கடவுளல்லவா? இந்து மதத்துக்கும் யூதர் நாகரீகத்துக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதிலிருந்து இந்து மதத்தின் ஆதீனக்காரர்களான பார்ப்பனர் யூதர்கள் தான் என்று யூகிக்க இடமில்லையா? எருசலேம் தேவாலயமும் இந்து கோவில்களும் சுற்றுப்பிரகாரம், தெப்பக்குளம், கொடிமரம், மண்டபம் , மூலஸ்தானம், தூபம், பூசை முதலிய விஷயங்களில் ஒன்றுபட்டிருக்கிறது. பாலஸ்தீன நாட்டில் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. இந்தியாவிலும் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. ஆகையால் இவ்வழக்கம் அங்கிருந்து தானே வந்திருக்கவேண்டும்? யூதர்களின் ஜிஹோவா...

கஷ்டமான பிரச்சினை  – சித்திரபுத்திரன்

கஷ்டமான பிரச்சினை – சித்திரபுத்திரன்

  மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டவை ஆ-ன்: மதங்கள் கடவுள்களால் உண்டாக்கப்பட்டவை. ப-தி: அல்ல அவை மனிதர்களால் உண்டாக்கியவை. ஆ-ன்: ஏன் அப்படிச் சொல்லுகிறாய். ப-தி: மதங்கள் எத்தனை உண்டு? ஆ-ன்: பல மதங்கள் உண்டு. ப-தி: உதாரணமாக சிலது சொல்லும். ஆ-ன்: எடுத்துக்காட்டாக இந்து மதம், புத்த மதம், கிறிஸ்து மதம், முகமது மதம், சீக்மதம், பார்சி மதம், ஜொராஷ்ட்டிர மதம் முதலியவைகளும் இவற்றில் பல உட்பிரிவுகளும் உண்டு. ப-தி: கடவுள்கள் எத்தனை உண்டு. ஆ-ன்: ஒரே கடவுள்தான் உண்டு. ப-தி: இவ்வளவு மதங்களும் யாருக்காக உண்டாக்கப்பட்டவை. ஆஸ்திகன்: மனித வர்க்கத்துக்காகத்தான். ப-தி: மதத்தால் ஏற்படும் பயன் என்ன! ஆ-ன்: மனிதன், கடவுளை அறியவும், கடவுளுக்கும், தனக்கும் சம்மந்தம் ஏற்படுத்திக் கொள்ளவும், ஆத்ம ஞானம் பெறவும் கடவுள் கருணைக்கு பாத்திரனாகவும் பயன்படுவதாகும். ப-தி: அப்படியானால் ஒரே கடவுள் மனித வர்க்கத்துக்கு இத்தனை மதங்களை ஏற்படுத்துவானேன். ஆ-ன்: அது மிகவும் சிரமமான கேள்வியாக...

மதுரை ஜில்லா 2-வது சுயமரியாதை மகாநாடு  வெங்கிடுசாமி படத்திறப்பு விழா

மதுரை ஜில்லா 2-வது சுயமரியாதை மகாநாடு வெங்கிடுசாமி படத்திறப்பு விழா

  தலைவர் அவர்களே! தோழர்களே! இன்று இம்மகாநாட்டில் காலஞ்சென்ற நமது தோழர் வெங்கிடுசாமி அவர்கள் உருவப்படத்தைத் திறந்து வைக்கும் பணியாற்றுவதை நான் ஒரு மகிழ்ச்சியின் காரியமாகவே கொள்கிறேன். இந்தச் சமயத்தில் இப்பணியைச் செய்யும் யாரும் திறந்து வைக்கப்படும் உருவத்தினரைப் பற்றி சில வார்த்தைகள் கூறுவது இயல்பேயாகும். தோழர் வெங்கிடசாமி அவர்கள் இவ்வூர் வாசி. அவரைப்பற்றி இவ்வூர் வாசிகளாகக் கூடியிருக்கும் இப்பெரிய கூட்டத்திற்கு உங்களுக்குத் தெரியாத எதை நான் கூறப் போகிறேன். நான் ஏதாவது சொல்லுவது என்பது “அப்பன் வீட்டுப் பெருமையை அண்ணனுக்கு தங்கை எடுத்துச் சொல்ல முயற்சித்தது போல” தான் முடியும் என்றாலும் நான் இது சமயத்தில் தோழர் வெங்கிடுசாமியைப் பற்றி மாத்திரம் அல்லாமல் இம் மாதிரியான படத்திறப்பு விழா முதலியது போன்ற காரியங்களை நாம் ஏன் செய்கிறோம் என்பதைப் பற்றியும் சிறிது கூற ஆசைப்படுகிறேன். ஏனெனில் இம் மாதிரி மகாநாடுகளில் நாம் அடிக்கடி பல பெரியார்களது படத்திறப்பு விழா நடத்துகிறோம்....

பார்ப்பனரும் வகுப்புவாதமும்

பார்ப்பனரும் வகுப்புவாதமும்

  நமது காங்கரஸ் (பார்ப்பன) பத்திரிக்கைகளுக்கு வகுப்புவாதம் கிடையாது. வகுப்பு துவேஷமும் கிடையாது என்பதற்கு உங்களுக்கு உதாரணம் கூறவேண்டுமானால் சொல்லுகிறேன் கேளுங்கள். இந்து, சுதேசமித்திரன் பத்திரிகைகள் கொச்சி திவான் சர். ஷண்முகத்தையும், மைசூர் திவான் சர். மிர்சா இஸ்மாயிலையும் தான் கண்டிக்குமே தவிர, திருவனந்தபுரம் திவான் சர்.வி.டி.கிருஷ்ணமாச்சாரியையும், காஷ்மீர் திவான் கோபாலசாமி அய்யங்காரையும் கொஞ்சங் கூட கண்டிக்காது. அவர்கள் சொந்த முறையில் கூட எவ்வளவு கெடுதலாய் நடந்து கொண்டாலும் அவர்களைப் பற்றி ஒன்றுமே பேசாது. அன்றியும், கொச்சி, மைசூர் இரண்டிலும்தான் காங்கரஸ்காரர்கள் தொல்லை விளைவிப்பார்களே தவிர மற்ற அய்யர், ஆச்சாரி, அய்யங்கார் திவானாயுள்ள இடங்களில் சிறிதும் தலைகாட்டாது. ஏனென்றால் பார்ப்பனருக்கு வகுப்புவாதம் கிடையாதல்லவா? எந்த வகுப்புவாதம் என்றால் பார்ப்பனருக்குள் அய்யர், அய்யங்கார், ஆச்சாரி, ராவு, ராயர், சர்மா, ஜடாவல்லபர், தீக்ஷதர், ஸரெளத்திரி முதலிய எந்த வகுப்பு ஜாதியாரானாலும் அவர்களுக்குள் மாத்திரம் வகுப்புவாதம் என்பது சிறிதுகூட கிடையவே கிடையாது. ஆனால் இவர்கள் அல்லாத...

வரவேற்கிறோம்  கொலையை வரவேற்கிறோம்

வரவேற்கிறோம் கொலையை வரவேற்கிறோம்

  சென்னை காங்கரஸ் கூலி கேடிப் பத்திரிகை ஒன்று தனது மார்ச் 10-ந் தேதி பத்திரிகையில் சுயமரியாதைக் கட்சியின் மீது அபாண்டமாக முழுப்பொய்யான விஷயங்களைக் கற்பித்து எழுதி அதை ஒரு சாக்காக பயன்படுத்திக் கொண்டு “தற்காப்புக்காக கொலை செய்யலாம் அது குற்றமாகாது” என்று மக்களைக் கொலை செய்யத் தூண்டிவிட்டு மக்களுக்கு மேலும் தைரியம் வரும்படியாக “கொலை செய்தவர்கள் சர்க்காரால் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்” என்று ஏதோ ஒரு கோர்ட் ஜட்ஜிமெண்டையும் எடுத்துக்காட்டி தூண்டிவிட்டிருக்கிறது. இதைப்பற்றி சிறிதும் நாம் கவலைப்படவில்லை. உண்மையிலேயே அப்படிப்பட்ட நிலைமையை வரவேற்கிறோம். இந்த நாட்டில் உள்ள சுயமரியாதைக்காரர்களில் 10 பேர்களோ, அல்லது 20 பேர்களோ அல்லது 100 பேர்களோ தான் இந்த தூண்டுதலால் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் இதனால் சுயமரியாதைக்காரர்கள் எண்ணிக்கை குறைந்து விடுமென்றோ, சுயமரியாதைக்காரர்களது உணர்ச்சி மாறி தங்கள் தொண்டில் அடங்கிவிடுவார்கள் என்றோ நாம் சிறிதும் கருதவில்லை. மற்றும் அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படுவது எது வெற்றி...

