Author: admin

சரஸ்வதி பூஜை-ஆயுத பூசை ஆபாசங்கள்!

சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசை. கல்வியை யும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக்கொண்டே, அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளியாகிக்கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத “மக்குகள்” என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு, அந்தப் பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவம் எடுத்து ஓடவும்,...

கோட்சேக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லையா?

காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்.  என்று ராகுல் காந்தி பேசியதற்காக கொதித்தெழுந்து நீதிமன்றம் போனார்கள். ஆனால் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் உள்ள தொடர்பை இவர்களால் மறுக்க முடியுமா? பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் பார்வையிலிருந்து மாறாமல் இருந்துகொண்டே காந்தியின் புகழ்பாடுவது ஒரு கலைதான். இந்தக் கலையைத்தான் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவாரம். மகாத்மா காந்தியின் படுகொலை உலகத்தில் ஏற்படுத்திய அதிர்ச்சியும் கோபமும் சோகமும் சூழ்ந்த சூழலில் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் தந்திர நடவடிக்கைதான் இது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தனக்கும் இருந்த தொடர்பைக் கோட்ஸே துண்டித்துக் கொண்டார் என்றுதான் பா.ஜ.க. தலைவர்களும் அதன் பழைய அவதாரமான ஜனசங்கத் தலைவர்களும் கூறிவந்தனர், கூறிவருகின்றனர். பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்ட அத்வானியும் இதைத்தான் கூறினார். அவருக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துக் கண்டித்தவர் நாதுராம்  கோட்ஸேயின் தம்பி கோபால் கோட்ஸேதான். இவரும் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டவர். தான் எழுதிய ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் டிசம்பர் 1993...

தலையங்கம் – ‘சரசுவதி’ பூஜை வேண்டாம்; காமராசர் விழா நடத்துங்கள்!

இந்து பார்ப்பன பண்டிகைகளின் உள்ளடக்கங்கள் மாற்றத்துக்குள்ளாகி வருகின்றன. உள்ளடக்கங்கள் மாறினாலும் ‘இந்து’ மத நீரோட்டத்துக்குள்ளேயே மக்களை நிறுத்தி வைக்கத் துடிக்கும் பார்ப்பனியம் இந்தப் பண்டிகைகள் சமூகத்தில் தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டும் என்றே விரும்புகிறது.                                                                                      அனைத்து மதத்தினருக்கும் பொதுவான, மதங்களுக்கு அப்பாற்பட்ட அரசு அலுவலகங்களில் காவல் நிலையங்களில் ‘ஆயுத பூஜை’ கொண்டாட்டங்கள் நடக்கின்றன. இப்படி அரசு அலுவலகங்களை ‘பஜனை மடங்’களாக மாற்றக் கூடாது என்று அரசு ஆணைகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் இருப்பதை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சுட்டிக்காட்டி அவற்றை நகல் எடுத்து அனுப்பி வைத்து தொடர்ந்து போராட்டங்களை இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். மதம் சார்ந்த நம்பிக்கைகளோடு மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஓர் உளவியல் அடங்கியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகளைப் பற்றி கவலைப்படாமல் எந்த எல்லை வரையும் சென்று வீண் விரயங்களில் பணத்தை செலவிடும் ‘உளவியலை’ மதம் சார்ந்த பண்டிகைகள் உருவாக்கி விடுகின்றன. தொழில்துறை அமைப்பான ‘அகோசம்’ வரவிருக்கும் ஆயுத பூஜை, சரசுவதி பூஜை,...

நாங்கள் ‘மனிதி’; மவுனம் உடைப்போம்!

பெண்கள் அமைப்புகள், அமைப்புகளைக் கடந்து ‘மனிதி’ என்ற அடையாளத்தோடு ஒன்றுதிரண்டு ‘நடைப் பயணம்’ நடத்தினர். கடந்த அக்டோபர் முதல் தேதி சென்னை காந்தி சிலையில் திரண்ட 500 பெண்கள், முழக்கங்களோடு மெரினா வரை நடந்து சென்றனர். முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி இந்தப் பயணத்தைத் தொடங்கி வைத்து, பெண் விடுதலைக்கு சரியான கருத்துகளை பெரியார் விட்டுச் சென்றதை நினைவுகூர்ந்து உரையாற்றினார். தமிழகம் முழுதுமிருந்தும் பல்வேறு அமைப்புகள், இயக்கங்களைச் சார்ந்த பெண்களும் பெண்ணுரிமையை வலியுறுத்தும் ஆண் தோழர்களும் இதில் பங்கேற்று முழக்கமிட்டு வந்தனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்களும் கழக சார்பில் பங்கேற்றனர். உடுமலை கவுசல்யா, பேராசிரியர் சரசுவதி, ஓவியா, வழக்கறிஞர் அருள் மொழி, கவிஞர் சல்மா, செல்வி, பரிமளா, மக்கள் மன்றம் மகேசு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பேரணியில் கீழ்க்கண்ட உறுதிமொழிகளை பெண்கள் எடுத்தனர். மனிதியாகிய நான் மானமும் அறிவும் தன்விழிப்பும் கொண்டவளாய் இருப்பேன்; மனிதியாகிய நான் சக மனிதர்களிடம்...

இந்து முன்னணி வன்முறை கும்பலை தடை செய்! திருப்பூரில் 2500 தோழர்கள் கைது!

தமிழகம் குஜராத்தாக மாறும் என அச்சுறுத்தும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது செய் என வலியுறுத்தி திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 30.09.16 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 32 அமைப்புகள் ஒருங்கிணைந்து பங்கேற்றன. மதபயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்களுடன் கலந்து கொண்டு கைதானார். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கழகத் தோழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அப்போது பேசிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தமிழகத்தில் சமூக அமைதிக்கும், கடைகளுக்கு அச்சுறுத்தலாககலவரத்தை ஏற்படுத்தும் இந்து முன்னணியை தடை செய்யவும், அதன் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது  செய்யவும் வலியுறுத்திப் பேசினர்.கோவையில்...

