Category: பெரியார் முழக்கம்

வினா-விடை!

வினா-விடை!

நாட்டை தூய்மைப்படுத்தும் பணியை வாரணாசி யிலிருந்து தொடங்குவோம்.  – மோடி நேர்மையான பேச்சு; உலகிலேயே அதிக சுகாதாரக் கேடு கொண்ட நகரம் அது தானே! எதிர்க்கட்சியாகும் தகுதியைக்கூட பெறாமல் காங் கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.        – செய்தி இருக்கலாம். ஆனால், காங்கிரசையே கலைக்கச் சொன்ன காந்தியின் லட்சியத்தை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார்களே! இது சாதனை தானே? தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்கு களின் சதவீதக் கணக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.   – செய்தி இது யாருக்குப் பயன்படாவிட்டாலும் அடுத்த தேர்தலில் ‘வெற்றிக் கூட்டணி’க்கு கணக்குப் போடுவதற்கு தோழர் தமிழருவி மணியனுக்கு நிச்சயம் பயன்படும். தில்லை நடராசன் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையீட்டை எதிர்த்து வெற்றி பெற்ற தீட்சதர்கள், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தில்லை காவல் நிலையத்தில் புகார்.  – தினமலர் செய்தி இதுக்கு மட்டும், அரசு தலையிடு வேண்டுமா? தில்லை நடராசனிடம் நேரடியாக ‘பாதுகாப்பு’ அர்ச்சனை செய்ய வேண்டியது தானே? பெரியாறு அணை நீர் மட்டத்தை கேரள...

குமரியில் மதம்; தர்மபுரியில் ஜாதி – தேர்தல் குறித்த சில தகவல்கள்:

குமரியில் மதம்; தர்மபுரியில் ஜாதி – தேர்தல் குறித்த சில தகவல்கள்:

மொத்த வாக்குகளில் 31 சதவீதத்தைப் பெற்ற பா.ஜ.க. 282 தொகுதிகளையும் 19.3 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ், 44 தொகுதிகளையும் கைப்பற்றி யுள்ளது. தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 43.3 சத வீதத்தைப் பெற்றுள்ள அ.இ.அ. தி.மு.க. 37 இடங்களைக் கைப்பற்றி யது. 23.6 சதவீத வாக்குளை பெற் றுள்ள தி.மு.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 80 தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் முஸ்லிம்கள் – 19 சதவீதம் இருந்தும், போட்டியிட்ட 55 முஸ்லிம் வேட்பாளர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இங்கு பா.ஜ.க. நிறுத்திய வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. முஸ்லிம் ஓட்டுகளை பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் பிரித்துக் கொண்டதே இதற்குக் காரணம். 428 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 7 தொகுதிகளில் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. ஒருவர்கூட வெற்றி பெறவில்ல. பா.ஜ.க.வில் வெற்றி பெற்ற 282 பேரில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை. இந்தத்...

அடக்குமுறைகளை எதிர்கொண்ட சுயமரியாதை இயக்கம்

அடக்குமுறைகளை எதிர்கொண்ட சுயமரியாதை இயக்கம்

நாகம்மையார் மறைவு ; கிறிஸ்துவ திருமணம் ; நிலவிய சூழல்: 15-05-2014, 22-05-2014 ஆகிய நாள்களிட்ட ‘புரட்சிப் பெரியார் முழக்கத்தில்’ நாகம்மையார் மறைவு – அடுத்து தடையை மீறி நடத்தப்பட்ட கிறிஸ்துவர் சுயமரியாதைத் திருமணம் – அதன் தொடர்ச்சியாக வெளிவந்த ‘கத்தோலிக்கர்களே, இனி பலிக்காது’ என்ற கட்டுரை ஆகியவற்றை வெளியிட்டிருந்தோம். இவை தொடர்பான வேறு சிலவற்றையும், அதாவது அந்த நாட்களில் நிலவி வந்த சமூக, அரசியல் சூழல்களையும் சற்று நோக்குவோம். அப்போது நாட்டை ஆண்டு வந்த ஆங்கில அரசு சில ஆண்டுகளாகவே பொதுவுடைமைக் கருத்துப் பரவலுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தொடங்கியிருந்தது. 1929 ஆம் ஆண்டே எஸ்.ஏ.டாங்கே, அதிகாரி, தேசாய் முதலிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் 32 பேர்கள் மீது “இந்தியாவில் பிரிட்டிஷ் மன்னரின் ஆட்சியைக் கவிழ்க்க” சதி செய்ததாக வழக்குத் தொடுத்திருந்தது. “மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு” என்று அறியப்பட்ட அவ்வழக்கு ஏறத்தாழ நான்காண்டுகள் நடைபெற்று, அவ்வழக்கில் இருந்தோரில் 5 பேர்களை விடுதலை...

ஈரோட்டில் ஆவணப் படம் வெளியீட்டு விழா : “இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது”

ஈரோட்டில் ஆவணப் படம் வெளியீட்டு விழா : “இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது”

“இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது” என்ற தமிழ்ப் படுத்தப்பட்ட ஆவணப்படத்தின் வெளியீட்டுவிழா, ஈரோடு சூரம்பட்டி 4 ரோட்டில் உள்ள ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக மாடியில் உள்ள கூட்ட அரங்கில் 11.5.2014 ஞாயிறு மாலை 6 மணிக்கு நடைபெற்றது. ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி ஆவணப்படத்தை வெளியிட, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர்மணி பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். கி.வேபொன்னை யன் தலைமை வகித்தார். இலங்கைக்குச் சென்று ஆவணப் படத்தை எடுத்த 23 வயதே ஆன இளம் ஊடகவியலாளர் மகா. தமிழ்ப் பிரபாகரனுக்கு தோழர் கண.குறிஞ்சி சிறப்பு செய்தார், மகா. தமிழ்ப் பிரபாகரன் ஏற்புரை வழங்கினார்.

மூட நம்பிக்கையால் பாழாகும் தாமிரபரணி

மூட நம்பிக்கையால் பாழாகும் தாமிரபரணி

‘நெல்லை தாமிரபரணி கல்யாண தீர்த்தம் தூய்மை அறக்கட்டளை’யும் ஐந்திணைத் தொண்டு நிறுவனமும், ஊர்க்காவல் படையினருடன் இணைந்து பாபநாசம் தாமிரபரணி ஆற்றைச் சுத்தம் செய்தபோது ஆற்று மணலில் புதையுண்டுக் கிடந்த சுமார் 125 டன் அழுக்குத் துணிகளை வெளியே எடுத்திருக்கிறார்கள். இவையெல்லாம் நேர்த்திக் கடனுக்காக பக்தர்கள் வீசி எறிந்தவை. இதில் பட்டுச் சேலை, வேட்டிகளே அதிகம். இதுபோன்ற அழுக்குத் துணி மற்றும் பூஜைப் பொருட்களால் ஆற்று நீர் கடுமையாக மாசுபடுகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். திதி கொடுக்கும்போது புதிய வேட்டி, சேலைகளை ஆற்றில் போட்டால் அது முன்னோர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. இதனால் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் மாசுபட்டு பிற உயிரினங்கள் வாழ லாயக்கற்றதாகப் போய் விட்டது. நீரின் மேல் எண்ணெய்ப் படலம் தேங்கி நிற்பதால் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு மீன், தவளைகள் அழிந்து போகின்றன. தண்ணீருக்குள் கிடக்கும் உடைந்த பாட்டில்களால் தினமும் பத்து பேருக்காவது ரத்தக் காயம் ஏற்படுவது தவிர்க்க...

தூக்குத் தண்டனையை ஒழிக்க சட்ட வாரியம் கருத்து கேட்கிறது

தூக்குத் தண்டனையை ஒழிக்க சட்ட வாரியம் கருத்து கேட்கிறது

இந்தியாவில் ‘தூக்குத் தண்டனை’யை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து கடந்த மே 23 ஆம் தேதி சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தூக்குத் தண்டனைக் குறித்து விரிவான ஆய்வுகள், விவாதங்கள் தேவை. இந்த விவாதங்களும் ஆய்வுகளும் சட்டத்தை உருவாக்குவோருக்கும் நீதித்துறைக்கும் பயன்பெறத்தக்க வகையில் உதவிட வேண்டும். தூக்குத் தண்டனைக்கு எதிராக உருவாகி வரும் சர்வதேசப் போக்கினைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. கடந்த பத்தாண்டுகளில் தூக்குத் தண்டனைக் குறித்து உச்சநீதிமன்றம் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதை சுட்டிக் காட்டும் இந்த அறிக்கை, இந்த தண்டனையை வழங்குவதில் ஒரே சீரான அணுகுமுறை மேற்கொள்ளப்படாததை சுட்டிக் காட்டியுள்ளது. சட்ட ஆணையம் இது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல நேரங்களில் உச்சநீதிமன்றமே பரிந்துரைத்துள்ளது. கருணை மனுக்களை பரிசீலிப்பதில் நீண்ட காலதாமதம் செய்வது உயிர் வாழும் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்ற...

ராஜபக்சே வாழ்த்து; சாமியார்கள் ஆசி; கார்ப்பரேட் முதலாளிகள் மகிழ்ச்சி!

ராஜபக்சே வாழ்த்து; சாமியார்கள் ஆசி; கார்ப்பரேட் முதலாளிகள் மகிழ்ச்சி!

