Author: admin

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு!

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு! 24/25/6/17 தேதிகளில் நடைபெறும் மலேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு  டத்தோசிரி டாக்டர் சுப்ரமணியம்  அவர்கள் மாநாட்டைத் துவக்கிவைப்பார்! இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பேராளர்களாகப் பங்கேற்பு!   ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் பங்பெரும் மாநாட்டில் “திராவிட இனத்தின் மீட்சியே; தமிழ் இனம்! தமிழும் திராவிடமும் ஒன்றே!”யென கருத்தரங்கில் விவாதிக்கப்படும் ! இனத்தால் திராவிடன்,  மொழியால் தமிழன்,  உலகத்தால் மனிதன் என்ற கருப்பொருளால் முன்னெடுக்கப்படும் இம்மாநாட்டு வழி உலகம் தழுவி வாழ்கிற தமிழ் உணர்வாளர்களை ஒரே குடையில் கீழ் கட்டமைக்க முடியுமென்ற சிந்தனையின் வெளிபாடே இம்மாநாட்டுக்குரிய இலக்காகும். அதனால் இம்மாட்டையொட்டி நடைபெறும் இரண்டுநாள் கருத்தரங்கில் பேராசிரியர், சுப வீரபாண்டியன், பேராசிரியர் அ.மார்க்சு, கருத்தாளர் சு.அறிவுக்கரசு, திரைஇயக்குனர் வேலுபிரபாகரன், கருத்தாளர் வே.மதிமாறன், எழுத்தாளர் ஆதவன், கருத்தாளர் தோழி ஓவியா, கருத்தாளர் விடுதலை ராசேந்திரன், கருத்தாளர் இளபுகழேந்தி, எழுத்தாளர் மஞ்சை வசந்தன், கருத்தாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோருடன் கலந்து விவாதிப்பதுடன் அவர்களுக்கு...

ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் 18062017

10 நாட்கள் தொடர் தெருமுனைக் கூட்டங்கள்.. திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் சூரம்பட்டி வலசு பெரியார் JCB பணிமனையில் இன்று மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.இரத்தினசாமி முன்னிலையில் நடைபெற்றது.. 24.6.17 முதல் 3.7.17 முடிய பத்து நாட்கள் தொடர்ச்சியாக, தினமும் இரண்டு இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 24.6.17 – லோகநாதபுரம்,மோளக்கவுண்டன் பாளையம் 25.6.17 – வைராபாளையம், லட்சுமி தியேட்டர் 26.6.17 – சாஸ்திரி நகர், வாய்க்கால் மேடு 27.6.17 -சூரம்பட்டி வலசு, சூரம்பட்டி போலிஸ் ஸ்டேசன் 28.6.17 – மரப்பாலம், கோணவாய்க்கால் 29.6.17 – பச்சப்பாளி, கொல்லம்பாளையம் 30.6.17 – கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம் 1.7.17 – ஆர்.என் புதூர், சி.எம் நகர் 2.7.17 – சூளை, கனிராவுத்தர் குளம் 3.7.17 – வளையக்கார வீதி, சின்னமாரியம்மன் கோவில்.. பேச்சாளராக தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர். கோபி வேலுச்சாமி மற்றும் மந்திரமா...

தோழர்கள் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக முதல்வர் வீடு முற்றுகை சென்னை 17062017

தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் பாஜகவின் பினாமியான தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம் 17062017 சனி அன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அதில் 2000 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழர் விரோத பாஜகவின் அடியாளாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கண்டித்தும், தமிழக செயல்பாட்டாளர்களை ஒடுக்க குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், UAPA என அடக்குமுறை கருப்பு சட்டங்களை ஏவுவதைக் கண்டித்தும், 4 தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தோழர்கள்...

குமரி மாவட்ட திவிக தோழர் செல்லம் மறைவு, உடல்தானம் 16062017

குமரி மாவட்ட விடுதலைக்காக மார்சல் நேசமணி தலைமையில்  போராடிய மொழிப்போர் போராளியும் தற்போதைய திராவிடர் விடுதலைக் கழக ஆதரவாளருமான தோழர்.செல்லம், அகவை:80, தொடுகுளம், காஞ்சிரகோடு அவர்கள் 16062017 அன்று அதிகாலை மரணமடைந்தார். அவரின் வீரவணக்க நிகழ்வு கழகத் தோழர் அனீஸ் தலைமையில்  நடைப்பெற்றது. தோழர்கள் நீதி அரசர், தமிழ் மதி, மணிமேகலை, மார்த்தாண்டம் மாலை பத்திரிகை ஆசிரியர் தோழர் செபக்குமார், கிறித்துதாஸ் ஆகியோர் உடல் தானம் பற்றிய அறிவியல் செய்திகளை இரங்கல் செய்தியாக பேசினர். தோழர்கள் இளங்கோ, விஸ்ணு, சூசையப்பா, கருணாநிதி, ஜான் மதி, அருள் ராஜ், பிரேமலதா, இராசேந்திரன், கம்யூனிஸ்ட் தோழர் ஜெயன் ஆகியோரின் வீரவணக்க முழக்கங்களுடன், அவரின் இறுதி விருப்பப்படி  ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக மருத்துவ உடற் கூறியல்த் துறைக்கு வழங்கப்பட்டது. அவருக்கு எங்களின் வீரவணக்கங்கள்

மத்திய அரசும் தமிழக மக்களின் உரிமைகளும் – பொதுக்கூட்டம் பவானி 19052017

19/05/2017 வெள்ளி மாலை 6.00 மணிக்கு ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் “மத்திய அரசும் தமிழக மக்களின் உரிமைகளும்” என்ற தலைப்பில் கொடியேற்ற நிகழ்வுடனும் T.K.R பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் துவங்கியது. நிகழ்வுக்கு முன்னதாக பவானி பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கொடிகம்பத்திலும், அந்தியூர் பிரிவில் உள்ள கொடிக்கம்பத்திலும் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கொடி ஏற்றினார். தொடக்கத்தில் பகுத்தறிவு பறை இசை,  பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டன. தோழர் வேல்முருகன் வரவேற்புரையாற்ற மாவட்ட செயாலாளர் வேணுகோபால் கூட்டத்துக்குத் தலைமையேற்றார். மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி தலைமை கழக பேச்சாளர் வேலுச்சாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் சுந்தரம், மாநில அமைப்புச் செயாலாளர்  இரத்தினசாமி, மாநில வெளியீட்டுச் செயாலாளர் இராம. இளங்கோவன் அவர்களைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால் பெரியாரியமும், அம்பேத்கரியமும் மட்டுமல்லாமல்...

