வினா விடை
தமிழ்நாட்டில் சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் பெய்த மழையை தேசியப் பேரிடர் என்று அறிவிக்க முடியாது – நிர்மலா சீதாராமன் பதில் : ஆமாம், பா.ஜ.க இருக்கும்போது வேறு எதையும் தேசியப் பேரிடர் என்று சொல்வது சரியாக இருக்காது தான். வட இந்தியாவில் தமிழைப் பரப்ப நாம் இந்தி கற்க வேண்டும் – தமிழிசை பதில் : இந்தி கற்றுக்கொண்ட பிறகு தமிழ் இங்கு எப்படி இருக்கும்? தலை வலிக்கு மருந்து கேட்டால், நன்றாக இருக்கும் காலுக்கு மருந்து கொடுக்கலாமா மருத்துவரே! பிரிட்டிஷ் கால சட்டங்கள் இல்லாத புதிய இந்தியாவை படைத்துவிட்டோம் – அமித் ஷா பதில் : ஆளுநர் பதவி என்ன ராம ராஜ்ஜியத்தில் உருவாக்கப்பட்டதா? அதையும் அழித்து இன்னொரு புதிய இந்தியா பிறந்தால் என்ன கெட்டுவிடும்? ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என்று சொல்லவில்லை. ஆனால் அப்படி கணக்கெப்பு நடத்துவதால் சமூக பதற்றம் ஏற்படாதவாறு, ஒற்றுமையை உறுதிசெய்ய வேண்டும் – ஆர்.எஸ்.எஸ்....
