Category: பெரியார் முழக்கம்

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு விடுதலை இராசேந்திரன்

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு விடுதலை இராசேந்திரன்

“இந்துத்துவ அம்பேத்கர்” என்ற பெயரில் தமிழக பா.ஜ.க.வின் தலைவர்கள் அண்மையில் வெளியிட்ட நூலில் முன் வைக்கப்பட்ட கருத்துகளை மறுத்து ‘மக்கள் விடுதலை’ மாத இதழுக்காக எழுதி வெளிவந்துள்ள கட்டுரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) இந்தியாவின் – அங்கீகரிக்கப்பட்ட மொழி களில் ஒன்று சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தையும்  இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கலாம் என்று கூறியதற்காக அம்பேத்கரை ‘இந்துத்துவவாதி’ பட்டியலில் சேர்க்கிறார்கள். இந்தியாவின் தேசிய மொழியாக ‘சமஸ்கிருதம்’ மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் ‘இந்துத்துவா’ கொள்கை.  ஆர்.எஸ்.எஸ்சுக்கு தத்துவார்த்த நூலான ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ (க்ஷரnஉh டிக கூhடிரபாவள) நூலில் இதை கோல்வாக்கரே எழுதியிருக் கிறார். அம்பேத்கர் – இந்தியாவின் அங்கீகரிக்கப் பட்ட பல்வேறு மொழிகளில் சமஸ்கிருதமும் இருக்க லாம் என்றார். இரண்டுக்கும் மலையளவு வேறு பாடுகள் உண்டு; இந்த உண்மையை மறைக்கிறார்கள். சமஸ்கிருதம் எல்லோருக்கும் பொதுவான மொழியாக இருந்ததாம். அது மக்கள் மொழியாம்; இந்த நூலில்  எழுதியிருக்கிறார்கள். அப்படி இருந் திருக்குமானால்...

இந்துத்துவவாதிகளுக்கு அம்பேத்கரின் கேள்விகள்!

இந்துத்துவவாதிகளுக்கு அம்பேத்கரின் கேள்விகள்!

தலித் மக்களை இந்து மதத்துக்குள்ளும், ‘இந்துத்துவா’ எனும் கோட்பாடுக் குள்ளும் அடக்க முயலும் சங்பரிவாரங்களின் வாதங்களை உடைத்து நொறுக்கு கிறார், டாக்டர் அம்பேத்கர்! டாக்டர் அம்பேத்கர் முன் வைக்கும் கேள்விகள் என்ன? இந்துஸ்தானத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் ‘இந்து’ தான் என்று வாதிட்டால், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகளும் இந்துக்களா? ‘இந்து’ என்ற சொல் மதத்தைக் குறிப்பிடுவதாக இருந்தால், அதில் இரண்டு பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டும். ஒன்று இந்து மதம் வலியுறுத்தும் விதிகளான சூத்திரங்கள். இந்த சூத்திரங்களைக் கூறும் சாஸ்திரங்கள், இவைகள் ஜாதியையும் தீண்டாமையையும் வலியுறுத்துவதால், தீண்டப்படாத மக்கள் ஏற்க முடியாது; மற்றொன்று – வழிபாட்டு முறைகளைப் பற்றியது. ஏனைய இந்துக்களைப் போலவே – தீண்டப்படாத மக்களும் ராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணு போன்ற கடவுள்களை வணங்கும்போது, அவர்களும் இந்துக்களாகி விடுகிறார்களே என்று வாதிடப்படுகிறது. இரு பிரிவினரின் வழிபாட்டு முறை ஒன்றாக இருப்பதாலேயே இருபிரிவினரின் மதமும் ஒரே மதம் – பொது மதம்...

‘தமிழ் இந்து’ அம்பலப்படுத்துகிறது தளி. இராமச்சந்திரன் குற்றப் பின்னணி

‘தமிழ் இந்து’ அம்பலப்படுத்துகிறது தளி. இராமச்சந்திரன் குற்றப் பின்னணி

தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்தி யுள்ள வேட்பாளர் தளி. இராமச்சந்திரன் குற்றப் பின்னணியை சுட்டிக்காட்டி அவரை மாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அந்த வேட்பாளரின் குற்றப் பின்னணியையும், கம்யூனிஸ்ட்  கட்சி அவரை வேட் பாளராக்கியதையும் விமர்சித்து, ‘தமிழ் இந்து’ நாளேட்டில் (எப்.25) சம்ஸ் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி: தருமபுரி, தளி தொகுதியில் மநகூ சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் ராமச்சந்திரன். வரகானப்பள்ளி மலைக் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்றைக்குத் தமிழகத்தின் செல்வந்தர். சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர். நம்முடைய அரசியல், அதிகார, ஊடக மையங்களின் பார்வையிலிருந்து வெகுவாக விலகியிருக்கும் தமிழக-கர்நாடக எல்லையோரப் பகுதி இவருடைய தொகுதி. மலையோரக் கிராமங்கள் சூழ்ந்த தளி தொகுதியில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிக் கொண்டிருப்பவர் ராமச்சந்திரன். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் ராமச்சந்திரனைப்...

அம்பேத்கர் பிறந்த நாளில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

அம்பேத்கர் பிறந்த நாளில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

தமிழகத்தில் கழகத்தினர் பல்வேறு ஊர்களில் அம்பேத்கர் பிறந்த நாளில் சிலைகளுக்கு மாலை அணிவித்து ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்றனர் . களத்தூரில் : 14-4-2016 அன்று வேலூர் மாவட்டம் களத்தூரில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா களத்தூர் கிளை, மக்கள் மன்றத்தால் எழுச்சி யோடு நடத்தப்பட்டது. ஜாதி ஒழிப்புப் போரில் உயிர்நீத்த தியாகிகளின் வீரவணக்கப் பாடலுடன் தொடங்கியது. தொடர்ந்து, மக்கள் மன்றத் தோழர்களின் பறைமுழக்கமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கலைநிகழ்ச்சிகளின் நடுவே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சி மாவட்ட செயலாளர் பரந்தாமன், காஞ்சி வழக்கறிஞர் அப்துல் ஹக்கீம், இயக்குநர் களஞ்சியம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர். காஞ்சி மக்கள் மன்றத்தின் சார்பாக மகேஷ் நன்றி கூறினார். களத்தூர் மக்கள் தொடர்ச்சியாக மணல் கொள்ளைக்கு எதிராக, பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே துணிச்சலோடு போராடிவருபவர்கள் ஆவார்கள். மன்னையில் : திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் விடுதலைக்கழகத்தின்...

பவானியில் எழுச்சியுடன் நடந்த ‘பெரியாரியல் பயிலரங்கம்’

பவானியில் எழுச்சியுடன் நடந்த ‘பெரியாரியல் பயிலரங்கம்’

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் 2 நாள் பயிலரங்கம் பவானியில் தோப்பு துரைசாமி தோட்டத்தில் நடை பெற்றது. 17.04.2016 (ஞாயிறு) மற்றும் 18.04.2016 (திங்கள்) – காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பயிலரங்கில் பல்வேறு தலைப்பு களில் தோழர்கள் வகுப்புகளை எடுத்தனர். முதல் நாள் நிகழ்வு 17.04.2016 அன்று காலை துவங்கியது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். காலையில் “பெரியாரியல் ஓர் அறிமுகம்” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மதியம் “இந்துத்துவா” எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வகுப்பெடுத்தனர். இரண்டாம் நாள் நிகழ்வு 18.04.2016 அன்று காலை துவங்கியது. அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி  தலைமை தாங்கினார். சாமிநாதன் நிகழ்வை ஒருங் கிணைத்தார். மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, “போக்குவரத்து விதிமுறைகள்” எனும்...

உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று தமிழக அரசு நடைபாதை கோயில்களை அகற்றுமா?

உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று தமிழக அரசு நடைபாதை கோயில்களை அகற்றுமா?

கோயில்களைக் கட்டி காசு வசூல் செய்யும் நபர்கள் எப்போதும் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும்தான் கட்டுகிறார்கள் என்பது ஊரறிந்த இரகசியம். சாலைகளில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணம் சாலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் கட்டடங்களேயாகும். ஆகவே, சாலைகளில் திடீரென்று ஆங்காங்கே முளைத்துள்ள கோவில்களை இடிக்க வேண்டும் என்று கூறி குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோத கோயில்களை இடிக்க உத்தரவிட்டனர். கோயில்களை இடித்தால் பக்தர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்று கூறி கோயில்களை இடிக்கும் உத்தரவை இரத்து செய்யுமாறு அகமதாபாத் நீதிமன்றத்தில் இந்து அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவர்களின் மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்ற நீதிபதிகள் கோயில்களை இடிக்கும் உத்தரவை இரத்து செய்தனர். அந்த இரத்து உத்தரவை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள பல்வேறு அமைப்புகள்...