கருவிலேயே வேதப் பண்பாட்டை ஊட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.

கருவிலேயே வேதப் பண்பாட்டை ஊட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ‘ஆரோக்கிய பாரத்’ அமைப்பு, கருவிலேயே இந்து மதநெறியோடு குழந்தைகள் பிறக்க – வேத மந்திர பயிற்சி அளிக்கிறதாம். அண்மையில் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் ஒரு விசித்திரமான, வழக்கொன்று விசாரணைக்கு வந்தது. மேற்கு வங்க குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம், சட்ட அதிகாரி நாசிப்கான் தொடுத்த பொது நல வழக்கு தான் அது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் சுகாதாரப் பிரிவு “ஆரோக்கியா பாரத்” அமைப்பு பயிற்சிப் பட்டறை ஒன்று நடத்தியுள்ளது. அந்தப் பயிற்சிப் பட்டறையின் குறிக்கோள், கணவன் -மனைவியரை அழைத்து அவர்களுக்கு அறிவுரையும், பயிற்சியும் தருவார்களாம். அறிவுக்கு பொருந்தாத இப்பயிற்சியை தடுக்க வேண்டும் என்பதே வழக்கு! கருவிலேயே இருக்கிற குழந்தையை தூய்மைப்படுத்துவது இதன் உள்நோக்கம் கருவிலேயே குழந்தையை அறநெறியோடு இந்துமத நெறியோடு இந்துமத தூய்மை யோடு குழந்தையை உருவாக்கி பிறக்க வைப்பது. அடுத்து கணவனை, மனைவியை அந்தத் தம்பதிகளின் மனப் பக்குவத்தை ஆய்ந்து பாரம்பரியமான இந்துத்துவ சடங்காச்சாரங்களைக் கற்றுக் கொடுத்து பிறக்கும்...

‘இந்து தர்மம்’ உருவாக்கிய ‘தேவதாசி’ முறையில் சிக்கித் தவிக்கும் பெண்கள்

‘இந்து தர்மம்’ உருவாக்கிய ‘தேவதாசி’ முறையில் சிக்கித் தவிக்கும் பெண்கள்

இந்து மதம் உருவாக்கிய ‘தேவதாசி’ முறை தடைச் சட்டங்கள் வந்த பிறகும் ஒழியவில்லை; பசு மாட்டைக் காப்பாற்ற துடிக்கும் கூட்டம், பெண்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு பற்றி கவலைப்படுவதே இல்லை. பல நூற்றாண்டுகளாகக் கோயிலுக்குள்ளேயே வாழ்ந்து கோயில் திருப்பணி களை அர்ப்பணிப்போடு செய்து வந்தவர்கள் தேவதாசிகள். ஆனால் ‘இறைவனின் அடிமை’ என்கிற அர்த்தத்தில் சிறுமிகளைக் கோயில்களில் பொட்டுக்கட்டிவிட்டு, அவர்களைப் பாலியல் தொழிலாளியாக்கியது தேவதாசி முறை. அதிலும் கடந்த நூற்றாண்டில் கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டுச் சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்டுக் கீழ்த்தரமாக அவர்கள் நடத்தப்பட்டார்கள். முத்துலட்சுமி ரெட்டி, பெரியார்,  மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்டோரின் மிக நீண்ட சமூகப் போராட்டத்துக்குப் பிறகு தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது. “இந்த நாள்பட்ட கொடிய சமூகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபணையோ, எதிர் அபிப்பிராயமோ இருக்கவே முடியாது. ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு, பெண்ணுலகிற்கே ஏற்பட்டதாகையால் இவ்வழக்கம் பெண்களின் கவுரவத்தைப் பெரிதும் பாதிக்கக்...

ஜாதி-இந்துத்துவ எதிர்ப்பை உள்ளடக்கியதே சரியான பொருள் முதல்வாதம்

ஜாதி-இந்துத்துவ எதிர்ப்பை உள்ளடக்கியதே சரியான பொருள் முதல்வாதம்

பெரியார் ஒரு வித்தியாசமான பொருள் முதல்வாதி. அவர் கொச்சைப் பொருள்முதல்வாதி அல்ல, அப்படி வரையறுப்பது தவறு. மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (கடந்த இதழ்களின் தொடர்ச்சி) சாதி, கற்பு போன்ற ஆதிக்கச் சொல்லாடல்களை மட்டுமில்லாமல், காதல், தொண்டு, பொதுநலம் போன்ற சொல்லாடல்களையும் நிராகரித்த பெரியார், இந்தியத் தத்துவ மரபில் சொல்லப்படும் விதண்டா வாதியா? காதல், தொண்டு, பொதுநலம் போன்றவற்றை மிகைப்படுத்தும் போதுதான் பெரியார் நிராகரித்து எழுதியுள்ளார். ஆனால் அவற்றையெல்லாம் அவர் முழுக்கவும் நிராகரிக்கவில்லை. இவற்றின் நியாயமான அர்த்தப்பாட்டில் அதனை அங்கீகரிப்பார். சாதி, வருணம், மதம் பற்றிப் பேசும் போதெல்லாம், அவை வெறும் சுயநலக்காரர் களுடைய நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டன, இலாபங்களுக்காக உருவாக்கப்பட்டன. இவை யெல்லாம் எந்தவித பொதுநோக்கங்களும் இல்லாதவை என்று நிராகரிப்பார். இது போன்று காதல், தொண்டு, பொதுநலம்...

