Author: admin

ஏப்.30 தொடங்கி மே 14 வரை 11 மண்டல மாநாடுகள் :  400 தெருமுனைக் கூட்டங்கள் கழக செயலவை முடிவு

ஏப்.30 தொடங்கி மே 14 வரை 11 மண்டல மாநாடுகள் : 400 தெருமுனைக் கூட்டங்கள் கழக செயலவை முடிவு

தமிழ்நாட்டின் பறிக்கப்படும் உரிமைகள், ஒன்றிய ஆட்சியின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கை; மறுக்கப்படும் ‘நீட்’ விலக்குச் சட்டம்; திணிக்கப்படும் மதவெறி; அதற்கு கருவிகளாகப் பயன்படும் மக்களின் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை விளக்கி ‘திராவிடன் மாடல்’ அதுவே நமக்கான அடையாளம் என்பதை விளக்கி, 11 மண்டல மாநாடுகளையும் மாவட்டத்துக்கு குறைந்தது 15 தெருமுனைக் கூட்டங்களையும் நடத்த திவிக செயலவை முடிவு செய்துள்ளது. பெரியார் முழக்கம் 07042022 இதழ்

செயலவை உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூ. 1000/- நன்கொடை திட்டம்

செயலவை உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூ. 1000/- நன்கொடை திட்டம்

தி.வி.க. செயலவை உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூ.1000/- நன்கொடை வழங்குவது என்று செயலவையில் முடிவெடுக்கப்பட்டது. செயலவை உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கியதோடு மூன்று பேர் உடனடியாக நன்கொடையையும் வழங்கிவிட்டனர். இது தவிர கழகத்தின் முழு நேர செயல்பாட்டாளர்களை நியமிக்கும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டது. இதற்கான செலவை தோழர்கள் பகிர்ந்து கொள்ள முன் வந்தனர். அதன்படி தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், ஆசிரியர் சிவகாமி, இராம இளங்கோவன், நாத்திகஜோதி (ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர்), சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சேலம் டேவிட் ஆகியோர் முழு நேரப் பணியாளர் நியமன திட்டத்துக்கு மாதம் ரூ.1000/- வீதம், வருடத்துக்கு ரூ.12,000/- வழங்குவதாக அறிவித்தனர். திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு, காவை ஈசுவரன் முழுநேரப் பணியாளர் திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.6000/- வழங்குவதாக அறிவித்தனர். நாமக்கல் மாவட்டக் கழக சார்பில் மூன்று செயலவை உறுப்பினர்கள், செயலவை உறுப்பினருக்கான கட்டணமாக ரூ.1000 செலுத்துவதாகவும், முழு நேரப் பணியாளர் திட்டத்துக்கு...

மு.மீனாட்சி சுந்தரம் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு

மு.மீனாட்சி சுந்தரம் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு

தமிழ்நாட்டரசின் 2022 திருவள்ளுவர் விருதாளரும் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், அனைத்து இந்திய தமிழ்ச் சங்க பேரமைப்பின் தலைவரும், திராவிடர் கழகத்தின் மூத்த  கருஞ்சட்டைத்  தோழருமான மு.மீனாட்சி சுந்தரம் (முத்து செல்வன்) நினைவேந்தல் நிகழ்வு 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் பெங்களூர் தமிழ்ச் சங்க திருவள்ளுவர் அரங்கத்தில், பெங்களூர் தமிழ்ச் சங்கம்  நடத்தியது. இந்நினைவேந்தல் நிகழ்வுக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.கோ. தாமோதரன் தலைமை தாங்கினார்.  திராவிடர்  விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மீனாட்சி சுந்தரத்தின் (முத்து செல்வன்) உருவப் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.  நிகழ்வில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் சானகிராமன், க.த.ம.இ. தலைவர் சி. இராசன்,  பெரியாரிய பொதுவுடமை இயக்கத்தின் அமைப்பாளர் கி.சு. இளங்கோவன், கருநாடக திமுக அமைப்பாளர் இராமசுவாமி, உ.த.க. தலைவர் மதலைமணி, மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் பிரான்சிஸ்,...

செயலவையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா தொகையாக வரவு ரூ. 1,12,950/-

செயலவையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா தொகையாக வரவு ரூ. 1,12,950/-

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்காக ‘சந்தா’ கணக்குகளை முடித்து, கோவை, ஈரோடு (தெற்கு), மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, நாமக்கல், தென்காசி, தர்மபுரி, திருப்பூர், பேராவூரணி, நெல்லை, தோழர்கள் ஏற்கனவே தரவேண்டிய தொகை மற்றும் புதிய சந்தாக்கள் முகவரி இதழ்களின் தொகையைச் சேர்த்து ரூ.1,12,950/-ஐ செயலவையில் வழங்கினர். மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் மகாலிங்கம், தனது பேரனின் ஜாதி மறுப்பு திருமண மகிழ்வாக ரூ.1000/- நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் 07042022 இதழ்

இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்?

இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்?

கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது இலங்கைப் பொருளாதாரம். இப்போதைய நெருக்கடிக்குக் காரணங்கள் என்ன, இத்தகு நிலையை நோக்கி அதைத் தள்ளியவர்கள் யார்? இதையெல்லாம் அடையாளம் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம். 21ஆம் நூற்றாண்டில்கூட இலங்கையின் பொருளாதார எதிர்காலம் தேயிலை, ரப்பர், ஏலம், மிளகு உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள், ஆடைகள் ஆகியவற்றின் ஏற்றுமதியைச் சுற்றியே தொடர்ந்து பிணைந்திருக்கிறது. தேயிலை – ரப்பர் போன்ற பிரதான பொருள்களின் ஏற்றுமதி, சுற்றுலா மூலம் கிடைத்த வருமானம், வெளிநாடுவாழ் இலங்கையர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பிவைத்த வருமானம் ஆகியவற்றின் மூலமே அது தனக்குத் தேவைப்பட்ட அன்னியச் செலாவணியைப் பெற்றுவந்தது. அந்த அன்னியச் செலாவணியைக் கொண்டுதான் உணவு தானியம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்துகொண்டது. இருபத்தாறு ஆண்டுகள் ஈழத் தமிழர்களின் உரிமைப் போர் 2009இல் இராணுவ ஒடுக்குமுறையில் முடிவுக்கு வந்ததும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. 2013-க்குப் பிறகு உலக அளவில், பண்டங்களுக்கான சந்தை...

ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் நாய் வாலை வெட்டி, ‘நாய்க்கு’ சூப் தயாரிக்கும் ஒன்றிய ஆட்சி

ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் நாய் வாலை வெட்டி, ‘நாய்க்கு’ சூப் தயாரிக்கும் ஒன்றிய ஆட்சி

மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களுக்கான செலவுகளை மக்களிடமிருந்தே வரியாக வாரிச் சுருட்டும் மோடி ஆட்சி. ‘கோடீஸ்வரர்கள்’ மேலும் கொழுக்க வரிச் சலுகை வாரி வழங்கி, அவர்களை ‘இந்துத்துவா’வுக்குப் பா.ஜ.க. வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதை ப. சிதம்பரம் விளக்குகிறார். வரிகள், நல்வாழ்வு, தேர்தல் வெற்றி ஆகிய மூன்றையும் ஒரே புள்ளியில் இணைக்க வழி கண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சூழ்ச்சித் திறனை நாம் பாராட்டியே தீர வேண்டும். தேர்தல் நிதி நன்கொடைப் பத்திரம், சலுகைசார் முதலாளித் துவம், ஊழல் ஆகிய மூன்றையும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான புதிய முறை என்கிற திட்டத்தின் மூலம் இணைத்து, இதில் எந்தச் சட்ட விரோதமும் இல்லை எனும் மாயை உருவாக்கியதைப் போலவேதான் முன்னதிலும் செய்திருக்கிறது. முதல் மூன்று அம்சங்களுக்கு மீண்டும் வரு வோம். வரிகள், நல்வாழ்வு, வாக்குகள் பற்றியது அது. 2019 மக்களவை பொதுத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள், பொருளாதார அடித்தளக் கட்டமைப்பில்...

‘இந்து’ ஏட்டின் கட்டுரை கடவுள்களும் காம்ரேட்களும்

‘இந்து’ ஏட்டின் கட்டுரை கடவுள்களும் காம்ரேட்களும்

இந்து கோவில் திருவிழாக்களில் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கத்தை முறியடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் இனி அத்தகைய விழாக்களில் பங்கேற்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சி.பி.அய்.எம் தமிழ் மாநில செயலாளர்  பாலகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் கூறினார். திராவிடர் விடுதலைக் கழகமும், திராவிடர் கழகமும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரினர். நோக்கம் சிறந்தது என்றாலும் இந்த செயல் மார்க்சிய தத்துவத்திற்கு முரணானதாக உள்ளது என்று திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டியதோடு, இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வலிமை சேர்க்கும் என்று கருத்து தெரிவித்தார். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநாட்டிற்குப் பிறகு செய்தி யாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், ‘கோவில் வழிபாடு, பூஜை, சடங்குகளில் மார்க்சிஸ்ட் கட்சியினர் நேரடியாக பங்கேற்க மாட்டார்கள்’ என்றும், “கட்சியினுடைய ஆதரவாளர்கள் கோவில் நிர்வாகங்களில் பங்கேற்று, நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள். கோவிலுக்கு வெளியே நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளில் மதச்சார்பின்மை கொள்கையை வலியுறுத்தி...

