Category: பெரியார் முழக்கம்

தலித் பத்திரிகையாளர்கள் இல்லாத ஊடகங்கள்

தலித் பத்திரிகையாளர்கள் இல்லாத ஊடகங்கள்

இந்தியாவின் செய்தி ஏடுகளின் அறைகளிலும், தொலைக்காட்சி நிறுவனங்களின் ‘கேமரா’ அறைகளிலும் பட்டியல் இனப்பிரிவினரையோ பழங்குடியினரையோ காண முடியவில்லை. இவர்களின் பங்கேற்பு இல்லாமலே ஊடகத் துறைகள் செயல்படுகின்றன என்று, இத்துறையில் நீண்டகாலமாக கவனம் செலுத்திவரும் பேராசிரியர் ஜெஃபிரே, புதுடில்லி பத்திரிகை ஆசிரியர் சங்கத்தில் நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டார். தேசிய ஊடகங்களில் இந்தப் பிரிவினர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், இது குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தியிருந்தால், இந்த அநீதியை நீக்கியிருக்க முடியும் என்றார். அமெரிக்க ஊடகங்களில் கறுப்பின மைனாரிட்டியினர் பங்கேற்பு இல்லாமல் இருந்ததைக் கண்டறிந்து அந்நாட்டு பத்திரிகையாளர் கழகம் கறுப்பின மைனாரிட்டியினரின் பங்கேற்பை ஒரு காலக்கெடு நிர்ணயித்து உறுதிப்படுத்தியது. அதுபோன்ற சமூகத் தணிக்கை இங்கே கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பட்டியல் இன பழங்குடியினரின் பிரச்சனைகளுக்காக தரமான பத்திரிகை கொண்டு வருவதற்கு தனியாக அறக்கட்டளை ஒன்றை உருவாக்கலாம் என்ற யோசனையையும் அவர் முன் வைத்தார். மார்ச் 31 ஆம் தேதி பத்திரிகையாளர்...

தாம்பரம் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆதாரங்களுடன் உரை சேது சமுத்திரத் திட்டம்: ஜெயலலிதாவின் இரட்டை வேடம்

தாம்பரம் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆதாரங்களுடன் உரை சேது சமுத்திரத் திட்டம்: ஜெயலலிதாவின் இரட்டை வேடம்

ஆடம்ஸ் பாலத்தை ராமன் பாலம் என்று இந்துத்துவ பார்ப்பன சக்திகள் கூறி உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மதவெறி கருத்துகளையே முன் வைத்துள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்திவிட்டு, ‘ராமன் பாலத்தை’ இந்தியாவின் தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மத்திய அரசிடம் உச்சநீதி மன்றம் கருத்து கேட்டுள்ளது. இந்த நிலையில் ‘இராமன் பாலத்தை’ தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதி, தனது பார்ப்பன இந்துத்துவா ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இதே ஜெயலலிதா கடந்த காலங்களில் சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து அமுல்படுத்தக் கோரி தேர்தல் அறிக்கைகளில் கூறியதையும் ‘ராமன் பாலம்’ என்ற கற்பனைக்கு எவ்வித வரலாற்றுச் சான்றுகளும் இல்லை என்பதையும் விளக்கி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து: இந்தப்...

கல்பாக்கம் அணுமின் நிலைய கதை என்ன?

கல்பாக்கம் அணுமின் நிலைய கதை என்ன?

கல்பாக்கம் அணுமின் நிலையம் – அதன் இலக்கு உற்பத்தி திறனில் 30 சதவீதத்தைத் தாண்டியதே இல்லை 1969 இல் கட்டுமானத்தைத் துவங்கிய மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன் என்ற கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அணு உலைகளின் முதல் யூனிட் தன் மின் உற்பத்தியை ஜூலை 1983 இல் துவங்கியது. இது 235 மெகாவாட் திறனுள்ள அணு உலையாகும். இரண்டாவது யூனிட் 23.1.1986 இல் தன் உற்பத்தியைச் துவங்கியது. 1983-84-லிருந்து 2007-08 ஆம் ஆண்டு வரையிலான 25 ஆண்டுகளில் இந்த அணுமின் நிலையமானது – 50 சதவீதம் மேலாக இரண்டு ஆண்டுகளிலும் (1987-88 = 53.42ரூ, 2006-07 = 58.26ரூ) 40 ரூ – 50ரூ உற்பத்தியை நான்கு ஆண்டுகளிலும் (1984-85 = 45.04ரூ, 1985-86 = 48.46ரூ, 1986-86 = 41.71ரூ, 2005-06 = 40.58ரூ) 30ரூ – 40ரூ – உற்பத்தியை நான்கு ஆண்டுகளிலும் (1988-89 = 30.46ரூ, 2003-04...

சங்கமித்ரா முடிவெய்தினார்

சங்கமித்ரா முடிவெய்தினார்

நெருப்பு எழுத்துகளால் ஆரியத்தை அலற வைத்த ஆற்றல்மிகு எழுத்தாளர் சங்கமித்ரா (72) முடிவெய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கடந்த சில மாதங்களாக இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, திருச்சி கி.ஆ.பெ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், கடந்த 7 ஆம் தேதி காலை முடிவெய்தினார். 1970களில் ‘விடுதலை’ நாளேட்டில், ‘காஞ்சிப் பெரியவாளின் கல்கி முகாரி’ என்று எழுதத் தொடங்கிய அவர், தனது எண்ணங்களை எழுதிக் குவித்துக் கொண்டே இருந்தார். ‘பெரியார் தமிழ்ப் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வந்த அவர், வே. ஆனைமுத்து அவர்களுடன் வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து, வகுப்புவாரி உரிமை, பெரியார் சிந்தனைகளை ‘இந்தி’ மொழியில் பேசி பரப்பி வந்தார். ‘ஸ்டேட் வங்கி’யில் உயரதிகாரியாகப் பணியாற்றி, பார்ப்பன அதிகாரிகளின் பூணூல் வெறி சகிக்காது, பதவியை உதறி வெளியே வந்த அவர், பார்ப்பன அதிகார வர்க்கத்தை தனது எழுத்துகளால் தோலுரித்துக் காட்டி வந்தார். திருச்சி தென்னூரில் அவரது உறவினர்...

லஞ்சம் வாங்குவதற்கு சித்திரவதை செய்யும் இராணுவம்-3

லஞ்சம் வாங்குவதற்கு சித்திரவதை செய்யும் இராணுவம்-3

இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்’ எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு, போர் முடிந்த பிறகு இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை, கடந்த 13 ஆம் தேதி அய்.நா.வின் அறிக்கையாக சமர்ப்பித்தது. இலங்கை அரசுக்கு உலக அரங்கில் மேலும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ள அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் இவை: பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் கீழோ, சந்தேகத்தில் பேரிலோ கைது செய்யப்படுகிறவர் களுக்கு எந்த முறையான சட்ட நடைமுறைகளை யும் இலங்கை அரசு பின்பற்றுவது கிடையாது. ‘ஆம்னஸ்ட்டி இன்டர் நேஷனல்’ இப்படி ஏராளமான வழக்குகளை கண்டறிந்துள்ளது. பிரிட்டனில் செயல்படும் ஒரு மனித உரிமை அமைப்பு (குசநநனடிஅ கசடிஅ வடிசவரசந) இலங்கையில் செயல்படும் தமது பிரதிநிதிகளிடமிருந்து பெற்ற புகார்களை அறிக்கையாக 2011 டிசம்பரில் வெளி யிட்டுள்ளது. இதன்படி 32 மனித உரிமை களப் பணியாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, ராணுவ தடுப்பு முகாம்களிலும் காவல் நிலையங் களிலும்...

கழகத் தோழர்களை தாக்கிய  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

கழகத் தோழர்களை தாக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

கிருட்டிணகிரி மாவட்டம் நீலகிரியில் கழகத் தோழர்கள் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த கழகத் தோழர்கள் ஓசூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது மருத்துவமனைக்குள்ளும் நுழைந்து தாக்கினர். இதனால் மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். நீலகிரி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினராக உள்ள இராமச்சந்திரா என்பவரின் அண்ணன் வரதராசன் என்பவரே வேன்களில் ஆட்களை அழைத்து வந்து 6 ஆம் தேதி இரவு ஒரு மணிக்கு கழகத்தினர் மீது தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் குடும்பத்தினரை எதிர்த்து வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடாத நிலையில் கழகத்தைச் சார்ந்த தோழர் மாருதி, தனது குடும்பத்தவரை வேட்பாளராக நிறுத்தியதால் ஆத்திரமடைந்தனர். ராமச்சந்திரனும் அவரது ஆதரவாளர்களும் பெரியார் திராவிடர் கழகத்தை கலைத்துவிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விடுமாறு கட்டாயப்படுத்தினர். தோழர்கள் அதை ஏற்க மறுத்து வருவதால் இந்தத் தாக்குதல்...