தாக்கப்பட்ட அய்.அய்.டி. மாணவரை கழகத் தலைவர் நலம் விசாரித்தார்

சென்னை ‘அய்.அய்.டி.’ நிறுவனம் பார்ப்பனக் கோட்டையாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தைச் சார்ந்த பிஎச்.டி. ஆய்வுப் பட்டத்துக்கு தயாராகும் மாணவர் சூரஜ் – வளாகத்தில் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து 80 அய்.அய்.டி. மாணவர்களை ஒன்று கூட்டி மாட்டிறைச்சி விருந்து நடத்தினார். அடுத்த நாள் விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சூரஜ்ஜை – ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பைச் சார்ந்தவர்கள் மூர்க்கத்தனமாக கொலைவெறி தாக்குதல் நடத்தினர். வானகரம் அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை, கடந்த ஜூன் 3ஆம் தேதி இரவு 8 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சந்தித்து நலம் விசாரித்தனர். தபசி. குமரன், வேழவேந்தன், வழக்கறிஞர் துரை அருண், குகன், வே. மதிமாறன் ஆகியோர் உடன் வந்திருந்தனர். பெரியார் முழக்கம் 15062017 இதழ்

பசுவை தெய்வமாக்குவதை எதிர்த்தவர் ஆர்.எஸ்.எஸ். குரு சாவர்க்கார்

பசுவை தெய்வமாக்குவதை எதிர்த்தவர் ஆர்.எஸ்.எஸ். குரு சாவர்க்கார்

பசு மாட்டைக் காப்பதற்கு மோடி ஆட்சி சட்டங்களைத் திணிக்கிறது. பசுப் பாதுகாப்புப் படை என்ற பெயரில் சமூக விரோத சக்திகள் பல மாநிலங்களில் சட்டங்களை கையில் எடுத்துக் கொண்டு பா.ஜ.க. ஆட்சியின் ஆதரவுடன் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இந்த நிலையில் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பேசும் ‘இந்துத்துவா’ எனும் கொள்கைகளை உருவாக்கி தந்தவரும் – சங்பரிவாரின் குருவாக மதிக்கப்படுபவருமான சாவர்க்கார் – பசுவை தெய்வமாக வணங்குவதை எதிர்த்தார். இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 9, 2017), ‘பசுவும் சாவர்க்காரும்’ என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் எழுதப்பட்டுள்ள கருத்து: “1930இல் ‘பாலா’ என்ற பிரபல மராத்திய இதழில் அதன் ஆசிரியர், ‘உண்மையான இந்து என்பவன் யார்? என்ற கேள்வியை எழுப்பி அதற்கு தனது பதிலையும் எழுதியிருந்தார். “பசுவை தனது தாயாகக் கருதுகிறவர் தான் உண்மையான இந்து” என்பதே அவர் தந்த விளக்கம். உடனே சாவர்க்கார் – இந்த கருத்துக்கு...

இதற்குப் பெயர் தான் இந்து இராஜ்யம்

இதற்குப் பெயர் தான் இந்து இராஜ்யம்

குஜராத்தில் விஜய் ரூபானி முதல்வராகக் கொண்ட பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலத்தி லிருந்து வந்துள்ள செய்தி – பா.ஜ.க.வினர் எந்த அளவு ‘அறிவுக் கொழுந்துகளாக’ இருக்கிறார்கள் என்பதைப் புரிய வைக்கிறது. படோப் மாவட்டத்திலுள்ள ஒரு கோயிலில் உள்ளூர் பா.ஜ.க. ஒரு பாராட்டு விழா நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. பாராட்டப் பட்டவர்கள் யார் என்று கேட்டால், அதிர்ச்சி வந்துவிடும். ‘பில்லி சூன்யம்’ வைக்கும் மந்திர வாதிகள்தான் பாராட்டப் பட்டவர்கள். 100க்கும் மேற்பட்ட ‘மந்திரவாதிகளை’ கவுரவித்த இந்த நிகழ்வில் மாநில அமைச் சர்களும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான புடேந்திர சிங் சுதாசமா, ஆத்மராம் பர்மர் போன்றவர்கள் பங்கேற்று பில்லி சூன்யக்காரர்களின் ‘தேச சேவையை’ மனம் உருகி பாராட் டினார்களாம். இந்த நிகழ்ச்சிகள் சமூக வலைதளங் களில் வேகமாக பரவி எதிர்ப்புகள் எழுந்தன. இதற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சுதாசமா அளித்த பதில் தான் மிகவும் குறிப்பிடத் தக்கது. “பில்லி சூன்யம் – புனித மானவை....

உடுமலை திருமூர்த்தி படகுத் துறையில் கருத்துச் செறிவுடன் நடந்தது இரண்டு நாள் பெரியாரியல் பயிற்சி

திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய இரண்டு நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு ஜூன் 11, 12-2017இல் உடுமலை திருமூர்த்தி மலை படகுத் துறை கிருஷ்ணா விடுதியில் சிறப்புடனும் கருத்துச் செறிவுடனும் கட்டுப்பாடு நேரம் தவறாமையுடன் நடந்தது. பயிற்சியில் 20 பெண்கள் உள்பட 75 இளைஞர்கள் பங்கேற்றனர். நபர் ஒருவருக்கு ரூ.200/- கட்டணம், முன்பதிவு, இரு நாள் பயிற்சிகளிலும் முழுமையாகப் பங்கேற்றல் என்ற ஒழுங்கு முறை விதிகளுடன் நடந்த இந்த பயிலரங்கில் பங்கேற்ற அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பயிற்சியாளர்களின் கருத்துகளைக் கேட்டு குறிப்புகளை பதிவு செய்து கேள்விகளையும் எழுப்பினர். பயிற்சி பெறும் தோழர்கள், முதல் நாள் இரவே பயிற்சி அரங்குக்கு வந்து சேர்ந்தனர். இதனால் முதல் நாள் பயிற்சி திட்டமிட்டபடி காலை 9 மணியளவில் தொடங்கிவிட்டது. தோழர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து முதல் வகுப்பாக பேராசிரியர் சுந்தரவள்ளி, “மதவாத அரசியல்” குறித்து வகுப்பு எடுத்தார். தொடர்ந்து வழக்கறிஞர்...