ராஜபக்சே வாழ்த்து; சாமியார்கள் ஆசி; கார்ப்பரேட் முதலாளிகள் மகிழ்ச்சி!:- 45 அமைச்சர்களுடன் (23 பேர் கேபினட் அமைச்சர்கள்; 22 இணை அமைச்சர்கள்) மோடி பிரதமராக மே 26 அன்று பதவி ஏற்றார். தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் கூட  ‘கேபினட்’ அமைச்சராகவில்லை. வெற்றி பெற்ற ஒரே பா.ஜ.க. வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் இணை அமைச்சராகியுள்ளார்.  திருச்சியில் படித்து, டெல்லியில் தங்கிவிட்நிர்மலா சீதாராமன் (பார்ப்பனர்) தேர்தலில் போட்டியிடாமலேயே இணை அமைச்சராகி விட்டார்.  சுஷ்மா சுவராஜ், மேனகா, நஜிமா ஹெப்துல்லா, ஹர்ஸ்மிரத் கவுர் பதல், உமாபாரதி, ஸ்மிருதி ராணி என 6 பெண்கள் கேபினட் அமைச்சர்களாகி யுள்ளனர்; மேலே குறிப்பிட்பெண் இணை அமைச்சர்.  பா.ஜ.க. வைச் சார்ந்த அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் இல்லாமலேயே இந்தூரில் மருத்துவக் கல்லூரி தொடங்க, அமைச்சராக இருந்தபோது அன்புமணி அனுமதித்ததற்காக அவர் மீது சி.பி.அய். வழக்கு உள்ளது. அதன் காரணமாகவே பதவி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது....

விடுதலைப்புலியின் களப்போருக்கு பெங்களூர் “அண்ணாச்சி”யின் அளப்பரிய உதவி! கழகத் தலைவர் உருக்கமுடன் நினைவு கூர்ந்தார்

விடுதலைப்புலியின் களப்போருக்கு பெங்களூர் “அண்ணாச்சி”யின் அளப்பரிய உதவி! கழகத் தலைவர் உருக்கமுடன் நினைவு கூர்ந்தார்

22-05-2014 வியாழக்கிழமை மாலை 6-00 மணியளவில், கர்நாடக மாநிலம், பெங்களூர்த் தமிழ்ச் சங்க கட்டிடம், திருவள்ளுவர் அரங்கில் மறைந்த, பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவரும், கர்நாடகத் தமிழர்ப் பேரவையின் தலைவருமாகிய திரு பா.சண்முகசுந்தரம் (எ) அண்ணாச்சி அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. மறைத்திரு பா.சண்முகசுந்தரம் நினைவு அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் “அண்ணாச்சி சிறப்பு மலர்” வெளியிடப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மலரை வெளியிட உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பெற்றுக் கொண்டார். காவேரிக் கலவரம், தொடர்வண்டித் துறையினரின் நிலம் கையகப்படுத்துதல், தலைமுறைக் கணக்காய் வாழ்ந்தோரை வனத்துறையினர் விரட்டி அடித்தல் போன்ற நிகழ்வுகளில் கருநாடகத் தமிழரின் உரிமை காக்க முன் நின்றவரும்; ஈழ விடுதலை ஆதரவாளரும்; விடுதலைப் புலிகளின் தோழருமான அண்ணாச்சி அவர்களை நினைவு கூர்ந்து, பலரும் உரையாற்றினர். கழகத்தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சுருக்கம்: கொளத்தூரில்...

காஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு

காஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கு வழங்கப் பட்டுள்ள 370 ஆவது பிரிவை நீக்கும் நோக்கத் தோடு மோடி ஆட்சி விவாதங்களைத் தொடங்கி யிருக்கிறது. காஷ்மீர் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஜிதேந்திரசிங் பிரதமர் அலுவலக இணையமைச்சராக்கப்பட்டுள்ளார். பதவி ஏற்ற அடுத்த நாளே இந்த விவாதத்தை அவர் தொடங்கிய நிலையில், ‘370’ உருவான வரலாற்றை விளக்குகிறது இக்கட்டுரை. இந்தியாவில்தான் காஷ்மீர் இருக்கிறது. ஆனா, அது எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பதை இன்றைய பெரும்பான்மையானவர்கள் அறிய மாட்டார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றபோது 526 சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றில் பெரும் பாலானவை இந்தியாவுடன் இணைந்துவிட்டன. இணைய மறுத்த ஐதராபாத் சமஸ்தானத்தை இராணுவ பலத்தால் இணைத்தார் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல். காஷ்மீர் சமஸ்தானத்தை இந்து மன்னரான ஹரிசிங் ஆட்சி செய்து வந்தார். அங்கே உள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் இ ஸ்லாமியர்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன்...

இருளர் பழங்குடியினருக்கு மறுக்கப்படும் உரிமைகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

இருளர் பழங்குடியினருக்கு மறுக்கப்படும் உரிமைகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 31.5.2014 சனிக் கிழமை மாலை 4 மணியளவில் இருளர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலைவர் ந.வெற்றிவேல் முன்னிலை வகிக்க, அறிவியல் மன்ற செயலாளர் சி.ஆசைத் தம்பி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் செ.நாவாப்பிள்ளை, ந. வெற்றிவேல், மதி, காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் செங்குட்டுவன், வி.வி.மு. பொருப் பாளர் இராமலிங்கம், கழக வழக்கறிஞர் துரை அருண், க. இராமர், பழங்குடியினர் பாதுகாப்பு முன்னணி தலைவர் சுடர்வொளி சுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். 1952இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பழங்குடியினர் ஆறரை லட்சம் பேர், 2014-லும் அதே ஆறரை லட்சம் மக்கள் தொகை இருப்பதாக கூறுவது எப்படி சரியாகும்? இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு மேல் உள்ள வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. அதனால் இவர்களுக்கு இருப்பிட சான்றிதழ்...

தலையங்கம் : கள்ள மவுனம்! 0

தலையங்கம் : கள்ள மவுனம்!

19 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையால் “தூக்கிலிடப்பட்ட” தனது கணவரின் மரணத்துக்கு நீதியைப் பெற்றிருக்கிறார், அஞ்சலை! அரியலூர் மாவட்டம் வேப்பூர் ஆதி திராவிடர் குடியிருப்பில் வசித்துவரும் அஞ்சலை நடத்திய போராட்டம் இப்போது உதவி ஆணையராக உள்ள ஒரு காவல்துறை அதிகாரிக்கு கைவிலங்கிடச் செய்திருக்கிறது. மைனர் பெண் ஒருவர் காதலனுடன் ஓடிய வழக்கு அது. பெண்ணின் தந்தை, மகளைக் கண்டுபிடித்துத் தர உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கிய பாடலூர் காவல் நிலைய ஆய்வாளர் கஸ்தூரி காந்தி என்பவர் அடைக்கலம் தந்த சந்தேகத்தின் பேரில் பாண்டியன் எனும் சுமை தூக்கும் தலித் தொழிலாளியை விசாரிக்கிறார். ஏதும் தெரியாத அந்த அப்பாவி கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கினார். காவல்துறை நடத்திய படுகொலை இப்போது நிரூபிக்கப்பட்டு, அதிகாரி கஸ்தூரி காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் இயக்கங்களுடன் இணைந்து அஞ்சலை நடத்திய போராட்டம் வீண் போகவில்லை. குறிப்பாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் இந்த வழக்கைத் தொடர்ந்து...

‘புதிய குரல்’ நடத்திய பெரியார் குடும்பங்களின் சந்திப்பு

‘புதிய குரல்’ நடத்திய பெரியார் குடும்பங்களின் சந்திப்பு

ஜாதி மறுப்புக் கொள்கைகளை வாழ்வியலாக்கி வாழும் பெரியார் குடும்பங்களின் சந்திப்பு பயிற்சியரங்கை ‘புதிய குரல்’ அமைப்பு ஆண்டுக்கு இரு முறை கூடி நடத்தி வருகிறது. பெரியார் இயக்கங்களுக்கும் அப்பால் வாழும் குடும்பங்களை ஒன்று திரட்டி கருத்துப் பரிமாற்றத்தோடு கொள்கை உறவுகளை வளர்த்தெடுக்கும் முயற்சியில் தோழர் ஓவியாவும் அவரது தோழர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த 23, 24, 25 தேதிகளில் கன்னியாகுமரியில் நடந்த குடும்ப சந்திப்பு நிகழ்வில், மதம்-மூடநம்பிக்கை-பெண்ணுரிமை குறித்த கருத்துகள் விவாதிக்கப்பட்டன. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மதம் குறித்து உரையாற்றி, விவாதங்களிலும் பங்கேற்றார். குழந்தை களுக்கான அறிவியல் கலந்துரையாடல் நிகழ்வுகள் இசைப் பாடல்களோடும் தனியே நிகழ்ந்தன. அ. மார்க்ஸ் மதத்தின் சர்வதேச அரசியல் குறித்துப் பேசினார். அமைப்பின் தோழர்கள் தோழியர்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். இரவில் ஆவணப் படங்கள் திரையிடப்பட்டன. பெரியார் முழக்கம் 05062014 இதழ்

வினா-விடை!

வினா-விடை!

