Category: பெரியார் முழக்கம்

வில்வித்தைப் போட்டியில் கழகக் குடும்பத்தின் குழந்தைகள் வென்றனர்

வில்வித்தைப் போட்டியில் கழகக் குடும்பத்தின் குழந்தைகள் வென்றனர்

சேலம் மாவட்டம் கொளத்தூர் கழக குடும்பத்தை சார்ந்த கொளத்தூர் குமார் – தமிழரசி ஆகியோரது மகன் இனியன், காவலாண்டியூர் விஜயகுமார் – கலைச்செல்வி ஆகியோரது மகன் வளவன், காவை இளவரசன் – மாதவி ஆகியோரது மகன் எழிலரசு ஆகியோர்  23.4.17 ஞாயிறு அன்று நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடத்திய மாநில அளவிலான வில் வித்தை போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கம்போண்ட் பிரிவில் பங்கேற்றனர். இனியன் தங்கபதக்கம் பெற்றார். 10 வயதிற்கு உட்பட்டோருக்கான கம்போண்ட்  பிரிவில் வளவன் தங்க பதக்கம் பெற்றார். 10 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியன் பிரிவில் எழிலரசு வெள்ளி பதக்கம் பெற்றார். இதற்கான சான்றிதழையும், பதக்கத்தையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி புண்ணியமூர்த்தி வழங்கினார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டுகளை தெரிவித்து குழந்தைகளுக்கு உற்சாகமூட்டினார். பெரியார் முழக்கம் 04052017 இதழ்

பத்ரிநாராயணன் 13ஆவது நினைவு நாள்

திராவிடர் விடுதலை கழகத்தின் கழக செயல் வீரர் பத்ரி நாராயணன் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் 30.4.17 அன்று  மிகுந்த எழுச்சியுடன் நடந்தது. அவரது நினைவிடத்தில் கழகத் தோழர்கள், காலை 9 மணி யளவில் மலர்வளையம் வைத்து உறுதி மொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர், ஆசிரியர் திருப்பூர் சிவகாமி நிகழ்வில் பங்கேற்றார். தலைமைக் குழு  உறுப்பினர் அன்பு தனசேகரன்  வீரவணக்க முழக்கங் களை எழுப்பி உரையாற்றினார். தந்தை பெரியார் திராவிடர் கழகம் அண்ணா மலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த ரூதர். கார்த்திக், குமரப்பா , தி.மு.க. ஆர்.என். துரை ஆகியோர் பத்ரியின் கொள்கை உறுதியை நினைவுகூர்ந்து உரையாற்றினர். இராயப்பேட்டை  பெரியார் படிப்பகத்தில் பத்ரி நாராயணன் புகைப்படத்திற்கு தலைமை கழகச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்தார்.  பகுதி முழுதும் ஏராளமான கழகக் கொடிகளை தோழர்கள் கட்டி யிருந்தனர். மாவட்ட செயலாளர் உமாபதி நிகழ்வுகளை...

வெளியுறவுக் கொள்கைகளை முடிவெடுப்பதில் மாநில அரசுகளுக்கு உரிமை வேண்டாமா?

வெளியுறவுக் கொள்கைகளை முடிவெடுப்பதில் மாநில அரசுகளுக்கு உரிமை வேண்டாமா?

அய்தராபாத் நிசாமுக்கு வழங்கப்பட்டது வெளியுறவுத் துறை அதிகாரம் ‘சவுத் பிளாக்’ பார்ப்பன அதிகார வர்க்கத்தின் பிடி தளர்த்தப்பட வேண்டும் இந்தியாவில் வெளியுறவுக் கொள்கைகள், எப்படி, எவரால், எந்தப் பார்வையில் செயல்படுத்தப்படுகின்றன என்ற கேள்விக்கு வெளிப்படையான பதிலோ, விவாதங்களோ கிடையாது. வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் பார்ப்பன அதிகார வர்க்கத்துக்கு பெரும் பங்கு உண்டு. டெல்லி தலைமைச் செயலகத் தில் ‘சவுத் பிளாக்’ அவ்வளவு சக்தி வாய்ந்தது. பார்ப்பன அதிகார வர்க்கத்தின் ஆளுமையையும் அதிகாரங்களையும் அங்கே பார்க்க முடியும். ஈழத் தமிழர் இனப்படுகொலைக்குள்ளான 2009ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகமே ஓரணியில் திரண்டு கொதித்து, “இந்திய அரசே ஈழத் தமிழர்களைக் காப்பாற்று” என்று கண்ணீர்விட்டுக் கதறிய ஓலம், டெல்லி பார்ப்பன அதிகாரவர்க்கத்தின் செவிப்பறைகளில் கேட்கவே இல்லை. அன்றைய ஆளும் காங்கிரஸ், சிறிலங்கா அதிகார வர்க்கமும், இந்திய பார்ப்பன அதிகார வர்க்கமும் இனப்படுகொலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு ஒவ்வொரு நாளும் கலந்து பேசி திட்டங்களைத் தீட்டின. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை தீர்மானிப்பதற்கு முன்பு,...

கல்வித்துறை மீது தொடரும் மோடி அரசின் தாக்குதல்

கல்வித்துறை மீது தொடரும் மோடி அரசின் தாக்குதல்

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப்படிப்புகளுக்கான நிதி ஒதுக் கீட்டை குறைத்துக்கொண்டே வரும் மோடி அரசு, சமூகப் பாகுபாடு பற்றிய ஆய்வு மையங்களுக்கான நிதியை முற்றிலுமாக நிறுத்தி விடுவதென முடிவெடுத்துள்ளது. நாட்டின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் சமூகப் பாகுபாடு பற்றிய ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (யுஜிசி) நிதி அளித்து வருகிறது. இந்நிலையில் 11-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நிலையங்கள் (2007-2012) மற்றும் 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட சமூக பாகுபாடு பற்றிய ஆய்வு மையங்களுக்கான நிதியை நிறுத்தப் போவதாக யுஜிசி தெரிவித்துள்ளது. 13ஆவது திட்டத்தின் மூலம் மீண்டும் இத்திட்டம் நீட்டிக்கப்படும் என பல்கலைக்கழகங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மார்ச் 31 முதல் இவற்றுக்கான நிதி நிறுத்தப்படும் என பல்கலைக்கழகங்கள் சில வற்றுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பெண்கள் மீதான சமூக பாகுபாடு தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் இதர ஆய்வு...

சங்பரிவாரங்களுக்கு அமெரிக்காவின் ஆணையம் கண்டனம்

சங்பரிவாரங்களுக்கு அமெரிக்காவின் ஆணையம் கண்டனம்

இந்தியாவில் இந்தத்துவா சக்திகளால் மத சுதந்திரத் துக்கான அச்சுறுத்தல்கள் மேலும் மேலும் மோசமடைந்து வருவதாக அமெரிக்காவின் மத சுதந்திரத்துக்கான ஆணையத்தின் ஆண்டறிக்கை கூறியுள்ளது. ஏப்.26ம் தேதி, 2016ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்காவில் இந்த ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து தேசியவாதக் குழுக்களும் அவர்களின் ஆதரவாளர்களும், மதச் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை, துன்புறுத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. 10 மாவட்டங்களில் இது மிகவும் மோசமாக நடந்து வருகிறது. நாட்டின் தேசிய மற்றும் மாநிலங்களின் சட்டங்களும் இந்த வன்முறைக்கு சாதகமான சூழல்களை உருவாக்கி வருகின்றன என்று குற்றம்சாட்டும், அந்த அறிக்கை பசுவதைத் தடைச் சட்டம், மற்றும் மத மாற்றத் தடைச் சட்டம் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளது. பிரதமர் மோடி, சகிப்புத் தன்மை, மதச் சுதந்திரம் பற்றி பேசினாலும், ஆளும் கட்சியின் உறுப்பினர்களும் அவர்களோடு நெருக்கமாக இருக்கும் மத தேசியம் பேசும் அமைப்பினரும்...

தலையங்கம் இராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா கொண்டாடுவோரே – பதில் கூறுங்கள்!

தலையங்கம் இராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா கொண்டாடுவோரே – பதில் கூறுங்கள்!

பிறப்பால் பார்ப்பனரான வைணவ மதப் பிரிவைச் சார்ந்த இராமானுஜரின் ஆயிரமா வது ஆண்டு விழா இப்போது கொண் டாடப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். – சங் பரிவாரங்கள் – வைணவப் பார்ப்பனர்கள் – இராமானுஜருக்கு விழா எடுக்கிறார்கள். ஆனால் இராமானுஜர் முன் வைத்த கருத்து களை இவர்கள் பின்பற்று கிறார்களா? இராமானுஜர், பாரதியைப்  போல் ஒடுக்கப்பட்ட ஜாதியினரும் ‘பூணூல்’ அணிந்து, ‘பிரம்மத்தை’ அடையலாம்; ‘பிராமணர் என்பது பிறப்பால் வருவது அல்ல’ என்று கூறிய ஒரு சீர்திருத்தவாதி. 3 சதவீத பார்ப்பனர்கள், தங்கள் பிறவி மேலாண்மையின் அடையாளமாக அணியும் பூணூலை மற்றவர்களுக்கு அணியச் சொல்வதைவிட பிறவி அகங்காரத்தை வெளிப்படுத்தும் பூணூலை பார்ப்பனர்களே ஏன் கழற்றி வீசக் கூடாது என்பதுதான் பெரியார் இயக்கம் முன் வைத்த கேள்வி. அரிசியில் கல் கலந்துவிட்ட நிலையில் கல்லைப் பொறுக்கி, அரிசியைத் தூய்மைப்படுத்த வேண்டுமே தவிர, அதைச் செய்யாது, அரிசிகளை பொறுக்கிக் கொண்டிருப்பது அறிவுடைமையாகுமா என்று பெரியார் கேட்டார். இத்தகைய...

அரசு மருத்துவர்கள் போராடுவது ஏன்?

அரசு மருத்துவர்கள் போராடுவது ஏன்?

