ஆளுநருக்கு கண்டனம்

சென்னை : தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பட்டமளிக்கும் கடமையைச் செய்யாமல் தவிர்த்தல் மற்றும் மாநில அரசுக்கு எதிரான ஆளுநரின் போக்கை கண்டித்தும், மருத்துவ கலந்தாய்வு நடத்தும் உரிமையை மாநில அரசிடமிருந்து பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு, சார்பில் ஜுன் 16, காலை 9 மணியளவில், ஆளுநர் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் இரண்யா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.  உடன் சென்னை மாவட்டக் கழக செயலாளர் இரா.உமாபதி மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 22062023 இதழ்

You may also like...