துப்பாக்கி ‘ரவை’களை ஜேம்ஸ்வாட் கனவில்தான் கண்டுபிடித்தாரா? எட்வின் பிரபாகரன்

துப்பாக்கி ‘ரவை’களை ஜேம்ஸ்வாட் கனவில்தான் கண்டுபிடித்தாரா? எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதியின் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (2) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடு கிறோம். புதிர் 3: கனவுகள், அறிவியல் கண்டு பிடிப்புகளின் அடிப்படையாக இருந் துள்ளன. Benzene மூலக்கூற்றின் வடிவத்தை ஃப்ரடரிக் வோன் தன் கனவிலேயே முதலில் கண்டார். நரம்பு அதிர்வுகள் மின்சக்தியாக கடத்தப்பட வில்லை; ரசாயன மாற்றங்களாகத் தான் கடத்தப்படுகின்றன என்று ஓட்டோ லூயி கண்டுபிடித்ததும் கனவில் தான். தையல் இயந்திரத் தின் வடிவமைப்பு, எலியஸ் ஹோவேயின் கனவில் தான் முதலில் வந்தது. துப்பாக்கி ரவை செய்யும் தொழில் நுட்பத்தை ஜேம்ஸ் வாட் கனவாகக் கண்டார். இத்தகைய கனவு களுக்கு அறிவியலில் விளக்கம் இல்லை. விடை: உளவியல் ஆராய்ச்சியாளர் சிக்மண்ட் ஃபிராய்ட், “ஆழ்மனத்தின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாகவே கனவுகள் வருகின்றன” என்றார். தற்கால உளவியல் ஆராய்ச்சி யாளரான டெயர்ட்ரே பாரெட், மூளை...

தலையங்கம் செயலவை முடிவுகளை செயல்படுத்த, தயாராவோம்!

தலையங்கம் செயலவை முடிவுகளை செயல்படுத்த, தயாராவோம்!

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு மற்றும் செயலவைக் கூட்டங்கள் ஏப். 2, 3, 2022 தேதிகளில் ஈரோட்டில் சிறப்புடன் நடைபெற்றது. தமிழ்நாடு முழுதுமிருந்தும் கழகப் பொறுப்பாளர்கள் ஆர்வத்துடன் திரண்டிருந்தனர். தலைமைக் குழு கூட்டம் ஏப்.2ஆம் தேதி காலை 11 மணியளவில் ஈரோடு கொல்லம்பாளையம் ‘பிரியாணி பாளையம்’ அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. 16 தலைமைக் குழு உறுப்பினர்களில் 15 தோழர்கள் பங்கேற்றனர். கொரானா காலத்தில் இயக்கம் பொது வெளியில் செயல்பட முடியாத நிலையில் தொடர்ந்து இணையம் வழியாக நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. கொரானா ஓரளவு விடுபட்ட நிலையில் அடுத்தக்கட்ட செயல்பாடுகளை தீவிரமாக முன்னெடுப்பது குறித்தும் தமிழ்நாட்டில் மதவாத பார்ப்பன சக்திகள் காலூன்ற தீவிரமான முயற்சிகளில் ஒன்றிய ஆட்சியின் பணபலம் அதிகார பலத்துடன் களமிறங்கி செயல்படுவதையும் தலைமைக்குழு ஆழமாக விவாதித்தது. குறிப்பாக இந்தியாவிலேயே ‘திராவிடன் மாடல்’ என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி...

“நமக்கான அடையாளம் – திராவிடன் மாடல்” : மண்டல மாநாடுகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்

“நமக்கான அடையாளம் – திராவிடன் மாடல்” : மண்டல மாநாடுகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்

ஈரோடு தி.வி.க. செயலவை – மண்டல மாநாடுகளுக்கு கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. கழகத் தலைவர் செயலவையில் இதை அறிவித்தார். 30.04.2022 சனிக்கிழமை – சென்னை 02.05.2022 திங்கள் கிழமை – விழுப்புரம் 04.05.2022 புதன் கிழமை – மயிலாடுதுறை 06.05.2022 வெள்ளிகிழமை – தஞ்சாவூர் 06.05.2022 வெள்ளிக்கிழமை – சேலம் 07.05.2022 சனிக்கிழமை – திருச்சி 09.05.2022 திங்கள் கிழமை – ஈரோடு 10.05.2022 செவ்வாய் கிழமை – வேலூர் 11.05.2022 புதன் கிழமை – கோவை 13.05.2022 வெள்ளி கிழமை – மதுரை 14.05.2022 சனி கிழமை – தூத்துக்குடி மாநாட்டிற்கான பொறுப்பாளர்கள் : தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி : மாசிலாமணி, குறுப்பலாய்பேரி மதுரை, சிவகங்கை, தேனி :  மா.பா மணியமுதன் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் : மனோகரன், தாமோதரன் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை : சாக்கோட்டை இளங்கோ, பேராவூரணி திருவேங்கடம், பாரி மயிலாடுதுறை, நாகை, கடலூர் :...

திராவிடன் மாடல்: ஆரிய-திராவிடர் போராட்டத்தின் புதிய வடிவம்

திராவிடன் மாடல்: ஆரிய-திராவிடர் போராட்டத்தின் புதிய வடிவம்

இந்த நாட்டின் அரசியல், ஆரிய-திராவிடர் போராட்டமேயாகும் என்று பெரியார் சுட்டிக் காட்டினார். அதுவே ‘திராவிடன் மாடல்’, ஆர்.எஸ்.எஸ். மனுவாதத்துக்குமான போராட்டமாக பரிணமித்து இருக்கிறது என்பதை திராவிடர் விடுதலைக் கழகம் (தி.வி.க.) சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஏப்.2, 3 தேதிகளில் ஈரோட்டில் முறையே தி.வி.க. தலைமைக் குழுவும் செயலவையும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை யிலும் நடந்தது. இரண்டாம் நாள் (ஏப்.3, 2022) ஈரோடு  கே.கே.எஸ்.கே. மண்ட பத்தில் நடை பெற்ற செயலவைக் கூட்டத்தில் தீர்மானங்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்தார். 90 உறுப்பினர்களில் 86 பேர் பங்கேற்றனர். அதில் நிறைவேற்றப்பட்ட ‘திராவிடன் மாடல்’ குறித்த தீர்மானம்: திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினரும், கழகத்தின் செயல்வீரரும் எளிய முறையில் தோழர்களுடன் பழகி கழகக் கொள்கைகளை பரப்புவதில் முன்னின்று செயல்பட்ட மடத்துக்குளம் மோகன் மற்றும் பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனைகளை தனது புரட்சிகரமான...

கரூர்-க.பரமத்தியில் எழுச்சி நடைபோட்ட கழகக் கொடியேற்று விழா – கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

கரூர்-க.பரமத்தியில் எழுச்சி நடைபோட்ட கழகக் கொடியேற்று விழா – கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

22.03.2022 செவ்வாய்கிழமை கரூர் மாவட்டத்தில் கழகக் கொடியேற்று விழா தி.க.சண்முகம் தலைமையில் காலை 11.00 மணிக்கு துவங்கி மாலை வரை நடை பெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தென்னிலை சமத்துவபுரம், மலைச்சியூர் பிரிவு, சின்னதாராபுரம் பேருந்து நிலையம், அமராவதி ஆற்றுப் பாலம், டி.வெங்கிடாபுரம், இராஜபுரம் பிரிவு, அரவக்குறிச்சி பேருந்து நிலையம், தேர்வீதி, வட்டாட்சியர் அலுவலகம் அருகில், பள்ளபட்டி, அண்ணாநகர், தடா கோவில் ஆகிய 11 இடங்களில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். கொடியேற்று நிகழ்வில், தமிழன் சு.கவின்குமார், ராம்ஜி (எ) தொல் காப்பியன், இரா.காமராஜ், மலைக் கொழுந்தன், ந.முத்து மருதநாயகம், சிலம்பம் கொ.சரவணன், பெ.ரமேஷ், பெ.குமரேசன், ர.ராகவன், பிரசன்னா, தா.பெரியசாமி, நாகராஜ் அரவக் குறிச்சி ஆகிய தோழர்கள் உடனிருந்தனர். மாலை 06.00 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம், கழகத் தோழர் வடிவேல் இராமசாமி தலைமையில் நடை பெற்றது. பொதுக் கூட்டம் துவங்கும் முன்...

