உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி பாகுபாடுகள் கனிமொழி எம்பி கேள்வி

ஒன்­றிய அர­சின் மத்­திய பல்­க­லைக் கழ­கங்­க­ளில் நில­வும் தீண்­டாமை உள்­ளிட்ட பாகு­பா­டு­கள் குறித்து தி.மு.க. துணைப் பொதுச் செய­லா­ள­ரும், திமுக நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி நேற்று (21-–07–2025) எழுத்­துப் பூர்­வ­மான கேள்­வி­களை எழுப்­பி­னார்.

“உயர் கல்வி நிறு­வ­னங்­க­ளில் சமத்­து­வத்தை மேம்­ப­டுத்­தும் நோக்­கில், யு.ஜி.சி. விதி­மு­றை­கள் 2012 இன் படி ஒன்­றிய அர­சின் மத்­திய பல்­க­லைக் கழ­கங்­க­ளில் Equal Opportunity Cells எனப்­ப­டும் சம வாய்ப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளதா?
அப்­ப­டி­யா­னால், அதன் விவ­ரங்­கள் மற்­றும் அத்­த­கைய பிரி­வு­களை உரு­வாக்­கிய மத்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் எண்­ணிக்கை விவ­ரங்­கள் என்ன? இல்­லை­யென்­றால், சம வாய்ப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­ப­டா­த­தற்­கான கார­ணங்­கள் என்ன?
ஒன்­றிய அர­சின் கல்­லூ­ரி-­­பல்­க­லைக்­க­ழக வளா­கங்­க­ளில் சாதி அடிப்­ப­டை­யி­லான பாகு­பாடு காட்­டப் பட்ட சம்­ப­வங்­கள் குறித்த தர­வு­களை அர­சாங்­கம் பரா­ம­ரிக்­கி­றதா?
அப்­ப­டி­யா­னால், கடந்த ஐந்து ஆண்­டு­க­ளி­லும் நடப்பு ஆண்­டி­லும் ஒன்­றிய அர­சின் மத்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் நடந்த இத்­த­கைய சம்­ப­வங்­க­ளின் விவ­ரங்­கள், கல்­லூரி வாரி­யாக/பல்­க­லைக்­க­ழக வாரி­யாக எத்­தனை? தர­வு­கள் இல்­லை­யென்­றால், அதற்­கான கார­ணங்ள் என்ன?
பாகு­பா­டு­களை எதிர்­கொண்­டி­ருக்­கும் மாண­வர்­க­ளுக்கு பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கம் அல்­லது அரசு வழங்­கிய உத­வி­கள் என்ன?
சாதி அடிப்­ப­டை­யி­லான பாகு­பாட்­டால் எழும் குறை­களை நிவர்த்தி செய்ய ஒன்­றிய அர­சாங்­கம் ஏதே­னும் கூடு­தல் வழி­மு­றை­களை வகுக்க, திட்­ட­மிட்­டுள்­ளதா? அப்­ப­டி ­யா­னால், அதன் விவ­ரங்­கள் மற்­றும் இல்­லை­யென்­றால், அதற்­கான கார­ணங்­கள் என்ன?”
ஆகிய கேள்­வி­களை கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. எழுத்­து­பூர்­வ­மாக கேட்­டி­ருந்­தார்.
ஒன்­றிய கல்வி அமைச்­சர் பதில்!
இக்­கேள்­வி­க­ளுக்கு ஒன்­றிய கல்வி அமைச்­ச­கத்­தின் இணை­ய­மைச்­ச­ரான டாக்­டர் சுகந்தா மஜும்­தர் அளித்­துள்ள பதில் வரு­மாறு :–
“ஒன்­றிய அர­சின் கல்வி அமைச்­ச­கத்­துக்கு உட்­பட்ட 48 மத்­திய பல்­க­லைக் கழ­கங்­க­ளி­லும் மாண­வர்­க­ளி­டையே சமத்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­து­கிற Equal Opportunity Cells எனப்­ப­டு­கிற சம வாய்ப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.
கல்வி அமைச்­ச­கத்­தின் கீழ் உள்ள மத்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­கள், நாடா­ளு­மன்­றத்­தால் நிறை­வேற்­றப் பட்ட சட்­டங்­க­ளின் கீழ் நிறு­வப்­பட்ட சட்­டப்­பூர்வ தன்­னாட்சி அமைப்­பு­க­ளா­கும்.
மேலும் அந்­தந்த பல்­க­லைக் கழ­கங்­கள் அவற்­றுக்­கென உரு­வாக்­கப்­பட்ட ஒழுங்­கு­முறை விதி­க­ளால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றன.
ஒன்­றிய கல்வி அமைச்­ச­க­மும், யுஜி­சி­யும் உயர் கல்வி நிறு­வ­னங்­க­ளில் சாதி அடிப்­ப­டை­யி­லான பாகு­பாட்­டைத் தடுக்­க­வும், பின்­தங்­கிய சமு­தா­யத்­தைச் சேர்ந்த மாண­வர்­க­ளின் நலன்­க­ளைப் பாது­காக்­க­வும் பல்­வேறு நட­ வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றன. மத்­திய பல்­க­லைக் கழ­கங்­க­ளில் பார­பட்­சம், பாகு­பாடு உள்­ளிட்ட செயல்­பா­டு­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதை தடுக்க கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
இதன்­படி வலைத் தளங்­கள் அல்­லது புகார் பதி­வே­டு­கள் மூலம் புகார்­களை பதிவு செய்­வ­தற்­கான வழி­மு­றை­களை நிறு­வப்­பட்­டுள்­ளன.
SC/ST/OBC மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள் மற்­றும் ஆசி­ரி­யர் அல்­லாத ஊழி­யர்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­ப­டும் பாகு­பாடு குறித்த புகார்­க­ளில், தவறு செய்­யும் நபர்­கள் மீது உட­னடி சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்ள குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.
மாண­வர் குறை தீர்க்­கும் குழுக்­களை (SGRCs) அமைத்­தல் மற்­றும் குறை­தீர்ப்பு அதி­கா­ரி­களை நிய­மித்­தல், சம வாய்ப்பு குழுக்­களை நிறு­வு­தல், மாண­வர்­க­ளுக்கு கவுன்­சி­லிங் மையங்­கள் மூலம் ஆலோ­சனை வழங்­கு­தல் ஆகி­யவை இதில் குறிப் பி­டத்தக்­கவை ஆகும்.
மேலும் உயர் கல்வி நிறு­வ­னங்­க­ளில் ராகிங் மற்­றும் பாலி­யல் துன்­பு­றுத்­த­லைத் தடுப்­ப­தற்­கான வழி­காட்­டு­தல்­கள் வகுக்­கப்­பட்­டுள்­ளன”.
இவ்­வாறு ஒன்­றிய கல்­வித் துறை இணை­ய­மைச்­சர் தெரி­வித்­துள்­ளார்.
பெரியார்முழக்கம்இதழ்24072025

You may also like...