Author: admin

24. கடவுள் சங்கதி

24. கடவுள் சங்கதி

கடவுள் சங்கதி என்று இவ்வியாசத்துக்குத் தலைப்புக் கொடுத்ததின் காரணம் என்னவென்றால், கடவுள் உண்டா? இல்லையா? என்பதல்ல இவ்வியாசத்தின் கருத்து என்பதை விளக்கவேயாகும். கடவுள் என்பதாக ஒன்று இருக்கட்டும்; அல்லது கடவுள் என்பதாக ஒன்று இல்லாமலே போகட்டும். இருந்தால் உயர் குணங்களும் நற்பண்புகளுமே கடவுளாக இருக்கட்டும்; அல்லது கடவுள் என்பதாக ஒரு வஸ்து அய்ம்புலன்களோடு இருந்து கொண்டு நினைத்துக் கொண்டும், செய்துகொண்டும், கவனமாய் கவனித்துக்கொண்டும், பலாபலன்களை அளித்துக்கொண்டும் இருக்கட்டும், அல்லது குணமில்லாமல், உருவமில்லாமல், விளக்கிச் சொல்ல வகையும் ஆதாரமும் இல்லாமல் ஒரு அரூபி வஸ்துவாக இருந்தாலும் இருக்கட்டும். அறிவுக்கும் மனத்துக்கும் எட்டினதாகவோ அல்லது அறிவுக்கும் மனத்துக்கும் எட்டாததாகவோ இருக்கட்டும். புத்த பகவானுக்கு அறிவு வழிகாட்டிய கடவுளாக இருந்தாலும் இருக்கட்டும் அல்லது கிறிஸ்துநாதருக்கு அருள் சுரந்த கடவுளாக இருந்தாலும் இருக்கட்டும் அல்லது மகம்மது நபியை உலகுக்கு அனுப்பி மக்களுக்குத் தனது நீதியை எடுத்துச் சொல்லும்படி செய்த கடவுளாக இருந்தாலும் இருக்கட்டும். மற்றும் ஆகாயமாய், நீராய்,...

23.  குறளும் பெரியாரும்!

23. குறளும் பெரியாரும்!

திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றி பெரியார் ஈ.வே.ரா அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அது இவ்வாரக் குடி அரசில் பிறிதோரிடத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் ஊன்றிப் படிக்க வேண்டுமாய் வேண்டுகிறோம். ஒரு தடவை மாத்திரம் படித்தால் போதாது, இருமுறை மும்முறை வாசிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுகிறோம். குறள் ஒரு நீதி நூல் என்பது உலகம் ஒப்புக் கொண்ட உண்மை. என்றாலும் பெரியார் அவர்களின் கருத்துப்படி அது ஒரு கண்டன நூல் என்றே கருத வேண்டியிருக்கிறது. திருவள்ளுவர் குறளை எழுதிய காலம், ஆரிய மதக் கடவுள்கள் ? சாஸ்திரங்கள் – புராண இதிகாசங்கள் – ஆரியப் பழக்க வழக்கங்கள் இந்த நாட்டில் புகுந்து விட்டகாலமாகும். அவைகளை மக்கள் நம்பத் தலைப்பட்ட காலமாகும். இல்லாவிட்டால், எடுத்துக் காட்டடாக, அந்தணர் என்பவர் யார் என்கிற கேள்வியை எழுப்பிக் கொண்டு, அதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் வள்ளுவருக்கு எப்படி வந்திருக்க முடியும்? அந்தணர் என்போர்...

  22. பதினோறாவது தடவை?

  22. பதினோறாவது தடவை?

நமது சென்னை சர்க்கார் ? பார்ப்பனப் பனியாக்களின் ஆதிக்க சர்க்கார், நடத்திவரும் தடைப் படலத்தைப் பார்க்கும் போது, குறிப்பாகப் பெரியார் அவர்களுடன் பிள்ளை விளையாட்டு விளையாடுவதில் பெருமையடைகிறதோ, என்றே நினைக்கவேண்டி இருக்கிறது. நாட்டின் நலிவை எண்ணி, தமது தள்ளாத முதுமைப் பருவத்திலும் நாள் தவறாது, பட்டிதொட்டியெல்லாம் சுற்றிப் பிரச்சாரம் செய்து, மக்களின் மடமையையும் இழிவையும் போக்கப் பாடுபட்டுவரும் தந்தை பெரியாரவர்களை, இந்த மாதம் 16-தேதி உடுமலைப் பேட்டையிலுள்ள அதிகார வர்க்கம் 11-வது தடவையாக, இரவு ஏழரை மணிக்குக் கைது செய்ததையும், பின், அன்றிரவு நடுச் சாமத்திலேயே விடுதலை செய்ததையும் நினைக்கும்போது, இந்த எண்ணந்தானே வலுப்படமுடியும்? தடை உத்தரவை மீறுவது என்கிற காரணமாகப், தமிழ் நாட்டில் பெரியாரவர்கள் 100க்கணக் கான தடவைகள் தடை உத்திரவு சார்வு செய்யப்பட்டிருந்தாலும், அதற்கு ஆக கைது செய்யப்பட்டிருப்பது இது 4-வது தடவையாகும். சமீபத்தில் குடந்தையில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதும், மறு நாள் நள்ளிரவில் போலீஸ் லாரியில் ஏற்றி...

21. மஞ்சள் கரைகிறது, கரைந்து கொண்டே வருகிறது

21. மஞ்சள் கரைகிறது, கரைந்து கொண்டே வருகிறது

இந்தியாவில் கம்யூனிஸம் பரவிவருகிறதா? கம்யூனிஸம் என்றால் இரு விஷயங்களைக் குறிக்கும். ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி; மற்றொன்று வறுமை காரணமாக ஏற்படும் அதிருப்தி. முன்னையதை இந்தியா சட்டை செய்யவில்லை. ஏனென்றால் பொதுத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட்கள் வெற்றிபெற முடியாது.  இது ஒரு கேள்வியும் பதிலும். கேள்வி கேட்டவர், லண்டன் டெயிலி மெயில் என்ற பத்திரிகையின் நிருபர். பதில் கூறியவர் இந்துஸ்தான் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு அவர்கள். இங்கு, நாம் இதை எடுத்துக்காட்ட எண்ணியது, இந்தியா என்ற பெரிய நிலப்பரப்பில் – உபகண்டத்தில், கம்யூனிஸம் எந்த அளவில் பரவியிருக்கிறது என்பதை எடை போட்டு நிறுத்த, எடுத்துக் காட்டவேண்டுமென்கிற எண்ணத்தோடல்ல. கேள்விக்குப்பதிலாக இந்துஸ்தானத்தின் முதல் மந்திரி கூறியிருக்கும் பதிலில், எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது; இந்த மஞ்சள் குளிக்கும் நிலைமை இன்னும் நீடிக்குமென்கிற ஒரு நினைப்புக்கு இடமுண்டா? என்பதை எடுத்துக்காட்ட வேண்டுமென்பதற்காகத்தான். கம்யூனிஸ்ட் கட்சியால், நாட்டில் பரப்பப்படும் கருத்துக்களால் உண்டாகும் கம்யூனிஸம்; சுரணடல்காரர்களின் ஆதிக்கம் நீடிப்பதால், தொடர்ந்து...

20. ஒப்புயர்வற்ற குறள் நாள்!

20. ஒப்புயர்வற்ற குறள் நாள்!

ஏப்ரல் 12-ல் எங்கும் கொண்டாடுங்கள்! இந்த மாதத்தில் சென்னையில் குறள் நாள் வெகு ஆடம்பரமாகக் கொண்டாடப் பெறவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். பெரியார் திரு.வி.க. அவர்களையும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் மகிழ்ச்சியோடு இசைந்தார். ஆனால் அதை இந்த மாதத்தில் நடத்த எனக்குப் போதிய வாய்ப்பில்லாமல் போய் விட்டது குறித்து வருந்துகிறேன். கோவை ஜில்லா சுற்றுப்பிரயாணமும், பிரசாரப்பள்ளியும் இம்மாதத்தைக் கவர்ந்து கொண்டன. அவற்றை மாற்ற முடியவில்லை. ஆதலால் சமீபத்தில் அடுத்த மாதத்தில் ஒரு நாள் தனிமையாய் சென்னையில் கொண்டாடக் கருதி இருக்கிறேன். ஆனாலும் இம்மாதம் 12-ம்தேதி நல்ல முழு நிலவு நாளாக இருக்கும். ஆதலால் 12-ம் தேதியில் தமிழ்நாடு முழுவதும் திராவிட கழகத்தார் உட்பட எல்லாத் தமிழ் மக்களும் அவசியம் தவறாமல் ஒவ்வொரு ஊரிலும் திருவள்ளுவர் நாள் கொண்டாடவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். தமிழர் பண்பு, திராவிடகழகக் கொள்கைகள் யாவற்றிற்கும் குறளில் ஆதாரங்கள் இருக்கின்றன. குறள் ஜாதிகள்,...