பெ. மணியரசன் கூறுகிறார்…

பெ. மணியரசன் கூறுகிறார்…

“தமிழர் ஒற்றுமை என்ற பெயரில் சாதி ஒடுக்குமுறையைக் கண்டு கொள்ளாமல் இருக்க மாட்டோம். சாதி ஒடுக்கு முறை நீங்கும்போதுதான் உண்மையான தமிழர் ஒற்றுமை ஏற்படும் என்பது எங்கள் கொள்கை.” – த.தே.பொ.க. செயலாளர் பெ. மணியரசன் பேட்டியிலிருந்து – ‘கருக்கல்’ இதழ் மார்ச்-ஏப். 2012 பெரியார் முழக்கம் 12042012 இதழ்

கோயில் சொத்துகளை  ஏப்பமிடும் பார்ப்பனர்கள்

கோயில் சொத்துகளை ஏப்பமிடும் பார்ப்பனர்கள்

கோயில் நிர்வாகத்தை அரசு கட்டுப்பாட்டி லிருந்து நீக்கி, தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராமகோபாலன் ‘பிராமண சங்கம்’ இந்து முன்னணி போன்ற பார்ப்பன பார்ப்பனிய அமைப்புகள் கூப்பாடு போடுகின்றன. கோயில் சொத்துகளை சுருட்டுவதில் பார்ப்பனாகளே முன்னணியில் இருக்கிறார்கள் என்ற உண்மை அம்பலத்துக்கு வந்துள்ளது. மயிலாப்பூர் கபாலீசுவரன் கோயில் நிர்வாக அதிகாரி பரஞ்சோதி, கோயில் சொத்துகளை ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். 473 பேரில், இரண்டு பேர் மட்டுமே முஸ்லீம்கள், இந்துக்களில் ஒரு சில பார்ப்பனரல்லாதார் தவிர, பெரும்பான்மையினர், அய்யர், அய்யங்கார்கள்தான். கே.எம்.முன்ஷி ராஜ கோபாலாச்சாரி பார்ப்பனர்களால் தொடங்கப் பட்ட பாரதிய வித்யாபவன், ‘காபாலீசுவரனுக்கு’ 35 லட்சம் ரூபாய் வாடகை தரவில்லை. 1903 ஆம் ஆண்டு பார்ப்பனர்கள் தொடங்கிய மயிலாப்பூர் கிளப் ‘கபாலீசுவரனுக்கு’ தரவேண்டிய வாடகை பாக்கி 3.57 கோடி, ‘புதிய ஜனநாயகம்’ பத்திரிகை  இதை விரிவாக அம்பலப்படுத்தியுள்ளது. தில்லை நடராசன் கோயில் நிர்வாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தீட்சப் பார்ப்பனர் கோயில்...

பா.ஜ.க.வின் ‘தமிழ் தேசியம்’

பா.ஜ.க.வின் ‘தமிழ் தேசியம்’

சாதி எதிர்ப்பு – பார்ப்பன எதிர்ப்பு – இந்து மத எதிர்ப்புகளை புறந்தள்ளி விட்டு, மொழி அடிப்படையில் முன் வைக்கப்படும் தமிழ் தேசிய முழக்கத்தில் பா.ஜ.க.வினரும் பங்கேற்க தயாராகவே இருக்கிறார்கள் என்பதை அண்மையில் வந்துள்ள செய்திகள் உறுதி செய்கின்றன. தமிழக பா.ஜ.க. மதுரையில் ஏப்ரல் மாதத்தில் ‘தாமரை சங்கமம்’ என்ற பெயரில் மாநாடு நடத்தவிருக்கிறது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பா.ஜ.க. தலைவர் பொன். இராதா கிருட்டிணன், “மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் 2 தமிழ்த் தாய் சிலைகளின் பவனி 8 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் (‘தினத்தந்தி’ 6.4.2012) என்று கூறியுள்ளார். மதுரை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜரத்தினம் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “கன்யாகுமரியிலிருந்து தமிழன்னை சிலை மதுரைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படவிருக்கிறது. தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க பா.ஜ.க.வால் தான் முடியும் என்பதோடு, தமிழ் உணர்வு கலந்த தேசியமே...

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (6)

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (6)

1917 “தென்னிந்திய மக்கள் சங்கம்” சார்பில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் நாளிதழ்கள் வெளி வந்தன. ஆங்கில நாளிதழ் ‘ஜஸ்டிஸ்’ பிப்ரவரி 26-ல் வெளியிடப்பட்டது. இவ்விதழுக்கு ஆசிரியராகப் பணியாற்ற சி.கருணாகரமேனன் ஒப்புக் கொண்டிருந்தார். அன்னிபெசன்ட் சர். சி.பி.ராமசாமி (அய்யர்), கேசவ (பிள்ளை) ஆகியோர் குறுக்கிட்டு அவரைத் தடுத்தனர். எனவே ஜஸ்டிஸ் நாளிதழ் வெளிவர 6 நாட்களே இருக்கும் நிலையில் கருணாகரமேனன் ‘பல்டி’ அடித்து ஆசிரியராக இருக்க மறுத்து விட்டார். பின்னர், நாயரே கவுரவ ஆசிரியர் ஆனார். ‘மதராஸ் ஸ்டாண்டர்ட்’ பத்திரிகையின் ஆசிரியராய் இருந்த பி. ராமன் (பிள்ளை) துணை ஆசிரியர் ஆனார். தமிழ் நாளிதழ் ‘திராவிடன்’ ஜூன் மாதத்தி லிருந்து வெளிவரத் துவங்கியது. இவ்விதழின் ஆசிரியராக என்.பகவத்சலம் (பிள்ளை), துணை ஆசிரியர்களாக சாமி ருத்ர கோடீஸ்வரர், பண்டித வில்வபதி (செட்டியார்) ஆகியோர் பணியாற்றினர். ஏற்கனவே நடைபெற்று வந்த (நிறுவியது 1885-ல்) ‘ஆந்திரப் பிரகா சிகா’ என்ற தெலுங்கு வார இதழின்...

உச்சநீதிமன்றத்தின் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை நர்மதா அணைக்கு ஒரு தீர்ப்பு, சேது சமுத்திரத்துக்கு வேறு ஒரு தீர்ப்பா?

உச்சநீதிமன்றத்தின் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை நர்மதா அணைக்கு ஒரு தீர்ப்பு, சேது சமுத்திரத்துக்கு வேறு ஒரு தீர்ப்பா?

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் உரையாற்றினார். அவரது உரையி லிருந்து: இப்படிப்பட்ட சூழலில்தான் நாம் இராமாயணத்தைப் பற்றி பேச வேண்டி வந்துள்ளது. சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் அக்டோபர் 1 அன்று பொது வேலை நிறுத்தம் நடத்துவது என்று தி.மு.க.வும் அதன் தோழமை கட்சிகளும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள். இதில் நீதிமன்றங்களின் போக்கைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கோரி தடை ஆணை கேட்டு சுப்ரமணியசாமி வழக்குத் தொடுத்தார். மத்திய அரசிடம் எந்த கருத்தும் கேட்காமல், இராமர் பாலத்திற்கு எந்தவித சேதமும் வராமல் வேலை நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் ஆணை வழங்கியது. (நாம் சாதாரண ஒரு குடிமகன் நினைத்தால்கூட என்னுடைய நிலத்தில் ஒருவன் ஆக்கிரமிப்பு செய்கிறான் என்றோ, அல்லது எனது வீட்டை இடிக்க...

86 ஆம் அகவையில்  மூத்த பெரியார் தொண்டர் திருவாரூர் தங்கராசு

86 ஆம் அகவையில் மூத்த பெரியார் தொண்டர் திருவாரூர் தங்கராசு

கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடறிந்த பேச்சாளருமான திருவாரூர் தங்கராசு அவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி 86 ஆவது பிறந்த நாளாகும். பிறந்த நாளில் இராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அவரது இல்லம் சென்று கழகத் தோழர்கள் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி, வழக்கறிஞர் இளங்கோ, வழக்கறிஞர் குமாரதேவன், சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் உமாபதி, அன்பு தனசேகர், சுகுமார், இராவணன், கோவை ராசுக்குமார், ஜான் உள்ளிட்ட தோழர்கள் திருவாரூர் தங்கராசு அவர்களை சந்தித்து  சால்வை அணிவித்து, மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். கழகத் தோழர்களை சந்தித்த மகிழ்வில் பழைய வரலாறுகளை நினைவுகூர்ந்து, திருவாரூர் தங்கராசு நீண்ட நேரம் உரையாடினார். பெரியார் கொள்கைக்கே அர்ப்பணித்து, நாடு முழுதும் கொள்கைகளை எடுத்துச் சென்ற திருவாரூர் தங்கராசு அவர்கள் மேலும் பல்லாண்டு வாழ ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது. பெரியார் முழக்கம் 12042012 இதழ்

அணி திரட்ட முடியுமா?

அணி திரட்ட முடியுமா?