பா.ஜ.க. அலுவலகம் முற்றுகை போராட்டம் ! சென்னை 07102016

தமிழர்க்கு எதிரான பா.ஜ.க வின் போக்கை கண்டித்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில். உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க ஆணை பிறப்பித்தும், அதை மதிக்காமல் ஏற்க மறுக்கும் மத்திய பா ஜ க அரசை கண்டித்து சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகம் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக முற்றுகைப் போராட்டம் . தமிழக விவசாய் மக்களை விட கர்நாடக தேர்தலையே முக்கியமாக கருதும் மதவாக பாஜக அரசை கண்டித்து சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமையில் நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு தோழர்கள் தவறாமல் கலந்துக்கொண்டு மதவாத பாஜக விற்கு எதிரான பதிவை வலுப்படுத்த வேண்டும் . திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையை கொண்டாடக் கூடாது – சென்னை திவிக மனு

அரசு அலுவலகங்களில் மத சார்புடைய ஆயுத பூஜையை கொண்டாடக் கூடாதென அரசு கொண்டுவந்த அரசாணையை கட்டாயம் அமலில் கொண்டுவர வலியுறுத்தியும், பூஜை நடைபெறும் அலுவலகங்களை கண்காணித்து தடுத்தும், மீறும் அலுவலகங்கள் மீதான நடவடிக்கையை எடுக்க கோரியும் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் 05 : 10 : 2016 புதன்கிழமை இன்று காலை 11 : 00 மணியளவில் காவல் ஆணையர் அலுவலகம் வேப்பேரியில் மனு கொடுக்கப்பட்டது . மேலும் அவர் செய்தியாளர்களிடம் அரசாணையை மீறி பூஜை நடைபெறும் காவல் நிலையத்தை முற்றுகையிடுவோம் என்று பதிவு செய்தார். நிகழ்வில் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் இரா. உமாபதியுடன் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்துக் கொண்டனர் . திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் – குமாரபாளையம் 06102016

தந்தை பெரியார் 138வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் தலைமை தோழர் கொளத்தூர் மணி நாள் 06102016 நேரம் மாலை 5 மணி முதல் இடம் நகர பேருந்து நிலையம் அருகில், குமாரபாளையம்   தோழர் பெரம்பலூர் துரை தாமோதரனின் மந்திரமா தந்திரமா என்ற அறிவியல் நிகழ்ச்சி மற்றும் கவியரங்கம் நடைபெறும் தொடர்புக்கு 9944333855

கோவை கலவரம் செய்த இந்து முன்னணியை தடை செய் – திருப்பூரில் ஆர்ப்பாட்டம் கழகத் தலைவர் உரை

கழக தலைவர் உரை! (காணொளியை காண சொடுக்கவும்) மதவாதத்திற்கெதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் 30.09.2016 அன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. கலவரத்தில் ஈடுபட்டு பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்து முன்னணியை தடை செய்! தமிழகம் குஜராத் தாக மாறும் என அச்சுறுத்திய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியை கைது செய் என வலியுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அதில் ஒரு பகுதியினர் காவல் வைக்கப்பட்ட திருப்பூர் காதர் சலீமா திருமண மண்டபத்தில் கூடியிருந்த பல்வேறு அமைப்பு தோழர்கள் மத்தியில் கழக தலைவர் ஆற்றிய உரை.  

மாட்டிறைச்சி – எனது உரிமை; எனது உரிமை – கருத்தரங்கம் மதுரை 25092016

மதுரையில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பில் “மாட்டிறைச்சி – எனது உரிமை – எனது உரிமை “ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. முதலில் நிகழ்ச்சி நடத்த திட்டமிருந்த பள்ளி மைதானத்துக்குக் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப் பட்டதால், மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவ்ர் சாமுவேல்ராஜ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் ஷேக் மொய்தீன் மற்றும் தமிழ்ப்புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் உரையாற்றினர்.

மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற திருப்பூர் ஆர்ப்பாட்டம்!

மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற திருப்பூர் ஆர்ப்பாட்டம்! 2500க்கும் மேற்பட்டோர் கைது ! இந்து முன்னணியை தடைசெய் ! தமிழகம் குஜராத்தாக மாறும் என அச்சுறுத்தும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது செய் என வலியுருத்தி திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது ! 30.09.16 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 32 அமைப்புகள் ஒருங்கிணைந்து பங்கேற்றன. மதபயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கழக தோழர்களுடன் கலந்து கொண்டு கைதாகினார். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கழக தோழர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர். கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அப்போது பேசிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தமிழகத்தில் சமூக அமைதிக்கும்,...

மனித உரிமைக்கான அம்னஸ்டி இன்டர்நேசனல் விருது பெற்ற ஹென்றி டி பேன் அவர்களுக்கு பாராட்டு விழா !

மனித உரிமைக்கான அம்னஸ்டி இன்டர்நேசனல் விருது பெற்ற ஹென்றி டி பேன் அவர்களுக்கு பாராட்டு விழா ! கழக தலைவர் அவர்கள் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்குகிறார். பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பாராட்டி பேசுகிறார்கள். மனித உரிமை காப்பாளர்கள் மற்றும் இந்திய தொழிலாளர் பேரவை சார்பில் இந்த பாராட்டு விழா நடைபெறுகிறது நாள் : 02.10.2016. நேரம் : மதியம் 2.30 மணி. இடம்: திருமண மண்டபம், திருவாக்கவுண்டனூர் பைபாஸ் ரவுண்டானா, சேலம் – 5

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருதுநகர் 01102016

விருதுநகரில், திராவிடர் விடுதலைக் கழகம் விருதுநகர் மாவட்டத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம். நாள் : 01.10.2016, மாலை 5 மணி இடம்: பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில்,விருதுநகர் . சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம் . தோழர் பூ.சந்திரபோஸ், தியாகி இம்மானுவேல் பேரவை. மந்திரமா? தந்திரமா? – தோழர் துரை.தாமோதரன். விருதுநகர் மாவட்டத்தில் எழுச்சியோடு நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் கழக அறிமுக விழா பொதுக்கூட்டம். விருதுநகரில் தந்தை பெரியாரின் 138வது பிறந்த நாள் விழா மற்றும் கழக அறிமுக விழா பொதுக்கூட்டம். 01.10.2016 அன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. செந்தில் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் கவிஞர் வினோத் முன்னிலையில்,மாவட்ட தலைவர் பாண்டி வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல்மன்ற பொருப்பாளர் ஆசிரியர் சிவகாமி,டார்வின்தாசன்,புதிய தமிழகம் மாநில மாணவரணி...

