Category: பெரியார் முழக்கம் 2023

தலையங்கம் திராவிட மாடலைப் பறைசாற்றும் ‘பட்ஜெட்’

தலையங்கம் திராவிட மாடலைப் பறைசாற்றும் ‘பட்ஜெட்’

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் மார்ச் 20ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். நடப்பது திராவிட மாடல் ஆட்சி என்பதற்கு மேலும் ஒரு சிறப்பாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. இதில் குறை காணுவதற்கு ஏதும் இல்லாமல் ‘பூத’க் கண்ணாடியை வைத்து தேடிக் கொண் டிருக்கின்றன எதிர்கட்சிகள். மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குகின்ற திட்டத்தை அறிவித்தீர்களே செய்தீர்களா என்ற ஒரு கேள்வியைத்தான் திமுக ஆட்சியைப் பார்த்து இதுவரை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டே வந்தன. அவர்களை வாயடைத்து பதில் கூற முடியாத அளவிற்கு அந்தத் திட்டத்தை இப்போது அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. மகளிருக்கு உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தத் தொகை உண்மையில் விளிம்பு நிலை மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். வசதி படைத்த மாத வருவாய் வரக்கூடிய பெண்களுக்கு தேவையில்லை என்பதே நமது கருத்து....

சுவரெழுத்துப் பணியில்  உற்சாக மூட்டிய நிகழ்வு

சுவரெழுத்துப் பணியில் உற்சாக மூட்டிய நிகழ்வு

15.3.2023 மதியம் சூலூர் வழி பல்லடம் சாலையில் ஒரு சுவரில் சுவரெழுத்து விளம்பரம் எழுதிக் கொண்டிருக்கும் போது அதன் வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள்  சென்று கொண்டே இருந்தன. அப்படிச் சென்ற ஒரு இருசக்கர வாகனம் சுவரெழுத்து விளம்பரத்தைக் கடந்து சென்றது.  மீண்டும் திரும்பி வந்தது. நீங்கள் திக வா என்றார்; திவிக என்றோம். “ஓகே ஓகே நீங்கள் எங்கள் அனைத்து ஜாதி அர்ச்சகர் உரிமைக்காக தொடர்ந்து போராடறீங்க; துணை நிற்கறீங்க; கொஞ்ச நாளுக்கு முன்னால் கூட உங்க  சென்னை தோழர்கள் எங்கள் பொறுப்பாளர் அரங்கநாதனை மேடையில் ஏற்றி பாராட்டுனாங்க. ஆர்ப்பாட்டத்திற்கு கூப்பிட்டு பேச வைத்தீர்கள்; தொடர்ந்து எங்களுக்காக போராட்டங்களை நடத்துறீங்க. உங்கள் இதழில் எங்கள் உரிமைகளைப் பற்றி எழுதறீங்க; எனக்கும் இதழ் அனுப்புங்க; சந்தா தருகின்றேன்” பெருமிதத்துடன் கூறினார். “நான் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பயிற்சி முடித்தவன். இப்போ 2 அர்ச்சகரை நீக்கம் பண்ணியிருக்காங்க, கொடுமை. ஆனா அந்த வழக்கில் நாங்க...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ. இராசா, பாலபிரஜாபதி அடிகளார், வன்னிஅரசு, மதுக்கூர் ராமலிங்கம், மருத்துவர் எழிலன், சுந்தரவள்ளி உள்ளிட்ட பல்வேறு சிந்தனையாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.  ட   அண்ணா தீட்டிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ பொம்மலாட்டம்; புரட்சிகர கலை நிகழ்ச்சிகள்; திரிபுவாதங்களைத் தோலுரிக்கும் கருத்தரங்குகள் சேலம் மாநாடு எழுச்சி; மக்கள் பேராதரவு, களப்பணிகளில் தோழர்கள் உற்சாகம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ. இராசா, பாலபிரஜாபதி அடிகளார், வன்னிஅரசு, மதுக்கூர் ராமலிங்கம், மருத்துவர் எழிலன், சுந்தரவள்ளி உள்ளிட்ட பல்வேறு சிந்தனையாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். ட அண்ணா தீட்டிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ பொம்மலாட்டம்; புரட்சிகர கலை நிகழ்ச்சிகள்; திரிபுவாதங்களைத் தோலுரிக்கும் கருத்தரங்குகள் சேலம் மாநாடு எழுச்சி; மக்கள் பேராதரவு, களப்பணிகளில் தோழர்கள் உற்சாகம்

சேலத்தில் ஏப். 29, 30 தேதிகளில் கழகம் நடத்தவிருக்கும் சனாதன சக்திகளே, தமிழகத்தில் நீங்கள் காலூன்ற முடியாது என்று எச்சரிக்கும் இளைஞர்கள் மாநாட்டுக்கு மக்களிடையே பேராதரவு கிடைத்து வருகிறது. ‘கருப்பு – சிவப்பு – நீலம்’ என்று பெரியார் – அம்பேத்கர் – மார்க்சிஸ்ட் சிந்தனையாளர்கள் இணைந்து சனாதன எதிர்ப்பில் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதை எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் மாநாடாக திராவிடர் விடுதலைக் கழகம் ஒழுங்கு செய்துள்ளது; இது காலத்தின் தேவை! மாநாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், வைகுண்டர் வழி வந்த பால பிராஜாபதி அடிகள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்கிறார்கள். கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றுவோர் பெரும்பாலும் துடிப்பு மிக்க இளைய தலைமுறை. பேரறிஞர் அண்ணா எழுதி, அவரே காகப்பட்டர்...