19. பொறுத்துப் பார்ப்போம்

19. பொறுத்துப் பார்ப்போம்

உண்மை தோற்றது, பொய்ம்மை வெற்றி பெற்றது. நாணயம் நலிந்தது, நம்பிக்கைத் துரோகம் செழித்தது. யோக்கியதைக்குமதிப்பு இல்லை, அயோக்கியத்தனத்திற்கு ஆடம்பர வரவேற்பு ?  இவை இன்று இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களின் பேச்சு. ஆம்! ஓமந்தூரார் என்றைக்கு, தான் ராஜினாமாச் செய்யப்போவதாகச் சொன்னாரோ, அன்று முதல் சென்ற 10- நாளாக எங்கும் இதே பேச்சுத்தான். இவ்வளவுக்கும் ஒமந்தூரார் ஆட்சியில், இந்த நாட்டு மக்களின் குறைபாடுகள் எல்லாம் போக்கடிக்கப்பட்டன, வயிறார மக்கள் பசி தீரவுண்டனர், அறியாமை அழிக்கப்பட்டு மக்கள் அறிவில் உயர்ந்து விளங்கினர் என்று சொல்லக்கூடிய நிலையில்லை. இன்னும் சொல்லப்போனால், ஓமந்தூரார் ஆட்சியில்தான் இந்த நாட்டுத் தொழிலாளிகள் ஈவு இரக்கமற்ற முறையில் ஒடுக்கப் பட்டார்கள். மொழிப்பற்று உடைய இளங்காளையரும், தாய்மாரும் மூர்க்கத்தனமான வழிகளால் – காட்டுமிராண்டிப் போக்கோடு தாக்கப் பட்டனர். இன்னும் எத்தனை எத்தனையோ தொல்லை! இருந்தாலும் ஒமந்தூராரின் ராஜினாமா, உண்மைக்கும் நாணயத்திற்கும் யோக்கியதைக்கும் ராஜினாமாவாகக் கருதப்படுகிறது என்றால், இதிலுள்ள உண்மை என்ன என்பதை, ஓமந்தூராரை...

18. தோழர் அழகிரிசாமி!

18. தோழர் அழகிரிசாமி!

தமிழரின் தன்மானப் போர்த் தளபதி ? அஞ்சா நெஞ்சன் ? பட்டுக்கோட்டை அழகிரிசாமியவர்கள் இயற்கை எய்தினார் என்ற சேதி எதிர் பார்த்தது எவரும் என்றாலும் செய்தியைக் கேட்டவுடன் பேரதிர்ச்சியைத் தராமலில்லை. சமுதாயத்தின் என்புருக்கியான ஆரியச் சழக்கரோடு தீவிரமாகப் போர்தொடுத்த அவரின் உடம்பை, என்புருக்கிநோய் இன்று இரையாகக் கொண்டுவிட்டது. தோழர் அழகிரி ? ஆம்! தோழமை என்பதன் தத்துவத்தை நன்குணர்ந்த அழகிரியவர்கள், இறப்பை, இன்றோ நாளையோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்தான். அப்படி எதிர் பார்க்க வேண்டிய நிலையில், தன்னுடைய வாழ்வைப் பற்றிப் பெருங்கவலை கொள்ளாதவராய் இருந்துவர, தன்னை அவர் பழக்கிக் கொண்டவர் என்று கூறினால் அது தவறில்லை. சானடோரியத்தில் இருப்பதைக் காட்டிலும் அவர் தன்னுடைய வீட்டுக்குச் சென்று ஓய்வு பெற்றுக்கொள்வது நல்லது இது, அவர் பெருந்துறை சானடோரியத்துக்குத், தோழர்களின் தூண்டுலால் போனபோது அங்குள்ள டாக்டரால் கூறப்பட்ட ஆலோசனை. சாவதை ஆஸ்பத்திரியில் சாவாதே, வீட்டுக்குப்போய் இறந்துவிடு என்பதுதான் இதன் கருத்து. இதை டாக்டர் கூறுவதற்கு...

17. முதல் மந்திரியும் – நிதி மந்திரியும்

17. முதல் மந்திரியும் – நிதி மந்திரியும்

திராவிடக் கழகத்தையும், கருப்புச் சட்டையையும் பற்றி இந்த ஒரு ஆண்டுக்காலமாக மந்திரிகள் பேசும் ஒவ்வொரு கூட்டங்களிலும், சட்டசபை அங்கத்தினர்கள் பேசும் ஒவ்வொரு கூட்டத்திலும், சட்டசபை கூடும் ஒவ்வொரு கூட்டச் சமயத்திலும் ஏதாவது ஒரு வகையில் குறை கூறியும், தாக்கியும் பேசிக்கொண்டே வருகிறார்கள். திராவிடக் கழகத்தார் இந்தியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதும், இந்துஸ்தான் அரசாங்க ஆதிக்கத்திலிருந்து திராவிடநாடு தனிச் சுதந்திர நாடாகப் பிரிந்திருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதும், மத, சமுதாயத்துறைகளில் மூடநம்பிக்கைகளும் வருணாச்சிரம முறைப்படி ஆன ஜாதிப்பிரிவுகளும் பேத வகைகளும் ஒழிய வேண்டும் என்றும், இவை ஒழியும்வரை, மக்கள் எண்ணிக்கை வீதம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துமும், உரிமையும் இருக்கவேண்டும் என்றும், பிரச்சாரம் செய்துவருவதும் யாவரும் அறிந்தேயாகும். இதில் திராவிடக் கழகத்தார் சிறிதும் ஒழிவு, மறைவு இல்லாமல் பிரச்சாரம் செய்து வருவதோடு, தங்கள் பிரச்சாரங் களில் சிறிதும் பலாத்காரமோ, பலாத்கார உணர்ச்சியோ ஏற்படுவதற்கு இடம் இல்லாமல் சாந்தமும், சமாதானமும் ஆன தன்மையிலேயே பிரச்சாரம் செய்து...

16. ஸ்தல சுயாட்சி

16. ஸ்தல சுயாட்சி

இந்த மாதம் 12 தேதி திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்குத் திருச்சி நகரசபை அளித்த சிறப்பு மிக்க வரவேற்பு, நம் காங்கிரஸ் தோழர்களுக்கு ? மந்திரிமார்களுக்குப் பெரும் மனக்கசப்பைத் தருமென்று கூறப்படுமானால், அங்கு பெரியார் கூறிய கருத்துக்கள், எத்தனையோ மடங்கு அதிகமான மனக்கசப்பை அவர்களுக்கு நிச்சயமாகத் தந்திருக்க வேண்டும். பெரியாரவர்கள் அந்த வரவேற்புக்குப் பதில் கூறும்போது, இன்றைய ஸ்தல ஸ்தாபனங்கள் சுயேச்சையாகச் செய்யக்கூடிய செயல்கள் இரண்டு; ஒன்று வரவேற்பு வழங்குவது, மற்றொன்று திருவுருவப்படம் திறந்து வைப்பது என்று கூறியிருப்பது வெறும் வேடிக்கைக்காகக் கூறிய விஷயமல்ல. இன்றைய ஸ்தலஸ்தாபனங்களின் உண்மையான யோக்கியதை அவ்வளவுதான். ஸ்தல ஸ்தாபனங்களில் முக்கியமாக முனிசிபாலிட்டிகள், பஞ்சாயத்துப் போர்டுகள் என்பவைகளில் அங்கம் வகிக்கும் எவரும் அந்த ஸ்தாபனங்களால் அந்த நகருக்கோ, ஊருக்கோ எந்த ஒரு பொது நன்மையையும் செய்ய முடியாத அளவில்தான் அவர்களுடை அதிகாரம் பறிமுதல் செய்யப் பட்டிருக்கிறது. பறிமுதல் என்று ஏன் கூறுகிறோமென்றால், ஸ்தல ஸ்தாபன அமைப்பு முறையே அந்த...

15. திருவள்ளூரில் காமராஜர்!

15. திருவள்ளூரில் காமராஜர்!

சென்ற ஒருவார காலமாகத் தோழர் காமராஜர் அவர்கள், செங்கற்பட்டு வட்டாரத்தில் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை மேல்சபை உறுப்பினருள் ஒருவரான தோழர் முத்துரங்கனார் அவர்கள் காலஞ் சென்று விட்டதால் ஏற்பட்டிருக்கும் காலி ஸ்தானத்திற்கும், தோழர் சீனுவாசய்யர் என்கிற பேர் வழியை, எப்படியோ, எந்தக் காரணத்தினாலோ, காங்கிரஸ் சார்பில் நிறுத்திவைக்கப்பட்டு, அவரை ஆதரித்துப் பேசித்தீரவேண்டிய நிலையில் தோழர் காமராஜர் இருக்கிறார். எப்படியோ? எந்தக் காரணமோ? என்று ஏன் கூறுகிறோமென்றால், இந்தத் (துண்டு) விழுந்த இடத்துக்குக் காங்கிரஸ் சார்பாகவே நான் நிற்கிறேன் என்று தோழர்களான வேணுகோபால்ரெட்டி, ஆதிகேசவலு நாய்க்கர், மேயர் இராமசாமி நாயுடு ஆகிய மூன்று திராவிடர்கள், தனித்தனியே காங்கிரஸ் கமிட்டிக்கு விண்ணப்பம் போட்டிருந் திருக்கிறார்கள்; இந்த மூன்று பேரில் ஒருவர்கூட முத்துரங்கனார் இடத்துக்கு லாயக்கில்லை என்று தள்ளப்பட்டு, சீனுவாசய்யர்தான் அந்த இடத்துக்குப் பொருத்தமானவர் என்று காங்கிரஸ் தெரிந்தெடுத்திருக்கிறதே, இதை நினைக்கும் போதுதான் எப்படியோ? எந்தக் காரணமோ? என்று கூறவேண்டியதாயிருக்கிறது. மேலும், இந்த...

14. கோபால் மத்தாய் கூட்டுத்திருப்பணி!

14. கோபால் மத்தாய் கூட்டுத்திருப்பணி!