காவிகள் நுழையா தமிழகம், கலவரம் இல்லா தமிழகம் – சுவரொட்டியில் மதுரை திவிக பதிலடி

மதுரை முழுதும் பாஜகவினர் நூற்றுக்கணக்கான இடங்களில் “கழகங்கள் இல்லா தமிழகம் ” என்ற விளம்பரத்தை செய்துள்ளது. அதற்கு பதிலடியாக காவிகள் நுழையா தமிழகம், கலவரம் இல்லா தமிழகம் – என்ற தலைப்பில் பிரம்மாண்ட சுவரொட்டிகளை தயாரித்து மதுரை மாவட்ட திவிக தோழர்கள் மதுரையெங்கும் ஒட்டியுள்ளார்கள்  

பெரியாரியல் பயிலரங்கம் உடுமலை 11062017 மற்றும் 12062017

“பயிற்சியாளர்கள் – தலைப்புகள்” பெரியாரியல் பயிலரங்கம் ! ஜூன் 11,12 – உடுமலை. திருப்பூர், கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நாள் : 11.06.2017 ஞாயிறு, 12.06.2017 திங்கள், இரண்டு நாட்கள். நேரம் : காலை முதல் மாலை வரை. இடம்: கிருஷ்ணா விடுதி,படகுத்துறை, திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை இரண்டு நாள் நடைபெறும் இப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிலரங்கிற்கு வரும் தோழர்கள் சனிக்கிழமை இரவே பயிலரங்கு நடக்கும் விடுதிக்கு வந்து விடும்படி கேட்டுக் கொள்கிறோம். இரண்டு நாள் பயிற்சிக் கட்டணம் : Rs 200/= (ரூபாய் இருநூறு மட்டும்) முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தோழர்கள் : திருப்பூர் : முகில் இராசு – 9842248174 நீதிராசன் – 9003430432 உடுமலை : மடத்துகுளம் மோகன் – 8883488222 இயல் – 9842933064 பொள்ளாச்சி...

மாடுகள் விற்பனை தடை, மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்திய அரசே ! மாடுகள் விற்பனை தடைச்சட்டத்தை திரும்பபெறு ! தமிழக அரசே, திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை உடனடியாக திரும்ப பெறு ! கைது செய்யப்பட்டுள்ள மீதேன் திட்ட எதிர்ப்புத்தலைவர் பேராசிரியர் செயராமன் உள்ளிட்ட 11 பேரை உடனடியாக விடுதலை செய் ! சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆய்வு மாணவர் சூரஜ் மீது தாக்குதல் தொடுத்த இந்துத்துவ வன்முறையாளர்கள் அனைவரையும் கைது செய் ! என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையம் அருகே 09062017 வெள்ளி அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : மாவட்ட மக்கள் சிவில் உரிமைக்கழகம்,ஈரோடு.

கழக மாநாட்டில் நீதிபதி அரிபரந்தாமன் வலியுறுத்தல் இந்தியை அலுவல் மொழியாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும்

இந்தியை அலுவல் மொழி என்று அறிவிக்கும் சட்டப் பிரிவுகளை அரசியல் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற போராட்டமே இந்தி எதிர்ப்புக்கான சரியான போராட்டம் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், சென்னை திருவான்மியூர் தெப்பக்குளம் மைதானத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாட்டில் பேசுகையில் வற்புறுத்தினார். “இந்தித் திணிப்பை எதிர்ப்போம்; இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாட்டை திராவிடர் விடுதலைக் கழகம், 2017 ஜூன் 4ஆம் தேதி நடத்தியது. மாநாட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நீதிபதி அரிபரந்தாமன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: நாம் எந்த மொழிக்கும்  எதிரானவர்கள் அல்ல; விருப்பம் உள்ள எந்த மொழியையும் எவரும் படிக்க உரிமை உண்டு. ஆனால் ஒரு மொழியை அதிகாரத்தைப் பயன்படுத்தி திணிக்கும்போதுதான் எதிர்ப்பு வருகிறது. 1938ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிவிட்டது. பெரியார் தலைமையில் நடந்தது அப் போராட்டம். நாம் இந்தியை...

புரட்சிகர கலை நிகழ்ச்சிகள்; எழுச்சி உரைகள் உணர்ச்சிகரமான சென்னை மாநாடு

“இந்தித் திணிப்பை எதிர்ப்போம்; இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” எனும் முழக்கத்தை முன் வைத்து திருவான்மியூர் தெப்பக்குள மைதானத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாடு 4.6.2017அன்று மாலை 5 மணியளவில் எழுச்சியுடன் தொடங்கியது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் – இந்த மாநாட்டை கழக தலைமைக் குழுவின் தீர்மானத்தை ஏற்று நடத்தியது. திருவான்மியூர் பகுதி முழுதும் கழகக் கொடிகள் ஏராளமாகக் கட்டப்பட்டிருந்தன. பெரியார்-அம்பேத்கர் படங்களோடு அமைக்கப்பட்டிருந்த மேடை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. நகரம் முழுதும் சுவரெழுத்துகள் எழுதப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. மாவட்ட செயலாளர் உமாபதி வழிகாட்டுதலில் 20க்கும் மேற்பட்ட கழக இளைஞர்கள் 15 நாள் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தனர். மாநாட்டு திடலில் நிரம்பி வழிந்த கூட்டத்துக்கு கழகத் தோழர்கள் நடத்திய துண்டறிக்கை பரப்புரைகளும் விளம்பரங்களுமே பெரிதும் காரணம். காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் புரட்சிகர பறை இசை, பாடல், நடனம், நாடகம் மாநாட்டுக்கு உணர்வூட்டின. கலை...

