20.02.2019 புதன்கிழமை அன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில், திராவிடர் விடுதலைக் கழக சார்பில் உயர் ஜாதியினருக்கு 10ரூ இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கள்ளக்குறிச்சி நகர அமைப்பாளர் மு.சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிதாசன், கார்மேகம், ஆசைத்தம்பி, நாகராஜ் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ச.கு. பெரியார் வெங்கட், மாவட்ட செயலாளர க, இராமர், மாவட்ட அமைபாளர் சி,சாமிதுரை, மாவட்ட தலைவர் க. மதியழகன் சங்கை ஒன்றிய அமைப்பாளர் செ.வே. ராஜேஷ், பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன் நிறைவுரையாற்றினார். காரனுர் மணி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 28022019 இதழ்
பிராமணப் புரோகிதர் தலைமையில் நடக்கும் சமஸ்கிருத வைதிக திருமண முறையை ஸ்டாலின் விமர்சித்து விட்டார் என பொங்குபவர்கள், தங்கள் வீட்டு திருமணங்களில் இந்த மந்திரங் களின் உண்மை பொருளை அறிந்து கொள்ள, சமஸ்கிருதத்துக்கு பதிலாக தமிழிலேயே சொல்ல வலியுறுத்துவார்களா? இதோ அவாளே வேதம் ஓதி, அவாளே விளக்கமும் தருகிறாளே! தமிழில் இந்த விளக்கங்களை அளித்தவர் அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் என்ற வேத சமஸ்கிருத அறிஞர்.. “சோமஹ ப்ரதமோவி வித கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஷ்டே பதிஷ் துரியஷ்தே மனுஷ்ய ஜாஹ” இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதாவது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். ஸப்தர்ருஷ்ய: ப்ரதமாம் க்ருதிகாநா...
தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ – பிப்ரவரி 2019 இதழ் தலையங்கம் – அண்ணா தந்த அறிவாயுதங்கள் வைதீகத்தைத் துளைத்தெடுத்த அண்ணாவின் எழுத்துகள் கீழ்வெண்மணி மறைக்கப்பட்ட வரலாறு 10 சதவீத ஒதுக்கீடு : ஒரு ஆய்வு பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல் மோடி பூமியின் காவலரா? பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000/- கோடி மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது…சமீபத்திய ஆய்வு முடிவுகள் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு: நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363
7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி, மார்ச் 9 ஆம் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவையில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடக்க இருக்கிறது. தமிழக அமைச்சரவை முடிவுக்குப் பிறகு ஒப்புதல் தர வேண்டிய தமிழக ஆளுனர் நெறிமுறைகளுக்கு மாறாக கிடப்பில் போட்டு வைத்துள்ளார். ஆளுநர் தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி நசுக்கி வருவதைக் கண்டித்து நடக்கும் இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பெருந்திரளாக குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெரியார் முழக்கம் 28022019 இதழ்
முன்னேறிய ஜாதிப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டைப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யும் சட்டத்திருத்தத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்துள்ளது நடுவண் ஆட்சி; ஆனால் அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் களாக பார்ப்பனர் உயர்ஜாதியினர் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. தலித், பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை மிக மோசமான நிலையில் இருப்பதை அண்மை யில் வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் இவை: இந்தியன் ‘இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ் மென்ட்’ (அய்.அய்.எம்.) என்ற உயர்கல்வி நிறுவனத்தில் 784 பேராசிரியர் பதவிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதில் ‘தலித்’ பிரிவைச் சார்ந்தவர்கள் 8 பேர் மட்டுமே. பழங்குடிப் பிரிவைச் சார்ந்தவர் – 2 பேர் மட்டுமே. பிற்படுத்தப்பட் டோர் 784 பதவிகளில் 27 பேர் மட்டுமே. மொத்த பேராசிரியர் பதவிகளில் தலித், பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதித்துவம் 6...
22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். சென்ற இதழ் தொடர்ச்சி பெரியார் கருத்துகளைத் தொகுத்து வெளி யிடப்பட்ட ‘பெரியார் பொன்மொழிகள்’ என்ற நூலுக்கு 1947ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் ஆட்சி தடை செய்தது. பெரியார் மீது ‘வகுப்பு நிந்தனை’ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து பெரியார் கைது செய்யப்பட்டார். ‘பொன்மொழிகள்’ என்ற கருத்துகளின் தொகுப்பை ஒரு பதிப்பகம் நூலாக வெளியிட்டதற்கே பெரியார், அரசின் அடக்குமுறைகளை சந்திக்க வேண்டி யிருந்தது. இந்த பொன்மொழிகள் நூலை வெளியிட்டது – திருச்சியில் திராவிட மணி பதிப்பகத்தை நடத்தி வந்த தோழர் டி.எம். முத்து. இப்படி ஒரு தொகுப்பு நூல் வெளி வரப் போவது குறித்து பெரியாருக்கே தெரியாது. வெவ்வேறு காலகட்டங்களில் அவர் பேசியதை, டி.எம். முத்து, பெரியார் நடத்திய ஏடுகளிலிருந்து...
பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில். முதல் பகுதி கேள்வி : ‘தாலி’ அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலி யோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் தைரியம் உண்டா? பதில் : கேள்வியே தவறானது. ‘தாலி அகற்றும் போராட்டம்’ என ஒன்று எக்காலத்திலும் நடத்தப்படவில்லை. நிற்க. ‘தாலி’ பற்றிய பெரி யாரின் கருத்தென்பது, பெண்ணடிமை ஒழிப்பை மையமாகக் கொண்டது. இந்து திருமணச் சட்டப்படி, ஓமம் வளர்த்து, தீயை வணங்கி, ஏழுமுறை சுற்றி வந்து, தாலி கட்டி, நீரை வார்த்து, அதாவது பெண்ணை ஆணுக்கு ஒரு பொருளாகத் ‘தானம்’ கொடுப்பதாக சட்டத்தில் இருந்து வந்தது. இந்த முறை, பெண்ணை போகப் பொருளாக மட்டுமே காட்டுவதாக உள்ளதால், இதனை எதிர்த்து சுயமரியாதைத்...