பொருளாதாரப் புரட்சி ஒன்றை ஏற்படுத்த, பாட்டாளிகளைத் தட்டி எழுப்ப அவர்களிடம் மார்க்ஸ் கூறினார்: “அடிமை விலங்குகளைத் தவிர இழப்பதற்கு வேறு எதுவும் உங்களிடம் இல்லை” என்று. ஆனால், சமுதாய மற்றும் மதவியல் உரிமைகளை சில சாதிகளுக்கு அதிகமாகவும், சில சாதிகளுக்கு குறைவாகவும் பல்வேறு சாதிகளுக்கு இடையே மிக வஞ்சகமாகவும் பகிர்ந்து அளிக்கப் பட்டுள்ள நிலையில், சாதியமைப்புக்கு எதிராக இந்துக்களைத் தட்டி எழுப்ப, காரல்மார்க்சின் முழக்கம் சிறிதும் பயன் அளிக்காது. சாதிகள் உயர்ந்தவை தாழ்ந்தவை என்ற வரிசைப்படி தரம் பிரிக்கப்பட்டுள்ளன. தங்கள் அந்தஸ்தை சாதிகள் மிகவும் அக்கறையோடு காப்பாற்றி வர எண்ணு கின்றன. சாதிய அமைப்பு ஒழிக்கப்பட்டால், சில சாதிகள் மற்ற சாதிகளைவிட அதிகமாக தங்கள் தனியுரிமைகளையும், அதிகாரங்களையும் இழக்க வேண்டியிருக்கும் என்பது எல்லாரும் அறிந்த உண்மை. எனவே, சாதி அமைப்பு என்னும் கோட்டையைத் தகர்க்க, இந்துக்களை பொதுவான ஓர் அணியாக ஒன்று திரட்ட உங்களால் முடியாது. புரட்சியாளர் அம்பேத்கர் பெரியார் முழக்கம்...

ஊர்த் தமிழன் – சேரித் தமிழன் பேதத்தை ஒழித்திட தயாராவோம்!

ஊர்த் தமிழன் – சேரித் தமிழன் பேதத்தை ஒழித்திட தயாராவோம்!

இரட்டை தம்ளர், இரட்டை சுடுகாடு என்ற சாதித் தீண்டாமை வடிவங்களை எதிர்த்து பரப்புரை நடத்திய பெரியார் திராவிடர் கழகம், அம்பேத்கர் பிறந்த நாளில் பரமக்குடியிலிருந்து ‘ஊர்-சேரி’ என்ற இரட்டை வாழ்வுரிமை அவலங்களை எதிர்த்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ‘சுதந்திரம்’ பெற்று விட்டதாக கூறப்படும் ஒரு நாட்டில், ஊரின் கடைக் கோடியில் சாதியால் ஒதுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் தனியாகக் குடியமர்த்தப்பட்டுக் கிடக்கிறார்கள். ஒவ்வொரு கிராமமும், ‘ஊர்-சேரி’ என்று பிரிந்து கிடக்கிறது. இப்படி ஒரு இழிவானதலைகுனியத்தக்க பிரிவினை அமைப்பு நீடித்து வருகிறதே என்ற சிந்தனைகூட வற்றிப் போய், தமிழர் சமூகம் கிடக்கிறது என்பதுதான் வேதனை. “மனிதனை மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக்கூடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும். ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் மூழ்கச் செய்யாமலோ பூமிப் பிளவில் அழியச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த...

வடசென்னையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

வடசென்னையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

புளியந்தோப்பு பகுதி கழகத்தின் சார்பில் அம்பேத்கரின் 122-வது பிறந்த நாளை முன் னிட்டு “அம்பேத்கரின் எதிர்பார்ப்பு நிறைவேறி யுள்ளதா” என்ற தலைப் பில் மாபெரும் விளக்கப் பொதுக் கூட்டம் நடை பெற்றது. சி.அருள்தாஸ் தலைமை வகிக்க, விசுயன், தா.இ.கோவிந்தன் முன்னிலை வகிக்க வரவேற்புரையினை அ.அமுல்ராசு நிறைவேற்றினார். தொடர்ந்து மாவட்டக் கழகத் தலைவர் ஏ.கேசவன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ச.குமாரதேவன், கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் சிற்பிராஜனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பொது மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிற்பிராசன் நடத்தி முடிக்கும்போது ஆரவாரமும், கைத்தட்டலுமாக பொதுமக்கள் வரவேற்பளித்தனர். நிகழ்ச்சியில் புதிதாக ஏழு தோழர்கள் (மது, விஜி, அண்ணாமலை, தமிழ், ராஜசேகர், அப்பு, சுதாகர்) கழகத்தில் இணைந்தனர். நன்றியுரையினை சுப்ரமணியன் நிகழ்த்தினார். பெரியார் முழக்கம் 19042012 இதழ்

பெரியாரின் தொண்டு: தலைமை நீதிபதி பெருமிதம்

பெரியாரின் தொண்டு: தலைமை நீதிபதி பெருமிதம்

கடந்த காலங்களில் சாதி ரீதியான பாகுபாட்டை மிக அதிகமாக கண்டிருக்கிறோம். அவையெல்லாம் இந்திய வரலாற்றின் கருப்பு நாட்கள். தமிழகத்தில் பெரியாரின் அயராத உழைப்பின் காரணமாகத்தான் இன்று ஒரு சில குக்கிராமங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சாதி பாகுபாடு துடைத்தெறியப்பட்டது. பெரியாரின் குரலை அடுத்துதான், இடஒதுக்கீட்டு கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்கத் தொடங்கியது. தமிழகத்தில் இன்று பல்வேறு துறைகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் போன்ற சாதியினருக்குவேலை கிடைப்பதற்கான வழியை அமைத்துக் கொடுத்தவர் அந்த பெரியார்தான். – உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த அம்பேத்கர் விழாவில் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் உரையிலிருந்து. (நன்றி: ‘தினத்தந்தி’ 17.4.2012) பெரியார் முழக்கம் 19042012 இதழ்

30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தலித் குழந்தைகூட சேர்க்கப்படாத அரசு தொடக்கப் பள்ளி

30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தலித் குழந்தைகூட சேர்க்கப்படாத அரசு தொடக்கப் பள்ளி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பச்சயன்காடு என்ற ஊரில் உள்ளாட்சித் துறை நடத்தும் தொடக்கப் பள்ளியில் ஒரு தலித் மாணவர்கூட இல்லை என்ற அதிர்ச்சியான செய்தி வெளி வந்துள்ளது. இது குறித்து ‘இந்து’ நாளேடு (ஏப், 2012) முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பச்சயன்காடு கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 1980 ஆம் ஆண்டிலிருந்தே தலித் சமூகத்தைச் சார்ந்த ஒரு குழந்தைகூட படிக்க முன் வரவில்லை. இந்தப் பள்ளி இயங்கும் பகுதியில், பச்சயன்காடு, தெருக்காடு கிராமங்களில் தலித் குடியிருப்புகள் இருக்கின்றன. 1980 ஆம் ஆண்டுக்கு முன் இப்பகுதி  தலித் மக்கள் தங்கள் குழந்தை களை இப்பள்ளியில் சேர்த்து வந்தனர். அதே ஆண்டின் இடைக்காலத்தில் தலித் குழந்தைகள் மீது அவமதிப்பும், பாகுபாடும் திணிக்கப்பட்டதால், தங்கள் குழந்தைகளை அப்பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திக் கொண்டனர். இந்த அவமதிப்பை எதிர்த்து இப்படி ஒரு முடிவை எடுத்தவரின் பேரன்...

காஞ்சியில் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

காஞ்சியில் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

சென்னை தாம்பரத்தில் 31.3.2012 மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ம.ரே.ராச குமார் தலைமை வகிக்க, க.வே.சேகர் வரவேற்புரையாற்ற, மு.தினேசு குமார், டேவிட் பெரியார் முன்னிலை யில் கா.ரவிபாரதி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந் திரன் கருத்துரை வழங்கினர். நிகழ்வின் இறுதியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தனது உரையில் அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் பற்றியும், இராஜீவ் காந்தி ஒப்பந்தத்தால் அழிவை நோக்கியுள்ள கூடங்குளம் நிலை பற்றியும் தனித் தமிழ்நாடு எண்ணத்தை தமிழக மக்களின் மனதில் எண்ண வைக்கும் இந்திய அரசின் நிலை பற்றியும் தெளிவாக கூறியுள்ளார் பெரியார் முழக்கம் 19042012 இதழ்

வரலாறுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை தமிழகத்தில் நடந்த இராமாயண எதிர்ப்பு இயக்கங்கள்

வரலாறுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை தமிழகத்தில் நடந்த இராமாயண எதிர்ப்பு இயக்கங்கள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையி லிருந்து: “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவர்களுக்கு வால்மீகி இராமாயணமோ, துளசிதாச இராமா யணமோ தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது கம்ப இராமாயணம தான். இராவணன என்பவன் ஒரு ஒழுக்கமான மன்னன் என்றும், கடத்தி வந்த சீதையைக்கூட மாண்புடன் நடத்திய பண்பாளன் என்றும்தான் நினைக்கிறார்களே தவிர, வில்லன் கொடியவன் என்ற சிந்தனையே தமிழ்நாட்டு மக்களிடம் இல்லை” என்று மற்றொரு ஆய்வாளர் எழுதுகிறார். ஒரு பெரிய பிரச்சார இயக்கம் இரா மனுக்கு எதிராக நடைபெறுகிறது; இராவணனை வைத்து காவியங்கள் உள்ளன என்றும் எழுதியுள்ளார். 1922 ஆம் ஆண்டு திருப்பூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில மாநாடு நடக்கின்றது. கோவில் களில் நுழைய இதுவரை அனுமதிக்கப்படாத நாடார்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று, பெரியார் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். (1950 வரை நாடார்களும்  கோவிலுக்குள்...