மாநாட்டுக்கு உழைத்த தோழர்கள்

மாநாட்டுக்கான சுவர் எழுத்தை நகரின் பல்வேறு பகுதிகளில் விழுப்புரம் அய்யனார் எழுதினார். அவருக்கு உறுதுணையாக சுண்ணாம்பு அடித்தல் உள்ளிட்ட பொறுப்புகளையும் வெளியூர் தோழர்களுக்கான 4 வேளை உணவு தயாரிப்பு வேலைகளையும் ஏற்று செயல்பட்டவர் ஆ.வ. வேலு. தோழர் களை ஒருங்கிணைத்து மாவட்ட தலைவர் வேழவேந்தன் செயல் பட்டார். மாவட்ட செயலாளர் இரா.உமாபதி மாநாட்டு பொறுப்புகளை முழுமையாக ஏற்று தோழர்களை வழி நடத்தினார். 15 நாள்களாக நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி, கடை கடையாக ரூ.10, 20 என்று சிறு சிறு தொகையை ஏழை எளிய மக்களிடம் நன்கொடை பெற்று, அவர்கள் கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கமளித்து, களப் பணியாற்றிய தோழர்கள் விவரம்: வில்லிவாக்கம் செந்தில், ந. விவேக், தேன்ராஜ், அருண், பிரபாகரன், ஏசுகுமார், ராஜி, சங்கீதா, இரண்யா, கலைமதி, இளையசிம்மன், இலட்சுமணன், ஜெயபிரகாஷ், பெரியார் யுவராஜ், தமிழ். அனைவரும் மாநாட்டு மேடையில் பாராட்டப் பெற்றனர். பெரியார் முழக்கம் 08062017 இதழ்

பா.ஜ.க.வின் பார்ப்பனிய ஒற்றைப் பண்பாட்டுத் திணிப்பை முறியடிக்க – கழக மாநாடு அறைகூவல்

4-6-2017 ஞாயிறு அன்று சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற ‘தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு’ மாநாட்டில் நிறை வுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாநாட்டுத் தீர்மானங்களை முன் மொழிந்தார்.  தீர்மானங்கள் விவரம்: 1)            1938ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டுப் பள்ளி களில் இராஜகோபாலாச்சாரி கட்டாயமாக இந்தி மொழிப் பாடத்தைத் திணித்தபோது, ‘பெரியார் தலைமையில் தமிழறிஞர்களும் இணைந்துப் போராடி, இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்தியது தமிழ்நாடு ஆகும். 1965 ஆம் ஆண்டிலிருந்து அலுவல் மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறிய நிலையிலும் தமிழ் நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று 1968இல் இருமொழித் திட்டத்தை அறிவித்த நாடு தமிழ்நாடு. 1963ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டம் இந்தியை அலுவல் மொழி என்று அறிவித்த நிலையிலும் அந்த சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று 1976ஆம் ஆண்டு நடுவண் அரசின் அலுவல் மொழி விதிகளே ஏற்றுக் கொண்டது என்பது வரலாறு. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்திக்கு...

இந்தி எழுத்துகளை அழித்துப் போராட்டம்: தோழர்கள் கைது

2017 ஜூன் 4ஆம் தேதி திருவான்மியூரில் கழக மாநாடு நிறைவடைந்தது. அடுத்த நாள் 5ஆம் தேதி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசு அலவலகங்களில் பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட் டத்துக்கு தோழர்கள் தயாரானார்கள். வெளியூர்களிலிருந்து மாநாட்டுக்கு வந்த தோழர்கள் மாநாடு முடிந்து மூன்று திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அனைவரும் தனி வாகனங்களில் சாஸ்திரி பவன் எதிரே அழைத்து வரப் பட்டனர். பெண்கள் உள்ளிட்ட 200 தோழர்கள் காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய ஏராளமான தட்டிகளை கரங்களில் ஏந்தி இந்திப் பண்பாட்டுத் திணிப்பு மத்திய அரசின் பார்ப்பன ஒற்றைக் கலாச்சாரத் திணிப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மாநில அமைப்புச் செய லாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி மற்றும் நாமக்கல், சேலம், விழுப்புரம், திருப்பூர், கன்யாகுமரி, நாகை,...

ஈரோட்டில் மாட்டிறைச்சி உணவுடன் கழகக் கூட்டம்

ஈரோட்டில் மாட்டிறைச்சி உணவுடன் கழகக் கூட்டம்

பா.ஜ.க. மோடி பாசிச அரசின், மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை செய்த சட்டத்தைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக கண்டனக் கூட்டம் 28 .05.2017 அன்று, ஈரோடு சேனாதிபதி பாளையத்தில் மாலை 6 மணியளவில் நடந்தது. ரங்கம்பாளையம் கிருஷ்ணன் தலைமையேற்க, கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிவா சடையன் (திருச்செங்கோடு) செல்லப்பன் (மாவட்டத் தலைவர் ஈரோடு தெற்கு) சாமிநாதன் (நாமக்கல் மாவட்டத் தலைவர்) சரவணன் (நாமக்கல் மாவட்டச் செயலாளர்)  வெங்கட்,  ப.இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்) ஆகியோர் கண்டன உரையாற்ற வீரா கார்த்திக் (அறிவியல் மன்றம்) நிறைவுரையாற்ற, கமலக்கண்ணன் நன்றியுரையுடன் முடிந்தது. பங்கு பெற்றோர் சித்தோடு பிரபு , பிரபாகரன், யாழ் எழிலன், சென்னிமலை இசைக்கதிர்,  இனியன், பாரதி, சத்தியராஜ், திருமுருகன், மணிமேகலை, புனிதா, பேபி, மோகன் (புலி) பாண்டியன் (சுயமரியாதை சமத்துவக் கழகம்) இளங்கோ, தமிழ்செல்வன், மாதேஷ், கவிப்பிரியா, சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் மாட்டுக்கறி...

மதுரையில் ஜாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம், கைது!

மதுரையில் ஜாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம், கைது!