இனப்படுகொலையாளன் இராஜபக்சேவை வைத்து பெங்களூரில் கூட்டம் நடத்தினார், இந்து குழுமத் தலைவர் ராம். அவர் அங்கே வெளியிட்ட கருத்துகளுக்கு மறுப்பு: “போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக வும் உள்கட்டமைப்பை கட்டியெழுப்பியதற்காகவும் நீங்கள் பாராட்டப்பட்டீர்கள். தமிழ்ச் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டி யுள்ளது.” 2019, பிப்ரவரி 9 அன்று பெங்களூருவில் மேற் கண்ட வரிகள் ஒரு கேள்வியாக இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராமால் இலங்கையின் முன்னாள் அதிபர் இராசபக்சேவிடம் கேட்கப் பட்டதாகும். வாகனத்தை ஓட்டினால் தூசி படியத் தான் செய்யும். அதற்காக வாகனத்தை ஓட்டாமல் இருக்க முடியாது. வாகனத்தை ஓட்டிவிட்டு தூசியைத் துடைக்க வேண்டும் என்று சொல்வது போல் இராசபக்சே நடத்திய போரும், அவர் அதை முடிவுக்கு கொண்டு வந்ததையும் அதைக் கொண்டு வந்த விதத்தையும் அங்கீகரித்த வண்ணம் அதனால் படிந்துகிடக்கும் ’தூசி’ பத்தாண்டுகள் ஆன பின்பும் இன்னும் துடைக்கப்படாமல் இருக்கிறது என்றும் என்.ராம் சொல்கிறார். எந்த சட்டமன்றத்தில் அனைத்துக்...
மேட்டூரில் கழக மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராஜன்-மு.கீதா இணையரின் மகள் தேன்மொழி-மணிகண்டன், ஜாதி மறுப்பு மண விழா, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மேட்டூரில் நடந்தது. மணவிழா மகிழ்வாக தோழர் சி.கோவிந்தராஜன், ரூ.10,000 கழக வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளார். கடந்த வார இதழில் வெளி வந்த மணவிழா செய்தியில் பிப்.3 என்பதற்கு பதிலாக ஜனவரி 3 என்று தவறாக வெளி வந்துவிட்டது. மணமகளின் தந்தை சி. கோவிந்தராஜன் பெயரில் கி. கோவிந்தராஜன் என்றும் தவறாக வெளி வந்துள்ளது. தவறுக்கு வருந்துகிறோம். (ஆர்) பெரியார் முழக்கம் 28022019 இதழ்
17.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “திராவிடம் அறிவோம்” என்ற பெயரில் புதிய தோழர்களுக்கான கேள்வி- பதில் நிகழ்வு நடைபெற்றது. இயக்கத்தில் இணைய விரும்பும் தோழர்கள், தோழமை இயக்க தோழர்கள் பெரியார், அம்பேத்கர், திராவிடம், சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்த அய்ய வினாக்களுக்கு விடைதேடும் நிகழ்வாக நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் தோழர்களின் அய்ய வினாக்களுக்கு விடையளித்தார். புதிய தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மிகச்சிறப்பான, ஆக்கப்பூர்வமான நிகழ்வாக இது அமைந்தது. பெரியார் முழக்கம் 28022019 இதழ்
16.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆழ்வை ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் உயர்சாதி ஏழைகளுக்கு 10ரூ இட ஒதுக்கீடு என்ற பெயரில் சமூகநீதியை சீர்குலைக்கும் உயர்ஜாதி இடஒதுக்கீட்டைக் கண்டித்து ஆழ்வார் திருநகரியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய திவிக தலைவர் நாத்திகம் முருகேசனார் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட திவிக தலைவர் கோ.அ.குமார் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ச.இரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், பால்ராசு, பிரபாகரன், ஆதித் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரா.வே.மனோகர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 28022019 இதழ்
20.02.2019 புதன்கிழமை அன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில், திராவிடர் விடுதலைக் கழக சார்பில் உயர் ஜாதியினருக்கு 10ரூ இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கள்ளக்குறிச்சி நகர அமைப்பாளர் மு.சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிதாசன், கார்மேகம், ஆசைத்தம்பி, நாகராஜ் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ச.கு. பெரியார் வெங்கட், மாவட்ட செயலாளர க, இராமர், மாவட்ட அமைபாளர் சி,சாமிதுரை, மாவட்ட தலைவர் க. மதியழகன் சங்கை ஒன்றிய அமைப்பாளர் செ.வே. ராஜேஷ், பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன் நிறைவுரையாற்றினார். காரனுர் மணி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 28022019 இதழ்
பிராமணப் புரோகிதர் தலைமையில் நடக்கும் சமஸ்கிருத வைதிக திருமண முறையை ஸ்டாலின் விமர்சித்து விட்டார் என பொங்குபவர்கள், தங்கள் வீட்டு திருமணங்களில் இந்த மந்திரங் களின் உண்மை பொருளை அறிந்து கொள்ள, சமஸ்கிருதத்துக்கு பதிலாக தமிழிலேயே சொல்ல வலியுறுத்துவார்களா? இதோ அவாளே வேதம் ஓதி, அவாளே விளக்கமும் தருகிறாளே! தமிழில் இந்த விளக்கங்களை அளித்தவர் அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் என்ற வேத சமஸ்கிருத அறிஞர்.. “சோமஹ ப்ரதமோவி வித கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஷ்டே பதிஷ் துரியஷ்தே மனுஷ்ய ஜாஹ” இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதாவது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். ஸப்தர்ருஷ்ய: ப்ரதமாம் க்ருதிகாநா...
தலையங்கம் – அண்ணா தந்த அறிவாயுதங்கள் வைதீகத்தைத் துளைத்தெடுத்த அண்ணாவின் எழுத்துகள் கீழ்வெண்மணி மறைக்கப்பட்ட வரலாறு 10 சதவீத ஒதுக்கீடு : ஒரு ஆய்வு பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல் மோடி பூமியின் காவலரா? பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000/- கோடி மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது…சமீபத்திய ஆய்வு முடிவுகள் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு: நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 பெரியார் முழக்கம் 28022019 இதழ்
முன்னேறிய ஜாதிப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டைப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யும் சட்டத்திருத்தத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்துள்ளது நடுவண் ஆட்சி; ஆனால் அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் களாக பார்ப்பனர் உயர்ஜாதியினர் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. தலித், பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை மிக மோசமான நிலையில் இருப்பதை அண்மை யில் வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் இவை: இந்தியன் ‘இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ் மென்ட்’ (அய்.அய்.எம்.) என்ற உயர்கல்வி நிறுவனத்தில் 784 பேராசிரியர் பதவிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதில் ‘தலித்’ பிரிவைச் சார்ந்தவர்கள் 8 பேர் மட்டுமே. பழங்குடிப் பிரிவைச் சார்ந்தவர் – 2 பேர் மட்டுமே. பிற்படுத்தப்பட் டோர் 784 பதவிகளில் 27 பேர் மட்டுமே. மொத்த பேராசிரியர் பதவிகளில் தலித், பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதித்துவம் 6...
பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில். கேள்வி: ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று ‘பிராமணனையே’ குறி வைக்கின்றீர்களே… தமிழகத்தில் ‘பிராமணரைத்’ தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா? அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா? பதில் : ‘பிராமணர் என்பது ஜாதி அல்ல; இது ‘வருணம்’ ஆகும். பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருண பேதங்களில் தலைமைத்துவம் தாங்கி, சாதிப் பாகுபாடுகளை உருவாக்கி மக்களை இழிவுபடுத்தி வருவதே ‘பிராமண’ வருணமாகும். பிரம்மாவின் முகத்தில் இருந்து தோன்றியதாகக் கூறப்படும் ‘பிராமண வருணத்தாருக்கு’ ஏனையோர் பணி செய்து கிடப்பதே கடமையாகும் என்பதால், கீழுள்ள அனைவரும், அவர்தம் சாதிகளும், பிராமணரின் ஏவலர்களாக, ஒரே வர்ணமாக ‘சூத்திரர்கள்’ எனக் குறிக்கப்பட்டு விட்டனர். ‘சூத்திரர்கள் யார்’ என மனுதர்ம சாஸ்திரத்தில் ஏழு வகையாக எழுதப்பட்டு,...
22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து. (கடந்த இதழில் வெளியான பெரியார் உரையின் தொடர்ச்சி.) ஈரோட்டிலே நான் தேவஸ்தானக் கமிட்டித் தலைவனாக இருந்த போது, நான் ஊரில் இல்லாத ஒரு நாளில் தோழர்கள் பொன்னம்பலமும், குருசாமியும், இப்போது காங்கிரசுக்காரர்களாக இருக்கும் ஈசுவரனும், எங்கள் ஆபிசிலே வேலை செய்கிற இரு ஆதி திராவிடரை விபூதிப் பூசச் சொல்லிப் பூசி, கோயில் உள்ளே அழைத்துச் சென்றவுடன் பக்தர்களெல்லாரும் சத்தம் போட்டுக் கோயிலுக்குள் இவர்கள் உள்ளே சென்ற தும், அவர்களை உள்ளே விட்டு வெளிக் கதவுகளைப் பூட்டி விட்டார்கள். அது குறித்து வழக்கும் போட் டார்கள்! சாமி தீட்டாய் போச்சு என்று வாதாடி தண்டிக்கச் செய்தார்கள்! பிறகு ஹைக்கோர்ட்டிலே அதற்கு எதிராகத் தீர்ப்புக் கிடைத்தது. ஆனால், இந்தியாவிலேயே முதன்முதலில் சுசீந்திரம் கோயிலில்தான் கோயில்...
அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது என்ற பிரச்சனையைப் புதுப்பித்திருப்பதுடன், ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் தங்களுடைய மதவெறி நோக்கத்திற்காகப் புதிதாக, மற்றுமொரு முன்னணியில் செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள். அதுதான், நாட்டில் முஸ்லிம் கலாச்சாரத்துடனும், வரலாற்றுடனும் சம்பந்தப்பட்ட பெயர்களைத் தாங்கி இருக்கக்கூடிய நகரங்கள் மற்றும் இடங்களின் பெயர்களை மாற்றுவதாகும். உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசாங்கம், மிகவும் குதியாட்டம் போட்டுக்கொண்டு பெயர் மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னணிக் கல்வி மற்றும் கலாச்சார மையங்களில் ஒன்றாகத் திகழும் அலகாபாத்தை, பிரயாக்ராஜ் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றி இருக்கிறார்கள். தீபாவளிக்கு முன்னால், ஆதித்யநாத் அயோத்தியிலிருந்து ஓர் அறிவிப்பினைச் செய்தார். அதாவது, அயோத்தி இருந்துவரும் பைசாபாத் மாவட்டம் இனிஅயோத்தி மாவட்டம் என்று அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்குச் சற்று முன்புதான், வட இந்தியாவில் மிகப்பெரிய ரயில்வே சந்திப்பாகத் திகழும் மொகல்சராய் என்னும் ரயில்வே சந்திப்பை, தீன் தயாள் உபாத்யாயா சந்திப்பு என்று பெயர் மாற்றம் செய்தார்கள். தாஜ்மகால் இருந்து...
ஜாதி – மதங்கள், மனித சமூகம், கற்பித்த புனைவுகள், ஒருவர் ‘இந்து’ என்றாலே கட்டாயமாக ‘ஜாதி’ அடையாளத்தையும் சேர்த்தே சுமந்தாக வேண்டும். இந்துவும் ஜாதியும் பிரிக்க முடியாதவை. அதனால்தான் ஜாதிகளின் பட்டியல் தொகுப்பே இந்து மதம் என்று அம்பேத்கர் கூறினார். ஒருவர் தன்னைக் கடவுள், மத மறுப்பாளராக அறிவித்துக் கொண்டாலும் அவர் இந்து அடையாளத்திலிருந்தும் ஜாதி அடையாளத் திலிருந்தும் ‘சட்டப்பூர்வமாக’ விடுவித்துக் கொள்ள முடியாது. இப்போது ஜாதி – மத அடையாளத்தி லிருந்து சட்டப்பூர்வமாக திருப்பத்தூரைச் சார்ந்த 35 வயது பெண் வழக்கறிஞர் சினேகா தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறார். திருப்பத்தூர் தாசில்தார் டி.எஸ். சத்திய மூர்த்தி, சினேகாவுக்கு ‘ஜாதி – மதமற்றவர்’ என்ற அதிகாரப்பூர்வ சான்றிதழை வழங்கி யிருக்கிறார். இந்தியாவிலேயே முதல் முறை யாக ஒரு ‘குடிமகள்’(ன்) ஜாதி மதமற்றவர் என்று அரசால் அறிவிக்கப் பட்டிருக்கிற அதிசய நிகழ்வு நடந்திருக்கிறது. அது பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் தானே நிகழும்? அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது....