கள்ளழகரின் கதை

கள்ளழகரின் கதை

மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை திருவிழா குறித்து ஏடுகள் வெளியிடும் செய்திகள், கடவுள் நம்பிக்கை மோசடிகளுக்கு ஒரு சிறந்த உதாரணம். இந்தத் திருவிழாவுக்காக மட்டுமே வைகை ஆற்றில் தண்ணீர் 2 நாள் மட்டும் திறந்து விடப்படு கிறது. அதிகாலையில் கள்ளழகர் ‘திருமஞ்சனம்’, அதாவது திருமணம் செய்து கொள்கிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்த கூத்து.  அழகர் தங்கப் பல்லக்கில் வந்தார்; பிறகு தங்கக் குதிரைக்கு தாவினார்; தனது பக்தை ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை சூடிக் கொண்டார்; பிறகு பச்சைப் பட்டாடை உடுத்திக் கொண்டார்; அதன் பிறகு ஆற்றில் இறங்கினார் – இப்படி ஏடுகள் செய்தி வெளியிடுகின்றன. பக்தர்கள் எல்லாவற்றையும் நேரில் பார்த்துக் கொண்டுதான் இருக் கிறார்கள். உண்மையிலேயே அழகர் தானாக பல்லக்கில் அமர்ந்தாரா? தானாக குதிரைக்குத் தாவினாரா? தானாக பச்சை பட்டாடை உடுத்திக் கொண்டாரா? அனைத்தையும் செய்வது அர்ச்சகப் பார்ப்பனர்கள்தான்! ஆனாலும் இப்படி ஒரு கற்பனையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். அழகர் ஆற்றில்...

நேரு பல்கலைக் கழகத்தில்  தீட்டு கழிக்கும் சடங்காம்!

நேரு பல்கலைக் கழகத்தில் தீட்டு கழிக்கும் சடங்காம்!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் பெண்களும் தடையின்றி நுழைய முடிந்தது. தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் சங்கத் தலைவர் கன்யாகுமார் சிறையிலிருந்து பிணையில் விடுதலை பெற்று திரும்பியபோது நிகழ்த்திய உரையிலும் இதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார். இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம், சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது. இப்பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் மாணவிகளுக்கு 5 புள்ளிகள் மதிப்பெண்ணும், பிற்படுத்தப்பட்டோருக்கு 10 புள்ளிகள் மதிப்பெண்ணும் சலுகைகளாக வழங்கப்பட்டு வந்ததை பல்கலைக் கழக நிர்வாகம் திடீரென இரத்து செய்துவிட்டது. இதற்கிடையே கன்யாகுமாரும், மாணவர்களும் ‘தேச விரோத’ செயலில் ஈடுபட்டார்கள் என்றும், அதனால் பல்கலைக்கழகம் தீட்டாகிவிட்டது என்றும் ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள்,  பார்ப்பன புரோகிதர்களை வைத்து தீட்டு கழிக்கும் சடங்குகளை ‘ராம நவமி’ அன்று நடத்தியுள்ளனர்.   பெரியார் முழக்கம் 21042016 இதழ்

தமிழ் மொழியில் ஊடுருவி நிற்கும் ஆண் ஆதிக்கம்

தமிழ் மொழியில் ஊடுருவி நிற்கும் ஆண் ஆதிக்கம்

தமிழ் இலக்கியங்கள் மீது பெரியார் வைத்த விமர்சனங்களுக்கான காரணங் களில் ஒன்று அதில் அடங்கியுள்ள ஆணாதிக்க கருத்துகள் தான், பெண் களுக்கு ‘விதவை’ என்ற சொல் லிருக்கும் போது ஆண்களுக்கு ‘விதவன்’ என்ற சொல் ஏன் இல்லை என்று கேட்டார் பெரியார். தமிழ் மொழி சொற்கள் பயன்பாட்டில் ஆண் ஆதிக்கத்தை சுட்டிக் காட்டுகிறது இந்தக் கட்டுரை. ‘கவிஞன் என்பவன்’, ‘எழுத்தாளன் என்பவன்’, ‘நடிகன் என்பவன்’, ‘உழைப்பாளி என்பவன்’, ‘புரட்சி யாளன் என்பவன்’ என்றெல்லாம் தொடங்கும் ஏராளமான வாக்கியங் களை நமது அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் தினசரி நாம் எதிர்கொண்டுவருகிறோம். இந்த வாக்கியங்களை ஒரு பெண் படிக்கும் போது அவருக்கு என்ன தோன்றும்? ‘ஓஹோ, கவிதை, எழுத்து, நடிப்பு, உழைப்பு, புரட்சி என்று அனைத்தும் ஆண்களால்தான் செய்யப்படு கின்றனவோ?’ என்ற கேள்விதானே எழும். இதெல்லாம் பரவாயில்லை. இந்த வாக்கியங்களைவிட அதிகமாக நாம் தினசரி எதிர்கொள்வது, ‘மனிதன் என்பவன்’, ‘மனிதன் இருக்கின்றானே’ ரீதியிலான...

துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஜாதி ஆணவப் படுகொலை: உயர்நீதிமன்றத்தின் அதிரடி ஆணைகள்

துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஜாதி ஆணவப் படுகொலை: உயர்நீதிமன்றத்தின் அதிரடி ஆணைகள்

ஜாதி ஆணவப் படுகொலைகளில் சமூகத்தில் நிலவும் ஜாதிவெறிக்கு அரசு நிர்வாகமும் காவல்துறையும் துணை போவதை திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உடுமலையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்ததற்காக சங்கர் என்ற தலித் பொறியாளரை ஜாதி வெறியர்கள் படுகொலை செய்தனர். முன்கூட்டியே காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டும்கூட காவல்துறை அலட்சியம் காட்டியது. எனவே ‘ஆதித்தன்’ வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படை யில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒரு வழக்கைத் தொடர்ந்தார். இது குறித்து மேலும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களைத் திரட்டி விரிவான மனுவை தேர்தல் முடிந்த பிறகு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கேட்டதற்கு இணங்க மனு திரும்பப் பெறப்பட்டது. இப்போது கழக சார்பில் முன் வைத்த கோரிக்கைகளை வேறு ஒரு ஜாதி ஆணவப் படுகொலை வழக்கில்...

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு விடுதலை இராசேந்திரன்

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு விடுதலை இராசேந்திரன்

“இந்துத்துவ அம்பேத்கர்” என்ற பெயரில் தமிழக பா.ஜ.க.வின் தலைவர்கள் அண்மையில் வெளியிட்ட நூலில் முன் வைக்கப்பட்ட கருத்துகளை மறுத்து ‘மக்கள் விடுதலை’ மாத இதழுக்காக எழுதி வெளிவந்துள்ள கட்டுரை. அம்பேத்கர் – இந்துத்துவக் கொள்கையின் தீவிர ஆதரவாளர் என்று நிலைநிறுத்த சங்பரிவாரங்கள் துடிக்கின்றன. இதற்காக வரலாறுகள் திரிக்கப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் வழிபடக் கூடிய தலைவர்களில் ஒருவராக அம்பேத்கரையும் இணைத்துக்  கொண்டிருப் பதாக கூறுகிறார்கள். இன்னும் சில காலம் கழித்து காந்தியையும் ஆர்.எஸ்.எஸ். வழிபாட்டுத் தலைவர் பட்டியலில் இடம் பெற்றாலும் வியப்பதற்கு இல்லை. அருண்ஷோரி என்ற ஒருவர் வாஜ்பாய் அமைச்சரவை யில் இருந்தார். அரசு பொதுத் துறை பங்குகளை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதற்காகவே நியமிக்கப்பட்ட அமைச்சர். அவர், ‘அம்பேத்கர் – பிரிட்டிஷ் ஆதரவாளர், பிரிட்டிஷ் உளவாளி’ என்று ஒரு ‘ஆராய்ச்சி’ நூலையே எழுதினார். பா.ஜ.க. – சங்பரிவாரங்கள் –  அந்த நூலைத் தலையில் தூக்கி வைத்து ஆடின. இப்போது தமிழக பா.ஜ.க., அம்பேத்கருக்கு சொந்தம்...

இந்திய அரசே! உச்சநீதிமன்றமே! நுழைவுத் தேர்வை திணிக்காதே! மாநிலங்களின் கல்வி உரிமையில் தலையிடாதே!

இந்திய அரசே! உச்சநீதிமன்றமே! நுழைவுத் தேர்வை திணிக்காதே! மாநிலங்களின் கல்வி உரிமையில் தலையிடாதே!

கல்வி அந்தந்த மாநிலங்களுக்கான பிரச்சினை; இதில் அவ்வப்போது மத்திய அரசு தலையிடுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? 1976ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில் அன்றைய காங்கிரஸ் ஆட்சி கல்வியின் மாநில உரிமையில் மத்திய அரசு தலையிடலாம் என்று பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டதுதான். அதன் காரணமாக தமிழ்நாட்டில் இனி மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர வேண்டுமானால் ‘பிளஸ் டூ’ மதிப்பெண் மட்டும் போதாது; அகில இந்திய நுழைவுத் தேர்வு ஒன்றை எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று இந்திய அரசு கூறுகிறது. இதை உச்சநீதிமன்றமும் வலியுறுத்திவிட்டது. நுழைவுத் தேர்வு கிராமத்திலிருந்து படிக்க வரும் மாணவ மாணவிகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பெரும் தடை என்பதால் தமிழ்நாட்டில் நீக்கப்பட்டது. இப்போது அந்த சுமை மேலும் ஏற்றப்பட்டுவிட்டது. மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு கல்வி அமைப்பு முறைகள் இருக்கும் போது அனைத்து மாநிலங் களுக்கும் ஒரே மாதிரியான அகில இந்திய தேர்வு முறையை நுழைப்பது...