கண்ட்ராக்ட்டு ராஜ்யம்

கண்ட்ராக்ட்டு ராஜ்யம்

  காங்கரஸ்காரர்கள் ஸ்தல ஸ்தாபனங்களிலே, நுழைந்த காலத்திலே, அங்கு கண்டிராக்ட் ராஜ்யம் நடப்பதாகவும் பொதுமக்களின் பணம் கொள்ளை போவதாகவும், நகரசபை, ஜில்லா போர்டுகளிலிருந்து கொண்டு உற்றார் உறவினருக்கு கண்டிராக்ட் வாங்கித்தருவதாகவும், லஞ்ச லாவணம் தாண்டவமாடி நிர்வாகமே சீர்குலைந்து நாறுவதாகவும், இடிமுழக்கம் செய்தார்கள். நமது மக்களும் ஆச்சரியத்துடன் வாயைப் பிளந்து கொண்டு, காங்கரசாரின் பேச்சைக் கேட்டு, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர் சிருஷ்டித்த சதியாலோசனையில் பங்கெடுத்துக் கொண்டனர். காங்கரஸ்வாதிகள் தாங்கள் முனிசிபாலிட்டி, ஜில்லாபோர்டு முதலிய இடங்களைக் கைப்பற்றினால் கண்டிராக்ட்டு ராஜ்யத்தை ஒழித்து அவைகளைப் பரிசுத்தப்படுத்தப் போவதாகவும் சொன்னார்கள். நமது மக்களும் அதனை நம்பி காங்கரஸ்காரர்களிடம் ஸ்தல ஸ்தாபனங்களை ஒப்படைத்தனர். பிறகு நடந்ததென்ன? யார் கண்டிராக்ட்டு ராஜ்யமென்ற வீண்கூச்சலைக் கிளப்பினார்களோ அவர்களே கண்டிராக்ட்டு ராஜ்யத்தின் கர்த்தாக்களானார்கள்! யார் ஊழலை ஒழிப்போம் என்ற பித்தலாட்டப் பேச்சுப் பேசி ஓட்டுகளைப் பறித்தார்களோ அவர்களே ஒருவர் சிண்டை மற்றொருவர் பற்றிக் கொண்டு “நீ அயோக்கியன், நீதான் அயோக்கியன்” என்று...

“பார்ப்பன பாம்புக்கு தேசீயப் பால்!”

“பார்ப்பன பாம்புக்கு தேசீயப் பால்!”

  தலைவரவர்களே! தோழர்களே! தாங்கள் அன்புடன் வாசித்தளித்த உபசாரப் பத்திரத்திற்கு நான் எனது மனப்பூர்வமான நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறேன். ~subhead என் வாழ்க்கை லட்சியம் ~shend தங்கள் வரவேற்புப் பத்திரத்தில் கூறியுள்ள அளவு தீண்டாமை ஒழிவதற்கு நான் ஒன்றும் அவ்வளவு பாடுபட்டு விடவில்லை என்றாலும் எனது வாழ்நாள் லòயத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டுமென்பது முக்கியமான பாகமாகும் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கேற்ப ஏதோ ஒரு அளவு பாடுபட்டேன் – பாடுபடுகிறேன் என்பதும் உண்மையே. நான் சிறை சென்ற பல தடவைகளில் தீண்டாமைக்காகவென்றும் 2,3 முறை நான் சிறை சென்றிருப்பதும் உண்மைதான். ஆனால், அவை அவ்வளவும் ஆதி திராவிட மக்கள், பள்ளர், பறையர், சக்கிலிகள் என்று இழிவாய்க் கருதப்படுகின்ற உங்களுக்காகவே அல்ல என்பதையும், உங்களைவிட சிறிது வித்தியாசத்தில் சற்று மேலான ஜாதி என்று கருதப்படுகின்ற எங்கள் ஜாதி என்பதைப் பொருத்துள்ள தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற சுயவகுப்பு நலத்தையும் முன்னிட்டே...

சரணாகதி மந்திரிகள் மைனர் விளையாட்டு

சரணாகதி மந்திரிகள் மைனர் விளையாட்டு

  1938-39வது வருஷத்துக்கு பொக்கிஷ மந்திரியும் முதன் மந்திரியுமான கனம் ஆச்சாரியார் “சர்ப்ளஸ்” பட்ஜெட் தயார் செய்து விட்டதை காங்கரஸ் அபிமானிகளெல்லாம் பாராட்டுகிறார்கள். “பட்ஜெட் என்றால் இதுதான் பட்ஜட். இந்த பட்ஜெட்டே காங்கரஸ் பட்ஜெட் என்று சொல்லக்கூடிய அம்சங்கள் வாய்ந்திருக்கிறது” என ஒரு காங்கரஸ் பத்திரிகையும் பரவசத்துடன் கூறுகிறது. புதிய வருஷத்திலும் விவசாயிகள் கடன் பளுவைக் குறைத்தல், கிராமாந்தர ஜல வசதிக்காக தனிநிதி ஏற்படுத்துவதற்காக 15 லட்சம் ஒதுக்கி வைத்தல், விவசாயக் கடன் மசோதாவின்படி குறையக்கூடிய கடன்களைக் கொடுத்துத் தீர்ப்பதற்காக 50 லட்சம் ஒதிக்கிவைத்தல், கால்நடை மேய்ச்சல் கட்டணத்தை சரிபாதியாகக் குறைத்தல், சித்தூர் கடப்பை ஜில்லாக்களில் மதுவிலக்குச் செய்தல் முதலிய புண்ணிய கைங்கரியங்களைச் செய்த பிறகும் புதுவரிகள் போடாமல் மிச்சம் ஏற்படும் முறையில் கனம் ஆச்சாரியார் பட்ஜெட் தயார் செய்திருப்பதைப்பார்த்து சாமானிய மக்கள் மயங்கத்தான் செய்வார்கள். புகழத்தான் செய்வார்கள். ஆனால் பட்ஜெட்டை சிறிது ஊன்றி நோக்கினால் மிச்ச மேற்படும் பட்ஜெட் தயார்...

ஒரு தொல்லை ஒழிந்தது  மறு தொல்லையை ஒழிக்க தயாராயிருங்கள்

ஒரு தொல்லை ஒழிந்தது மறு தொல்லையை ஒழிக்க தயாராயிருங்கள்

  காங்கரசுக்காரர்கள் பதவிக்கு வந்தது முதல் மனித சமூகத்துக்கும் அவர்களது முன்னேற்றத்துக்கும் பலவித தொல்லைகள் விளைவித்து முட்டுக்கட்டை போட்டு நாட்டை ஆரம்பகால காட்டுமிராண்டித் தன்மைக்கு கொண்டு போக வேண்டுமென்றே மனப்பூர்வமாய் பாடுபட்டு வருவதை அவ்வப்போது வெளியிட்டு வந்திருக்கிறோம். அவற்றுள் மிக்க அவசரமாகவும், அவசியமாகவும், கவனித்துப் பரிகாரம் தேடப்படவேண்டிய விஷயங்கள் மூன்று. அவையாவன 1. சட்டசபையில் வந்தே மாதரப் பாட்டுப்பாடுவது 2. கல்வித்துறையில் ஹிந்தி பாஷையை நம் மக்களுக்குக் கட்டாயமாகப் புகுத்துவது 3. காந்தியாரின் கல்வித் திட்டம். இம்மூன்றும் மனித சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் கேடானது என்பதற்காக எடுத்துக்காட்டி எதிர்த்து வந்ததோடு அவ்வெதிர்ப்பை காங்கரஸ் தலைவர்கள் லòயம் செய்யாததால் இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் கேட்டிற்கு உள்ளாகும் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி காங்கரஸ்காரர்களே கற்றுக் கொடுத்த பாடமாகிய சண்டித்தனத்தையும் காலித்தனத்தையும் கைக் கொண்டாவது தப்பித்துக்கொள்ள வேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்து தீர வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இதை அறிந்த காங்கரஸ்காரர்கள்...

பானகல் ராஜா வாசகசாலை ஆண்டுவிழா  மேனாட்டு வாசகசாலை நிலைமை

பானகல் ராஜா வாசகசாலை ஆண்டுவிழா மேனாட்டு வாசகசாலை நிலைமை

  அன்புள்ள தோழர்களே! இன்று இங்கு பானகல் இலவச வாசகசாலையின் முதலாவது ஆண்டுவிழாவிற்குத் தலைமை வகிக்கும் பெருமையை எனக்களித்ததற்காக இதன் நிர்வாகிகளுக்கும், அங்கத்தினர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த ஆண்டு விழாவிற்கு இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வூர் பிரமுகர்கள் எல்லோரும் இங்கு விஜயமாய் இருப்பதைப் பார்க்க இவ்வாசகசாலை மிகுதியும், செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்றே கருதுகின்றேன். பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்கு இம்மாதிரி வாசகசாலைகள் பெரிதும் அவசியமானதாகும். பள்ளிக்கூடங்கள் எழுத்து வாசனையையும் ஏதாவதொரு விஷயத்தில் விளக்கத்தையும் தான் உண்டாக்க உதவும். ஆனால் வாசகசாலை என்பது பொது அறிவு விளக்கத்தையும் சகல விஷயங்களிலும் ஞானத்தையும் உண்டாக்கும். நல்ல முறையில் அமைக்கப்படும் வாசகசாலையும், புத்தகசாலையும் மனிதர்களை சகல விஷயங்களிலும் ஞான பண்டிதர்களாகவும் அனுபவ ஞானமுடையவர் களாகவும் ஆக்கிவிடும். நம் நாட்டில் பொது உணர்ச்சியின்மீது ஏற்படுத்தப்படும் வாசகசாலை, புத்தகசாலை மிகக் குறைவென்றே சொல்லலாம். நம் நாட்டில் ஒரு புத்தகசாலை இயக்கம் இருப்பதாகவும், அதற்கு...