இராஜஸ்தான் மாநில அரச மாநிலத்திலுள்ள 16,728 அரசு மருத்துவமனைகளிலும் 54 பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் சோதிடர்களை நியமிக்கப் போகிறதாம், அம்மாநில காங்கிரஸ் ஆட்சி! பிறந்த குழந்தைகளுக்கு இவர்கள் ஜாதகம் எழுதித் தருவார்களாம். பிறந்த குழந்தைகளுக்கு அவர்கள் குல மரபுப் படி பெயர்களைத் தேர்வு செய்து பெற்றோர் களுக்கு அறிவுரை கூறுவார்களாம். ‘ராஜிவ் காந்தி ஜென்ம பத்ரி நாமகரன் யோஜனா’ என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. வேத சடங்குகளையும் சமஸ்கிருதத்தையும் பரப்புவதற்கு வாரியம் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளதோடு அதற்கான திட்ட நகல்களைத் தயாரிக்கும் பொறுப்பை ‘ஜெய்ப்பூர்’ ஜெகத்குரு இராமானுஜ ஆச்சாரியார் சமஸ்கிருத பல்கலைக் கழகத்திடம் அரசு ஒப்படைத்துள்ளாம். இத்திட்டத்தால் மூவாயிரம் சோதிடர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போகிறதாம். பா.ஜ.க.வும் இத்திட்டத்தை வரவேற்றிருக்கிறது. முதல் கட்டமாக ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவ மனைகளில் இது செயல்படுத்தப்பட இருக்கிறதாம். பேயோட்டும் மந்திரவாதிகளையும் அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட்டால், அவர்களே மன நோயைக் குணப்படுத்தி விடுவார்களே!...
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் பட்டியல் இனப் பிரிவு மற்றும் அருந்ததியினரிடமிருந்து அருங்காட்சியகத் துறையில் ‘கியுரேட்டர்’ என்ற வேலைக்கு விண்ணப்பங்கள் கோரி ஜன.24, 2009இல் ஒரு விளம்பரம் வெளியிட்டிருக்கிறது. நிரப்பப்படாமல் இருக்கும் பதவிகளுக்காக நீதிமன்றத்தில் வந்த வழக்கைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி இந்த அறிவிப்பாணை வெளி வந்திருக்கிறது. இதற்கான கல்வித் தகுதியைப் பார்க்கும்போதுதான் வியப்பு மேலிடுகிறது. விலங்கியல், தாவரவியல், மானுடவியல், தொல்லியல், வரலாற்றியியல் அல்லது சமஸ்கிருதம் ஏதாவது ஒன்றில் உயர்பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும் என்று அறிவிப்பாணை கூறுகிறது. தமிழ்நாட்டில் அருங்காட்சியகத்தில் கியுரேட்டர் பணியில் சேர, பட்டியல் இனப்பிரிவினருக்கு சமஸ்கிருதப் படிப்பை தமிழக அரசு ஏன் ஒரு தகுதியாக்குகிறது? தமிழ்மொழிக்கோ, ஆங்கிலத்துக்கோ தரப்படாத தகுதி, சமஸ்கிருதத்துக்கு மட்டும் ஏன் தர வேண்டும்? அதுவும் தமிழ்நாட்டில்? கியுரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் எந்த வகையில் தொடர்புடையது? சமஸ்கிருதம் படித்த சில நபர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு...
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதையடுத்து ‘நீட்’டுக்கு தமிழகம் தயாராகி விட்டதுபோல ஒரு கருத்துருவாக்கம் நடக்கிறது. எப்படி தமிழக மாணவர்கள் அதில் அதிக அளவு தேர்ச்சி பெற முடிந்தது என்பதை ஆராய்ந்தால் மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ தடையாகவே இருக்கிறது என்ற உண்மை விளங்கும். ‘நீட் தேர்வில் தமிழகம் முதலிடம்’ – கடந்த வாரத்துப் பரபர செய்திகளில் இதுவும் ஒன்று. அகில இந்திய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தின் சார்பில் 17,067 பேர் தேர்வெழுதி, அதில் 11,121 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியத் தகவல். ‘நீட்டையே வேண்டாம் என்று எதிர்த் தீர்கள். இப்போது பாருங்கள் தமிழ்நாடு தான் நம்பர் ஒன்’ எனப் பலரும் சமூக வலை தளங்களில் மார்தட்டினர். ஆனால், இந்தத் தேர்வு முடிவு, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தேர்வு முடிவு என்பதுதான் பலரும் கவனிக்கத் தவறிய தகவல். இந்த ஆண்டு...
சென்னை புத்தகக் கண்காட்சி 300 அரங்கில் பொழிலன் முன்னிலை யில் (அருவி புத்தக உலகம்) கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘தமிழ் தேசம்” என்ற நூலை ஜனவரி 11ஆம் தேதி மாலை வெளியிட்டார். இந் நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி டைசன் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பை சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பிறகு அரங்கு 222 (பொதுமை பதிப்பகத்தில்) வேல் முருகன் நூலை வெளியிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெற்று கொண்டு உரையாற்றினார்கள். பெரியார் முழக்கம் 07022019 இதழ்
‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ 31.1.2019 இதழில் “பார்ப்பனர்களுக்கே பாரத ரத்னா குத்தகையா?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் எம்.எஸ். சுப்புலட்சுமி பெயர் குறிப்பிடப்பட்டு, அவர் குறித்த விவரம் கிடைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமி, தேவதாசி சமூகத்தில் பிறந்து, கல்கி சதாசிவம் என்ற பார்ப்பனரைத் திருமணம் செய்து கொண்டு, பார்ப்பனியக் கலாச்சாரத்தையே தனது அடையாளமாக்கிக் கொண்டவர். அதன் காரணமாகத்தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 07022019 இதழ்
கழகத்தின் மாவட்ட செயலாளர் மேட்டூர் கி.கோவிந்தராஜ்-மு.கீதா இணையரின் மகள் கீ.கோ. தேன்மொழி – திருப்பூர் நா. பரமசிவம்-ப. மாலதி ஆகியோரின் மகன் கழகத் தோழர் ப. மணிகண்டன் ஆகியோர் ஜாதி-சடங்கு மறுப்பு மண விழா ஜன. 3, 2019 பகல் 11 மணியளவில் மேட்டூர் அணை அரசப்பா திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணவிழாவை நடத்தி வைத்தார். மாவட்ட கழகத் தலைவர் ப.கு. சூரிய குமார் வரவேற்புரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அ. தமிழரசு, காவல் உதவி ஆய்வாளர் (ஓய்வு) நா. முனியன் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினர் இசை நிகழ்ச்சியும் பறை இசையும் நடைபெற்றது. தமிழ்நாடு முழுதுமிருந்தும் கழகத் தோழர்கள் மணவிழாவுக்கு வந்திருந்தனர். அனைவரும் ‘தமிழின உரிமைக்கு எதிரி யார்?’ நூல் பரிசாக வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 07022019 இதழ்