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 23.05.2017 அன்று ஆணவப் படுகொலைத் தடைச் சட்டம் இயற்றகோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பேரையூர் சுகன்யாவை பெற்றோரே எரித்து கொலை செய்ததை கண்டித்தும், தலைமறைவாகியுள்ள கொலைகாரன் சுகன்யாவின் தம்பியை கைது செய்ய கோரியும், ஆணவ படுகொலை தடைச் சட்டத்தை இயற்றாமல் காலங்கடத்தும் தமிழக அரசைக் கண்டித்தும் மதுரை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 23.05.2017 காலை மதுரை,தலைமை தபால் நிலையம் முற்றுகை இடப்பட்டது. முற்றுகையில் ஈடுபட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட் டார்கள். இதில் ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் கபீர் நகர் கார்த்தி, வன வேங்கைகள் பேரவை பொதுச்செயலாளர் இரணியன், கழகத் தோழர்கள் காமாட்சி பாண்டியன், மாப்பிள்ளை சாமி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 08062017 இதழ்

இந்தி அழிப்புப் போராட்டம் சென்னை 05062017

திராவிடர் விடுதலைக் கழகம் 05062017 காலை 10.30 மணியளவில் சாஸ்திரி பவனில் இந்தி அழிப்புப் போராட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் 130 பேர் இவ்வழிப்பு போராட்டத்தில் கலந்து கைதானார்கள். மேலும் செய்திகள் விரைவில்

தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு சென்னை 04062017

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து – நடராசன் நினைவு அரங்கத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு” 04062017 மாலை திருவான்மியூர் தெப்பக் குளம் அருகில் நடைபெற்றது

அய்.அய்.டி மாணவர் சூரஜ் சந்தித்து கழகத் தலைவர், பொதுச்செயலாளர் ஆறுதல் சென்னை 03062017

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, துணைப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் மதிமாறன், கழக வழக்குறைஞர் அருண், சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஐஐடி மாணவர் சூரஜ்யை 03062017 அன்று இரவு 8.30 மணியளவில் பார்த்துவிட்டு தலைமை அலுவலகம் திரும்பினார்கள். அவரின் உறவினர்கள் ராஜகோபால், வாசுதேவன் தலைவரிடமும் பொதுச் செயலாளரிடமும் ஆர்வமாக தமிழகத்தின் ஆதரவை மற்றும் கேரள முதலமைச்சர், திமுக செயல் தலைவர், தமிழக காங்கிரஸ் தலைவர், மதிமுக பொதுச் செயலாளர் மற்றும் மாணவர்கள் எப்படி இதை பார்க்கிறார்கள் என்பதை விளக்கினர். செய்தி குகன்

சங்கரன்கோவிலில் ‘நிமிர்வோம்’ அறிமுகக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய நூல் அறிமுக விழா கடந்த  மே 14 அன்று  அபர்ணாதேவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக பரப்புரை செயலர் பால்.பிரபாகரன் தலைமை வகித்தார் .நெல்லை மாவட்ட தலைவர் பால்வண்ணன் முன்னிலை ஏற்றார். ஒருங்கிணைப்பு செய்த சங்கரன்கோவில் வே.இராமசாமியின் நோக்க உரையுடன்  நிகழ்ச்சி தொடங்கியது . சங்கை பெரியார் தொண்டர் பா.சதாசிவம் வரவேற்புரை நல்கினார் “பெரியார் இன்றும் என்றும்,” அண்ணல் அம்பேத்கரின் “நான் ஓர்  இந்துவாக சாக மாட்டேன்” கழக மாத இதழான ‘நிமிர்வோம்’ ஆகிய நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன . ‘நிமிர்வோம்’ இதழ்கள் குறித்து மதுரை மா.பா மணிஅமுதனும், அம்பேத்கரின் “நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்” நூல்குறித்து ‘தலித்முரசு’ ஆசிரியர் புனிதப்பாண்டியனும் கழகத்  தலைவர் கொளத்தூர் மணி “பெரியார் இன்றும் என்றும்” நூல் பற்றியும் உரையாற்றினர் . பால்.பிரபாகரன் தலைமை உரை ஆற்றினார். ஆதித்தமிழர் பேரவையின் தென்னரசு, முள்ளிக்குளம்...

சமூக செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டமா? கழகம் கடும் கண்டனம்

சமூக செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டமா? கழகம் கடும் கண்டனம்

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத் தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்த சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட இளைஞர்களை காவல்துறை கைது செய்தது. 17 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டனர். இப்போது திருமுருகன் காந்தி (மே 17) தமிழர் விடியல் கட்சியைச் சார்ந்த இளமாறன், டைசன் மற்றும் அருண் (காஞ்சி மக்கள் மன்றம்) ஆகியோர் மீது பா.ஜ.க.வின் கொத்தடிமையாக தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் அ.இ.அ.தி.மு.க ஆட்சி குண்டர் சட்டத்தை ஏவி விட்டிருக்கிறது. பிழைப்பு அரசியல் நடத்தி கோடிகோடியாக கொள்ளை அடிக்கும் ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு , சமூக மக்களுக்காக – இனத்துக்காகப் போராடும் செயல் பாட்டாளர்களை சமூக விரோதிகளாக சித்தரித்து குண்டர் சட்டத்தை ஏவுவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது. பெரியார் முழக்கம் 01062017 இதழ்

ஜூன் 4ஆம் தேதி கழக மாநாட்டில் நீதிபதி அரி பரந்தாமன் சிறப்புரையாற்றுகிறார்

ஜூன் 4ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருவான்மியூர் தெப்பக்குளம் மைதானத்தில் தாளமுத்து – நடராசன் நினைவு அரங்கில் தமிழர் பண்பாட்டுக்கு எதிரான இந்தித் திணிப்பு – நடுவண் அரசின் உரிமை பறிப்புகளைக் கண்டிக்கும் மாநாடு பிற்பகல் 4 மணி அளவில் காஞ்சி மக்கள் மன்றம் வழங்கும் பறையிசை, புரட்சிக்கர கலை நிகழ்வுகளுடன் தொடங்குகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாநாட்டுக்கு தலைமை தாங்குகிறார். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரி. பரந்தாமன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், போசிரியர் சரசுவதி, அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன், வழக்கறிஞர் திருமூர்த்தி, துரை. அருண், ஆசிரியர் சிவகாமி, காஞ்சி மக்கள் மன்றத் தோழர் மகேசு, கு. அன்பு தனைசேகர், தபசி. குமரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். பெரியார் முழக்கம் 01062017 இதழ்

