“பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு” – கழகப் பரப்புரை செய லாளர் பால் பிரபாகரன் ஆற்றிய உரை.
தமிழனுக்கு மதமில்லை என்றார்; ஏனென்றால் மதம் என்பது தமிழ் சொல் இல்லை. தமிழனுக்கு ஜாதியில்லை என்றார், ஏனென்றால் ஜாதி தமிழ் சொல் இல்லை. தமிழனுக்கு கடவுள் இல்லை என்றார்; ஏனென்றால் குறளிலோ, தொல்காப்பி யத்திலோ கடவுள் என்ற சொல் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. கழகத்தின் சார்பில், களப்பணியாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு திருச்சியில் ஜூலை 23-25 வரை நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் “பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு” என்ற தலைப்பில் தமிழை மதத்திலிருந்து பிரித்தால் தான் மொழி தமிழரின் தன்மானத்துக்கு அடையாளமாக முடியும் என்று பெரியார் கூறியதை விளக்கி கழகப் பரப்புரை செய லாளர் பால் பிரபாகரன் ஆற்றிய உரை. தமிழ் பாடல்களும் வட மொழியில் உள்ளன, ஆரிய கீர்த்தனைகளாகவே உள்ளன. அதையும் பெரியார் தமிழில் பாட வேண்டும் என்கிறார். இசை அரங்குகள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்கிறார். பெரியார் உணர்வாளர் மாணவர் நகலக உரிமையாளர் ஆனா ரூனா என்ற...