மோடி ஆட்சி அய்.நா.வில் அம்பேத்கர் விழா எடுத்தது ஏன்?

மோடி ஆட்சி அய்.நா.வில் அம்பேத்கர் விழா எடுத்தது ஏன்?

நியூயார்க்கில் அய்.நா.வின் தலைமையகத்தில் ஏப்.13 ஆம் ஆண்டு புரட்சியாளர் அம்பேத்கர் 125ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அய்.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதரகம், இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தது. “ஏற்றத்தாழ்வு களுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையில் முன்னெடுப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து அம்பேத்கரின் பிறந்த நாளுக்கான கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமரும் அய்.நா.வின் வளர்ச்சித்திட்ட அதிகாரி யுமான ஹெலன் கிளார்க், கருத்தரங்கில், ‘அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உலகளாவிய அடையாளம்’ என்று பேசியிருப்பது அம்பேத்கரின் சமூக விடுதலை இலட்சியத்துக்கு சூட்டப்பட்ட மணிமகுடமாகும். ஹெலன், அய்.நா.வின் அடுத்த பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உலகளாவிய அடையாளமாக அம்பேத்கர் உயர்ந்து நின்றாலும், அவர் வாழ்ந்து உழைத்துப் போராடிய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை எப்படி இருக்கிறது? என்ற கேள்வியை கவலையுடன் எழுப்ப வேண்டியிருக்கிறது.  2030ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுதும் ஏழ்மை,...

நடைபாதை கோயில்கள் கடவுளை அவமதிப்பதாகும்: உச்சநீதிமன்றம் கண்டனம்

நடைபாதை கோயில்கள் கடவுளை அவமதிப்பதாகும்: உச்சநீதிமன்றம் கண்டனம்

“நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக கோயில்களை கட்டுவது, கடவுளையே அவமதிப்பதாகும். பொது மக்கள் பாதையை முடக்குவதற்கு கடவுள் ஒரு போதும் விரும்ப மாட்டார்” என்று உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா கூறியுள்ளார். 2006ஆம் ஆண்டு நடைபாதைக் கோயில்களை அகற்றக் கோரும் பொது நலன் வழக்கில் மாநில அரசுகள் உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ‘சம்மன்’ அனுப்ப உச்சநீதிமன்றம் முடிவு செய்தபோது, மாநில அரசு வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய நிலையில் உச்சநீதி மன்றம் ‘சம்மன்’ அனுப்புவதை தவிர்த்தது. அதே 2006ஆம் ஆண்டில் குஜராத் உயர்நீதிமன்றம், அம்மாநிலத்தில் கட்டப்பட்ட அனைத்து சட்டவிரோத நடை பாதை கோயில்களையும் இடித்துத் தள்ள மாநகராட்சிகளுக்கு உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மத்திய பா.ஜ.க. ஆட்சி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் மீண்டும் கடுமையான கருத்துகளை முன் வைத்துள்ளது. இரண்டு வாரத்துக்குள் நடைபாதை...

இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு; இதர தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள்

இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு; இதர தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், இதர தொகுதிகளில் தி.மு.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களையும் ஆதரிக்க திராவிடர் விடுதலைக் கழகம் முடிவு செய்துள்ளது. 19.4.2016 அன்று திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி தோட்டத்தில் கழக தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் கூடியது. தலைமைக் குழுவின் விரிவான பரிசீலனைக்குப் பிறகு கீழ்க்கண்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தேர்தல் களத்தில் இதுவரை கண்டிராத அளவில் குழப்பங்களும் முரண்பாடுகளும் மேலோங்கியிருக்கின்றன. ஆட்சி அதிகாரத்திற்காக பல்வேறு கட்சிகள் தனித் தனியாக களத்துக்கு வந்துள்ளன. கொள்கைப் பார்வையோடு எந்த ஒரு அணியையும் முழுமையாக அடையாளம் காண முடியாத அரசியல் சூழலில் திராவிடர் விடுதலைக் கழகம் இரு கண்ணோட்டங்களில் இந்தத் தேர்தலை அணுகிட முடிவு...

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு (1)

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு (1)

புரட்சியாளர் அம்பேத்கரை ‘இந்துத்துவா’ ஆதரவாளராக சித்தரிக்கும் நூல் ஒன்று இந்துத்துவ அம்பேத்கர் என்ற பெயரில் வெளி வந்திருக்கிறது. நூலாசிரியர் ம.வெங்கடேசன். தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வெளியிட்ட இந்த நூலில் அடங்கியுள்ள வரலாற்றுப் புரட்டுகளுக்கு இது ஒரு மறுப்பு. பவுத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் ஆகியோரை அம்பேத்கரே ‘இந்து’ மதத்துக்குள் உள்ளடக்கியிருக்கிறார். அனைவரையும் இந்துக்களாக அடையாளப்படுத்திய அம்பேத்கர், எப்படி ‘இந்து’ எதிர்ப்பாளராக இருப்பார்? – இப்படி ஒரு வாதம். நமது பதில் : ‘இந்து’ என்ற பெயரைத் தந்து அவர்களுக்கான மத சட்டங்களை உருவாக்கியதே பிரிட்டிஷ்காரர்கள் தான். அம்பேத்கர் அல்ல. சற்று வரலாற்றைப் பார்ப்போமா? கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்குப் பிறகு இந்தியாவிலுள்ள மக்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் என்றே பிரிக்கப் பட்டனர். இந்தியாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பொதுவான சட்டங் களை இங்கிலாந்திலுள்ளதைப் போல் உருவாக்க பிரிட்டிஷார் நினைத்தனர். முஸ்லிம் அல்லாத அனைவரையும் ‘இந்து’க்கள் என்றாக்கி, அவர்களுக்கான சட்டங்களை உருவாக்க முயன்ற போது அதற்கான அடிப்படை...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (17) மாநிலப் பிரிவினையில் நேருவின் சதி! வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (17) மாநிலப் பிரிவினையில் நேருவின் சதி! வாலாசா வல்லவன்

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. புதிய ஆந்திர மாநிலம் உருவாக்க நீதிபதி வாஞ்சு தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. இது குறித்து ‘விடுதலை’ ஏட்டில வந்த செய்திகள்: பிரகாசம் – வாஞ்சு சந்திப்பு 100 நிமிடம் பேச்சு: பல்வேறு தரப்பினரும் நீதிபதி வாஞ்சுவிடம் தம் கோரிக்கைகளை முன் வைத்தனர். தோழர் டி. பிரகாசம் நேற்று நீதிபதி வாஞ்சுவைக் கண்டு சுமார் 100 நிமிட நேரம் ஆந்திரப் பிரிவினைப் பிரச்சனைகளைக் குறித்துத் தமது கோரிக்கைகளை வெளியிட்டதாகவும் சென்னையில் இரு இராஜ்ஜியங்களின் தலைநகரங்களும் இருக்க வேண்டு மென்று வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. (விடுதலை 11.01.1953) கம்யூனிஸ்டுகள் சந்திப்பு: ஆந்திரக் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்குழுவினர்களாகிய தோழர்கள் டி. நாகி ரெட்டி, சி. ராஜேஸ்வரராவ், பி. வெங்கடேசுவரலு, ஓய். ஈஸ்வராரெட்டி, ஓய்.வி. கிருஷ்ணாராவ் ஆகியவர்கள்  நீதிபதி வாஞ்சுவை நேற்று பிற்பகல் கண்டு ஒரு மணி நேரம் வரை விவாதித்தனர். பொது...

ஏப். 14 புரட்சியாளர் பிறந்த நாள் ஜாதிகளின் பட்டியல்களே இந்து மதம் அம்பேத்கர்

ஏப். 14 புரட்சியாளர் பிறந்த நாள் ஜாதிகளின் பட்டியல்களே இந்து மதம் அம்பேத்கர்

இந்து பார்ப்பனிய மதத்தை எதிர்த்தவர் அம்பேத்கர். “இந்துவாக பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாக மாட்டேன்” என்று அறிவித்த அவரை ‘இந்துத்துவ’ ஆதரவாளராக சித்தரிக்க சங் பரிவாரங்கள் முயற்சிக்கின்றன. ‘இந்து’ மதம் ஒரு மதமல்ல; அது ஒரு சமூகமும் அல்ல; இந்து மதம் என்பதே ஜாதிகளின் தொகுப்பு என்கிறார் அம்பேத்கர். பொருளாதாரச் சார்பாகப் பார்த்தாலும், ஜாதி நன்மை தரக்கூடியதல்ல. ஜாதி ஏற்பாட்டினால் மக்கள் சமூகம் விருத்தியடைய முடியாது; விருத்தியடையவு மில்லை. எனினும் ஜாதியினால் ஒரு பலன் ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஜாதி, இந்து சமூகத்தைச் சின்னாபின்னமாக்கிச் சீரழித்து விட்டது. இந்து சமூகம் என்ற வார்த்தைக்கே பொருளில்லை; அது வெறும் கற்பனை. இதை நாம் முதன்முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்து என்ற பெயரே வெளிநாட்டார் சூட்டியது. தம்மையும் இந்தியச் சுதேசிகளையும் பிரித்துக் காட்டும் பொருட்டு முகம்மதியர் இந்தியச் சுதேசிகளை இந்துக்கள் என்று அழைத்தார்கள். முகம்மதியர் படையெடுப்புக்கு முன்னுள்ள சமஸ்கிருத நூல்களில் ‘இந்து’ என்ற பதமே...