எதனால் வந்தது என்று புரிந்து கொள்ள முடியாமலும், தலைவர்களால் புரியவைக்கவும் முடியாத நிலையில், அர்த்தராத்திரியில் வந்து புகுந்த சுயராஜ்ஜியம், இன்று நாட்டைப் பெரும் அலங்கோலப்படுத்தி விட்டது. இந்தச் சுயராஜ்ஜியம், பார்ப்பனச் சுயராஜ்ஜியமே தவிர, பாட்டாளி மக்களுக்குச் சுயராஜ்ஜியமல்ல என்று நாம்விளக்கிய போது தூற்றப்பட்டோம். பாடுபடாத புளியேப்பக்காரர்கள் பவுசோடும் படாடோபத்தோடும் வாழத்தான் இந்தச் சுய ஆட்சி, பாதை அமைக்குமே தவிர, பாடுபட்டுழைத்துழைத்துப் பசியினால் வாடும் பசியேப்பக் காரர்களின் பசியைப் போக்க வழிவகுக்காது என்று கூறியபோது நாம் பழித்துப் பேசப்பட்டோம். உழைக்காத கும்பல் உடல் மினுப்புக் குன்றாமலிருக்க, தொந்தி வாடாதிருக்கத்தான், இந்த உத்தமர்களின் சுய ஆட்சி உருவாகி இருக்கிறதே தவிர, ஒட்டிய வயிற்றோடு உழைத்துருக்குலையுமினம் ஒரு அங்குல அளவுகூட முன்னேற, இது உதவி செய்யாது என்று நாம் உரைத்த போது, அதை உணர மறுத்தார்கள் நாட்டு மக்கள். வேதியர்களின் ஆசீர்வாதத்தோடு விளக்கம் தெரியாமல் நுழைந்த சுய ஆட்சிக்குக்காரணம், வெள்ளையர் – பனியாக்கள் கூட்டுச்சதி என்று...

13. பார்ப்பனர்களின் சிந்தனைக்கு!

13. பார்ப்பனர்களின் சிந்தனைக்கு!

கூழுக்குப் போட உப்பு இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! பாலுக்குச் சர்க்கரை இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! காலுக்குச் (நடப்பதற்கு) செருப்பு இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! பல்லக்குக்கு (உட்காருவதற்கு) பட்டு மெத்தை இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! கூழுக்கு உப்பு, பாலுக்குச் சர்க்கரை இரண்டு நாக்கு ருசிக்காகத்தான்! காலுக்குச் செருப்பு, பல்லக்குக்குப் பட்டு மெத்தை இரண்டும் அங்கங்களின் நலத்தைக்காப் பாற்றுவதற்காகத்தான்! ஆனால், கூழுக்கு உப்பு, காலுக்குச் செருப்பு வேண்டுமென்கிற கவலை வேறு! பாலுக்குச் சர்க்கரை, பல்லக்குக்குப் பட்டுமெத்தை வேண்டுமென்கிற கவலைவேறு! முந்தியது, குறைந்த பட்சமான கூழைக்குடித்தாவது உயிர் வாழவேண்டுமே என்கிற முயற்சி; இறக்கும் வரையிலும் இடையறா துழைக்க, எவ்வித இடையூறும் வந்து விடக்கூடாதே என்கிற முன்னெச்சரிக்கை! பிந்தியது, உயர்ந்த பட்சமாய், உணவுக்கு மேற்பட்டதாய், மேனி மினுமினுப்பை வேண்டி மேலான நறுமணத்தோடு தீஞ்சுவையையுடைய பாலுக்கு, மற்றொரு சுவையையும் ஊட்டி மகிழ்ச்சியோடு பருகவேண்டும் என்கிற முயற்சி; தனக்காக...

12. உரிமையும் பொறுப்பும்

12. உரிமையும் பொறுப்பும்

இன்று நம் நாட்டில், எங்கு பார்த்தாலும் பஞ்சம், பட்டினி என்கிற முழக்கம் வளர்ந்து கொண்டே வருகிறது. இதைத் தொடர்ந்து மக்கள் சமுதாயத்திலே நாணயக்குறைவும் யோக்கியக்கேடும் மலிந்து விட்டன. சுதந்தரம் பெற்றோம் என்று சொல்லிக்கொள்ளத் தலைப்பட்ட பிறகு, ஒருவரை ஒருவர் எப்படி ஏமாற்றுவது? எந்த மாதிரியான வேஷம் போட்டால் எப்படியெல்லாம் சுரண்ட முடியும்? என்கிற போக்கும், எந்த அயோக்கிய வேலைகளையும் செய்யலாம் என்கிற துணிச்சலும் பொதுவாகச் சமுதாயத்தில் வலுவாக வளர்ந்திருக்கின்றன. சட்டங்களுக்கு ஒரு மதிப்போ, சமுதாய ஒழுங்குக்கு ஒரு மரியாதையோ இன்று நம் நாட்டில் பெரும்பாலும் இல்லையென்றே சொல்லிவிடலாம். சமுதாயத்தின் உட்புறத்தில் உள்ள இந்த ஊழல்களின் வாடையே வெளிப்புறத்தில் களவு, கொலை என்கிற பெயரால் வீசுகிறது. இப்போது சமீப காலமாய்த் தமிழ் நாடெங்கும் நடந்து கொண்டு வரும் களவுகளையும், கொலைகளையும் கணக்கிட்டுக் கூட்டினால் எந்தத் திராவிடனும் வேதனை யடையாமல் இருக்க முடியாது. விசித்திரமான திருட்டுகள்! விதவிதமான கொலைகள்! அறியாமையை நிலை நிறுத்தி வைத்து...

11. ஈரோடுவாசி ஆசிரியர் மீது வழக்கு

11. ஈரோடுவாசி ஆசிரியர் மீது வழக்கு

ஈரோடு தாலூக்கா மக்களின் பொது நலனுக்கென எவ்விதக் கட்சிப்பற்றும் இல்லாமல், சென்ற ஒரு வருடமாக நடைபெற்று பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் ஈரோடுவாசி என்னும் வாரப்பத்திரிகை ஆசிரியரும், பிரசுரிப்பவருமான தோழர் ப.ஷண்முக வேலாயுதன் மீதும், அச்சிடுபவரான தமிழன் பிரஸ்தோழர் என். கரிவாதசாமி மீதும் ஈரோடு டாக்டர் ஜே.டி.ராஜா எம்.பி.பி.எஸ் (பி) என்பவர் இ. பி.கோ.500 பிரிவுப்படி ஈரோடு அடிஷனல்முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். வாயிதா 26.02.1949 தேதி போடப் பட்டிருக்கிறது. வழக்குத் தொடர்ந்திருப்பதற்குக் காரணம் 5.12.1948-ந் தேதி ஈரோடுவாசியில் போலி டாக்டர் சாயம் வெளுத்தது என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட சேதியேயாகும் எனத் தெரிகிறது. குடி அரசு 19.02.1949

10. அழுத பிள்ளை பால் குடித்தது! ஆனால்….?

10. அழுத பிள்ளை பால் குடித்தது! ஆனால்….?

இந்த மாதம் 9-ம் தேதி தூத்துக்குடித் துறைமுகத்தில் ஏர்ஸ்டீமர் அண்டு ஜெனரல் ஏஜன்ஸீஸ் லிமிடெட் கம்பெனியாரின் முதல் கப்பலுக்கு, கவர்னர் ஜெனரல் ஆச்சாரியாரால், மறத்தமிழன் வ.உ.சி.யின் பேர் சூட்டப் பட்டிருக்கிறதே, இதை எண்ணும் போதுதான் அழுத பிள்ளை பால்குடித்தது என்று சொல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். ஆனால் பிள்ளைக்கு வயிறு நிரம்பிவிடுமா? வளர்ச்சியடையப் போதுமானதுதானா? பிள்ளை செழித்து வளரவேண்டுமென்கிற நல்ல நோக்கத்தோடு, பூரிப்போடு பீறிட்டெழுந்த நற்றாயின் பால் ஆகிவிடுமா? என்றும் உடனேயே கேட்கவேண்டியவர்களாயும் இருக்கிறோம். வேதியர்களின் கூட்டுறவால் இந்த நாட்டு வேந்தர்களின் பரம்பரை, ஒருவரோடு ஒருவர் பகைத்து ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் நிலைகுலைந்து, சிதறுண்டு சீரழிந்துகிடந்த நிலையைப் பற்றுக் கோடாகக் கொண்டு, அதே வேதியர்கள் கைநீட்டி வரவேற்க ஆறாயிரம் மைல்களுக்கப்பாலுள்ள வெள்ளையர், அசைத்துவிட முடியாது என்கிற உறுதியோடு அரிய தொரு சாம்ராஜ்ஜியக் கோட்டையை நிறுவினார்கள் என்றாலும், அதன் ஆணிவேர் வெள்ளை வியாபார வேந்தர்களே. இந்தக் கோட்டையை இடித்துத் தகர்க்க வேண்டுமென்றால், இவ்வணிகத் துறைக்கு மூலபலமாயிருக்கும்...

9. இன்னும் எவ்வளவு நாள்?

9. இன்னும் எவ்வளவு நாள்?

நாடகம் முடிந்து விட்டது! ஆம் ஒண்ணேகால் வருஷத்திற்கு மேலாக, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திராவிட மாணவர்கள் மீது தொடரப்பெற்று நடந்து வந்த விசாரணை நாடகம் முடிந்து விட்டது! மாணவர் தலைவர் தோழர் மதியழகனுக்கு 50ரூ.அபராதம்! இன்றேல் ஆறுவாரம் கடுங்காவல் தண்டணை! மாணவத் தோழர்களான திருச்சி கோவிந்தன், நாகை திருஞானம், மதுரை கன்னையன், தருமநல்லூர் திருநாவுக்கரசு ஆகியோருக்கு நூறு நூறு ரூபாய் அபராதம்! இன்றேல் 3-மாதம் கடுங்காவல் தண்டணை!  சிதம்பரம் திராவிடர்கழகத் தலைவர் தோழர் கு.கிருட்டிணசாமி அவர்களுக்கு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை!  இது, பறங்கிப்பேட்டை – சப்மாஜிஸ்திரேட்டால் தரப்பட்டிருக்கும் தீர்ப்பு! எதற்கு? பார்ப்பனீயம் தான் நாட்டை ஆளுகிறது என்ற ஒரே தைரியத்தினால், பார்ப்பனீய வலையிற் சிக்கியவர்களான, மலையாளத் தொடர்புடைய மாணவத் தோழர்கள், பார்ப்பன ஆசிரியர்கள் பார்த்துக் கொண்டிருக்க, போலீஸ்வீரர்கள் பாதுகாப்புச் செய்ய, இருவர் மூவராய் இருந்த அறைக்குள் இருபது முப்பதுபேர் சென்று, தடியாலும் கத்தியாலும் தாக்கி, நடு ராத்திரியில், பச்சை ரத்தம் சிந்தச் செய்தும்...