காவிரி உரிமைக்கு பேராவூரணியில் கழகம் ஆர்ப்பாட்டம்

காவிரி உரிமைக்கு பேராவூரணியில் கழகம் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், கர்நாடக தமிழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கன்னட வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பேராவூரணி-சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பேராவூரணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன், தமிழக மக்கள் புரட்சி கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஆயர் த.ஜேம்ஸ், தி.வி.க காளிதாஸ், சிபிஐ ராஜமாணிக்கம், சித்திரவேல், சிபிஎம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தா.கலைச்செல்வன், த.ம.பு.க மூர்த்தி, சம்பத், ஆயில் மதி, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், கு.பாரி, திருக்குறள் பேரவை கொன்றை சண்முகம், மதிமுக பாலசுப்பிரமணியன், குமார், கண்ணன், தேமுதிக சீனிவாசன், பழனிவேல், த.ம.மு.க ஆசீர்வாதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 29092016 இதழ்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தங்கை முடிவெய்தினார்!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தங்கை முடிவெய்தினார்!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உடன் பிறந்த தங்கை திருமதி எஸ்.எம்.டி. சரோஜா (65) அவர்கள் 15.09.2016 அதிகாலை 4 மணியளவில் உடல் நலக் குறைவின் காரணமாக முடிவெய்தினார். இறுதி நிகழ்வு 15.09.2016 மதியம் 2 மணியளவில் மேட்டூர் அணை (ஆர்.எஸ்), தங்கமாபுரிபட்டிணத்தில் நிகழ்ந்தது. ஏராளமான தோழர்கள் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 29092016 இதழ்

தமிழ் ஈழத்திற்கு புதிய அரசியல் சட்டம் தயாராகிறது

நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மய்யத்தின் சார்பில் ‘ஈழம் தொடரும் துயரமும்; நமது கடமையும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் கடந்த செப்.25 மாலை 6 மணியளவில் சென்னை கவிக்கோ மன்றத்தில் சிறப்புடன் நடந்தது. நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தும் அதில் இடம் பெற்றுள்ள தமிழக உறுப்பினர்கள் தமிழினியன், முகேஷ் தங்கவேலு ஆகியோரை அறிமுகம் செய்தும் பேராசிரியர் சரசுவதி அறிமுக உரையாற்றினார். விடுதலை இராசேந்திரன், தியாகு, அருட் தந்தை குழந்தைசாமி, பேராசிரியர் அபுல்பாசல், பேராசிரியர் மணிவண்ணன் ஆகியோர் உரையாற்ற, நிறைவாக பண்ருட்டி இராமச்சந்திரன் பேசினார். அருட்தந்தை குழந்தைசாமி ஒரு மாத காலம் தமிழர் பகுதி முழுதும் நேரில் சென்று பார்வையிட்டு திரும்பியுள்ளார். அவர் மக்களின் துயரங்களை சிங்கள ஆக்கிரமிப்பு களை பகிர்ந்து கொண்டார். நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில், தமிழ் ஈழத்துக்கான புதிய அரசியலமைப்பு, சர்வதேச சட்ட நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது என்ற தகவலைதோழர் தியாகு அறிவித்தார். நிறை வுரையாற்றிய முன்னாள் அமைச்சர்...

விழுப்புரத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

செப்டம்பர் 17இல் விழுப்புரம் மாவட்டம் கழக சார்பில் காலை 9 மணியளவில் சங்கராபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் பெரியார் வெங்கட் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அம்பேத்கர் சிலைக்கும் தோழர்கள் மரியாதை செலுத்தினர். காலை 11 மணியளவில் செம்பராம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு (லட்டு) வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் ஒத்துழைப்புடன் மாணவ மாணவிகளிடையே தோழர்கள் ராஜேஷ், க.இராமர் ஆகியோர் உரையாற்றினர். செஞ்சி நான்கு முனை சாலையில் பெரியார் படத்திற்கு செஞ்சி கழகப் பொறுப்பாளர் கோ. சாக்ரடீசு தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை நகரத்தில் கழகத் தோழர் வழக்கறிஞர் சத்தியராஜ், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், பெரியார் சிந்தனைகள் கொண்ட பெரிய பேனர் வைத்தும் பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னெடுத்தார். பெரியார் முழக்கம் 29092016 இதழ்

தடை மீறி 54 முறை கைதான புரட்சி நடிகர்

செப்.17, பெரியார் பிறந்த நாளில் தான் ‘நடிகவேள்’ இராதா முடிவெய்தினார். அவர் நினைவாக ‘மணா’ தொகுத்த ‘எம்.ஆர்.ராதா காலத்தின் கலைஞன்’ நூலிலிருந்து -சில பகுதிகள்: நடிகவேள் எம்.ஆர்.இராதா, 1942க்குப் பிறகு மறுபடியும் நாடக மேடைக்கே திரும்பினார். பொன்னுச்சாமி பிள்ளை கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இழந்த காதல் நாடகத்தில் அவருடைய சவுக்கடிக் காட்சிக்குத் தனிப் பெயர் கிடைத்தது. சிவாஜி பெண் வேடத்தில் நடித்த இந்த நாடகம், வெள்ளித்திரை (திரைப்படம்) தரத் தவறிய புகழைத் தந்தது. அண்ணா உள்படப் பலர் பாராட்டினார்கள். பெரியாரும், சம்பத்தும் வந்து மனப்பூர்வமாக வாழ்த்தினார்கள். பெரியாருடன் தொடர்பு கூடியது. ‘திராவிட மறுமலர்ச்சி நாடக சபா’ என்கிற பெயருடன் இயங்க ஆரம்பித்தார் இராதா. “சுயமரியாதைக் கருத்துகளை நான் ஆராய ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே முழுவதும் அதன் வசமாகிவிட்டேன்” என்று இராதாவே உணர்வுடன் சொல்லு மளவுக்கு திராவிட இயக்கக் கருத்துக்கள் அவருடைய நாடகங்களில் வெளிப்பட்டன. விமலா அல்லது விதவையின் கண்ணீர் துவங்கி, இலட்சுமி காந்தன்,...

கோவை மதவெறிக் கலவரத்துக்கு பச்சைக் கொடி காட்டிய காவல்துறை

கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்த டி.சசிக்குமார் (35) என்பவர் 22.09.2016 அன்று இரவு அடையாளம் தெரியாத சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை யொட்டி கோவை மாவட்டம் முழுவதும் காலை முதல் இரவு வரை கடைகள் அடைக்க வைக்கப்பட்டது. இந்து முன்னணியினர் இருசக்கர வாகனங்களில் சென்று அதிகாலை முதலே கடைகளை அடைக்கச் சொல்லி மிரட்டிச் சென்றனர். காலை 9 மணி வரை பெரும்பகுதி அரசு, தனியார் பேருந்துகள் இயங்கின. பிறகு காலை 9 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்கவில்லை. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டது, பள்ளிகள் கல்லூரிகள் மதியத்திற்குமேல் விடுமுறை அளிக்கப்பட்டது. வன்முறையாளர்கள் நகரம் முழுவதும் கலவரத்திலும், தாக்குதலிலும், சொத்துக்களை அழிப்பதிலும், வாகனங்களை கொளுத்துவதிலும், சூறையாடுவதிலும் ஈடுபட்டனர். மாவட்ட காவல்துறையினர் இந்த நிகழ்வுகளில் எல்லாம் உரிய முறையில் தடுக்கவோ, கலைக்கவோ நடவடிக்கை எடுக்காததோடு, சார்பு தன்மையோடும் நடந்து கொண்டனர். அதிகாலை முதல் கலவரச் சூழல் உருவாகும் என்று தெரிந்தும் நடவடிக்கை போதுமானதல்ல, பள்ளி...