‘கடவுளே’ கோயில் கட்டினாலும் நீதிமன்றம் அகற்றும்!

‘கடவுளே’ கோயில் கட்டினாலும் நீதிமன்றம் அகற்றும்!

பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என்று குறிப்பிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும்’ என்றும் கருத்து தெரிவித்துள்ளது.  நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பலபட்டரை மாரியம்மன் கோயில் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம் மேற்கொண்டுள்ளதாகவும், அந்த கட்டுமானம் தங்கள் சொத்துக்கு செல்லும் வழியை தடுக்கும் வகையில் உள்ளதாகவும் கூறி பாப்பாயி என்பவர் நாமக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் கோயிலுக்கு எதிராக உத்தரவு வந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குறிப்பிட்ட பொது பாதையில் கோயில் நிர்வாகம் கட்டுமானங்களை கட்டியுள்ளது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டுமானங்களை கட்டக்கூடாது என்று பல வழக்குகளில் உத்தரவிடப்பட் டுள்ளது. பொதுசாலையை யார் ஆக்கிரமித்தாலும், அது...

எல்லையற்ற அதிகாரத்தால் பங்கு சந்தையை கொள்ளையடித்த ‘மனுவாத’க் கூட்டம்

எல்லையற்ற அதிகாரத்தால் பங்கு சந்தையை கொள்ளையடித்த ‘மனுவாத’க் கூட்டம்

தேசியப் பங்குச் சந்தை நிறுவன நிர்வாகம் குறித்த மிக முக்கியமான தகவல்களையும், நிறுவனத்தின் வணிகப் புள்ளி விவரங்களையும் ஒரு தனிநபரிடம் பகிர்ந்து கொண்ட பல மின்னஞ்சல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அவற்றில் பல ‘ரிக்யஜூர்சாம@அவுட்லுக். காம்’ என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப் பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுபற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த சித்ரா, ‘அவர் இமய மலையில் வசிக்கும் ஒரு யோகி. அவருக்கு உருவ மில்லை’ கோடியில் புரளும் பங்கு சந்தை வணிகம் ‘மனுதர்ம’ கும்பலிடம் சிக்கி அவர்களின் கொள்ளைக் கூடாரமாக மாறி இருக்கிறது. இப்போது சி.பி.அய். விசாரணை வளையத் துக்குள் அது வந்திருக்கிறது. கடந்த இதழில் வெளி வந்த தகவல்களை சுருக்கமாகத் தொடர்வோம். பங்கு சந்தையில் மோசடிகள் நடப்பதைக் கண்டறிந்த பிறகு மன்மோகன் நிதியமைச்சராக இருந்த போது தேசிய பங்கு சந்தை என்ற அமைப்பை உருவாக்கினார், இது தனியார் நிறுவனம். ‘செபி’ என்ற பங்கு சந்தையைக் கண்காணிக்கும் அரசு கண்காணிப்பு அமைப்பின் கீழ் இயங்கி...

திராவிடன் மாடலுக்கு கோட்பாடு இல்லையா?

திராவிடன் மாடலுக்கு கோட்பாடு இல்லையா?

முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழுரையில் மயங்குவதாகக் காட்ட முயற்சிக்கும் கட்டுரை ஒன்றை தமிழ் இந்து (பிப்ரவரி 21) நாளேடு, அரை உண்மைகள் குழப்பங்களுடன் ‘பட்ஜெட் விவாதம் திசை மாறலாமா’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. பொய்யை விட ஆபத்தானது அரை உண்மை. பாஜகவின் ‘குஜராத் மாடல்’, ஆம் ஆத்மியின் ‘டெல்லி மாடலுக்கு’ மாற்றாக “திராவிட மாடலை” முன்னிறுத்தும் திமுக, திராவிட மாடலுக்கான கோட்பாட்டை விவரிக்காமல் சமூக நலத்திட்டங்களை பட்டியலிடுவதாக குற்றம் சாட்டுகிறது கட்டுரை. குஜராத் மாடல் – பச்சை வகுப்புவாதம், தனியார்மயம். ஆம் ஆத்மி மாடல் என்பதோ தனக்கான எந்த மாடலுமே இல்லை என்ற மாடல். இதோடு திராவிட மாடலை சமன்படுத்துகிறது கட்டுரை. திராவிடன் மாடல் என்பது சமூக நலத்திட்டங்கள் மட்டுமே என்று கூறும் கட்டுரை தன்னுடைய கருத்தை தானே மறுக்கிறது. “தமிழ்நாட்டில் கூலிச் சமமின்மை, குறைந்துவரும் உயர்கல்வியின் தரம் பற்றி பேராசிரியர் கலையரசன் தனது திராவிடன் மாடல் நூலில் சுட்டிக்காட்டி இருப்பதை எடுத்துக்காட்டும்...

ரோஸ்மேரி – ஆவியுடன் பேசி, இசையமைத்தாரா? எட்வின் பிரபாகரன்

ரோஸ்மேரி – ஆவியுடன் பேசி, இசையமைத்தாரா? எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதியின் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (1) ‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம். சென்னை உச்சநீதிமன்ற பதவியிலிருந்த வெ. இராமசுப்பிரமணியம், பதவியில் இருக்கும் போதே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அறிவியலையே கேள்விக் குள்ளாக்கும் தொடர் கட்டுரை ஒன்றை ‘தினமணி’ நாளேட்டில் எழுதினார். பிறகு உச்சநீதிமன்றத்திலும் நீதிபதியாக இருக்கிறார். அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டிய சட்டக் கடமையி லிருந்து விலகி, ‘அறிவியலுக்கு அப்பால்’ அற்புதங்களைத் தேடிய அவரது கட்டுரைத் தொடர் பிறகு நூலாகவும் வெளியிடப் பட்டது. நீதிபதி எடுத்து வைத்த கருத்துகள் அறிவியலா? அறிவியல் என்ற பெயரில் பரப்பப்பட்ட கற்பனைச் சரடுகளா? இந்தக் கேள்விகளுக்கு ஆணித்தரமான மறுப்பைத் தருகிறது இக்கட்டுரை. முக்கியத்துவம் பெற்ற இக்கட்டுரையை அறிவியலில் பகுத்தறிவில் உடன்பாடு உள்ள அனைவரும் மக்களிடம் பரப்ப வேண்டும். – ஆசிரியர் நூலின் பெயர் “அறிவியலுக்கு அப்பால்”. 2014ஆம்...

ஃபாரூக் நினைவு நாளில் கொளத்தூர் மணி பேச்சு (2) ‘மத அடிப்படை வாதம்’ வளருவது சமூக அமைதியை சீர்குலைத்து விடும்

ஃபாரூக் நினைவு நாளில் கொளத்தூர் மணி பேச்சு (2) ‘மத அடிப்படை வாதம்’ வளருவது சமூக அமைதியை சீர்குலைத்து விடும்

ஃபாரூக் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் சிந்தனை அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் தலைமை உரை. (சென்ற இதழ்  தொடர்ச்சி) ஃபாரூக் கொலையில் இருந்து நாம் பார்த்தோம். அதில் பல பேர் கண்டனம் தெரிவித்தார்கள். சென்னையில் ஒரு கண்டனக் கூட்டத்தை சில இஸ்லாமியர்கள் நல்லெண்ணத்தோடு முயற்சி எடுத்து நடத்தினார்கள்.  கோவையில் நடக்கும் என்றார்கள். கோவையில் யாரும் இப்படி கண்டனக் கூட்டம் நடத்தவில்லை. அந்த வருத்தம் எங்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது ஒருபுறம் இருந்தாலும், எந்த ஒன்றும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது அல்ல; விமர்சனத் திற்கு அப்பாற்பட்டது அல்ல; பெரியாரையும் சேர்த்துத் தான் சொல்கிறோம். இஸ்லாமியர்கள் ஒரு வேளை இங்கே கேள்வி கேட்க வந்திருந்தாலும் நீங்கள் கேளுங்கள். நிகழ்ச்சி முடிந்த பின், உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும். நீங்கள் பேசுங்கள், உங்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கப் படும். அதில் ஒன்றும் எங்களுக்கு தயக்கமே கிடையாது. ஒருவேளை எங்கள் கருத்து தவறாக...