தமிழகத்தில் தற்போது 1800 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 330 அரசு மருத்துவமனைகள், 19 அரசு மருத்துவ கல்லூரிகள், 50க்கும் மேற்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் போன்ற மருத்துவத் துறைகளில் சுமார் 16000க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் சேவை செய்து வருகின்றனர். இதில் சுமார் 9000 மருத்துவர்கள் இளநிலை படிப்பு (எம்.பி.பி.எஸ்.) மட்டுமே முடித்துவிட்டு ஏழை எளிய மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றார்கள். இத்தகைய சிறப்பான பணியினாலேயே அனைத்து சுகாதார குறியீடுகளிலும் இந்தியாவில் தமிழகம் முன்னிலையில் இருந்த வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது சுமார் 1500 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் அனைத்திந்திய கலந்தாய்வு மூலம் 50 சதவித இடங்களும், மாநில அரசின் கலந்தாய்வின் மூலம் 50 சதவீத இடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது. அதாவது இதில் மாநில அரசிடம் உள்ள மருத்துவ முதுநிலை பட்டப் படிப்பின் மொத்த 750 இடங்களில் 50 சதவீத இடங்கள் சிறப்பு சேவை ஒதுக்கீடாக சுமார் 375 இடங்கள்...

கல்வி உரிமை மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும். பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது நீதிபதி அரி பரந்தாமன் மருத்துவர்களிடையே முழக்கம்!

கல்வி உரிமை மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும். பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது நீதிபதி அரி பரந்தாமன் மருத்துவர்களிடையே முழக்கம்!

தமிழ்நாட்டில் அரசுத் துறையில் ஆரம்ப சுகாதார மய்யங்களில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருவோருக்கு பணியில் இருக்கும்போதே உயர் பட்டப்படிப்புக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கும் கோட்டா முறையை அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியிருக்கிறது.; இந்த கோட்டா முறை நீக்கப்பட்டால் கிராமங்களில் பணிபுரிய மருத்துவர்கள் வரும் வாய்ப்புகள் குறைந்து விடுவதோடு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் பட்டப்படிப்பு படித்த மருத்துவர்களின் சேவையும் கடும் பாதிப்புக்குள்ளாகிவிடும். எனவே மருத்துவ சேவையின் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் இந்த ஆபத்தை நீக்கிட அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகம் முழுதும் அரசு மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் வளாகத்தில் 8 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏப்.26 அன்று கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று மருத்துவர் களிடையே பேசினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: மருத்துவ சேவையில் இந்தியாவுக்கே...

மார்க்கத்தையும் இயக்கத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும்!

மார்க்கத்தையும் இயக்கத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும்!

திராவிட இயக்கங்களுக்கும் இஸ்லாமி யர்களுக்குமிடையே கடந்த காலங்களில் தலைவர்கள் கட்டிக் காத்த நல்லுறவை குலைத்துவிட கூடாது என்று ‘எஸ்பிஇசட் – ஈமெகசைன்’ என்ற இணைய ஏடு வெளியிட்டுள்ள கட்டுரை. “பகுத்தறிவுச் சிங்கம்” ஈ.வெ.ரா. பெரியார். தமிழகத்தில் திராவிடர்களுக்கும் தமிழ் முஸ்லிம்களுக்கும் மத்தியில் இவ்வளவு ஆழமான உறவு இருப்பதற்கு, பெரியாரின் கொள்கைகளே காரணம். பெரியார் எதை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ அவையனைத் தும் இஸ்லாத்தில் இயல்பாகவே தடை செய்யப்பட்டு இருந்தது. பெரியார் எதை வலுவாக ஆதரித்தாரோ அவை இஸ்லாத் தில் இயல்பாகவே வலியுறுத்தப்பட்டிருந்தது. தீண்டாமையை எதிர்த்தார். இஸ்லாத் தின் இயல்பிலேயே தீண்டாமை இல்லை. மாறாக அனைவரையும் அரவணைக்கும் குணாதிசயம் இருந்தது. குறிப்பிட்ட இனத்தவர்கள்தான் இந்த சாலையில் நடக்க வேண்டும். பிற இனத்தவர் இந்தப் பக்கமே வரக்கூடாது என்றிருந்தபோது இரண்டு இஸ்லாமியர்கள் ஒருசேர அமர்ந்து ஒரே தட்டில் இருவரும் சேர்ந்து சாப்பிட்டது பெரியாரை ஈர்த்தது. குறிப்பிட்ட இனத்தவர்கள் கோவிலுக் குள் வரக்கூடாது...

போராடும் விவசாயிகளுக்காக கழகம் போராட்டம்

போராடும் விவசாயிகளுக்காக கழகம் போராட்டம்

13-4-17 அன்று மாலை 4-00  மணியாவில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக…..கடந்த 31 நாட்களாக டெல்லி – ஜந்தரில் போராடி கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை கண்டு கொள்ளாத மத்திய மோடி அரசைக் கண்டித்து பா.ஜான்மண்டேலா  தலைமையில் சென்னை “கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்” நடைபெற்றது. விவசாயிகளின் கோரிக்கைகளையும் ஏற்க கோரி மத்திய மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் 25பேர் கைது செய்து சைதாப்பேட்டை கூ.மு. திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் புதுவை கழகம் பாரூக் குடும்ப நிதியாக 2 இலட்சம் வழங்கியது 8-4-2017 அன்று புதுவை, அரியாங்குப்பம், கரும்புலி மில்லர் அரங்கத்தில், புதுவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஃபாரூக் குடும்பநிதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு லோகு அய்யப்பன் தலைமை வகித்தார். தோழர்கள் தந்தைபிரியன், வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் முன்னரே நிதி அளித்தவர்கள் அல்லாமல்...

பார்ப்பன போலிச் சடங்குகளை தோலுரித்த ‘சம்ஸ்காரா’ நாவல், உலகின் கவனத்தை ஈர்க்கிறது

பார்ப்பன போலிச் சடங்குகளை தோலுரித்த ‘சம்ஸ்காரா’ நாவல், உலகின் கவனத்தை ஈர்க்கிறது

நாவல் முன்வைக்கும் பிரச்சினைகள்  இன்றும் சமகால சமூகத் தளத்திலும் எழுப்பப்பட வேண்டியவை. கருநாடக பார்ப்பனர் யூ.ஆர். அனந்தமூர்த்தி எழுதிய ‘சம்ஸ்காரா’ என்ற நாவல் பார்ப்பனர் களின் போலிச் சடங்குகளை அம்பலமாக்கியது. பார்ப்பனர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கிய அந்த நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டது. இப்போது உலகம் முழுதும் இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று இங்கிலாந்து நாட்டின் கார்டியன் பத்திரிகை பரிந்துரைத்த நாவல்களில் சம்ஸ்காராவும் இடம் பெற்றுள்ளது. இந்த நாவலின் உள்ளடக்கம் குறித்து ‘தமிழ் இந்து’வில் (மார்ச் 5) வாசந்தி எழுதிய கட்டுரை இது இங்கிலாந்திலிருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை அண்மையில் சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அனைத்து மாணவ உலகமும் அவசியம் படித்தாக வேண்டிய பத்துப் புத்தககங்களைத் தேர்ந்தெடுக்கும்படி பிரபல எழுத்தாளர்கள் பலரிடம் கேட்டது. ஆங்கில உலகில் அறியப்படாத ஆசியப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கச் செய்தார்கள். அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட பத்துப் புத்தகங்களுள் ஒன்று கன்னட எழுத்தாளர் யூ.ஆர். அனந்தமூர்த்தியின்...

அம்பேத்கரிய சிந்தனைகளை ஆழமாக அலசிய கருத்தரங்கம்

அம்பேத்கரிய சிந்தனைகளை ஆழமாக அலசிய கருத்தரங்கம்

“அம்பேத்கரின் அறிய வேண்டிய சிந்தனைகள்; ஆழமான புரிதலுக்கு அழைக்கிறோம்” என்ற அறிவிப்போடு வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த ஏப்.23 அன்று மிகச் சிறப்பான கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. பெரம்பூர் மேம்பாலம் அருகே உள்ள ‘பகுஜன் சமாஜ் கட்சி’யின் அரங்கில் இந்தக் கருத்தரங்கை நடந்த கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட் ராங் கழகத் தோழர் களுக்கு மகிழ்ச்சி யுடன் அனுமதி அளித்தார். அண்மை யில் திராவிடர் விடுதலை கழகத்தில் தங்களை இணைத் துக் கொண்ட பெண் தோழர்கள் சா.ராஜி, வ. சங்கீதா ஆகியோர் முன்னின்று, இக் கருத்தரங்கை ஏற்பாடு செய்தனர். வடசென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். சா. ராஜி தலைமையில் வ.சங்கீதா வரவேற்புரையாற்ற, மாவட்ட செயலாளர் இரா. உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘அம்பேத்கரை திசை திருப்பும் சதி’ எனும் தலைப்பில் அம்பேத்கர் இந்துத்துவ ஆதரவாளராக சித்தரிக்க முயலும் சங்பரிவாரங்களுக்கு பதிலளித்து. வரலாறுகளையும்...

பசுவதை தடை சட்டம் கோருவது அரசியல் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும்

பசுவதை தடை சட்டம் கோருவது அரசியல் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும்

“அடிப்படை உரிமைகள் மனிதர்களுக்கானதே தவிர, விலங்குகளுக்கு அல்ல” என்றார் அம்பேத்கர். பசுவதை தடை சட்டத்தை மாநில அரசுகள் இயற்ற வேண்டும் என்பது அரசியல் சட்டத்தின் நோக்கத்துக்கே எதிரானது என்பதை விளக்கி, ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளி வந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள். அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்தி லிருந்து விலகிப் போய் நீதிமன்றம் சட்டத்துக்கு மாறான தீர்ப்புகளை வழங்கி வருகிறது என்பதற்கு, ஒரு உதாரணம், ‘பசுவதைத் தடைச் சட்டம்’ குறித்து 2005ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14 அன்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மக்களின் பாதுகாப்புக்காக உறுதி செய்யப்பட்ட சட்டங்களை அதன் நோக்கத்திலிருந்து திரித்து விடுவதும் அதிலிருந்து விலகி நின்று முடிவுகள் எடுப்பதும் கடும் எதிர்விளைவுகளை உருவாக்கி விடும் என்று கட்டுரை எடுத்துரைக்கிறது. இதற்கு அமெரிக்காவின் விண்வெளி...

வழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கி அலறலுக்கு கண்டனம்: மதவாத மிரட்டலுக்கு திரைப்படப் பாடகர் பதிலடி

வழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கி அலறலுக்கு கண்டனம்: மதவாத மிரட்டலுக்கு திரைப்படப் பாடகர் பதிலடி

சோனுநிகாம், பிரபல இந்தி திரைப்படப் பாடகர். பிறப்பால் சீக்கியர். மசூதி, கோயில், குருத்துவாராவில் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்தி, மக்களுக்கு இடையூறு செய்வது ‘கட்டாய மதத் திணிப்பு’ என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். மசூதிகளில் தொழுகைக்கு அழைப்பதில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதையும், கட்டாய மதத் திணிப்பு என்று அவர் கூறியிருந்தார். இதற்கு மதவாதிகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் வரத் தொடங்கின. ஒரு இஸ்லாமிய மதக்குரு, சோனு நிகாமுக்கு எதிரான தண்டனையை அறிவித்திருந்தார். மேற்கு வங்கத்தில் மைனாரிட்டி ஒருங்கிணைப்புக் குழு துணைத் தலைவராக இருப்பவர் சையத் ஷா அதொஃப் அலி அல் கொய்தாரி. அவர்வெளியிட்ட தண்டனை அறிவிப்பு இவ்வாறு கூறியது: சோனு நிகாம் தொழுகைக்கான ஒலி பெருக்கி அழைப்புக்கு (அசான்) எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், “அவர் தலையை மொட்டை அடித்து, கழுத்தில் கிழிந்துபோன செருப்பு மாலை போட்டு நாடு முழுதும் அதே கோலத்தில் அவரை இழுத்து வருவோருக்கு ரூ.10 இலட்சம் பரிசு தருகிறேன்” என்று அறிவித்திருந்தார். கடந்த ஏப்.18ஆம் தேதி...

“மாட்டுக்கறி உணவு விழா”  கழகத் தலைவர்  அறிக்கை

“மாட்டுக்கறி உணவு விழா” கழகத் தலைவர் அறிக்கை

தோழர்களுக்கு வணக்கம்! முதல் செய்தி 23.04.2017 அன்று காவல்துறையினரின் அனுமதி மறுப்பால் கொளத்தூர், பெரியார் படிப்பகத்தில் நடைபெறுவதாக இருந்த மாட்டுக்கறி விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதாகும். நீதிமன்றத்தை அணுகி உடனடியாக அனுமதி பெறுவதற்குப் போதிய கால இடைவெளி இல்லாத காரணத்தால் பின்னொரு தேதிக்கு அனுமதிபெற்று சிறப்பாக நடத்திக் கொள்ளலாம். மாட்டுக்கறி விருந்து கொளத்தூரில் நடந்தால் ஈரோட்டில் பெரியார் சிலைக்கு “ஏதோ” மாலை அணிவிக்க உள்ளதாக சில இந்து இயக்கங்கள் அறிவித்திருக்கிறார்கள். அவ்வாறு “மாலை மரியாதை” செய்ய வருவோருக்கு “நல்ல முறையில்” வரவேற்பளித்து, உரிய பதில் மரியாதை அளிக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே, மாட்டுக்கறி (அவர்கள் மொழியில், பசு மாமிசம்) விருந்தினை, அவர்கள் (இந்து இயக்கங்கள்) வசதிக்காகவும், அவர்கள் ஈரோடு பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வரும்பொழுது சிறு காலதாமதமும் இன்றி வரவேற்று, பதில் மரியாதை செய்வதற்கு வாய்ப்பாகவும், 30-4-2017 அல்லது 1-5-2017 அன்று நண்பகல் ஈரோட்டில் ”பெரியார் மன்றத்தில்” அல்லது அருகாமையில்...

‘மத நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது’ என்ற  சட்டப் பிரிவை எதற்கெடுத்தாலும் பயன்படுத்தக் கூடாது உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

‘மத நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது’ என்ற சட்டப் பிரிவை எதற்கெடுத்தாலும் பயன்படுத்தக் கூடாது உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

கடவுள் – மதம் குறித்து கருத்துகளை தெரிவிப்பதே சட்டவிரோதம் என்று கூப்பாடு போடும் ‘இந்துத்துவ’ சக்திகளுக்கு கடிவாளம் போடும் முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. மதத்தைப் புண்படுத்தும் பேச்சு, செயல்பாடுகள் தண்டனைக்குரிய குற்றமாக சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தில் 295(ஏ) பிரிவை மதவாதிகள் பாதுகாப்பு அரணாக முறை கேடாகப் பயன்படுத்துகிறார்கள். மகாபாரதத்தை நடிகர் கமலஹாசன் விமர்சித்தார் என்பதற்காக மத உணர்வை புண்படுத்திவிட்டதாக நீதிமன்றம் போகிறார்கள். பெண்கள் அடிமைச் சின்னமான தாலியை அகற்றும் நிகழ்ச்சி நடந்தால் மத உணர்வை புண்படுத்துவதாக வழக்கு தொடருகிறார்கள். மதத்தை, கடவுளை, அறிவியல் சமூகக் கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்யும் கருத்துரிமையையே இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தி பறிக்கிறார்கள். எம்.எஸ். தோனி என்ற கிரிக்கெட் விளையாட்டு வீரரை ‘மகாவிஷ்ணு’வாக சித்தரித்து, ஒரு வர்த்தக பத்திரிகை 2013இல் அட்டைப்படம் போட்டிருந்தது. இந்து மதத்தைப் புண்படுத்தி விட்டதாக தோனி மீது ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப் பட்டது. ...

பல்லடம் ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர் மணி உரை இளவரசன் மரணம்: ‘ஜாதிய’த்தின் கொலை தடையை மீறி கழகத்தினர் கைது

பல்லடம் ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர் மணி உரை இளவரசன் மரணம்: ‘ஜாதிய’த்தின் கொலை தடையை மீறி கழகத்தினர் கைது

தருமபுரி மாவட்டத்தில் திவ்யா-இளவரசன் என்ற வெவ்வேறு ஜாதியை சார்ந்தவர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டதால், நத்தம், அண்ணாநகர், நாய்க்கன் கொட்டாய் ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்டோர் குடி யிருப்புகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. அதன் பிறகும் பிரியாமல் வாழ்ந்து வந்த ஜாதி மறுப்பு இணையர் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர்; ஜாதி வெறியர்களின் மிரட்டல்களால் திவ்யா தனது தாயாருடன் சென்றார். இறுதியில் 4-7-2013 அன்று இளவரசனின் உடல் இரயில் தண்டவாளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இளவரசன் சாவுக்குக் காரணமான ஜாதி வெறியர்களைக் கண்டித்து, 07-07-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3-00 மணியளவில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் எதிரில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.  கழக செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையிலும், கோவை மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விசயன் முன்னிலை யிலும் நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றினார். “ஜாதி...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

வினா:               பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாயாவதி, ‘பிராமணர்கள்’ மாநாடு நடத்தினார்!        – செய்தி விடை: மகிழ்ச்சி; தலித் மக்களுக்காக ‘பிரா மணர்கள்’ எப்போது மாநாடு நடத்தப் போகிறார்கள்? வினா: சென்னை செங் குன்றத்தில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய ஆடுகள் நீண்ட தூரம் பயணித்ததால் இறந்து விட்டன.            – செய்தி விடை: ஹெலிகாப்டரில் அழைத்து வந்திருக்கக் கூடாதா? வினா: இளவரசன் உடல் ‘போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு அது வீடியோ படமாக்கப் பட்டது.   – செய்தி விடை: அதில், ஜாதி அடையாளம் இருந்ததா, டாக்டர்? வினா: ராஜீவ்-ஜெய வர்த்தனா ஒப்பந்தப்படி தமிழர்களுக்கு வழங்கப் பட்ட உரிமைகளை பறிக்க இலங்கை அரசு முடிவு.                     – செய்தி விடை:தமிழர்களின் உரிமை களை மட்டுமா? ஒப்பந்தம் போட்ட இந்தி யாவின் மானத்தையும் சேர்த்துத்தான்! வினா: தேர்தல் அறிக்கை யில் இலவசங்களை வழங்குவதாக உறுதி யளிப்பது, நேர்மை யான, சுதந்திரமான தேர்தல்கள் நடப்பதை கேள்விக்குரியாக்கிவிடும்....

சுயமரியாதை – சமத்துவப் பரப்புரைப் பயணம் தலைமை : தோழர் கொளத்தூர் மணி

சுயமரியாதை – சமத்துவப் பரப்புரைப் பயணம் தலைமை : தோழர் கொளத்தூர் மணி

1932 ஆம் ஆண்டில் பெரியார் முன் வைத்தது சுயமரியாதை – சமதர்மத் திட்டம். இன்று அதே கோரிக்கைகளை திராவிடர் விடுதலைக் கழகம் சமுதாயத்தின் தேவை கருதி முன்னெடுக்கிறது. முதல் கட்டமாக 24.7.13 இல் மயிலாடுதுறையில் தொடங்கி 20 நாட்கள் 20 மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட்டு, 12.8.13இல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க நாளில் புதுச்சேரியில் நிறைவடைகிறது. சுயமரியாதை நோக்கில்… மக்களின் சுயமரியாதையை அவமதித்து அவர்களை பார்ப்பனியத்துக்கு அடிமைப்படுத்தும் பார்ப்பனிய திருமணம், பார்ப்பனர்கள் திணித்த சடங்குகள், பார்ப்பன வழிபாட்டு முறைகள் முதலியவற்றை சுயமரியாதை உணர்வோடு புறந்தள்ள வேண்டும்! கோவில் கருவறையில் பார்ப்பனரல்லாதோர் பூஜை செய்தால் சாமி தீட்டாகிவிடும் என்ற கருவறைத் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்! ஜாதி மறுப்புத் திருமணங்கள் அதிகரிக்க வேண்டும்! ஜாதி மறுப்பு இணையரின் குழந்iதைகளுக்கு ‘ஜாதியற்றோர்’ (சூடி ஊயளவந ணுரடிவய) ஒதுக்கீடு வழங்க வேண்டும்! ஜாதி – தீண்டாமைக் கொடுமைகள் எந்த வடிவில் இருந்தாலும் எதிர்த்து அகற்றப்பட...