ஏழுமலையானுக்கு விசாகப்பட்டினத்தைச் சார்ந்த பக்தர், ரூ.30 இலட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ எடையுள்ள பாத கவசம் (செருப்பு) வழங்கினார்.   – செய்தி ஏழுமலையான் எந்தக் காலத்திலும் எழுந்து நடக்கவே போவதில்லை என்பதில் பக்தருக்கு அவ்வளவு உறுதியான நம்பிக்கை போலும்! அதனால்தான் ஒரு கிலோ எடையில் செருப்பு. 1967இல் தி.மு.க.விடம் ஆட்சியை பறிகொடுத்த போது 41.10சதவீதமாக இருந்த காங்கிரசின் வாக்கு வங்கி 2014 மக்களவைத் தேர்தலில் 4.3 சதவீதமாக சரிந்தது.     – ‘தினமணி’ செய்தி திவாலாகும் வங்கியைக் காப்பாற்ற முடியாது; இதுக் கெல்லாம் ரிசர்வ் வங்கியும் உதவி செய்யாது! அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டுமே தவிர அன்னியநாடுகள் அல்ல.  – ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆமாம்! ‘அன்னிய முதலீடு’ பற்றி வெளிநாட்டுக் காரர்களுக்கு முடிவெடுக்க உரிமை கிடையாது; நாங்களே அந்த முடிவை தேசபக்தியோடு எடுப்போம்! தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்த உள்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.  – ஜி.கே. வாசன்...

வீதி நாடகப் புத்தாக்கப் பயிற்சி

வீதி நாடகப் புத்தாக்கப் பயிற்சி

சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழக வீதி நாடக புத்தாக்கப் பயிற்சி, 26-05-2014 காலை முதல் மாலை வரை, சேலம் மாவட்டம் உக்கம்பருத்திக் காடு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இரண்டு புதிய நாடகங்கள் உரு வாக்கப்பட்டன. நாடகங்களை காணொளியாக பதிவு செய்து, உடனுக்குடன் ஒளிபரப்பப்பட்டு, அதைப் பார்த்து திருத்தங்கள் செய்யப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு தனது ஆலோசனைகளை வழங்கினார். அடுத்தக்கட்ட பயிற்சி 2014 ஜூன் 22,23 ஆகிய இரண்டு நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். பெரியார் முழக்கம் 05062014 இதழ்

கழக செயலவை கூட்டம் திருப்பூர்

கழக செயலவை கூட்டம் திருப்பூர்

திருப்பூரில் கூடிய தலைமை செயற்குழு முடிவுகள் 31-05-2014 சனிக்கிழமை அன்று காலை 10-00 மணிக்கு, திருப்பூர், கழக செயலவைத் தலைவர் தோழர் சு. துரைசாமி அவர்கள் இல்லத்தில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம், கழக செயலவைத் தலைவர் சு.துரைசாமி தலைமையிலும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. தலைமை கழகப் பொறுப்பாளர்களும் மண்டல அமைப்புச் செயலாளர்களும் கலந்து கொண்டு விவாதித்த இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன: திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவையை எதிர்வரும் 21-06-2014 சனிக்கிழமை அன்று கோவையில் கூட்டுவது என்று முடிவெடுக்கப் பட்டது. தமிழ்நாட்டில் இயங்கிவரும் வருமான வரித்துறை, சுங்க வரித்துறை முதலிய மத்திய அரசு அலுவல கங்களில், அண்மைக் காலமாக, அனைத்து மட்டங்களிலும், இந்தி பேசும் மாநிலங்களைச் சார்ந்தவர்களே குவிந்து வருகிறார்கள். அவர்களின் தாய் மொழியான இந்தியில் தேர்வு எழுதும் வாய்ப்பினால் மட்டுமின்றி, வட...

ஆசிரியருக்குக் கடிதம்: “டேவிட் ‘பஸ்ல’ இருக்கான்டா!”

ஆசிரியருக்குக் கடிதம்: “டேவிட் ‘பஸ்ல’ இருக்கான்டா!”

7.5.14 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழில் “உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் பார்ப்பனர்களின் தீண்டாமை” கட்டுரை கண்டேன். இது சம்பந்தமான கடந்தகால நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1961-1962 ஆண்டுகளில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசுப் பணியாற்றி வந்தேன். பட்டுக்கோட்டை சுயமரியாதை இயக்கத்தின் கோட்டை. ஒருமுறை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தஞ்சை செல்ல பஸ் ஏறினேன். பஸ் புறப்பட்ட அடுத்த நிறுத்தத்தில் பேருந்தில் இருந்த மூன்று பார்ப்பனர்கள், கண்டக்டரிடம் பேருந்தை நிறுத்திச் சொல்லி தமது பூணூலையும் மேலாடையை யும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ‘டேவிட் பஸ்சுல இருக்காண்டா’ என்று சத்தம் போட்டு சொல்லிக் கெண்டு பேருந்தைவிட்டு இறங்கி தலைதெறிக்க ஓடியதைப் பார்த்தேன். அணைக்காடு சுயமரியாதை வீரர் டேவிட் கண்ணில் பட்டால் பார்ப்பனர்களின் பூணூல் தப்பாது என்பதை உணர்ந்தேன். பார்ப்பனர்கள் நம் மீது குதிரை சவாரி செய்யலாம் என்ற மதவாத திமிர் போக்கை மாற்றிக் கொண்டு மனிதனாக மாறவேண்டும். இப்போது ஆட்சி அதிகாரத்தை நம்பி ஆட்டம் போட்டால்...

அச்சமே – ‘பேய்’ நம்பிக்கை!

அச்சமே – ‘பேய்’ நம்பிக்கை!

“பேய் இருக்கா, இல்லையா?” “நம்பலாமா? நம்பப்படாதா?” என்று ரஜினியையே கலவரப்படுத்தும் கேள்வியை வடிவேலு கேட்கும் காட்சி பிரபலமானது. நம்மில் சிலரும் இந்தக் கேள்வியுடன் அருகில் இருப்பவர்களைப் பதற வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதே சமயம், கொடூர முகப் பேய், வெள்ளுடை தரித்த ஆவிகளைத் திரைப்படங்களில் கண்டு பயந்து மகிழ்வதிலும் பலருக்கு ஆர்வம் அதிகம். தமிழில் அதீத ஒப்பனையுடன் நடிகர், நடிகைகள் ‘ரொமான்டிக் லுக்’ விடும் காதல் படங்களைத் தவிர்த்துவிட்டு, பேய்ப்படம் என்று அறிவிக்கப்பட்ட படங்களைக் கணக்கிட்டாலே ஒரு நூறை நெருங்கும். ‘யார்’, ‘மை டியர் லிஸா’, ‘ஜென்ம நட்சத்திரம்’, ‘13-ம் நம்பர் வீடு’, ‘வா அருகில் வா’ போன்ற படங்கள் பேய்களைப் பிரபலமாக்கியவை. சமீபத்தில், ‘யாவரும் நலம்’, ‘பீட்சா’ போன்ற படங்களும் சிறப்பாக எடுக்கப்பட்டவை. மிகச் சமீபமாக ‘யாமிருக்க பயமே’ என்ற திரைப்படம் பேயுடன் நகைச்சுவை கலந்த கதையைக் கொண்டு எதிர்பாராத வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை நாயகன் கிருஷ்ணாவே...

தலையங்கம்: பெரியார் இயக்கங்களின் கூட்டுச் செயல்பாட்டை வரவேற்கிறோம்!

தலையங்கம்: பெரியார் இயக்கங்களின் கூட்டுச் செயல்பாட்டை வரவேற்கிறோம்!

மறைந்த பெரியார் சாக்ரடீஸ் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடந்தபோது (30.5.2014) கவிஞர் அறிவுமதி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். பெரியார் கொள்கைகளுக்கு நெருக்கடி உருவாகியுள்ள அரசியல் சூழலில், பெரியார் இயக்கங்கள், தங்களுக்குள் இணைந்து செயல்படவேண்டும் என்றும், அதற்கான முன்முயற்சியை திராவிடர் கழகத் தலைவரே எடுக்க வேண்டும் என்பதே கவிஞர் அறிவுமதியின் கோரிக்கை. தொடர்ந்து பேசிய நடிகர் சத்தியராஜ் அவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமது உரையில் பேசியதை ‘விடுதலை’ நாளேடு கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருக்கிறது. “இங்கே கவிஞர் அறிவுமதி அவர்களும் நமது இனமுரசு சத்யராஜ் அவர்களும் ஒன்றைக் குறிப்பிட்டார்கள். அது பற்றி நான் கருத்து சொல்லவில்லை என்றால், என்ன நாம் எடுத்து வைத்த கோரிக்கைக்கு ஆசிரியர் (கி.வீரமணி) பதில் சொல்லாமல் போய்விட்டாரே என்று கருதிட இடம் கொடுக்கக் கூடாதல்லவா? பெரியார்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

பொற் கோயிலுக்குள் இராணுவம் நுழைந்து 700 பேர் வரைக் கொன்றுக் குவித்த 30 ஆம் நினைவு நாளன்று பொற்கோயிலில் இரு சீக்கிய பிரிவினர், வாள், ஈட்டியுடன் மோதிக் கொண்டனர்.              – செய்தி இப்படித்தான் அன்றைக்கு இராணுவம் நுழைந்த போதும் நடந்தது என்பதை செயல்முறையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் போல! கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம்; 4 அமைச்சர்களிடம் மோடி ஒப்படைத்தார்.  – செய்தி முதலில் ‘பாவம்’ செய்த பக்தர்கள் ‘பாவத்தை’ கங்கையில் தொலைப்பதற்கு தடை போடுங்க! அதுவரை கங்கை “பாவங்களின்” நதியாகத்தான் இருக்கும்; தூய்மையாகாது. போரில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்த ராஜபக்சே நியமித்துள்ள விசாரணைக் குழுவிடம், 18,590 புகார் மனுக்கள் வந்துள்ளன.      – செய்தி அப்புறம், இந்த மனுக்களும் காணாமல் போகும்; அதைக் கண்டுபிடிக்க ராஜபக்சே மற்றொரு குழு போடுவார். இந்திய வெளியுறவுத் துறை அதையும் வரவேற்று அறிக்கை விடும். அட, போங்கப்பா! “கற்பழிப்பு” குற்றவாளிகளை கடவுளால் மட்டுமே தடுக்க...