சமூக அவமதிப்புக்கு உள்ளாகும் திருநங்கைகளின் சுயமரியாதைப் போராட்டம்

தமிழகம் முழுதும் திருநங்கைகள் பல்லாயிரக்கணக்கில் சென்னையில் திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தினர். மோடி ஆட்சி திருநங்கைகள் நலனுக்காக மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த மசோதா திருநங்கை களின் வாழ்வை மேலும் மோசமாக்கிவிடும் என்று செப்.21 அன்று திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள்    கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பால கிருஷ்ணன், தி.மு.க.வைச் சார்ந்த விஜயா தாயன்பன், பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பலரும் திருநங்கைகள் கோரிக்கையை ஆதரித்துப் பேசினர். திருநங்கைகள் உரிமைகளுக்காக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தனிநபர் மசோதா ஒன்றை மாநிலங்களவையில் கொண்டு வந்தார். அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. 35 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு தனி நபர் மசோதா, அப்போதுதான் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவில் இடம் பெற்றிருந்த நல்ல அம்சங்களை இப்போது மோடி ஆட்சி அறிமுகப்படுத்தியுள்ள மசோதா...

தலைநகரில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் முற்றுகை!

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்க வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது என்று கருநாடக அரசு அறிவித்துவிட்டது. இந்தத் தீர்ப்பை ஏற்கக் கூடாது என்று கருநாடக காங்கிரஸ் ஆட்சியை மிரட்டி கலவரத்தை நடத்தி வருவது கருநாடக பா.ஜ.க.த்தான். கருநாடக முதல்வர் சித்தராமய்யா, மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடக்க தாம் தயாராக இருந்தாலும், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது பா.ஜ.க.தான்’ என்று சுட்டிக் காட்டியிருந்தார். மத்திய அமைச்சரான சதானந்த கவுடா, மாநில பா.ஜ.க. தலைவரான எடியூரப்பா போன்றோர், உச்சநீதிமன்ற தீர்ப்பை கருநாடகஅரசு ஏற்கக் கூடாது என்று கன்னட வெறியோடு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை முற்றுகையிட்டு தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் போராட்டத்தை செப்.20 அன்று பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தின. திராவிடர் விடுதலைக் கழகம், த.பெ.தி.க., தமிழ்ப் புலிகள் இயக்கம், மே 17, காஞ்சி மக்கள் மன்றம், தமிழ்ப் புலிகள்...

ஈழத்தில், மீண்டும் எழுகிறார்கள் தமிழர்கள்!

யாழ்ப்பாணத்தில் செப்.24 அன்று ‘எழுக தமிழ்’ என்ற எழுச்சிப் பேரணியை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு நடத்தியிருக்கிறார்கள். வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் உருவாக்கிய அரசியல் சார்பற்ற ‘தமிழ் மாநிலக் குழு’ என்ற அமைப்பின் சார்பில் அவரே தலைமையேற்று வழி நடத்திய பேரணி இது. இதில் ஈபி.ஆர்.எல்.எஃப். டெலோ, புளோட் உள்ளிட்ட அமைப்புகளின்  அரசியல் பிரிவுகளைச் சார்ந்த அனைவரும் பங்கேற்றனர். தமிழ் தேசிய கூட்டணியில் சம்பந்தம் தலைமை யிலான ஒரு பிரிவினர் மட்டும் பங்கேற்க வில்லை. 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு மக்கள் ஆளும் சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்து வெளிப் படையாக போர்க்குரல் எழுப்பி வெளியே வந்திருக்கிறார்கள் என்ற அளவில் இந்தப் பேரணி முக்கியத்துவம் பெறுகிறது. தமிழர் பகுதி இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் சூழலில் மக்களின் இந்தப் போராட்டக் குரல் அந்த மக்களின் விடுதலை உணர்வுத் தீ அணைந்து விடவில்லை என்பதை உலகுக்கு அறிவித்திருக்கிறது. பேரணியின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ள பிரகடனங்கள் மிகவும் முக்கியமானதாகும்....

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மந்தைவெளி 26092016

தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவும் நான்காம் ஆண்டு கால் பந்து பரிசளிப்பு நிகழ்வு இன்று 26.09.2016 சென்னை மாவட்ட மயிலை பகுதி சார்பாக சிறப்புடன் நடைப்பெற்றது. இதில் “விரட்டு” கலை குழுவின் கலை நிகழச்சியாக, பறையிசை, ஒயிலாட்டம், வீதி நாடகம் என வரிசையாக மாலை 6 .00. மணியளவில் தொடங்கி இரவு 10.30 மணிவரை நடைபெற்ற நிகழ்வின் இடையில் கழக வழக்கறிஞர் துரை அருண், திருமூர்த்தி, கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றிய பின் பரிசினை வழங்கி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார் செய்தி குகநந்தன்

இந்துத்துவ பயங்கரவாதிகளை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் 30092016

கோவையில் திட்டமிட்டு பொதுமக்கள் மீதும், வணிக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகளை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை(30.09.2016) திருப்பூரில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தோழமை இயக்கங்களை இணைத்து மாலை 3 மணிக்கு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவசியம் பங்கேற்கவும்.

ஈரோடு வடக்கு திவிக – பெரியார் பிறந்தநாள் விழா 20092016

தந்தை பெரியார் அவர்களின் 138 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு கோபி ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 20.09.2016 அன்று இருசக்கர வாகன பேரணி மற்றும் கழக கொடி ஏற்று விழா நடைபெற்றது. பேரணி சிறுவலூர் எலந்தகாடு பகுதியில் இருந்து துவங்கி சிறுவலூர், கொளப்பலூர், வேட்டைக்காரன்கோவில், மொடச்சூர், தாசம்பாளையம், கோபி கடைவீதி வழியாக காலேஜ் பிரிவு, ல.கள்ளிப்பட்டியில் நிறைவடைந்த்து. பேரணி சென்ற வழியில் அமைந்து இருந்த கழக கொடி கம்பங்களில் கழக தோழர்கள் கழக கொடியினை ஏற்றி வைத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்பும், துண்டறிக்கைகளும் வழங்கினார்கள். பேரணியில் முன்புறம் டிரம்ஸ் வண்டியும் நடுவில் முப்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தோழர்கள் கழக கொடியுடனும்,கடைசியாக நான்கு சக்கர வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் படம் வைக்கப்பட்டு ஊர்வலம் சென்றது. பேரணியில் அறுபதுக்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். காலையில் தோழர்களுக்கு தேனீர் ஏறபாட்டினை கொளப்பலூர் கிளை...

