வினா-விடை!

ஏழுமலையானுக்கு விசாகப்பட்டினத்தைச் சார்ந்த பக்தர், ரூ.30 இலட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ எடையுள்ள பாத கவசம் (செருப்பு) வழங்கினார்.   – செய்தி

ஏழுமலையான் எந்தக் காலத்திலும் எழுந்து நடக்கவே போவதில்லை என்பதில் பக்தருக்கு அவ்வளவு உறுதியான நம்பிக்கை போலும்! அதனால்தான் ஒரு கிலோ எடையில் செருப்பு.

1967இல் தி.மு.க.விடம் ஆட்சியை பறிகொடுத்த போது 41.10சதவீதமாக இருந்த காங்கிரசின் வாக்கு வங்கி 2014 மக்களவைத் தேர்தலில் 4.3 சதவீதமாக சரிந்தது.     – ‘தினமணி’ செய்தி

திவாலாகும் வங்கியைக் காப்பாற்ற முடியாது; இதுக் கெல்லாம் ரிசர்வ் வங்கியும் உதவி செய்யாது!

அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டுமே தவிர அன்னியநாடுகள் அல்ல.  – ஆர்.எஸ்.எஸ். தலைவர்

ஆமாம்! ‘அன்னிய முதலீடு’ பற்றி வெளிநாட்டுக் காரர்களுக்கு முடிவெடுக்க உரிமை கிடையாது; நாங்களே அந்த முடிவை தேசபக்தியோடு எடுப்போம்!

தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்த உள்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.  – ஜி.கே. வாசன்

அருமையான யோசனை! இந்தத் தேர்தலில் காங்கிர° கட்சியே மகத்தான வெற்றிகளை குவிக்கும்! இது உறுதி!

கடந்த முறை திருமலைக்கு வந்தபோது நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என்று வேண்டினேன். அதை ஏழுமலையான் நிறை வேற்றி வைத்துள்ளார். – திருப்பதியில் வெங்கய்யா நாயுடு பேட்டி

இந்த ‘வேண்டுதலை’யை 10 வருடத்துக்கு முன்பே வைச்சிருக்கலாம்ல! இப்படித்தான் நீங்க எல்லாத்துலேயும் ‘லேட்’!

வீட்டில் உட்கார்ந்துக் கொண்டே வெவ்வேறு ஓட்டல்களில் தனித்தனியாக உணவுப் பண்டங் களை ‘இணையம்’ வழியாக வாங்கும் காலம் விரைவில் வரும். – ‘தமிழ் இந்து’ செய்தி

இதுல, என்ன பெரிசா வந்துடப் போவுது? அதற்கான செலவுத் தொகையும் இணையத் திலேயே ‘ஆர்டர்’ செஞ்சா, வருமான்னு சொல்லுங்க! ஆந்திரப் பகுதியைச் சார்ந்த அரசு ஊழியர்களை புதிதாக உருவாகியுள்ள தெலுங்கானா அலுவல கங்களில் பணிபுரிய அனுமதிக்க முடியாது.  – தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

ஓ… இதற்குப் பெயர்தான் மொழி வழி ‘தேசப் – பிரிவினை’ என்பதோ!

சுவிஸ் நாட்டு வங்கியில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள பணம், இந்தியாவின் வெளிநாட்டுக் கடனைவிட 13 மடங்கு அதிகம். – செய்தி

எனவே, கடன் கொடுத்த வெளிநாடுகள், இந்தி யாவை மிரட்ட வேண்டாம் என்று எச்சரிக் கிறோம்.

பெரியார் இயக்கங்களுக்கு பெரியார் திடல் கதவு திறந்தே இருக்கிறது; ஆனால் கொள்கையில் சமரசம் செய்ய மாட்டோம். – மறைந்த பெரியார் சாக்ரடீஸ் படத்திறப்பில் கி.வீரமணி

அதாவது, தங்கள் கழகத்தைத் தவிர ஏனைய பெரியார் இயக்கத்தினர் எல்லோரும் ‘துரோகிகள்’ என்ற ‘கொள்கையில்’ உறுதியா இருப்போம்னு சொல்ல வர்றீங்க… புரியுது!

‘ஏழுமலை’யானின் 20 லட்சம் கோடி சொத்துக்கள் சீமாந்திராவுக்கே சொந்தம்; தெலுங்கானாவுக்கு அல்ல. – சீமாந்திரா அரசு உத்தரவு

‘ஏழுமலையான்’ கனவுல வந்து அப்படி சொன் னாருன்னு உத்தரவுல சேத்துக்கங்க; வழக்கு உச்சநீதிமன்றம் போனாலும் ஜெயிச்சுடலாம்!

பாதுகாப்புத் துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்க மோடி அரசு முடிவு. – செய்தி

சரியான முடிவு! அன்னிய நாட்டு ஊடுருவல் மற்றும் தாக்குதலிலிருந்து நாட்டைப் பாதுகாக்க அன்னிய நாட்டைத் தான் பயன்படுத்த வேண்டும்! அதுதான் ‘பாரத மாதாவுக்கு’ வெற்றி!

பெரியார் முழக்கம் 05062014 இதழ்

You may also like...