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (7)

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (7)

1917ஆம் ஆண்டு நிகழ்வுகள் (2) நீதிக்கட்சியின் வளர்ச்சியைக் கண்ட காங்கிரஸ் கட்சியினர், தமது கட்சியிலுள்ள பார்ப்பன ரல்லாதாரை திருப்தி செய்யவும், பார்ப்பனரல்லாதார் நலனில் காங்கிரசுக்கும் அக்கறையுள்ளது என்பதாகக் காட்டிக் கொள்ளவும், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு பார்ப்பனரல்லாதார் அமைப் பினை ‘சென்னை மாகாண சங்கம்’ என்ற பெயரில் தோற்றுவிக்கலாயினர். இதன் அமைப்புக் கூட்டம் செப்டம்பர் 15 இல் கூட்டப்பட்டு, அடிதடி ரகளையில் முடிந்தது. அதன் பின் மீண்டும் செப்டம்பர் 20 இல் கூட்டப்பட்டு, இதன் அமைப்பாளர் கேசவபிள்ளையால் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ‘பார்ப்பனரல்லாதாருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் சீர்திருத்தம் அமைய வேண்டும் என்று மாண்டேகுவிடம் கூறுதல்’ இச்சங்கத்தின் நோக்கம் என்பதால் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ‘சென்னை மாகாண சங்கம்’ என்பது மதுரைப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் உண்டான ஒரு சங்கம் என்று நீதிக்கட்சியினர் எடுத்துக் கூறினர். ‘இந்து’ நாளிதழ் இச்சங்கம் மிகவும் அவசியமானது என்று எழுதியது. சென்னை மாகாணச் சங்கத்தின் தலைவராக...

சேலம் கிழக்கு கழகம் சாதனை; கழக ஏட்டுக்கு 580 சந்தாக்கள்

சேலம் கிழக்கு கழகம் சாதனை; கழக ஏட்டுக்கு 580 சந்தாக்கள்

2.4.2012 திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு சேலம் தாதகாப்பட்டி பெரியார் உடற்பயிற்சி மையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட பெரியார் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்க, மாவட்ட தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா ஆயிரம் சேர்ப்பது என முடிவு செய்து முதல் தவணையாக 580 சந்தாக்கள் தலைமைக்கு அனுப்பப்பட்டது. மீதி சந்தாக்களை விரைவில் வசூலித்து ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது. மே மாதம் 26 ஆம் தேதி, ஓமலூரில் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்துடன் நாத்திகர் விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஏற்காடு கோடை விழாவின்போது, அரசு கண்காட்சி சாலையில் ஒரு அறை வாடகைக்கு எடுத்து, புகைப்பட கண்காட்சி மற்றும் புத்தக விற்பனை செய்வது என்றும், ஜூன் மாதம் ஏற்காடு பகுதியில் படிப்பகம் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மே 6 ஆம் தேதி ஆத்தூரிலும், ஜூன்...

தலையங்கம் ‘மனுதர்மத்துக்கு’ மரண அடி

தலையங்கம் ‘மனுதர்மத்துக்கு’ மரண அடி

‘சூத்திரர்களுக்கு கல்வி தரக் கூடாது’ என்று கூறியது ‘மனுதர்மம்’. அந்த பார்ப்பன மனுதர்மக் கோட்பாட்டுக்கு தந்துள்ள மரண அடிதான். 2009 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய இலவச கல்வித் திட்டம், 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வியை இலவசமாக கட்டாயமாக வழங்குவதை உறுதி செய்யும் இத் திட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதி சுவதந்தர் குமார் ஆகியோர், அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார், நீதிபதி கே.எஸ். இராதா கிருஷ்ணன்.  இத் தீர்ப்பு அரசு நிதி உதவி பெறாத மைனாரிட்டி கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்ற மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். பெரும்பான்மை தீர்ப்பின் படி அரசின் இந்த சட்டம், அரசு  உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறாத மைனாரிட்டி அல்லாத பள்ளிகளுக்கு பொருந்தும்....

ஆனூராருக்குப் ‘பெரியார் ஒளி’ விருது

ஆனூராருக்குப் ‘பெரியார் ஒளி’ விருது

நெய்வேலியில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தொல். திருமாவளவன் வழங்கினார் 2007 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி யினர் சமூகத் தொண்டாற்றி வரும் தலித் அல்லாதவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டி வருகின்றனர். 2012 ஆம் ஆண் டிற்கான ‘பெரியார் ஒளி’ விருது கழகத் தின் துணைத் தலைவர் ஆனூர் செகதீச னுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அதேபோல் ‘அம்பேத்கர் சுடர்’ விருது முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தோழர் என். வரதராஜனுக் கும், ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது ஆய்வறிஞர் கந்தசாமிக்கும் ‘காமராசர் கதிர்’ விருது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமாருக்கும், ‘காயிதே மில்லத் பிறை’ விருது பேராசிரியர் அப்துல் காதருக்கும், ‘மொழி ஞாயிறு’ விருது பேராசிரியர் க.பா.அறவாணனுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் அன்று மாலை 7 மணிக்கு நெய்வேலியில் நடந்த எழுச்சியான...

சமூக ஒற்றுமையை சீர்குலைத்து வெறுப்பை வளர்க்கும் சாதிய வாழ்க்கைக்கு முடிவு கட்டுவோம்

சமூக ஒற்றுமையை சீர்குலைத்து வெறுப்பை வளர்க்கும் சாதிய வாழ்க்கைக்கு முடிவு கட்டுவோம்

பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் கழகத்தின் 15 நாள் பரப்புரை இயக்கம் தொடங்கியது உசிலம்பட்டியில் சாதி வெறியர்கள் கல்வீச்சில் தோழர் படுகாயம்; சலசலப்புகளுக்கு அஞ்சாமல் பயணம் தொடருகிறது இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடு போன்றவற்றிற்கு எதிராக பரப்புரை நடத்திய பெரியார் திராவிடர் கழகம், இந்த ஆண்டு ஊர் – சேரி என்று இருப்பதற்கு எதிராக, பரப்புரை பயணத்தை துவங்கியுள்ளது. அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், சாதி ஒழிப்புப் போராளி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில், சாதி ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக் கழகம் பயணத்தை துவங்கியது. தாழ்த்தப்பட்டவர் மத்தியில் மட்டுமே பேசிய சாதி ஒழிப்பு இயக்கங்களுக்கு மாறாக, பிற்படுத்தப் பட்டவர்கள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று, அவர்களிடத்திலே தீண்டாமை கொடுமைகளை விட்டொழிக்குமாறு வலியுறுத்தி, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பரப்புரை செய்து வரும் கழகம், இவ்வாண்டு தாழ்த்தப்பட்ட அமைப்புகளோ, சாதி ஒழிப்பு...

இதுவா, தமிழ்ப் புத்தாண்டு?

இதுவா, தமிழ்ப் புத்தாண்டு?

சித்திரையில் தொடங்குகிறதாம் ‘தமிழ்ப் புத்தாண்டு’. தமிழக முதல்வர் ஜெயலலிதா, இதுதுதான் தமிழர்களின் ‘புத்தாண்டு’ என்று நீட்டி முழக்குகிறார். இப்போது பிறந்துள்ள “தமிழ்” வருடத்தின் பெயர் என்ன தெரியுமா? “நந்தன” – இது தமிழா என்று கேட்டு விடாதீர்கள். வடமொழி தான்! ‘பிரபவ’ தொடங்கி ‘அட்சய’வில் முடியும் 60 ஆண்டுகளின் பெயர் களுமே சமஸ்கிருதம் தான்! மருந்துக்குக்கூடதமிழ் இல்லை. ஆனால், இதற்குப் பெயர் ‘தமிழ்’ப் புத்தாண்டாம்! இதோ 60 ஆண்டுகளின் பெயர்களைப் பாருங்கள்! பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோத்பத்தி, ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்ரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, ஸர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துர்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராபவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராக்ஷஸ,...

பன்னாட்டு நிறுவனங்கள் – பார்ப்பனர்கள் – ‘பகவான்கள்’ கூட்டுக் கொள்ளை

பன்னாட்டு நிறுவனங்கள் – பார்ப்பனர்கள் – ‘பகவான்கள்’ கூட்டுக் கொள்ளை

விவசாய மான்யம், உணவு மான்யம் போன்ற மான்யங்கள் வழங்குவதால்தான் கடும் நிதி நெருக்கடிகளை சந்திப்பதாக மத்திய அரசு புலம்புகிறது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள சர்வதேச நிதியமைப்புகளான உலக வங்கி, சர்வதேச நிதியமைப்பு போன்ற நிறுவனங்களும் இதே கருத்தையே வலியுறுத்துகின்றன. ஆனால், பெரும் தொழில் நிறுவனங்களான கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் பெரும் தொகை ஒவ்வொரு ஆண்டும் தள்ளுபடி செய்யப்படுவது பற்றி, பார்ப்பன ஊடகங்களோ, இந்திய பார்ப்பன ஆட்சியோ, சர்வதேச நிதியமைப்புகளோ, வாய் திறப்பதில்லை. 2005 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை பெரும் கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் தள்ளுபடி செய்யப்பட்ட வருமான வரி மட்டும் ரூ.3,95,878 கோடி. (2005 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக 48.17 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது) இதே காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள ‘எக்சைஸ்’ வரி – ரூ.9,55,726 கோடி. (217.81 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது) இதே காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட சுங்கவரி (கஸ்டம்ஸ் டூட்டி) –...