போலிப் பழம் பெருமை வேண்டாம்; அறிவியல் வழியே தேவை

போலிப் பழம் பெருமை வேண்டாம்; அறிவியல் வழியே தேவை

பழங்காலத்தை நினைவூட்டுவது மட்டுமே அருங்காட்சி யகங்களின் பணி அல்ல; புதுமையையும் எதிர்காலத்தையும் நோக்கி நம்மை விரைவுபடுத்துவதும்கூட அதன் பணி என Museum of TheFuture தொலைநோக்கு அருங்காட்சியகம் காட்டியது. போலியான பழம்பெருமைகளைப் பேசி மூடத்தனங்களுக்குள் புகுந்துகொள்ளாமல் அறிவியல் வழியில் புதுமையை நாடும் இதுபோன்ற அருங்காட்சியகங்கள் காலத்தின் தேவையாகிறது! – முதல்வர் டிவிட்டர் பதிவு பெரியார் முழக்கம் 31032022 இதழ்

பெரியார் ஏன் இராமாயணத்தை எதிர்த்தார்? மாநிலங்களவையில் பார்ப்பன எதிர்ப்புக் குரல்

பெரியார் ஏன் இராமாயணத்தை எதிர்த்தார்? மாநிலங்களவையில் பார்ப்பன எதிர்ப்புக் குரல்

பண்டைக்கால இந்தியா சமூகத்தை மேம்படுத்தாது; வேதகாலத்துக்கு திரும்பக் கூடாது என்று பெரியார், அம்பேத்கர் கருத்தை சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் உறுப்பினர்கள் பேசினர். மாநிலங்களவையில் மார்ச் 25, 2022 அன்று பார்ப்பன எதிர்ப்புக் குரல் ஒலித்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகேஷ் சின்ஹா தனிநபர் மசோதா ஒன்றை கொண்டு வந்தார்; மீண்டும் வேத காலத்து சிந்தனை மரபுக்கு திரும்ப வேண்டும் என்று இந்த மசோதா வலியுறுத்துகிறது. “நமது பழைய அறிவு சிந்தனை மரபுகளை மீட்டெடுப்பதற்கு மாநில அளவிலும்,மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் ஆய்வு மய்யங்களை உருவாக்கி, அந்த அறிவு மரபை, பழம் பெருமையை மீட்டு எடுக்க வேண்டும் என்று மசோதா கூறியது. அது மட்டுமின்றி மேற்கத்திய கல்வியும்,மெக்காலே கல்வியும் நம்முடைய பண்டைக்கால அறிவு மரபை சிதைத்து நமது சிறப்புகளைக் குலைத்து நம்மை தனிமைப்படுத்தி விட்டது” என்றும் அந்த மசோதா கூறுகிறது. திருணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஜவகர் சர்க்கார் இதற்கு கடுமையான பதிலடியை...

திராவிடர் விடுதலைக் கழக 2022 ஆம் ஆண்டு செயலவைத் தீர்மானங்கள்

திராவிடர் விடுதலைக் கழக 2022 ஆம் ஆண்டு செயலவைத் தீர்மானங்கள்

03.04.2022 (ஞாயிற்றுக் கிழமை) அன்று ஈரோட்டு கே.கே.எஸ்.கே மண்டபத்தில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழக செயலவைத் தீர்மானங்கள். தீர்மானம் : 1 திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினரும், கழகத்தின் செயல்வீரரும் எளிய முறையில் தோழர்களுடன் பழகி கழகக் கொள்கைகளை பரப்புவதில் முன்னின்று செயல்பட்ட மடத்துக்குளம் மோகன் மற்றும் பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனைகளை தனது புரட்சிகரமான ‘விடுதலைக்குரல்’ வழியாக ‘இசைப்போர்’ நடத்திய தலித் சுப்பய்யா என்று அறியப்பட்ட லெனின் சுப்பய்யா மறைவிற்கு இந்த செயலவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தீர்மானம் : 2 “புராண காலத்திலிருந்து இந்த நாட்டில் நடப்பது அரசியல் போராட்டமல்ல, ஆரிய திராவிடப் போராட்டம் தான்” என்றார் பெரியார். தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் பார்ப்பன சனாதன சக்திகள் தொடர்ச்சியாக, பல்வேறு சூழ்ச்சிகளோடு அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் அவர்களால் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, ஆட்சியிலிருந்த அ.இ.அதிமுக வின் வலிமையற்றத்...

கட்டமைப்புவகை தமிழினவழிப்பு செய்துவரும் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு தமிழர் நலன் கருதாமல் அடுக்கடுக்காய் உதவிகள் செய்து கொண்டிருப்பதற்கு கண்டனம்   ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கண்டன அறிக்கை

கட்டமைப்புவகை தமிழினவழிப்பு செய்துவரும் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு தமிழர் நலன் கருதாமல் அடுக்கடுக்காய் உதவிகள் செய்து கொண்டிருப்பதற்கு கண்டனம் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கண்டன அறிக்கை

கடந்த மூன்று மாதத்தில் மட்டும் சுமார் 2.4 (18000 கோடி)பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட கடனுதவியை இந்திய அரசு சிறிலங்காவுக்கு செய்துள்ளது. இந்நிலையில், மார்ச் 25 அன்று சிறிலங்கா அரசின் அவசர வேண்டுகோளை ஏற்று இந்திய அரசு 40,000 டன் டீசல் வழங்கவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. மார்ச் 17 ஆம் நாள் அன்று சிறிலங்கா அரசுக்கு 1 பில்லியன் டாலர் ( 7500 கோடி ரூ) கடன் கொடுப்பதாக அறிவித்தது இந்திய அரசு. பிப்ரவரி 2 அன்று சிறிலங்கா அரசுக்கு 500 மில்லியன் டாலர் கடன் கொடுக்க உடன்படிக்கை ஏற்பட்டது. அதற்கு முன்னர், எளிய கடன் வசதியாக 400 மில்லியன் டாலர், 515.2 மில்லியன் டாலர் கடன் தொகையைத் திருப்பி செலுத்தவதற்கு கூடுதல் அவகாசம் என கடந்த 3 மாதத்தில் மட்டும் சுமார் 2.4 பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட கடனுதவியை இந்திய அரசு சிறிலங்காவுக்கு செய்துள்ளது. இந்நிலையில்தான், மேற்சொன்ன 40,000...

Is there no theory for the Dravidian model?

Is there no theory for the Dravidian model?

The Tamil Hindu (February 21) newspaper has published an article trying to show that the Chief Minister MK Stalin is being seduced by an article, entitled ‘Can the budget debate change direction?’ What is more dangerous than a lie is half truth. The article alleges that the DMK, which proposes the “Dravidian model” as an alternative to the BJP’s “Gujarat model” and the Aam Aadmi Party’s “Delhi model”, lists social welfare schemes without elaborating on the principle for the Dravidian model. Gujarat Model – pure Communalism, and Privatization. The Aam Aadmi model is a model that has no model of...

The political background of the governor who put the ‘NEET’ bill on hold

The political background of the governor who put the ‘NEET’ bill on hold

The Chief Minister of Tamil Nadu has met Governor RN Ravi. According to a press release issued by the Government of Tamil Nadu, the Governor has accepted the request to send the NEET Exemption Bill to the President of India for approval. The governor has put many other bills on hold, such as the NEET exemption bill. Chief Minister presented the Governor with an English book, The Dravidian Model. The Government of Tamil Nadu Newsletter reads two messages. The Governor must protect the dignity of the Tamil Nadu Legislative Assembly. The Governor should respect the sentiments of the people of...

குட்டு உடைகிறது : பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட ரிலையன்ஸ், பேஸ்புக்

குட்டு உடைகிறது : பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட ரிலையன்ஸ், பேஸ்புக்

2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் சமயத்தில் பேஸ்புக் நிறுவனம் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்பட்டது ஆய்வறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது. ரிலையன்ஸின் நிதியில் இயங்கும் டிஜிட்டல் ஊடகம் ஒன்று பேஸ்புக்கில் போலிச் செய்திகளை பகிர்ந்து பரப்புரை மேற்கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட அரசியல் சார்ந்த விளம்பரங்கள் குறித்து Ad Watch அமைப்புடன் இணைந்து The Reporters Collective ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய தேர்தல்களில் அரசியல் விளம்பர பரப்புரைகள் மற்றும் பேஸ்புக் அரசியல் விளம்பரக் கொள்கைகளின் தாக்கத்தை மதிப்பிடுவதே இந்த ஆய்வின் நோக்கம். 2019ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2020 நவம்பர் வரையிலான காலகட்டத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமில் பதிவிடப்பட்ட 5 லட்சத்து 36 ஆயிரத்து 70 அரசியல் சார்ந்த விளம்பரங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த சமயத்தில் நடைபெற்ற 9 மாநில சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு பயன்தரும் வகையில் பேஸ்புக் செயல்பட்டது...