கொடியேற்று விழா, வாகன ஊர்வலம், பொதுக்கூட்டம் திருப்பூர் 25092016

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா! கொடியேற்று விழா, வாகன ஊர்வலம், பொதுக்கூட்டம். நாள் : 25.09.2016. ஞாயிறு. நேரம் : காலை 8 மணி ஊர்வலம் தொடங்குமிடம்: இராயபுரம், திருப்பூர் பொதுக் கூட்டம் ! நேரம் : மாலை 6.00 மணி இடம்: வீரபாண்டி பிரிவு, திருப்பூர் . சிறப்புரை : தோழர் கோபி வேலுச்சாமி. தோழர் காவை இளவரசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்சி இடம் பெறும்.

சுயமரியாதை கால்பந்து கழகம் பரிசளிப்பு விழா சொன்னை 26092016

தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழகம் மயிலை பகுதி சார்பாக சுய மரியாதை கால்பந்து கழகம் நடத்தும் நான்காம் ஆண்டு கால்பந்தாட்ட போட்டி . நாள் : 25.09.2016 ஞாயிறு. நேரம் : காலை 7.30 மணி. இடம்: செயின்ட் மேரீஸ் சாலை, குருபுரம் விளையாட்டு திடல், அபிராமபுரம். சென்னை.18   வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா பொதுக்கூட்டம். நாள் : 26.09.2016 திங்கள் நேரம் : மாலை 6.00 மணி. இடம்: செயின்ட் மேரீஸ் பாலம்,விசாலட்சி தோட்டம்,மந்தைவெளி ரயில் நிலையம் அருகில்,மைலாப்பூர், சென்னை.18 . கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன்,இயக்குனர் சுசீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்குகிறார்கள்.

மாட்டிறைச்சி எனது உணவு, எனது உரிமை – கருத்தரங்கம் மதுரை 25092016

தமிழ்புலிகள் கட்சி நடத்தும் கருத்தரங்கம் பகல் 1.30 மணிக்கு தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பார்ப்பனீயத்தின் உணவு கோட்பாடு – தலைப்பில் கருத்துரை

அய்யகோ! விக்னேசு இப்படி ஒரு முடிவை எடுக்கலாமா?

விக்னேஷ் என்ற 21 வயது இளைஞர் தீக்குளித்து, உயிர்க் கொடை வழங்கிவிட்டார். நெஞ்சம் பதறுகிறது. நாம் தமிழர் கட்சி, காவிரி உரிமைக்காக கருநாடக அரசைக் கண்டித்து நடத்திய பேரணியில் விக்னேசு இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்து விட்டார். தனது முகநூலில் பேரணிக்கு முதல் நாளே ‘தீக்குளிப்பு நடக்கப் போகிறது’ என்று சூசகமாக அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் சமூகத்தைப் பற்றி கவலைப்படுகிற இளைஞர்கள் வெகு சிலர்தான். உல்லாசம், பொழுது போக்கு, கேளிக்கை என்று வாழும் இளைஞர்களிடையே அதிசயமாக இன உணர்வோடு இனத்தின் விடுதலைக்காகப் போராட வரும் இத்தகைய இளைஞர்கள் இப்படி தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் விபரீத முடிவுகளை ஏன் எடுக்க வேண்டும்? உணர்ச்சிகரமான பேச்சுகளும் அதற்காக கட்டமைக்கப்படும் சொல்லாடல்களும் இளைஞர்களை வெற்று உணர்ச்சிக்குள் மூழ்கச் செய்து  விடுகின்றன. தெளிந்த சமூக அரசியல் பார்வை; அதற்கான போராட்டப் பாதை; இதை முன்னெடுப்பதற்கான களச் சூழல் இவைகளோடு பொருத்திக் கொண்டு தொடர்ந்து செயலாற்றுவதற்கான  உறுதியை உணர்வுகளாக்கிக் கொள்ள...

நாட்டு விடுதலைப் போருக்குநாடகம் மூலம் தொண்டாற்றியவர்

நாட்டு விடுதலைப் போருக்குநாடகம் மூலம் தொண்டாற்றியவர்

நாடகத்தில் நடிப்பதற்கு பெண்கள் வரத்தயங்கிய காலத்தில் எம்.ஆர்.இராதாவின் ‘இரத்தக் கண்ணீர்’, ‘இலட்சுமி காந்தன்’ நாடகங்களில் துணிச்சலாக நடிக்க வந்தார் பிரேமாவதி என்ற 17 வயது பெண். இராதாவுக்கும் பிரேமாவதிக்கும் இடையே காதல் உருவாகி, திருமணம் செய்து கொண்டார்கள். பிறந்த குழந்தைக்கு ‘தமிழரசன்’ என்று பெயர்சூட்டினார்கள். அம்மை நோய் பாதிப்புக்குள்ளாகி, முதலில் ‘தமிழரசன்’ இறக்கிறார்; அடுத்த 3 நாள்களில் அதே நோய்க்கு பிரேமாவும் தனது 22 வயதில் இறந்து விட்டார். தனது அன்பு மனைவி, மகனுக்கு கோவையிலிருந்து பாலக்காடு போகும் வழியில் ஆற்றுப் பாலத்தைக் கடந்து நிற்கும் இடு காட்டில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாற்பதடி உயரத்தில் அவர்கள் நினைவாக கோபுரம் போன்ற நினைவுச் சின்னத்தை எழுப்பினார் எம்.ஆர். இராதா. அவ்வப்போது இந்த நினைவிடத்துக்கு வந்து நடிகவேள் கண் கலங்குவார். அந்த நினைவிடத்தின் கீழே பொறிக்கப்பட்ட  வாசகங்களும் மிகவும் முக்கியமானது. “பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் நாட்டு விடுதலைப் போருக்கு நாடகம் மூலம் தொண்டு செய்து...