நடிகர் ரஜினிகாந்துக்கு பதில்

நடிகர் ரஜினிகாந்துக்கு பதில்

ஒரு சொட்டு இரத்தத்தை மனிதரால் உருவாக்க முடியுமா? கடவுள் உடல் கட்டமைப்பை அப்படி உருவாக்கி இருக்கிறான். இதற்குப் பிறகும் சிலர் கடவுள் இல்லை என்று பிதற்றுவது சிரிப்பாக இருக்கிறது.                 – ரஜினிகாந்த் மனித இரத்தத்தை செயற்கையாக உருவாக்கும் ஆய்வுகள் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுவிட்டனர். செயற்கை இரத்தத்தை உருவாக்கி இரண்டு மனிதர்களுக்கு 5 முதல் 10 மில்லி மீட்டர் செலுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள். உலகில் அரிய வகை இரத்தத்தை உருவாக்கும் முயற்சியில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டார்கள். ரஜினி அவர்களே, நவீன அறிவியலுக்கு வாருங்கள்! பெரியார் முழக்கம் 16032023 இதழ்  

சேலத்தில் 50 இடங்களில் சுவரெழுத்து

சேலத்தில் 50 இடங்களில் சுவரெழுத்து

சேலத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சுவரெழுத்துகள் எழுதப்பட் டுள்ளன. கடை வீதி வசூல் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. தோழர்கள் உற்சாகமாக செயல்படுகிறார்கள். கோவை : சேலத்தில் ஏப்ரல் 29.30 ஆகிய தேதிகளில் கழகம் நடத்தும் “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டிற்கான துண்டறிக்கை மற்றும் நன்கொடை ரசீது புத்தகங்களை கோவை மாநகரக் கழகத்திற்கு மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி மாநிலப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் நேரில் வழங்கி மாநாட்டுப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகளை கூறினார்கள். உடன் மாநகர அமைப்பாளர் நிர்மல் குமார். அய்யப்பன். கிருஷ்ணன். ராஜாமணி ஆகியோர். 100 வயதையும் தாண்டி உற்சாகம் பெரியார் பெருந்தொண்டர் அய்யா தங்கவேல் (ஆத்தூர்) அவர்களுக்கு 100 வயதாகிறது. நன்கொடைக்காக வந்த   கருஞ்சட்டை தோழர்களைக் கண்டதும் அதே உற்சாகத்தோடு தனது கடையில் வெள்ளை சட்டையில் இருந்தவர் நான் பெரியாரின் தொண்டன் உங்களோடு கருப்புச் சட்டையுடன் தான் புகைப்படம் எடுத்துக் கொள்வேன்...

சேலம் மாநாடு, தோழர்கள் தீவிரம்

சேலம் மாநாடு, தோழர்கள் தீவிரம்

சேலம் ஆத்தூர் : திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு!” ஏப்ரல் மாதம் 29,30 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி கடைவீதி வசூல் மற்றும் சந்தை வசூல் சேலம் கிழக்கு மாவட்டக் கழக சார்பாக 11.03.2023 சனி மதியம் 12 மணிக்கு ஆத்தூரில் மகேந்திரன் தலைமையில் தொடங்கியது. ஆத்தூர் தந்தை பெரியார் சிலை முன்பு இருந்து தொடங்கபட்ட நன்கொடை திரட்டும் பணி இரவு 9 மணி வரை நடைபெற்றது.  ஆத்தூரில் மொத்த நன்கொடை ரூ.8,200 பெறப்பட் டுள்ளது. கிருஷ்ணன், தங்கதுரை, பிரபாகரன், ஆத்தூர் மகேந்திரன், சிந்தாமனியூர் முருகேசன், ஆனந்தி, வெங்கடேஷ், ஆத்தூர் மணிகண்டன், ஆத்தூர் செங்கமலை ஆகியோர் வசூல் பணிகளை மேற்கொண்டனர். சென்னையிலிருந்து நான்கு பேருந்துகள் சேலம் மாநாட்டுக்கு சென்னையிலிருந்து 4 பேருந்துகளில் புறப்பட சென்னை மாவட்டக் கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், மார்ச் 13, 2023 மாலை...

உணர்வுகளைப் பகிர்ந்த பெண்கள் சந்திப்பு

உணர்வுகளைப் பகிர்ந்த பெண்கள் சந்திப்பு

அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் மகளிர் தின பெண்கள் சந்திப்பு நிகழ்வு, 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை சென்னை கழகத் தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் தொங்கி மாலை 5.30 வரை நடைபெற்றது. நிகழ்விற்கு தேன்மொழி தலைமை ஏற்று நடத்தினார். ஜெயந்தி வரவேற்புரை நிகழ்த்தினார். மதிவதனி அன்னை மணியம்மையார் குறித்து தொடக்கவுரை ஆற்றினார். குறளரசி மற்றும் ஆதித்யா ஆகிய இருவரும் திராவிட இயக்கத்தின் பெண் தலைவர்களான அன்னை நாகம்மையார், தோழர் கண்ணம்மாள், அன்னை சத்தியவாணிமுத்து, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், குஞ்சிதம் அம்மையார், டாக்டர் எஸ்.தருமாம்பாள் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். அடுத்த நிகழ்வாக தோழர்கள் பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றினர். றடிஆஹசூ – உடலும், உளவியலும் – தேன்மொழி; பெண்களின் சுயமரியாதையை நிலைநாட்டும் திராவிட மாடல் (அன்றும்-இன்றும்) – ரம்யா; குடும்ப கௌரவத்தின் அடையாளம் பெண்கள் (உருட்டுகளும், புரட்டுகளும்) – அறிவுமதி; சட்டம் பேசாதே! டாக்டர் அம்பேத்கர் பெற்றுத்தந்த பெண்ணிய உரிமைகள் –...