கழக செயலவை ஈரோட்டில் ஏப்.3இல் கூடுகிறது

கழக செயலவை ஈரோட்டில் ஏப்.3இல் கூடுகிறது

எதிர்கால செயல் திட்டங்களை உருவாக்கிடவும் கடந்தகால செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தவும் கழக அமைப்புகளின் செயல்பாடுகளை பரிசீலிக்கவும் திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை 3.4.2022 ஞாயிறு காலை 10 மணியளவில் ஈரோட்டில் கூடுகிறது. செயலவை உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இடம் : கே.கே.எஸ்.கே. திருமண மகால், பவானி ரோடு. தோழமையுடன் கொளத்தூர் மணி தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் குறிப்பு: செயலவை உறுப்பினர்கள் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா புத்தகங்களை பெயர், முகவரி மற்றும் உரிய தொகையோடு செயலவையில் மீதமுள்ள சந்தா புத்தகங்களை ஒப்படைக்க தயாராக வருமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். பெரியார் முழக்கம் 24032022 இதழ்

சுயமரியாதைத் திருமணங்களைப் பதிவு செய்ய மறுக்கும் பத்திரப்பதிவுத் துறைகள்

சுயமரியாதைத் திருமணங்களைப் பதிவு செய்ய மறுக்கும் பத்திரப்பதிவுத் துறைகள்

அதிமுக ஆட்சியின் கடைசி ஒன்றரை ஆண்டுகளில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களைத் தவிர வேறெங்கும் சுயமரியாதைத் திருமணச் சட்டத்தின்கீழ் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுகளே நடைபெறவில்லை. சுயமரியாதை, சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தியவர் தோழர் ரமேஷ் பெரியார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்கள் மூலம் இது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங் களில் கடந்த 2 ஆண்டுகளில் 9 அலுவலகங்களில் மட்டுமே சுயமரியாதைத் திருமணச் சட்டத்தின் கீழ் பதிவுகள் செய்யப்பட் டுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர்களின் மறைமுக மிரட்டலே இதற்குக் காரணம் என்பது பரவலான குற்றச்சாட்டு. ஆனால் ஆட்சி மாறியும் சார் பதிவாளர்களின் மனநிலை இன்னும் மாறாமல் அப்படியே நீடிக்கிறது. இப்போதும் ஜாதி கடந்து, காதல் திருமணம் செய்வோர் சுயமரியாதைத் திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய மிகுந்த போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை...

பங்கு சந்தையில் ‘பூதேவர்’ பரம்பரை அடித்த கொள்ளை

பங்கு சந்தையில் ‘பூதேவர்’ பரம்பரை அடித்த கொள்ளை

‘பூதேவர்கள்’ வம்சத்தில் வந்த ‘ஆச்சார சீலர்கள்’ பங்கு சந்தையில் கொள்ளை அடித்து பங்கு போட்டுக் கொண்ட ‘இதிகாசப் பெருமை’ களை ஊடகங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரவில்லை, எந்தத் தொலைக்காட்சியும் விவாதக் கச்சேரிகளையும் நடத்தவில்லை. ‘இந்திரா, ஆனந்து, நிர்மலா’ என்று பல ‘வெங்காய பூண்டு’ வெறுப்பாளர்களின் அரவணைப்பில் அரங்கேறிய ‘ஊழல் மகா காவியத்தை’ ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிடுகிறது. தேசியப் பங்குச் சந்தை உருவாக்கம் மும்பைப் பங்குச் சந்தை, பங்கு வர்த்தகம் மற்றும் வங்கிச் செயல்பாட்டு முறைகளில் ஏராளமான ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, மேம்பட்ட பங்குச்சந்தை வணிக முறைகளை உருவாக்க ஃபெர்வானியின் தலைமையில், ஒரு குழுவை அன்றைய ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மன்மோகன் சிங் நியமித்தார். அந்தக் குழுவின் பரிந்துரைகளின்பேரில், தேசியப் பங்குச் சந்தை என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிர்வாகம், பங்குச் சந்தை வணிகத்தை இணைய வழியே நடத்த முடிவுசெய்தது. இந்தப் பங்குச் சந்தை, இந்தியப் பங்குப் பரிவர்த்தனை...

‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டத்தை அரசு மாற்றியது பாராட்டுக்குரியது

‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டத்தை அரசு மாற்றியது பாராட்டுக்குரியது

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கு பதிலாக பெண்களின் உயர் கல்விக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இது உண்மையிலேயே முற்போக்கான வரவேற்க வேண்டிய ஒரு திட்டம். ஆனால் இத்திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. “மூவலூர் இராமாமிர்தம்” பெயரால் இதுவரை செயல்பட்டு வந்த திட்டம். 2011ஆம் ஆண்டுவரை, பட்டம், பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு திருமணத்தின் போது 50,000, மற்ற பெண்களுக்கு 25,000 நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. இது பெண்களின் கல்வி முன்னேற்றம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டம். 2011 இல் ஜெயலலிதா முதலமைச்சராக வந்ததற்குப் பிறகு கல்விக்கான இந்தத் திட்டத்தை, திருமணத்துக்கான திட்டமாக மாற்றி இந்த நிதி உதவியோடு 4 கிராம் தங்கத்தை தாலிக்காக வழங்குவது என்ற ஒரு திட்டத்தை பெண்களை கவருவதற்காக கொண்டு வந்தார். பிறகு அதை 8 கிராமாகவும் உயர்த்தி அறிவித்தார். பெண்களின் உயர்கல்வி...

கழகம் நடத்திய சட்டப் போராட்டம் வெற்றி: பெரியார் நூல்களை அரசே வெளியிடுகிறது

கழகம் நடத்திய சட்டப் போராட்டம் வெற்றி: பெரியார் நூல்களை அரசே வெளியிடுகிறது

பெரியாருடைய சிந்தனைகளை 21 மாநில, உலக மொழிகளில் வெளியிடு வதற்கு தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு வெளிவந்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் மகிழ்ச்சியுடன் இதை வரவேற்கிறது. பெரியாருடைய நூல்கள் உலகம் முழுவதும் பரவ வேண்டும், இந்தியா முழுவதும் பரவ வேண்டும். மக்களுக்கு அவை எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெரியார் திராவிடர் கழகம் நீண்ட போராட்டத்தை நடத்தியது. 28 தொகுப்பாக பெரியார் எழுத்து சிந்தனைகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டபோது அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் வந்தன. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் அந்த வழக்கைத் தொடர்ந்தது. அந்த வழக்கை பெரியார் திராவிடர் கழகம் எதிர்கொண்டது. அப்படி பெரியாருடைய நூல்களை வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் மேல் அமர்வு தெரிவித்துவட்டன. அந்த வழக்கு இப்போதும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது...

தலையங்கம் ‘நீட்’ மசோதாவைக் கிடப்பில் போடும் ஆளுநரின் அரசியல் பின்னணி

தலையங்கம் ‘நீட்’ மசோதாவைக் கிடப்பில் போடும் ஆளுநரின் அரசியல் பின்னணி

தமிழ்நாடு முதலமைச்சர், ஆளுநர் ஆர்.என் இரவியை சந்தித்திருக்கிறார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பக் கோரியதை ஆளுநர் ஏற்றுக் கொண்டு விட்டதாக தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது. நீட் விலக்கு மசோதாக்களைப் போல வேறு பல மசோதாக்களையும் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். முதலமைச்சர் “The Dravidian Model” என்ற ஆங்கில நூலை ஆளுநருக்கு பரிசாக வழங்கியிருக்கிறார். தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு இரண்டு செய்திகளைக் கூறுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை ஆளுநர் காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஆளுநர் மதிக்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஏற்று ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு நீட் விலக்கு மசோதாவை உறுதி கூறியபடி அனுப்பி வைப்பாரா ? மாட்டாரா ? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். (இது நாள் வரை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை) இந்தப் பிண்ணனியில் தமிழ்நாட்டு ஆளுநரைப் பற்றிய ஒரு வரலாற்று...

கருத்துச் செறிவுடன் நடந்த ஃபாரூக் நினைவு சிந்தனை அரங்கம்

கருத்துச் செறிவுடன் நடந்த ஃபாரூக் நினைவு சிந்தனை அரங்கம்

இஸ்லாமிய மத அடிப்படை வாதத்திற்குப் பலியான மனிதநேயன் ஃபாருக் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின், சிந்தனை அரங்கம் 19.03.2022 சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்வை தலைமையேற்று வழிநடத்தினார். ‘இஸ்லாத்தில் நாத்திகர்கள்’ என்ற தலைப்பில் இந்திய முற்போக்காளர்கள் கூட்டமைப்பு – ஜின்னா மாச்சு, ‘அறிவியலுக்கு முரணான கிருஸ்துவம்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கூடம் – நாத்திக வசந்தன், ‘இந்து மதமும் – பெண்களும்’ என்ற தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை கொள்கை பரப்பு செயலாளர் இரா. உமா, ‘இஸ்லாமும் பெண்களும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் பீர் முகமது, முன்னாள் முஸ்லீம் அமைப்பைச் சார்ந்த உமர் – ஹிஜாப், இஸ்லாத்தில் பெண்களின் அவலங்களைப் பற்றியும் உரையாற்றினர். இறுதியாக ‘மானுடத்துக்கு மதம் தேவையா?’ என்ற தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். நிகழ்விற்கு ஃபாருக் நண்பர் மணிவண்ணன் நன்றி கூறினார்....