திருப்பூரில் நடந்த பொங்கல் விழாவில் கழகப் பொருளாளர் துரைசாமி மற்றும் கழக பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 27.01.2019 ஞாயிறு அன்று காலை 8.00 மணி முதல் மாலை வரை சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டி பெரியார் திடல், மாஸ்கோ நகரில் நடைபெற்றது காலையில் முதல் நிகழ்வாக பொங்கல் வழங்கி மாவட்ட தலைவர் முகில்ராசு தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் அகிலன் மற்றும் மாநகர செயலாளர் மாதவன் விளையாட்டுப் போட்டிகளை திறம்பட நடத்தினர் மாலை ‘விரட்டு” கலைக் குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் 3 மணி நேரம் நடை பெற்றது. பகுத்தறிவு கருத்துகளை எளிய முறையில் நாடக வடிவில் மக்களிடம் பரப்பினர். நிகழ்வில் பறையாட்டம், ஒயிலாட்டம், மயில் காளை ஆட்டம், மான்கொம்பு ஆட்டம், பாடல்கள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்தனர் பெரியார் முழக்கம் 07022019 இதழ்
தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவா எனும் சிவக்குமார் – ஜெயந்தி (கழகத் தோழர் முழக்கம் உமாபதியின் சகோதரி) ஜாதி மறுப்பு மணவிழா ஜனவரி 27ஆம் தேதி பெண்ணாடம் வள்ளலார் மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடந்தது. இயக்குனர் கவுதமன் வாழ்த்துரை வழங்கினார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், பரப்புரைச் செயலாளர் பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் உமாபதி, இளையராஜா, சூலூர் பன்னீர் செல்வம் மற்றும் தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும், தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தனிப் பேருந்தில் மணவிழாவுக்கு வந்திருந்தனர். மணமக்கள் வரவேற்பு சென்னை இராஜா அண்ணாமலைபுரம் சமூக நலக் கூடத்தில் பிப்ரவரி 3ஆம் தேதி மாலை சிறப்புடன் நிகழ்ந்தது. கழகத் தோழர்கள் உறவினர்கள் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சி நிதிக்கு மணமக்கள்...
திருப்பூரில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் ஜனவரி 10, 2019 அன்று திருப்பூர் இரயில் நிலையம் பெரியார்-அண்ணா சிலை அருகே மோடிக்கு கருப்புக் கொடி காட்ட வந்த தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். ‘ஜி.எஸ்.டி. வரி விதிப்புக் கொள்கையால் திருப்பூரில் சிறு, குறு தொழில்களுக்கு மூடு விழா நடத்திய மோடியே திரும்பிப் போ’ என்று முழக்கமிட்டனர். த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திருப்பூர், மேட்டூர், ஈரோடு, நாமக்கல்பகுதிகளிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். கூட்டமைப்பு சார்பில் 330 தோழர்கள் கைது செய்யப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம் 07022019 இதழ்
இலயோலா கல்லூரி வீதி திருவிழவில் இந்துத்துவப் பாசிசத்தைப் படம் பிடிக்கும் முகிலனின் ஓவியக் கண்காட்சி இடம் பெற்றிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த சில படங்கள் இந்துக்களைப் புண்படுத்துவதாக பா.ஜ.க. தலைவர் தமிழிசை உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஓவியர் முகிலனை மிரட்டினர். இதைத் தொடர்ந்து ஓவியர் முகிலனுக்கு திராவிடர் விடுதலைக் கழக சார்பில் 01.02.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஓவியர் முகிலனுக்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன் தலைமையில் கழகத் தலைமை அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. ஓவியர் முகிலனுக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சால்வை அணிவித்து பெரியார் சிலை மற்றும் புத்தகம் வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் மனிதி அமைப்பைச் சார்ந்த செல்வி ஆகியோர் முகிலன் அவர்களின் ஓவியங்கள் குறித்தும் இந்துப் பார்ப்பனியப் புரட்டு வாதங்களையும் அம்பலப்படுத்தி உரையாற்றினர். நிகழ்வை பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்தார். பெரியார்...
நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறையில் 09.01.2019 அன்று காலை 11.00 மணியளவில் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் ஈரோடு ரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் குழு உறுப்பினர் நா. இளையராஜா வரவேற்றார். கழக வார பத்திரிகை புரட்சிப் பெரியார் முழக்கம் மற்றும் மாத இதழ் நிமிர்வோம் சந்தா தலைவரிடம் கொடுக்கப்பட்டது. கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகளை கழகத் தலைவர் அறிவித்தார். மாவட்டத் தலைவர் ம.மகாலிங்கம்; மாவட்ட செயலாளர் தெ.மகேசு; மாவட்ட பொருளாளர் ந.விஜயராகவன்; மாவட்ட அமைப்பாளர் கு.செந்தில் குமார்; மாவட்ட துணைத் தலைவர் தெ. ரமேஷ்; மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் நன்மாறன் மயிலாடுதுறை நகரம்: நகரத் தலைவர் நாஞ்சில் சங்கர்; நகர செயலாளர் நி.நடராசன்; நகர அமைப்பாளர் தில்லை நாதன்; நகர துணை தலைவர் ராஜராஜன்; நகர துணை செயலாளர் ஜாகிர் உசேன்....