சேலம் மாநில மாநாட்டுக்கு நிதி பங்களிப்பு வழங்கிய மாவட்டங்கள்

சேலம் மாநில மாநாட்டுக்கு நிதி பங்களிப்பு வழங்கிய மாவட்டங்கள்

ஈரோடு : ரூ.1,00,000 கோபி : ரூ.1,00,000 நாமக்கல் : ரூ.1,00,000 திருப்பூர்  : ரூ.50,000 தர்மபுரி : ரூ.50,000 கோவை : ரூ. 40,000 தஞ்சை மற்றும் திருச்சி : ரூ.50,000 மதுரை : ரூ. 25,000 மயிலாடுதுறை : ரூ. 25,000   பெரியார் முழக்கம் 25052023 இதழ்

“புரட்சிப் பெரியார் முழக்கம்” தோழர்களுக்கு வேண்டுகோள்

“புரட்சிப் பெரியார் முழக்கம்” தோழர்களுக்கு வேண்டுகோள்

“புரட்சிப் பெரியார் முழக்கம்” பொறுப்பாளராக கழகத் தோழர் அன்னூர் விஷ்ணு செயல்பட்டு வருகிறார். பெரியார் முழக்கம் தொடர்பாக தோழர்கள் கீழ்க்கண்ட அலைபேசி எண்ணுக்கு அவரைத் தொடர்புக் கொள்ளவும். அலைபேசி எண் : 8973341377 விடுதலை இராசேந்திரன் ஆசிரியர், புரட்சிப் பெரியார் முழக்கம் பெரியார் முழக்கம் 25052023 இதழ்

திலீபன் மீது கொலை வெறித் தாக்குதல் வேலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

திலீபன் மீது கொலை வெறித் தாக்குதல் வேலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

திலீபன் மீது காவலர்கள் முன்னிலையில் கொலை வெறித் தாக்குதல் நடத்திய ராமமூர்த்தி தலைமையிலான வன்முறை கும்பலை கைது செய்! திலீபன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறு! எனும் கோரிக்கைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையம் முன்பு 08.05.2023 திங்கள் காலை 10.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் பெரப்பேரி திலீபன், தன் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு எதிராக ஊர் கட்டுப்பாடு போட்டதை எதிர்த்து போராடியதற்காகவும், தன் கிராமத்தில் பொது வழிப் பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான ஆணையைப் பெற்று வந்தார். இந்நிலையில்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை சைமன் ஆணையத்தை இந்தியாவில் வரவேற்றவர்கள் பெரியார், அம்பேத்கர் மட்டுமே!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை சைமன் ஆணையத்தை இந்தியாவில் வரவேற்றவர்கள் பெரியார், அம்பேத்கர் மட்டுமே!

செங்கல்பட்டு மாநாட்டுக்கு தனி தொடர்வண்டி விடப்பட்டது. தனி இரயில்வே நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடைசி நேரத்தில் இரயில்வே துறையின் முட்டுக்கட்டையால் நின்று போனது. ¨          சைமன் கமிஷன் அறிக்கைக்குப் பிறகு தான், ‘தீண்டப்படாத’ மக்களுக்கு தனித் தொகுதி, இரட்டை வாக்குரிமை கிடைத்தது. காந்தி அதை உண்ணாவிரத நாடகம் நடத்தி தடுத்து விட்டார். பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. (சென்ற இதழ்த் தொடர்ச்சி) செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு எப்படி நடந்தது என்பதற்கு குடிஅரசில் பல செய்திகளைப் பதிவு செய்கிறார் பெரியார். அந்த மாநாட்டில் அன்றைய முதலமைச்சராக இருந்த டாக்டர். சுப்பராயன் கலந்து கொள்கிறார். பிடி.இராசன் கொடியேற்றி உரையாற்றுவார். எம்.கே.ரெட்டி வரவேற்புக் குழு தலைவர், டாக்டர் சுப்பராயன் மாநாட்டை திறந்து வைப்பார். றுஞஹ...

சனாதனத்தின் கொடூர வரலாறு (2) கோயில் நுழைவு உரிமை சந்தித்தத் தடைகள்

சனாதனத்தின் கொடூர வரலாறு (2) கோயில் நுழைவு உரிமை சந்தித்தத் தடைகள்

பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொடங்கி சுதந்திர இந்தியாவில் சனாதனம் பேசி பார்ப்பனியம் எந்த ஒரு சிறு சமூக மாற்றத்தையும் தடுத்து வந்ததோடு நீதி மன்றங்களிலும் வழக்குத் தொடர்ந்தது. ஆண்டு வாரியாக சனாதனக் கொடுமைகள் அது தொடர்பான வழக்குகள் குறித்து ஒரு சுருக்கமான ஆண்டுகள் வழியான தொகுப்பு. மனோஜ் மிட்டல் எழுதி அண்மையில் வெளிவந்த மிகச்சிறந்த நூலான ஜாதியப் பெருமை (Caste Pride) நூலிலிருந்து: (சென்ற இதழ்த் தொடர்ச்சி) 1926 : மராட்டியப் பகுதிகளில் பிராமண அர்ச்சகர்கள் பரம்பரை அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்துக்கும் தங்களை அதிகாரபூர்வ அர்ச்சகர்களாக நியமித்துக் கொண்டனர். எந்த வைதீக சடங்குகளும் நடத்தும் உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று உரிமை கோரினார்கள். வெளியில் இருந்து ஒரு அர்ச்சகர் சடங்கு நடத்தி கட்டணம் வாங்கியதை எதிர்த்து நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தனர். பம்பாய் உயர் நீதிமன்றம் புரோகித பார்ப்பனர்கள் பரம்பரை உரிமையை உறுதி செய்து தீர்ப்பளித்து விட்டது. வைதீக சடங்குகள்...