கலைஞர் குறித்து வைகோவின் பேட்டியை  திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது

கலைஞர் குறித்து வைகோவின் பேட்டியை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ‘வைகோ’ சென்னையில் அளித்த பேட்டியில் தி.மு.க. தலைவர் கலைஞர் பற்றி, அவர் பிறந்த ‘ஜாதி’யை மறைமுகமாக சுட்டிக்காட்டி வெளியிட்ட கருத்தை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் வெளியிட்ட கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளித்தன. ‘வாழ்நாளில் செய்த பெரிய குற்றம், மன்னிப்புக் கோருகிறேன்’ என்று வைகோ உடனடியாக வருத்தம் தெரிவித்ததை ஒரு நல்ல முன் மாதிரியாகக் கருதி வரவேற்றாலும், அடிமனதில் ஆழமாக ஊறிருக்கும் உணர்வுகள்தான் ஆவேசம் கொள்ளும்போது, இயல்பாகவே வெளிவரும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். மனித குலத்தின் மிகப் பழமையான தொழில் என்று ‘பாலியல் தொழில்’ செய்வோரை சுட்டி, வைகோ இழிவாகப் பேசியதற்காக கலைஞரிடம் மன்னிப்புக் கேட்டதைப்போல், பெண்களிடமும் அவர் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும் என்பதே நமது கருத்து. 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டை நடத்திய பெரியார், மாநாட்டுக்கு மக்களை அழைத்தபோது, “தனிப்பட்ட ஸ்திரீகளும் தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக்...

கர்ப்பகிரக நுழைவு உரிமையை வென்றெடுத்தனர் மராட்டிய பெண்களின் புரட்சி

கர்ப்பகிரக நுழைவு உரிமையை வென்றெடுத்தனர் மராட்டிய பெண்களின் புரட்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சிங்னாபூர் எனும் ஊரில் சனி பகவான் கோயிலின் கர்ப்பகிரகத்தில் நுழையும் உரிமையைப் பெண்கள் போராடி பெற்றுள்ளனர். இது மகத்தான வெற்றி. கோயில் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதை மறுத்து ‘பூமாதா பெண்கள் படை’ என்ற போராட்ட அமைப்பை பெண்கள் உருவாக்கினார்கள். துருப்தி தேசாய் என்பவர் தலைமையில் 3 மாத காலமாக பெண்கள் போராடினார்கள். பம்பாய் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். கோயில் நுழைவு பெண் களின் அடிப்படை உரிமை என்றும், ஆண் களுக்கு உள்ள அத்தனை உரிமையும் பெண் களுக்கும் உண்டு என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகம், கர்ப்ப கிரகத்துக்குள் இனி ஆண்களுக்கும்  அனுமதி இல்லை என்று அறிவித்தது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நோக்கத்தையே திசை திருப்பிய இந்த முடிவால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க வேண்டி யிருக்கும் என்று அஞ்சிய கோயில் நிர்வாகம், பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு, பெண்களை...

மூத்த குடிமக்களே கேட்கிறார்கள்!

மூத்த குடிமக்களே கேட்கிறார்கள்!

“கூழுக்கு குழந்தைகள் அழும்போது குழவிக் கல்லுக்கு பாலாபிஷேகமா?” என்ற கேள்வியை பெரியார் இயக்கம், மக்கள் முன் வைத்தது. முடிவெய்திய சுயமரியாதை சுடரொளி சுவரெழுத்து சுப்பையா இதை சுவரெழுத்துகளில் தார் கொண்டு எழுதினார். பக்தியின் பெயரால் பொருள், பணம், நேரம் வீணாக்கப்படும் அவலம் உலகில் இந்த நாட்டைப் போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. கடந்த ஏப்.8ஆம் தேதி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் வந்த ஒரு செய்தி வியப்பிலாழ்த்தியது. சென்னையில் பெசன்ட் நகரில் ‘அஷ்டலட்சுமி’ கோயில் இருக்கிறது. கூட்டம் அதிகம் வரும் கோயில். பக்தர்கள் தேங்காய் உடைப்பார்கள்; தேங்காய்க்குள் உள்ள ‘இளநீர்’ வீணாக தரையில் ஓடும். பெசன்ட் நகர் குடியிருப்புகளில் வாழும் 50 மூத்த குடிமக்கள் ஒன்று சேர்ந்து இப்படி சிறந்த உணவான இளநீர் வீணாகிறதே என்று கவலைப் பட்டார்கள். மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததோடு, தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதப் போவதாகக் கூறுகிறார்கள். முதலமைச்சரே மூடத்தனத்தில் உறைந்து கிடக்கும்போது அவருக்கு கடிதம்...

கூட்டணிக்கு ஆள் கிடைக்காத பா.ஜ.க.

கூட்டணிக்கு ஆள் கிடைக்காத பா.ஜ.க.

தமிழ்நாட்டில் கூட்டணிக்கு கட்சி கிடைக் காமல் தனித்து விடப்பட்டிருக்கிறது பாரதிய ஜனதா. இந்து மக்கள் கட்சி நடத்தும் அர்ஜுன் சம்பத் கூட பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரவில்லை. அவர் வேட்பாளர்களை தனியாக நிறுத்தப் போவதாகக் கூறுகிறார். பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் என்ற பதவியில் இருக்கும் எச். ராஜா என்ற பார்ப்பனர், மத்தியில் அதிகாரத்துக்கு வந்துவிட்ட இறுமாப்பில், தடித்த வார்த்தைகளைப் பேசி வந்தார். இந்தியாவே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதைப்போல அவர் காட்டிய திமிர் இப்போது பேர் சொல்வதற்குக் கூட ஒரு ஆதரவு கட்சி இல்லாமல் அநாதையாக அலையவிட்டிருக்கிறது. சமத்துவ மக்கள் கட்சியை நடத்தும் சரத்குமாரும், பா.ஜ.க.வோடு கூட்டணி பேசி முடித்த பிறகு ‘அம்போ’ என்று கைவிட்டு மீண்டும் போயஸ் கார்டனுக்கு ஓடி விட்டார். வாசனின் த.மா.க.வுடன் இரண்டு சுற்றுப் பேச்சு வார்த்தை முடிந்து விட்டது என்றார். மாநில தலைவர் தமிழிசை, வாசனும் ‘டாட்டா’ காட்டி விட்டார். “எங்கள் ஆதரவின்றி தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் ஆட்சி...

குடும்ப சொத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கும் சட்டத்தை நீக்கியது மோடி ஆட்சி

குடும்ப சொத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கும் சட்டத்தை நீக்கியது மோடி ஆட்சி

குடும்ப சொத்தில் ஆண்களைப்போலவே பெண்களுக்கும் உரிமை வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, 1929இல் செங்கல்பட்டில் நடந்த தமிழ் மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின்போது அன்றைய முதல்வர் கலைஞர் இதை சட்டமாக்கினார். 2005ஆம் ஆண்டு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாடாளுமன்றத்திலேயே குடும்ப சொத்தில் பெண்களின் பங்கை உறுதிப்படுத்தும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இது ஏற்கெனவே அமுலில் இருந்து வந்த இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தமாகும். இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி தேவையற்ற சட்டங்கள் என்று சுமார் 140 சட்டங்களை நீக்கிவிட்டது. இனி இந்தச் சட்டங்கள் அமுலில் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டமும் இதில் இடம் பெற்றிருக்கிறது. பெண்களுக்கு குடும்ப சொத்தில் உரிய பங்கினை உறுதி செய்யும் ஒரு முக்கியமான சட்டத்தை எந்தவித...

