தாக்கப்பட்ட அய்.அய்.டி. மாணவரை கழகத் தலைவர் நலம் விசாரித்தார்

சென்னை ‘அய்.அய்.டி.’ நிறுவனம் பார்ப்பனக் கோட்டையாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தைச் சார்ந்த பிஎச்.டி. ஆய்வுப் பட்டத்துக்கு தயாராகும் மாணவர் சூரஜ் – வளாகத்தில் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து 80 அய்.அய்.டி. மாணவர்களை ஒன்று கூட்டி மாட்டிறைச்சி விருந்து நடத்தினார். அடுத்த நாள் விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சூரஜ்ஜை – ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பைச் சார்ந்தவர்கள் மூர்க்கத்தனமாக கொலைவெறி தாக்குதல் நடத்தினர். வானகரம் அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை, கடந்த ஜூன் 3ஆம் தேதி இரவு 8 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சந்தித்து நலம் விசாரித்தனர். தபசி. குமரன், வேழவேந்தன், வழக்கறிஞர் துரை அருண், குகன், வே. மதிமாறன் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

18813849_133773497174732_3284186389306875655_n 18836088_133773557174726_4748730882876006236_n 18813552_133773530508062_8984827392048633633_n

பெரியார் முழக்கம் 15062017 இதழ்

You may also like...