ஹிட்லர் வழியில் பாஜக

ஹிட்லர் வழியில் பாஜக

பாரதிய ஜனதா கட்சி ஒரு வகுப்புவாத கட்சி என்பதற்கு சான்றாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் அருவா மாவட்டத்தில் மவுரியா நகரசபைத் தலைவராக இருக்கும் யஷ்பால் பேனா, இவர் தனது மகள் ஒரு இஸ்லாமியரை காதலித்தார் என்பதை ஏற்றுக் கொண்டு இருவருக்கும் திருமணம் செய்வதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து இம்மாதம் 28ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது. குடும்ப நிகழ்ச்சியான  திருமணத்திற்கு அரசியல் கட்சியான பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது. உத்தரகாண்டில் இந்து அமைப்பினர் இந்தத் திருமணத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.  அதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாக தான் இருப்பதால் இந்தத் திருமணம் நடைபெறுவதை விரும்பவில்லை என்று கூறி தனது மகளின் திருமணத்தை ரத்து செய்து இருக்கிறார். பா.ஜ.க.வினர் அசைவம் சாப்பிடக் கூடாது; பா.ஜ.க.வினர் பிராமணனை வணங்க வேண்டும் என்றுகூட போராட்டம் நடத்தினாலும் வியப்பு இல்லை. திருமணம் என்பது தனிமனித உரிமையைச் சார்ந்தது.  இருவரும் காதலித்தார்கள்; இருவரும் திருமணம் செய்ய...

தலையங்கம் தோழர்களே, தயாராவீர்!

தலையங்கம் தோழர்களே, தயாராவீர்!

வைக்கம் போராட்டத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில் “வைக்கம் போர் முடியவில்லை” எனும் தலைப்பில் ஜாதித் தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுக்க திராவிடர் விடுதலைக் கழகம் முடிவு செய்து இருக்கிறது. தமிழ்நாட்டில் சாக்கடை மலகுழிகளை சுத்தம் செய்யும் ஆபத்தான இழிவு வேலைகளுக்கு மனிதர்களைப் பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. நச்சுக் காற்றில் சிக்கி பல தலித் தோழர்கள் உயிரிழக்கிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தி செயல்பட முன் வந்திருப்பதை நாம் பாராட்டி வரவேற்கிறோம். மனித கழிவுகளை மனிதர்கள் எடுப்பது சட்டப்படி தடை செய்யப்பட்ட நிலையில் இந்த அவலம் தமிழகத்தில் அதிகம் நடப்பதை முதல்வர் நேர்மையோடு ஒப்புக்கொண்டு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். முதல் கட்டமாக நகர பகுதிகளில் நவீன இயந்திரங்களை அடுத்த நான்கு மாத காலத்துக்குள் முழுமையாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இனிவரும் காலங்களில் மனிதர்கள் செய்யும்...

திராவிட இயக்கத்தின் இன்றைய திசை வழி விடுதலை இராசேந்திரன்

திராவிட இயக்கத்தின் இன்றைய திசை வழி விடுதலை இராசேந்திரன்

‘முரசொலி’ – முதல்வர் மு.க. ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாள் சிறப்பு மலருக்கு எழுதிய கட்டுரை. 1916இல் சென்னை மாகாணத்தில் திராவிடர் இயக்கம் முன்வைத்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற சமத்துவக் கோட்பாடு இன்று 100 ஆண்டுகள் கடந்து புதிய பரிணாமங்களைப் பெற்று வளர்ந்து வருகிறது. அன்றைக்கு பார்ப்பனப் பிடியில் சிக்கியிருந்த காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் மட்டும் திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, ராஜாஜி காலத்துக்குப் பிறகு சமூக நீதிக் குரலை ஒலித்து, திராவிட இயக்கப் பாதையில் நடைபோடும் சூழல் உருவானது. சனாதன தர்மத்தை என்றுமே மாற்ற முடியாது என்று வர்ணாஸ்ரமத்தை உயர்த்திப் பிடித்த சக்திகள், பல்வேறு தடைகள் எதிர்ப்புகளைக் கடந்தும் உருத்திரட்சிப் பெற்று, இப்போது ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டது. இதன் விளைவாக திராவிடம் – சனாதனம் என்ற முரண்பாடுகள் கூர்மையடைந்து நிற்கின்றன. புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய வரலாற்றுச் சூழலை உருவாக்கியுள்ளது. திராவிட இயக்கம்...

எழுச்சியுடன் நடந்த செயலவை

எழுச்சியுடன் நடந்த செயலவை

சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்டம் மே 21 காலை 10:30 மணியளவில் குகை ஜிபி கூடத்தில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் கோவிந்தராஜ் கடவுள் ஆத்மா மறுப்புகளைக் கூறத் தொடங்கியது. மாநகரச் செயலாளர் ஆனந்தி வரவேற்புரையாற்ற பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செயலவை நோக்கம் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தீர்மானங்களை முன்மொழிந்தார் . 30 தோழர்கள் மாநாட்டின் வெற்றி, எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து கருத்துகளை முன் வைத்தனர். மாநாட்டின் வரவு செலவு கணக்குகளையும் அவையின் முன் வைத்தனர், புரட்சிப் பெரியார் முழக்கம் வரவு செலவுக் கணக்குகளை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செயலவையில் முன் வைத்தார். 85 தோழர்கள் செயலவையில் பங்கேற்றனர். மதியம் அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. காலை 10:30 மணிக்கு தொடங்கிய செயலவை உணவு இடைவேளையைத் தொடர்ந்து மாலை 6 மணி வரை நீடித்தது....

