11. ஈரோடுவாசி ஆசிரியர் மீது வழக்கு

ஈரோடு தாலூக்கா மக்களின் பொது நலனுக்கென எவ்விதக் கட்சிப்பற்றும் இல்லாமல், சென்ற ஒரு வருடமாக நடைபெற்று பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் ஈரோடுவாசி என்னும் வாரப்பத்திரிகை ஆசிரியரும், பிரசுரிப்பவருமான தோழர் ப.ஷண்முக வேலாயுதன் மீதும், அச்சிடுபவரான தமிழன் பிரஸ்தோழர் என். கரிவாதசாமி மீதும் ஈரோடு டாக்டர் ஜே.டி.ராஜா எம்.பி.பி.எஸ் (பி) என்பவர் இ. பி.கோ.500 பிரிவுப்படி ஈரோடு அடிஷனல்முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். வாயிதா 26.02.1949 தேதி போடப் பட்டிருக்கிறது. வழக்குத் தொடர்ந்திருப்பதற்குக் காரணம் 5.12.1948-ந் தேதி ஈரோடுவாசியில் போலி டாக்டர் சாயம் வெளுத்தது என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட சேதியேயாகும் எனத் தெரிகிறது.

குடி அரசு 19.02.1949

You may also like...