கோவை கழகத் தோழர் பாரூக்

கோவை கழகத் தோழர் பாரூக்மீது குண்டர் சட்டமாம்! கோவையில் இந்து அமைப்புகளைச் சார்ந்த வன்முறையாளர்கள் கலவரம் – சூறையாடல்களை நடத்தியபோது உக்கடம் பகுதி திராவிடர் விடுதலைக் கழகத்தோழர் குழந்தைக்கு பால் வாங்க வந்தார்; அவரை எந்தக் காரணமும் இன்றி காவல்துறை கைது செய்ததை கடந்த வாரம் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டில் வெளியிட்டிருந்தோம். இப்போது அவர் மீது காவல்துறை குண்டர் சட்டத்தை ஏவியிருக்கிறது. இரண்டு இஸ்லாமிய தோழர்கள் மீது மட்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இருவரும் எந்த இஸ்லாமிய இயக்கத்தோடும் தொடர்பில்லாவர்கள். ஒருவர் பாரூக், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்; மற்றொரு தோழர் எந்த இஸ்லாமிய இயக்கத்தோடும் தொடர் பில்லாதவர். காவல்துறையின் இந்த அநீதிக்கு கழகம் வன்மையான கண்டனம் தெரிவிக்கிறது.

பெரியார் முழக்கம் 06102016 இதழ்

You may also like...