கரூர்-திருச்சிப் பகுதிகளில் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை

கரூர்-திருச்சிப் பகுதிகளில் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை

ஊர்தோறும் சென்று மக்களை சந்தித்து கழகத்தின் செயல்பாடுகளை விளக்கிடும் துண்டறிக்கைகளை வழங்கி பெரியார் கொள்கைகளை விளக்கிடும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து நடத்தி வருகிறது. கழகத்தின் பரப்புரைக்காக வாங்கப்பட்டுள்ள ‘வேனில்’ தோழர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். வாகனத்திலேயே உணவுப் பொருள்களை எடுத்துப்போய் ஆங்காங்கே உணவு தயாரித்து சாப்பிட்டு, வாகனத்திலேயே தங்கி, தொடர்ந்து தோழர்கள் உற்சாகமாக பணியாற்றி வருகிறார்கள். கழகப் பொருளாளர் இரத்தின சாமி, இந்த இயக்கத்துக்கு தலைமை யேற்று திட்டமிட்டு வழி நடத்தி வருகிறார். சந்திக்கும் மக்களிடம் ரூ.10 மட்டுமே நன்கொடையாக வாங்கும் இந்தத் திட்டத்தில் பொது மக்கள் ஆர்வத்துடன் நன்கொடை வழங்குவதோடு கழக வெளியீடுகளையும் வாங்கி வருகிறார்கள். வெற்றி நடைபோடும் மக்க சந்திப்பு திட்டம் பற்றிய செய்தி தொகுப்பு: மே 22, 2014 : திராவிடர் விடுதலைக் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கத்தை, கரூரில் 22.5.2014 காலை 11 மணிக்கு மூத்த பெரியார் தொண்டர்...

பேரறிவாளன் மனம் திறக்கிறார்!

பேரறிவாளன் மனம் திறக்கிறார்!

வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் தூக்குத் தண்டனை ரத்து, தமிழக அரசின் விடுதலை முயற்சி, தன் தாய் அற்புதம்மாளின் போராட்டம் பற்றி பல கேள்விகளுக்கு வழக்கறிஞர் மூலம் விடை அளிக்கிறார். அரசியல் சாசன அமர்விற்கு உங்கள் விடுதலை வழக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் என்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்? அரசியல் சாசன அமர்வில் நீதியரசர்கள் யார் யார் பங்கு பெறப் போகிறார்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இருப்பினும் தற்போது அமைந்துள்ள புதிய மத்திய அரசு இதில் எவ்வகையான நிலைப்பாடு எடுக்க உள்ளது என்பதையே நான் மிக ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். காரணம் தண்டனை குறைப்பு அதிகாரம் என்பது முழுக்க முழுக்க மாநில அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என நன்கு தெரிந்திருந்தும் அரசியல் காரணங்களுக்காக சென்ற காங்கிரசு மத்திய அரசு தமிழக அரசின் முடிவை எதிர்த்தது – வழக்கு தொடுத்தது. தற்போது அமைந்துள்ள புதிய மத்திய அரசு மாநில உரிமைகளை மதிக்கிற அரசாக...

நாகம்மையார் மறைவும், கிறிஸ்துவ திருமணமும் – பெரியார் வரலாற்று நூலில் பிழையான தகவல்கள் (தா.செ. மணி)

நாகம்மையார் மறைவும், கிறிஸ்துவ திருமணமும் – பெரியார் வரலாற்று நூலில் பிழையான தகவல்கள் (தா.செ. மணி)

திராவிடர் கழகம் வெளியிட்டு வரும் ‘தமிழர் தலைவர்’ பெரியார் வரலாற்று நூலில் திரிக்கப்பட்ட பிழைகளை நேர் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இக்கட்டுரை வெளியிடப் படுகிறது. பெரியாரின் வாழ்வில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாக, நாகம்மையார் மறைவுக்கு (11-5-1933) அடுத்த நாள் திருச்சியில் 144 தடையை மீறி, இரு கிறிஸ்துவர்களுக்கு சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்தார் என்பது ஒன்றாகும். திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ எனும் 1939 ஆம் ஆண்டு வரையிலான வாழ்க்கை வரலாற்று நூலிலும் “11-5-1933 இல் நாகம்மையார் காலஞ்சென்றார். 12-5-1933 இல் ஈ.வெ.ரா திருச்சி சென்று அங்கு ஒரு கிறிஸ்துவ விவாகத்தை 144 வது செக்ஷனை மீறி நடத்தி வைத்து அரஸ்டு செய்யப்பட்டார். பிறகு, சர்க்காரால் இந்த வழக்கு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றியே தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள “பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்” இரு பதிப்புகளிலும்...

திருவாரூர் தங்கராசு படத்திறப்பு

திருவாரூர் தங்கராசு படத்திறப்பு

சென்னை திருவான்மியூர் ‘குத்தூசி குருசாமி-குருவிக்கரம்பை வேலு சுயமரியாதைப் பேரவை’ சார்பில், 16.3.2014 ஞாயிறு அன்று திருவாரூர் கே.தங்கராசு படம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை மரு.அ.சவுந்திர பாண்டியன் தலைமை வகித்தார். புதுகை க. இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். திருவாரூர் தங்கராசு படத்தை திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும், திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை படத்தை இனமானக் கவிஞர் செ.வை.ர. சிகாமணியும் திறந்து வைத்து உரை நிகழ்த்தினர். ‘அறிவின் வழி’ மாத இதழ் ஆசிரியர் கவிஞர் குடந்தையார் சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 19062014 இதழ்

அன்புமணி மீதான வழக்கு என்ன?

அன்புமணி மீதான வழக்கு என்ன?

அன்புமணி மீதான சி.பி.ஐ. வழக்குகள் குறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரித்தோம். “அவர் மீது முதல் வழக்கு, ம.பி. மாநிலம் இந்தூரில் பதிவு செய்யப்பட்டது. இங்கு கடந்த 2007 ஆம் ஆண்டு ‘இன்டெக்° மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்’ என்ற பெயரில் சுரேஷ் சிங் என்பவர் புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்கினார். 2008-2009 ஆம் கல்வியாண்டில் இந்தக் கல்லூரி எம்.பி.பி.எ°. இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக, இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் விண்ணப்பித்து. இந்திய மருத்துவக் கவுன்சில் குழு அங்கு சென்று ஆய்வு செய்து, ‘கூடுதல் மாணவர்களை சேர்க்கத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை’ என அறிக்கை கொடுத்துவிட்டது. பின்னர் சுரேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதன் பேரில் நீதிமன்றமே ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய, அந்தக் குழுவும் முதல் குழுவைப் போலவே அறிக்கை தாக்கல் செய்தது. இதன் பிறகுதான் சுரேஷ் சிங், அன்புமணியின் இலாகாவை நாடியிருக்கிறார். மத்திய சுகாதாரத்...

தலையங்கம் : தடை போட வேண்டுமாம்!

தலையங்கம் : தடை போட வேண்டுமாம்!

மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஒரு விசித்திர வழக்கை சந்தித்திருக்கிறது. ‘பிராமணர்’களை எதிர்த்தும் அவதூறூகவும் பேசி வரும் தி.க. தலைவர் கி.வீரமணி, தந்தை பெரியார் தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் “பிராமணருக்கு” எதிராகப் பேச தடைவிதிக்க உத்தரவிடவேண்டும் என்பது வழக்கு. வழக்கைத் தொடர்ந்தவர் சிவகாசியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற வழக்கறிஞர். விசாரித்த நீதிபதிகள் வி.இராம சுப்பிரமணியன், வி.எம். வேலுமணி மனுவை தள்ளுபடி செய்து விட்டனர். “விமர்சனம் என்பது கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதி கருத்துரிமைக்கு அரசியல் சட்டத்தில் இடமிருக்கிறது. சரியான விமர்சனங்களை வரவேற்க வேண்டும். விமர்சனம் முறையற்றதாக நியாயமற்றதாக இருக்குமானால், ஒன்று அதை புறக்கணிக்கலாம். மற்றொன்று சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரலாம். விமர்சனம் எல்லை மீறினால் புத்தர் காட்டிய வழியில் அமைதி காக்கலாம். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். சகமனிதர்களை தனது வைப்பாட்டி மக்கள், சூத்திரர்கள்...

