மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

காஞ்சிபுரம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்  18-10-2018 அன்று மாலை 5 மணிக்கு தினேஷ்குமார் தலைமையில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி முன்னிலையில் நடைபெற்றது .

புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்களுக்கு சந்தா சேர்த்தல், தெருமுனைக் கூட்டம், கருத்தரங்கம்  நடத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், செங்குட்டுவன், தெள்ளமிழ்து, ரவிபாரதி, கரிகாலன், ஆண்டனி, ராஜேஷ், அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சங்கராபுரம் :  18.10.2018 வியாழன் மாலை 4மணி அளவில் திராவிடர் விடுதலை கழக மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் சங்கராபுரம் வட்டம் கடுவனூரில் சி. சாமி துரை இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் நா.அய்யனார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல்களும், பி.ஜே.பி.யினால் மக்கள் படும் அவலம் , பெரியாரியல் பற்றிய தமிழ் தேசியவாதிகளின் குழப்பம் பற்றியும், அமைப்பின் கட்டுப்பாடு, புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு சந்தா சேர்த்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட் டது. மாவட்டத் தலைவர் மதி யழகன், மாவட்ட அமைப்பாளர் சி.சாமிதுரை, அறிவியல் மன்ற அமைப்பாளர் நாகராஜ், தமிழ்நாடு மாணவர் ஒருங்கிணைப்பாளர் வீ.வினோத், சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் செ.வே. ராஜேஷ் , மா. குமார், ரா. துளசி , பிரபு, நீதிபதி, ராஜீவ்காந்தி, ராமச்சந்திரன் தோழர்கள் உள்பட 36 தோழர்கள் கலந்துக் கொண் டனர் .

பெரியார் முழக்கம் 08112018 இதழ்

You may also like...