தலையங்கம் ஈழப் பிரச்சினையில் அமெரிக்காவின் துரோகம்
சிறீலங்காவில் இரண்டு பெரும் சிங்களர்களின் கட்சிகளான அய்க்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசு என்ற பெயரில் சிங்களப் பேரினவாத ஆட்சியை அமைத்து விட்டன. தமிழர்களின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர் பிரதேசத்தில் 16 இடங்களில் தேர்வு பெற்று நாடாளுமன்றம் சென்றாலும் தமிழரின் முக்கியத்துவம் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டு விட்டது. சிங்கள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து ‘போர்க் குற்றங்கள்’ தொடர்பாக இலங்கைக்கு எதிரான தனது நிலைப் பாட்டை அமெரிக்கா மாற்றிக் கொண்டு விட்டது. இலங்கை அரசின் ‘ஒப்புதல் கலந்தாலோசனை’யுடன் இலங்கை அரசே நடத்தும் உள் நாட்டு விசாரணையை மட்டுமே அய்.நா.வில் தீர்மானமாகக் கொண்டு வரப் போவதாக அமெரிக்காவின் தெற்காசிய நாடுகளுக்கான அதிகாரி நிஷா பி°வால் கூறியிருக்கிறார். (இவர் பிறப்பால் குஜராத்தி பனியா – அமெரிக்காவில் குடியேறியவர்) நடந்து முடிந்த இலங்கை தேர்தலில் எதிரும் புதிருமான சிங்களர் கட்சிகள் கைகோர்த்து ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இந்த அறிவிப்பையும் இணைத்துப்...