குடந்தையில் ‘ஒற்றுமை விழா’ பொதுக் கூட்டம்

குடந்தையில் ‘ஒற்றுமை விழா’ பொதுக் கூட்டம்

06-07-2013 சனிக்கிழமை மாலை 6-00 மணியவில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாமகக் குளக்கரை யில், தமிழ்நாடு மக்கள் கட்சி சார்பாக ஒற்றுமை விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மக்கள் கட்சி, அனைத்து தமிழக பெண்கள் கழகம், தமிழக இளைஞர் கழகம், அம்பேத்கர் ஜனநாயக இளைஞர் கழகம் ஆகிய அமைப்புகளை ஒருங் கிணைத்து நடத்திய இந்த பொதுக் கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். பல்லடத்தில் கழகத் தோழர் மணவிழா கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதி கழகத் தோழர் அ.வெ.நாரா யணமூர்த்தி-செ.தீபா ஆகியோரது வாழ்க்கைத் துணை ஏற்பு விழா 07-07-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11-00 மணியளவில் பல்லடம் ஜி.ஆர்.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திருமணத்தை நடத்தி வைத்து சிறப்புரை ஆற்றினார். காஞ்சியில் சமூகநீதிப் பேரவை நடத்திய வி.பி.சிங் பிறந்த நாள்...

கழகத்தின் செயல்பாடுகள் மதுரை மண்டல கலந்துரையாடல் கூட்டம்

கழகத்தின் செயல்பாடுகள் மதுரை மண்டல கலந்துரையாடல் கூட்டம்

02.06.13 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஒட்டன் சத்திரத்தில் மதுரை மண்டலப் பொறுப்பாளர்களின்  கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் தி.தாமரைக் கண்ணன்  தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மதுரை, தேனி,  திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத் தோழர்கள் பங்கேற்றனர். ஜூன் 3 ஆம் வாரத்தில் மதுரை மண்டலப் பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிவகுப்பை பழனியில் நடத்துவது எனவும், ஆகஸ்ட் 3 ஆம் வாரத்தில் தொடர்ச்சியாக 15 நாட்கள் கிராமப்புறப் பிரச்சாரப் பயணம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. சுயமரியாதை கலைபண்பாட்டுக் கழகத்தின்  மதுரை மண்டல அமைப் பாளராக செம்பட்டி மு.இராஜாவும், சு.க.ப.க. திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளராக பீட்டர் அந்தோணிராஜும், சிவகங்கை சு.க.ப.க மாவட்ட அமைப்பாளராக தோழர் இளங்கோவும், திராவிடர் விடுதலைக்கழகத்தின்  சிவகங்கை மாவட்ட அமைப்பாளராக தோழர் முத்துக்குமாரும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். பெரியார் முழக்கம் 18072013 இதழ்

அக்கம்-பக்கம் பாவம், காமராசர்

அக்கம்-பக்கம் பாவம், காமராசர்

அடேங்கப்பா! இது உண்மை தானா? என்று மூக்கில் மீது விரலை வைக்க வேண்டியிருக்கிறது.  எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு சென்னை நகரில் திரும்புமிடமெல் லாம் இந்த ஆண்டு காமராசர் பிறந்த நாள் விழா சுவரொட்டிகள்; வண்ணப் பதாகைகள்! அத்தனையும் ஒட்டியது காங்கிரசுக்காரர்கள்தான்! காமராசர் பெயர் படங்களோடு ஒட்டிய பிரமுகர் களின் பெயர்கள்! ‘உயிரே’ என்கிறார் ஒருவர்; தலைவரே என்கிறார் மற்றொருவர்! ‘தெய்வமே’ என்கிறார், இன்னொருவர்! ‘சபதமேற்கிறோம்’ என்கிறார், இன்னொரு தலைவர்! காமராசர் நூற்றாண்டு சில ஆண்டு களுக்கு முன்பு வந்தது. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக ஒரு விழாக்கூட இவர்கள் நடத்த முன்வரவில்லையே என்று நாம் கேட்க வரவில்லை. கேட்டால் ‘போடா தேசத் துரோகி’ என்று தூற்றுவார்கள்! (அப்போது நமது இயக்கம் தான் பல ஊர்களில் காமராசர் விழாக்களை நடத்தியது) இப்போது போட்டிப் போட்டுக் கொண்டு சுவரொட்டிகள் வருவதற்கு என்ன காரணம்? எல்லாம் வரப் போகிற நாடாளுமன்றத் தேர்தல்தான்!...

தலையங்கம் ஜாதியும்-ஜாதிப் பேரணிகளும்!

தலையங்கம் ஜாதியும்-ஜாதிப் பேரணிகளும்!

அலகாபாத் உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகள் நடத்தும் ஜாதிப் பேரணிகளுக்கு தடை விதித்துள்ளது. பார்ப்பன  ஆதிக்க ஜாதிகள் பேரணி நடத்துவதும், தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டோர் பேரணி நடத்துவதும் வேறு வேறானது. முன்னது ஜாதி ஆதிக்கப் பேரணி; பின்னது உரிமைகளுக்கான பேரணி. எப்படி ஏழ்மை ஒழிப்பு என்பது ஏழைகளின் ஒழிப்பாகிவிடக் கூடாதோ, அதேபோல் ஜாதி ஒழிப்பு என்பதும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை ஒழிப்பாகிவிடக் கூடாது. உ.பி.யில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பார்ப்பனர்களுக்காக மாவட்டந்தோறும் மாநாடுகளை நடத்தி இறுதியில் மாநில மாநாட்டை லக்னோவில் நடத்தியுள்ளது. பார்ப்பனர்கள் தங்களின் ‘ஜாதித் திமிர்’ அடையாளங்களோடு விபூதி, நாமம், பூணூல் கோலங்களோடு பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டு மாநாட்டுக்கு திரண்டதாக செய்திகள் கூறுகின்றன.  மாநாட்டில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யில் 21 நாடாளு மன்றத் தொகுதிகளுக்கான பார்ப்பன வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவுக்கு இவ்வளவு அதிக எண்ணிக்கையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. சமாஜ்வாடிக் கட்சியைச்...

கூடங்குளம்: அவசரமாக ‘இயக்குவது’ ஏன்?

கூடங்குளம்: அவசரமாக ‘இயக்குவது’ ஏன்?

கூடங்குளம் அணுமின் திட்டம் செயல்படத் தொடங்கிவிட்டது என்று அறிவிப்பு வெளி வந்துள்ளது. இத்திட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சார்ந்த பொறியாளர் சுந்தர்ராசனிடம் இது குறித்து ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்காக பேசினோம். அவர் விரிவான விளக்கங்களை நியாயங்களை எடுத்துரைக்கிறார். அவர் நம்மிடம் தெரிவித்த கருத்துகளின் சுருக்கமான தொகுப்பு: கூடங்குளம் அணுமின் திட்டத்தின் ஒவ்வொரு உதிரிப் பாகத்தையும் தனித்தனியாக பாதுகாப்பானதா என்பதை சோதித்துக் கண்டறிய வேண்டும் என்று இந்திய அணுசக்திக் கழகம் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. பல லட்சம் உதிரிப் பாகங்கள் அனைத்தையும் இரண்டே மாதத்தில் சோதித்து முடித்துவிட்டதாக கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் சீல் இடப்பட்ட உறையில் பதிவாளரிடம் அறிக்கை அளித்துள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த மனுதாரர் களாகிய எங்களுக்கு அந்த அறிக்கையைத் தரவும் இல்லை. நிர்வாகம்...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

வினா: கூடங்குளம் அணு மின் நிலைய கழிவுகள் பிரான்சு, ரஷ்ய நாட்டுத் தொழில் நுட்பத்தில் வெளியேற்றப்படு வதால் கடல் வாழ் உயிரினங் களுக்கு பாதிப்பு ஏற்படாது.- அணுசக்திக் கழக முன்னாள் தலைவர் சீனிவாசன் விடை: அப்படியா? கடல் வாழ் உயிரினங்களுக்கு பேரிடர் பாதுகாப்புப் பயிற்சிகளை ஏற்கனவே கொடுத்து விட்டீர்களா? வினா: நெய்வேலி நிலக்கரி நிறு வனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்காமல், தமிழக அரசுக்கே ரூ.500 கோடிக்கு விற்க ‘செபி’ ஒப்புதல் – செய்தி விடை: அதேபோல், தமிழ் நாட்டின் வளங்களையும் தொழிலையும் தனியாருக்கு விற்காமல், தமிழ்நாட்டுக்கே விற்பதற்கு என்ன விலை தர வேண்டும்? வினா: ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா? அல்லது பிரிவினைவாத இந்தியா  வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.   – அஜய் மக்கான் (காங்கிரஸ் பொதுச் செயலாளர்) விடை: அப்படியானால், மக்களுக் கான இந்தியாவை யார் முடிவு செய்வது, சார்? வினா: தந்தி...