ஃபாரூக் நினைவு நாளில் கொளத்தூர் மணி பேச்சு – ‘சொர்க்கம்’ போவதற்கு அல்ல; தீண்டாமை ஒழிப்புக்கே மதம் மாறச் சொன்னார் பெரியார்

ஃபாரூக் நினைவு நாளில் கொளத்தூர் மணி பேச்சு – ‘சொர்க்கம்’ போவதற்கு அல்ல; தீண்டாமை ஒழிப்புக்கே மதம் மாறச் சொன்னார் பெரியார்

ஃபாரூக் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் சிந்தனை அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் தலைமை உரை. இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இங்கே வந்திருந்தால் கேள்விகளைக் கேளுங்கள்; நாங்கள் பதிலளிக்கத் தயார். எங்களைப் போன்ற சுயமரியாதைக்காரர்களுக்கு மத நம்பிக்கை இல்லை என்றும் தீண்டாமை ஒழிவதற்கு மட்டும் இஸ்லாமில் சேரலாம் என்பதே நான் கூறும் கருத்து என்றும் கூறினார் பெரியார். பொது மேடைகளில் பேசும் இஸ்லாமியர்கள்கூட மத மறுப்பாளர்களான எங்களுக்கும்இறைவனின் ஆசி கிடைக்கும் என்று பேசும்போதுகூட நாங்கள் அனுமதித்தே வந்திருக்கிறோம். தோழர் ஃபாரூக், கோவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயல்பாட்டாளர். அவர் கொடூரமாக மத அடிப்படைவாதிகளால் மார்ச் 16, 2017இல் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. பிப்.19 அன்று சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் 5ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனை அரங்கில் நடைபெற்றது. ஃபாரூக் கடவுள், மத, இறை மறுப்பாளர்; இஸ்லாத்தின் இறையியல் கொள்கையை உறுதியாக மறுத்தவர். ‘வாட்ஸ்...

சுயமரியாதை எங்கே?

சுயமரியாதை எங்கே?

கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை. So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம். பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்தபட்ச மரியாதை நம் சுயமரியாதையைக் காப்பதே. மருத்துவர் செந்தில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் – முக நூலிலிருந்து பெரியார் முழக்கம் 17032022 இதழ்

பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாதன் 95ஆவது அகவை நாள் விழா

பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாதன் 95ஆவது அகவை நாள் விழா

திவிக ஈரோடு தெற்கு மாவட்ட ஆலோசகரும், பெரியாரின் பெருந் தொண்டரும், பெரியார் விருதாளருமான இனியன் பத்மநாதன் 95 ஆவது அகவை நாள் விழா, திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக 06.03.2022 ஞாயிறன்று மகிழ்வும், நெகிழ்வும் சூழ கொண்டாடப்பட்டது. விழாவின் வரவேற்புரை யை மாவட்ட அமைப்பாளர் பெ.கிருஷ்ணமூர்த்தி வழங்க கழகத்தின் மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் இதுபோன்ற நிகழ்வின் அவசியத்தையும், மூத்த கழகச் செயல்பாட்டாளர்களை அடையாளங்கண்டு அவர்களை போற்ற வேண்டியது பற்றியும் உரையின் வழியே பகிர்ந்து கொண்டார்கள். மாவட்டச் செயலாளர் யாழ் எழிலன், ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் நாத்திகஜோதி, வேணுகோபால், வேல்முருகன், ராசிபுரம் பிடல் சேகுவேரா, சுமதி, விருதுநகர் செந்தில், கடலூர் போதி சத்வா, திருப்பூர் தனபால், திமுக தொழிற் சங்கத்தைச் சார்ந்த இராவணன் உள்ளிட்ட பிற மாவட்டக் கழகத் தோழர்களும் வருகை தந்து இனியன்...

ஆயக்குடியில் பெரியாரியல் கொள்கை விளக்கக் கூட்டம்

ஆயக்குடியில் பெரியாரியல் கொள்கை விளக்கக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் 11-3 – 2022 அன்று புது ஆயக்குடி அரிசி ஆலை பகுதியில் உள்ள வ.பழனிச்சாமி நினைவுத் திடலில் மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு புது ஆயக்குடி பகுதி தோழர் வே.சங்கர் தலைமை வகித்தார். ஒட்டன்சந்திரம் தங்கவேல் முன்னிலை வகித்தார். நிகழ்வின்தொடக்கமாக ஆயக்குடி பகுதி பொறுப்பாளர் சு.அழகர்சாமி மந்திரமா? -தந்திரமா?அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தி, சாமியார்கள் செய்வது மந்திரமல்ல மக்களை ஏமாற்றும் தந்திரமே என்று செய்து காட்டினார். அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட தோழர் சண்முகம், தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தொழில் முனைவோர் மோடியின் ஆட்சியில் சந்திக்கும் இடர்களை குறித்து விளக்கினார். தொடர்ந்து உரையாற்றிய கழக பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகள் படும் வேதனைகளையும், விளக்கினார். அடுத்து உரையாற்றிய அமைப்புச்...

‘காதலர் நாளில்’ மனநல மருத்துவர் சிவபாலன் விளக்கவுரை (2) சகிப்புத் தன்மையில்தான் குடும்ப வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது

‘காதலர் நாளில்’ மனநல மருத்துவர் சிவபாலன் விளக்கவுரை (2) சகிப்புத் தன்மையில்தான் குடும்ப வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது

காதல் உறவில் இருக்கும்போது வெளிப் படுத்திய உணர்வுகளைக் குடும்ப வாழ்க்கைக்கு வந்த பிறகு எதிர்பார்க்கக் கூடாது. பிரச்சினையே இல்லாத வாழ்க்கை எதுவும் கிடையாது; அதற்கு மரணிக்கத்தான் வேண்டும். கணவன்-மனைவி ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகிறார்கள்; இதில் பிரச்சினை, அந்த மனிதர்களிடம் இல்லை; அவர்களின் உறவுகளில்தான் இருக்கிறது. வாழ்க்கையில் விட்டுக் கொடுத்துப் போவது என்பதால் பிரச்சினைத் தீராது; சகித்துக் கொள்ளும் மனப்பான்மையில் தான் வாழ்க்கையின் வெற்றியே அடங்கியிருக்கிறது என்பதே உளவியல் ஆய்வாளர்களின் முடிவு என்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காதலர் நாள் (பிப். 14, 2022) விழாவில் மருத்துவர் சிவபாலன் விளக்கினார். வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணங்களைவிட, காதல் திருமணங்களில் ஏன் அதிக சிக்கல்கள் வருகிறது? ஏன் காதலித்து திருமணம் செய்தவர்கள் நீதிமன்றங்களில் அதிகமாக விவாகரத்திற்கு வருகிறார்கள்? வீட்டில் ஏற்பாடு செய்த திருமணங்களில் பிரச்சனை என்றால், பெற்றோர்கள் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்கள். “நாங்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தது தானே,...

வழி மறுக்கும் மதம்

வழி மறுக்கும் மதம்

மதத்திற்கும் – உலக இயற்கைக்கும் எப்போதும் சம்பந்தம் இருப்பதில்லை. ஏனெனில், அனேகமாய் எல்லா மதங்களுமே உலக இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை வழி மறைத்து திருப்புவதையே ஜீவநாடியாய்க் கொண்டிருக்கின்றன. அதனால் மதம் கலந்தபடியால் இயற்கை அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் இடமில்லாமலே போய்விடுகின்றது. எப்படி எனில், மதங்கள் என்பவை எல்லாம் ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு இருந்தே காணப்படுபவை ஆகும். குடி அரசு 27.09.1931 பெரியார் முழக்கம் 17032022 இதழ்

சூர்யா திரைப்படம் பா.ம.க. மிரட்டலுக்கு பதிலடி

சூர்யா திரைப்படம் பா.ம.க. மிரட்டலுக்கு பதிலடி

செஞ்சி பாலசரவணா திரையரங்கில் 9.3.2022 அன்று நடிகர் சூரியா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று பா.ம.கவினர் கடிதம் முலம் மிரட்டல் விடுத்தனர். கடிதத்தை திரையரங்க உரிமையாளர் காவல்துறைக்கு அனுப்பி உள்ளார் . மறுநாள் 10.03.2022 பா.ம.கவினர் திரைப் படம் திரையிடக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திரையரங்கிற்கு ஒருநாள் பாதுகாப்பாக காவல்துறையினர் இருந்தனர். படம் பார்க்க வந்த ரசிகர்கள் மற்றும் மக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். பா.ம.கவினர் தொடர் மிரட்டலால் திரைப்படம் வெளியிடவில்லை. 11.03.2022 அன்று அம்பேத்கர் மக்கள் கட்சி மழைமேனிபாண்டியன், படம் பார்க்கச் சென்று கேட்டபோது நடந்த நிகழ்வுகளை சொல்லி படம் வெளியிட முடியாது என்றனர். அ.ம.கட்சியினர் வெளியிட சொல்லி கோசங்களை எழுப்பினர். நியூஸ் செவன் தொலைக்காட்சிக்கு அ.ம.கட்சி மழை மேனி பாண்டியன் பேட்டியளித்தார். இந்த தகவலறிந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் பெரியார் சாக்ரடீஸ் அரசியல் கட்சிகள் இயக்கங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை...