‘கருப்பும்-காவியும்’ இணைந்த வரலாறு

பெரியாருக்கும்-குன்றக்குடி அடிகளாருக்கும் இடையே உருவான ‘கொள்கை நட்பு’ குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளேடு (செப்.16, 2016) ஆய்வாளர் ஏ.ஆர். வெங்கடாசலபதியின் கட்டுரை ஒன்றை வெளியிட் டிருக்கிறது. அக்கட்டுரையின் சுருக்கம்: “1945ஆம் ஆண்டு, 20 வயதே நிரம்பிய குன்றக்குடி அடிகள், தருமபுரம் சைவமடத்தில் சேர்ந்து, சைவ சித்தாந்தம், சங்க இலக்கியங்கள் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமைப் பெற்றார். அப்போது குன்றக்குடி, திருவண்ணாமலை சைவ மடத்துக்கு இளைய சாமியார் ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது, குன்றக்குடி அடிகளாருக்கு அழைப்பு விடுத்தது. தருமபுரம் மடம் அடிகளாரை அனுப்பி வைக்க மறுத்தாலும், பிறகு ஒரு வழியாக சம்மதித்தது. இளைய மடாதிபதியாக குன்றக்குடி மடத்தில் சேர்ந்த ஆதீனம், அடுத்த 3 ஆண்டுகளில் குன்றக்குடி மடாதிபதி ஆகி விட்டார். சைவத்தில் வெள்ளாளர் ஜாதியினர் மட்டுமே சைவ மடங்களில் சன்னிதானமாக முடியும். இவரும் அதே ஜாதிப் பிரிவைச் சார்ந்தவர்தான். ஆனால், சீர்திருத்த எண்ணங்களைக் கொண்டிருந்தார். மடத்துக்கு அருகே உள்ள தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளுக்குச் சென்றார். ‘வழிபாட்டு மொழியாக...

‘சுய குடும்ப நலன்’-‘சுய புகழ்ச்சி’ மறுத்த தலைவர்

பெரியார் பிறந்த நாளையொட்டி ‘தமிழ் இந்து’ நாளேடு, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் பெரியார் பற்றிய கட்டுரையை கேட்டிருந்தது. பொதுச் செயலாளர் எழுதிய கட்டுரை செப்.19 இதழில் மாற்றங்களுடன்  வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையின் முழு வடிவம் இங்கே பதிவு செய்யப்படுகிறது. நாதசுரக் குழாய் இருந்தால் ஊதியாக வேண்டும்; தவுலாக இருந்தால் அடிபட்டுத்தானாக வேண்டும் என்பதுபோல் எனக்கு தொண்டைகுரல் உள்ள வரை பேசியாக வேண்டும்; பிரசங்கம் செய்தாக வேண்டும்.  – பெரியார் அரசு மக்களுக்கு வழங்கிடும் ‘இலவசங்கள்’ தேவைதானா? என்ற சூடான விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் சமூகத்தையே அரித்துக் கொண்டிருக்கிற ஒரு ‘இலவசம்’ குறித்து விவாதங்கள் நடப்பது இல்லையே! மக்களின் பொதுச் சிந்தனைக்குள் கொண்டு வரப்படாத அந்த ‘இலவசம்’தான் ஜாதி; இந்த ஜாதியை எவரும் தியாகம் செய்தோ, உழைத்தோ, விலை கொடுத்தோ வாங்குகிறார்களா என்ன? இந்த ‘இலவசம்’ ஒரு சமூகத்தில் மனிதர்களின் நிலையை தீர்மானிக்கிறது. இந்த இலவசம் சமூகத்தின் பெரும் பகுதி மக்களின் கலாச்சார...

மரணத்தில் மர்மம்!  பலியானார் இராம் குமார்!

மரணத்தில் மர்மம்! பலியானார் இராம் குமார்!

சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இராம்குமார், சிறையில் மின் பெட்டியை உடைத்து, கம்பியை வாயில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக சிறை நிர்வாகம் கூறி, அதை நம்பச் சொல்கிறது. இராம்குமார் இந்த வழக்கில் உண்மையான  குற்றவாளி தானா? என்ற பலத்த சந்தேகம் தொடக்கம் முதலே இருந்து வந்திருக்கிறது. இராம்குமார் தற்கொலை செய்யவில்லை; அவர் சிறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது பெற்றோர்களும், இராம்குமார் வழக்கறிஞர்களும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறார்கள். அடுத்த சில நாள்களில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்தச் சம்பவம் நடத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. மின்சார பெட்டியை சிறைக்குள் ஒரு கைதியால் எப்படி  உடைக்க முடிந்தது? எந்த ஆயுதத்தை வைத்து உடைத்தார்? மின்சாரம் பாயும் கம்பியை எப்படி அவரால் வாயில் வைக்க முடிந்தது? அதுவரை சிறைக் காவலர்கள் எங்கே போனார்கள்? மின்சாரம் பாயும் கம்பியை இராம்குமார் வாயில் வைத்துதான் இறந்தார் என்று சிறை நிர்வாகம்...

சுயமரியாதை சுடரொளி சவுந்தரபாண்டியனார்

சுயமரியாதை சுடரொளி சவுந்தரபாண்டியனார்

சுயமரியாதை இயக்கத்தின் தூண்களில் ஒருவரான டபிள்யூ பி.ஏ.சவுந்தரபாண்டியனார், செப்.15ஆம் தேதி அவருக்கு 129ஆவது பிறந்த நாள். தியாகராயர் நகரிலுள்ள அவரது சிலைக்கு நாடார் சமூகத்தினர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தியுள்ளனர். சவுந்தர பாண்டியனார் நாடார் சமூகத்தில் பிறந்தாலும், பார்ப்பனரல்லாத சமூகத்தின் முன்னேற்றத்துக்காக பெரியாரோடு இணைந்து நின்றவர். நீதிக்கட்சியிலிருந்து அவரது பயணம் தொடங்கியது. 1924ஆம் ஆண்டு செங்கல்பட்டில் பெரியார் நடத்திய வரலாற்றுப் புகழ் மிக்க முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவர் சவுந்தரபாண்டியனார்தான். நாடார் மகாஜன சங்கத்தின் பிரதிநிதியாக 1921ஆம் ஆண்டு ஆளுநர் வெல்லிங்டனால் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு, 12 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகக் குழு (ஜில்லா போர்டு) உறுப்பினராகவும் பணியாற்றியவர். கமுதிப் பகுதியில் நாடார்-மறவர் வகுப்பு மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும் பங்காற்றியவர். ‘தீண்டப்படாத’ மக்களுக்கு நில உரிமை; அவர்களை பேருந்தில் ஏற்ற மறுத்த பேருந்துகளுக்கு உரிமத்தை இரத்து செய்தமை; ஆதி திராவிட மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க மறுத்த...