சென்னை கல்லூரி நடத்தும் கண்டிக்கத்தக்க கருத்தரங்கு

சென்னை கல்லூரி நடத்தும் கண்டிக்கத்தக்க கருத்தரங்கு

சென்னையிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை கருத்தரங்கம், நாட்டிய செயல்முறை நிகழ்ச்சி ஒன்றை நடத்தப் போவதாக அறிவிப்பு வெளி வந்துள்ளது. இதற்கான தலைப்பு ‘தேவதாசி மரபும் பரதநாட்டியமும்’ என்ப தாகும். சொர்ணமாலயா என்ற பார்ப்பனப் பெண் இதை நடத்து கிறாராம்! பெண்களை கோயிலுக்கு ‘பொட்டுக் கட்டி’ விடும் தேவதாசி இழிவு, சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டப் பிறகு, அதில் ஏதோ பெருமை மிக்க மரபுகள் இருப்பது போலவும், பரத கலையோடு தேவதாசி முறைக்கு தொடர்புகள் தொடருவது போலவும் கருத்தரங்குகள் நடத்தப்படுவது பச்சைப் பார்ப்பனியப் போக்கையே காட்டுகிறது. ஒரு சமூகத்துப் பெண்களை இழிவுபடுத்திய முறையை மரபுப் பெருமையாக்கி விவாதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பார்ப்பனப் பெண்களை நிர்வாண மாக ஓடவிட்டு, அவர்கள் ஓடும் தூரம் வரை நிலத்தை தானமாக வழங்கும் ‘கண்ணாடி மான்யம்’ என்ற முறைகூட இந்த நாட்டில் இருந்தது. அதன் மரபுப் பெருமைக்கு கருத்தரங்கம் நடத்துவார்களா? ‘உடன்கட்டை’ இருந்தது என்பதற் காக...

கூடங்குளம் எந்திரங்களில் கோளாறு எச்சரிக்கிறார், அணு விஞ்ஞானி கோபால கிருட்டிணன்

கூடங்குளம் எந்திரங்களில் கோளாறு எச்சரிக்கிறார், அணு விஞ்ஞானி கோபால கிருட்டிணன்

இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத் தின் முன்னாள் தலைவர் கோபாலகிருட்டிணன், அணுமின் உற்பத்திக்கு அவர் எதிரானவர் அல்ல; ஆனாலும், கூடங்குளம் மின் திட்டத்தில் ஆபத்துகள் சூழ்ந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டி எச்சரித்து வருகிறார். ஒரு விஞ்ஞானியின் இந்த ‘அபாய அறிவிப்பை’ திட்ட ஆதரவாளர்களும் ஆட்சியாளர்களும் அலட்சியப்படுத்தி வரு கிறார்கள். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு கடந்த வாரம் கோபாலகிருட்டிணன் அவர்களின் நீண்ட கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில், அவர் கூறியுள்ள பல்வேறு கருத்துகளில் முக்கியமான ஒன்றை சுட்டிக் காட்ட வேண்டும். கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு கருவிகளை வழங்கியது ரஷ்ய நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், 2012 பிப்ரவரியில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் பெயர் செர்ஜிஷடோல்வ். அவரைக் கைது செய்தது ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை. குற்றச்சாட்டு என்ன தெரியுமா? அணுமின் திட்டத்துக்குத் தேவையான மூலப் பொருள்களை மலிவான விலையில் தரக் குறைவாக வாங்கி, தரம் கொண்டதாக ஏமாற்றி, அதிக விலை நிர்ணயித்து, விலை வித்தியாசத்தை அந்த...

ஏற்காட்டில் நடந்த  சுகன்யா-ஜெகன்  வாழ்க்கை ஒப்பந்தம்

ஏற்காட்டில் நடந்த சுகன்யா-ஜெகன் வாழ்க்கை ஒப்பந்தம்

மேட்டூர் கழக ஆதரவாளரும், பெரியார்-அம்பேத்கர் கொள்கைப் பற்றாளருமான ஓய்வுப் பெற்ற துணை ஆட்சியர் இரா.கு.பால கிருட்டிணன் அவர்களின் மகன் பா.ஜெகன்-தே.கா.சுகன்யா ஆகியோர் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த நிகழ்வு 14.7.2013 அன்று காலை 8.30 மணியளவில்  சேலம் ஏற்காட்டில் வெங்கடேசுவரா திருமண மண்டபத்தில் நடை பெற்றது. பாவலர் எழுஞாயிறு தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் மண விழாவை நடத்தி வைத்தார். மருத்துவர் ஆர்.மோகன், சமூக ஆர்வலர் பொறியாளர் அரிஅரன், பகுத்தறிவாளர் அ.தனபாலன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துரை வழங்கினர். மணமக்கள் சார்பாக கழக ஏட்டுக்கு ரூ.5000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 25072013 இதழ்

காதலாகிக் கசிந்த உயிர்!

காதலாகிக் கசிந்த உயிர்!

தூய அன்புக் காதலொன்று தூரத்தி துரத்தி அடிக்கப் பட்டதே! காயம்பட்ட நெஞ்சோடு அது கல்லறைக்கு விரட்டப்பட்டதே! மூளை சிதற சிதற உன்னை முட்டித் தள்ளியது புகை வண்டித் தொடரா? பகை கொண்ட சதியா? தலைதெறிக்க ஓடிவந்த தாயின் முன்னே நீ தலைவெடித்து வீழ்ந்து கிடந்த கொடுமை என்ன! குலம் மாறி நீ காதலித்தாயென்று களம் அமைத்தோர் உன் கதை முடித்ததென்ன! நீதியின் காலடியில் வீழ்ந்து நியாயம் கேட்பதுபோல் நெடுஞ்சாண் கிடையாய் மாண்டு கிடக்கும் இளவரசனே! சாதிவெறிக் கொடுமைகளுக்கு உன் சாக்காடு சமாதி கட்டுமா! இனிவரும் சந்ததியர்க்காவது உன்னால் ஒரு நீதி கிட்டுமா! மெய்யாத்தூர் சொ. வேல்முருகன்

ரகசியம்-பரம ரகசியம் அக்கம்-பக்கம்

ரகசியம்-பரம ரகசியம் அக்கம்-பக்கம்

23 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், “என்னுடைய கருணை மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தைக் கூறுவீர்களா?” என்று தகவல் உரிமை தலைமை ஆணையருக்கு கடிதம் எழுதினார். “அது முடியாது; குடியரசுத் தலைவருக்கு அமைச்சரவை எழுதிய குறிப்புகளையோ, குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்வதற்கான காரணங்களையோ வெளியிட வேண்டிய அவசியமில்லை. அதை சட்டம் அனுமதிக்கவில்லை” என்று கண்டிப்பாக பதில் எழுதிவிட்டார் அதிகாரி. அதுவும்கூட, ஒரு வகையில் சரிதான். கருணை காட்டுவதற்குத்தான் காரணம் வேண்டும். கருணையை மறுப்பதற்கு காரணம் ஏதும் தேவையில்லையே! கருணை உள்ளம் இல்லாமல் இருந்தாலே போதும்! குடியரசுத் தலைவர் ‘கருணையுடன் – கருணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று எழுதி யிருப்பார், போலிருக்கிறது! பேரறிவாளன் கருணை மனு நிராகரிப்பு மட்டுமல்ல, தடா நீதிமன்றத்தில் அவர் மீது நடந்த வழக்கு விசாரணைகூட ரகசியமாகத்தான் நடந்தது. அதாவது, நீதிமன்றத்தில் ராஜீவ் கொலை வழக்குப் பற்றி நடக்கும் வாதங்கள், குறுக்கு விசாரணைகள் மக்களுக்கு தெரிந்துவிடவே கூடாது என்று...

‘துக்ளக்’கின் பார்ப்பனத் திமிர்!

‘துக்ளக்’கின் பார்ப்பனத் திமிர்!

‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும்’ என்பது ஏதோ அர்ச்சகர் வேலைக்கான போராட்டமாக குறைத்து மதிப்பிடு வது சமூகப் பார்வையின் கோணல்புத்தியே ஆகும். அனைத்து சாதியினரும் – பார்ப்பன ஆதிக்க ஜாதி குடியிருப்பு வீதிகளில் நடக்கும் உரிமை கோரியபோது இது நடைப்பயிற்சிக்கான போராட்டம் என்று கேலி செய்வதுபோல் பார்ப்பனர்கள் இந்த உரிமைப் போராட்டத்தையும் கேலி செய்கிறார்கள். ஜாதியின் மய்யமான உயிர்ப் புள்ளி கோயிலின் கர்ப்பகிரகத்துக்குள் இருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தில் அடங்கியிருக்கிறது என்ற உண்மையை சமூக விஞ்ஞானியான தந்தை பெரியார் கண்டறிந்தார். அதற்காக தனது வாழ்க்கையின் இறுதி காலத்தில் போராட்டக் களம் அமைத்தார். இதே கோரிக்கையை ஏற்று தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமும், பிறகு மீண்டும் தி.மு.க. ஆட்சியில் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்தில் இதே கோரிக்கையை பரிசீலிக்க நீதிபதி மகராசன் தலைமையில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, அக்குழு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக எந்த...