திருப்பூரில் கருத்துகளை விதைத்த பெரியாரியல் பயிலரங்கம்

திருப்பூரில் கருத்துகளை விதைத்த பெரியாரியல் பயிலரங்கம்

திருப்பூரில் கோவை-திருப்பூர் மாவட்டக் கழகங்களின் தோழர்களுக்காக மார்ச் 3ஆம் தேதி ஒருநாள் பெரியார் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. தேர்தல் ஆணையம், தேர்தல் அரசியலில் பங்கேற்காத திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பயிற்சி முகாம்களுக்கும் ‘கெடுபிடி’ காட்டுகிறது. மேட்டுப்பாளை யத்தில் பயிற்சி முகாம் நடத்த திட்ட மிடப்பட்டது. கோவை மாவட்டக் கழகத் தலைவர் இராமச்சந்திரன், இதற்காக மண்டபங்களை அணுகியபோது, “தேர்தல் ஆணையம் அனுமதியின்றி மண்டபத்தில் நிகழ்வு நடத்த அனுமதிக்க முடியாது. இது தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப் பாடு” என்று கூறி விட்டார்கள். இரண்டு நாள் பயிற்சி முகாமில் தோழர்கள் தங்குவதற்கும் அங்கே உணவு வழங்குவதற்கும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் கழகப் பொருளாளர் துரைசாமி தமது இல்லத் தோட்டத்திலேயே பந்தல் அமைத்து பயிலரங்கம் நடத்த முன் வந்தார். திட்டமிட்டபடி பயிலரங்கம் நடந்தது. பயிலரங்கத்தில் பெண்கள்  உள்பட 70 தோழர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட செயலாளர் முகில் ராசு...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (16) ம.பொ.சி. மட்டுமே சென்னை நகரை மீட்டுக் கொடுத்தாரா? வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (16) ம.பொ.சி. மட்டுமே சென்னை நகரை மீட்டுக் கொடுத்தாரா? வாலாசா வல்லவன்

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளில் ம.பொ.சி. மட்டும்தான் சென்னை நகரை மீட்டுக் கொடுத்தார் என்று நம்புகின்றனர். இது உண்மையல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். இந்தியாவில் மொழிவழி மாநிலம்  பிரிப்பதற்காக இந்திய அரசினரால் முதன் முதலில் அமைக்கப்பட்டது  நீதிபதி தார் தலைமையிலான குழு ஆகும். குடிஅரசு தலைவரால் 1948இல் இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் மொத்தம் நான்கு பேர் இருந்தனர் நீதிபதி எ.கே. தார் தலைவராகவும் டாக்டர் பன்னாலால், திரு ஜகத் நாரியன் லால், பி.சி. பானர்ஜி ஆகியோர் உறுப்பினர் களாகவும் இருந்தனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதும் குழுவினருக்கு அறிவுரை வழங்குவதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது. 10.12.1948இல் இந்திய அரசிடம் இக்குழு அறிக்கையைக் கொடுத்தது. இப்போது உள்ள நிலையில் புதிய மாநிலம் எதையும் உருவாக்கத் தேவை யில்லை என்று இக்குழு கருதியது. அந்த அறிக்கையில் மொழிவாரி மாநிலம்...

கூட்டணி பேரங்களைத் தடுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை

கூட்டணி பேரங்களைத் தடுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை

தேர்தலில் வேட்பாளர் செலவு தொகைக்கு ஆணையம் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. அதைத் தாண்டி கணக்கில் காட்டாமல் கோடி கோடியாக அள்ளி வீசப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் தேவை என்று பல்வேறு கட்சி யினரும் பொதுநல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்போது தொகுதி வாரியாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர் போட்டி என்ற நடைமுறை உள்ளது. இதில் மாற்றம் செய்து, ‘விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை’ கொண்டு வர பரிசீலிக்கலாம் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் லிங்டோ உள்ளிட்ட ஆய்வாளர்கள் யோசனை அளித்துள்ளனர். இந்நிலையில்தான் அந்தக் கேள்வி எழுகிறது. அது என்ன விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை? இதன் சிறப்பம்சங்கள் என்ன? விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் வேட்பாளர் இருக்க மாட்டார்கள். மாறாக அரசியல் கட்சிகள்தான் போட்டியிடும். கட்சி களின் பிரதிநிதிகள் பட்டியலை முறைப்படுத்தி முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரத்தில் கட்சி சின்னம் மட்டுமே இருக்கும். கட்சிக்கு கிடைக்கும் மொத்த வாக்குகளுக்கேற்ப எம்.பி.,...

வேதக் கல்வி நிறுவனத்துக்காக தலித் மக்களை வெளியேற்றிய ஆர்.எஸ்.எஸ்.

வேதக் கல்வி நிறுவனத்துக்காக தலித் மக்களை வெளியேற்றிய ஆர்.எஸ்.எஸ்.

ஜாதி அமைப்பையும் ‘மனுதர்மத்தை’யும் இலட்சியங்களாகக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். – நாக்பூரில் இந்துக்களுக்குள் பாகுபாடு கூடாது என்று பேசியிருப்பதை முன் வைத்து ‘தமிழ் இந்து’ நாளேட்டில் ‘சமஸ்’ எழுதிய கட்டுரை இது. “ஆர்.எஸ்.எஸ். வலிமையான பண்பாட்டு சக்தி” ஜாதியை ஒழிக்க ஆர்.எஸ்.எஸ்.சால்தான் முடியும் என்பது போன்ற கட்டுரையாளரின் கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனி யத்துக்கு ஆதாரமான பல செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. மாறுபட்ட கருத்துகளையும் வெட்டி விடாமல் கட்டுரையை முழுமையாக வெளியிடு கிறோம். ‘ஜாதிய வன்முறைகள் நடக்கும் போதெல் லாம் ஆர்.எஸ்.எஸ். ஏன் வாய்மூடி இருக்கிறது?’ என்ற கேள்வி பொதுவாக எழுவதில்லை. சாதிய அமைப்புக்கு எதிராக எப்போதுமே பேசுவதில்லை என்பதால் தான். ‘இப்போது ஏன் பேசுவதில்லை’ என்ற கேள்வி யும் எழுவதில்லையோ என்றும் தோன்றுகிறது. இந்தியாவை நிலைகுலைய வைத்த எந்தச் சம்பவத்தின்போதும் ஆர்.எஸ்.எஸ். வாய் திறந்து பேசியதாகவோ, களத்தில் போய் நின்றதாகவோ தெரியவில்லை. சுதந்திர இந்தியாவை அதிரவைத்த...

பிரிட்டிஷ் ஆட்சியை வரவேற்றுப் பாடியதே ‘வந்தே மாதரம்’

பிரிட்டிஷ் ஆட்சியை வரவேற்றுப் பாடியதே ‘வந்தே மாதரம்’

இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கனமன’ பாடலுக்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ பாடலை பாட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் பய்யாஜி ஜோஷி பேசிய செய்தி ஏடுகளில் வெளி வந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. இப்போது பய்யாஜி அப்படி கூறவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மறுத்திருக்கிறார். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சார செயலாளராக உள்ள (இந்தப் பொறுப்புக்கு ஆர்.எஸ்.எஸ்.சில் ‘பிரச்சார் பிரமுக்’ என்று சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது) எம்.ஜி.வைத்யா, பய்யாஜி ஜோஷியின் கருத்துக்கு தனது வலைதளத்தில் விளக்கமளித்துள்ளார். “மூவர்ண தேசியக் கொடியை அரசியல் சட்டம் ஏற்றுள்ளது. இதை மதிக்க வேண்டும்; அதே நேரத்தல், நமது ‘பாரதத்தின்’ பூர்வீக கலாச்சாரத்தின் சின்னமாக காவிக் கொடி ‘தேசியக் கொடி’ உருவாவதற்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது. அதேபோல் ‘ஜனகணமன’ பாடல் நமது ‘இராஜ்யம்’ பற்றி கூறுகிறது. ஆனால், ‘வந்தே மாதரம்’, நமது கலாச்சாரத்தின் அடையாளம். எனவே நாம் காவிக் கொடி,...

திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம் சூலூர் 01012017

சூலூர் ஒன்றியம் பட்டணம் இந்திரா நகரில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தோழர் கொளத்தூ மணி அவர்கள் கலந்து கொண்டு திவிக மாத இதழ் நிமிர் அறிமுகப்படுத்தி சிறப்புரை ஆற்றினார். விழாவில் தோழர் வழக்குறைஞர் வெண்மணி அவர்கள் மேடையில் புரட்சி பெரியார் முழக்கம் சந்தா தொகைகளை கழக தலைவரிடம் கொடுத்தார். செய்தி தோழர் சூலூர் பன்னீர்செல்வம் பெரியார் முழக்கம் 12012017 இதழ்  

ஈரோடு தெற்கு திவிக சார்பில் சித்தோட்டில் தெருமுனைக் கூட்டம் 01012017

தந்தை பெரியார் நினைவுநாளை முன்னிட்டு,திராவிடர் விடுதலைக் கழகம்,ஈரோடு தெற்கு மாவட்டம் ,சித்தோடு கிளைக் கழகம் சார்பாக 01.01.2017 ஞாயிறு மாலை 6 மணிக்கு, சித்தோடு சமத்துவபுரத்தில் தெருமுனைக்கூட்டம் நடந்தது.. தோழர்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.. திராவிடர் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர்.ஆசிரியர் செங்கோட்டையன் உரையாற்றினார். ஆசிரியர் வீரா கார்த்திக் மாட்டிறைச்சி அரசியல் பற்றி விளக்கிப் பேசினார். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சமூகத்தில் மலிந்து கிடக்கும் மூடநம்பிக்கைகள் குறித்தும்,கடவுளர் கதைகள் குறித்தும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.. தோழர்.சித்தோடு முருகேஷ் சாதி ஒழிப்புப் பாடல்கள், பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார்.. தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை சித்தோடு கமலக்கண்ணன்,யாழ் ஸ்டூடியோ எழிலன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.. முன்னதாக சமத்துவபுரம் பகுதியிலுள்ள 120 வீடுகளுக்கும் சென்று துண்டறிக்கைகளை வழங்கினர்.. நமது கூட்டக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட சமத்துவபுரம் பகுதி மாட்டுக்காரர் முருகன் அனைவருக்கும்...

மதுரையில் கழக பொதுக்கூட்டம் !

புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மா.பா. மணிகண்டன் தலைமை வகித்தார். மாநகர் பொறுப்பாளர் காமாட்சி பாண்டி வரவேற்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட துனை செயலாளர் பிலால் ராஜா வாழ்த்துரை வழங்கினார். கழக தலைவர் கொளத்தூர் மணி, ஆதித்தமிழர்கட்சித் தலைவர் கு. ஜக்கையன் ,கழக மாநில பரப்புரை செயலாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மேலூர் சத்திய மூர்த்தி நன்றி தெரிவித்தார். காவை இளவரசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். தோழர்கள் திருப்பதி, அழகர், பேரையூர் ராஜேஷ்,தளபதி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டில் மதிமுக நகர செயலாளர், இளங்குமரன் மதிமுக ஒன்றிய செயலாளர், ஜெயராஜ் ஆகியோர் ,தமிழ்நாடு முஸ்லீம் முனேற்ற கழக தோழர்கள்...

தமிழர்களே புரோகித சடங்குகளை புறக்கணிப்பீர்! சேலம் மாநாட்டின் ஒற்றைத் தீர்மானம்

24-12-2016 அன்று சேலத்தில், சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் ‘வேத மரபு மறுப்பு மாநாட்டில்’  கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த ஒற்றை தீர்மானம் : வேதங்கள் – பகவத்கீதை – மனுஸ்மிருதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வேத மரபு – பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழரின் திருக்குறள் மரபுக்கு எதிரானதாகும். வேதங்கள் உருவான காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்புகளும் தோன்றி விட்டன. பார்ப்பனீயம் இந்த எதிர்ப்புகளை சாதுரியமாக வீழ்த்தியிருப்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன. சார்வாகர் – சமணர் – புத்தர் – சித்தர்கள் – வடலூர் வள்ளலார் போன்று பலரும் போர்க் கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இறுதியாக வேதமதமாகிய பார்ப்பன மதம் பிரிட்டிஷ் ஆட்சியைப் பயன்படுத்தி ‘இந்து’ என்ற வலைக்குள் வெகு மக்களை நிர்பந்தமாக  உள்ளிழுத்துக் கொண்டது. இதன் வழியாக சமூக அதிகாரங்களை தனது வசமாக்கிக் கொண்டு அதனூடாக தன்னை அரசியல் அதிகார...

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முக்கிய அறிவிப்பு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முக்கிய அறிவிப்பு

டிசம்பர் மாதத்தோடு சந்தா முடிவடையும் வாசகர்களுக்கு ஜனவரியிலிருந்து இதழ் அனுப்புவது நிறுத்தப்படும். தோழர்கள் சந்தாவை புதுப்பிக்க வேண்டுகிறோம். – நிர்வாகி ஆண்டுக்கட்டணம் ரூ.200 பெரியார் முழக்கம் 29122016 இதழ்

‘சங்கீதா மெடிக்கல்’ பாலசுப்பிரமணியம் ஒரு இலட்சம் நன்கொடை

‘சங்கீதா மெடிக்கல்’ பாலசுப்பிரமணியம் ஒரு இலட்சம் நன்கொடை

மாநாட்டில் கழகத் தோழர் சேலம் ‘சங்கீதா மெடிக்கல்’ பாலசுப்பிரமணியம் மாநாட்டுக்கு ரூ.50,000-மும், கழகக் கட்டமைப்பு நிதிக்கு முதல் தவணையாக ரூ.50,000-மும் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் 29122016 இதழ்

சேலம் மாநாட்டு களத்திலிருந்து…

திராவிடர் விடுதலைக் கழகம் இதுவரை நடத்திய மாநாடுகளி லிருந்து தனித்துவம் பெற்ற மாநாடாக வேதமரபு மறுப்பு மாநாடு இருந்தது. மாநாட்டு அரங்குகளில் வேத மரபை மறுத்த கபிலர், திருமூலர், வள்ளார் கருத்துகளும், நூற்றாண்டு காணும் எழுத்தாளர் விந்தன் எழுதிய ‘பெரியார் அறிவுச்சுவடி’யில் இடம் பெற்ற வாசகங்களும் பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன. இவர் களுடன் பெரியார், அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் கருத்துகளும் வைக்கப்பட்டிருந்தன. காலை அமர்வு நடந்த அரங்கிற்கு கபிலர், திருமூலர் அரங்கு என்றும், மாலை நடந்த திறந்தவெளி மாநாட்டு அரங்கிற்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அரங்கு என்றும் பெயர் சூட்டப்பட் டிருந்தது. இறை நம்பிக்கைக் கொண்ட வேத மரபுகளை எதிர்த்த பார்ப்பன எதிர்ப்பாளர்களின் பெயர்களும் படங்களும் கடவுள் மறுப்பு தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெரியார் இயக்கத்தின் மாநாட்டு மேடைகளுக்கு சூட்டப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் கடவுள் மறுப்பு தத்துவத்தின் நோக்கம், ஒடுக்கப் பட்ட மக்கள் மீதான இழிவு ஒழிப்பு மற்றும் சமூக உரிமை...

இறை நம்பிக்கையாளர்களையும் இன உணர்வாளர்களையும் இணைத்தது – சேலம் மாநாடு

வேத மரபுக்கு எதிராகப் போர்க்குரல்! இந்து மதத்துக்கு தாங்களே உரிமைக் குரியவர்கள் போல் வெகுமக்களை ஏமாற்றி வந்த பார்ப்பனிய மிரட்டலுக்கு பதிலடி தந்துள்ளது சேலம் மாநாடு. வேத மரபினை மறுப்போம், வெகு மக்கள் உரிமைகளை மீட்போம் என்கிற பார்ப்பன இந்துத்துவ எதிர்ப்பு இலட்சிய முழக்கத்தை முன் வைத்து சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் வேத மரபு மறுப்பு மாநாடு டிசம்பர் 24, 2016 அன்று சேலம் போஸ் மைதானம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் இசை நிகழ்ச்சி, கருத்தரங்கம், வீதிநாடகம், கழகத் தலைவருக்கு பிரச்சார ஊர்தி வழங்குதல், புரட்சி பெரியார் முழக்க சந்தா வழங்குதல் கழக கட்டமைப்பு நிதி மற்றும் பொது மாநாடு எழுச்சியுடன் நடைப்பெற்றது. முன்னதாக தந்தை பெரியாரின் 40ஆவது நினைவு நாளை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர்...

திராவிடர் விடுதலைக் கழகம்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முக்கிய அறிவிப்பு

டிசம்பர் மாதத்தோடு சந்தா முடிவடையும் வாசகர்களுக்கு ஜனவரியிலிருந்து இதழ் அனுப்புவது நிறுத்தப்படும். தோழர்கள் சந்தாவை புதுப்பிக்க வேண்டுகிறோம். – நிர்வாகி பெரியார் முழக்கம் 22122016 இதழ்

‘துக்ளக்’ சோவின் இனப்பற்று; படம் பிடிக்கிறார், பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1973ஆம் ஆண்டு ‘தென்மொழி’ ஏட்டில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி: ‘இராசாசி நினைவாலயத்துக்கு’ இவர்கள் தரும் விளம்பரம், காந்திக்குக் கூடத் தந்ததில்லை. ‘தமிழகத்தில் இராசாசி காலடிப்பட்ட இடங்களை யெல்லாம் புண்ணியதலமாகக் கருத வேண்டும்’ என்று ‘சுதந்திர’க்கட்சி சா. கணேசன் வெளிப்படுத்திய கருத்தை இவர்கள் மிகப் பெருமையுடன் வெளி யிட்டுக் கொண்டனர். (சா. கணேசன் மூளையில் இவ்வளவு அடிமைத்தனம் புகுந்திருக்கக் கூடாது) துக்ளக்கில் ‘சோ’ இவர்கள் இனத் தலைவர் இராசாசியைப் பற்றி இப்படி எழுதி யிருந்தார்: “இராசாசியைப் பாராட்டுவதற்கோ அல்லது அவரிடம் குற்றம் காண் பதற்கோ அவருக்கு நிகரானவர்கள் யாரும் இந்நாட்டில் இல்லாமல் போய் விட்டார்கள்… மனம், சிந்தனை, வாக்கு, செயல் எல்லாவற்றிலும் பரிபூரணத் தூய்மையுடன் விளங்கிய ஒரு அசாதாரணமான மனிதரை மிகச் சாதாரணமாக மதித்துவிட்ட மடத் தனத்தின் விளைவுகளிலிருந்து இந்த நாடு என்று விடுபடுமோ தெரியாது… இராசாசி தெய்வ நம்பிக்கை மிகுந்தவர். அந்த ஒரு கரணியத்திற்காகவாவது அவர் வாழ்ந்த...

நிமிர் மாத இதழ்

நாள்காட்டி தயார்! சேலம் மாநாட்டில் கிடைக்கும்! நாள்காட்டியின் : விலை : ரூ. 60 தொடர்புக்கு :  தபசி. குமரன், தலைமைக் கழகச் செயலாளர், பேசி: 9941759641   சேலம் மாநாட்டில் கிடைக்கும்! ‘நிமிர்’ கழக மாத இதழ் பேராசிரியர் அரசு வ. கீதா ஆய்வாளர் ஆர். முத்துக்குமார் பேராசிரியர் ஜெயரஞ்சன் எழுத்தாளர் ஜெயராணி கட்டுரைகளுடன் கருத்துக் கருவூலமாக வெளி வருகிறது.