8. கண் திறக்குமா?

8. கண் திறக்குமா?

உலகில் யார் யார் அடாத வழியில் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம், மற்றவர்கள், அந்த வழியை, அக்கிரமமான அடாதவழி என்று உணர்ந்து கொண்டு, அந்த வழி கூடாது! என்று உரத்த குரலிலே ஓங்கிக் கூறுவது கேட்டுப் பெருங் கஷ்டமாக ? சகிக்க முடியாததாக இருக்கலாம். ஆனால் விழிப்புணர்ச்சி வினையாற்றத் தொடங்கி விட்டால், விபரீத நடத்தையாளர்கள் அவற்றை விட்டுவிடவேண்டும்; இன்றேல் விரைவாகவே ஒழிந்துபட வேண்டும் என்பது, வெகு வெகு நீண்ட காலமாகவே சரிதம் கூறிவரும் உண்மை. உழைக்காமலிருந்து கொண்டே, உல்லாச வாழ்வு வாழ வேண்டும் என்றெண்ணுகிறவர்கள் அல்லது அந்த முறையில் பழகியவர்கள் அல்லது அப்படிப் பழக்கப்படுத்தப்பட்டவர்கள் ஆகிய இந்த ஒருவகையார்தான் சமுதாய ஒழுங்குக்கு ? சமாதானத்திற்கு வைரிகள், அவற்றை விரட்டியடிக்கும் விஷக் கிருமிகள் என்பதை உலக முழுவதுமே உணரத் தலைப்பட்டு விட்டது; அதுமட்டுமல்ல ஒழிக்கவும் தலைப் பட்டுவிட்டது. இந்த உல்லாசபுரியினருக்கு அன்று தொட்டு இன்றுவரை, அவர்களின் உல்லாசபுரி ஒழிந்துவிடாவண்ணம் பாதுகாத்துவரும் அரண்கள் பலவுண்டு....

7. இனி நம் கடன்!

7. இனி நம் கடன்!

தமிழர்களின் புத்தாண்டு நல்ல அறிகுறிகளோடு காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் தை பிறப்பதும், பொங்கல் வைப்பதும் வழக்கமாக நடைபெற்று வரக்கூடியதுதான் என்றாலும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆரிய இருளில் சிக்கித் தவித்துத் தன்னிலை மறந்து தாசி மக்களாய் – வேசிமக்களாய் வாழ்ந்த தமிழினம், அவ்விழிவைத் துடைத்துத், தம் மானிடத் தன்மையைப் பேணி, நல் வாழ்வு வாழ்வதற்கான ஊன்றுகோலைப் பெறுவதற்கு வழி பிறக்கவில்லை. இந்தப் புத்தாண்டைக் கருவியாகக்கொண்டு தந்தை பெரியாரவர்களால் தமிழ் மக்களுக்கு ஊன்றுகோல் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதைத்தான் நாம் நல்ல அறிகுறி என்கிறோம். ஏய்க்கப் பிறந்தவன் பார்ப்பான் – ஏமாறப் பிறந்தவன் தமிழன் என்று பார்ப்பனர்கள் எழுதிவைத்துக் கொண்டிருப்பதை நடைமுறையில் வற்புறுத்திக் கொண்டிருந்தன சங்கராந்தி அதுபோன்ற மற்றவைகள். அதாவது தமிழனுக்கு உரியது, பெருமை தரக்கூடியது எதெது உண்டோ, அதெல்லாவற்றையும் உருவைமாற்றி, பெயரை மாற்றிச் சமஸ்கிருதக் கலப்பை – ஆரியக்கலப் பையுடையது போல ஆக்கிவிட்டார்கள் பார்ப்பனர்கள். ஏமாந்த இனம் அதை ஏற்றுக்கொண்டது. பொங்கல் சங்கராந்தியாக ஆனது....

6. கேள்வி – பதில்

6. கேள்வி – பதில்

(சித்திர புத்திரன்) கேள்வி     :      நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும்படியான ஆகாரம்கூடக் கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடா விட்டாலும் அவர்களுக்கு வயிறுபுடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்? பதில்       :      நமது மதமும் ஜாதியும். கேள்வி     :      நாம் பாடுபட்டுச் சம்பாதித்தும் நம்ம பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90 பேருக்கு மேலாக தற்குறியாயிருக்கிறோம். ஆனால் பாடுபட்டு சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனார்களில் 100க்கு 100பேர் படித்திருக்கிறார்கள். இதன் காரணம் என்ன? பதில்       :      மதமும் ஜாதியும். கேள்வி     :      நமது பணக்காரக் குடும்பங்கள் வரவர பாப்பராய்க் கொண்டே வருவதற்குக் காரணமென்ன? பதில்       :      வினையின் பயன். அதாவது நம்மவர்கள் தங்கள் சமூகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்குப் பணமும் கொடுத்து வந்த பாவமானது அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜிகளாகவும்...

5. பொங்கல் நாள்!

5. பொங்கல் நாள்!

உழுது பாடுபட்ட பாட்டாளி உழுபயன் காணும் நாள்! உலகம் மகிழும் நாள்! மழையென்றும் வெய்யல் என்றும் பாராமல், மனைவி மக்கள் ஆகிய முழுக் குடும்பத்துடனும் மாட்டுடன் போட்டி போட்டுழைத்து, எதிர்பார்த்தும் – எதிர்பாராமலும் வரும் எல்லாவகைக் கேட்டினையும் சமாளித்து, இரத்தத்தை வியர்வையாகப் பிழிந்து, அதுபோதாமல் அட்டைகளுக்கும் பாம்புகளுக்கும் பச்சை ரத்தம் பரிமாறிய உழவன், நெளியும் நெற்குலைகண்டு நீண்ட நெட்டுயிர்ப்போடு, ஆனந்த பரவசனாய் அடையும் அமைதிக்கு எதனைத்தான் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும்? இரட்டைப் பிள்ளைகளைச் சுமர்ந்து வருந்திய தாய், பின் ஈன்றபோது, அவற்றின் இன்முகம் கண்டு மகிழும் மகிழ்ச்சியைக்கூட, உழவனின் மகிழ்ச்சிக்கு ஒப்பாகச் சொல்லமுடியாது. ஆம்! தாய்மை யுணர்ச்சியில் ஒரு தனிப்பெரும் இன்பம் உண்டென்றால், அந்தத் தாய்மை உணர்ச்சி என்பது, உழவனின் தாய்மை உணர்ச்சியின் முன்பு ஒரு மிகச் சிறிய பகுதியேயாகும். உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே அல்லவா? வரப்புயர்ந்தால்தான் மற்றவை உயர முடியுமல்லவா? எங்கு சுற்றியும் உழவனின் காலடியை நோக்கித்தானே இவ்வுலகம் கிடக்கின்றது? அதனால்...

4. நாம் விரும்பும் தன்மை!

4. நாம் விரும்பும் தன்மை!

நம் கழகமும் நமது முயற்சியும் பிரச்சாரமும் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பு நலத்துக்கோ, தனிப்பட்ட மனிதனின் சுயநலத்துக்கோ அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும். பொதுவாகவே நம் நாட்டு மனித சமுதாய முன்னேற்றத்தின் அவசியத்திற்காகவே பாடுபடுகிறோம். இன்று நாம் நம்மையும், மற்ற வெளிநாட்டு உலக மக்களையும் நோக்கும்போது நமது நிலை எப்படி யிருக்கிறது? மிகமிகத் தாழ்ந்த நிலையாக இல்லையா? நாமும் நம் நாடும் உலகில் மிகவும் பழமையானவர்களாவோம். மற்ற நாட்டவரைவிட நம் பெருமையும், வாழ்வும் மிகமிக உயர்ந்த தன்மையில் இருந்ததாகும். அப்படிப்பட்ட நிலையில் இருந்த நாம், நமது நாடு, இன்று பழிப்புக்கு இடமான தன்மையில் இருக்கிறோம். அதாவது நாம் சமுதாயத்தில் கீழான மக்களாக்கப்பட்டு, வாழ்வில் அடிமைகளாக இருக்கும்படி செய்யப்பட்டு விட்டோம். இன்றைய உலகம் மிகவும் முற்போக்கடைந்திருக்கிறது. மக்கள் அறிவு மிகவும் மேலோங்கி இருக்கிறது. மக்கள் வாழ்வும் எவ்வளவோ மேன்மை அடைந்திருக்கிறது. ஆனால் நாம் மாத்திரம் காட்டுமிராண்டிகளாகவே இருந்து வருகிறோம். இதற்குக் காரணம் எதுவானாலும்...

3. விரைவில் உருவாக்குங்கள்!

3. விரைவில் உருவாக்குங்கள்!