4139 சட்டமன்ற உறுப்பினர்களில் பா.ஜ.க. எண்ணிக்கை 1516 மட்டுமே!

4139 சட்டமன்ற உறுப்பினர்களில் பா.ஜ.க. எண்ணிக்கை 1516 மட்டுமே!

உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் நடந்து முடிந்த தேர்தல்களில் பாஜக எப்படி வெற்றி பெற்றிருக்கிறது என்று தேர்தலுக்குப் பிறகு வந்த ஆய்வுகள் தெளிவு படுத்தி இருக்கின்றன. இது குறித்து 12.03.2022 ஆங்கில இந்து நாளேடு விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. மத அடிப்படையில் மிக எளிதாக மக்களை அணிதிரட்டக் கூடிய வாய்ப்புகள் இருந்ததே அடிப்படையான காரணம். இந்த மத அணி திரட்டலுக்கு ஜாதி ஜாதியாக தனித்தனி பிரிவாக அணிதிரட்ட முடிந்ததும் ஒரு அடிப்படையான காரணம் என்று அந்த ஆய்வு கூறுகிறது. அதுமட்டுமின்றி மோடி ஆட்சிக்கு இந்த மாநிலங்களில் செல்வாக்கு இருக்கின்றது, மாநிலங்களில் உள்ள தலைவர்களை விட மோடி ஆட்சி மேல் அதிக நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பல சமூக நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அந்தத் திட்டங்களை நேரடியாக மக்களுக்கு வழங்காமல் அதற்கான பணத்தை நேரடியாக அனுப்பி வைத்ததும் ஒரு முக்கிய காரணம் என்றும்...

தலையங்கம் எல்லை மீறுகிறார் தமிழக ஆளுநர்

தலையங்கம் எல்லை மீறுகிறார் தமிழக ஆளுநர்

பாரதியார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர்கள் மாநாடு ஒன்று நடைபெற்று இருக்கிறது. 100 க்கும் மேற்பட்ட தென் பகுதியைச் சேர்ந்த துணைவேந்தர்கள் அதில் பங்கேற்று இருக்கிறார்கள். தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக அதில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் மிகச் சிறப்பான சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். “பல்கலைக் கழகங்கள் தமிழ்நாட்டில் இயங்கும் போது அவை தமிழ்நாடு பாடத்திட்டத்தைத் தான் நடத்த வேண்டும். அது அறிவியல் மனப்பான்மையில் இருக்க வேண்டும். ஒன்றிய அரசு கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு அறிவியலுக்கு எதிரான பிற்போக்குத் தனமான கருத்துக்களை திணித்துக் கொண்டு இருக்கிறது. எனவே கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றியாக வேண்டும்” என்ற கருத்தை அவர் வலியுறுத்தி இருக்கிறார். இதற்கு மாறாக ஆளுநர் ஆர்.என் ரவி கூட்டாட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். “இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு அல்ல. கூட்டமைப்புத்...

தில்லை நடராசன் கோயில் மோசடிகள் – சந்தித்த வழக்குகள்

தில்லை நடராசன் கோயில் மோசடிகள் – சந்தித்த வழக்குகள்

தில்லை நடராசன் கோயில், தீட்சதர்களின் தனிச் சொத்தாகவே இதுவரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்போடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கோயில் பரப்பு 40 ஏக்கர்; 2700 ஏக்கர் நிலம்; பல கோடி மதிப்புள்ள நகைகள்; உண்டியல் வசூல் அனைத்துமே தீட்சதர்கள் கட்டுப்பாட்டில்தான். தில்லை தீட்சதர்கள் தனி சாம்ராஜ்யம் நடத்துகிறார்கள். பல்வேறு வழக்குகள், படுகொலைகள், தற்கொலைகளோடு தொடர் புடையது தில்லை நடராசன் கோயில். கோயில் பார்ப்பனர் கொள்ளைகளை எதிர்த்து பக்தர்களே அரசு கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது வரலாறு. 1888இல் நீதிபதி முத்துசாமி அ ய்யர் மற்றும் பாஷ்யம் அய்யங்கார் கோயிலை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்றும், அரசுக் கட்டுப்பாட்டில் வரக் கூடாது என்று எதிர்ப்பவர்கள், தண்டனைச் சட்டத்தை எதிர்க்கும் திருடர்களைப் போன்றவர்கள் என்றும் கூறினர். (‘இந்து’ ஆங்கில நாளேடு 13.1.2014 தலையங்கத்தில் இத்தகவலைப் பதிவு செய்துள்ளது) பனகல் அரசர் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்து 1927இல் அமுலுக்கு...

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் தில்லை தீட்சதர்களை கைது செய்க!

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் தில்லை தீட்சதர்களை கைது செய்க!

தில்லை சிற்றம்பல மேடையில் தலித் ‘பெண்’ வழிபாட்டு உரிமையைத் தடுத்து நிறுத்திய தீட்சதர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. தீட்சதர்களை சட்டப்படி கைது செய்யக் கோரியும், நடராசன் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வற்புறுத்தியும்  சென்னையில் மார்ச் 11, 2022 பகல் 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய பலரும் எங்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை; ஆனால் நம்பிக்கை யாளர்கள் உரிமைகளைத் தடைப்படுத்துவதை மனித உரிமைக் கண்ணோட்டத்தில் கண்டிக்கிறோம் என்று குறிப்பிட்டனர். மனித உரிமைகளுக்கு எதிராக நம்பிக்கைகள் திணிக்கப்படும்போது அதை கண்டிக்கிறோம். தில்லையில் தலித் பெண் சிற்றம்பல மேடையில் வழிபடுவது அவரது மனித உரிமை; அதைத் தடுப்பது தீண்டாமைக் குற்றம்; மனித உரிமைக்கு எதிரானது; தமிழில் பாடுவது மனித உரிமை; அதைத் தடுப்பது மனித உரிமைக்கு எதிரானது; ஹிஜாப் அணிவதும் அணிய விரும்பாததும் அவர்கள் மனித உரிமை; அதைத்...

Governor of Tamil Nadu crosses the border

Governor of Tamil Nadu crosses the border

A Vice-Chancellors’ Conference is being held at Bharathiar University. More than 100 affiliates from the South are participating. Chief Minister of Tamil Nadu MK Stalin, Governor of Tamil Nadu RN. Ravi was the special guest. The Chief Minister of Tamil Nadu has put forward some very interesting ideas. “When universities operate in Tamil Nadu, they have to run the Tamil Nadu curriculum. It has to be in the scientific mindset. As the Education is in Concurrent list, the Union government is using it to impose non-progressive anti-science views. Therefore, education should be transferred to the state list, ”he said. On...

மின்னூல் தொகுப்பு

மின்னூல் தொகுப்பு

பல்வேறு காலகட்டங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாடுகள், பரப்புரைகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் தலைவர்களால் பேசப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உரைகள் அடங்கிய மின்னூல் தொகுப்பு. புத்தகத்தை பெரியார் முழக்கம் பிப் 10, 2022 இதழில் மொத்தமாக 52 புத்தக பட்டியல் வெளிவந்து கழகத் தோழர்களால் பெருவாரியாக பதிவிறக்கி படிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக  இணைய தளப் பிரிவின் முயற்சியால் மேலும் 45 புதிய தலைப்புகளில் மின்னூலாக்கி பதிவேற்றி உள்ளோம். கீழுள்ள இணைப்பின் வாயிலாகவோ கழகத்தின் இணையதளத்திற்கு சென்று தேவையான புத்தகங்களை தரவிறக்கி படித்துக் கொள்ளலாம்.   http://dvkperiyar.com/?page_id=17518 கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூல் பட்டியல்: 1. இந்துக்களின் விரோதி யார்? நண்பன் யார்? சிற்றுரைகள் தொகுப்பு 1; 2. கசக்கும் ஒன்றிய(ம்) அரசு – விடுதலை இராசேந்திரன்; 3. கீதையின் வஞ்சகப் பின்னணி – விடுதலை இராசேந்திரன்; 4. சினிமா கண்டு வந்தவன் – விடுதலை இராசேந்திரன்; 5. மக்களைக் குழப்பும்...