கழகத் தோழர்கள் எழுச்சியுடன் எடுத்த பெரியார் விழா

பெரியார் 138ஆவது பிறந்த நாளை செப்.17 அன்று தமிழகம் முழுதும் கழகத்தினர் எழுச்சியுடன் கொண்டாடினர். சேலத்தில் : சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் 17.9.16 அன்று தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கழகக் கொடியேற்று விழா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் காவலாண்டியூர் கிளை கழகத் தலைவர் மாரியப்பன் தலைமையில் தோழர்கள் ஊர்வலமாக சென்று கழகக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காவலாண்டியூர் சுந்தரம், செ.செ.காட்டுவளவு சின்ராசு, கண்ணாமூச்சி மாரியப்பன், மூலக்கடை இராசேந்திரன், காந்தி நகர் சரசுவதி ஆகியோர் கழகக் கொடியை ஏற்றினர். ஊர்வலத்தில் தோழர்கள் விஜயகுமார், சித்துசாமி, மாரியப்பன், பழனிசாமி, சின்ராசு, அபிமன்யூ, இராசேந்திரன், சந்திரன், அவினாசி, பழனிசாமி, தங்கராஜ், சேகர், பச்சியப்பன், சுந்தரம், சித்தன், பிரகாஷ், ராணி, சரசுவதி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். மூலக்கடை இராசேந்திரன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்.   கொளத்தூரில் :...

‘கார்ப்பரேட்’ மயமாகும் பார்ப்பனிய திருமண முறை

‘கார்ப்பரேட்’ மயமாகும் பார்ப்பனிய திருமண முறை

பார்ப்பனியம் – பன்னாட்டு கார்ப்பரேட் பண்பாட்டுடன் கைகோர்த்துக் கொண்டு தன்னை மீட்டுருவாக்கம் செய்து வருகிறது என்பதற்கு திருமண முறைகளில் நிக ழ்ந்து வரும் மாற்றங்களே சான்று. புரோகிதம் – சோதிடம் – வரதட்சணை என்ற பார்ப்பனிய திருமணம், ஆடம்பர திருமணமாகி, கார்ப்பரேட் நிக ழ்வாகி நிற்பதை விளக்குகிறது, இக்கட்டுரை. இந்தியாவில் ஒரு திருமணத்துக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை செலவிடப்படுகின்றன. சுமார் மூன்று மாதம் முதல் ஒரு ஆண்டு வரையிலும் திருமண திட்டமிடல் நீள்கிறது. இவற்றின் பின்புலமாக திருமணத்தை பார்க்கிறோம் என்றால் மிகப் பெரிய தொழில் வாய்ப்புகளையும், பணப் புழக்கத்தையும் இந்திய திருமணங்கள் கொண்டிருக்கின்றன என்கிற உண்மை விளங்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தோராயமாக 1 கோடி திருமணங்கள் நடக்கின்றன. ஒப்பீட்டளவில் ஆண்டுக் காண்டு திருமண செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனடிப்படையில் பார்த்தால் தற்போது இந்திய திருமண சந்தை சுமார் 2,00,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பை கொண்டுள்ளது. இது...

உருவமாக சித்தரிக்கும் புகைப்படம் போலியானது சீரடி சாய்பாபா ‘அற்புத’ மோசடிகள்

புட்டபர்த்தி சாய்பாபா மரணத்துக்குப் பிறகு சீரடி சாய்பாபா திட்டமிட்டு பிரபலமாக்கப்பட்டு வருகிறார். புட்டபர்த்தி உயிருடன் வா ழ்ந்த காலத்திலேயே ‘இவர் மோசடிக்காரர்; சீரடி பாபாதான் உண்மையான கடவுள் அவதாரம்’ என்று பேசியவர்களும் இருந்தார்கள். ‘பாபா’க்கள் என்ற மனிதர்களுக்கு, ‘கடவுள் அவதாரம்’ என்ற முகமூடியைப் போட்டு, அவர்கள் ‘அற்புதங்களை’ நிகழ்த்தும் ஆற்றல் பெற்றவர்கள் என்ற கதைகளை உருவாக்கிப் பரப்புகிறார்கள். ‘அவதாரங்கள்’ எடுத்த ‘கடவுள்கள்’ இனியும் வர மாட்டார்கள். மக்களிடம் அவதார மகிமைகளைத் தொடர்ந்து பேசி ஏமாற்ற முடியாது என்பதால், அவ்வப்போது சில மனிதர்களைப் பிடித்து ‘அவதாரமாக’ தோளில் தூக்கி ஆடும் செப்படி வித்தைகள் நடக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் ‘கல்கி’ அவதாரம் எடுத்து வந்திருக்கிறார் என்று ஒரு பார்ப்பனர் விளம்பரப்படுத்தப் பட்டார். ஒரு கட்டத்தில் அவர் மோசடிக்காரர் என்ற உண்மை அம்பலமான பிறகு, ‘கல்கி’ அவதாரக் கூச்சல், பஜனைகள் முடிவுக்கு வந்தன. துவாரக பீட பார்ப்பனர் சங்கரச்சாரி சுகபோனந்த சரசுவதி சில ஆண்டுகளுக்கு முன் சீரடி சாய்பாபாவை இந்துக்கள் வணங்கக் கூடாது; அவர்...

“மன நிறைவோடு சாகத் தயார்!”

“மன நிறைவோடு சாகத் தயார்!”

தமிழக அரசின் துணைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற மா. கோபாலன், தனது 14ஆம் வயதிலேயே பெரியாரால் ஈர்க்கப்பட்டவர். கழகப் பணிகளில் பங்கேற்றவர். ‘ஆடும் பருவத்திலேயே எனை ஆட்கொண்ட பெரியார்’ எனும் தலைப்பில் அவர் எழுதிய நூலில் பல களப் பதிவுகளை செய்துள்ளார். அந்நூலிலிருந்து சில பகுதிகள் சென்னை பெத்துநாயக்கன் பேட்டையில் சிவஞானம் பிள்ளை பூங்கா ஒன்று உள்ளது. அங்குப் பெரியார் ஒரு நாள் பேசினார். அது திராவிடர் கழகத்தினரால் நடத்தப்பெற்ற பொதுக் கூட்டம். கூட்டத்தை நடத்தியவர்களுள் மு.பொ. வீரன் என்பவரும், டபுள்யூ.பி. வேலாயுதம் என்பவரும் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும் மேடைக்கு முன்னர் நின்றிருந்தார்கள். பெரியார் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு செங்கல் துண்டு, எங்கிருந்தோ வந்து மேடையில் பெரியார் கால்கள் அருகில் விழுந்தது. யாரோ ஒருவன் மறைந்திருந்து அதனை வீசி எறிந்தான். நல்ல வேளை அது பெரியார் மீது படவில்லை. அந்தக் கல் வந்து விழுந்த நேரம்; இடம் ஆகியவற்றை ஒரு தாளில் எழுதச்...