நமது சென்னை சர்க்காரும், சில சமயங்களில் அறிந்தோ, அறியாமலோ ஒரு சில பயனுள்ள காரியங்களைச் செய்யப்போகின்றோம் என்று சொல்லி வைக்கிறார்கள். இதைக் கேட்கும் போது, நாம் அவர்களை அவசியம் பாராட்டத்தான் வேண்டியிருக்கிறது. ஏன்? அப்படியே நிறைவேற்றிவைத்து விடுவார்கள் என்கிற உறுதியினாலா? என்றால், நம்மைப் பொறுத்தவரை முழுமனதுடன் நம்புவதற்கில்லை யென்றாலும், ஏதோ இந்த அளவாவது செய்யப்போகிறோம் செய்வதாகத் திட்டமிருக்கிறது ஆலோசித்துக்கொண்டிருக்கிறோம் என்பதைப் பத்திரிகைகளில் பார்க்கும்போது இப்படி வாயினாலாவது சொல்லுகிறார்களே என்பதை எண்ணித்தான் பாராட்டுகிறோம். இந்து மதக் கடவுளர்களின் வேஷங்களைப் போட்டுக்கொண்டு சினிமாப் படங்களில் நடிகர்கள் நடிப்பதென்பதைத் தடைவிதித்து ஒரு திட்டம் தயாரிக்க ஆலோசித்துக் கொண்டிருக்கிறது சென்னை சர்க்கார் என்கிற செய்தியை 2-வாரத்துக்கு முன்னால் படித்தபோது நாம் பெருமகிழ்ச்சியடைந்தோம். இதனை வரவேற்றுப் பாராட்டி, தஞ்சையில் கூடிய மத்திய திராவிடக்கழகக் காரியக் கமிட்டியும் நல்ல செயல்களை எந்த இடத்தில் கண்டாலும் நாங்கள் பாராட்டத் தயங்கமாட்டோம் என்பதுபோலத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்நாட்டு மக்கள், இவ்வுலக...

2. நாடெங்கும் அடக்குமுறை எதிர்ப்பு வெற்றிக் கொண்டாட்டம்

2. நாடெங்கும் அடக்குமுறை எதிர்ப்பு வெற்றிக் கொண்டாட்டம்

சாந்தமும் சமாதானமும் அமைதியும் ஒழுங்குமான முறையில் சுருக்கமான ஊர்வலம் கொண்ட பொதுக் கூட்டத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப் படவேண்டு மென்று திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி, தீர்மானித்திருக்கிறது. அன்று மேற்கண்ட நடவடிக்கைகள் நடத்துவதில் மக்களுக்கும் காங்கிரஸ் காரர்களுக்கும் போலீசு அதிகாரிகளுக்கும் சிறிதுகூட அதிருப்தி ஏற்படாமல் ஒழுங்குக்கும், போலீசு அதிகாரிகளுக்கும் கட்டுப்பட்டு நடந்துகொண்டு கொண்டாட வேண்டும். தமிழ் நாட்டில் கட்டாய இந்தி ஒழிக தமிழ் வாழ்க திராவிடநாடு திராவிடருக்கே அடக்குமுறை ஒழிக! என்பதைத்தவிர வேறு ஒலிகள் கண்டிப்பாக, கண்டிப்பாக வேண்டாம். ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!! குடி அரசு 01.01.1949 12-நாள் பாடம். கும்பகோணம் உரிமைப் போராட்டம் 19-12-1948ல் தொடங்கி 30-12-1948ம் நாளோடு 12 நாட்கள் நடந்து முடிந்திருக்கின்றது. இப்போராட்டம் பேச்சுரிமையைப் பிடுங்கும் விதத்தில், சர்க்கார் பல ஊர்களிலும் 144 போட்டு, கழகத்தின் அமைதியான போக்கிற்கு, சமாதான முறையில் செய்துவரும் போராட்டத்திற்கு, மறைமுகமாக அழிவையுண்டாக்க முயற்சிக்கிறார்கள் என்று அறிந்ததினாலேயே, அதை நாம் எதிர்க்கிறோம்...

சமூக வலைதளங்களில் இயங்கும் தோழர்களின் கவனத்திற்கு…

சமூக வலைதளங்களில் இயங்கும் தோழர்களின் கவனத்திற்கு…

தோழர்களுக்கு வணக்கம் தற்போதைய நேரத்தில் எந்த ஒரு கட்சியையோ அமைப்புகளையோ தனி மனிதரையோ கொச்சையாக விமர்சனம் செய்துவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். நம்மீது பாயும் சட்டங்களை சட்டரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் நாம் எதிர்கொள்வோம். இவற்றால் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமே தவிர தொடர்ந்து பிரச்சனைகளை எதிர்கொள்ள ஏதுவாக எதுவும் அமைய வேண்டாம் என்ற நோக்கத்தோடு கேட்டுக்கொள்கிறோம். நம்மை வெறுப்பு ஏற்றவும் பல சிக்கல்களில் ஆளாகவும் நமக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சில சிக்கல்களை உருவாக்க சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர் அவற்றில் தோழர்கள் கவனமுடன் செயல்பட கேட்டுக்கொள்கின்றோம். அவரவர் வயதிற்கேற்ப கோபமோ, ஆத்திரங்களோ இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் நாம் கண்ணியமாக செயல்படவும் விமர்சிக்கவும் வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பாடுகளையும், அடுத்தடுத்த செயல்களையும் மாவட்ட பொறுப்பாளர்களை கலந்துகொள்ளாமல் சமூக வலைதளத்தில் செய்தியை பதிய வேண்டாம். பொறுப்பாளர்கள் தி.வி.க. சேலம் மாவட்டம்

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் கூட்டம்

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் கூட்டம்

01.06.2023 காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாவட்ட திவிக சார்பாக மறைந்த கழக தலைமைக் குழு உறுப்பினர் தோழர் மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் நிகழ்வு மடத்து குளம் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மடத்து குளம் திவிக ஒன்றியத் தலைவர் த.கணக்கன் தலைமையில் நடைபெற்றது. மோகன் குடும்பத்தினர் ஜோதி  – அறிவுமதி முன்னிலை வகித்தனர்.   பன்னீர்செல்வம், CITU தாலுகா செயலாளர். வீ.சிவகாமி, தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். முகில் ராசு, மாவட்ட தலைவர் , திவிக. முருகேசன், வழக்கறிஞர் பிரிவு, திராவிட தமிழர் பேரவை. தங்கவேல், மாவட்ட  அமைப்பாளர், திராவிட தமிழர் கட்சி, ஜின்னா ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.   சபரி, சரசுவதி, ஜெயந்தி, சிரிஜா, ரூபா, மாரிமுத்து, தாராபுரம் செல்வம், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் யாழிசை,யாழினி, அறிவுமதி, முத்தமிழ், காரைக்குடி கனல் மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.   நிகழ்வினை மடத்துக்குளம் திவிக ஒன்றியச் செயலாளர் சிவானந்தம்...

நங்கவள்ளி ஒன்றியம் தயாராகிறது

நங்கவள்ளி ஒன்றியம் தயாராகிறது

18.06.2023 ஞாயிறு பிற்பகல் 2 மணியளவில் நங்கவள்ளி நகர கழக கலந்துரையாடல் கூட்டம் தோழர் காவை ஈசுவரன் , தலைமைக் குழு உறுப்பினர் தலைமையில், நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன்  இல்லத்தில் கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:   1). தீண்டாமை நிலவுகின்ற கிராம பகுதிகளான நங்கவள்ளி ஒன்றியத்தில் தோழர்கள் பிரபாகரன், அருள்குமார், நாகராஜ் ஆகியோரது தலைமையில் கணக்கெடுப்பு நடத்துவதெனவும், கொங்கனாபுரம் ஒன்றியத்தில் தங்கதுரை, கண்ணன், கவியரசு ஆகியோரது தலைமையிலும், மேச்சேரி ஒன்றியத்தில் கிருஷ்ணன், சிவா, சந்திரசேகர் ஆகியோரது தலைமையிலும், தீண்டாமை நிலவுகின்ற கிராம பகுதிகளை கண்கெடுப்பு நடத்தி வருகிற ஜூன் 25 ஆம் தேதிக்குள் மாவட்ட கழகத்திடம் ஒப்படைப்பதென தீர்மானிக்கப்பட்டது.   2) எது திராவிடம், எது சனாதனம் என்னும் தலைப்பில் கிராம பிரச்சார கூட்டங்கள் நங்கவள்ளி ஒன்றிய கிளைக் கழகத்தின் சார்பில் முதல்கட்டமாக 10 கிராமங்களில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.   3) நங்கவள்ளியில்...

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் நடந்த ஜாதி மறுப்புத் திருமணம்

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் நடந்த ஜாதி மறுப்புத் திருமணம்

சேலம் கிழக்கு – மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 20.06.2023 செவ்வாய் காலை 11.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.   கலந்துரையாடல் கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாநில அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம், திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் ராசு, ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.   கொளத்தூர் நகர தலைவர் ராமமூர்த்தி கடவுள் – ஆத்மா மறுப்புடன் கூட்டம் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகர , நகர, கிளைக் கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் தீண்டாமை நிலவும் பகுதிகளின் பட்டியலை கணக்கெடுத்துக் கொண்டிருப்பதாகவும் வரும் 25.06.2023ம் தேதி பட்டியலை மாவட்ட கழகத்திற்கு சமர்பிப் பதாகவும் தெரிவித்தனர்.   மேலும் சேலம் மாநகரம் சார்பாக 25 தெருமுனைக் கூட்டங்களும், மேட்டூர் நகர கழகம் 30...