அஞ்சலகத்தில் “தீண்டாமை”யை  கண்டித்து கழகம் போராட்டம்

அஞ்சலகத்தில் “தீண்டாமை”யை கண்டித்து கழகம் போராட்டம்

கோவை மாவட்டம் அன்னூர் வடவள்ளி ஊராட்சியில் அஞ்சலகத்தில் அங்குள்ள தலித் மக்களை அனுமதிக்காததை கண்டித்தும் அதே ஊராட்சிக்கு உட்பட்ட தாத்தம்பலயத்தில் செயல்படும் அங்கன்வாடியில் தலித் குழந்தைகளை அனுமதிக்காததை கண்டித்தும் சின்னவடவல்லியில் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் 16.4.2012  அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் து.ராமசாமி, கலங்கல் வேலுசாமி, சூலூர் குமாரவேல், கோவை வே.கோபால், இர. இரஞ்சித் பிரபு, சா.கதிவரன், அன்னூர் பொறுப்பாளர்கள் ஜோதி ராம், ஈஸ்வரன், இராமன், கணேசன், வீரமுத்து மற்றும் நூற்றுக்கணக்கான தோழர்கள், பெண்கள் பங்கேற்றனர். கழகம் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தவுடன் ஊராட்சி தலைவர் கணேசன் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து அங்கன்வாடி செயல்படும் கட்டிடம் தனியாருக்கு சொந்தம் என்பதால் பொது கட்டிடம் தேவை என்று முறையிட்டதை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் தனது சிறப்பு நிதியிலிருந்து ரூ.6.5 லட்சம் ஒதுக்கி யுள்ளார். பெரியார் முழக்கம் 26042012 இதழ்

வரலாறுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை நடிகவேள் எம்.ஆர்.ராதா நாடகத்தைத் தடுக்க வந்த சட்டம்

வரலாறுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை நடிகவேள் எம்.ஆர்.ராதா நாடகத்தைத் தடுக்க வந்த சட்டம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து: எம்.ஆர்.இராதா நாடக உலகில் முழுக்க முழுக்க பெரியார் கருத்துகளைப் பற்றி மட்டுமே பேசியவர். சினிமாவை விரும்பியவர் அல்ல. 1937 முதல் 1942 வரை சினிமாவில் நடித்து, சினிமா வேண்டாம் என்று நாடகம் நடிக்க வந்தவர். பன்னிரண்டு ஆண்டு களுக்குப் பிறகு, ‘இரத்தக் கண்ணீர்’ நாடகத்தை சினிமாவாக எடுக்க வேண்டும் என்று, பி.ஏ. பெருமாள் கேட்ட பிறகு சினிமாவில் நடிக்க வருகிறார். அப்போதுகூட, “நான் தினமும் நாடகம் நடிப்பேன், நேரம் இருக்கும்போது மட்டும் தான் படப்பிடிப்பிற்கு வருவேன், என்னை தொல்லை கொடுக்கக் கூடாது” என்று சொல்வாராம். இன்னொன்று ‘இரத்தக் கண்ணீர்’ நாடகத்தில் தன் மனைவியை நண்பனுக்கு திருமணம் செய்து வைக்கும் காட்சியை எந்த காரணத்தைக் கொண்டும் நீக்கிவிடக் கூடாது என்பது எம்.ஆர்.இராதாவின் மற்றொரு கோரிக்கை. அவர் நாடகத்தை துவக்கும் போதெல் லாம் பெரியார்...

நன்கொடை

நன்கொடை

தென் சென்னை மாவட்டக் கழகப் பொருளாளர் கரு. அண்ணாமலை-வெ.தமிழ்ச் செல்வி ஆகியோரின் 2வது மகன் அண்.அன்பரசன், 12.4.2012 அன்று 14 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் ரூ.2000 அளித்தார்.  நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்.) பல்லாவரம் பம்மல் அ.பா. செல்வராசு நினைவு  (16.3.2012) நாளை முன்னிட்டு தலைமைக் கழக அலுவலக நிதியாக அவரது மகள் ஜோசப் ஸ்டாலின் ரூ.5000 நன்கொடை அளித்தார். தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தபசி குமரன் பெற்றுக் கொண்டார். பெரியார் முழக்கம் 26042012 இதழ்

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (8)

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (8)

1917ஆம் ஆண்டு நிகழ்வுகள் (3) திராவிடர் சங்கத்தின் பணியும் தொடர்ந்தது. நவம்பரில் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பட்டம் பெற்ற திராவிட மாணவர்கட்கு வழக்கம்போல் விருந்தும் பாராட்டும் நடைபெற்றது. நாயரின் வேண்டுகோளுக்கிணங்க அலெக்சாண்டர் கார்டியூ தலைமை வகித்து, திராவிட மாணவர்கள் கல்வியில் நாட்டம் செலுத்த வேண்டுமென்றும், நாட்டிற்கு நற்றொண்டு செய்ய வேண்டுமென்றும், அறிவுரைகளும், பாராட்டும் வழங்கினார். பனகல் அரசர், பித்தாபுரம் ராஜா, பவானந்தம் பிள்ளை, கே.வி.ரெட்டி, தியாகராயர், ஜஸ்டிஸ் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க, நடேசனார் வாழ்த்துச் செய்திகளை வாசித்தார். ‘அரசு தலைமைச் செயலாளரான கார்டியூ விழாவுக்கு தலைமை வகித்தது கண்டிக்கத்தக்கதென்றும், ஒரு சார்புடைய இச்சங்கத்தின் நலனில் கார்டியூ போன்ற அரசு அலுவலர்கள் அக்கறை கொண்டிருப்பது தேசீய உணர்ச்சிக்கு வெடி வைப்பதென்றும், அன்னிபெசண்டின் பார்ப்பன பத்திரிகையான ‘நியூ இண்டியா’ நவம்பர் 26 இல் எழுதி ஓலமிட்டது. முதல் உலகப் போரில் பிரிட்டிஷாருக்கு இந்திய மக்கள் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கியதைக் கருத்திற் கொண்டு நல்லொழுக்கத்தைக்...

‘சாதி கவுரவத்திற்காக’ குடும்பத்தினராலே கொல்லப்படும் இளம் பெண்கள்

‘சாதி கவுரவத்திற்காக’ குடும்பத்தினராலே கொல்லப்படும் இளம் பெண்கள்

தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞரைத் திருமணம் செய்துவிட்ட “குற்றத்துக்காக” மகளையே தாயும் அவரது மாமியாரும் கொலை செய்து வீட்டில் புதைத்துள்ளனர். ‘சாதி கவுரவத்தை’க் காப்பாற்றிட நடந்த இந்த கொலை, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ‘எவி டென்ஸ்’ தொண்டு நிறுவனம் மேற்கொண்ட முயற்சியால் வெளிவந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கலியூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது திருச்செல்வி, தலித் சமூகத்தைச் சார்ந்த டேனியல் ராஜ் என்ற இளைஞரை காதலித்தார். இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருப்பூரில் ஒரு தொழிற் சாலையில் வேலை செய்தனர். ஆதிக்கசாதியைச் சார்ந்த பெண்ணின் தாய் மற்றும் அவரது மாமியார், திருமணத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறி நாடகமாடியதை நம்பி, அம்மை நோயுடன் பெண் வீடு திரும்பியபோது, தாயும், மாமியாரும் பூச்சி மருந்தை பெண்ணின் வாயில் திணித்து, குடிக்குமாறு கட்டாயப்படுத்தினர். அந்தப் பெண் மறுக்கவே, கையையும் காலையும் பிடித்துக் கொண்டு, பூச்சி மருந்தை வாயில் ஊற்றி, பிறகு கழுத்தை நெறித்து...

தலையங்கம் சென்றார்கள்; திரும்பினார்கள்

தலையங்கம் சென்றார்கள்; திரும்பினார்கள்

இந்திய நாடாளுமன்ற குழு எதிர்க்கட்சித் தலைவர் பாரதிய ஜனதாவைச் சார்ந்த சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைச் சென்று, தமிழர் வாழும் பகுதிகளையும் சில அகதிகள் முகாம்களையும் பார்வையிட்டு, ராஜபக்சேவை சந்தித்துவிட்டு திரும்பியுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கட்சிகள் இதில் இடம் பெறவில்லை. இலங்கை அரசின் போர்க் குற்றங்களைக் கடுமையாக விமர்சித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரதிநிதிகள், இக்குழுவில் இராசபக்சேவைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு சேர்க்கப்படவில்லை என்று தெரிகிறது. ஈழத்தில் இறுதி கட்ட இனப் படுகொலையின்போது போரை நிறுத்தி, தமிழினத்தைக் காப்பாற்றுங்கள் என்று தமிழகமே திரண்டு நின்று குரல் கொடுத்தபோது, அதை காதில் போட்டுக் கொள்ள காங்கிரஸ் ஆட்சி தயாராக இல்லை. இனப் படுகொலை வெற்றிகரமாக நடந்து முடியட்டும் என்றே அதற்கான உதவிகளை செய்து கொண்டு காத்திருந்தார்கள். இப்போது போரின் பாதிப்புகளைக் கண்டறிய குழுவை அனுப்புகிறார்கள். ஏதோ, ராஜபக்சே ஜனநாயக ஆட்சியை நடத்தி வருவது...