தமிழகத்தில் பெரிய மாவட்டமாக இருந்து வந்தது விழுப்புரம் மாவட்டம். பொதுமக்கள் தங்களது பல்வேறு துறை சார்ந்த வேலைகளுக்காகவும் மாவட்ட ஆட்சியர் சந்திப்பதற்கும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதியதாக கல்லக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கும்படி தமிழக அரசுக்கு பொதுமக்களும் கட்சிகளும் இயக்கங்களும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தன. இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கல்லக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவித்த தமிழக அரசை வாழ்த்தி நன்றி தெரிவிக்கும் விதமாக கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கல்லக்குறிச்சி மாவட்டத்தில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டன. பெரியார் முழக்கம் 07022019 இதழ்
சாலை மற்றும் வீதிகளிலும் அரசுஅலுவலகங்களிலும் சாதிப் பெயர்களை அகற்றக் கோரி தெற்கு எழுத்தாளர் இயக்கம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 28.01.2019 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தியது. திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மேற்கு மாவட்டம். சார்பாக தோழர்கள் தமிழ்மதி, நீதிஅரசர் ஆகியோர் கலந்து கொண்டு பெரியாரியல் கருத்துகளை எடுத்துரைத்தனர். பெரியார் முழக்கம் 07022019 இதழ்
திருப்பூர் புத்தக திருவிழா நிமிர்வோம் 35 அரங்கில் கருஞ்சட்டை கலைஞர் புத்தக வெளியீடு புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் வெளி யிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் தோழர் ஈஸ்வரன் முதல் படியை பெற்றுக்கொண்டார் உடன் கவிநிலா பதிப்பகம் தோழர் பாரதி வாசன், கவிஞர் து சோ பிரபாகர், தாய் தமிழ் பள்ளி தாளாளர் எழில், சூலூர் பன்னீர்செல்வம், தமிழ் பண்பாட்டு மய்யம் தோழர் யோகி செந்தில், சேரன் வரைகலை தோழர் ஆனந் ஆகியோர் நிகழ்வை சிறப்பித்தனர் தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாவட்ட தலைவர் முகில்ராசு வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பாளர் சங்கீதா மற்றும் மாவட்ட அமைப்பாளர் தோழர் மாதவன் மற்றும் தோழர் தனபால் உடனிருந்தனர் செய்தி : விஜய்குமார் பெரியார் முழக்கம் 07022019 இதழ்
9-02-2019 காலை 10 மணி அளவில் ‘இந்திய இலங்கை வெளியுறவு கொள்கையின் எதிர்காலம்’ என்ற தலைப்பிலான இந்துக் குழும நிகழ்வில் கலந்து கொள்ள பெங்களூருக்கு வந்த இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சேவை கண்டித்து ஆர்ப்பாட்டம் பெங்களுர் ப்ரீடம் பார்க் அருகில் நடந்தது. கருநாடக தமிழர் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் பேரில் பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் உள்பட சுமார் 300 பேர் இந்திய சிங்கள இனக்கொலை கூட்டணியை அம்பலப்படுத்தியும் இனக்கொலையாளி இராஜபக்சேவே திரும்பிப் போ என்றும் இனக்கொலைக்கு துணை போகிற இந்துக் குழுமம் ராமை கண்டித்தும் எழுச்சியுடன் முழக்கமிட்டனர். திராவிடர் விடுதலைக் கழகம், கருநாடக தமிழர் கட்சி, நாம் தமிழர் கட்சி, கருநாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம், பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு, கருநாடக தமிழர் பேரவை, கன்னட தமிழர் பெடரேசன், கருநாடக தமிழ் மக்கள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தங்க வயல் நாம் தமிழர் கலை இலக்கிய பாசறை, இளந்தமிழகம், மே 17...
வர்க்க பார்வையில் பார்த்தாலும் சரி , வருண பேத பார்வையில் பார்த்தாலும் சரி “நீட் தேர்வு “ ஒரு தீண்டாமைத் தேர்வு . தரவுகளின் அடிப்படையாயினும் நியாயத்தின் அடிப்படையாயினும் ஒடுக்கப்பட்ட மக்கள், நடுத்தர வர்க்க மாணவர்களின் கனவுகளை நீட் தேர்வு கலைத்து விட்டது . ஆண்டுக்கு இலட்சங்களில் புழங்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்று சொன்னப்போது மருத்துவத் துறைக்கு தகுதி வேணாமா பொடலங்கா வேணாமா என்று கேட்ட வஞ்சகர்களுக்கு இதோ சில தகவல்கள்: ஏழை மக்களை மட்டும் நீட் தேர்வு பாதிக்க வில்லை நடுத்தர வர்க்கத்தின் பிள்ளைகளையும் பாதித்துள்ளது. இரண்டு ஆண்டு நீட் தேர்வுக்கு தயாரான வர்களும், ஊக்ஷளுநு பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மருத்துவ கல்லூரியில் 2018-19 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தவர்களில் 2017-18இல் பள்ளி படிப்பை முடித்தவர்கள் – 1277. தனியார் மருத்துவ கல்லூரியில் 2018-19...
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திருச்செங்கோட்டில் நிகழ்த்திய கலைஞர் குறித்த விரிவான உரை நூல் வடிவம் பெற்றுள்ளது. விலை : ரூ.30 தொடர்புக்கு : 9841489896 / 044-24980745 பெரியார் முழக்கம் 07022019 இதழ்
7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழ்நாடு திராவிடர் கழகம் நடத்திய மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஆளுநர் அலட்சியத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அடுத்தக் கட்ட நகர்வுகள் குறித்து சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன. 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி கா.சு. நாகராசன் தலைமையில் தமிழ்நாடு திராவிடர்கழகம் நீதி கேட்கும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை பொள்ளாச்சியில் பிப்.3 ஆம் தேதி தொடங்கியது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். 8ஆம் தேதி இந்த இயக்கம் புதுவையில் நிறைவடைந்தது. 15 தமிழ்நாடு திராவிடர் கழகத் தோழர்கள் இதில் பங்கேற்றனர். ஈரோடு, மேட்டூர், சேலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சி, சென்னையில் பூந்தமல்லி, சைதாப் பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் வழியாக ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி மக்களை சந்தித்தது இந்தக் குழு. 7ஆம் தேதி மாலை சென்னை இராயப்பேட்டை வி.எம். தெருவில்...
பெரியார் அம்பேத்கர் நினைவு நாட்களை முன்னிட்டு “தமிழக அரசே ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்று” என்கிற தலைப்பில் விழுப்புரம் மாவட்டம் பாக்கம் (சங்கராபுரம்) கிராமத் தில் 19.12.2018 (தி.பி. 2049 புதன்) அன்று மாலை 5 மணி அளவில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. “அன்னை மணியம்மை” இசைக் குழுவினரின் பறை இசை மற்றும் பகுத்தறிவு சாதி ஒழிப்பு பாடல்களுடன் கூட்டம் தொடங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் நாகராசன், மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை பகுத்தறிவுப் பாடல்களை பாடினர். கூட்டத்திற்கு இரா.துளசிராசா தலைமை வகித்தார். பெரியார் பிரபு வரவேற்புரை ஆற்றினார். தனிமொழி, சோபனா, முத்துலட்சுமி, செந்தாமரை, சத்யா மற்றும் இராமச்சந்திரன், நீதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரத்தினசாமி, துரைசாமி, அய்யனார், இராமர்,பெரியார் பாரதிதாசன் ஆகியோர் ஆணவக் கொலைகளின் பாதிப்புகள் குறித்து உரையாற்றினார்கள். கூட்டத்தில் சாதி மறுப்பு திருமணமும் நடைபெற்றது. பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் நூரோலையைச் சேர்ந்த ரஷ்யா ஆகிய...