பல்லாயிரக்கணக்கான மக்களிடம் துண்டறிக்கை; நிதி திரட்டல்; சென்னையை கலக்குகிறார்கள் கழக செயல் வீரர்கள்

பல்லாயிரக்கணக்கான மக்களிடம் துண்டறிக்கை; நிதி திரட்டல்; சென்னையை கலக்குகிறார்கள் கழக செயல் வீரர்கள்

ஜூன் 4ஆம் தேதி சென்னையில் தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடும், ஜூன் 5ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்களில் இந்திப் பெயர் அழிப்புப் போராட்டமும் நடைபெற இருக்கிறது. சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் நிகழ்ச்சியின் வெற்றிக்கு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த 10 நாள்களாக கழகத் தோழர்கள் 15 பேர் முதல் 20 பேர் கொண்ட குழு, கழகக் கொடி, கருப்புச் சட்டையுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் பொது மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கி, நன்கொடைகளை திரட்டி வரு கிறார்கள். திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, எம்.ஜி.ஆர். நகர், புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, இராயப்பேட்டை பகுதிகளில் மாலையில் தொடங்கி, இரவு வரை ஒவ்வொரு கடையாக இந்த வசூல் பணி நடந்தது. தோழர்களிடம் பொது மக்கள் பல்வேறு  கேள்விகளை எழுப்புகிறார்கள். தோழர்கள் இந்த கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை பொறுமையாக அளித்து வருகிறார்கள். சனி, ஞாயிறு நாள்களில் காலையிலும் வசூல் பணிகள் நடந்தன. பார்ப்பனக்...

காந்தி படுகொலையில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள்

காந்தி படுகொலையில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள்

காந்தி கொலையில் இன்னும் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. இது குறித்து ஏற்கனவே 1966ஆம் ஆண்டு மத்திய அரசு நியமித்த ஜெ.எல்.கபூர் விசாரணை ஆணையம், சதியைப் பற்றி முழுமையாக ஆராயவில்லை. எனவே காந்தி கொலை பற்றிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ‘அபினவ் பாரத்’ என்ற அமைப்பைச் சார்ந்த டாக்டர் பங்கஜ் ஃபாண்டிங் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இவர் ஒரு ஆய்வாளர். காந்தியார் உடலில் பாய்ந்தது மூன்று குண்டுகள் மட்டுமே என்ற அடிப்படையில் போலீஸ் விசாரணை நடத்தி நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுக்கு உள்ளான சாவர்க்கார்  போதுமான சாட்சியம் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டார். “காந்தியின் உடலில் மொத்தம் 4 குண்டுகள் பாய்ந்துள்ளன. இதில் 3 குண்டுகள் கோட்சேயின் துப்பாக்கியிலிருந்து வெடித்தவை. நான்காவது குண்டு கோட்சே துப்பாக்கியில் இருந்த குண்டின் வகையைச் சார்ந்தது...

பெங்களூரூவில் 30 தலித் அமைப்புகள் இணைந்து நடத்திய அம்பேத்கர் பிறந்த நாள்

பெங்களூரூவில் 30 தலித் அமைப்புகள் இணைந்து நடத்திய அம்பேத்கர் பிறந்த நாள்

27.5.2017 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில், பெங்களூரு ஸ்ரீராம்புரத்தில் தலித் புலிகள் கூட்டமைப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 126ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் கானா பாடகர் உலகநாதனின் இசை நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தலித் சிறுத்தைகள் கட்சியின் தலித் நாகராஜ், மனித உரிமைப் போராளி முனைவர் ரூத் மனோரமா, பகுஜன் சமூக நிறுவனத்தின் தேசிய செயலாளர் கோபால் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமா வளவன், இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும், புரட்சியாளர் அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர்ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் பல்வேறு தலித் அமைப்புகளின் தலைவர்கள் பாராட்டப்பட்டனர். பெரியார் முழக்கம் 01062017 இதழ்

பெரியார் பேசிய பகுத்தறிவு – மேற்கத்திய இறக்குமதி அல்ல!

பெரியார் பேசிய பகுத்தறிவு – மேற்கத்திய இறக்குமதி அல்ல!

மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (சென்ற இதழ் தொடர்ச்சி) சுயமரியாதை, பகுத்தறிவு, மானம், அறிவு ஆகிய பெரியாரின் சொல்லாடல்களை எவ்வாறு புரிந்து கொள்வது? குறிப்பாக, பெரியாரின் பகுத்தறிவு வாதம் நவீன ஐரோப்பாவின் அறிவு வாதம் (ரேசனலிசம்) போன்றதா? பெரியாருடைய சுயமரியாதை, பகுத்தறிவு, மானம் அல்லது தன்மானம், அறிவு முதலான கருத்துகள் மேற்கத்திய ரேசனலிச (மேல் நாட்டு பகுத்தறிவு வாதம்) சாயல் கொண்ட கருத்துகள் போலத் தோற்றம் அளிக்கும். ஆனால், பெரியார் மேற்கத்திய பகுத்தறிவு வாதங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்து, ஓர் அறிவுத்தளத்தில் நின்று அவற்றைக் கையாண்டார் என்பது மாதிரியெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அவரிடம் ஓர் உள்ளூர் தன்மை உண்டு. அதாவது இங்குள்ள சமூக-பொருளாதார-பண்பாட்டு-அரசியல் தளங்களில் நின்று இந்தச் சொற்களை உருவாக்கினார் போலத் தெரிகின்றது. காங்கிரஸ்காரர்கள் சுயராஜ்யம் என்று...