காங்கரசும் சுயமரியாதையும்  மறுபடியும் வாக்குறுதி நாடகம்

காங்கரசும் சுயமரியாதையும் மறுபடியும் வாக்குறுதி நாடகம்

  காங்கரஸ்காரர்கள் அரசியலில் மத உணர்ச்சியைப் புகுத்தி புராண முறையில் பிரசாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றி தேர்தல்களில் வெற்றி பெற்று மானத்தை இழந்து மனிதத்தன்மையைப் பறிகொடுத்து மந்திரி பதவி பெற்றார்கள் என்பது நம் வாசகர்கள் யாவரும் ஏற்கனவே உணர்ந்த சேதியாகும். காங்கரஸ்காரர்களுக்கு பகுத்தறிவாவது சுயமரியாதை உணர்ச்சியாவது இருந்திருந்தால் அவர்கள் அவ்வளவு பெரும்பான்மையான ஓட்டுகளால் வெற்றிபெற்றிருந்தும் அவ்வளவு மெஜாரிட்டியாக அங்கத்தினர்கள் வந்திருந்தும் மந்திரி பதவி பெறுவதற்கு இவ்வளவு பெரிய சரணாகதி அடைந்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருந்திருக்காது. மெஜாரிட்டி பெற்றுவிட்ட ஆணவத்தால் அரசியல் சட்டத்தைப் படித்துப் பார்க்காமலும் பின் விளைவை யோசித்துப் பார்க்காமலும் கவர்னரிடம் பயனற்ற வாக்குறுதி கேட்கப் போய் தாங்கள் மானக்கேடான வாக்குறுதி கொடுக்க ஏற்பட்டதோடு வைஸ்ராய் பிரபுவின் சாட்டை அடி வாங்கிக் கொண்டு சரணாகதி அடைந்து பதவி ஏற்க வேண்டியதாயிற்று. பதவி ஏற்றது முதல் வந்தே மாதரம் பிரார்த்தனை, ஒன்றரைக் கோடி ரூபாய் கடன், பழய கடன் ஏற்பு முதல்...

 பார்லிமெண்டில் ராஜிநாமா விஷயம்

 பார்லிமெண்டில் ராஜிநாமா விஷயம்

  பீஹார், ஐக்கிய மாகாண மந்திரிகள் ராஜிநாமா விஷயமாக காமன்ஸ் சபையில் ஆக்டிங் உதவி இந்தியா மந்திரி லார்டு விண்டர்ட்டன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன் சாரம் மூன்றாவது பக்கத்தில் வெளிவருகிறது. அரசியல் கைதிகள் விடுதலை காங்கரஸ் வேலைத் திட்டத்தில் ஒரு முக்கியமான அம்சம் என்பதை லார்டு விண்டர்ட்டன் மறுக்கவில்லை. “மாகாணத்தின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் பங்கம் ஏற்படாத முறையில் ஏற்பாடு செய்து திருப்தி செய்து கொண்டு, ஒவ்வொரு கைதியின் நிலைமையையும் தனித்தனியாக யோசித்து அத்தகைய கைதிகளை விடுதலை செய்வதென்ற மந்திரிகளின் யோசனையை, கவர்னர் ஜெனரலுடன் கலந்து ஆலோசித்தபின் கவர்னர்கள் ஒப்புக்கொண்டனர் என்றும் அதன்படி ஐக்கிய மாகாணத்தில் 14 ராஜீயக்கைதிகளும் பீஹாரில் 15 ராஜீயக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் இன்னும் ஐக்கிய மாகாணத்தில் 15 பேர்களும் பீஹாரில் 26 பேர்களும் விடுதலையாகாமல் இருக்கிறார்கள் என்றும் அவர்களில் சிலர் கொடூரமான பலாத்காரக் குற்றங்கள் செய்தவராகையினால் அவர்கள் விஷயத்தை தனித்தனியாகப் பரிசீலனை செய்து முடிவு...

இதற்குப் பரிகாரமென்ன?

இதற்குப் பரிகாரமென்ன?

  இந்நாட்டில் இன்று நடைபெறும் தேசீயம் பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் போராட்டமென்றும் அப்போராட்டமானது ராமாயணக் கதையில் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் ஏற்பட்ட போரில் ஆரியர்கள் மிருகப்பிராயமுள்ள காட்டு மனிதர்களான இழிகுல திராவிட மக்களை பல சூழ்ச்சிகளால் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு அனுமார் (குரங்கு) என்று பெயர் கொடுத்து திராவிட கூட்டத்தையும் அவர்களது அரசர்களையும் ஒழித்தது போல் இன்றைய பார்ப்பனர்கள் திராவிட மக்களில் மனிதத் தன்மையும் மானாபிமானமும் அற்ற சில இழிமக்களை பல சூழ்ச்சிகளால் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டு மற்றத் தமிழ் மக்களை அழுத்தி ஆதிக்கம் செய்ய முயற்சித்து வருகிறார்கள் என்றும் பல தடவை தக்க புள்ளி விபரம், ஆதாரம் ஆகியவைகளுடன் எழுதி வந்திருக்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம் பழஞ்சரித்திரம் என்னும் புராணங்களில் தேவர்கள் – ராக்ஷதர்கள் சண்டை என்றும் தேவர்கள் – அசுரர்கள் சண்டை என்றும் காணப்படுவதை சகல விதத்தும் ஒத்தது போலவே இன்று திராவிடர் என்றும்...

தேசீய காங்கரஸ்  கலப்புமணப் பிறவி

தேசீய காங்கரஸ் கலப்புமணப் பிறவி

தலைவரவர்களே! தோழர்களே! இந்த ஊருக்கு நாங்கள் ஈ.வெ.ரா. நாகம்மாள் ஞாபகார்த்த வாசக சாலையின் ஆண்டு விழாவுக்கு வந்திருந்த சமயத்தில் எங்களை மிக ஆடம்பரத்துடன் வரவேற்று உபசரித்து பல வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளித்ததுடன் இன்று இரவு சமீபத்தில் நாங்கள் கண்டிராத இவ்வளவு பெரிய கூட்டம் கூட்டி எங்கள் அபிப்பிராயங்களை எடுத்துச் சொல்ல அவகாசமளித்ததற்காக எனது மனமார்ந்த நன்றியறிதலையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நான் இன்று இரவு இங்கு காங்கரசு, ஹிந்து முஸ்லிம் சமூக ஒற்றுமை, அரசியலும் காங்கரசும் என்பவை பற்றி பேசுவேன் என்பதாக துண்டு விளம்பரத்தில் விளம்பரப்படுத்தி இருக்கிறீர்கள். எனக்கு உடல் நலம் சரியாய் இல்லை. இந்த வாரத்தில் மோட்டார் காரில் மாத்திரம் சுமார் 2000 மைல் கிராமம் கிராமமாய் சுற்றி அலைந்திருப்பதுடன் மதராசில் இருந்து தூத்துக்குடிக்கு காரிலேயே வந்திருக்கிறேன். அது மாத்திரமல்லாமல் இன்று இரவு இப்பொழுதே புறப்பட்டு காரிலேயே ஈரோடு போய் சேர வேண்டியவனாய் இருக்கிறேன். ஏனெனில் நாளை காலை 10...

விவசாயக் கடன் குறைப்பு மசோதாவுக்கு வைஸ்ராய் அனுமதியளிக்கக்கூடாது

விவசாயக் கடன் குறைப்பு மசோதாவுக்கு வைஸ்ராய் அனுமதியளிக்கக்கூடாது

  காங்கரஸ் மந்திரிகள் என்னும் சரணாகதி புரோகிதக் கூட்ட ஆதிக்க மந்திரிகள் பொதுஜனங்களை ஏமாற்றுவதற்கு ஆகவும் பாமர மக்களிடம் ஓட்டு வேட்டை ஆடுவதற்கு ஆகவும் “விவசாயிகள் கடன் விடுதலை மசோதா” என்னும் பெயரால் இரு சட்டசபைகளிலும் கூலி மெஜாரிட்டியைக் கொண்டும் கட்சி கட்டுப்பாடு என்னும் அடக்குமுறை மெஜாரிட்டியைக் கொண்டும் சர்வாதிகார முறையில் நிறைவேற்றிக் கொண்டு இருக்கும் மசோதாவானது நடுத்தர விவசாயிகளான பெருவாரியான விவசாயிகளுக்கே பெரும் கேட்டைத் தருவதாய் இருப்பதாலும், பூமிக்குடையோனுக்கும் பூமியை பயிர் செய்வோனுக்கும், கடன் கொடுத்தவனுக்கும் கடன் வாங்கினவனுக்கும், ஒற்றுமையின்மையும் போராட்டமும் தொல்லையும் பொய் கணக்கும் பொய் ஆதார சிருஷ்டியும் செய்து தீரவேண்டிய நிலையில் கொண்டு வந்து விடக் கூடியதாய் இருப்பதாலும், ஏழை விவசாயிகளுக்கு நாணய செலாவணியே இல்லாமல் போய் அக்கிரமக் கடனுக்கே ஆளாக வேண்டிய நிலைமையைக் கொடுக்கக்கூடியதாய் இருப்பதாலும் மற்றும் கொஞ்சம் பூமிகளையுடைய சிறுசிறு விவசாயிகளையும், சிறு மிராசுதார்களையும் விவசாயச் செலவுக்கும் எதிர்பாராத திடீர் சம்பவ குடும்பச் செலவுக்கும்...