‘கீதை’யின் வஞ்சகப் பின்னணி!

சேலம் மாநாட்டுச் சிந்தனை ட           கீதையின் காலம் குறித்தும் – அது ஒருவரால் தான் இயற்றப்பட்டது என்பது குறித்தும் – குழப்பமான கருத்துகள் நிலவுகின்றன. ட           “சாதியக் கட்டமைப்பின் இறுக்கம் நொறுங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் மீண்டும் சாதியக் கட்டுமானத்தை வலிமைப் படுத்தவே கீதை வந்தது என்கிறார், ஆய்வாளர் டி.பி.ஹில். ட           பாரதப் போரில் அர்ச்சுணனுக்கு, தேரோட்டுபவனாக இருந்த கிருஷ்ணன், அர்ச்சுனனுக்கு கூறிய அறிவுரைதான் கீதை என்ற கருத்தை ஏற்க இயலாது. போர்க் களத்தில் போர்ச் சூழல் பற்றிய உரையாடல்கள் தான் நடந்திருக்க முடியுமே தவிர வேறு பல தத்துவங்கள் பற்றிப் பேச, போர்க் களம் உரிய இடமாக இருக்காது. எனவே கீதையின் உள்ளடக்கம், பிற்காலத்தில் விரிவுபடுத்தி எழுதப் பட்டது என்பது பல ஆய்வாளர் களின் கருத்து. ஆனால் பகவத்கீதை இறைவனால் ‘அருளப்பட்டது’ என்று பார்ப்பனர்கள் கூறு கிறார்கள். ட           கீதை – ஒரு வரலாற்று நிகழ்வு என்பது சந்தேகத்துக்குரியது என்கிறார்...

‘ஆர்யபட்டரை’ வெறுத்து ஒதுக்கிய பார்ப்பனர்கள்

சேலம் மாநாட்டுச் சிந்தனை ட           பார்ப்பனியத்தின் உயிர்நாடி, வேத மதத்தின் அடிப்படைக் கருத்தியல்கள், உபநிடதங்களின் உள்ளுறை, தர்ம சாத்திரங்களின் தகிடுதத்தங்கள் ஆகிய அனைத்தும் கீதையில் உள்ளடங்கியிருப்பதை உணர்ந்து கொண்ட பார்ப்பனர்கள், எதிரிகளை சிதறடிப்பதற்கான ஆயுதமாக கீதையைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ட           கீதை – புரட்சிகரமாக தோற்றம் காட்டக்கூடிய வெற்று முழக்கங்களை மிக சாமர்த்தியமாக முன்னிறுத்துகிறது. எனவே கீதைக்கு விளக்க உரை எழுதியவர்களும், இந்த முழக்கங்களை முன்னிறுத்துவதையே கலாச் சாரமாக்கிக் கொண்டார்கள். பிறகு இந்துத்துவமே முழக்கங்களில் உயிர் வாழும் ஒரு இயக்கமாகி விட்டது. ட           “கதம்பக் குவியலான கீதைத் தத்துவம், புதிது புதிதான விளக்கங்களை நுழைப்பதற்கு இடமளிக்கும் வகையில்தான் அமைந்துள்ளது. ஆனால் சமூகத் தடைகளைக் கடந்து புதுவழியில் செல்வதற்கு அது வழிகாட்ட வில்லை” என் கிறார் வரலாற்று ஆய்வாளர் கோசாம்பி. ட           கீதையின் முரண்பாடுகளைப் போலவே – இந்துக்களின் பண்பு நலனும் சொல் ஒன்று, செயலொன்றாகியது. உயர்ந்த தத்துவங்களைப் பேசும் அறிவு ஜீவி...

பவுத்தர்களை வீழ்த்திய பார்ப்பனர்கள்

சேலம் வேத மரபு மறுப்பு மாநாட்டு சிந்தனை வேத மரபுகளை எதிர்த்தவர்களை பார்ப்பனர்கள் சூழ்ச்சிகரமாக வீழ்த்திய வரலாறு – கடந்த இரண்டு இதழ்களில் வெளி வந்தது. பவுத்தத்தை வேத மரபு வீழ்த்தியது எப்படி? ட           பவுத்தத்தை முற்றிலுமாக ஒழித்து, மீண்டும் வேதத்தை அரியணையில் ஏற்றத் துடித்தார்கள் பார்ப்பனர்கள். இதற்கு – முதலில் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களின் படைப்பு இலக்கி யங்களை எல்லாம் அழித்து ஒழிக்கும் வேலையைத் துவக்கினர். குறிப்பாக நாத்திகத்தை வலியுறுத்திய லோகாயதவாதிகளின் இலக்கி யங்களை முழுமையாக மீட்கவே முடியாதவாறு அழித்து ஒழித்து விட்டனர். இந்த லோகாயதர் களின் வேத-கடவுள் மறுப்பு சிந்தனைகளை எதிர்த்தும், இகழ்ந்தும் பார்ப்பனர்கள் எழுதிய நூல்களிலிருந்து தான் துண்டுதுண்டாக லோகாயத வாதம் பற்றிய கருத்துகள் காணக் கிடக்கின்றன. இதுபற்றி பிரபல ஆய்வாளர்  பிரசாத் சட்போ பாத்யாயா இவ்வாறு கூறுகிறார்: “பிற சிந்தனை மரபுகளின் படைப்பிலக்கியங் களாவது ஓரளவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் லோகாயதர்களின் உன்னதப் படைப் பிலக்கியங்களின்...

கோயிலுக்கு வராதே!

“மனம் புண்படுகிறது என்று நினைப்பவர்கள் எல்லாம் எனது நாடகத்தைப் பார்க்க வரவேண்டாம்” என்று அறிவித்தார், மறைந்த புரட்சி நடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதா. இது நேர்மையான ஒரு கடவுள் “மறுப்பாளனின்” பிரகடனம்! “கோயில் கருவறைக்குள் நுழையாதே! இங்கே நான் மட்டுமே கடவுளின் பிரதிநிதி. இதோ பார், எங்களிடம் உச்சநீதிமன்றத் தீர்ப்பே இருக்கிறது” என்று பூணூல் மார்பை தட்டிக் கொண்டே பேசுகிறார்கள் அர்ச்சகப் பார்ப்பனர்கள். இது பார்ப்பனத் திமிரின் அடையாளம். “உன்னை இழிவு செய்யும் கோயிலுக்கு ஏன் மானங்கெட்டுப் போகிறாய்? அங்கே அர்ச்சகப் பார்ப்பானிடம் தட்சணையை கொடுத்துவிட்டு, கை கட்டி கர்ப்பகிரகத்துக்கு வெளியே நிற்கிறாயே; இது அவமான மில்லையா? அப்படியே உனக்கு பக்தி பீறிட்டு நிற்கிறது என்றால் உடைக்க வேண்டிய தேங்காயையும், கொளுத்த வேண்டிய கற்பூரத்தையும் கோயிலுக்கு வெளியே உடைத்து, நீயே வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போ. ‘சூத்திரன்’ என்று இழிவுபடுத்தும் அர்ச்சகப் பார்ப்பானிடம் கை கட்டி நிற்காதே.” இது பெரியாரின் சுயமரியாதைக்கான...

மோடி அறிவிப்பால் கறுப்புப் பணம் ஒழிந்து விடுமா? பேராசிரியர் ஜெயரஞ்சன்

சராசரியாக ஆண்டுக்கு ரூ.35 லட்சம் கோடி கள்ளப் பணம் பன்னாட்டு வர்த்தகம் வாயிலாக வெளியேறுகிறது கறுப்புப் பணம் உள்நாட்டில் முதலீடு செய்யப்படுவது மிகவும் சொற்பம். இதுகுறித்து ஆய்வு நடத்திய தேவ்கர் என்ற பொருளாதார வல்லுநர், 2010ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘The Driver and Dynamics of Illicit Financial Flows’ என்ற நெடிய ஆய்வுக் கட்டுரையில், இந்திய நாட்டில் உருவாகும் கறுப்புப் பணத்தில் ஐந்தில் ஒரு பகுதி மட்டுமே உள்நாட்டு சொத்துகளில் முதலீடு செய்யப்படு வதாக நிறுவுகிறார். மீதமுள்ள கறுப்புப் பணம் அனைத்தும் வெளிநாடுகளில்தான் முதலீடு செய்யப்படு கிறது. இத்தகைய பணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் பெருமளவில் சென்றடைகின்றன என்பதையும் அவர் பொதுவெளியில் உள்ள புள்ளி விவரங்களைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார். இவ்வாறு வெளியேறும் பணத்தின் அளவின்படி பார்த்தால் இந்தியா, உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. மிக முக்கியமாக, அவரது ஆய்வின் வாயிலாக நாம் நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட கள்ளப்...

