பெரியார் – அம்பேத்கர் – திராவிட மாடலில் தத்துவ நாயகர்களாக தமிழக அரசு ஏற்றுள்ளது அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள்

*           அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும். தமிழ்நாடு முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்படும்.

*           திமுக துணை பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா கோரிக்கையை ஏற்று, அண்ணல் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து தமிழக அரசால் செம்பதிப்பாக வெளியிடப்படும்

*           விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கோரிக்கையை ஏற்று, அம்பேத்கர் மணிமண்டபத்தில், அம்பேத்கரின் வெண்கல முழு உருவச்சிலை நிறுவப்படும்.

போன்ற அறிவிப்புகளை, 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.04.2022 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

பெரியார் முழக்கம் 14042022 இதழ்

You may also like...