ஆத்திரப்பட்டு பயன் என்ன?  ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம் மார்க்கமல்லாமல் விமோசனமெங்கே?

ஆத்திரப்பட்டு பயன் என்ன? ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம் மார்க்கமல்லாமல் விமோசனமெங்கே?

  சுயமரியாதை இயக்கமானது நாஸ்திகத்தையும் மதங்கள் ஒழிப்பையும் கொள்கையாகக் கொண்டிருக்கவில்லை என்பது பல தடவை விளக்கப்பட்ட விஷயமாகும். ஆனால் சுயமரியாதை மகாநாடுகளில் “மக்கள் சுதந்தரமும் ஒற்றுமையும் சுயமரியாதையும் பெற்று சமூகம் பொருளாதாரம் அரசியல் ஆகிய துறைகளில் சமத்துவமும், சம உரிமையும், விடுதலையும் பெற வேண்டுமானால் மதங்கள் ஒழிக்கப்பட வேண்டும்” என்பதாகவும் இந்தக் கருத்தைக் கொண்டதாகவுமான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதுடன் பல சுயமரியாதைத் தோழர்கள் தங்கள் தங்களை பொறுத்த வரையில் ஜாதிமதம் முதலியவைகளை விட்டு விலகி அனுபவத்திலும் அதற்கு ஏற்றதுபோல் நடந்து வருகிறார்கள். இந்தக் கருத்தை அனுசரித்தே இந்த தத்துவத்தை அமுலில் கொண்டுவரவே இந்தியாவில் வெகு காலத்திற்கு முன்னிருந்தே பல பெரியார்கள் முயற்சித்து அதற்கு ஏற்ற பல காரியங்கள் செய்தும் வந்திருக்கிறார்கள். சுமார் 100 வருஷங்களுக்கு முன் வங்காளத்தில் “பிரம்ம சமாஜம்” என்னும் ஒரு ஸ்தாபனத்தை தோற்றுவித்த பெரியார்களும் ஜாதி மதம் ஆகியவை ஏதும் இல்லை என்றும் மக்கள் யாவரும் பிறவியில் சமம்...

காங்கரஸ் புரட்டு விளக்கம்  காங்கரசில் நான் என்ன செய்ய முடியும்?

காங்கரஸ் புரட்டு விளக்கம் காங்கரசில் நான் என்ன செய்ய முடியும்?

  இப்பவும் காங்கரசில் நான் இல்லை என்று குறை கூறுகிறார்கள். நான் அங்கிருந்தால் தான் என்னவாகிவிடும்? நான் காங்கரசிலிருந்தால் தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்குக் கஷ்டம் குறைந்துபோகும். எல்லோராலும் வெறுக்கப்படுகிற ஹிந்தியை என் வாயைக் கொண்டே “ஹிந்தி நல்லது இந்தியாவெங்கும் அது பொதுப்பாஷையாகத்தானிருக்க வேண்டும்” என்று சொல்லச் செய்து விடுவார். அதற்கு நான் சம்மதித்தால்தான் எனது காங்கரஸ் பக்தி பயன்படும். இதைத் தவிர வேறு என்ன நல்ல காரியம் நடக்கக் கூடும்? சுதந்தரமாகவும் சுயமரியாதையாகவும் ஏதாகிலும் செய்ய முடியுமா? அங்கிருக்கும் மற்ற பார்ப்பனரல்லாதார் யோக்கியதை எப்படி இருக்கிறது? இப்போதையத் தொண்டிலும் அவர்கள் என்னை குற்றம் சொல்லவில்லை, என் சொந்த நாணயத்திலும் குற்றம் சொல்ல அவர்களுக்கு முடிவதில்லை. நாங்களும் தவறாக நடந்து கொள்வதில்லை. அதனாலேயேதான் “சுயமரியாதைக்காரர்கள் எல்லாம் நல்லவர்கள் என்றும் அவர்கள் நம் பக்கத்தில் இருந்தாலும் நன்றாக தொண்டு செய்வார்கள் என்றும் அவர்களும் காங்கரஸிற்கு வரவேண்டுமென்றும் பல தடவை ஆச்சாரியார், சத்தியமூர்த்தியார் மற்றும் பல காங்கரஸ்காரர்...

நீடாமங்கலத்தில் நடந்ததென்ன?  “தினமணி”யில் வந்த மனமறிந்த வஞ்சகப்  பித்தலாட்டப் புரட்டு

நீடாமங்கலத்தில் நடந்ததென்ன? “தினமணி”யில் வந்த மனமறிந்த வஞ்சகப் பித்தலாட்டப் புரட்டு

நீடாமங்கலம் அரசியல் மகாநாட்டில் ஆதிதிராவிடர்கள் பலர் தேசபக்தர்களின் சாப்பாட்டு பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு ஆக அடித்துத் துன்புறுத்தி மொட்டையடித்து சாணித்தீர்த்தம் கொடுத்து அபிஷேகம் செய்த விஷயத்தை முன் தெரிவித்திருக்கிறோம். அதற்கு 15 நாள் பொறுத்து ஒரு பொய் அறிக்கை தயாரித்து உதைபட்டு மொட்டை அடிக்கப்பட்ட ஒருவரிடமும் மற்ற சம்பந்தமில்லாத இருவரிடமும் பொய் சொல்லி மிரட்டி பணம் கொடுத்து உட்கார வைத்து போட்டோ எடுத்து வெறும் காகிதத்தில் கையெழுத்து வாங்கி தங்கள் இஷ்டப்படி எழுதிக்கொண்டதை “தினமணி” பிளாக் செய்து அச்சேதியையும் படத்தையும் “சுயமரியாதைக் காரர்களின் புளுகு” என்று தலைப்பிட்டு “தினமணி” பிரசுரித்திருக்கிறது. அதில் ஒரு விசேஷமென்னவென்றால் காங்கரஸ்காரர்களால் மொட்டை அடிக்கப்பட்டு சாணி அபிஷேகம் செய்யப்பட்ட தோழர் தேவசகாயம் என்பவரை மொட்டைத்தலையுடன் அதாவது காங்கரஸ் பக்தர்களான மிராசுதார், பெரிய ஜாதிக்காரர் ஆகியவர்கள் அடித்த மொட்டைத் தலையுடனேயே போட்டோ எடுத்து இருப்பது விளங்குகிறது. இந்தப்படத்தையும் சேதியையும் கண்டவுடன் அதே தோழர் தேவசகாயம் என்பவர் நமக்கு தனது...

ஈரோட்டில் பொதுக்கூட்டம்

ஈரோட்டில் பொதுக்கூட்டம்

  தலைவரவர்களே! தோழர்களே! இங்கு மீட்டிங்குபோட நாங்கள் ஆசைபடுவதில்லை. உள்ளுர் தோழர்களுடன் கலகம் செய்துகொள்ளக்கூடாது என்பதற்காக நாங்கள் போடாமல் இருந்தோம். இந்த 10 நாளாய் அர்பன் பாங்கு தேர்தலை முன்னிட்டு சிலர் தினமும் கூட்டம் போட்டு எங்களை கண்டபடி வைவதும் சிறு பிள்ளைகளிடம் கொடியை கொடுத்து எங்கள் வீட்டிற்கு முன்னால் வந்து நின்று கொண்டு கேவலமாக வையச் சொல்வதும் கல்லு போட சொல்லுவதும் வீதிகளில் நடக்கும் போது எங்கள் பெயர்களைச் சொல்லி வெட்கம் வெட்கம் என்று வையச் சொல்லுவதுமான காரியம் தான் இங்கு என்னை உங்கள் முன் பேசச் செய்தது. இந்த ஊர் அர்பன்பாங்கு ஆரம்பமானது 1911ல் எங்கள் வீட்டு தாழ்வாரத்தில் தான். நான் தான் முன்னின்று ஆரம்பித்தவன். அந்த பாங்கு பங்குதார் பெயரில் என் பேர் தான் முதலில் இருக்கும். போய் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்குப் பாங்கி நடவடிக்கையில் அக்கரை உண்டு. ஆனால் நான் வேறு பல விஷயங்களில் ஈடுபட்டிருப்பதால்...