திருப்பூர் நோக்கி திரளுவீர்!

திருப்பூர் நோக்கி திரளுவீர்!

பெரியார் கொள்கையைக் கவசமாக உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்டு வரும், கழகத்தின் கொள்கைத் தோழர்களே! காலத்தின் தேவையும்,  அவசியமும்  நமது களச் செயல்பாட்டை தீர்மானிக்கிறது. பார்ப்பனியமும் அதன் கொடூர வடிவமான சாதியமும் உயிர்த் துடிப்போடு மனித மாண்புகளை சிதைத்து வருகிறது! வாழ்வியலை சீரழித்து, வன்மத்தையும், வெறுப்பையும், கொலைகளையும் தூண்டி விடும் சாதியத்தை எதிர்த்து, பரமக்குடியில் பெரியார் திராவிடர் கழகம் தொடங்கிய பரப்புரை பயணம் – தொடருகிறது! சில இடங்களில் எதிர்ப்பு, கல்வீச்சு; பல இடங்களில் இறுக்கம்; அமைதி; வேறு பல இடங்களில் வரவேற்பு; பாராட்டு – என்று வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு சூழல்களை எதிர்கொண்டு, தோழர்கள் பயணிக்கிறார்கள்! சாதிய ஒடுக்குமுறைக்கு பலியாகிக் கிடக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் அல்ல, சாதியைத் திணிக்கும் மக்கள் வாழும் பகுதி களில் மட்டுமே இந்தப் பரப்புரை நடக்கிறது! சுய மரியாதை சூடேற்றி – தன்மானப் போருக்கு அழைப்பு விடுத்த நமது அறிவு ஆசான் தந்தை பெரியார்...

பரப்புரைப் பயணத்தில் கழகம் வற்புறுத்தல் பார்ப்பனியத்துக்கு அடிமையாகாதீர்; தலித் மக்களை அடக்க முயலாதீர்!

பரப்புரைப் பயணத்தில் கழகம் வற்புறுத்தல் பார்ப்பனியத்துக்கு அடிமையாகாதீர்; தலித் மக்களை அடக்க முயலாதீர்!

  தலித் மக்களை அடக்க முயலாதீர் என்று பிற்படுத்தப்பட்டோருக்கு வேண்டுகோள் விடுத்து, கழகத்தின் பரப்புரை இயக்கம் தொடருகிறது: 15.4.2012 அன்று மேலூர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், 16.4.2012 அன்று செக் கானூரணி, சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளிலும், 17.4.2012 அன்று தேனி, பெரியகுளம், வத்தலகுண்டு, ஆத்தூர் ஆகிய பகுதிகளிலும் பரப்புரை நடத்தப்பட்டது. 18.4.2012 அன்று சின்னாளப்பட்டி, கோபால்பட்டி, நத்தம் ஆகிய பகுதிகளிலும், 1.4.2012 அன்று திருவெறும்பூர், காட்டூர் ஆகிய பகுதிகளிலும், 20.4.2012 அன்று இலால்குடி, பூவாளூர், கீழப்பளூர், அரியலூர் ஆகிய பகுதிகளிலும், 21.4.2012 அன்று குன்னம், பேரளி, பெரம்பலூர் காந்தி சிலை, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளிலும் பரப் புரைகள் நடைபெற்றன. திருச்சி மாவட்டத்தில் பரப்புரை நடந்த இரண்டு நாட்கள் மூத்த பெரியார் தொண்டர் ஆசிட் தியாகராசன், பயணக் குழுவின ரோடு பயணம் செய்து, பரப்புரையை பாராட்டினார். அதேபோல் இலால்குடி முத்துச்செழியன், பயணக் குழுவை சந்தித்து, தனது பாராட்டுகளையும்...

நெல்லை இந்து கல்லூரியில் விடுதலை இராசேந்திரன் உரை

நெல்லை இந்து கல்லூரியில் விடுதலை இராசேந்திரன் உரை

திருநெல்வேலி இந்து கல்லூரியில் மதுரை பல்கலை ஆசிரியர் சங்கம் நடத்திய சமூகநீதி கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் 16.4.2012 பகல் 12 மணியளவில் சிறப்புரையாற்றினார். ‘சமூக நீதியும் கல்வியும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், சமூக நீதிப் போராட்ட வரலாறு, சமூக நீதிக் கொள்கைகள் தற்போது உலகமயமாக்கல் சூழலில் சந்திக்கும் நெருக்கடிகளை விளக்கினார். எழுத்தாளரும், மார்க்சிய சிந்தனையாளருமான அருணன், இஸ்லாமியர்கள், பெண்களுக்கு மறுக்கப்படும் சமூக நீதிகளை விளக்கியும், இந்துத்துவ மதவாத சக்திகளின் பிற்போக்கு கருத்தியலால் சமூகம் சந்திக்கும் நெருக்கடிகளை யும் விளக்கினார். பேராசிரியர் முனைவர் செல்லப்பா தலைமை தாங்கினார். சங்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் நீலகண்டன் வரவேற்றுப் பேசினார். கருத்தரங்கை கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார். கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகள் பெருமளவில் பங்கேற்றனர். ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று நெல்லையில் மாலை 7 மணி அளவில் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் மன்றத்தின் சார்பில் அம்சா அரங்கில்...

அத்தாணியில் பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டம்

அத்தாணியில் பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டம்

அந்தியூர் ஒன்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் 133-வது பிறந்த நாள் விழா, கீழ்வானி இந்திராநகர் கிளையின் பெயர் பலகை திறப்பு விழா, கழகத்தின் புதிய நூல் வெளியீட்டு விழா பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டம் ஆகியவை 8.3.2012 அன்று நடைபெற்றது. விழாவிற்கு பகுத்தறி வாளர் பேரவைத் தோழர் ஜீ.மா. சுந்தரம் தலைமையேற்றார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கீழ்வானி இந்திரா நகரில் கழகத்தின் பெயர்ப் பலகையை திறந்து வைத்து கொடியேற்றினார். சுந்தரம் இல்லத்தில் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டு, அனைவரும் ஊர்வலமாக அத்தாணி பொதுக் கூட்ட திடலுக்கு வந்தடைந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் தலைவர் கழகக் கொடியினை ஏற்றி வைக்க, பொதுக் கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்கின. வீரன் வரவேற்புரையாற்ற, மடத்துகுளம் மோகன், ‘மந்திரமல்ல தந்திரமே!’ நிகழ்ச்சி நடத்தினார். பொள்ளாச்சி விஜய ராகவன் கழக வெளியீடுகளை அறிமுகம் செய்தார். மாவட்ட கழகத் தலைவர் நாத்திக சோதி, தலைமை ஆலோசனைக்...

நீலகிரியில் நடந்த மாபெரும் கண்டனக் கூட்டத்தில் கழகத் தலைவர் அறிவிப்பு

நீலகிரியில் நடந்த மாபெரும் கண்டனக் கூட்டத்தில் கழகத் தலைவர் அறிவிப்பு

தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் ஆட்களின் வன்முறை அடாவடியை எதிர்த்து ‘மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு’ கெலமங்கலம் ஒன்றியம், நீலகிரியில் கழகத் தோழர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம், கிருட் டிணகிரி மாவட்டம் கெலமங்கலத் தில் 28.4.2012 மாலை நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் பழனிச் சாமி தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செய லாளர் கோவை இராமகிருட்டிணன், கழக வழக்கறிஞர் குமார தேவன், மாவட்டத் தலைவர் குமார், தருமபுரி மாவட்ட அமைப்பாளர் வேடியப் பன் ஆகியோர் கண்டன உரையாற் றினர். இந்திய பொதுவுடைமைக் கட்சி யின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் மற்றும் அவரது ஆட்களால் தொடர்ந்து நடந்தேறி வரும் வன்முறைச் செயல்களால் பாதிக்கப்பட்டிருந்த பொது மக்கள் பெருமளவில் திரண்டு கண்டன உரைகளை உற்சாகமாக வரவேற்று கையொலி எழுப்பியும் ஆரவாரம் செய்தும் தமது ஆதரவைத் தெரிவித்தனர்.  6.4.2012...

மதுரை ஆதினமும் காஞ்சி ஜெயேந்திரனும்

மதுரை ஆதினமும் காஞ்சி ஜெயேந்திரனும்

மதுரை  ‘குருமகா சன்னிதானமாக’ இருந்த அருணகிரி,  மதுரை ஆதினத்தின் 293வது மடாதிபதியாக நித்யானந்தாவுக்கு முடிசூட்டி விட்டார். மடாதிபதியாக தனது வாரிசை நியமிக்கும் முழு உரிமை தனக்கு உண்டு என்கிறார் மதுரை ஆதினம். ‘சிவபெருமானும் பார்வதியும்’ தனது கனவில் வந்து கேட்டுக் கொண்டதற்கேற்ப இந்த முடிவை எடுத்துள்ளதாக மதுரை ஆதினம் அடித்துக் கூறுகிறார். ‘தினமலர்’ பார்ப்பன நாளேடும், இந்து மக்கள் கட்சி போன்ற இந்து அமைப்புகளும் இதைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. “சிவபெருமானா வது, கனவில் வருவதாவது; என்ன காதில் பூசுற்று கிறார்களா? இந்தக் கதை எல்லாம் நாங்கள் ஏற்கத் தயாராக இல்லை” என்று இந்து அமைப்புகளே தமிழ்நாட்டில் பகுத்தறிவுடன் சிந்திக்கத் தொடங்கி விட்டதாக சந்தேகிக்க வேண்டியிருக்கிறது! இதேபோல் பெரியாரியல்வாதிகள் கேள்வி கேட்டால், பக்தர்கள் உணர்வைப் புண்படுத்துவதாக இதே இந்து அமைப்புகள் போராடக் கிளம்பி விடு வார்கள். ‘இந்து’ அமைப்புகளுக்கு மட்டும் இப்படி பகுத்தறிவு வந்து விட்டதாக கூறி விட முடியாது. சைவ...