கோவையில் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கியது

கோவையில் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கியது

இரண்டாம் கட்ட மக்கள் சந்திப்பு இயக்கம், ஜூன் 10 ஆம் தேதி பகல் 11 மணியளவில் கோவை காந்திபுரத்தில் தொடங்கியது. கழகப் பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் துரைசாமி, மாவட்ட தலைவர் நேரு உள்ளிட்ட 20 தோழர்கள் இயக்கத்தில் பங்கேற்றனர். கோவை நகரம் முழுதும் மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கி, கழக நூல்களை விற்பனை செய்து வருகின்றனர். கழகத்தின் முயற்சியை பொது மக்கள் பெரிதும் பாராட்டி வரவேற்று வருகிறார்கள். ஒவ்வொருவரிடமும் 10 ரூபாய் என்று நன்கொடை திரட்டப்படுகிறது. 100 ரூபாய் நன்கொடை தருவோருக்கு 20 ரூபாய்க்கான நூல்கள் வழங்கப்படுகின்றன. ஜூலை 4 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் தொடருகிறது. 4 ஆம் தேதி மேட்டுப் பாளையத்தில் நிறைவு பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. 15.6.2014 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களை உக்கடம்பகுதியில் சந்தித்துப் பாராட்டுகளைத் தெரிவித்தார். அன்று மாலை கோவையில் நடந்த மறைந்த நடிகர் மணிவண்ணன் நூல்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

திருவண்ணாமலையில் “உலக நன்மைக்காக” ஜெபம்-பூஜை நடத்திய சாமியார்கள், தங்களுக்கு நிலம், காப்பகம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.         – ‘தமிழ் இந்து’ செய்தி உலக நன்மையை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்; எங்கள் கோரிக்கைகளை அரசுதான் கவனிக்க வேண்டும் என்கிறார்கள். சாமியார்களுக்குக்கூட பகுத்தறிவு வந்துடுச்சு! கூடங்குளம் அணுமின் நிலைய பராமரிப்புப் பணியின்போது ஆறு ஊழியர்கள் படுகாயம் அடைந்ததற்கு வால்வு பழுதடைந்ததே காரணம் என்று கூறுவது தவறு. ஊழியர்கள் சரியாகக் கையாளாமல் போனதே காரணம். – அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் மனிதர்களுக்கு ஆபத்துன்னா, அது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால், எந்திரங்கள் பாதுகாப்பா இருக்குதுன்னு சொல்லவர்றீங்க…. நல்ல மனசு! வங்கிகளில் பெருமுதலாளிகள் வாங்கிய ரூ.2.40 லட்சம் கோடி திருப்பி செலுத்தப்படவில்லை. 10 ஆண்டுகளில் வராத கடனாக தள்ளுபடி செய்யப் பட்டது ரூ.2 லட்சம் கோடி. – வங்கி ஊழியர் சங்கம் தகவல் உஷ்… சத்தமாய் பேசாதீங்க… பெரு முதலாளிகள் காதுல விழுந்தா...

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வருக்கு பாராட்டு

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வருக்கு பாராட்டு

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வரை பாராட்டுகிறோம் பிரதமர் மோடியை சந்தித்து இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும், அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிய தமிழக முதல்வரை பாராட்டுவதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர், செய்தியாளர் களிடம் கூறியது: சிதம்பரம் அடுத்த வடக்குமாங்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர் களுக்கு 92 ஆவது அரசாணையின்படி பள்ளி, கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்க சட்ட வரையறை உள்ளது. ஆனால், இவற்றை கல்வி நிர்வாகங்கள் பின்பற்றுவதில்லை. மேலும் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இவற்றை உரிய திருத்தங்களோடு செயல்படுத்த வேண்டும். பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவிரி மேலாண்மை...

பெரியாருக்கு எதிரான ‘முன்னோடி-பின்னோடி’ வாதங்களுக்கு விளக்கம்-மறுப்பு

பெரியாருக்கு எதிரான ‘முன்னோடி-பின்னோடி’ வாதங்களுக்கு விளக்கம்-மறுப்பு

கொஞ்ச காலமாகவே பெரியார் மீது பல்வகை திறனாய்வுக் கணைகள் தொடர்ந்து வீசப்பட்டு வருகின்றன. தூற்றுதலாக இல்லாமல் திறனாய்வாக வந்தால் வரவேற்க வேண்டியது தான்; திறனாய்வு உள்நோக்கமின்றி வந்தால் வரவேற்க வேண்டியது தான்; உள்நோக்கத்தோடு வந்தாலும் ஆதாரத்தோடு இருந்தால் வரவேற்கவேண்டியது தான். என்ன காரணத்தாலோ, பெரியாருக்குத் தமிழ்ச் சமூகம் அளித்து வந்துள்ள இடத்திலிருந்து அவரைப் பலவந்தமாக, தந்திரமாக, சூழ்ச்சியாக…எப்படியாவது இறக்கிட வேண்டுமென பலர் முயற்சியாய் முயற்சிக் கின்றனர்; பலபட எழுதுகின்றனர். அவற்றில் ஒன்றாக, “தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்” இதழில் 2014 மே -15 இதழில் ஒரு பதிவினைப் படித்தேன்; தோழர் பெ.மணியரசன், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 19-04-2014 அன்று நடந்த 5ஆவது உலகத் தமிழ்ப் பொது மாநாட்டில் ஆற்றிய உரையே அது. அவ்வுரையில் தோழர் மணியரசன் மூன்று செய்திகளை முன்வைக்கிறார். “1916ஆம் ஆண்டு மறைமலை அடிகள் தொடங்கிய ‘தனித் தமிழ் இயக்கம்’ தமிழர் வாழ்வியல், சடங்குகள் ஆகியவற்றிலிருந்து சம°கிருதத்தையும், ஆரியப் புரோகிதர்களையும்...

செயலவை நிகழ்வுகள்

செயலவை நிகழ்வுகள்

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 21.6.2014 சனிக் கிழமை 11 மணியளவில் கோவை அண்ணாமலை ஓட்டல் அரங்கில் கூடியது. செயலவைத் தலைவர் துரைசாமி தலைமையேற்றார். கோவை கழகத் தோழியர் ராஜாமணி, கடவுள்-ஆத்மா மறுப்புகளைக் கூற, மாநகர மாவட்டச் செயலாளர் தோழர் நேருதா° வரவேற்புரையாற்றிட பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரை யாற்றினார். மாறி வரும் அரசியல் சூழலில் பெரியாரியலை முன்னெடுப்பதில் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளை விளக்கி, ஒரு மணி நேரம் பேசினார். கழகத்தின் நிதிநிலை மற்றும் மக்கள் சந்திப்பு இயக்கம் குறித்து பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி விரிவாக விளக்கினார். உரையாற்றிய தோழர்கள்: மண்டல செய லாளர்கள் சேலம்-சக்தி வேலு, மதுரை-இராவணன், நெல்லை-குமார், தஞ்சை-இளையராசா, கோவை-விஜியன், ஈரோடு-இராம இளங்கோவன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தீர்மானங்களை முன்மொழிந்து உரை யாற்றினார். 2 மணி வரை கூட்டம் நீடித்தது. மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் 3 மணிக்கு...

ஜாதி-மத மறுப்புத் திருமணங்களுக்கு பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் ஆணை

ஜாதி-மத மறுப்புத் திருமணங்களுக்கு பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் ஆணை

ஜாதி-மத மறுப்புத் திருமணங்களுக்கு ஆட்சி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருந்தது. “ஜாதி மறுப்புத் திருமணங்கள் தேசத்தின் நலனைக் காப்பதாகும். காரணம், ஜாதி மறுப்புத் திருமணங்களே. ஜாதி அமைப்பை அழிக்கக் கூடியவை” என்று கூறிய உச்சநீதிமன்றம், உ.பி. மாநில ஆட்சிக்கு நிரந்தரமான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் வெவ்வேறு ஜாதி மதங்களுக்குள் திருமணம் செய்து கொள்வார்களேயானால், அவர்களுக்கு உரிய பாதுகாப்புத் தருவதும், அச்சுறுத்தலிலிருந்து தடுப்பதும் ஆட்சியாளர்கள், காவல்துறையின் கடமை என்று உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் கூறியிருந்தது. லதாசிங் என்ற பெண், உ.பி. அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ஒரு இணையர், மேற்குறிப்பிட்ட தீர்ப்பின் அடிப்படையில் தங்களுக்கு பாதுகாப்புக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினர். கடந்த...

தலையங்கம் : இருக்கின்றாய், இதயமாக!

தலையங்கம் : இருக்கின்றாய், இதயமாக!

