ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் 18062017

10 நாட்கள் தொடர் தெருமுனைக் கூட்டங்கள்..

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் சூரம்பட்டி வலசு பெரியார் JCB பணிமனையில் இன்று மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.இரத்தினசாமி முன்னிலையில் நடைபெற்றது..

24.6.17 முதல் 3.7.17 முடிய பத்து நாட்கள் தொடர்ச்சியாக, தினமும் இரண்டு இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி,

24.6.17 – லோகநாதபுரம்,மோளக்கவுண்டன் பாளையம்

25.6.17 – வைராபாளையம், லட்சுமி தியேட்டர்

26.6.17 – சாஸ்திரி நகர், வாய்க்கால் மேடு

27.6.17 -சூரம்பட்டி வலசு, சூரம்பட்டி போலிஸ் ஸ்டேசன்

28.6.17 – மரப்பாலம், கோணவாய்க்கால்

29.6.17 – பச்சப்பாளி, கொல்லம்பாளையம்

30.6.17 – கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம்

1.7.17 – ஆர்.என் புதூர், சி.எம் நகர்

2.7.17 – சூளை, கனிராவுத்தர் குளம்

3.7.17 – வளையக்கார வீதி, சின்னமாரியம்மன் கோவில்..

பேச்சாளராக தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர். கோபி வேலுச்சாமி மற்றும் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிக்கு காவை இளவரசு மற்றும் ஆத்தூர் மகேந்திரன் ஆகியோரை அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கலந்துரையாடலில், சண்முகப்பிரியன், கிருஷ்ணமூர்த்தி, சசி, இசைக்கதிர், சின்னதம்பி, சத்யராஜ், முத்துப்பாண்டி, சரவணன், ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்..

செய்தி ஆசிரியர் சிவக்குமார்

whatsapp-image-2017-06-18-at-16-10-52

You may also like...