அர்ச்சகர் சட்டம்: மதுரை நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

அர்ச்சகர் சட்டம்: மதுரை நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீரங்கம் குமார வயலூர் கோவிலில் அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்தின்படி மூன்று அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் ஒருவர் பார்ப்பனர். ஏனைய இரண்டு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களின் நியமனம் செல்லாது என்றும், இதற்கு முன்பு பணியில் இருந்த பார்ப்பனர்களுக்கே அர்ச்சகர் பணி கொடுக்கப்பட வேண்டும் என்றும், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்பைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மார்ச் 9, 2023 மாலை 4 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் இரா. உமாபதி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் தொடக்கமாக கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, காஞ்சிபுரம் ரவிபாரதி உரையாற்றினார். பின், தோழர் நாத்திகன், இரண்யா, ப்ரீத்தி ஆகியோர் ‘தூங்குறியா நடிக்கிறியா ரங்கநாதா?’ பாடல்களைப் பாடினர். அனைத்து சாதியினர் அர்ச்சகர் பயிற்சி மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன், பணி...

மீண்டும் கருவறைத் தீண்டாமையை நிலைநாட்டியது, மதுரை உயர்நீதிமன்றம் வடநாட்டில் இல்லாத ஆகமம் தமிழ்நாட்டுக்கு ஏன்? ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் உரை

மீண்டும் கருவறைத் தீண்டாமையை நிலைநாட்டியது, மதுரை உயர்நீதிமன்றம் வடநாட்டில் இல்லாத ஆகமம் தமிழ்நாட்டுக்கு ஏன்? ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் உரை

ஆகமங்களைத் தடை செய்யக் கோரி – இனி ஆகம எரிப்புப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை வந்துவிட்டது என்று கூறிய தி.வி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஆகம விதிகள் பார்ப்பனர்களால் மீறப்பட்டதைப் பட்டியலிட்டுக் காட்டினார். வயலூர் முருகன் கோயில் அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட இரண்டு பார்ப்பனரல்லாத அர்ச்சகர் நியமனத்தை செல்லாது என்று அறிவித்து விட்டது மதுரை உயர்நீதிமன்றக் கிளை. ஏற்கனவே 10 ஆண்டுகளாக எவ்வித வேத ஆகம தகுதித் தேர்வுகள் இல்லாமல் குல வழி அர்ச்சகர்களாக இருக்கும் இரண்டு பார்ப்பன அர்ச்சகர்கள் தொடர்ந்த வழக்கு, இந்த இருவரும் முறைப்படி அறநிலையத் துறை நியமனம் பெறாவிட்டாலும் அந்தக் கோயிலின் காமிகா ஆகமப்படி ஆதி சிவாச்சாரியார், ஆதி சைவர் குலத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குத் தான் அர்ச்சகர் தகுதி உண்டு என்று நீதிபதி ஜீ.ஆர். சாமிநாதன் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார். அறநிலையத் துறை நியமித்த மூன்றாவது அர்ச்சகர் பார்ப்பனர் என்பதால் அவரை எதிர்த்து...

வினா விடை

வினா விடை

பிரபாகரன் விரைவில் வெளியே வருவார்; அதற்கான ஆதாரங்கள் கிடைத்தப் பிறகு, வெளியிடுவோம்.  – பழ. நெடுமாறன் ஆதாரங்களே, இன்னும் கிடைக்கவில்லையா, அய்யா! காரைக்கால் அருகே ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இந்து முன்னணி அலுவலகத்தை ஜடாய்புரீஸ்வரர் கோயில் நிர்வாகம் இடித்ததைக் கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம். – செய்தி இந்து முன்னணிக்கு சபாஷ். இப்படித்தான் இந்து கோயில் நிர்வாகத்தை எதிர்த்துப் போராட வேண்டும். இனி இந்து கடவுள் ஜடாய்புரீஸ்வரரையும் எதிர்த்துப் போராடுங்க. அப்பத்தான் நீங்கள் ‘இந்து முன்னணி’. நாடு முழுதும் பசுவதைத் தடைக்கு சட்டம் இயற்ற – புராணங்களை ஆதாரம் காட்டி அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தல். – செய்தி இப்போதெல்லாம் உயர்நீதிமன்றங்கள் அரசியல் சட்டங்களைப் புறக்கணித்து புராணங்கள் அடிப்படையிலே தீர்ப்புகள் வழங்குகின்றன. நீதிமன்றங்களின் பெயரை புராண இதிகாச பை  என்று மாற்றி விடலாம். ஆன்மீகம் இல்லை என்றால் தமிழ் இல்லை. – ஆளுநர் தமிழிசை ‘ஆன்மீகம்’ என்பதே தமிழ் இல்லை, மேடம்!...

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் எதிர்வரும் மே 21, 2023 காலை 10 மணியளவில் கழகச் செயலவைக் கூடுகிறது. பொருள் : மாநாடு பற்றிய ஆய்வு, எதிர்காலச் செயல் திட்டங்கள் மற்றும் மாநாடு வரவு செலவுகள் ஒப்படைத்தல். செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்துக் கொள்ள வேண்டுகிறோம். இடம் : ஜி.பி. ஹால், 52ஊ/1, பென்சன் லைன் ரோடு, குகை ஆண்கள் உயர்நிலைப் பள்ளி அருகில், சேலம், கொளத்தூர் மணி, தலைவர் விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர் பெரியார் முழக்கம் 18052023 இதழ்  

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் : கழகத் தலைவர் தலைமையில் நடந்தது

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் : கழகத் தலைவர் தலைமையில் நடந்தது

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 11.05.2023 வியாழன் காலை 11.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மேட்டூர் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் சேலத்தில் நடைபெற்ற இரண்டு நாள் மாநில மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் மாநாட்டு வரவு செலவு கணக்குகளை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் ஆகியோர் மாநாடு குறித்தும், மாநாட்டிற்காக உழைத்த தோழர்களைப் பற்றியும், தோழர்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் இந்த மாநாடு சிறக்க உதவியாக இருந்தது என்று தமது உரையில் குறிப்பிட்டனர். அதன் பிறகு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த மாவட்ட அமைப்பாளர்கள், மாநகர, நகர, ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்களும், தோழர்களும், மாநாடு குறித்தும் மாநாட்டிற்காக தங்கள் பகுதியில் திரட்டிய நன்கொடை மற்றும் செலவு...