தன் மீது புனையப்பட்ட போலி வழக்கை தோலுரித்த வி.பி.சிங்

தன் மீது புனையப்பட்ட போலி வழக்கை தோலுரித்த வி.பி.சிங்

ஜூன் 25 விபி.சிங் பிறந்தநாள்.  சமூக நீதி காவலர், மண்டல் பரிந்துரைகளை அமுலாக்கி இன்றுவரை ஒன்றிய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் இடம்பெறுகிறார்கள் என்று சொன்னால் அதற்கு வாய்ப்புக் கதவை திறந்து விட்ட ஒருவர் தான் விபி.சிங். 11 மாதங்கள் தான் அவருடைய ஆட்சி நீடித்தது. நேர்மைக்கும் ஊழலற்ற ஆட்சிக்கும் வழிகாட்டியாக அவர் திகழ்ந்தார். ஆனால் நாட்டில் ஊழல் பெருகிவிட்டது அரசியலில் நேர்மை இல்லை என்று வாய்கிழிய பேசுகிறவர்கள், விபி.சிங்கை பாராட்ட மனம் வருவதில்லை. காரணம் அவர் சனாதனத்தை எதிர்த்தார். சமூக நீதிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.   இன்று வரை விபி.சிங் அவர்களுக்கு ஒரு தபால் தலை கூட எந்த ஒரு ஒன்றிய அரசும் வெளியிடவில்லை. அவரது சொந்த ஊரான அலகாபாத்தில் ஒரு வீதிக்கு கூட அவரது பெயர் சூட்டப்படவில்லை. எந்த ஒரு அரசு அலுவலக கட்டிடத்துக்கும்  அவரது பெயர் சூட்டப்படவில்லை.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் தமிழ்நாடு...

அவசர நிலையை எதிர்த்து வீதிக்கு வந்த கலைஞர்

அவசர நிலையை எதிர்த்து வீதிக்கு வந்த கலைஞர்

40.1975 ஜூன் 25-ம் தேதி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் இந்திரா காந்தி. எமர்ஜென்சி காமராசரையும் கலைஞரையும் ஒன்று சேர்த்தது. இருவரும் வெவ்வேறு காலங்களில் இந்திரா காந்தியை ஆதரித்ததற்கு இன்று நாடு விலை கொடுக்கிறது என கலைஞரிடம் கூறினார் காமராசர்.   41.எமர்ஜென்சி காலத்தில் பத்திரிகைகள் கடும் தணிக்கைகளுக்கு உள்ளாகின. எமர்ஜென்சிக்கு எதிராக காமராசரின் கருத்துக்களை முரசொலியில் வெளியிட்டார் கலைஞர். காமராசரின் கருத்துக்கள் முரசொலியில் முதல்முதலாக வெளியானது அப்போதுதான்.   சென்னை கடற்கரையில் பல லட்சம் மக்களை திரட்டி அனைவரையும் அவசரநிலை பிரகடனத்திற்கு எதிராக உறுதி ஏற்க வைத்தார் கலைஞர்.   43 . மத்திய தகவல் தொடர்பு துறை விடுதலை, முரசொலி ஏடுகளை தணிக்கை செய்தது. அகில இந்திய வானொலியில் தலைமை செய்தியாளராக இருந்து ஓய்வு பெற்ற சங்கராச்சாரி சீடர் சவுமி நாராயணன் என்ற பார்ப்பனர், விடுதலை முரசொலி ஏடுகளின் தணிக்கை அதிகாரியாக இருந்தார். “அண்ணாவை பெற்ற தாயை விட நேசிக்கிறேன்”...

எது நாத்திகம்?

எது நாத்திகம்?

நமது நாட்டிலோ, சாமி தாசி வீட்டிற்குப் போகும் உற்சம் வேண்டாம் என்றால், அது நாஸ்திகம்! சமணரைக் கழுவேற்றும் உற்சவம் வேண்டாம் என்றால், அது நாஸ்திகம்! குடம்,குடமாய் நெய்யையும், வெண்ணெயையும் கொண்டு போய் நெருப்பில் போட்டு வீணாக்கும் கார்த்திகை தீப உற்சவம் வேண்டாம் என்றால், அது நாஸ்திகம்! இளங் குழந்தைகளைப் பாலில்லாமல் கஷ்டப்பட வைத்துவிட்டு, குடம் குடமாய்ப் பாலைக் கொண்டு போய்க் கல்லின் மீது கொட்டும் பாலாபிஷேக உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! பெரியார், குடிஅரசு – 13.1.1929 பெரியார் முழக்கம் 29062023 இதழ்

பாட்னா கூட்டம் காலத்தின் தேவை

பாட்னா கூட்டம் காலத்தின் தேவை

2024 தேர்தலை கூட்டாக சந்திப்பது என்று பாட்னாவில் கூடிய 17 எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பது ஒரு வரலாற்று திருப்பமாகும்.  காலத்தின் அறைகூவலை சந்திப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தக் கூட்டத்தில் பல நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.  அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற இருக்கிறது, அடுத்த தொடர் நடவடிக்கைகள் குறித்து அதில் முடிவெடுக்கப்படும்  என்று எதிர்க்கட்சிகள் முடிவு செய்து இருக்கின்றன.   பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து இப்பொழுதே அலறத் தொடங்கி இருக்கிறது.  போட்டோ ஷுட் நடத்துகிறார்கள் என்று  அமித் ஷா கூறியிருப்பது இறுமாப்பையும் ஆணவத்தையும் காட்டுகிறது. வருகிற தேர்தலில் இதற்கு மக்கள் நிச்சயம் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று பல ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.  தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வருவது முறையானது அல்ல என்று அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.  எந்த...

தலையங்கம் கோயில் நுழைவு உரிமைக்கு வெடிக்கும் போராட்டங்கள்

தலையங்கம் கோயில் நுழைவு உரிமைக்கு வெடிக்கும் போராட்டங்கள்

தமிழ்நாட்டில் தீண்டப்படாத மக்கள் கோயில்களில் நுழைய இன்றும் அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து ஆங்காங்கே உரிமைப் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பி இருக்கின்றன,  இது வரவேற்கத்தக்க ஒரு நல்ல திருப்பமாகும்.  விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில்  ஒரு சாதிக்காரர்கள் கோயில் எங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறி தலித் மக்களை உள்ளே விட மறுத்தார்கள்.  இதை எதிர்த்து போராட்டம் நடத்தியும், அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தியும், சாதிக்காரர்கள் இதை ஏற்க மறுத்த காரணத்தினால் அதிகாரிகள் அந்த கோயிலுக்கு சீல் வைத்து விட்டனர்.   கோயிலுக்கு எப்படி சீல் வைக்கலாம்? தலித் மக்களையும்  உள்ளே அழைத்துச் சென்றிருக்க வேண்டாமா?  என்று சிலர் சில கருத்துக்களை முன் வைக்கிறார்கள். ஜாதித் தீண்டாமை ஒழிப்பு போராட்டம் என்பது  ஒரு நீண்டப் போராட்டம்,  அது  பல  மைல்கற்களை தாண்டி தாண்டித்தான் செல்ல வேண்டி இருக்கிறது.  கோயில்களில் வழிபாட்டு சடங்குகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது, எனவே புனிதம் கெட்டுவிட்டது...

தோழர்களுக்கு வேண்டுகோள்!

தோழர்களுக்கு வேண்டுகோள்!

கழக நூல்கள் தோழர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் சில பகுதிகளில் தோழர்கள் அதற்கான தொகையை அனுப்பி வைக்கவில்லை, கடும் பொருளாதார நெருக்கடியில் நூல்கள் அச்சடிக்கப்படுகிற நிலையில் தோழர்கள் இதில் ஒத்துழைக்க வேண்டுகிறோம். விற்பனையாகாத நூல்களை தலைமை கழகத்திற்கு உடனடியாக அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.   தபசி குமரன் தலைமை நிலைய செயலாளர் பெரியார் முழக்கம் 29062023 இதழ்

சென்னையில் கழக தலைமைக் குழு கூடியது

சென்னையில் கழக தலைமைக் குழு கூடியது

திராவிடர் விடுதலைக் கழக தலைமை குழு கூட்டம் ஜூன் 23 காலை 10:30 மணியளவில் பெருங்குடியில் கழகப் பொதுச் செயலாளர் இல்லத்தில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் தலைமைக் குழு உறுப்பினர்கள் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ,அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் சிவகாமி, சூலூர் பன்னீர்செல்வம், விழுப்புரம் அய்யனார், காவலாண்டியூர் ஈஸ்வரன், சென்னை இரா.உமாபதி, அன்பு தனசேகர், இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   தமிழ்நாட்டில் கிராமங்களில் நிலவும் தீண்டாமை வடிவங்களை நேரில் சென்று பார்த்த அனுபவங்களை தோழர்கள் பகிர்ந்து கொண்டனர். முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட பட்டியல்களை தொகுத்து மாவட்ட காவல்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்,...

ஆகமம் தெரிந்தால் போதும்; ஜாதி ஒரு தடையல்ல ஆகமக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் •  சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு

ஆகமம் தெரிந்தால் போதும்; ஜாதி ஒரு தடையல்ல ஆகமக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் • சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு

அர்ச்சகர் பதவி மதம் தொடர்பானது அல்ல, அவர் நடத்தும் பூஜை, சடங்குகள் தான் மதம் தொடர்பானது. முறையாக ஆகமம் தெரிந்த எந்த ஜாதியினரும் ஆகமக் கோயில்களில் அர்ச்சகராகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை (ஜுன் 26) வழங்கியுள்ளது.   அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பிரச்சனையில் சென்னை உயர்நீதிமன்றம் மிகச் சிறப்பான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரி அறநிலையத்துறை விளம்பரம் வெளியிட்டது. இதை எதிர்த்து கோயில் பரம்பரை அர்ச்சகர் முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். பாரம்பரிய முறையில் தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் பழக்கவழக்கங்களை மாற்றக்கூடாது என்று அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் சில முக்கிய கருத்துகளை சுட்டிக்காட்டி இருக்கிறார். ஆகம கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பவர்கள் ஆகமங்களையும் சடங்குகளையும் தெரிந்திருந்தால் போதும், அவர்களுக்கு ஜாதியோ, பரம்பரையோ ஒரு தடையாக இருக்க...