மாமல்லபுரத்தில் 2 நாள் கழகப் பயிற்சி முகாம்

மாமல்லபுரத்தில் 2 நாள் கழகப் பயிற்சி முகாம்

சென்னை மண்டல திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுக்கு பெரியாரியல் அடிப்படைப் பயிற்சி முகாம் 20, 21.7.2013 ஆகிய இரு நாட்களிலும் மாமல்லபுரத்தில் சிறப்புடன் நடந்தது. கிழக்கு கடற்கரைச் சாலையில் இயற்கை எழில் சூழ்ந்த பண்ணை இல்லத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமில் கழகத்தில் புதிதாக தங்களை இணைத்துக் கொள்ள முன் வந்த 33 இளைஞர்கள் கொள்கைப் பயிற்சி பெற்றனர். இதில் பெண்கள் 5 பேர். முதல் நாள் காலை 8.30 மணியளவில் தோழர்கள் அறிமுகத்தோடு பயிற்சிகள் தொடங்கின. சுயமரி யாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் செல்லையா முத்துசாமி திரைப்படம் இலக்கியம் குறித்த சமூகப் பார்வை என்ற தலைப்பில் முதல் பயிற்சியை அளித்தார். தொடர்ந்து, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘பெரியார் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் பயிற்சியளித்தார். தேனீர் இடை வேளைக்குப் பிறகு உடுமலை தமிழ்ச்செல்வன் ‘திராவிடர் இயக்க முன்னோடிகள்’ என்ற தலைப்பில் ‘ஒளித்திரை’யுடன் (பவர் பாயின்ட்) சமூக...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

வினா: நரேந்திர மோடிக்கு அமெரிக்கா ‘விசா’ வழங்க வேண்டும்.     – பாரதிய ஜனதா தலைவர்  ராஜ்நாத் சிங் விடை: இந்துக்கள் கடல் தாண்டுவது பாவம் என்று சாஸ்திரம் கூறுவதை, மீறலாமா, ராஜ்நாத்? வினா: வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைத் துறையில் அன்னிய முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்து வது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகிவிடும்.  – உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு விடை: அலைபேசி போன்ற தொலை தொடர்புத் துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதித்துள் ளீர்களே! அது பாதுகாப்புக்கு ஆபத்து இல்லையா? பார்ப்பன பத்திரிகைத் துறையில் அன்னிய முதலீடு வந்தால் மட்டும்தான் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து வந்து விடுமா? வினா: குடியரசுத் தலைவர் பதவியில் பிரணாப் முகர்ஜி – ஓராண்டு சாதனை.  – தினமலர் செய்தி விடை: உண்மைதான்! கருணை மனுக் களை தள்ளுபடி செய்ததில் மகத்தான சாதனை புரிந்துள்ளார்! வினா: செவ்வாய் கிரகத்தை ஆராய செயற்கைக் கோளை அனுப்ப இருக்கிறோம். பெருமைக்காக...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

வினா: ஹன்சிகாவை காதலிக்கிறேன், எங்கள் திருமணம் நிச்சயம். – நடிகர் சிம்பு அறிவிப்பு விடை : ஒன்றும் பிரச்சினை இல்லை. இது சினிமா திருமணம்தான் – நாடகத் திருமணம் என்றால் தான் எதிர்ப்பு வரும்! வினா : சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் கொத்தடிமைகள் ஒழிப்புக்கு சட்டம் வந்து, 30 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கொத் தடிமை ஒழியவில்லையே.  – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால் வேதனை விடை : கொத்தடிமைகள், கொத்தடிமை களாகவே வாழ்வதற்கு சுதந்திரம் வழங்கி யிருக்கிறோமே! இது சாதனையல்லவா! வினா : கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு27 ரூபாயும், நகரங்களில் 33 ரூபாயும், சம்பாதிப்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வரமாட்டார்கள் என்று திட்டக்குழு கூறியுள்ளது. இவர்கள் என்ன அளவு கோலைப் பயன்படுத்துகிறார்கள் என்பது எனக்கு எப்போதுமே விளங்கு தில்லை. – காங்கிரஸ் செயலாளர் திக் விஜய்சிங் விடை : உங்களுக்கு மட்டுமா? வறுமைக் கோட் டுக்கே விளங்கவில்லை, சார்! வினா...

எழுச்சி நடை போடுகிறது – ‘சுயமரியாதை-சமத்துவப்’ பரப்புரை

எழுச்சி நடை போடுகிறது – ‘சுயமரியாதை-சமத்துவப்’ பரப்புரை

மயிலாடுதுறையில் தொடங்கிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரைப் பயணம் – மக்களை சந்தித்து, சாதி எதிர்ப்பு மற்றும் பார்ப்பனியத்தின் சமுதாய பொருளாதார சுரண்டல் கொள்கைகளை விளக்கி வருகிறது. மக்கள் திரண்டு கருத்துகளைக் கேட்கிறார்கள். கழகத் தலைவர், பொதுச் செயலாளர் தோழர்களோடு பயணத்தில் பங்கேற்று வருகிறார்கள். பயணம் பற்றிய செய்தித் தொகுப்பு: திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சுயமரி யாதை சமதர்ம பரப்புரைப் பயணம் 24.07.2013 அன்று மயிலாடுதுறையில் தொடங்கி தொடர்ச்சி யாக 20 நாட்கள் 20 மாவட்டங்கள் வழியாகச் சென்று, தினசரி 2 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் இரவு பொதுக்கூட்டம் என்ற அடிப்படையில் நடைபெற்று வருகிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் இரண்டா மாண்டு தொடக்க நாளான 12.08.2013 அன்று புதுச்சேரி  அரியாங் குப்பத்தில் நிறைவடைய உள்ளது.. 24.07.2013 மாலை 6 மணிக்கு மயிலாடுதுறை சின்னக் கடைத் தெருவில் பறைமுழக்கத்துடன் பரப்புரையின் தொடக்க நிகழ்வுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பார்ப்பனியத்தின் வடிவங்களான பெண்ணடிமை, சாதிய...

சமூக நீதி போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி! சி.பி.அய். விசாரணை வளையத்தில் அய்.அய்.டி.

சமூக நீதி போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி! சி.பி.அய். விசாரணை வளையத்தில் அய்.அய்.டி.

சென்னை அய்.அய்.டி. என்ற உயர்கல்வி நிறுவனம் இப்போதுதான் நீண்டகால போராட்டத்துக்குப் பிறகு சி.பி.அய். விசாரணை வரம்புக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. முழுமையான அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பார்ப்பனர்கள் பல்லாயிரம் கோடி பணம் புரளக்கூடிய இந்த நிறுவனத்தில் தங்களுக்கான தனி அரசையே நடத்தி வந்தார்கள். 1997 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, (இணைப்புகளுக்கு முந்தைய) பெரியார் திராவிடர் கழகம் தொடர் போராட்டங்களை நடத்தி, அய்.அய்.டி. சமூக அநீதிகளை அம்பலப்படுத்தி வந்தது. பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், முற்றுகைப் போராட்டங்கள், விளக்கக் கூட்டங்கள், சுவரொட்டி இயக்கங்கள் நடத்தப்பட்டன. பலமுறை ஆனூர் ஜெகதீசன், விடுதலை இராசேந்திரன் தலைமையில் தோழர்கள் பல முறை கைது செய்யப்பட்டார்கள். சுமார் 160 பேராசிரியர்களிடையே தாழ்த்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. அதிசயமாக இரண்டு பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். அதில் ஒருவர், கணிதத் துறையில் இணைப் பேராசிரியரான வசந்தா ஆவார். அய்.அய்.டி. பார்ப்பனர்கள் அத்தனை பேரையும்விட அறிவில் சிறந்த விஞ்ஞானி. சர்வதேச...

தீண்டாமை குற்றங்கள்: நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை இடை நீக்கம் செய்க! கழகம் வழக்கு; உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

தீண்டாமை குற்றங்கள்: நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை இடை நீக்கம் செய்க! கழகம் வழக்கு; உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

தீண்டாமை  வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தாமல் அலட்சியப்படுத்திய காவல்துறை, நிர்வாகத் துறை உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை அதிகாரி உட்பட அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் ‘நோட்டீசு’ பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழக கோவை மாநகர மாவட்ட தலைவர் வழக்கறிஞர் என்.பன்னீர் செல்வம், கழக சார்பில் உயர்நீதின்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். கழகத்தின் முன்னணி அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, காரமடை பகுதிகளில் கள ஆய்வு நடத்தி, தீண்டாமை வன்கொடுமைகளை செயல்படுத்தும் தேனீர்க் கடை, முடிதிருத்தும் கடைகள், பேக்கரிகளைக் கண்டறிந்தது. அந்தக் கடைகளின் பெயர்களும் மனுவில் பட்டியலிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் முத்துக் கருப்பண்ணன் வீட்டின்...

பயணத்தின் செயல் வீரர்கள்

பயணத்தின் செயல் வீரர்கள்

சுயமரியாதை சமத்துவ பரப்புரைப் பயணத்தில் கலந்து கொண்டிருக்கும் தோழர்கள் – சொற் பொழிவாளர்கள்: பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், முனைவர் ஆ.ஜீவானந்தம் வசூல் குழுத் தோழர்கள் – நங்கவள்ளி கிருஷ்ணன், திருப்பூர்சம்பூகன், திருப்பூர் மூர்த்தி, பல்லடம் மணிகண்டன், பல்லடம் செல்வகுமார், ஆண்டிமடம் சிவக்குமார் (தமிழ்நாடு மாணவர் கழகம்) கலைக் குழுத் தோழர்கள் – திருச்சி ஆனந்த் (பயிற்சியாளர்), திருப்பூர் குமார், திருப்பூர் நகுலன், திருப்பூர் பிரசாந்த், திருப்பூர் மணிகண்டன், கோபி அர்ச்சுணன், மதுரை மாப்பிள்ளைச்சாமி  (எ) லெனின், மேட்டூர் முத்து ரத்தினம், மேட்டூர் ரங்கநாதன், மேட்டூர் மூர்த்தி, மேட்டூர் குருநாத். புத்தக விற்பனையாளர் மேட்டூர் முத்து ராஜ்; புகைப்படக் கலைஞர் இளம்பிள்ளை கோகுல கண்ணன்; செய்தியாளர் ஈரோடு சிவக்குமார்; பயண ஒருங்கிணப்பாளர்கள்: திண்டுக்கல் இராவணன், கிளாகுளம் செந்தில் பெரியார் முழக்கம் 08082013 இதழ்

புதிய தோழர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு

புதிய தோழர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு

கழகத்தின் சார்பாக ஏப்ரல் 14-இல் நடைபெற்ற மனுசாஸ்திர போராட்டத்தை விளக்கி ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. கோபி ஒன்றிய பகுதியில் நடைபெற்ற பரப்புரைப் பயணத்தின்போது கோட்டுபுள்ளாம்பாளையம் பகுதியிலிருந்து புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர். அவ்வாறு இணைந்த தோழர்களுக்கு கழகத்தின் சார்பாக 30.6.2013 அன்று அளுக்குளி சமுதாயக் கூடத்தில் இயக்க அறிமுக வகுப்பு நடத்தப்பட்டது. ஈரோடு மண்டல செயலாளர் இராம. இளங்கோவன், ‘இயக்கம்-ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பிலும், இராவணன் ‘பெரியார்-ஓர் அறிமுகம்’ என்கிற தலைப் பிலும் வகுப்பெடுத்தனர். உணவு இடைவேளைக்குப் பின், காவை இளவரசன், தோழர்களுக்கு ‘மூட நம்பிக்கை ஒழிப்பு’ என்கிற தலைப்பில் வகுப்பு எடுத்தார். பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகளை அலங்கியம் ரவி முன்னின்று செய்தார். தோழர்கள் அர்ச்சுனன், துரை, விசய சங்கர் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), ஆனந்த ராசு ஆகியோர் வகுப்புகளை ஒருங்கிணைத்தனர்.  நிறைவில் கழகத்தின் செயலவை தலைவர் துரைசாமி, கழகத்தின்...