தலையங்கம் – காவிரிப் பிரச்சினையில் கன்னடர் வன்முறைகள்

தலையங்கம் – காவிரிப் பிரச்சினையில் கன்னடர் வன்முறைகள்

காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையும், இறுதி தீர்ப்பையும் மதித்து செயல்பட கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகும் சட்டப்பூர்வமாக அரசு ஏற்பை அறிவிக்க, அரசிதழில் அதை வெளியிடுவதற்கும் கர்நாடக அரசு எதிர்த்தது. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, அரசிதழில் பதிவானது. இதற்குப் பிறகு தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் காங்கிரஸ் ஆட்சியானாலும் பா.ஜ.க. ஆட்சியானாலும் பொறுப்பைத் தட்டிக் கழித்தே வருகின்றன. இதனால் ஒவ்வொரு முறையும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திடம் முறையிட வேண்டி யிருக்கிறது. இப்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை செப்டம்பர் 5ஆம் தேதி வரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. கன்னடர்கள் கலவரத்தில் இறங்கினார்கள், கர்நாடக அரசு...

மேட்டூர் தோழர் மார்ட்டின்

மேட்டூர் தோழர் மார்ட்டின்

கழகத்துக்கு 25 ஆயிரம் நன்கொடை தலைமைக் கழக செயலாளர் தபசி குமரனிடம் மேட்டூர் கழகத் தோழர் மார்ட்டின் தமது இல்ல மணவிழா மகிழ்வாக கழகக் கட்டமைப்பு நிதிக்கு ரூ.25,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 15092016 இதழ்

செப்டம்பர் 24இல் யாழ் நகரில் தமிழர் எழுச்சிப் பேரணி

செப்டம்பர் 24இல் யாழ் நகரில் தமிழர் எழுச்சிப் பேரணி

செப்டம்பர் 24ஆம் தேதி யாழ்ப் பாணத்தில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசின் இன அழிப்புக் கொள்கையை கண்டித்தும் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமைக் கோரியும் மாபெரும் பேரணி நடக்க இருக்கிறது. இந்தப் பேரணியை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன், கஜேந்திர குமார் தலைமையிலான தமிழ்த் தேச மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த சுரேஷ் பிரேம சந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பைச் சேர்ந்த சித்தார்த்தன் மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம், சர்வ மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், ஊடக வியலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். தமிழர்களின் ஒன்றுபட்ட எழுச்சி மீண்டும் ஈழத்தில் தொடங்கியிருக்கிறது. தமிழர்களின் ஒருங்கிணைந்த உரிமைப் போராட்டம் சிங்கள அரசுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. பெரியார் முழக்கம் 15092016 இதழ்

வினாயகன் அரசியலுக்கு எதிராக சென்னை-பொள்ளாச்சியில் பெரியார் கைத்தடி ஊர்வலம்: கைது

வினாயகன் அரசியலுக்கு எதிராக சென்னை-பொள்ளாச்சியில் பெரியார் கைத்தடி ஊர்வலம்: கைது

மதத்தை அரசியலாக்கி, மதக் கலவரத்தை உருவாக்கி வரும் ‘விநாயகன்’ ஊர்வலங்களை எதிர்த்து சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் பெரியார் கைத்தடி ஊர்வலம் எழுச்சியுடன் நடைபெற்றது. அன்று தான் இந்து முன்னணி நடத்தும் ‘விநாயகன் சிலை’ ஊர்வலமும் நடந்தது. திருவல்லிக் கேணி அய்ஸ்அவுஸ் பகுதி மசூதிக்கு அருகே கழகத் தோழர்கள் திரண்டனர். பெரியார் கைத்தடிகளுடன் ‘விநாயகன் ஊர்வலத்தை அரசியலாக்காதே!’, ‘கலவரம்  உருவாக்கும் விநாயகன் ஊர்வலங்களுக்கு, அரசே அனுமதி அளிக்காதே!’ ‘வீடுகளில் நடக்கும் பக்தி பண்டிகைகளை வீதிக்குக்  கொண்டு வந்து அரசியலாக்காதே!’ என்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகள் தாங்கி தோழர்கள் முழக்கமிட்டனர். கைத்தடி ஊர்வலத்துக்கு பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இரா.உமாபதி முன்னிலை வகித்தார். திருச்செங்கோடு, விழுப்புரம், மேட்டூர், காவலாண்டியூர், குடியாத்தம் பகுதிகளிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். கண்டன ஊர்வலத்தின் நோக்கங்களை விளக்கி பால்பிரபாகரன் பேசினார். தோழர்களை காவல்துறை கைது செய்தது. இராயப்பேட்டை பி.எஸ்.என்.எல்....

மாற்று பாலினத்தோர் உரிமை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மாற்று பாலினத்தோர் உரிமை பாதுகாப்பு மசோதா 2016 யை எதிர்த்து திருநங்கையர்கள் சமிதி சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர்மணி, விடுதலை சிறுத்தைக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட தோழமை அமைப்புகளும் திருநங்கை தோழர்களும் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

மணமகள் தேவை

மணமகள் தேவை

மணமகள் தேவை சென்னை ‘பர்னிச்சர்’ நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும், மாதம் ரூ.20,000 ஊதியம் பெறும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 28 வயதுடைய மணமகனுக்கு – மணமகள் தேவை. ஜாதி  தடையில்லை.   தொடர்புக்கு: 9840473704 / 9677294241 பெரியார் முழக்கம் 08092016 இதழ்

தூத்துக்குடியில் “நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை”ப் பயணம்

தூத்துக்குடியில் “நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை”ப் பயணம்

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 27.08.2016 சனிக்கிழமை அன்று மத்தியில் ஆளும் மோடியின் பி.ஜே.பி. அரசால் – கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பட்டியல் இனத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரைப் பயணம் தூத்துக்குடி முதல் ஆழ்வார்திருநகரி வரை கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. 27.08.2016 காலை 9.00 மணிக்கு தூத்துக்குடி பாளை சாலையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் சிலை அருகே தொடங்கிய பரப்புரைப் பயணத்தை ஆதித்தமிழர் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் க. கண்ணன் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் பொறிஞர். சி. அம்புரோசு, தோழர்.கோ.அ. குமார் ஆகியோரது உரையைத் தொடர்ந்து கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார். முன்னதாக  தந்தை பெரியார்-புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு பரப்புரைச் செயலாளர் மற்றும் மாவட்ட தலைவரால் மாலை அணி விக்கப்பட்டது....