ஆளுநருக்கு கண்டனம்

ஆளுநருக்கு கண்டனம்

சென்னை : தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பட்டமளிக்கும் கடமையைச் செய்யாமல் தவிர்த்தல் மற்றும் மாநில அரசுக்கு எதிரான ஆளுநரின் போக்கை கண்டித்தும், மருத்துவ கலந்தாய்வு நடத்தும் உரிமையை மாநில அரசிடமிருந்து பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு, சார்பில் ஜுன் 16, காலை 9 மணியளவில், ஆளுநர் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் இரண்யா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.  உடன் சென்னை மாவட்டக் கழக செயலாளர் இரா.உமாபதி மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 22062023 இதழ்

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து சென்னையில் ரயில் மறியல்

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து சென்னையில் ரயில் மறியல்

சென்னை : மணிப்பூரில் நடைப்பெற்ற இனப்படுகொலையை தடுக்கத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும். கிருஸ்துவர்கள் – பழங்குடியினர் மீதான வன்முறையை நிறுத்தக் கோரியும்.   மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் சென்னை எழும்பூரில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.   போராட்டத்தில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 22062023 இதழ்  

தீண்டாமை கிராமங்கள் : பட்டியல் தயாரிப்பு – கழகத் தோழர்கள் களமிறங்கினர்

தீண்டாமை கிராமங்கள் : பட்டியல் தயாரிப்பு – கழகத் தோழர்கள் களமிறங்கினர்

17.06.2023 சனி மாலை 5.00 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது.   கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :   1) 17.05.2023-ல் இயற்கை எய்திய குமரன் நகர் கிளைக் கழக செயலாளர் பொன்.செல்வம் அவர்களுக்கு சேலம் மாவட்ட கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும்,புகழ் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.   2) தீண்டாமை நிலவுகின்ற கிராம பகுதிகளில் இரட்டை சுடுகாடு, தேனீர் கடைகளில் இரட்டைக் குவளை, பொது கோயில்களில் பட்டியலின மக்கள் வழிபடுவதை தடுக்கும் இடங்களை கணக்கிட்டு வருகின்ற 25.06.2023ம் தேதிக்குள் மாவட்ட கழகத்திற்கு பட்டியலை ஒப்படைப்ப‍து எனவும் தீர்மானிக்கப்பட்டது.   3) எது திராவிடம்! எது சனாதனம்! எனும் தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை அனைத்து கிராம பகுதிகளிலும் நடத்துவதெனவும், தெரு முனைக் கூட்டங்கள் நடத்தும் பகுதிகளின் பெயர்களை மாவட்ட கழகத்திற்கு 25.06.2023ம் தேதி ஒப்படைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.  ...

கோயில் நுழைவு உரிமை கோரி கழகம் முற்றுகைப் போராட்டம்

கோயில் நுழைவு உரிமை கோரி கழகம் முற்றுகைப் போராட்டம்

  ஜாதி – தீண்டாமை – வன்கொடுமைக்கு எதிராக உரிய நடவடியை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் 15-06-2023 அன்று மாலை 3 மணியளவில்  நடைபெற்றது.   முற்றுகை போராட்டம் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் தலைமையில் நடைபெற்றது.   விழுப்புரம் மாவட்ட தலைவர் இளையரசன், செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் இராமர், கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.   போராட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட கழகத் தலைவர் மதியழகன், கடலூர் மாவட்ட கழகச்  செயலாளர் சிவக்குமார்,  கள்ளக்குறிச்சி மாவட்ட கழக அமைப்பாளர் சாமிதுரை, கடலூர் மாவட்ட கழக அமைப்பாளர் சதீஷ், விடுதலை இசைக் குழு கார்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி பரப்புரை செயலாளர் விஜி, பகுத்தறிவு, தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா மற்றும் தோழர்கள் ...

கலைஞர் 100 ; வரலாற்றுப் பக்கங்களில் இருந்து (2) கலைஞர் முதல்வராக விரும்பிய பெரியார்

கலைஞர் 100 ; வரலாற்றுப் பக்கங்களில் இருந்து (2) கலைஞர் முதல்வராக விரும்பிய பெரியார்

1952-இல் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒருவருக்கொருவர் கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒரே பாணியில் போராட்டம் நடத்தினர். திருச்சி ரயில் நிலையத்தில் பெரியாரும் கலைஞரும் ஒன்றாக நின்று இந்தி எழுத்துக்களை கறுப்பு மை பூசி அழித்தனர்.   1952-இல் கலைஞர் கதை, வசனம் எழுதி வெளியான பராசக்தி திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி அடைந்தது. சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் அதுதான். கிட்டத்தட்ட 72 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்றளவிலும் பராசக்தி திரைப்படத்தின் வசனங்கள் பேசப்படுகின்றன.   1953-இல் திமுக நடத்திய மும்முனைப் போராட்டம் கலைஞரின் அரசியல் வாழ்வில் மிக முக்கியமானது. ராஜாஜியின் குலக்கல்வி திட்ட எதிர்ப்பு, தமிழர்கள் பற்றிய நேருவின் கருத்துக்கு எதிர்ப்பு, டால்மியாபுரம் ரயில் நிலையத்தை கல்லக்குடி என பெயர் மாற்றுவது இப்போராட்டத்தின் நோக்கம். ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி’ என நாகூர்...

விஷ்ணுவும் சிவனும் எங்கிருந்து வந்தவர்கள்

விஷ்ணுவும் சிவனும் எங்கிருந்து வந்தவர்கள்

இராட்சதர்கள் தபசு செய்தார்கள்; வரம் பெற்றார்கள்; அந்த வரத்தைக் கொண்டு அக்கிரமம் செய்தார்கள் – என்பதெல்லாம் இந்நாட்டுப் பழங்குடி மக்களையும், அவர்கள் தலைவர்களையும் இராட்சதர்கள் என்று சொல்லிக் கொல்லுவதற்குக் கடவுள்களும், தேவர்களும் என்ற பெயர்க்கொண்ட ஆரியர்கள் வழிதேடிக் கொண்ட ஒரு சாக்கே அல்லாமல் அவர்களது வரம் எதுவும் பயன்பட்டதாகத் தெரியவில்லை.   விஷ்ணு, சிவன் ஆகியவர்கள் யாவர்? எப்போது உண்டானார்கள்? எப்படி உண்டானார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? – என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது.   பெரியார், குடிஅரசு – 20.10.1947 பெரியார் முழக்கம் 22062023 இதழ்

சனாதனத்திற்கு எட்டு வாரம் கெடு!

சனாதனத்திற்கு எட்டு வாரம் கெடு!

  சனாதனம் பற்றி எட்டு வாரங்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி போட்டு இருக்கிறது. அப்படி ஒரு வளையத்துக்குள் ஆளுநரை சிக்க வைத்தவர் த.பெ.தி.க துணைத் தலைவர், மூத்த பெரியாரியலாளர் நமது வழக்கறிஞர் துரைசாமி.   ஆளுநர் அதற்கு என்ன பதில் சொல்வார், ‘நீதிபதி அவர்களே! சனாதனத்திற்கு காலவறையறைகளே கிடையாது என்று எங்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வாக்கர் கூறிவிட்டார், அதைத்தான் நானும் கூறினேன். காலத்தால் வரையறுக்க முடியாத சனாதனத்துக்கு எட்டு வாரங்கள் கெடு விதிக்கலாமா? ’பிராமணியம் கூறுவதைத் தான் நான் பேசுகிறேன். என்னை மட்டும் ஏன் குறி வைத்து தாக்குகிறீர்கள்? இது நியாயமா? சனாதன தர்மமா? என்று பதில் கூறுவாரா? நமக்கு தெரியாது.   ஆனாலும் எங்கள் துரைசாமி சார் அப்போதும் விடமாட்டார் அடுத்து ஒரு தகவலை அதிரடியாக கேட்பார் ’உலகம் தோன்றிய போது சனாதனம் தோன்றி விட்டது என்று கோல்வக்கர் கூறுவதை...

இந்துத்துவா; குழப்பவாதிகளுக்கு ரொமிலா தாப்பர் பதிலடி

இந்துத்துவா; குழப்பவாதிகளுக்கு ரொமிலா தாப்பர் பதிலடி

(இப்போது பேசப்படும் இந்துத்துவா அரசியல் குறித்து பிரபல வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் இந்து ஆங்கில நாளேட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூன் 18 2023இல் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார் புதிய சிந்தனை வெளிச்சங்களை தரும் அந்த பேட்டியில் சுருக்கமான தமிழ் வடிவம்)   இந்துத்துவா பேசுவோர் வரலாற்றை அணுகும்முறை முற்றிலும் தவறானது என்கிறார் தாப்பர். வரலாற்றை அறிவதற்கு அது குறித்து ஆதாரங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், பிறகு அது குறித்த தெளிவான கோட்பாடுகளை உருவாக்குதல் ஆகியவை அடிப்படை. ஆனால் இப்போது பேசப்படும் இந்துத்துவாவுக்கு இந்த அணுகுமுறை ஏதும் இல்லை. கடந்த காலங்களில் நிகழ்ந்தவை, பேசப்பட்டவை என்ற கற்பனைகளை வரலாறுகளாக கட்டமைக்கிறார்கள். கடந்த கால கற்பனை புனைவுகளை நிகழ் காலத்துக்கான அடையாளம் என்கிறார்கள். எந்த முறையான ஆதாரங்களையோ ஆய்வுகளையோ இவர்கள் முன்வைப்பது இல்லை. இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதற்கு இந்துக்களின் வரலாறுகளே ஏனைய மதங்களின் வரலாறுகளை விட மிகவும் பொருத்தமானது என்ற நோக்கத்தோடு...