‘அக்சய திருதி’யும் ‘இந்து’ நாளேடும்

‘அக்சய திருதி’யும் ‘இந்து’ நாளேடும்

‘அக்சய திருதி’ என்று ஒரு புதுக்கரடி இந்து மதத்தின் பெயரில் பிரபலமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, நகை வர்த்தகம் செய்யும் வணிக நிறுவனங்களும், ஊடகங்களும் இதை ஊதிப் பெருக்கி, பாமர மக்களின் மடமையை சுரண்டி வருகின்றன. அன்றைய நாளில் ஒரு கிராம் நகையாவது வாங்கினால், ஆண்டு முழுதும் நகை குடும்பத்தில் குவியுமாம். ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஒரு பெரும் கூட்டம், கடைகளில் அலைமோதுகிறது. கூட்டத்தில் நகை வாங்க வந்து, நகையை திருட்டுக் கொடுப்போரும் அதிகம். போலி தங்கக் காசுகள் மோசடி வேறு. இவ்வளவு கூத்துகளுக்கிடையில், ‘அக்சய திருத்தியா’ என்பது குறித்து ‘இந்து’ நாளேட்டில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் நாள் ‘அக்சய திருதி’ அன்று அந்த நாளேட்டின் முதல் பக்கம் முழுதும் ஒரு நகை வணிக நிறுவனம் தந்துள்ள விளம்பரத்தில் ‘இந்து’ ஏடே தனது வாசகர்களுக்கு இந்தப் ‘புனித நாளில்’ வாழ்த்துகளைத் தெரிவிப்பதுபோல குறிப்பிடப்பட்டிருந்தது. “இந்த நாளில் தங்கம் வாங்கினால்,...

வரலாற்றை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை வாழ்நாள் முழுதும் இனத்துரோகம் செய்தவர் ம.பொ.சி.

வரலாற்றை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை வாழ்நாள் முழுதும் இனத்துரோகம் செய்தவர் ம.பொ.சி.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து: பெரியார் விநாயகர் சிலை உடைப்புப் போராட் டம் நடத்தியபோது தி.மு.க.வினர் சொன்னார்கள்… “நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்” என்று. தேர்தலுக்கு போனவுடன் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கொள்கையில் வழுவ ஆரம்பித்து, சன் டி.வி.யில் இராமாயணம் போட ஆரம்பித்து விட்டார்கள். இராமாயண எதிர்ப்பு என்பது அந்த கதையை எதிர்ப்பதாக பொருள் அல்ல. அதை வைத்துக் கொண்டு தமிழர்கள் மத்தியில் பார்ப்பனி யத்தை புகுத்தும் ஏற்பாடு என்பதால் தான் எதிர்க்கப் படுகிறது. 1938 இல் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியபோது சொன்னார்… “இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது மொழிப் போராட்டம் அல்ல. பண்பாட்டு போராட்டம். தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு, சமய, இயல் ஆகியவற்றில் மனுதர்மத்தை புகுத்தும் சூழ்ச்சியை எதிர்க்கும் போராட்டம் இது” என்று சொன்னார். ஆங்கிலம்...

காற்றில் பறக்கும் ஒப்பந்தம்

காற்றில் பறக்கும் ஒப்பந்தம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது வில்லூர்.  வில்லூரில் வாழும் தலித் மக்கள், ஆதிக்கசாதியினர் வாழும் வீதிகளில் சைக்கிளில் போக முடியாது. 2011 ஆம் ஆண்டு மே முதல் தேதி தலித் இளைஞர் ஒருவர், பொது வீதியில் சைக்கிள் ஓட்டிச் சென்றார் என்பதற்காக சாதிவெறியர்களால் தாக்கப்பட்டார். இது கலவரமாக மாறி, காவல் துறை தலையிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட காவல்துறை அதிகாரி தலித் பிரதிநிதிகளையும், ஆதிக்கசாதி பிரதிநிதிகளையும் அழைத்து சமரசப் பேச்சு நடத்தினார். கடந்த ஏப். 24 ஆம் தேதி இரு பிரிவினருக்கிடையே உடன்பாடு கையெழுத்தானது. இதன்படி இரு தரப்பும் சமாதானமாக நட்புறவுடன் பழகி வருகிறார்கள் என்று காவல்துறை கூறிக் கொண்டாலும், உண்மை நிலவரம் அப்படி அல்ல என்று நேரில் பார்வையிட்ட ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர் கூறுகிறார். ‘உடன்பாடு காகிதத்தில் தான் இருக்கிறது, மீண்டும் தலித் மக்கள் பொது வீதிகளில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கப்படுவது இல்லை’...

போராட்டத்தை விளக்கி பரப்புரை

போராட்டத்தை விளக்கி பரப்புரை

மனுதர்ம எரிப்புப் போராட்டத்தை விளக்கி தமிழகம் தழுவிய பரப்புரை இயக்கத்தை கழகம் தொடங்கு கிறது. இது குறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி திருப்பூர் கூட்டத்தில் வெளியிட்ட செயல் திட்டம்: இந்து – ஜாதீய வாழ்வியலுக்கு எதிரான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லவும், ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்காக தமிழ்நாடு அரசும் மக்களும் ஆற்ற வேண்டிய கடமைகள்  குறித்த திருப்பூர் தீர்மானங்களை விளக்கும் வண்ணமும், மனுஸ்மிருதி எரிப்புப் போராட்டம் ஏன்? எதற்கு? என விளக்கவும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக முழுமையான பரப்புரைகளை நடத்த உள்ளோம். இந்தப் பரப்புரைகளில் இன்றும் மனு தர்மம் எந்தெந்த வழிகளில் உயிர்ப்புடன் உள்ளது என்பவைகளை எளிதாக விளக்கும் வகையில் புகைப்படங்கள் நிறைந்த சாதி ஒழிப்புக் கண்காட்சியும் இடம்பெறும். முதற்கட்டமாக சேலம் கிழக்கு, தஞ்சை, திருவாருர், நாகை ஆகிய மாவட்டங்களில் கிராமப் பிரச்சாரப் பயணங்கள் நடக்க உள்ளன. ஒரு குழு மே மாதம் 14 ஆம்...

‘ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு’ப் பயண நிறைவில் தமிழக அரசுக்கு வலியுறுத்தல் வாழ்விடங்கள் தீண்டாமைக்கு முடிவு கட்டுக!

‘ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு’ப் பயண நிறைவில் தமிழக அரசுக்கு வலியுறுத்தல் வாழ்விடங்கள் தீண்டாமைக்கு முடிவு கட்டுக!

தலித் மக்களின் வாழ்விடங்களில் பின்பற்றப் படும் தீண்டாமை வடிவங்களை தடுத்து நிறுத்த தமிழக அரசு முன் வரவேண்டும் என்று திருப்பூரில் நிறைவடைந்த ‘ஜாதிய வாழ்வியல் எதிர்ப்புப் பரப்புரை’ப் பயணத்தில் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. அரசு கட்டித் தரும் குடியிருப்புகள், வீட்டுமனை விற்பனைகளில் பின்பற்றப்பட்டுவரும் ‘தீண்டாமை களை’ இத் தீர்மானங்கள் சுட்டிக்காட்டி அரசின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஏப்.29 அன்று திருப்பூர் அரிசிக் கடை வீதியில் நடைபெற்ற பயண நிறைவு விழா நிகழ்வில் பயணத்தில் பங்கேற்ற தோழர்களால் கழக சார்பில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்: தமிழ்ப் பேரரசர்கள் காலத்திலிருந்து இன்றுவரை நிலைத்து இருக்கும் “ஊர் – சேரி” என்ற இரட்டை வாழ்விடங்களை – வாழ்விடத் தீண்டாமையை ஒழிக்கும் வகையிலும், “தாழ்த்தப் பட்ட சமுதாய மக்களுக்குத் தனியாக சேரி என்று இருப்பதைத் தடைசெய்யவேண்டும்”, “இனி கட்டப் போகும் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புக்கள் ஊருக்கு உள்ளேயே கிடைக்கும் இடங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளாகக் கட்டவேண்டும்” என்று 1947 ஆம் ஆண்டிலிருந்தே...

அரசியல் சட்டத்துக்கு எதிரான ‘மனுதர்மத்துக்கு’ தடை போடுக! நவ. 26 இல் மனுதர்மம் எரிக்கப்படும்!

அரசியல் சட்டத்துக்கு எதிரான ‘மனுதர்மத்துக்கு’ தடை போடுக! நவ. 26 இல் மனுதர்மம் எரிக்கப்படும்!