பயணத்தின் வெற்றிக்கு நடந்த முன்னேற்பாடுகள்

பயணத்தின் வெற்றிக்கு நடந்த முன்னேற்பாடுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சுயமரியாதை(சமதர்ம) சமத்துவ பரப்புரை 24.07.2013 அன்று மயிலாடுதுறையில் தொடங்கி திராவிடர் விடுதலைக் கழகத்தின் இரண்டாமாண்டு தொடக்க நாளான  12.08.2013  அன்று புதுச்சேரியில் முடிகிறது. இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காகவும், பரப்புரை பயணம் செல்லும் வழியில் உள்ள மண்டல, மாவட்ட பொறுப்பாளர்களைச் சந்தித்து பயண ஏற்பாடுகளைப் பற்றி கலந்துரையாடுவதற்காகவும் கழகத்தின் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மதுரை மண்டல பொறுப்பாளர் இராவணன், வாகன ஓட்டுநராக பல்லடம் ஒன்றியச் செயலாளர் மணி கண்டன் ஆகியோர் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து முன்னேற்பாடுகளை செய்தனர். 11.07.2013 காலை கோபி சென்ற தலைமைக் கழக நிர்வாகிகள் ஈரோடு மண்டலச் செயலாளர் தோழர் இராம. இளங்கோவனைச் சந்தித்து செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், காவல்துறை அனுமதி விவரம், பயணக் குழுவினர் தங்குவதற்கான வசதிகள் பற்றிக் கலந்துரையாடினர். பின்னர் அங்கிருந்து குருவ ரெட்டியூர் சென்ற தலைமைக் கழக நிர்வாகிகள் ஈரோடு மாவட்டத் தலைவர் நாத்திக...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

வினா : 21 வயதுக்குட்பட்டவர்கள் திரு மணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் வேண்டும் என்று இந்து திருமணச் சட்டத்தைத் திருத்த வேண்டும். – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு விடை : நல்லது. அப்படியே 21 வயதுக்கு உட்பட்டவர்கள் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவது என்பதற்கும் பெற்றோர்கள் சம்மதம் வேண்டும் என்று தேர்தல் சட்டத் திலும் திருத்தம் கொண்டு வந்து விடலாம். வினா : நகரங்களில் நாளொன்றுக்கு ரூ.33.33 காசுக்கு மேல் செலவிடு வோரும், கிராமங்களில் ரூ.27.20 காசுக்கு மேல் செலவிடுவோரும் ஏழைகள் அல்ல. – திட்டக் குழு அறிவிப்பு விடை : ஒரே ஒரு சந்தேகம்! எல்லா வற்றுக்கும் ‘டாலர்’ அடிப்படையில் கணக்குப் போடும்போது ஏழைகளை மட்டும் ஏன் ‘ரூபாய்’ அடிப்படையில் கணக்கிடுகிறீர்கள்? இந்த மக்கள் என்ன “பாவம்” செய்தார்கள்? வினா : தேசியக் கொடி, தேசிய கீதம் பற்றிய சட்டங்களைக் கண்டிப் புடன் அமுல்படுத்த வேண்டும். – சென்னை...

தலையங்கம் அமர்த்தியாசென் கூறுகிறார்!

தலையங்கம் அமர்த்தியாசென் கூறுகிறார்!

“இந்தியாவிலுள்ள மாநிலங்களை ஒப்பிட்டு நோக்கத்திற்காகத் தனித்தனி நாடுகளாக கருதிப் பார்ப்போமேயானால் கேரளாவும், தமிழ்நாடும், மற்றெல்லா மாநிலங்களைவிடவும் மேலாக முதல் நிலையில் இருக்கும் உத்தரபிரதேசமும், மத்திய பிரதேசமும் மிகவும் கடைசி நிலையில் இருக்கும்.” நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டி ரெஸ் ஆகியோர் இணைந்து எழுதிய நூலில் (நிலையில்லா புகழ் – இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்) இவ்வாறு குறிப்பிட் டுள்ளனர். அதுமட்டுமல்ல, இந்த மாநிலங்களிலிருந்து கிடைக்கும் அனுபவங்களையே படிப் பினையாகக் கொண்டு வேறு மாநிலங்கள் தங்கள் முன்னேற்றத்துக்குத் திட்டமிட வேண்டும் என்றும் அந்த நூலில் குறிப்பிட் டுள்ளனர். இந்தியா என்ற நுகத்தடியில் சிக்கிக் கொண்டதன் காரணமாக பார்ப்பனிய மேலாதிக்கத்துக்கு உட்பட்டு தமிழகம் அதன் முன்னேற்றங்களை விரைவு படுத்த முடியாது தடைபட்டு நிற்கிறது. பார்ப்பனியமும், இந்துமத வெறியும், ஜாதிக் கட்டமைப்பும் இறுகிப் போய்க் கிடக்கும் உ.பி., ம.பி. போன்ற மாநிலங்கள் அவைகள் தனி நாடுகளாக இருந்திருக்கு மானால், கடைசி இடங்களில்...

ஆதரவாக… மவுனமாக… பரப்புரையின் தாக்கம்

ஆதரவாக… மவுனமாக… பரப்புரையின் தாக்கம்

ஜூலை 24 ஆம் தேதி மயிலாடுதுறையில் தொடங்கிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் ‘சுயமரியாதை சமதர்மப் பரப்புரைப் பயணம்’ தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து, ஜாதி எதிர்ப்பு வாழ்வியல் உரிமை பறிப்பு, நாட்டின் பொருளாதாரச் சுரண்டல்களை பறை இசை, வீதி நாடகங்கள், பாடல்கள், உரை வழியாக மக்களிடம் விளக்கி வருகிறது. வீதி ஓரங்களில் மக்கள் கூடும் பகுதிகளில் கழகத் தோழர்கள் வாகனங்களை நிறுத்தி, பறை இசை எழுப்பியவுடன் மக்கள் கூடுகிறார்கள். பரப்புரை வாகனத்தில் பார்ப்பனியம், ஜாதி-தீண்டாமை வாழ்வியலில் ஊடுருவி, மக்களை பிளவுபடுத்துவதை சித்தரிக்கும் கருத்துப் படங்களையும், உயர்கல்வித் துறையில் மத்திய அரசுத் துறையில் பார்ப்பன மேலாதிக்கத்தை விளக்கும் புள்ளி விவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை பார்க்கிறார்கள். ஜாதியத்தில் ஊறிப் போய் நிற்போர்  கருத்துகளை மவுனமாக கேட்கிறார்கள்.  ஜாதி எதிர்ப்பாளர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள். பயணத்தின் நோக்கங்களை விளக்கிடும் துண்டறிக்கைகளை அப்பகுதியிலுள்ள கடைகளில் தோழர்கள் வழங்கி உண்டியல் வழியாக நிதி திரட்டுகிறார்கள். முதலில் பறை இசை ஒலிக்கும்....

20 நாள் “சுயமரியாதை-சமதர்ம”ப் பரப்புரைப் பயணம் தொடருகிறது ஜாதி சங்கங்களை புறக்கணிக்க வேண்டுகோள்!

20 நாள் “சுயமரியாதை-சமதர்ம”ப் பரப்புரைப் பயணம் தொடருகிறது ஜாதி சங்கங்களை புறக்கணிக்க வேண்டுகோள்!

ஒரு காலத்தில் ஜாதி சங்கங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்தன. இப்போது ஜாதி சங்கங்கள் ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு, பாhர்ப்பனியத்தை நிலை நிறுத்தவும் தங்களைத் தலைவர்களாக நிலைநிறுத்திக் கொள்ளவும் வாக்கு வங்கியை உறுதிப்படுத்திக் கொள்ளவுமே பயன்படு கின்றன. அதே வேளையில் ஜாதிக் குழுவைச் சார்ந்த அனைவருமே ஜாதி சங்கங்களை ஏற்க வில்லை. அதை எதிர்க்கும் ஜாதி எதிர்ப்பாளர்கள் ஏராளமாக உள்ளனர். ஒவ்வொரு ஜாதியிலும் முற்போக்கு சிந்தனை கொண்ட ஜாதி எதிர்ப் பாளர்கள் துணிவுடன் வெளியே வந்து ஜாதி வெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று பரப்புரைக் கூட்டங்களில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வலியுறுத்தினர். ஜூலை 24ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை சுயமரியாதை-சமதர்மப் பரப்புரைப் பயணத்தின் நிகழ்வுகள் கடந்த வாரம் வெளி யிடப்பட்டிருந்தன. ஜூலை 29ஆம் தேதியி லிருந்து ஆகஸ்டு 1ஆம் தேதி வரை நடந்த பயணத்தின் செய்தித் தொகுப்பு: ஜூலை...