இதயத்தின் துடிப்புக்கு ஜாதி கிடையாது, மதம் கிடையாது, ஆண்-பெண் பாகுபாடு கிடையாது. தேசம்-மொழிகளையும் கடந்து நிற்கிறது. இந்த உடலின் இயக்கம்; மனித உடலும், உடல் இயக்கமும் வெளிப் படுத்தும் ஒரே அடையாளம் மனிதர்கள் என்ற ஒன்றை மட்டும்தான். 27 வயதே நிறைந்த இளைஞன் லோகநாதன் சாலை விபத்துக்குள்ளாகி அவரது மூளையின் இயக்கம் மரணித்துவிட்ட நிலையில் இதயம் மட்டும் உயிர்ப்புடன் துடித்தது. அதே நேரத்தில் அடையாறு தனியார் மருத்துவமனை ஒன்றில் இதயப் பாதிப்புக்கு உள்ளான மும்பையைச் சார்ந்த அலோவி என்ற 27 வயது பெண்ணுக்கு மாற்று  இருதயம் ஒன்று கிடைத்துவிட்டால் உயிர் பிழைத்துவிட முடியும்! மரணத்தைத்தழுவிவிட்ட தனது மகனின் இருதயம் வேறு ஒரு உடலில் துடித்துக் கொண்டிருக்குமானால் – அன்பு மகனின் மறக்க முடியாத நிலைத்த நினைவாக இருக்குமல்லவா? அப்படி ஒரு அறிவார்ந்த முடிவுக்கு வந்தார் அந்தத் தாய். அவர் அரசு மருத்துவமனையில் செவிலியர். பெருமைக்குரிய அவரது பெயர் இராஜலட்சுமி. துடிக்கும் இருதயத்தை...

பீகாரை ஆட்டிப் படைத்த பார்ப்பனியம் லல்லு பிரசாத் கொந்தளிப்புப் பேட்டி

பீகாரை ஆட்டிப் படைத்த பார்ப்பனியம் லல்லு பிரசாத் கொந்தளிப்புப் பேட்டி

‘என்.டி.டி.வி’ தொலைக்காட்சி, பீகார் குறித்து ஒளிபரப்பிய ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பீகார் மாநிலத்தை பார்ப்பனர்கள் ஆட்டிப் படைத்த கொடூரமான வரலாறுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்த நிகழ்வில் பேட்டி அளித்த லல்லு பிரசாத், பார்ப்பனக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தாம் அரசியலுக்கு வந்ததாக கூறினார். அந்த சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தித் தொகுப்பு. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை மாட்டுக்குப் பதிலாக கழுத்தில் ஏர் பூட்டிக் கொடுமைப்படுத்திய பார்ப்பன உயர் ஜாதிக் கூட்டம், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைக்கான குரலைக் கொடுக்க ஆரம்பித்த நிலையில், அதற்காக எங்கள் ஆட்சிச் சக்கரம் சுழன்ற நிலையில், எங்கள் ஆட்சியைக் காட்டாட்சி (ஜங்கள்ராஜ்) என்று வருணிக்கிறார் – ஆனால், மோடியோ உயர்ஜாதி யினருக்கான கருவி என்றார் லாலுபிரசாத். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு வடக்கே மகாராஷ்டிரம், பஞ்சாப், மேற்குவங்கம் தவிர்த்த அனைத்து மாநிலங்களும் பார்ப்பனீய கட்டுக்குள் சென்றுவிட்டன. மகாராஷ்டிரத்தை எடுத்துக் கொண்டால் சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர், மகாத்மா...

அரசியல் சமூகத்திலிருந்து மதத்தை விலக்கி வைப்பதே மதச் சார்பின்மை சங்பரிவார் புரட்டுகளுக்கு மறுப்பு

இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று ஆய்வாளர் ஜவகர்லால் நேரு பல்கலையின் பேராசிரியர் ரொமிலா தாப்பர். சங்பரிவார் முன் வைக்கும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு சரியான மறுப்புகளை முன் வைத்து ‘பிரன்ட்லைன்’ (செப்.18) ஆங்கில இதழுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள்: வரலாற்று விவாதங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், ‘ஆரியர்கள்’ எனும் தலைப்பு தற்போது அரசியலாக்கப்பட்டுள்ளது. ஆரியக் கலாச்சாரத்தின் மேலாதிக்கத்தையோ, இந்திய மண்ணில்தான் ஆரியர்கள் உதித்தார்களா? போன்ற கேள்விகளையோ யார் எழுப்பினாலும் உடனடியாகச் சமூக வலை தளங்களில் அவர்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள். இதனால் ஆரோக்கியமான வரலாற்று விவாதங்களுக்கு இடமில்லாமல் போகிறது. கலாச்சாரத் தேசியம் என்பதற்கு அர்த்தம், தேசிய மயமாக்கப்பட்ட கலாச்சாரம் என்பதுதானே? அதாவது, ஒரே ஒரு கலாச்சாரம் மட்டுமே உள்ளது எனச் சொல்வது தானே? என்று கேட்கிறார்கள். சமகாலப் பாரம்பரியம் எதுவும் அசலானது இல்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் தோன்றிய பாரம்பரியங்களில்கூட ஏதோ ஒரு கட்டத்தில் இடையூறு நிகழ்ந்துள்ளது. ஆனால் ஆங்கிலேயர்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

ஆயுத பூஜை பண்டிகையில் 1000 கார்கள் விற்று மாருதி சுசுகி சாதனை. – செய்தி விற்பனை இந்துக்களுக்கு மட்டும் தானே? இல்லேன்னா சிவசேனாக்காரங்க கம்பெனிய நொறுக்கிடுவாங்க… மத ரீதியாக பிளவுபட்ட ஒரு சமூகம், அணுகுண்டைவிட ஆபத்தானது. – விஞ்ஞானிகள் குடியரசுத் தலைவரிடம் மனு சரியான கருத்து; ‘மதவாதப் பரவல் தடை’ ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வருவது குறித்து அவசரமாக ஆலோசிக்க வேண்டும். இந்தியாவின் முக்கிய நகரங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில்கள் அமைக்கப்படும். – தேவஸ்தானம் இதற்கெல்லாம் தனித் தனியா ‘ஸ்தல புராணங்கள்’ எழுதப்படுங்களா…? இஸ்லாமியர் ஆட்சி காலத்தில் ‘மதம்’ மாறுவதற்கு மறுத்த ‘பிராமணர்கள்’தான் இன்றைய தீண்டப்படாத மக்கள். – பா.ஜ.க. பேச்சாளர் பச்சோங்கர் சாஸ்திரி அப்படின்னா இன்றைய ‘பிராமணர்கள்’ எல்லாம் இஸ்லாமியர் காலத்துல ‘முல்லாக்களாக’ இருந்தவங்களா, சார்? இந்தியாவில் ‘வாடகைத் தாய்மார்கள்’ இந்தியர்கள் கருக்களையே சுமக்க வேண்டும். வெளிநாட்டினர் கருக்களை சுமக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு...

தீபாவளி என்றால் என்ன? – பெரியார்

தீபாவளி என்றால் என்ன? – பெரியார்

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். 2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார். 3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றி யுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது. 4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது. 5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது. 6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத் தினான். 7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகா சூரனுடன் போர் துவங்கினார். 8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான். 9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். 10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!...

தலையங்கம் மதவெறிக்கு எதிராக  விஞ்ஞானிகள் – படைப்பாளிகள்

தலையங்கம் மதவெறிக்கு எதிராக விஞ்ஞானிகள் – படைப்பாளிகள்

மோடியின் பார்ப்பனிய மத ஆட்சி -குறுகிய காலத்திலேயே பின்னடைவுகளை சந்திக்கத் தொடங்கி விட்டது. மக்களாட்சி முறையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் – அந்தக் கட்டமைப்புக்குள் மதவெறி ஆட்சியை நிறுவிட முயலும் முயற்சிகளும் அதற்கான வெறுப்புப் பேச்சுகளும் உலகம் முழுதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. சுமார் 40 எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் கலை படைப்புகளுக்காக கிடைத்த விருதுகளை திருப்பி அளித்து எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர். மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவது அணுகுண்டைவிட ஆபத்தானது என்று 120 விஞ்ஞானிகள் கூட்டாக கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளனர். உயிரியல் துறையின் தலைசிறந்த விஞ்ஞானியும், ‘தேசிய அறிவு ஆணையம்’ என்ற அமைப்பில் தலைவராக இருந்தவருமான ‘பத்மபூஷன்’ விருது பெற்ற பி.எம். பார்கவா, தனது விருதை திருப்பி அனுப்பிவிட்டார். “இந்த அரசுக்கு சகிப்புத் தன்மை இல்லை; பகுத்தறிவு மீதும் அறிவியல் மீதும் தாக்குதலை நடத்துகிறது” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். “மதத்தை அரசியலோடு கலக்கக் கூடாது. நம்பிக்கைகள் வீட்டிற்குள்ளேயே...

கழகத்தின் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் : உயர்நீதிமன்றம் அனுமதி

கழகத்தின் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் : உயர்நீதிமன்றம் அனுமதி

6.11.2015 அன்று வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாட்டிறைச்சி வைத்திருந்ததாக உத்திரபிரதேசத்தில் கொல்லப்பட்ட அக்லக் படுகொலையை கண்டித்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ள மாட்டிறைச்சிக்கான தடையை நீக்கக் கோரியும், தொடரும் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோரியும், 30.10.2015 அன்று வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி கழகத்தின் சார்பில் வேலூர் சத்துவாச்சேரி காவல்நிலையத்தில் 21.10.2015 அன்று மனு அளிக்கப்பட்டது. மனு அளித்த அன்றைய நாளே வேலூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சட்டம் அமுலில் இருப்பதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்தால் பதட்டமான சூழல் உருவாகும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு 29.10.2015 அன்று விசாரணைக்கு வந்தது. 30.10.2015 அன்று அரசு தரப்பின் விளக்கங்களைக் கேட்ட நீதிமன்றம் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட...