கொள்கை-கொண்டாட்டம்-சுற்றுலா என குழந்தைகளுக்கு உணர்வூட்டிய பெங்களூரு பழகு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் ஐந்தாவது ஆண்டாக நடத்திய குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் – 2017 இம் முறை பெங்களூருவில் நடத்தப் பட்டது. தமிழ்நாட்டில் சென்னை, மயிலாடுதுறை, பேராவூரணி, சேலம், மேட்டூர், ஈரோடு, திருப்பூர், கோவை, ஆகிய மாவட்டங்களில் இருந்து 60 குழந்தைகளும் பெங்களூருவில் 4 குழந்தைகளுமாக 64 பேர் கலந்துகொண்டனர்.  14 பேர் நெறி யாளர்களாக இருந்து முகாமை நெறிப்படுத்தினர். 12.5.2017 வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு பெங்களூர் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் குழந்தைகள் நெறியாளர்கள் அனைவரும் பெங்களூரு புறப்பட்டனர். குழந்தைகளை தொடர் வண்டி நிலையத்திலிருந்து பயிற்சி நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சொகுசுப் பேருந்துடன் பெங்களூருவில் தோழர்கள் காத்திருந்தனர். இரவு 10.00 மணியளவில் முகாம் நடக்கும் ஐஎஸ்ஐ பயிற்சி மையத்தை அடைந்தனர். 13.5.2017 முதல் நாள் முதல் நாள் தொடக்க விழாவுடன் முகாம் தொடங்கியது. முகாமைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கியோர் ‘கற்பி, ஒன்று சேர்’ (Educate and...

உக்கம்பருத்திக்காட்டில் கழகத்தின் இரண்டு நாள் பெரியாரியல் பயிலரங்கம்

சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியம், காவலாண்டியூர் கிளை கழக சார்பில் 24, 25.05.2017 ஆகிய இரண்டு நாள்கள் கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு பெரியார் படிப்பகத்தில் பெரியாரியல் பயிலரங்கம் நடைபெற்றது. இப்பயிலரங்கில் முதல்நாள் முதல் வகுப்பு “மதவாத அரசியல்” (முஸ்லிம், மாட்டுகறி, சமஸ்கிருதம்) எனும் தலைப்பில் பேராசிரியர் சுந்தரவள்ளி வகுப்பு எடுத்தார். மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு “பெரியாருக்கு முன்னும் பின்னும்; நீதிகட்சி சாதனைகள்” குறித்து புலவர் செந்தலை கவுதமன் வகுப்பு எடுத்தார். தேநீர் இடைவேளைக்கு பிறகு “தி.வி.க. உங்களிடம் எதிர்பார்ப்பது” எனும் தலைப்பில் விடுதலை இராசேந்திரன், “இடஒதுக்கீடு – ஓர் அறிமுகம்” எனும் தலைப்பில் பால்.பிரபாகரன் ஆகியோர் வகுப்பு எடுத்தனர். இரவு 8.30 மணிக்கு முதல் நாள் வகுப்பு முடிவுற்றது. இரவு உணவுக்கு பின் குறும்படங்கள் திரையிடப்பட்டன. 25.5.17 அன்று காலை “உலகின் தோற்றம் உயிர்களின் தோற்றம்” குறித்து மருத்துவர் எழிலன் வகுப்பு எடுத்தார். தொடர்ந்து “ஜாதி தோற்றம், இருப்பு, ஒழிப்பு” எனும்...

இராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்? கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

பசுவதை தடைச்சட்டம் இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்படவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மோடி ஆட்சிக்கு பிறப்பித்த ஆணையை அப்படியே ஏற்று மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமலேயே மத்திய அரசு சுற்றுச் சூழல் துறை வழியாக சந்தைகளில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை போட்டு விட்டது. பசுமாடு மட்டுமல்ல; காளை, எருமை, கன்றுக்குட்டி, ஒட்டகம் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் இறைச்சிக்காக இனி சந்தைகளில் இந்தியா முழுவதும் விற்கக் கூடாதாம். சந்தைகளில் கால்நடைகளை விற்றால் விவசாயிகள் இறைச்சிக்காக விற்க வில்லை என்று எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி தரவேண்டுமாம். வாங்குவோர் விற்போர் இருவரும் நிலத்தின் உரிமைப்பத்திரம், விவசாயி என்பதற்கான அடையாள சான்று உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டுமாம். அப்படி வாங்கிய கால்நடைகளையும் அடுத்த 6 மாதத்திற்கு வேறு எவருக்கும் விற்கக்கூடாதாம். இப்படிக் கூறுகிறது மோடி ஆட்சியின் சட்டம். இனி ஒவ்வொரு வீட்டிலும் இறைச்சி சமைத்தால் சமைத்த உணவை கண்காணிப்புக் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தி சமைக்கப்பட்டது...

மாட்டுக்கறிக்கு எதிரான முற்றுகைப் போர் நாமக்கல் 31052017

மாட்டுக்கறி விற்பனைக்கு தடைவிதித்த பாஜக அரசைக் கண்டித்து, மாவட்ட அமைப்பாளர் வைரவேல் தலைமையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சார்பில் திருச்செங்கோடு ஸ்டேட் பாங்க்கை முற்றுகையிட்டு போராட்டம். 21 பேர் கைது.

மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தஞ்சாவூர் 01062017

தஞ்சையில் ஜுன் 12ல் காவிரி நீரை பெற்றுத் தந்து மத்திய அரசிடம் வாழ வழி கேட்டு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர்,பனகல் பில்டிங் அருகில்,ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் தோழர் பழ.நெடுமாறன் அவர்கள் துவங்கி வைத்தார். ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். போராட்டத்தின் துவக்க நாளான நேற்று 01.06.2017 அன்று கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன், S.D.P.I. தலைவர் தோழர் தெஹலான் பாகவி,தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் சி.முருகேசன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி, ஒருங்கிணைப்புக்குழு கவுரவ தலைவர்...