இளைஞர்களே, இதுதான் பார்ப்பனியம்! சனாதனத்தின் கொடூர வரலாறு

இளைஞர்களே, இதுதான் பார்ப்பனியம்! சனாதனத்தின் கொடூர வரலாறு

பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொடங்கி சுதந்திர இந்தியாவில் சனாதனம் பேசி பார்ப்பனியம் எந்த ஒரு சிறு சமூக மாற்றத்தையும் தடுத்து வந்ததோடு நீதி மன்றங்களிலும் வழக்குத் தொடர்ந்தது. ஆண்டு வாரியாக சனாதனக் கொடுமைகள் அது தொடர்பான வழக்குகள் குறித்து ஒரு சுருக்கமான ஆண்டுகள் வழியான தொகுப்பு. மனோஜ் மிட்டல் எழுதி அண்மையில் வெளிவந்த மிகச்சிறந்த நூலான ஜாதியப் பெருமை (ஊயளவந ஞசனைந) நூலிலிருந்து: 1795 :  உயர் ஜாதியினரிடம் நல்ல பெயர் வாங்கும் நோக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனி காசி பார்ப்பனர்களுக்கு மட்டும் தூக்கு தண்டனையிலிருந்து விதிவிலக்கு அளித்தது. 1816 : கீழ் ஜாதிக்காரர்கள் சிறு குற்றங்கள் செய்தாலும் அவர்களை ஆடு மாடுகள் அடைக்கும் பட்டிகளில் அடைத்து வைக்கும் தண்டனையைக் கிழக்கிந்திய கம்பெனி அறிமுகப்படுத்தியது. 1829 : உயர்ஜாதியினரின் கடும் எதிர்ப்பு களையும் மீறி வில்லியம் பென்ட்டிங் கணவன் இறந்த நெருப்பில் மனைவி தானாக விரும்பி வீழ்ந்தாலும் அல்லது கட்டாயப்படுத்தி நெருப்பில் தள்ளப்பட்டாலும்...

கொடைக்கானலில் ஆளுநருக்குக் கழகம் கருப்புக் கொடி

கொடைக்கானலில் ஆளுநருக்குக் கழகம் கருப்புக் கொடி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானலுக்கு வருகை தந்ததை ஒட்டி அவருக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகச் செயல்படுவதையும், சட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதைக் கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டன. பின்னர் கழகத் தோழர்கள் மருதமூர்த்தி, பெரியார், மாக்சிம் கார்கி, ராஜா, கபாலி, ஆயுதன், வீரா, ஜீவா, துர்க்கைராஜ், சிவா, முருகன் உள்ளிட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுக்கப்பட்டனர். பெரியார் முழக்கம் 18052023 இதழ்

விடுதலை சிகப்பி மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்

விடுதலை சிகப்பி மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்

கவிஞர் விடுதலை சிகப்பி மீது சென்னை அபிராமபுரம் காவல்துறை பொய் வழக்கு ஒன்றை பதிவு செய்திருக்கிறது. அவர் இந்து கடவுள்களை அவமதித்து விட்டார் என்று பாரத் இந்து முன்னணி என்ற ஒரு அமைப்பு கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கவிஞர் விடுதலை சிகப்பி கவிதையில் மலக்குழியில் இறக்கிவிடப்பட்டு அன்றாடம் செத்து ஒழிவதற்கென்றே சில ஜாதிகளை கடவுள் தான் படைத்தார் என சொல்லப்பட்டால் அந்த கடவுள் ஒருநாள் இறங்கி இந்த வாழ்வு எவ்வளவு கொடியது என்பதை நேரடியாக உணரட்டும் என்ற ஆவேசத்துடன் அவர் எழுதிய கவிதை. தன்னுடைய கற்பனை சிந்தனைத் திறனை இராமன், இலட்சுமணன் மலக்குழியில் இறங்குவது போல் அவர் சித்தரித்தார். இது இந்து கடவுள்களைப் புண்படுத்திவிட்டது என்று ஓலமிடுகிறார்கள். சக மனிதனை ஜாதியின் பெயரால் இழி தொழில் செய்ய வைத்து மனித மலத்தை எடுக்கச் சொல்வதும், மலக்குழியில் இறங்கச் சொல்வதும் எவ்வளவு பெரிய சமூக அவமானம். எவ்வளவு பெரிய...

காங்கேயத்தில் நிர்வாண சாமியார்கள்: நடவடிக்கை எடுக்கக் கழகம் கோரிக்கை

காங்கேயத்தில் நிர்வாண சாமியார்கள்: நடவடிக்கை எடுக்கக் கழகம் கோரிக்கை

காங்கேயம் நகராட்சி அலுவலகத்திற்குள் நிர்வாண சாமி யார்களை அழைத்து வந்து ஆசி வாங்கியது தொடர்பாக ஆணையர், மாநகராட்சி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் இணைந்து கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மே 13, சனிக்கிழமை அன்று திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல்துறை ஆணையாளர் அவர்கள் விசாரணையின் அடிப்படையில் புகார் மனுவின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் முகில் ராசு, முகநூல் பொறுப்பாளர் பரிமள ராசன், சங்கீதா, இராமசாமி, மாரிமுத்து, ஆதித்தமிழர் பேரவை அவிநாசி மணி, தமிழ்மாறன், து.தலைவர் கு.ஜானகி, புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழமுதன், வேலு, மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு கார்மேகம் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 18052023 இதழ்