திருப்பூர் நிறைவு விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவிப்பு அரசியல் சட்டத்துக்கு எதிரான மனுதர்மத்தை மத்திய அரசு தடை செய்யக் கோரியும், வாழ்வியலில் சட்டப்பூர்வமாக திணிக்கப்படும் சாதி ஒடுக்குமுறைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்தக் கோரியும், கழக சார்பில் தமிழகம் முழுதும் ‘மனுதர்மம்’ தீயிடப்படுகிறது. திராவிடர் இயக்க நூற்றாண்டில் ஜாதிய வாழ்வியல் எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தியுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி பரமக்குடியில் மாவீரன் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சாதி ஒழிப்பு உறுதியேற்று, பயணம் தொடங்கியது. பயணக் குழுவினர், சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு முருகேசன் நினை விடத்தில் வீரவணக்கம் செலுத்தினர். ஏப். 29 ஆம் தேதி திருப்பூரில் பயணம் நிறைவடைந்தது. அன்று காலை கோவை மாவட்டம் சோமனூரி லுள்ள செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தி, பயணத்தைக் குழுவினர் நிறைவு செய்தனர். ஆதிக்கசாதியைச் சார்ந்த...

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை வடக்கு தெற்கு மாநகர மாவட்ட கழகங்களின் கலந்துரை யாடல் கூட்டம் 8.4.2012 ஞாயிறு காலை 11 மணிக்கு கோவை அண்ணா மலை அரங்கில் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது. சமீபத்தில் முடிவெய்திய பெரியார் பெருந்தொண்டர் ஈரோடு சுப்பையா, சிந்தனையாளர் சங்கமித்ரா ஆகியோ ருக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக் கப்பட்டது. தொடர்ந்து தோழர்களின் கருத்துரைகளையடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோவை மாநகரில் பார்ப்பன சங்கம் நடத்தும் மின் மயானத்தை அனைத்து சாதியினருக்கான பொது மயானமாக அறிவிக்க வலியுறுத்தி மே மாதம் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவது எனவும், தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அனுமதி மறுக்கம் அன்னூர் வடவள்ளி கிராம அங்கன்வாடி மையத்திலும் அஞ்சல் நிலையத்திலும் நிலவும் தீண்டாமை யைக் கண்டித்து எதிர்வரும் 16 ஆம் நாள் வடவள்ளியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் திராவிடர் இயக்கத்தின் தோற்றம் வளர்ச்சி சாதனைகளை விளக்கம்...

சென்னையில் கழகம் நடத்தும்  முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

சென்னையில் கழகம் நடத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

மே 19 அன்று மாலை சென்னை எம்.ஜி.ஆர். நாளில் முள்ளி வாய்க்கால் நினைவு நாளில் ஈழ விடுதலைக்கு அய்.நா. வாக்கெடுப்பு நடத்தக் கோரும் பொதுக் கூட்டம் பெரியார் திராவிடர் கழக சார்பில் நடக்கிறது. துணைத்தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கழகத் தலைவர், பொதுச்செயலாளர்கள் உரையாற்றுகிறார்கள். பெரியார் முழக்கம் 10052012 இதழ்

பெண்ணுரிமையை வலியுறுத்திய ஓர் விவகாரத்து வழக்கு

பெண்ணுரிமையை வலியுறுத்திய ஓர் விவகாரத்து வழக்கு

மும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த மே 3 ஆம் தேதி வந்த ஒரு விவகாரத்து வழக்கு, பெண்ணுரிமைக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அமர்வு நீதிபதிகள் பி.பி.மஜீம்தார் மற்றும் அனூப்போத்தா இந்த வழக்கில் எழுப்பிய கேள்விகளும் மிகவும் அர்த்தமிக்கதாகும். 30 வயது கணவன், தனது 26 வயது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். திருமணமானவுடன் இந்த இணையர் தேனிலவுக்கு சென்றபோது மணமகள் கணவருடன், குழந்தை பிறப்புத் தடைக்கான ஆணுறை இல்லாமல் உடல் உறவு கொள்ள மறுத்துவிட்டார். ‘குழந்தை பெற்றுக் கொள்வதற்கு இப்போது உரிய நேரமல்ல; பொருளாதார ரீதியாக என்னை வளர்த்துக் கொண்ட பிறகே குழந்தை பெற்றுக் கொள்வேன்’ என்று அந்தப் பெண் கூறிவிட்டார். இது தனக்கு மன உளைச்சலை உருவாக்கிவிட்டது என்று கணவர் வழக்கு தொடர்ந்தார். ‘தனது குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய தன்னை பொருளாதாரத்தில் நிலைப்படுத்திக் கொள்ள விரும்பியிருக்கிறார் இந்தப் பெண்’ என்று கூறிய நீதிபதி, ‘இதில் முடிவெடுக்கும்...

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்

உள்நாட்டுப் பாதுகாப்புகளில்கூட மத்திய அரசு நேரடியாக தலையிடுவதை மாநில அரசுகள் எதிர்க்கின்றன. அரசியல் சட்டம் உருவாக்கிய காலச் சூழல் வேறு; இப்போதைய நிலை வேறு; அரசியல் நிர்ணய சபை, வலிமையான மத்திய அரசையே விரும்பியது. பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா போராடியதையும் சமஸ்தான மன்னர்கள் தங்களின் ஆளும் உரிமைகளை விட்டுக் கொடுக்க மறுத்ததை யும் கவனத்தில் கொண்டு, மாநிலங்கள் வலிமையாகி விடக் கூடாது. மத்திய அரசு வலிமையாக இருக்க வேண்டும் என்றே காங்கிரஸ் விரும்பியது. நேருவின் அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் பலரும் தங்கள் துறைகளுக்கான முழு அதிகாரம் தங்களிடமே இருக்க வேண்டும் என்று விரும்பினர்.  1950 ஆம் ஆண்டு நேரு உருவாக்கிய திட்டக் கமிஷன்கூட இதே கண்ணோட்டத்தில் தான் உருவாக்கப்பட்டது. இது பேரதிகார மிக்க அமைப்பாக எதிர்காலத்தில் மாறிவிடும் என்று சர்தார் பட்டேல்கூட அச்சம் தெரிவித்தார். அதுதான் நடந்தது. திட்டக் கமிஷன் பற்றி அரசியலமைப்பில் எதுவும் குறிப்பிடப்பட வில்லை. ஆனால், அரசியல்...

வரலாற்றை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை அயோத்தியிலிருந்து ராமன் தெற்கே வந்தது ஏன்?

வரலாற்றை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை அயோத்தியிலிருந்து ராமன் தெற்கே வந்தது ஏன்?

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து: பெரியார் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் தொடர்ந்து செய்தார். எம்.ஆர்.இராதா நாடகத்தின் வழியாக இராமாயண எதிர்ப்பு செய்யும்போது, பெரிய கலவரம் ஏற்படுகிறது. அப்போது காங்கிரஸ் காரர்கள் தான் எதிர்த்தார்கள். ஒரு அவதாரத்தை போட்டதற்கே இவ்வளவு கூச்சலிடுகிறார்களே, பத்து அவதாரத்தையும் காட்டியாக வேண்டும் என்று குத்தூசி குருசாமியிடம் சொன்னாராம் இராதா. அதன் பிறகு, குத்தூசி குருசாமி எழுதிய ‘தசாவதாரம்’ என்ற நாடகத்தை எம்.ஆர். இராதா நடித்தாராம். புராணம் என்ற பெயரால், அவர்கள் புரட்டுகளை நம்ப வைத்து நம் மீது பார்ப்பனப் பண்பாட்டைத் திணிப்பதற்கு எதிரானதுதான் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம். இராமர் பாலம் என்பதை எங்களுடைய மத நம்பிக்கை என்று அவர்கள் சொல்கிறார்கள். இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்று சொல்கிறோம். அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவது என்பதுதான் காந்தி சொல்லிக் கொடுத்த மதச்...

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (9)

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (9)

லண்டனில் தடையை தகர்த்து உரிமை முழக்கமிட்டவர் டாக்டர் நாயர் 1918 ‘தேசிய’ பார்ப்பனக் காங்கிரஸ்வாதிகள், அவர்களின் கையாளாகப் பயன்பட்ட அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தின் யோக்கியதை, ஆகியவற்றை நீதிக்கட்சித் தலைவர்கள் அவ்வப் போது தோலுரித்துக் காட்டி வந்ததோடு பார்ப்பனரல்லாதார் இன எழுச்சியை தூண்டியும் வந்தனர். நாயரின் எழுத்துகள் அன்னிபெசன்ட் அம்மையாருக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தின. அன்னி பெசன்டின் வாழ்க்கை வளர்ச்சிகள் என்று, நாயரால் எழுதப்பட்ட ஆங்கில நூல், அன்னிபெசன்டின் அரசியல் வீழ்ச்சிக்குப் பெருங்காரணமாய் அமைந்தது. இந்நூல், “டுநயன நெயவநச ளஉயனேயட டிக 1913” என்ற தலைப்பில் நாயரால் மெயில் ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். அன்னிபெசன்டுக்கும் லெட் பீட்டருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்தை அம்பலப்படுத்திட அவரின் ஊழல்களை வெட்ட வெளிச்சமாக்கியது. இதற்கென அன்னிபெசன்ட் நாயர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து பெரிய (பாரிஸ்டர்) வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடினார். நாயர் வழக்கறிஞர் எவரு மின்றி, தமது தரப்பு...