தோழர் தஞ்சை பசு.கௌதமன் உடல்நலத்தை கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் விசாரித்தார்.

திராவிடர் விடுதலைக்கழக தோழர், எழுத்தாளர் தஞ்சை பசு. கௌதமன் அவர்கள் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்காக தந்தை பெரியாரின் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு குறித்து பெரியாரின் பதிவுகளை ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”என்கிற தலைப்பில் 5 தொகுதிகள் 6000 பக்கங்கள் அடங்கிய புத்தகத்தை கடந்த சில வருடங்களாக தொகுத்து வந்தார்.தொடர்ச்சியான ஓய்வில்லா எழுத்துபணி காரணமாக உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டுதிருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு கடந்த 15 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.உடல் நலம் தேறி தற்போது நலமாக உள்ளார்..

இச் செய்தியறிந்த திராவிடர் விடுதலைக்கழக தலைவர்தோழர். கொளத்தூர்மணி அவர்கள்17.10.2016 அன்று மதியம் தஞ்சையில் உள்ளதோழர் தஞ்சை பசு.கௌதமன் அவர்கள்இல்லத்திற்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்எழுத்தாளர் தஞ்சை சண்முகசுந்தரம் மற்றும்திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசுமற்றும் கழக தோழர்கள் கோவில்வெண்ணி செந்தமிழன், தஞ்சை காசிம் ஆகியோர் உடன் இருந்தனர்.

பெரியார் முழக்கம் 27102016 இதழ்

You may also like...