நீடாமங்கல உண்மை

நீடாமங்கல உண்மை

  நீடாமங்கலத்தில் நடந்த தென் தஞ்சை ஜில்லா 3- வது அரசியல் மகாநாட்டில் ஆதி திராவிட தோழர்கள் சிலர் சாப்பாட்டுப் பந்தியில் கலந்து கொண்டதற்காக அவர்களை துன்புறுத்தி மொட்டையடித்து சாணி ஊற்றிக் கொடுமை செய்து தண்டித்த நடத்தையைப்பற்றி அவர்கள் பெயர்கள் உட்பட நமக்கு கிடைத்த உண்மையான சேதி “விடுதலை” “குடிஅரசு” பத்திரிகைகளில் வெளியாக்கப்பட்டதை வாசகர்கள் உணர்ந்திருக்கலாம். ஆனால் அதை காங்கரஸ் தோழர்கள் கவனித்து சமாதானம் சொல்லாமல் நடந்த விஷயத்தையே அடியோடு மறுத்துக் கூறுவதுடன் அவற்றைப் பொய்யாக்கிக் காட்ட தப்பான வழியில் முயற்சித்து வருவது மிகவும் வெறுக்கத்தக்கதாகும். பொறுப்புள்ள ஆதி திராவிட சமூகப் பிரமுகர்களுங்கூட இவ் விஷயத்திற்காகத் துக்கப்படாமல் பரிகாரம் தேட முயற்சிக்காமல் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு அடியோடு மறைக்க ஆசைப்படுவது மிகமிக வெறுக்கத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமான செய்கையாகும். “விடுதலை”யில் இது விஷயமாய் வெளியான சேதிகளுக்கு 15 நாள் பொறுத்து – நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்ட பிறகு அடிபட்ட உதைபட்ட மொட்டை அடித்து சாணி...

கடவுள் பற்றிய விளக்கம்

கடவுள் பற்றிய விளக்கம்

    ~subhead என் தொண்டிற்கு இடமுண்டு ~shend சிறிய பட்டிக்காடாகிய இங்கு நாலாயிரத்துக்கு மேற்பட்டவர் கூடியுள்ள இப்பொதுக்கூட்டத்தைக் காணும் போது நான் உண்மையிலேயே சந்தோஷமடைகிறேன். பெரிய பட்டணங்களில் சாதாரணமாகக் கூடும் அளவை விட இது இரண்டு மூன்று பங்கு அதிகமாகவே இருக்கிறது. நானோ விஷமிகளால் எவ்வளவோ தூற்றப்பட்டு – ஜாதி இழந்தவனெனவும், தேசத் துரோகி யெனவும், நாஸ்திகனெனவும், அரசியலில் பிற்போக்கானவன் என்று தூற்றப்பட்டு வந்தும் அப்படிப்பட்ட என் பிரசங்கத்தைக் கேட்க இந்த 100 வீடுகள் உள்ள கிராமத்தில் 10 , 20 மைல் தூரத்திலிருந்து 4000 பேர்கள் இவ்வளவு திரளான மக்கள் கூடியிருக்கும் இக்காட்சியை என் எதிரிகள் வந்து காண வேண்டுமென ஆசைப்படுகிறேன். விஷமப் பத்திரிகை ஆசிரியர்கள் பார்த்தால் அவர்கள் நெஞ்சு வெடித்துப் போகும் என்றே எண்ணுகிறேன். இந்த பிரமாண்டமான கூட்டத்தைப் பார்க்கும்போது, உண்மையிலேயே என்னைப்பற்றி யார் என்ன சொன்னாலும் என் தொண்டை விரும்புபவர்களும், ஆதரிப்பவரும், ஏற்றுக்கொள்பவரும் இருக்கிறார்கள் என்பதும்,...

தமிழர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள்?

தமிழர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள்?

சரணாகதி மந்திரிசபை தமிழ் நாட்டிலே, ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கத் துணிந்து திட்டம் போட்டனர். சூழ்ச்சி, சுயநலம், விஷமம், வர்ணாச்சிரமமாகிய விஷங் கலந்த இத் திட்டத்தைத் தமிழர் உண்டு மாள்வரோ என நாம் பயந்தோம். அக்கிரகார மந்திரிசபையின் அக்கிரமப் போக்கால், தமிழர் சமூகம் நசிக்காதிருக்க வேண்டுமே என கவலை கொண்டோம். இத்திட்டம் அர்த்தமற்ற, அவசியமற்ற மோசமான மனு ஆட்சித் திட்டம் என்றோம். நம்மைப் போன்றே தமிழ் உலகும் கருதிற்று. தமிழர்கள் சீறி எழுந்தனர். எங்கும் ஒரு கொதிப்பு ஏற்பட்டது. தமிழ் நாடு கொந்தளித்தது. பலமான கிளர்ச்சி ஆரம்பித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அடங்கிய கூட்டங்கள் கூடி பிரதி தினமும் ஹிந்தி கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற்றன. “தமிழ் மொழி அழிக்கப்படுவதைக் கண்டும் நாங்கள் உயிரோடு இரோம்” என்ற முழக்கம் மூலை முடுக்குகளிலும் எழும்பிற்று. தமிழர் கழகங்களென்ன, பாதுகாப்பு சங்கங்களென்ன, ஹிந்தி எதிர்ப்பு சபைகள் எத்துணை, இவ்வளவும் தமிழ் நாட்டிலே தோன்றின. பண்டிதர்கள் பதறினார்கள். மாஜி கவர்னர்களும்,...

பார்ப்பனருக்கும் ரயில்வேகாரருக்கும் ஒப்பந்தமா?

பார்ப்பனருக்கும் ரயில்வேகாரருக்கும் ஒப்பந்தமா?

  நம் நாட்டில் சுதந்தரமும் சுயமரியாதையும் சொந்த அரசியலும் ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்களால் அழிந்து போனதல்லாமல் மனித சமூகம் வஞ்சக மதத்துக்கும் ஒழுக்கமும் நீதியும் அற்ற கடவுளுக்கும் முட்டாள்தனமும் பித்தலாட்டமும் நிறைந்த மூடநம்பிக்கைக்கும் அடிமைப்பட்டு பெருவாரியான மக்கள் ஒரு வெகு சிறுபான்மையான வன்னெஞ்ச வஞ்சகர்களுக்கு ஆளாகி இன்னல் படுவதும் மிருகங்களிலும் மலத்திலும் கேவலமாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திலிருப்பதும் தமிழ் நாட்டுச் சரித்திரம் அறிந்த எவரும் மறுக்க மாட்டார்கள். இம் மாதிரியான நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டதற்கு காரணம் மக்கள் ஒன்று சேர்வதற்கு இல்லாமலும் சுதந்தரத்தோடு விஷயங்களை ஆராய்ச்சி செய்து முடிவு பெறுவதற்கில்லாமலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பதற்கு இல்லாமலும் மக்களை அடிமை படுத்தி வைக்க வென்றே ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட இந்து மதம் என்னும் ஆரிய சூழ்ச்சி மதமே ஆகும். அம்மதமானது “சிறுபான்மையோர் பெரும்பான்மையோரை அடக்கி ஆட்கொண்டு ஆட்சி புரிய வேண்டுமானால் அம் மக்கள் சமூகத்தை பிரித்து உயர்வு தாழ்வு கற்பித்து ஒருவரை ஒருவர்...

புது காங்கரஸ் தலைவர் யோக்கியதை

புது காங்கரஸ் தலைவர் யோக்கியதை

சுபாஷ் சந்திரபோசுக்கு பார்ப்பனர்களின் (ஆனந்தவிகடனின்) சர்ட்டிபிகேட் “சுபாஷ் போஸúக்கு ஒரே ஒரு குறை மட்டும் உண்டு. சுபாஷ் போசுக்கு மற்ற தேசத்தலைவர்களுடன் ஒத்து உழைக்கும் இயல்பு அவ்வளவு போதாது. தேசபந்து காலஞ்சென்றதும், உடனே தாம் வங்காளத்தின் தலைவராக வரவேண்டுமென்பதில் கொஞ்சம் அவசர புத்தி காட்டினார். இதன் பயனாக, உரிய காலத்தில் வங்காளத்தின் ஒப்பற்ற தலைவராக வரவேண்டியவர் ஒரு கும்பலின் தலைவர் ஆனார். வங்காளத்தில் காங்கரஸ்காரர்கள் பிளவுபட்டு, காங்கரஸ் வேலைகள் ரொம்பவும் சீரழிந்து போயிருந்ததற்கு ஸ்ரீ சுபாஷ் போஸ் பெரிதும் பொறுப்பாளி என்பதை தேசம் மறந்துவிடமுடியாது” ஜவஹர்லாலுக்கு இதே பார்ப்பனர்கள் (சுதேசமித்திரன்) கொடுத்த நற்சாட்சி பத்திரம் முன்னமே எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. எனவே எந்தத் தலைவரானாலும் சரி, பார்ப்பன அடிமையாய் இருந்தால் விளம்பரப்படுத்தி மகாத்மா வாக்குவதும் சுதந்தர புத்தி கடுகளவாவது இருந்தால் அவர் எப்படிப்பட்ட தியாகியானாலும் இழிவுபடுத்தி ஒழிப்பதும் பார்ப்பன இயற்கை – ஆரிய தர்மம் என்பதை உணர்வோமாக. குடி அரசு – செய்தி விளக்கக்...

