ஈரோட்டில் ஆவணப் படம் வெளியீட்டு விழா : “இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது”

“இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது” என்ற தமிழ்ப் படுத்தப்பட்ட ஆவணப்படத்தின் வெளியீட்டுவிழா, ஈரோடு சூரம்பட்டி 4 ரோட்டில் உள்ள ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக மாடியில் உள்ள கூட்ட அரங்கில் 11.5.2014 ஞாயிறு மாலை 6 மணிக்கு நடைபெற்றது. ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி ஆவணப்படத்தை வெளியிட, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர்மணி பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். கி.வேபொன்னை யன் தலைமை வகித்தார். இலங்கைக்குச் சென்று ஆவணப் படத்தை எடுத்த 23 வயதே ஆன இளம் ஊடகவியலாளர் மகா. தமிழ்ப் பிரபாகரனுக்கு தோழர் கண.குறிஞ்சி சிறப்பு செய்தார்,

மகா. தமிழ்ப் பிரபாகரன் ஏற்புரை வழங்கினார்.

You may also like...