கழகத்தின் “நிமிர்வோம்” இதழ் அரங்கு கடந்த ஆண்டைப் போலவே திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக அரங்கு (எண்.35) தனியே எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 10 வரை கண்காட்சி நடைபெறுகிறது. அரங்கில் கழக வெளியீடுகள், பெரியாரிய, அம்பேத்கரிய மார்க்சிய நூல்களும் கிடைக்கும். தொடர்புக்கு : முகில் ராசு 9842248174, விஜய்குமார் 9841653200, கவிஞர் தம்பி 9789381010 பெரியார் முழக்கம் 07022019 இதழ்
மத்திய அரசின் உயர்சாதியினருக்கான 10ரூ இடஒதுக்கீடு திட்டத்தை கண்டித்துக் கல்லக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மொழிப் போர் தியாகிகளின் தினமான 25-01-2019 (வெள்ளி) அன்று அவர்களின் நினைவாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலியோடு ஆர்பாட்டம் தொடங்கியது. மாவட்ட துணைச் செயலாளர். மு.நாகராசு தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் செ.வே.இராசேசு, க.மதியழகன், க.இராமர்,பூ.ஆ.இளையரசன் ஆகியோர் இட ஒதுக்கீடு வரலாறு குறித்தும் உயர்சாதியினருக்கான 10ரூ இட ஒதுக்கீட்டின் பாதிப்புகள் குறித்தும் உரையாற்றினார்கள்.தலைமை செயற்குழு உறுப்பினர் ந. அய்யனார் பல்வேறு கருத்துகளை தொகுத்து இறுதி உரையாற்றினார்.செ.க.வேலாயுதம் நன்றி உரையாற்றினார். பெரியார் முழக்கம் 07022019 இதழ்
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் முகப்பை ஒரு குறிப்பிட்ட மத அடையாளமான கோபுர வடிவில் அமைப்பது இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதசார்பற்ற தன்மைக்கு எதிரானது என்பதால் அந்த வடிவமைப்பை கைவிட வேண்டும் என்றும் மேம்படுத்தப்படும் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட வேண்டும் என்றும் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்துத்துவ அமைப்புகள் சார்பில் பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என மாற்றவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்த திராவிடர் விடுதலைக் கழத்தின் மதுரை மாவட்ட செயலாளர் மா.பா.மணியமுதன் பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றினாலோ, மத அடையாள வடிவமைப்பை வைத்தாலோ தோழமை அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் அறிவிக்கப்படும் என அறிவித்தார். தற்போது “தந்தை பெரியார் பேருந்து நிலையம் எனும் பெயர் மாற்றப்படாது” என மதுரை மாநகராட்சி...
இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரைக்கு வந்த மோடியை தமிழகமே எதிர்த்து நின்றது. உள்ளுக்குள் பொறுமியவாறு சடங்குத்தனமாக உரையாற்றி விட்டு பறந்தார் மோடி. நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்து காட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள். “தேர்வு கால பதற்றத்தை கையாள்வது எப்படி’’ என்பது மோடியின் நிகழ்ச்சிகளுள் ஒன்று. இந்தியில் இதற்குப் பெயர் “பரிக்ஷா பே சர்ச்சா 2.0’’ பதட்டம் குறையுதோ இல்லையோ நிகழ்ச்சியின் பெயரைக் கேட்டாலே மாணவர்களுக்கு எரிச்சல் வருவது நிச்சயம். இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் நேரலையில் கண்டு பயன்பெறுவதற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்யச் சொல்லி “மேலிட உத்தரவாம்’’. கல்லூரியின் பெரியார் கலையரங்கத்தில் ‘படம் காட்ட’ ஏற்பாடுகளை செய்திருந்தது கல்லூரி நிர்வாகம். இந்நிகழ்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு வருகைப் பதிவு கிடையாது என மிரட்டி வரவழைத்திருக் கின்றனர். இவற்றையெல்லாம் காணச் சகிக்காத முற்போக்கு மாணவர்கள் சிலர், “கல்லூரி கலையரங்கமா, மோடியின் விளம்பர இடமா’’...
பார்ப்பன அதிகார மய்யங்களை தகர்க்காமல் சமூகநீதி பெற முடியாது: விடுதலை இராசேந்திரன் பேச்சு பிற்படுத்தப்பட்டோருக்கான இந்திய அரசின் அரசாணைகளை நடைமுறைப்படுத்தாத எல்.அய்.சி. நிர்வாகத்தையும் அதன் தென் மண்டல மேலாளரையும் கண்டித்து தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் 5.1.2019 காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்தது. தென்மண்டல எல்.அய்.சி. கூட்டமைப்புத் தலைவர் ஆ.லோகநாதன் தலைமை தாங்கினார். சங்க பொறுப்பாளர்கள் இ. அன்புச் செல்வம், கு. கமலக்கண்ணன், பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கங்களின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் கு. தனசேகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பீட்டர் அல்போன்ஸ், மு. வீரபாண்டியன் (சி.பி.அய்.), எஸ்.கே. கார்வேந்தன் (முன்னாள் எம்.பி.), திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் உரையாற்றினர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “அய்ந்து முக்கியக் கோரிக்கைகளை நீங்கள் முன் வைத்திருக்கிறீர்கள். அவை அனைத்தும் புதிய கோரிக்கைகள் அல்ல. அரசாணைகளாக வெளி வந்த...
அய்.சி.அய்.சி.அய். வங்கி தலைமை பெண் அதிகாரி, சந்தா கோச்சார் ‘சிந்தி’ குடும்பத்தில் பிறந்தவர். பார்ப்பனருக்கு இணையான முன்னேறிய ஜாதி. அவர் நாள் ஒன்றுக்கு வாங்கிய சம்பளம் ரூ. 2.18 இலட்சம். பார்ப்பன உயர்ஜாதிக் கும்பலிடம் சிக்கியுள்ள அதிகாரத்தை எவ்வளவு முறைகேடாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இவரது ஊழல் ஒரு உதாரணம். இவரைக் காப்பாற்ற அய்.சி.அய்.சி.அய். வங்கி பார்ப்பன நிர்வாகமே துணை போனதும் இப்போது அம்பலமாகியிருக்கிறது. இதன் பின்னணி என்ன? அய்.சி.அய்.சி.அய். வங்கி, நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கி. இந்த வங்கிக்கு இன்னொரு முகம் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார். ஆனால், இன்று இரண்டுமே தங்களது நம்பகத்தன்மையை முற்றிலுமாக இழக்கும் நிலை உருவாகியுள்ளது. 2012ஆம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் தீபக் கோச்சார் ஆதாயமடைந்தார் என்று வீடியோகான் மற்றும் ஐசிஐசிஐ பங்குகளை வைத்திருக்கும் முதலீட் டாளரான அர்விந்த் குப்தா குற்றம் சாட்டினார். ஆனால் அப்போது யாரும் கண்டு...
கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதில் பல்வேறு சாதிகள், சமூக-பொருளாதார அந்தஸ்துள்ள சமூகங்களுக்கு இடையில் மிகப் பெரிய வேறுபாடுகள் நிலவும்போது, இடஒதுக்கீடு என்பது அர்த்தமுள்ள நடவடிக்கைதான். அதேசமயம், நாடு குடியரசான புதிதில் அறிமுகப்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டை, இன்றைய நவீன யுகத்தில் மறுபரிசீலனை செய்வது அவசியம். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆராய்வோம். எல்லோருக்கும் இடஒதுக்கீடு? பொருளாதாரரீதியாகப் பிற்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு 10ரூ ஒதுக்கீட்டை அரசியல் சட்ட (124ஆவது திருத்த) மசோதா-2019 உறுதியளிக்கிறது. நாடாளுமன்ற விவாதத்தில் பல்வேறு அடிப்படைக் கூறுகள் விவாதிக்கப்பட்டாலும் இந்த மசோதா இது பற்றி மவுனம் சாதிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்பாக ‘உயர் வருவாய்ப் பிரிவினர்’ (கிரீமி லேயர்) என்று அடையாளம் காண அடிப்படையாகக் கருதப்படும் ‘ஆண்டுக்கு 8 இலட்ச ரூபாய்’ என்ற அடிப்படையே இதற்கும் கொள்ளப்பட்டிருக்கிறது. இது எந்த அளவுக்குப் பயன் தரும் என்று தெரியவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ‘உயர் வருவாய்ப் பிரிவினர்’ என்று நிர்ணயிக்கப்பட்டதற்குக் காரணம், வசதியானவர்களை...
22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து. பகுதி 6 வைக்கம் போராட்டத்துக்காக நான் வருகிறேன் என்ற விஷயம் தெரிந்து கொண்டு, போலீஸ் கமிஷனர் பிட், இன்னொரு அய்யர் (அவர் பெயர் இப்போது சரியாய் ஞாபகத்திற்கு வரவில்லை. திவான் பேஷ்தாரர் சுப்பிரமணிய அய்யர் என்று நினைக்கிறேன்), ஒரு தாசில்தார் (விசுவநாத அய்யர்) எல்லோரும் என்னைப் படகிலிருந்து நான் இறங்கும் போதே வரவேற்றார்கள். மகாராஜா அவர்கள், எங்களை அவர்கள் சார்பில் வரவேற்று வேண்டிய எல்லா சவுகரியங்களையும் பண்ணித் தரச் சொன்னார் என்று சொல்லி எங்களை வர வேற்றார்கள். இது எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்தது என்றாலும், ஏன் மகாராஜா அப்படிச் செய்தார் என்றால் அதற்கு 3 மாதத்திற்கு முன்பு இருந்த இராஜா டெல்லிக்குப் போகிறதற்கு ஈரோடு வழியாக வந்து, ஒரு நாள்...
22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து. பகுதி 5 பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் குறித்து இங்கே நான் பேசும் கருத்துகள் இளைய தலைமுறையினருக்கு வரலாறுகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான். பொதுவாக பெரியார் இயக்கத்தினருக்கு இது ஏற்ககனவே தெரிந்த வரலாறுகள்தான் என்றாலும் இளைய தலைமுறைக்கு நாம் அதைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. இப்போது வைக்கம் போராட்டம் வரலாறு குறித்து பெரியார் ஆற்றிய உரையை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். இது பெரியார் சந்தித்த அடக்குமுறைகளில் ஒன்றாகக் குறிப்பிடலாமே தவிர, பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறையாகக் குறிப்பிட முடியாது. காரணம் இந்தப் போராட்டம் நடந்தபோது பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர். போராட்ட வரலாறு குறித்து 1959ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி குமரி...
மோடி ஆட்சி பல இலட்சம் காலியாக உள்ள பதவிகளை நிரப்பவே இல்லை. அரசு தந்த புள்ளி விவரங்களே இதை ஒப்புக் கொள்கின்றன. பொதுப் போட்டியில் முன்னேறிய ஜாதி யினருக்கு மட்டும் பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீட்டை நடுவண் ஆட்சி அறிவித் திருக்கிறது. பார்ப்பனர்கள் உயர்ஜாதியினரைத் திருப்திப்படுத்தி அவர்களின் வாக்குகளைப் பெறும் நோக்கத்தோடு அவசர அவசரமாக இந்த சட்டத் திருத்தம் வந்துள்ளது. ஆனால் மத்திய பல்கலைக் கழகங்கள், தொடர்வண்டித் துறை, காவல்துறை, அஞ்சலகத் துறை, பள்ளிக் கல்வி மற்றும் நீதித் துறைகளில் நீண்டகாலமாக ஏராளமானப் பணியிடங்கள் நிரப்பப்படாமலே இருக்கின்றன. இது குறித்து புள்ளி விவரங்களை ‘பிசினஸ் லைன்’ ஜன.10ஆம் தேதி ஆங்கில நாளேடு முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிட்டத் துறைகளில் 28 இலட்சம் பணி இடங்கள் காலியிடமாகவே நிரப்பப்படாமல் இருக்கின்றன என்ற அதிர்ச்சி தகவலை அந்த ஏடு தந்துள்ளது. மருத்துவ சேவை குறைந்த செலவில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு...
‘நாட்டை ஆள்வது அரசமைப்புச் சட்டமா? சனாதன தர்மமா?’ எனும் தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவர் பிரிவு (முற்போக்கு மாணவர் கழகம்), ஜனவரி 23ஆம் தேதி சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவை அரங்கில் கருத்துப் பகிர்வு, நிகழ்ச்சியை மாலை 5 மணியளவில் நடத்தியது. பேராசிரியர் அருணன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் நாட்டை ஆள்வது சனாதன தர்மமே என்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தி.க. பரப்புரைச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி பேசினர். ‘அரசமைப்புச் சட்டமே’ எனும் தலைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், ‘ஆழ்வார்க்கடியார்’ மை. பா. நாராயணன் ஆகியோர் பேசினர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நிறைவுரையாற்றினார். பெரியார் முழக்கம் 31012019 இதழ்