இராமாயணம்-மகாபாரதத்தில் சான்றுகள் உண்டு பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி ரசிகர்கள்

இராமாயணம்-மகாபாரதத்தில் சான்றுகள் உண்டு பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி ரசிகர்கள்

பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்டவர்கள் என்பதற்கு இராமாயணம், மகாபாரதத்திலேயே ஆதாரங்கள் உண்டு. மௌரியர் காலத்துக்குப் பின்பும், குப்தர் காலத்திலும் இலக்கிய வடிவம் தரப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட மகாபாரதம், இராமா யணம் ஆகியவை மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்துக்குத் தெளிவான ஆதாரங்களைத் தந்துள்ளன. (தொடக்கக்கால °மிருதிகளும், புராணங்களும் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவைதாம்). பொழுதுபோக்குக்கு என்பதை விட உணவுக்காக சத்திரியர்கள் அடிக்கடி வேட்டையாடி வந்திருக்கிறார்கள் என்பதற்கு மகாபாரதம் – குறிப்பாக அதிலுள்ள வனபர்வம் – ஆதாரமாக இருக்கிறது. உணவுக்காக வளர்ப்பு விலங்குகள் கொல்லப்பட்டு வந்ததற்கும் இது ஆதாரத்தைத் தருகிறது. ஹிம்சையை பார்த்து மனம் வருந்திய தர்மர்கூட தன் தம்பிகளுக்கும், திரௌபதிக்கும், காட்டில் வாழ்ந்து வந்த பார்ப்பனர்களுக்கும் உணவு தர தினந் தோறும் ரூரூ மான்களையும், கிருஷ்ண மிருகத்தையும் வேட்டையாடியதாக இதில் விவரிக்கப்பட் டுள்ளது. பார்ப்பனர்களின் உணவில் இறைச்சி சாதாரணமாக இடம் பெற்று வந்தது என்ற தகவலை ஆதிபர்வத்தில் இடம் பெற்றுள்ள கல்மாசபாதம் என்ற கதை கூறுகிறது. ஜெயத்ரதனுக்கும்...

சென்னை மாநகர ஆணையரிடம் கழகம் மனு

சென்னை மாநகர ஆணையரிடம் கழகம் மனு

அரசு ஆணைகளை புறந்தள்ளிவிட்டு, காவல் நிலையங்களை ‘இந்து’ வழிபாட்டு இடமாக்கி, ஆயுத பூஜை போடும் மதவாத நிகழ்வை நிறுத்தக் கோரி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன் தலைமையில் மாநகர ஆணையரிடம் நேரில் தோழர்கள் மனு அளித்தனர். இது தொடர்பாக அரசு வெளியிட்ட ஆணை களையும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.  மாநகர காவல் துறை ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரி கருத்துகளை பொறுமையுடன் கேட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மாவட்டத் தலைவர் வேழ வேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி, துணை செயலாளர் சுகுமார், அய்யனார் உள்ளிட்ட தோழர்கள் பலரும் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 29102015 இதழ்

அம்பேத்கர் முன் வைக்கும் ஆழமான சிந்தனைகள் – இந்தியாவை ‘தேசம்’ என்பது ஒரு மாயை

அம்பேத்கர் முன் வைக்கும் ஆழமான சிந்தனைகள் – இந்தியாவை ‘தேசம்’ என்பது ஒரு மாயை

ஜாதி-மொழி-தேசம் குறித்த அம்பேத்கரின் ஆழமான சிந்தனை களை எடுத்துக்காட்டுகிறது இக் கட்டுரை. அம்பேத்கர் என்றவுடன் அவரை தீண்டப்படாதவர்களின் தலைவர் என்றே சமூகம் பார்க்கிறது. அவரின் ஆழமான சமுதாய சிந்தனையும், அறிவும் புறந்தள்ளப்படுகிறது. ஜாதி யின் பெயரால் நாம் இழந்தது சுய மரியாதை, கல்வி, வேலை, இருப் பிடம், செல்வம் என்ற சமூக உண்மையை புரிய வைத்தவர் அம்பேத்கர். ஒரு பள்ளி சிறுவன், தனக்கு அம்பேத்கரை பிடிக்கும் என்கிறான். மற்றொருவன் தனக்கு அம்பேத்கரைப் பிடிக்காது என்கிறான். இந்த விருப்பு வெறுப்புக்கு காரணம் அவருடைய ஜாதியே. அரசியல்வாதிகள் அம்பேத் கரை ஒரு படமாக்குகிறார்களே தவிர, பாடமாக்கவில்லை. இதைப் பற்றி அம்பேத்கர், “இந்தியாவிலோ புனிதர்களையும், மகாத்மாக்களையும் வழிபடுகிறார்கள். வழிபடுவது மட்டுந்தான், அவர்கள் வழியில் நடப்பதில்லை என்ற போக்கு பொது மக்களிடம் இருப்பதால், அவர்களுடைய திட்டத்தால் பெரிய பலன் எதுவும் ஏற்படப் போவதில்லை” (அம்பேத்கர் நூல் தொகுப்பு-1, பக்.131) என்கிறார். தீண்டப்படாதவர்களின் தலைவர் என அக்காலத்தில் தான்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகளை நிறுத்து! கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகளை நிறுத்து! கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

மன்னார்குடியில்: 19.10.2015 திங்கட்கிழமை காலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அரசு அலுவலகங்களில் மதசார்புடைய வழிபாடுகள் மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களை தடுக்கக்கோரியும், அவற்றிக்கு எதிரான அரசு உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக் கோரியும், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு அலுவலகங்களில் எவ்வித மதவழிபாடுகளும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு காவல்துறை உள்பட அனைத்து அலுவலகங்களுக்கும் ஆணைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அரசு ஆணைகளை முறையாக நடைமுறை படுத்தப்படாமல் அவற்றிக்கு எதிரான செயல்பாடுகள் அலுவலகங்களில் மிகுந்துள்ளன. ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், கடவுள் படங்கள் சாமியார்களின் படங்கள் சிலைகள் வழிபாட்டுப் பொருள்கள் வைக்கப்பட்டு கோவில்களில் நடப்பதுபோல் சூடம்கொளுத்துதல், சாம்பிராணி புகைபோடுதல் தீபாராதனை போன்றவைகள் நடந்துவருகின்றன. இதன் ஒருபகுதியாக ஆயுதபூஜை நேரங்களில் மிகவும் ஆடம்பரமாக ஒலிபெருக்கிகளை வைத்து வாழைமரம் கட்டி, புரோகிதர்களை அழைத்துவந்து மந்திர உச்சாடனங்கள் செய்து அரசு...

தனியார் துறையில் இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் – டி. இராசா

தனியார் துறையில் இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் – டி. இராசா

தனியார் துறையில் இடஒதுக் கீட்டை வலியுறுத்தியும், இடஒதுக் கீட்டுக்கு எதிராக பார்ப்பனியம் கூக்குர லிடுவதைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.இராசா, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ டில்லி பதிப்பில் கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழ் வடிவம்: ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, இப்போது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக் கிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பட்டியல் இனப்பிரி வினருக்கான இடஒதுக்கீட்டில் கிரிமிலேயரை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இவர்களில் பலரின் விருப்பம். குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கேட்டுப் போராடுவதையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்தக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி யதையும் தொடர்ந்து இடஒதுக்கீடு தொடர்பாக கட்டுரைகள் ஏராளமாக குவிந்து கொண்டிருக் கின்றன. சமூகத்தின் ‘மேல்தட்டு அறிவாளி’ப் பிரிவினருக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு உறுத்திக் கொண்டே இருக்கிறது. சமூகநீதி என்ற கருத்தே அவர்களுக்கு கசப்புதான். இடஒதுக்கீட்டின் பயன்,...

‘அருந்ததினர்’ மீதான  தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது

‘அருந்ததினர்’ மீதான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள வெட்டல் நாயக்கன்பட்டியைச் சார்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் பாலமுருகன் என்பவருக்கும் ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்தைச் சார்ந்த நதியா என்பவருக்கும் காதல் திருமணத்தை தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சார்ந்த மாவட்ட செயலாளர் போஸ் (இவர் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர்) நடத்தி வைத்துள்ளார். இதற்காக விடுதலை சிறுத்தைகள், புரட்சிப் பாரதம், பறையர் பேரவை அமைப்பைச் சார்ந்தவர்கள், அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த போஸ் என்ற தோழரை கொடூரமாக கொலை வெறியோடு தாக்கியதாக செய்திகள் வந்துள்ளன. இதேபோன்று விழுப்புரம் கச்சிராப்பாளையம் அருகே உள்ள கரடி சித்தூரில் ஆதிதிராவிடர் பரிமளா என்பவரை (பறையர் சமூகம்) அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞன் வீரன் என்பவர் காதலித்து இருவரும் ஊரை விட்டே ஓட நேர்ந்தது. தொடர்ந்து அருந்ததியர் சமூகப் பெண்கள் நான்கு பேரை மந்தையில் நிறுத்தி மானபங்கப்படுத்தி, 19 வயது வெள்ளையம்மாள் என்பவரை படுகொலை செய்ததாகவும், 17 வயது நதியாவை மனநோய்க்கு உள்ளாக்கியதாகவும்...