ஹிஜாப் – பா.ஜ.க. மிரட்டலுக்கு பதிலடி: மதுரையில் கருத்தரங்கம்

ஹிஜாப் – பா.ஜ.க. மிரட்டலுக்கு பதிலடி: மதுரையில் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் – தமிழ் தேச மக்கள் முன்னணி இணைந்து நடத்திய “மத வெறியர்களால் தூண்டப்படும் ஹிஜாப் அரசியல்” கருத்தரங்கம் மேலூரில் உள்ள ரஹ்மா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி வரவேற்புரையாற்றினார். தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்டத் தலைவர் ஆரோக்கிய மேரி முன்னிலை வகித்தார். மதுரை மாவட்ட செயலாளர் மா.பா மணி அமுதன் தலைமை தாங்கினார். அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் பசும்பொன். பாண்டியன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன், தமிழ்நாடு அரசின் முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வாஞ்சி நாதன், தமுமுக (ஹைதர் அலி) மாவட்ட துணைச் செயலாளர் ஜாகீர் உசேன் ஆகியோர் கருத்துரை யாற்றினார்கள்.. தமுமுக (ஹைதர் அலி ) மாவட்ட பொறுப்பாளர் பக்ருதீன் நிகழ்விற்கான பல உதவிகளை செய்து கொடுத்தார்...

நாமக்கல் மாவட்டம் வழி காட்டுகிறது; கழக ஏட்டுக்கு 86 சந்தாக்கள்

நாமக்கல் மாவட்டம் வழி காட்டுகிறது; கழக ஏட்டுக்கு 86 சந்தாக்கள்

நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 4.3.2022 அன்று காலை 11 மணி யளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, மாநிலப் பொருளாளர் சு.துரைசாமி, தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், காவை ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் முதல் கட்டமாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கான 86 சந்தா தொகை 21500 கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது. கலந்துரையாடலில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மடத்துக்குளம் மோகன், தலித் சுப்பையா ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இயக்க வளர்ச்சிக்கு மாதம் ஒருமுறை தெருமுனை கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. புதிய பொறுப்பாளர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். குமாரபாளையம் நகர செயலாளராக செ.வடிவேல் செயல்படுவார் மற்றும் திருச்செங்கோடு ஒன்றிய அமைப்பாளராக விஜயகுமார் மட்டுமே செயல்படுவார் என தீர்மானிக்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன்,...

‘காதலர் நாளில்’ மனநல மருத்துவர் சிவபாலன் விளக்கவுரை திருமணத்துக்குப் பிறகு தான் உண்மையில் காதலின் தேவையே தொடங்குகிறது

‘காதலர் நாளில்’ மனநல மருத்துவர் சிவபாலன் விளக்கவுரை திருமணத்துக்குப் பிறகு தான் உண்மையில் காதலின் தேவையே தொடங்குகிறது

காதல் குறித்து பெரியார் கூறியது போல் வேறு எந்த தத்துவ சிந்தனையாளர்களும் கூறியது இல்லை. யாரோ ஒருவர் சொல்லிச் சென்றதை கண்முடித்தனமாக பின்பற்றி காதலைப் புனிதப்படுத்துகிறோம். அன்பு, நட்பு தவிர, காதலில் எந்தப் புனிதமும் இல்லை. பிப். 14 அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காதலர் நாள் விழாவில் மனநல மருத்துவர் சிவபாலன், காதல்  – காதலுக்குப் பிறகான திருமண வாழ்க்கையில் சந்திக்கும் பிரச் சினைகள் குறித்த ஆழமான உளவியல் சிக்கல்களை விளக்கினார். அவரது உரை: ஒரு மனநல மருத்துவராக பல நிகழ்வு களில் கலந்து கொண்டிருக்கிறேன். பல கூட்டங்களில் பேசியுள்ளேன். அவைகளில் பொதுவாக, மனதை எப்படி அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்? மன அழுத்தம் இல்லாமல் வாழ்வது எப்படி? இப்படியான தலைப்புகள் தான் அதிகம் இருக்கும். காதல் திருமணம் செய்து கொண்டவர்களின் மத்தியில் பேசுவது ஒரு தனி அனுபவமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்கும் அப்படியான...

அண்ணாவின் அற்புத குணம்

அண்ணாவின் அற்புத குணம்

நான் திமுகவுக்கு – அது தேர்தலில் வெற்றி பெரும் வரை அக் கழகத்திற்கு படு எதிரியாக இருந்தவன். தேர்தலுக்குப் பிறகு அண்ணா என் எதிர்ப்பை மறந்து, அடியோடு மறந்து மிக்கப் பெருந்தன்மையோடு நட்பு கொள்ள ஆசைப்பட்டு – என்னை அவர் பிரிவதற்கு முன் இருந்த மரியாதையுடன் நண்பராகவே நடத்தினார். அதன் பயனாக எனக்கும் மக்களிடையே அதிக மதிப்பு ஏற்பட்டதுடன், என் அந்தஸ்தும் அதிகமாயிற்று என்றுகூட சொல்லலாம். அதற்கு நான் கடமைப்பட்டவனாக இருக்க வேண்டியதும் என் கடமையாகிவிட்டது. இதன் பயன் திமுகவை பகுத்தறிவுக் கழகமாகவே இருக்க உதவும் என்று நினைப்பதோடு, அண்ணா என்னிடம் காட்டிய அன்பும், ஆதரவும், அளித்த பெருமையும் திமுகவுக்குள் எந்தவிதக் கருத்து வேற்றுமையோ, கட்சி மனப்பான்மையையோ கழகத்திற்குள் புகுத்தி விடாமல் கழகம் பெருமையோடு விளங்கவும், மக்களுக்கு தொண்டாற்றவும் பயன்படும் என்று உறுதி கொண்டிருக்கிறேன். அதற்கேற்ற தன்மை களை அண்ணா தம்பிமார்களுக்கு ஊட்டியும் இருக்கிறார் என்பதில் அய்யமில்லை. இப்படிப்பட்ட ஒரு அற்புத...

‘நீட்’ – ‘சிவன்’ – உக்ரைன்

‘நீட்’ – ‘சிவன்’ – உக்ரைன்

இந்தியாவிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு 20 ஆயிரம் பேர் மருத்துவம் படிக்க சென்றிருக்கிறார்கள். போர்ச் சூழலில் அவர்கள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது? தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்காக நீட் தேர்வைக் கொண்டு வந்தோம் என்று ஒன்றிய ஆட்சி கூறியது. பாஜகவினரும் அப்படித்தான் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் நீட் தேர்வு வந்ததற்குப் பிறகு தான் 20 ஆயிரம் மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைனுக்கு சென்றிருக்கிறார்கள். காரணம் இங்கே வாங்குகிற கட்டணத்தைவிட அங்கே கட்டணம் மிக மிகக் குறைவு. நீட் தேர்வு தேவையில்லை, 50ரூ மதிப்பெண்கள் எடுத்தாலே உக்ரைனில் மருத்துவம் படிக்க முடியும். இங்கே நீட் தேர்வும் இருக்கிறது, கட்டணக் கொள்ளையும் இருக்கிறது. தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கு ஒன்றிய அரசு என்ன செய்தது ? எதுவுமே செய்யவில்லை. அவர்களின் கட்டணக் கொள்ளைக்கு வழி திறந்து வைத்ததுதான் இதில் வேடிக்கை. நீட் தேர்வில் பெறக்கூடிய கட் ஆஃப் மார்க்கை...

அய்.நா. அங்கீகரிக்கும் “திராவிடன் மாடல்”

அய்.நா. அங்கீகரிக்கும் “திராவிடன் மாடல்”

சென்னையில் நடைபெற்ற  தனியார் தொலைக்காட்சியின் கருத்தரங்கில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:  ஒன்றிய அரசு கொண்டுவரும் ஒரே நாடு என்ற கருத்தாக்கத்தை பொருளாதார ரீதியில் ஏற்க முடியாது. கூட்டாட்சி தத்துவத்தை அனுசரித்து செயல்பட்டால்தான் நாடு வளர்ச்சி காணும். அதேவேளையில், பிற மாநிலங்களை விட தமிழகம் பெரும்பாலான துறைகளில் சிறந்து விளங்குகிறது. ஆனால், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது. தமிழ்நாட்டின் தனிநபர் வருவாய் குஜராத்தை  விட 10 இல் இருந்து 15 ஆயிரம் குறைவுதான். நிதி மேலாண்மையில் குஜராத் சிறப்பாக செயல்படுகிறது. மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் 15 வயதுக்கு கீழ் உள்ள  குழந்தைகளில் 100 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்கிறார்கள். பள்ளிக்கு போகாத 15 வயதிற்கு உட்பட்ட பெண்களே தமிழ்நாட்டில் இல்லை. அதே வேளையில், குஜராத்தில் 15 முதல் 20 சதவீதம்  பெண்கள் பள்ளிக்கூடம் போவதில்லை. இது...