இரமேசு பெரியார் – அல்லி வாழ்க்கை இணையேற்பு விழா சித்தையன் கோட்டை 11092016

11-9-2016 ஜாதி ஒழிப்புப் போராளி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் தோழர்கள் அல்லி – இரமேசு பெரியார் ஆகியோரது வாழ்க்கைத் துணை ஒப்பந்தவிழா, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.

விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், வே.மதிமாறன்,  மக்கள் மன்றம் மகேஸ்   புத்தர் கலைக்குழு மணிமாறன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தோழர் இரமேசு பெரியார், ஒப்பந்தவிழாவில் பெரியாரின் உடையாகிய கருப்பு சட்டை லுங்கியுடன் இருந்தார். மாலைகள் அணிவதற்கு முன்னர் இருவரும் ஒருவருக்கொருவர் பறையை அணிவித்துக் கொண்டனர். விழா முடிவில் மாட்டுக் கறி உணவு வழங்கப்பட்டது.
தங்கள் திருமணம் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில்தான் நடைபெறவேண்டும் என்பதிலும், மாட்டுக்கறி உணவு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்த தோழர்கள் அல்லி- இரமேசு பெரியார்  இருவரும் வெவ்வேறு பிற்படுத்தப்பட்ட  ஜாதிகளைச் சேர்ந்த பெற்றோரின் பிள்ளைகள் ஆவர்.
தோழர் இரமேசு பெரியார் மக்கள் மன்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்; பறையிசைக் கலைஞர் ஆவார்.
அன்று மாலை நடைபெறுவதாக இருந்த இமானுவேல் சேகரனார் நினைவுநாள் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் அவர்து உருவப் படத்திற்கு மாலைகள்  அணிவிக்கப் பட்டது.

பெரியார் முழக்கம் 13102016 இதழ்

img_7893 img_7896 img_7901 img_7916 img_7966 img_7986 img_7988 img_8000 img_8007 img_8032 img_8034 img_8044 img_8068 img_8089 img_8100 img_8102 img_8103 img_8114 img_8131 img_8144 img_8146 img_8149 img_8153 img_8162 img_8171 img_8174

You may also like...