காஞ்சி மாவட்டத்தில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

ஏன் இந்த முழக்கம்? எதற்காக இந்த பரப்புரை? நமது இளைய தலைமுறையின் கவனத்திற்க்கு சில சிந்தனைகளை முன் வைக்கிறோம். தமிழர்களாகிய நாம்,தாழ்த்தபட்ட ஜாதிகளாக, பிற்படுத்தபட்ட ஜாதிகளாக எப்போது ஆனோம்? நமது பாட்டன்,முப்பாட்டன், காலங்களில் நாம் எப்படி வாழ்ந்தோம். பார்பனருக்கும், பண்ணையார்களுக்கும் அடிமைகளாகக் கிடந்தார்கள் நமது முன்னோர்கள்.அவர்களுக்கு எழுத படிக்க தெரியாது.உழைப்பு ,அடிமை வேலை ,குல தொழில் – இவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்பது அன்று சமூதாயம் விதித்த காறாரான கட்டளை. ஜாதியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த இழிவுகளை எப்படி தகர்த்தோம். ஜாதியத்தை எதிர்த்த பெரியாரும்,அம்பேத்கரும் போராடிப் பெற்று தந்த கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான உரிமைகளை பெற்றதால் தகர்தோம். இந்த இடஒதுக்கீடுகளை அமல்படுத்துவதில் காமராசர் ஆட்சியில் தொடங்கி தமிழகத்தில் தொடர்ந்தது. அதிகாரத்துக்கு வந்த ‘திராவிட’ கட்சிகள் ஆர்வம் காட்டின. ‘ஜாதி’ யை காட்டி, ‘படிக்ககூடாத ஜாதி’;  ‘உழைக்க வேண்டிய ஜாதி’ என்றார்கள். அத்தகைய ஜாதி தடைகளை, அதே ஜாதி அடிப்படையில் கன்டறிந்து...

பல்லடத்தில் பெரியார் பிறந்தநாள் – ஊர்வலம், கொடியேற்று விழா !

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 137 வது பிறந்த நாள் விழா ஊர்வலம் கொடியேற்று விழா ! பல்லடத்தில் கொடியேற்றும் இடங்கள் : 1)தெற்குப்பாளையம் 2)மணி மண்டபம். 3)வடுகபாளையம் 4)அனுப்பட்டி 5)லட்சுமி மில். 6)செட்டிபாளையம் பிரிவு. 7)மாணிக்காபுரம் சாலை. 8)N.G.R..ரோடு. 9)காவல்நிலையம் எதிரில் 10)பேருந்து நிலையம். பல்லடத்தில் 25.10.2015 ஞாயிற்றுகிழமை அன்று காலை முதல் மாலை வரை திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137 வது பிறந்த நாள் விழா வாகன ஊர்வலம், கொடியேற்று விழாவாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊர்வலம் காலை 11 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகம் தோழர் கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் பல்லடம் தெற்குப்பாளையம் பகுதியில் துவங்கியது.கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் துவக்கவுரை நிகழ்தினார்.பல்லட நகர தலைவர் தோழர் கோவிந்தராஜ் அவர்கள் தெற்குப்பாளையம் பகுதியில் கொடியை ஏற்றிவைத்தார். பறை இசை முழக்கத்துடன் எழுச்சியுடன் ஊர்வலம்...

இனி என்ன செய்யப்போகிறோம்? – குறுந்தகடு வழக்கிலிருந்து விடுதலை

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இன அழிப்புப்போர் உச்சத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இங்கு தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அப்போதைய பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பல்வேறு வகையில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஈழத்தின் இன அழிப்பு குறித்து பெதிக வின் சார்பில் ”இனி என்ன செய்யப்போகிறோம்?” எனும் தலைப்பில் காணொலி குறுவட்டு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஈழத்தில் நடைபெறும் போர் குறித்து தமிழக மக்களுக்கு உண்மைகளை விளக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அப்போது அக்குறு வட்டுக்களை வைத்திருந்ததாக கூறி தற்போதைய திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீட்டு செயலாளர் தோழர் கோபி இராம.இளங்கோவன் அவர்கள் காப்புரிமைச்சட்டத்தின் கீழ் தமிழக அரசால் கைது செய்யப்பட்டு 2½ மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அந்த வழக்கில் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் அவர்களும் சேர்க்கப்பட்டார்.இந்த வழக்கு கோபி குற்றவியல் நீதி மன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 20.10.2015 அன்று...

மாற்றுக் கருத்தினரையும் மதித்த மாண்பாளர் பெரியார்

மாற்றுக் கருத்தினரையும் மதித்த மாண்பாளர் பெரியார்

1939இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட பெரியாருடன் ஒரே சிறையில் இருந்தவர் மறைமலை அடிகளாரின் மகன் மறை. திருநாவுக்கரசு. பெரியாரின் மனித நேய உணர்வுகளை வியந்து பாராட்டி, இவர் எழுதிய கட்டுரை 1991ஆம் ஆண்டு ‘இளந்தமிழன்’ ஏட்டில் வெளி வந்திருக்கிறது. கருத்து மாறுபாடுகளையும் கடந்த பெருந் தன்மையும், மனித நேயமும் தமிழினப் பார்வையில் உயர்ந்து நின்றதை பல்வேறு நிகழ்வுகளுடன் படம் பிடித்துக் காட்டுகிறது, இக்கட்டுரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) சிறை குற்றவாளிகளிடம் கனிவு சிறைச்சாலையில் இருக்கும் பொழுது, அங்கிருந்த ஏழைக் குற்றவாளிகள் இவருடைய மீசை தாடியை பார்த்து இவர் ஒரு துறவியார் (சாமியார்) என்று நினைத்துக் கொள்வார்கள். எனவே அவ்வப்பொழுது அவர்கள் வந்து இவர் கால்களில் விழுந்து கும்பிட்டு, ஐயா! பெரியவரே! சாமி! நாங்கள் ஏதோ பெரிய தீவினை (பாவம்) பண்ணிவிட்டு, சிறையிலே வந்து சேர்ந்திருக்கிறோம்; எங்களுக்கு மன்னிப்பு உண்டா? கடவுள் எங்களது தீவினையை (பாவத்தை) நீக்குவாரா? நீங்கள் எங்களுக்கொரு நல்ல...

ஜாதிகளை கடந்து மாற்றப்படும் உறுப்புகள்

ஜாதிகளை கடந்து மாற்றப்படும் உறுப்புகள்

தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு 30 உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை கள் மேற்கொள்வதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனை களுடன் ஆலோசித்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். மூளைச் சாவு : தமிழ்நாட்டில், ‘மூளைச் சாவு அடைந்தோர் உடலுறுப்பு கொடைத் திட்டம்’ 2008, அக்டோபரில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கிய பின் உடலுறுப்புகள் கொடை பெற்று பிற நோயாளிகளுக்குப் பொருத்தப் படுகின்றன. மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல், இருதய வால்வுகள், கண்கள், தோல், இரத்தக் குழாய்கள் ஆகிய 10 உறுப்புகளை கொடையாகப் பெற முடியும். தமிழகத்தில் இதுவரை மூளைச்சாவு அடைந்த 676 பேர் தங்கள் உடலுறுப்புகளை கொடை அளித் துள்ளனர். தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு மூளைச் சாவு அடைந்த 15 முதல் 20 பேரின் உடலுறுப்புகளை அவர்களது உறவினர்கள் கொடையளிக்கின்றனர். ஆனால், மூளைச் சாவு...

செயற்கைக் கருத்தரிப்பிலும் ஜாதி வெறி

செயற்கைக் கருத்தரிப்பிலும் ஜாதி வெறி

பண்டைய பீகார், கல்வியில் மிகவும் சிறந்து விளங்கியது. அங்கேதான் ‘நாளந்தா’, ‘விக்கிரமசீலா’ போன்ற பௌத்தப் பல்கலைக் கழகங்கள் இருந்தன. ஆனால் இன்று, கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது. வேலை கிடைக்காமல் பிழைப்பு தேடி, மாநிலம் விட்டு மாநிலம் அலையும் பீகாரிகளை எல்லா இரயில் நிலையங்களிலும் காண முடிகிறது. பீகாரிகளின் வாழ்க்கை அவலத்தை, சாதியக் கொடுமைகளைக் காண முடிகிறது. பௌத்த சமயம் வேர் ஊன்றிய பீகாரில் ஏன் இன்னும் சாதிப் பிரச்சினை அப்படியே இருக்கிறது? காரணம், நிலப்பிரபுத்துவம் அப்படியே இருக்கிறது. விவசாயக் கிராமங்களில் இன்றும் உயர்சாதியினரே தலைவர்களாக இருக்கிறார்கள். சாதிய ஒடுக்குமுறை வெளிப்படையாகவே நடைபெறுகிறது. பாட்னாவில் உள்ள விந்து வங்கிகளில் சாதிவாரியாக விந்து சேகரித்து வைக்கப்பட்டள்ளது. ‘செயற்கைக் கருத்தரிப்பில்கூட சாதிக் கலப்பு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்’ என்கிறார் மருத்துவர் சின்ஹா. இதை உறுதிப்படத்துவதுபோல ஒரு சம்பவம் கயா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. செயற்கைக் கருத்தரிப்பு செய்து, கர்ப்பம் தரித்த மாலா என்கிற...