பன்னாட்டுச் சுரண்டலுக்கு எதிராக….

பன்னாட்டுச் சுரண்டலுக்கு எதிராக….

1932-ஆம் ஆண்டில் பெரியாரால் முன்வைத்த சுயமரியாதை சமதர்ம வேலைத் திட்டம் பார்ப்பனரல்லாத மக்களுக்கு ஜாதித் தீண்டாமை ஒடுக்குமுறைகளோடு பொருளாதாரத்திலும் அழுத்திக் கொண்டிருக்கும் முதலாளித்துவத்தையும் எதிர்க்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. ஜாதி எதிர்ப்போடு பொருளாதாரத் திட்டத்தையும் இணைத்து பெரியார் தந்த திட்டட்தை இன்றைய சமூகப்பொருளாதாரச் சூழலில் செயல்படுத்துவது சரியான சமூக மாற்றத்திற்கான கொள்கையாகும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் கருதுகிறது. 1990-க்குப் பிறகு மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் நுழை வதற்கான கதவு மண்டல் பரிந்துரை வழியாகத் திறந்துவிடப்பட்டவுடன் – ஆட்சியதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த பார்ப்பன உயர்சாதி அதிகார வர்க்கம், அரசுப்பிடிகளிலிருந்து பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களைப் படிப்படியாகப் பறிப்பதற்கு உலகமயமாதல் கொள்கையை ஆட்சியாளர்களுடன் கொண்டுவந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பார்ப்பன உயர்ஜாதி அதிகாரவர்க்கம், பெரும் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறவனங்களின் ஆதரவோடும் ஆளுங்கட்சிகளின் ஆதரவோடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான திட்டங்களைப் பொருளாதாரக் கொள்கையாகச் செயல்படுத்திவருகிறது. இந்தப் பொருளாதாரக் கொள்கைகளால் சிறு தொழில்கள்,...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

வினா : டெல்லி ராஜ்காட்டில் காந்தி சமாதிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.  – செய்தி. விடை : ஆட்சியாளர்கள் பயப்பட வேண்டாம்;  சமாதியை உடைத்துக் கொண்டு காந்தி நிச்சயம் வெளியே வரமாட்டார். வினா : ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்தை அவரது வீட்டில் சந்தித்து தனது கட்சியை பா.ஜ.க. வுடன் இணைத்தார். – செய்தி விடை : ஒரு கட்சியின் இணைப்பையே வீட்டு வரவேற்பறையில் நிகழ்த்தும் உலகச் சாதனையை சுப்ரமணியசாமியால் மட்டுமே செய்ய முடியும்! வினா : தெலுங்கானா பிரிவினையை எதிர்த்து ஆந்திராவில் முழு அடைப்பு நடந்த நாளிலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. –  செய்தி விடை : அப்போ, ஏழுமலையான் முழு அடைப்பில் பங்கேற்கவில்லையா? அப்படியானால் தெலுங்கானா பிரிவினையை ஏழுமலை யானும் வரவேற்கிறானா? வினா : மாநில கட்சிகளுக்கு பிரகாசமான எதிர் காலம் இருப்பதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பரதன்...

சலூன் கடையில் முடிவெட்ட மறுப்பு: கழகத்தின் முயற்சியால் வெற்றி!

சலூன் கடையில் முடிவெட்ட மறுப்பு: கழகத்தின் முயற்சியால் வெற்றி!

ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தி ஒன்றிய பகுதிக்குட்பட்ட புதுரோடு பகுதியை சார்ந்தவர் தோழர் பாலாஜி. இவர் நமது கழகத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். இவர் தனது ஊருக்கு அருகிலுள்ள புங்கம்பள்ளி பகுதியிலுள்ள சலூன் கடைக்கு முடிவெட்ட சென்றார். சலூன் கடைக்குச் சொந்தக்காரர், ‘இந்த கடையில் உனக்கு (தாழ்த்தப்பட்டோருக்கு) முடிவெட்ட மாட்டேன். நீ வேறு கடைக்கு செல்’ என்றார். அந்தப் பகுதியில் இருந்த மற்ற இரண்டு கடைக் காரர்களும் ‘நாங்களும் வெட்ட மாட்டோம்’ என்று மறுத்து விட்டனர். வீடு திரும்பிய தோழர் அந்தப் பகுதியை சார்ந்த மற்ற தோழர் களிடத்தில் இதை கூறினார். உடனே, அங்கு இருந்த தோழர்கள், புதுரோடு இராஜேந்திரன் தலைமையில் கடையினை முற்றுகையிட சென்றார்கள். அவர்கள் அங்கு செல்லும் முன்பாக இராசேந்திரன் அந்த பகுதி காவல் நிலைய ஆய்வாளரை கைபேசியில் அழைத்து, கடையில் நடந்த சம்பவத்தைக் கூறி நீங்கள் நடவடிக்கை...

பா.ஜ.க.வினரையும் சிந்திக்க வைத்த பரப்புரை

பா.ஜ.க.வினரையும் சிந்திக்க வைத்த பரப்புரை

ஆகஸ்டு 2ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை நடந்த சுயமரியாதை சமதர்ம பயணத்தின் செய்தித் தொகுப்பு: ஆகஸ்டு 2 அலங்கியம் சாலையில் உள்ள அம்மன் மண்டபத்தில் தங்கியிருந்த தோழர்களுக்கு முந்தைய நாள் இரவு உணவு, 2.8.2013 காலை அசைவ உணவு ஆகியவற்றை தாராபுரம் பகுதி பொறுப்பாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். காலை 10.30 மணிக்கு தாராபுரம் பேருந்து நிலையம் எதிரே பரப்புரை தொடங்கியது. முனைவர் ஜீவானந்தம் சர்வதேச அளவில் பார்ப்பனியத்தின் நிலை பற்றி விளக்கினார். வழக்கறிஞர் கலையரசன் தேநீர் வழங்கினார். பயணத்தின் நோக்கங்கள் குறித்து, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டியளித்தார். தாராபுரம் பகுதித் தோழர்கள் பரப்புரை நிதியாக ரூ.500/- வழங்கினர். நண்பகல் 12 மணிக்கு கணியூர் பேருந்து நிலையத்தில் பரப்புரை பறைமுழக்கத்துடன் தொடங்கியது. கழகக்  கொடியை கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஏற்றி வைத்தார். முனைவர் ஜீவானந்தம் இந்தியாவிற்குள் பார்ப்பனர்கள் வருகை குறித்தும், நம் மன்னர்கள்...

20 நாள் பரப்புரைப் பயணம் புதுவையில் நிறைவடைந்தது செப்.11 இல் கிராமம் கிராமமாக பரப்புரை தொடங்குகிறது

20 நாள் பரப்புரைப் பயணம் புதுவையில் நிறைவடைந்தது செப்.11 இல் கிராமம் கிராமமாக பரப்புரை தொடங்குகிறது

திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி – தீண் டாமை – பார்ப்பனியம் – பன்னாட்டு பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராக 20 மாவட்டங்களில் நகர்ப் பகுதிகளில் 20 நாட்கள் தொடர்ந்து நடத்திய முதல் கட்டப் பரப்புரை இயக்கத்தை திராவிடர் விடுதலைக் கழகம் இரண்டாமாண்டு தொடக்க நாளான ஆகஸ்டு 12 இல் புதுவையில் நிறைவு செய்தது. இரண்டாம் கட்டமாக மாவட்டங்களை மய்யமாக்கி கிராமம் கிராமமாக மக்களை சந்திக்கும் அடுத்தக்கட்ட பரப்புரை இயக்கத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி புதுவை நிறைவு விழாவில்  அறிவித்தார். புதுவை ஜீவா சதுக்கத்தில் பரப்புரைப் பயண நிறைவு விழா நிகழ்வுகள் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் வழங்கிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கின. தோழர்கள் உரைகளைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பரப்புரைப் பயண நிறைவையொட்டி கழக சார்பில் முடிவெடுக்கப்பட்ட தீர்மானங்களை முன்மொழிந் தார். தீர்மானங்கள் விவரம்: ஜாதி அமைப்பு முறை ஒழிவதற்கு ஒரே ஜாதிக்குள் நடக்கும்...

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா குமரி மந்தாரம் புதூர் 23042017

திராவிடர் விடுதலைக்கழகம், பெரியார் தொழிலாளர் கழகம், குமரி மாவட்டம் சார்பாக அம்பேத்கர், காரல் மார்க்சு பிறந்த நாள் விழா மற்றும் தொழிலாளர் தினவிழா மந்தாரம் புதூரில் நடைப்பெற்றது. தோழர் பாரூக் வீரவணக்க கொடிக்கம்பம் நடப்பட்டு தோழர் பால்பிரபாகரன் கழகக்கொடியேற்றி வீரவணக்க முழக்கங்கள் எழுப்பினார். பொதுக்கூட்டத்தில் தோழர் நீதி அரசர், தலைமையுரையாற்றினார். தோழர் ஜாண் மதி வரவேற்புரையாற்றினார். தோழர்கள் தமிழ் மதி, ஜாண் முறே ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர் பால் பிரபாகரன் (கழகப் பரப்புரைச் செயலாளர்) சாதி ஒழிப்பில் பெரியாரும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் உரையாற்றினார். பால் பிரபாகன் பேசிய உரையிலிருந்து வினா விடைப் போட்டி நடைப்பெற்றது. அதில் முதல் பரிசு ரூ.1000-ம், பெரியார் கோப்பையும் ஆதிராவும், இரண்டாவது பரிசு ரூ.500-ம், பெரியார் கோப்பையும் அனுசிகாவும் பெற்றனர். கைப்பந்து போட்டிகளில் கலந்துக்கொண்டு திறமைகளை வெளிக்கொணரும் தோழர் சிவசங்கரி அவர்களைப் பாராட்டி பெரியார் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. பெரியார் புத்தகங்களும் பரிசாக வழங்ப்பட்டது. பள்ளிப்பிள்ளைகள் 10...