காங்கரஸ் விஷமப்  பிரசாரத்துக்கு மறுப்பு

காங்கரஸ் விஷமப்  பிரசாரத்துக்கு மறுப்பு

  தலைவரவர்களே! தோழர்களே! பல சங்கங்களின் சார்பாக எனக்கு அனேக உபசாரப் பத்திரங்கள் படித்துக் கொடுத்திருக்கிறீர்கள். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவைகளில் அளவுக்கு மீறி என்னைப் புகழ்ந்திருக்கிறீர்கள். அவைகள் எனக்கு உரியதல்ல வென்றாலும் என் மீதுள்ள சொந்த அன்பினாலேயே என்னை இவ்வளவு தூரம் அதிகமாக புகழ்ந்திருக்கிறீர்கள். நான் செய்யும் தொண்டைப் பற்றி நானே பல சமயம் மிகவும் கடுமையாக யோசிப்பதுண்டு. நான் செய்யும் தொண்டானது எங்கு நமது நாட்டிற்கு தீமையை விளைவிக்கிறதோ என்கின்ற சந்தேகம் எனக்கு பல சமயங்களில் எழுவதுண்டு. ஆனால் நான் இப்போது இங்கே இவ்வளவு பிரம்மாண்டமான பொதுமக்களின் ஆவலையும் கணக்கற்ற உபசாரங்களையும் பார்க்கும்போது எனது தொண்டானது சரியான வழியில் தான் இருக்கிறது என்றும், இந்த உபசாரப் பத்திரங்களும், வரவேற்புகளும் எனது தொண்டிற்கு மேலும் மேலும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஊக்குவிப்பதாயிருக்கின்றன என்பதாகவும் கருதி இவைகளை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். முதலில் சில விஷயங்களைச் சொல்லக்...

காங்கரஸ் நாணயம் விளக்கம்

காங்கரஸ் நாணயம் விளக்கம்

  தலைவரவர்களே! தோழர்களே! நம்முடைய எதிரிகள் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடிவிட்டார்கள். எதிரிகளின் விஷமப் பிரசாரம் அளவுக்கு மீறி வெற்றியடைந்து விட்டது. அது மட்டுமா? ஜஸ்டிஸ் கட்சியை சாக அடித்து கருமாதி செய்ததாகவும் சொன்னார்கள். 5000 அடி ஆழத்தில் அவர்கள் புதைத்து விட்டதாகவும் சொன்னார்கள். அதுபோலவே முஸ்லீம் லீக்கும், சுயமரியாதைக் கட்சியும் செத்தே போய்விட்டதென்றும் கூறினார்கள். ஆனால் 5000 அடி ஆழத்தில் புதை குழியிலிருந்து செத்துப் போனவர்களாகிய நாங்கள் உங்கள் முன்னால் கிறிஸ்திவநாதர் கதை போல் வந்து நிற்கிறோம். நாம் செத்துப் போய் விட்டோமா? இல்லை. ஜஸ்டிஸ் கட்சிதான் செத்துப் போய்விட்டதா? இல்லை. லீக்தான் செத்துப் போய்விட்டதா? இல்லை. ஏன் அப்படி சொல்கிறேன். செத்துப் போனவர்களாயிருந்தால், இந்த கட்சிகள் எல்லாம் 5000 கஜ ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தால் உங்கள் முன் இப்போது இவ்வளவு பெரிய கூட்டத்தின் முன் நாங்கள் இதே கட்சியின் பெயரால் எப்படி நிற்க முடியும்? செத்தவர்களை பார்க்க போகுமிடங்களில் 10 ஆயிரக்கணக்கான...

“ஹரிஜன” மந்திரிக்கும்  மேயருக்கும் சவால்

“ஹரிஜன” மந்திரிக்கும்  மேயருக்கும் சவால்

மராமத்து மந்திரி கனம் யாகூப் ஹாசன் திறந்து வைத்த தென் தஞ்சை ஜில்லா காங்கரஸ் மகாநாட்டில் சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்ட பாவத்திற்காக மூன்று ஆதி திராவிடர்கள் அவமானப்படுத்தப்பட்டது தென்னாட்டிலே மிக்க பரபரப்பையுண்டு பண்ணியிருக்கிறது. காங்கரஸ் பத்திரிகைகளைத் தவிர ஏனைய பத்திரிகைகளில் எல்லாம் கண்டனச் செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் “ஹரிஜனங்”களை முன்னேற்றிவிடக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் காங்கரஸ்காரர் மட்டும் மெளனம் சாதித்து வருகிறார்கள். எந்தக் காங்கரஸ் பத்திரிகையும் இந்த அக்கிரமத்தை இதுவரைக் கண்டித்து எழுதவில்லை. காங்கரஸ் பேரால் சென்னை அசெம்பிளியில் வீற்றிருக்கும் “ஹரிஜன” மெம்பர்களோ, “ஹரிஜன” மந்திரியோ இதுவரை வாய் திறந்ததாகவும் தெரியவில்லை. “ஹரிஜன” மந்திரி கனம் முனிசாமிப் பிள்ளையும் “ஹரிஜன” மேயர் தோழர் ஜே. சிவஷண்முகம்பிள்ளையும் ஜாதி ஹிந்துக்களுடன் சமபந்தி போஜனம் செய்வதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த சமபந்தி போஜன உரிமை “ஹரிஜன” மந்திரியுடையவும் “ஹரிஜன” மேயருடையவும் சமூகத்துக்கில்லையா?” தமது சமூகத்துக்கில்லாத மரியாதையை அவர்கள் ஒப்புக்கொள்ளுவதுதான் நீதியாகுமா? சமூகத்தின்...

தர்மபுரி ஜில்லா போர்டு நம்பிக்கை இல்லாத் தீர்மான நாடகம்

தர்மபுரி ஜில்லா போர்டு நம்பிக்கை இல்லாத் தீர்மான நாடகம்

  காங்கரஸ் சரணாகதி மந்திரிகள் பதவிக்கு வந்தவுடன் ஸ்தல ஸ்தாபனங்களில் எங்கெங்கு காங்கரஸ் அல்லாத கட்சியார் தலைமைப் பதவி வகித்து வந்தார்களோ அவைகளை எப்படியாவது அழித்து பார்ப்பன ராஜ்யம் ஆக்கிக்கொள்ள முயற்சித்து வருகிறார்கள் என்பது யாரும் அறிந்ததேயாகும். இதற்காக மந்திரிமார்களும் காங்கரஸ்காரர்களும் எவ்வளவு இழிவாகவும், கேவலமாகவும் நடந்து கொள்கிறார்கள் என்பதை பொது ஜனங்கள் உணர வேண்டியது அவசியமாகும். உதாரணமாக தர்மபுரி ஜில்லா போர்டு இதுவரை காங்கரஸ்காரர் ஆதிக்கத்தில் இருக்கவில்லை. தர்மபுரி ஜில்லா போர்டு தலைவரும் உபதலைவரும் சுயமரியாதைக்காரர்கள் ஆனதால் அவர்களை ஒழிக்கக் காங்கரஸ்காரர்கள் சிறப்பாகப் பார்ப்பனர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு பார்ப்பனரல்லாத மெம்பர்களைக் கொண்டே மகா பிரயத்தனங்கள் செய்து வந்து வெற்றி பெற்றுவிட்டார்கள். அதாவது தர்மபுரி ஜில்லா போர்டு பிரசிடெண்ட் தோழர் மிட்டாதார் ஈ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மீதும், வைஸ் பிரசிடெண்ட் தோழர் M.N. நஞ்சய்யா அவர்கள் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டு வந்து, தீர்மானமும் பாஸாகிவிட்டதாகச் சேதி வந்துவிட்டது. அந்த நாடகம்...

காங்கரஸ் வண்டவாளம்  தாழ்த்தப்பட்டவருக்குச் செய்த துரோகம்  ஜனநாயகமா? சர்வாதிகாரமா?

காங்கரஸ் வண்டவாளம் தாழ்த்தப்பட்டவருக்குச் செய்த துரோகம் ஜனநாயகமா? சர்வாதிகாரமா?