வெங்கட்-இராஜலட்சுமி ஜாதி மறுப்புத் திருமணம்

4.12.2016 ஞாயிறு அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் செ.வெங்கட் (எ) வெங்கடேசனுக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் இராஜலட்சுமிக்கும் எமகண்ட நேரத்தில் ஜாதி மறுத்து தாலிமறுத்து சுயமரியாதை திருமணமாக கோவையில் நடைபெற்றது. தோழர் சூலூர் பன்னீர்செல்வம் திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் திக, தபெதிக,திவிக தோழர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். இணையர்கள் இணையேற்பின் நினைவாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’ இதழ் வளர்ச்சி நிதியாக 1000 ரூபாயும் கழக கட்டமைப்பு நிதியாக 1000 ரூபாயும் சேர்த்து 2000 ரூபாயை சூலூர் பன்னீர் செல்வத்திடம் வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 15122016 இதழ்

வேத மரபை எதிர்த்துப் போராடிய வைகுண்ட சாமிகள்

வேத மரபை எதிர்த்துப் போராடிய வைகுண்ட சாமிகள்

வேத மரபை எதிர்த்த முன்னோடிகளில் ஒருவர் வைகுண்ட சாமிகள். கன்யாகுமரிக்கு அருகே பூவண்டன் தோப்பு எனும் கிராமத்தில் ஓர் ஏழை நாடார் குடும்பத்தில் 1809ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ‘முடி சூடும் பெருமாள்’. ஆனால் அந்த காலத்தில் மன்னர்கள் அல்லது பார்ப்பன உயர்ஜாதியினர் வைத்துக் கொள்ளும் பெயர்களை ‘தாழ்ந்த’ ஜாதியினராக கருதப்பட்டவர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. எனவே இப்பெயர் வைத்தமைக்காக பார்ப்பனர், உயர்ஜாதியினர் அரசு அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அவர்களும் பெயரை மாற்ற உத்தரவிட்டனர். வேறு வழியின்றி பெற்றோர்கள், பெயரை ‘முத்துக்குட்டி’ என்று மாற்றினர். 1833இலிருந்து பொது வாழ்வில் இறங்கினார். தொடக்கத்தில் விஷ்ணு பக்தராக இருந்த இவர், தனது பெயரை ‘வைகுண்டர்’ என மாற்றிக் கொண்டார். குமரிப் பகுதி அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் இருந்தது. ஜாதி வெறியோடு ஆட்சி நடத்திய அரசர்கள், ஒடுக்கப்பட்ட ஜாதியினரை அடிமைகளாக நடத்தினர். அநியாயமாக வரி போட்டனர். மன்னனை எதிர்த்து துணிவோடு...

நெல்லையில் அணு உலைப் பூங்கா எதிர்ப்பு மாநாடு

அணு உலைப் பூங்கா என்பது, இரண்டுக்கும் மேற்பட்ட அணுவுலைகளை ஒரே இடத்தில் நிறுவுவதாகும். கூடங்குளத்தில் அமையவிருக்கும் 3,4,5,6 என்று அடுத்தடுத்து அணு உலை அமைக்க நினைக்கிறது அரசு. கூடங்குளத்தில் ஓர் அணு உலைப் பூங்கா அமைப்பதே திட்டம். அணு உலைப் பூங்காக்களால் போர், பயங்கரவாதிகளின் தாக்குதல் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடரால் பேராபத்து  நிகழலாம். எனவே அணு உலை வேண்டாம் என்று தொடர்ந்து பல்வேறு பரப்புரைகளையும், போராட்டங்களையும் நடத்தி வரும், “அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு” சார்பாக 03-12-2016 சனிக்கிழமை அன்று மாலை 3-00 மணி முதல் இரவு வரை, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை முருகன் குறிச்சி பகுதியில் உள்ள கிங்ஸ் சிக் அரங்கில் “கூடங்குளம் அணு உலைப் பூங்கா எதிர்ப்பு மாநாடு” நடைபெற்றது. அமெரிக்கா, ஜப்பான், இரஷ்யாவுடனான அணு ஒப்பந்தங்களை இரத்து செய்ய வேண்டும்; கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா அமைப்பதையும், கல்பாக்கத்தில் விரிவாக்கம் செய்வதையும் கைவிட வேண்டும்;...

வேத மரபு மறுப்பு மாநாடு – ஏன்?

வேத மரபு மறுப்பு மாநாடு – ஏன்?

வேதங்களை பார்ப்பனர்கள் தங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அதை அச்சில் ஏற்றவில்லை. எனவே அதற்கு ‘கேளாக் கிளவி’ என்ற பெயரும் உண்டு. தங்கள் மூளைக்குள்ளே பரம்பரையாக வேதங்களை மனப்பாடம் செய்து வந்தவர்கள் கடவுள்களோடு பேசும் உரிமை தங்களுக்கும் தங்கள் வேதத்துக்கும் மட்டுமே உண்டு என்று சமூகத்தை நம்ப வைத்தார்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தோன்றிய இந்த பார்ப்பன மேலாதிக்க சூழ்ச்சி இன்று வரை தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது? அர்ச்சர்கர் ஆகும் உரிமை; யாகம் நடத்தும் உரிமை; கும்பாபிஷேகம் செய்யும் உரிமை; மதச் சடங்கு, பரிகாரங்கள் செய்யும் உரிமை; ஆளுநர் குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர், உயர் அதிகாரிகளுக்கு எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கும் உரிமை அத்தனையும் இப்போதும் யாரிடம்? பார்ப்பன புரோகிதர்களிடம் தானே! இப்படி வேதத்தை கடவுளை அரசியல் தலைவர் களை வழி நடத்துதலை தங்கள் வசமாக்கிக் கொண்டவர்கள் ஒரு காலத்தில் படிப்பையும் இதேபோல்...

தமிழகத்தில் பா.ஜ.க.  கால் ஊன்றுமா?

தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றுமா?

‘அந்திமழை’ டிசம்பர் மாத இதழில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை. மகாராஷ்டிராவை ‘இந்து இராஜ்ய மாக்குவோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து அங்கே ஆட்சியைப் பிடித்தது சிவசேனை. அதேபோல் தமிழ்நாட்டை இந்துக்களின் தேசமாக மாற்றிக் காட்டுகிறாம் என்று கூறி வாக்கு கேட்கும் துணிவு தமிழக பா.ஜ.க. வுக்கோ, அதன் சார்பு அமைப்புகளுக்கோ இருக்குமா? இத்தனைக்கும் ‘இந்தியா இந்துக்களுக்கான நாடு’ என்பதற்காகவே தொடங்கப்பட்டதுதானே பாரதிய ஜனதா! மகாராஷ்டிராவில் முன் வைத்த முழக்கத்தை தமிழ்நாட்டில் கூறிவிட்டு, தங்கள் அரசியலை முன்னெடுக்க முடியாது என்பது அதன் தமிழக தலைவர்களுக்கே தெரியும்! தமிழ்நாடு, மத தேசியத்திலிருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொண்டிருக்கிற ஒரு மாநிலம். தமிழ், தமிழன், சமூக நீதி, சமூக நல்லிணக்கம் என்பதே தமிழக அரசியலுக்கான மய்ய நீரோட்டம், இதற்கான விதைகள், 1920ஆம் ஆண்டுகளிலேயே இங்கே விதைக்கப்பட்டு விட்டன. திராவிடர் இயக்கம், திராவிட அரசியல் கட்சிகளின் வேரை தமிழகத்தில் கிள்ளி எறிந்து விடுவது அவ்வளவு...

வேத மரபு மறுப்பாளர்கள் ஒன்று கூடுகிறார்கள்! ‘களை’ கட்டுகிறது சேலம் மாநாடு!

பூமியில் இருந்த கடவுள் களை விண்ணுலக கடவுள் களாக மாற்றிய பார்ப்பனர்கள், அந்த கடவுள்களிடம் நேரடி தொடர்புக்கு ‘மந்திர சக்தி’, ‘யாகம்’, ‘சடங்கு’களை சமூகத் தில் திணித்த வரலாற்றை கடந்த இதழில்  எழுதியிருந்தோம். பார்ப்பனர்களின் சடங்குகளும் யாகங்களும் எல்லை மீறிய போது மக்கள் வெறுக்கும் நிலை உருவானது. அப்போது இந்த புரோகித சடங்குகளுக்கு எதிர்ப்புகள் உருவாகத் தொடங்கின. எந்த வகையான எதிர்ப்புகள்? சடங்கு, யாகங்களை கை விட்டு, காடுகளுக்குச் சென்று உடலை வருத்திக் கொண்டு, ‘ஆன்ம பலம்’ பெற்று வாழ்வின் துயரங்களுக்கு விடை காண முடியும் என்று நம்பிய சிலர், காடுகளுக்குப் போனார்கள். சடங்கு, யாகங்களை எதிர்த்தார்கள். யாகம் செய்வதைவிட ‘தியானமே’ சரியானது என்பது இவர்கள் கொள்கை. இதற்காக காடுகளுக்கு சென்றவர்கள் உருவாக்கிய சிந்தனைதான் ‘ஆரண்யகம்’, யாக மோசடிகளை புரோகித நயவஞ்சகத்தை ‘ஆரண்யகம்’ தோலுரித்தது. (யாகம் – சடங்குகளுக்கு எதிராக உருவானதே தியானம். இப்போது பார்ப்பனியம் ‘தியான’த்தையும், வேத மரபோடு இணைத்துக்...