உத்ரகாண்ட்டில் இஸ்லாமிய வெறுப்பரசியல்

உத்ரகாண்ட்டில் இஸ்லாமிய வெறுப்பரசியல்

இந்து கடவுளர்கள் வாழும் உத்ரகாண்ட் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் வாழக்கூடாது என்று சங்கிகள் இஸ்லாமியர்களை வன்முறையால் வெளியேற்றி வருகிறார்கள். அவர்கள் வீடுகளைப் பறிமுதல் செய்து வருகிறார்கள், புஷ்கர் சிங் தாமி முதல்வராக உள்ள இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. விசுவ இந்து பரிஷத் என்ற இந்து அமைப்பும் ’தெய்வங்கள் வாழும் பூமி’ என்ற அமைப்பை நடத்தி வரும் தட்சண் பாரதி என்பவர் தலைமையிலான மத வெறியர்களும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இந்த இன வெறி ஆட்டத்தை நடத்தி வருகிறார்கள். பாஜக ஆட்சி அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் இந்த வெறிச்செயலை அனுமதித்துக் கொண்டு இருக்கிறது.   2019 – லேயே இந்த இன ஒதுக்கல் என்ற மத வெறுப்பு அரசியல் இங்கே தொடங்கிவிட்டது. ’இந்து தெய்வங்கள் வாழும் பூமி’ அமைப்பு உத்ரகாண்ட் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது, ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்று ஒன்றரை லட்சம் துண்டு...

அமலாக்கத்துறை பாஜகவின் தொண்டர் படையா?

அமலாக்கத்துறை பாஜகவின் தொண்டர் படையா?

அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக கைது  செய்யப்பட்டிருக்கிறார்.  தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்  வகையில்  அமலாக்கத்துறை நுழைந்து இருக்கிறது.  இவைகளெல்லாம் எப்படி நடக்கிறது, எதற்காக நடக்கிறது என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும்.  செந்தில் பாலாஜி அதிமுகவிலோ, பாஜகவிலோ இருந்திருந்தால் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாய்ந்திருக்காது. அவர் திமுகவில் சேர்ந்து குறிப்பாக கோவை மண்டலத்தில் பாஜக ஆதிக்கத்தை தகர்த்துவிட்டார் என்ற ஒரே ஆத்திரத்தின் காரணமாக அவர் பழிவாங்கப்படுகிறார். செந்தில்பாலாஜி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறியும் அவரை அமைச்சர் என்ற நிலையில் இருந்தும் கூட நள்ளிரவில் அவரை ஏன் கைது செய்கிறார்கள்?   ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி செந்தில் பாலாஜி பணம் வாங்கினார் என்பது குற்றசாட்டு. ஊழல் நடந்தது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில். எடப்பாடி பழனிசாமி இப்போது ஊழல் அமைச்சர் என்று கூறுவதன் மூலம் ஜெயலலிதாவையும் சேர்த்து அவமானப்படுத்துகிறார்....

ஒடுக்கப்பட்டோரை வஞ்சிக்கும் ‘நீட்’

ஒடுக்கப்பட்டோரை வஞ்சிக்கும் ‘நீட்’

2023 ஆம் ஆண்டிற்கான ‘நீட்’ தேர்வில், தேசிய அளவில் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பின்னணி குறித்து ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ஆய்வு நடத்தியுள்ளது.   அவர்களில் 38 மாணவர்களின் பள்ளி, கல்வி வாரியம், ‘நீட்’ தேர்வுக்காக பெற்ற பயிற்சி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அந்த 38 மாணவர்களில் 29 பேர் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்கள்; 5 பேர் ஆந்திர மாநில பாடத் திட்டத்திலும், 3 பேர் மராட்டிய மாநிலப் பாடத் திட்டத்திலும், 2 பேர் மேற்குவங்க மாநிலப் பாடத் திட்டத்திலும் படித்தவர்கள். அதேபோல், விவரங்கள் சேகரிக்கப்பட்ட 38 பேரில், 29 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்த உயர்ஜாதி மாணவர்கள். 7 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்புகளையும், இருவர் பட்டியலினத்தையும் சேர்ந்தவர்கள். சாதனை படைத்த மாணவர்கள் 38 பேரில் 37 பேர் ‘நீட்’ தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். ஒருவர் மட்டுமே சிறப்புப் பயிற்சி பெறாதவர். ஆனால்,...

பட்டியல் தயாரிப்பு – தெருமுனைக் கூட்டங்கள் ; திருப்பூர் மாவட்டம் தீவிரம்

பட்டியல் தயாரிப்பு – தெருமுனைக் கூட்டங்கள் ; திருப்பூர் மாவட்டம் தீவிரம்

திருப்பூர் மாவட்ட திவிக ஆலோசனைக் கூட்டம் 12.06.2023 திங்கள் மாலை 4.30 மணி அளவில்  மாஸ்கோ நகர் மாதவன் அலுவலகத்தில் நடைபெற்றது ஆலோசனைக் கூட்டம் கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் தலைமையில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.   கூட்டத்தில் ஏப்ரல் 29,30 நடைபெற்ற மாநாட்டில் திருப்பூர் மாவட்டம் சார்பாக சிறப்பாக கலந்துகொண்டு பேரணியில் இரண்டாம் இடம் பரிசு பெற்றமைக்கு பேரணியில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.   இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கழக செயலவையில் அறிவிக்கப்பட்ட படி தீண்டாமை நடக்கும் இடங்கள் கணக்கெடுப்பு மற்றும் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள 1000 தெருமுனை கூட்டங்களில் திருப்பூர் மாவட்டத்தில் 50 கூட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றன.   மேலும் தாராபுரத்தில் நகராட்சி அரசு அலுவலகத்திற்குள் நிர்வாண அகோரி சாமியார்களை அழைத்து வந்து  பூஜை நடத்திய நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி...

அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி ஒன்றிய ஆட்சியால் புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு

அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி ஒன்றிய ஆட்சியால் புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு

  ஒன்பது ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்புத் திட்டம் கூட அளிக்கவில்லை என அமித் ஷா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் கேட்ட கேள்விக்கு ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியாத  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முழுக்க முழுக்க கற்பனைக் கதையை உருவாக்கி, தமிழ்நாட்டிற்குப் பல திட்டங்களை அள்ளி வீசியது போல் “கானல் நீர்” தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார். தமிழ்நாடு, பாஜக ஆட்சியில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது  அக்மார்க் உண்மை என்பதை அமித்ஷாவே புரிந்து கொண்டு, திசை திருப்பி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றலாம் என நினைக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்ட ணியில் திமுக பங்கேற்றிருந்த போது தமிழ்நாட்டிற்கு சாதித்த திட்டங்களை மிக அழகாக பட்டியலிட்டார் முதலமைச்சர். அதுபோன்ற சாதனை மிக்க சிறப்புத் திட்டங்கள் ஒன்று கூட இந்த 9...

கலைஞர் 100.. வரலாற்றுப் பக்கங்களில் இருந்து

கலைஞர் 100.. வரலாற்றுப் பக்கங்களில் இருந்து

திராவிடர் இயக்க வரலாற்றோடு கலைஞர் வரலாறும் இணைந்தே பயணிக்கிறது. இளைய தலைமுறையின் புரிதலுக்காக அந்த வரலாற்றின் சுருக்கமான தொகுப்பை பெரியார் முழக்கம் பதிவு செய்கிறது.   பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய 1924 இல் பிறந்த கலைஞர், சுதந்திரம் பெறுவதற்கு 9 ஆண்டு காலத்திற்குப் முன்பு தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அந்த பயணம் 80 ஆண்டு காலம் 2018 வரை நீடித்தது.   ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தார். அதில் இரண்டு முறை சட்ட விரோத குறுக்கு வழிகளால் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே ஒன்றிய ஆட்சியால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.   அறுபது ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்றார்.   நான்கு வயதில் தந்தை விருப்பப்படி இசைப் பயிற்சிக்கு சென்றார் கலைஞர். கோயில்களில் தான் இசைப் பயிற்சி நடக்கும், கோயில்கள் பெரிய மனிதர், உயர் சாதியினர் வரும் இடம் என்பதால்...

மதம் எனும் சமுதாயக் கொள்கை

மதம் எனும் சமுதாயக் கொள்கை

மதம் இல்லாமல் மக்கள் வாழ முடியாது. அதாவது நான் சொல்லும் மதம், கடவுளுக்கும் மக்களுக்கும், சம்பந்தமும் மோட்சமும் விதியும் மன்னிப்பும் சமாதானமும் மேல் லோகத்தில் அளிப்பது என்கிற மதம் அல்ல. மற்றெதுவென்றால், மனிதனுக்கு மனிதன் மரியாதையாய், (பணிவாய்) அன்பாய், ஒற்றுமையாய், ஒழுக்கமாய், உதவியாய், வாழும் கொள்கை என்று சொல்ல எனக்கு இஷ்டம். இதை நீங்கள் மதம் என்று சொல்ல வேண்டும் என்றாலும் ஆட்சேபிக்கவில்லை. இப்படிப்பட்ட மதம் இல்லாமல் மனிதன் சமுதாயத்தில் வாழ்வது சங்கடமாகும். பெரியார் பெரியார் முழக்கம் 15062023 இதழ்