  தலைவரவர்களே! தோழர்களே! இன்று அரசியலும் முஸ்லிமும் என்பதுபற்றி பேசுவேன் என்று நிகழ்ச்சிக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்றைய தினம் இந்தியாவில் மூலை முடுக்குகள் உள்பட கிராமங்கள் பட்டினங்கள் எல்லாவற்றிலும் வீட்டுப் பேச்சுக்களாய் இருப்பது இந்த விஷயம் தான். அரசியல் சீர்திருத்தம் வந்ததும் போதும், காங்கிரஸ் பதவிக்கு வந்ததும் போதும்; பொது ஜனங்கள் அனைவர்களுக்குள்ளும் அரசியலும் வகுப்பு விஷயங்களுமாகவே பேசப்பட்டு வருகின்றது. காங்கரஸ்காரர்கள் பதவிகளுக்கும் அதிகாரங்களுக்கும் வெளியில் இருந்து கொண்டு பதவிகளை இழித்துக் கூறியும் அதிகாரங்களை காலாகாலமில்லாமல் சந்தர்ப்ப சந்தர்ப்பமில்லாமல் குற்றங் கூறியும் வந்த பலனும் அரசாங்க நிர்வாகத்துக்கும் சமாதானத்துக்கும் சட்டதிட்டங்களுக்கும் மதிப்பில்லாமல் போகும்படி செய்து வந்த பலனும் இன்று காங்கரஸ்காரர்கள் பதவியில் அமர்ந்து அதிகாரம் பெற்று நிர்வாகம் நடத்த ஆரம்பித்த முதல் ஜனங்களுக்கு காங்கிரசை கேவலப்படுத்தத்தக்க அவசியமும் செளகரியமும் தானாகவே ஏற்பட்டு விட்டதின் பயனாய் காங்கரஸ் கர்ம பலனை அனுபவித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல காங்கரசின் ஆட்சி, வகுப்பு ஆதிக்க சூழ்ச்சி...

கொச்சியில் அரசியல் சுதந்தரம்  ” மித்திர ” னின் ஜாதி புத்தி

கொச்சியில் அரசியல் சுதந்தரம் ” மித்திர ” னின் ஜாதி புத்தி

  கொச்சி ராஜ்யமானது நமது தமிழ் ஜில்லாக்களில் ஒரு நான்கு ஐந்து தாலூகாகளுக்கு சமமாகும். சுமார் 12 லக்ஷம் ஜனங்களும் சுமார் 1 கோடி ரூ. வருஷ வருமானமும் உடையதாகும். இந்த ராஜ்யம் இன்று இந்தியாவிலேயே தலை சிறந்து விளங்கும் சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாக விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கொச்சியில் இன்று இருக்கும் ராஜா 75 வயது கடந்த விருத்தரும் பழமை விரும்பியும் வைதீகப் பித்தருமாவார் என்றாலும் அவருக்கு கிடைத்த அருமையான திவானால் மகாராஜா இன்று குன்றின் மேலிட்ட தீபமாய் விளங்குகின்றார். இந்த மகாராஜா மீது பார்ப்பனர்கள் ஒரு குறை கூறுகிறார்கள். அதாவது கொச்சி மகாராஜா கோவிலை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறந்துவிடவில்லை என்பதாகும். (எப்படிப்பட்ட பார்ப்பனர்கள் இந்தக்குறை கூறுகிறார்கள் என்றால் பார்ப்பன ராஜ்யம் இருக்கும் பிரிட்டிஷ் ராஜ்யத்தில் கோவிலைத் திறந்து விடுவதற்கு சட்டம் செய்யக்கூடாது என்று வாதாடும் பார்ப்பனர்கள்.) ஏனெனில் பக்கத்து தேசமாகிய திருவாங்கூர் மகாராஜா கோவிலைத் திறந்து விட்டிருக்கும்போது கொச்சி...

காங்கரஸ் கொடி  தேசீயக்கொடி அல்ல

காங்கரஸ் கொடி  தேசீயக்கொடி அல்ல

காங்கரஸ்காரர் மெஜாரட்டி பெற்று பதவியேற்றதும் சென்னைக் கோட்டையில் தேசீயக்கொடி யேற்றுவதாக பாமர மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை ஓரளவிலாவது நிறைவேற்றி வைத்துச் சமாளித்து விடவேண்டுமென்ற நோக்கத்தினால் சென்னை முதன் மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார், விருப்பமுடைய ஸ்தல ஸ்தாபனங்கள் தேசீயக்கொடியை (காங்கரஸ் கொடியை)த் தமது கட்டிடங்களில் விசேஷ காலங்களில் பறக்கவிடலாம் என ஒரு அறிக்கை தயார் செய்து சென்னை கவர்னர் பிரபுவின் ஆசீர்வாதம் பெறச் சென்றதாகவும் காங்கரஸ் கொடியை தேசீயக் கொடியென ஒப்புக்கொள்ள முடியாதென்று கவர்னர் கூறியதாயும் அப்பால் காங்கரஸ் மூவர்ணக் கொடியே என கனம் ஆச்சாரியார் திருத்தி அறிக்கை வெளியிட்டதாகவும் தெரியவருகிறது. எனினும் காங்கரஸ் சர்க்கார் வெளியிட்ட அறிக்கையில் காங்கரஸ் மூவர்ணக் கொடி எனப் பிரத்தியேகம் குறிப்பிடப்பட்டிருந்தும் காங்கரஸ் மந்திரிகளும் ஏனைய காங்கரஸ்காரரும் காங்கரஸ் பத்திரிகைகளும் காங்கரஸ் கொடியை தேசீயக் கொடியென புரளிசெய்து பொது ஜனங்களை ஏமாற்றும் வழக்கம் நிற்கவில்லை. நீலகிரி ஜில்லா போர்டு கட்டிடத்தில் காங்கரஸ் கொடியைப் பறக்கவிடவேண்டுமென்று ஒரு காங்கரஸ்...

தாழ்த்தப்பட்டவர்களும்  முஸ்லீம்களும்

தாழ்த்தப்பட்டவர்களும்  முஸ்லீம்களும்

  இப்போது நம் இந்திய நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் நிலையும், முஸ்லீம்களின் நிலையும் சமூகம் அரசியல் ஆகியவைகளில் ஒன்று போலவே இருந்து வருகிறது என்று நாம் வெகு நாளாகவே சொல்லி வருகிறோம். இதையே தோழர் ஜின்னா அவர்களும் அலகாபாத்தில் தன்னைக் காண வந்த ஒரு தாழ்த்தப்பட்ட மக்கள் தூது கோஷ்டிக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார். இந்து மதப்படிக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சுமத்தப்பட்ட தீண்டாமையானது அவர்கள் செத்தால் ஒழிய – செத்த பிறகும் கூட (தீண்டாமை) ஒழியாது என்பது தத்துவமாகும். இதற்கு இந்துமத வேத சாஸ்திரங்களும் அவைகளில் நிபுணத்துவம் பெற்ற சாஸ்திரிகளது வாக்குகளுமே ஆதாரங்களாகும். அது போலவே இந்து மதப்படி முஸ்லீம்கள் விஷயமும் ஆகும். மற்றும் கவனமாய் பார்த்தால் முஸ்லீம்கள் விஷயம் தீண்டப்படாதவர்களைவிட மோசமானதாகும் என்று தெரியவரும். ஏனெனில் மத அகராதிப்படி ஆதாரப்படி முஸ்லீம்கள் சோனகர் என்றும் மிலேச்சர்களென்றும் அழைக்கப்படுகிறவர்களாய் இருக்கிறார்கள். துருக்கியனை அசுரன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களது பாஷையையும், தேசத்தையும் மிலேச்ச...

வைத்திய உதவிக்கு ஆபத்து

வைத்திய உதவிக்கு ஆபத்து

  சரணாகதி மந்திரி சபையின் வைத்திய இலாகா மந்திரியான கனம் டாக்டர் ராஜன் அவர்கள் சர்க்கார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் விஷயமாய் வெளிப்படுத்தி இருக்கும் அபிப்பிராயங்களும் உத்திரவுகளும் பல பத்திரிகைகளில் வெளியாய் இருப்பதை நமது வாசகர்கள் கவனித்திருக்கலாம். அவ்வுத்திரவினுடைய முக்கிய கருத்தானது சர்க்கார் ஆஸ்பத்திரிகளுக்கு டாக்டர்களை நியமிப்பதில் சம்பளமில்லாமல் வேலை செய்யும்படி கவுரவ டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பதாகும். இதற்குச் சரணாகதி மந்திரிகள் சொல்லும் முக்கிய காரணம் என்ன வென்றால், சேலம் ஜில்லாவில் மதுவிலக்கு ஏற்படுத்தியதால் சர்க்காருக்கு வருஷம் 1க்கு சுமார் 30 லக்ஷ ரூபாய் வரையில் வரும்படி குறைந்துவிட்டதால், அந்த நஷ்டத்தை சரிகட்ட வேண்டுமானால் வைத்திய இலாகாவில் உள்ள சம்பள டாக்டர்கள் பலரை எடுத்துவிட்டு, படித்துவிட்டு வரும்படி இல்லாமல் திரியும் பல டாக்டர்களை கவுரவ – சம்பளமில்லாமல் கவுரவ டாக்டர்களாக நியமித்து விடுவதன் மூலமும், சில பள்ளிக் கூடங்களை எடுத்து விடுவதன் மூலமும் கல்வி சுகாதார இலாகாவில் சில சிக்கனம் செய்து...

ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை

ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை

  தலைவரவர்களே! தோழர்களே!! இன்று இங்கு கூடியுள்ள இப்பெரிய கூட்டத்தில் பேச எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி நான் உண்மையிலேயே மகிழ்ச்சி கொள்ளுகிறேன். அதிலும் எனது பழய தோழர் மாஜி மந்திரி கனம் கலிபுல்லா சாயபு அவர்கள் தலைமையில் பேசுவதைப் பற்றி மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். முஸ்லீம் லீக்கு சம்பந்தமாய் முஸ்லீம் சமூகத்தினரால் கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் என்ன பேசுவேன் என்று குறிப்பிடாத நிலையில் என்ன பேசுவது என்று யோசித்ததில் தலைவர் அவர்கள் பேசியதை ஒட்டியும் இந்து முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியும் பேசுவது பொருத்தமுடையதாக இருக்கலாம் என்கின்ற முடிவுக்கு வந்து அதைப்பற்றியே பேச தலைவர் அனுமதியளிப்பார் என்று கருதுகிறேன்.   இந்து முஸ்லிம் ஒற்றுமை   இந்தியாவைப் போலுள்ள ஒரு நாட்டுக்கு இன்று முக்கியமாய் வேண்டியது இந்து முஸ்லிம் ஒற்றுமையேயாகும். அது மாத்திரமல்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு ஜாதி வகுப்பாரின் ஒற்றுமையுமாகும். இந்தக் காரியங்களை செய்யாமல் அரசியல், பொருளாதாரம் முதலிய பெரிய விஷயங்களைப் பற்றி...

காங்கரஸ் ராஜ்யமும் கவர்னர் கடமையும்  எச்சரிக்கை

காங்கரஸ் ராஜ்யமும் கவர்னர் கடமையும் எச்சரிக்கை

  காங்கரசுக்காரர்கள் தங்களுடைய முட்டாள்தனமானதும் சூழ்ச்சி கரமானதுமான காரியங்களைப்பற்றி யார் சமாதானம் கேட்டாலும் காலித்தனத்தையும் பலாத்காரத்தையுமே சமாதானமாக உபயோகிக்கத் தீர்மானித்து விட்டார்கள் என்றுதான் முடிவு செய்ய வேண்டி இருக்கிறது. காங்கரஸ்காரர்கள் தவிர வேறு யாருக்கும் பொதுக் கூட்டம் கூட்டும் உரிமையே இருக்கக்கூடாது என்பதுதான் காங்கரஸ்காரர்களின் சுயராஜ்யமாகவும், பேச்சுச் சுதந்திரமாகவும் இருந்து வருவதாகவும் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. சற்றேறக்குறைய இந்த இரண்டு மூன்று வருஷ காலமாய் காங்கரஸ்காரர்களின் காலித்தனத்தை அவ்வப்போது நாம் வெளியிட்டு வந்திருப்பதுடன் அப்படி வெளியிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பொதுஜன சமாதானத்துக்கும் அமைதிக்கும் காப்பளிக்கும்படி பொறுப்பான அதிகாரிகளுக்கும் கவர்னர் பிரபுவுக்கும் வேண்டுகோள் செய்து கொண்டே வந்திருக்கிறோம். என்ன காரணத்தை முன்னிட்டோ இவ்விஷயத்தில் சர்க்கார் போதிய கவலை செலுத்தாமலே இருந்து வந்திருக்கிறது. ~subhead காலித்தனத்துக்கு காங்கரஸ் பத்திரிகைகள் ஆதரவு ~shend தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கூட்டங்களில் 100-க்கு 99 கூட்டங்களில் காங்கரஸ் காலிகள் கலகம் செய்தே வந்திருக்கிறார்கள். இவற்றை காங்கரஸ் பத்திரிகைகள் விளம்பரப்படுத்தி காலிகளுக்கு...

* “தங்கள் சுயநலத்துக்கென்றே சர்க்காருடன் ஒத்துழைக்காமல் ஒத்துழையாமை என்னும் பேரால் அரசின் யந்திரத்திற்கு தொந்தரவு கொடுத்தும் பொதுஜன ஒற்றுமைக்கும் அமைதிக்கும் ஒழுங்குக்கும் விரோதமாகவும் ஒரு சுயநலக் கூட்டத்தார் சண்டித்தனம் முதலிய தொல்லைகள் விளைவித்து வந்த நெருக்கடியான சமயத்தில் நல்ல ஆட்சியையும் பொதுஜன நன்மையையும் கருதி மனப்பூர்வமாக சர்க்காருடன் ஒத்துழைத்தும் அதனால் விளக்கமறியா பாமர மக்கள் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் ஆளாகி வருவதையும் லôயம் செய்யாமல் அதற்காக தொண்டாற்றியும் வந்த தமிழ் மக்களுக்கு சிறிதும் நன்றி விசுவாசம் காட்டாமல் சுயநல புரோகித கூட்டத்தாருக்கு வசப்பட்டு நம்மை அவர்களது பழிவாங்கும் தன்மைக்கு ஆளாக்கி விட்டுக் கொண்டிருக்கும் மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவின் நடத்தைக்கு ஆக இம்மகாநாடு வருந்துவதுடன் அவரிடம் இம்மாகாண தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட இடமில்லையென்று இம்மகாநாடு அபிப்பிராயப்படுகிறது. இம்மாகாண மக்களின் நன்மையையும் சாந்தியையும் சமாதானத்தையும் உத்தேசித்து மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவை திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டுமென்று இந்தியா மந்திரியை கேட்டுக் கொள்கிறது.”

ஒழுக்கம்

ஒழுக்கம்

  உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண்மக்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆளவென்று ஏற்படுத்திப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அது போலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும் எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி மற்றவர்கள் வாழ பயன்படுத்திவரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமே யல்லாமல், அதில் உண்மையோ, சத்தோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல், சத்தியம், நீதி, ஒழுக்கம் என்பனவெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள். அதாவது குழந்தைகளைப் பயமுறுத்த பெரியவர்கள் “பூச்சாண்டி” “பூச்சாண்டி” என்பதுபோல் இவை எளியோரையும் பாமர மக்களையும் வலுத்தவர்களும், தந்திரக்காரர்களும் ஏமாற்றச்செய்த ஒரு பெரும் சூழ்ச்சியேயாகும். எப்படி குழந்தைப்பருவம் உள்ளவரை பூச்சாண்டிக்கு மக்கள் பயப்பட வேண்டியிருக்கிறதோ, அதுபோலவேதான் அறிவும், சக்தியும் மக்களுக்கு ஏற்படும்வரை மேற்கண்ட ஒழுக்கம் முதலிய பூச்சாண்டிகளுக்கு அவர்கள் பயப்பட்டுத் தீரவேண்டியிருக்கிறது. உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவைகளைச் செய்கிற ஆட்களின் வலிமையையும், அறிவையும்கொண்டு மதிக்கப்படுகிறதே யல்லாமல், வெறும் காரியத்தைப்பற்றி மாத்திரம் முடிவு...

கவர்னர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம்  திருப்பி அழைத்துக் கொள்ள இந்தியா  மந்திரிக்கு வேண்டுகோள்

கவர்னர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் திருப்பி அழைத்துக் கொள்ள இந்தியா  மந்திரிக்கு வேண்டுகோள்

  தலைவரவர்களே! தோழர்களே! நான்* இத்தீர்மானத்தைப் பிரேரேபிக்க எழுந்ததில் எனக்கு உற்சாகமில்லை. மிகவும் சங்கடத்துடன் முன் வந்திருக்கிறேன். பிரிட்டிஷ் ஆட்சி நம் பழங்கால ஆட்சியைவிட மேலானது என்று எண்ணுபவர்களில் நான் ஒருவன். பிரிட்டிஷார் உலகில் உள்ள மற்ற மக்களைவிட யோக்கியர்கள், நாணையமானவர்கள் என்பதை நான் உலகம் சுற்றிப்பார்த்துப் பிரிட்டிஷார் வாழும் இங்கிலாந்து முதலிய நாடுகளில் கிராமங்கள் தோறும் சுற்றிப்பார்த்து நேரில் அறிந்தவன். இந்தியா நாடானது இந்தியர்களால் ஆளப்பட முடியாமல் அன்னிய நாட்டார்களால் தான் ஆளப்பட வேண்டும் என்கின்ற நிலைமை நிரந்தரமாக ஏற்பட்டால் நான் பிரிட்டிஷாருக்குத்தான் ஓட்டுக் கொடுப்பேன். ஏன்? மற்ற நாட்டார்களையும் அவர்களது ராஜரீகத்தையும் நான் அறிவேன். ராமராஜ்யம், சேர, சோழ, பாண்டியன், நாயக்கர் ராஜ்யம் ஆகிய கதைகளையும் புராணங்களையும் அவர்களது ராஜரீக முறைகளையும் பற்றி சிறிதாவது உண்மையை உணர்ந்திருக்கிறேன்.   ஏகாதிபத்தியத்து விரோதமல்ல   ஆதலால் இத்தீர்மானம் பிரிட்டிஷ் ராஜ்யபாரத்துக்கு விரோதமாக நான் இப்போது கொண்டு வந்ததாக நீங்கள் கருதாதீர்கள்....