பா.ஜ.க. இல்லாத தென்னகம்

பா.ஜ.க. இல்லாத தென்னகம்

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்றிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி சந்தித்து இருக்கிறது. பாஜக செய்த வெறுப்பு அரசியலை மக்கள் ஆதரிக்க தயாராக இல்லை என்பதையே இந்த தேர்தல் நமக்கு உணர்த்துகிறது. கர்நாடக மாநிலத்திற்கு என்று சில தனித்த பண்புகள் உண்டு. அதை சமூக நீதி மாநிலமாக மாற்றி அமைத்த பெருமை தேவராஜ் அர்ஸ் என்பவரையே சாரும். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்தவர் தேவராஜ் அர்ஸ். தமிழ்நாட்டில் 69ரூ  இட ஒதுக்கீடு வருவதற்கு முன்பே கர்நாடகாவில் 71% இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய சமூக நீதிப் போராளி அவர்.  மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தவர் அவர். சென்னை சைதாப்பேட்டையில் திராவிடர் கழகம் நடத்திய மண்டல் கமிஷன் இயக்கத்திற்கு ஆதரவான மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியவர் தேவராஜ் அர்ஸ்.  சமூக நீதி மாநிலமாகத் திகழ்ந்த கர்நாடகாவில் பிற்காலத்தில்...

மக்களைக் குழப்பும் போலி அறிவியல்

மக்களைக் குழப்பும் போலி அறிவியல்

பெரியார் இயக்கம் என்பதே ஒரு அறிவியல் இயக்கம் தான். நாம் பேசாத அறிவியல் இல்லை. எனினும் இன்றைய சூழலில், போலி அறிவியலைப் பற்றியும் நாம் பேச வேண்டியுள்ளது. 200 ஆண்டுகளுக்கு முந்தைய சமுதாயத்தில், அறிவியல் பேசுபொருளாக இருக்கவில்லை. ஆனால் இன்று அறிவியல் பேசுபொருளாக உள்ளது. இதனால் நேர்மறை விளைவுகளும் உண்டு; எதிர்மறை விளைவுகளும் உண்டு. புதிய விஞ்ஞான கண்டு பிடிப்புகளால் நம் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற்றங்கள் நேர்மறையான விளைவுகளாகும். அதே வேளையில், மக்களிடம் இருக்கும் அறிவியல் சொற்கள் மீதான ஆர்வத்தை பயன்படுத்திக் கொண்டு, அச்சொற்களை வைத்தே பொய்யான தகவல்களை பரப்புவது, எதிர்மறையான விளைவாகும். இச்சூழ்நிலையே நம்மை போலி அறிவியலைப் பற்றி பேசத் தூண்டுகிறது. போலி அறிவியல் என்றால் என்ன? ஒரு பொய்யான மூடநம்பிக்கை கருத்து, அறிவியல் முலாம் பூசப்பட்டு, உண்மையைப் போல காட்டப்படும் போது, அது போலி அறிவியலாகிறது. (Pseudoscience). உதாரணமாக, சனீஸ்வரன் கோயிலை எடுத்துக் கொள்வோம். திருநள்ளாறு சனீஸ்வரன்...

கலிபோர்னியாவில் ஜாதிக்குத் தடை

கலிபோர்னியாவில் ஜாதிக்குத் தடை

அமெரிக்காவில் சீட்டில் நகரசபையைத் தொடர்ந்து – கலிபோர்னியா மாநிலத்திலும் ஜாதி ஒழிப்புத் தீர்மானம் நிறைவேறியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.  ஜாதிப் பாகுபாடுகளைத் தடை செய்கிறது அத் தீர்மானம். ஜாதிய நிகழ்வுகள் நடத்துவது அதில் பங்கேற்பது குற்றம் என்கிற தீர்மானம் 34 உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.  இந்த தீர்மானத்திற்கு ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவென்றால் இந்த மசோதாவை கலிபோர்னியாவின் செனட் சபையில் கொண்டு வந்தவர் ஆயிஷா மஹால் என்ற இஸ்லாமியப் பெண்.  கலிபோர்னியா மாகாண சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண்ணும் இவர்தான்.  இவர் ஆப்கான் – அமெரிக்க தம்பதிகளுக்குப் பிறந்தவர். இதற்காக முழு முயற்சிகளில் இறங்கி இந்த மசோதாவை ஒரு மாதத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தினார்.   செனட் சபையின் சட்ட ஆலோசனைக் குழு மசோதாவைப் பரிசீலித்து ஒப்புதல் தந்தது. ஜாதி, தீண்டாமையை எதிர்த்து அமெரிக்காவில் போராடிக் கொண்டிருக்கும்...

பொதுச் செயலாளர் விடுதலை  இராசேந்திரன் உரை மாநாட்டின் வெற்றிக்கு அடித்தளம் நமது தோழர்களின் உழைப்பு – அர்ப்பணிப்பு

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை மாநாட்டின் வெற்றிக்கு அடித்தளம் நமது தோழர்களின் உழைப்பு – அர்ப்பணிப்பு

மாநாட்டில் நிறைவாக உறுதிமொழியைப் படிப்பதற்கு முன், கழகப் பொதுச் செயலாளர் நிகழ்த்திய சுருக்கமான உரை: இந்த மாநாட்டைப் பொறுத்த வரை மாநாடு அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இருக்கிற நமது தோழர்கள் ஆற்றிய பணி மிகப் பெரிய அளவிடற்கரியது; மதிப்புக்குரியது. குறிப்பாக கடைவீதிகளில் சாதாரண மக்களை சந்தித்து கடைவீதி வசூல் என்ற ஒரு இயக்கத்தைத் தொடங்கி இரண்டு மூன்று வாரங்களாக தோழர்கள் இதே பணியை செய்து மாநாட்டிற்கு நிதி திரட்டினார்கள். சுவர் எழுத்து விளம்பரங்களை செய்தனர், மாநாட்டுப் பணிகளில் தங்களை முழுமையாக மூழ்கடித்து, அர்ப்பணித்து  செயல்பட்டனர். இந்த மாநாடு மிகப் பெரிய வெற்றியடைவதற்கு அடித்தளமிட்டது, கழகச் செயல் வீரர்களின் கடுமையான உழைப்பு ஒன்று மட்டும்தான் என்பதை இந்த மாநாட்டின் வழியாக நாம் சொல்லியாக வேண்டும். சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் அந்த மாவட்ட கழகத் தோழர்கள் கடைவீதி வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திக் காட்டினார்கள். தொடர்ச்சியாக மக்களை சந்தித்து சாதாரண மக்களிடம்,...

செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் போல் சேலம் மாநாட்டுத் தீர்மானங்களும் வெற்றி பெறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் போல் சேலம் மாநாட்டுத் தீர்மானங்களும் வெற்றி பெறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

கழக மாநில மாநாட்டில் (ஏப்.30) இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைஅமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையின் கடந்த இதழ் தொடர்ச்சி. பெரியாரின் தொண்டினை படம்பிடிக்கும் வரிகள்! தந்தை பெரியாரின் தொண்டினைப் பற்றி ஒருவர் எழுதியிருந்ததைப் படித்தேன். “அவரின் கையெழுத்து நன்றாக இருக்காது, ஆனால் நாம் அழகாக எழுதினோம். அவரின் பேச்சு கொச்சையாக இருந்தது, ஆனால் நாம் அழகுத் தமிழில் பேசினோம். அவர் பள்ளிக்கூடம் கூட தாண்டவில்லை, ஆனால் நாம் பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் பெற்றோம். அவர் உடை கைலியும் சட்டையுமாய் இருந்தது. ஆனால் நாம் கோட்சூட் அணிந்தோம். தந்தையே உன்னை போற்றுகிறோம், தலைநிமிர்ந்து வாழ்த்துகிறோம்.” பெரியாரையும் அவர் ஆற்றிய தொண்டினையும் சிறப்பாக படம்பிடிக்கும் வரிகள் இவை. ஒவ்வொரு கூட்டத்திலும் பேசத் தொடங்கும் போது, பெரியார் இப்படி சொல்கிறார். “என்னுடைய கருத்துக்களையும் என்னுடைய அனுபவங்களையும் உங்களுக்குச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. இதனைப் போன்றே, நான் சொல்லுகின்ற கருத்துக் களை சிந்தித்துப்...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம்  மாநாட்டு உரை நூலாக வெளி வந்து விட்டது

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் மாநாட்டு உரை நூலாக வெளி வந்து விட்டது

சேலம் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரை; சென்னையில் கழகம் நடத்திய தமிழர் திருநாள் விழாவில் நிகழ்த்திய உரைகளை இணைத்து “இது தமிழ்நாடு!” எனும் தலைப்பில் நூலாக கழகம் வெளியிட்டுள்ளது. கடந்த மே 7ஆம் தேதி திருவல்லிக்கேணி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி நூலையும் மாநாட்டு செய்திகள் அடங்கிய “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழையும் அமைச்சரிடம் நேரில் வழங்கினார். நூல் விலை : ரூ.30/- நூல் தேவைப்படுவோர் கழக தலைமை நிலையத்தை தொடர்பு கொள்ளவும். தொடர்பு எண் :  + 91 98416 53200 / +91 8973341377 பெரியார் முழக்கம் 11052023 இதழ்

தலையங்கம் எல்லை மீறாதீர், ஆளுநரே!

தலையங்கம் எல்லை மீறாதீர், ஆளுநரே!

மே 4 ஆம் தேதி வெளிவந்த கூiஅநள டிக ஐனேயை நாளிதழுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். வழக்கமான உளறல்கள் தான் இந்த பேட்டியிலும் இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டை சீண்டி பார்த்திருக்கிறார். திராவிட மாடல் என்ற ஒன்று கிடையாது. அது காலாவதியான தத்துவம், விரக்தியான மனநிலையில் இருக்கிறவர்கள் அது நீடிக்க வேண்டும் என்பதற்காக தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நாம் “ஒரே பாரதம் ஒரே இந்தியா” என்ற கொள்கையின் கீழ் வாழ்கிறவர்கள், இதற்கு எதிரானது தான் திராவிட மாடல். அது காலாவதியாகிவிட்டது என்று அவர் பேசியிருக்கிறார். திராவிட மாடலுக்கு எதிராக உருவான சனாதன தர்மத்தைத் தான் தனது கொள்கை என்று இந்த பேட்டியில் உயர்த்துப் பிடிக்கிறார் ஆளுநர் ரவி. ஆக திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது, ஆரிய மாடலான சனாதனம் தான் நமக்கான அடையாளம் என்று பச்சையாக ஆரியப் பெருமை பேசுகிறார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “காலாவதியானது...

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் எதிர்வரும் மே 21, 2023 காலை 10 மணியளவில் கழகச் செயலவைக் கூடுகிறது. பொருள் : மாநாடு பற்றிய ஆய்வு, எதிர்காலச் செயல் திட்டங்கள் மற்றும் மாநாடு வரவு செலவுகள் ஒப்படைத்தல். செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்துக் கொள்ள வேண்டுகிறோம். இடம் பின்னர் அறிவிக்கப்படும். கொளத்தூர் மணி, தலைவர் விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர்   பெரியார் முழக்கம் 11052023 இதழ்

மதவாத ஆட்சி அமைக்க மன்னராட்சி உருவாகும் ஆபத்து பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த உறுதி ஏற்போம்! ஜனநாயக சக்திகளுக்கு சேலம் மாநாடு அறைகூவல்

மதவாத ஆட்சி அமைக்க மன்னராட்சி உருவாகும் ஆபத்து பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த உறுதி ஏற்போம்! ஜனநாயக சக்திகளுக்கு சேலம் மாநாடு அறைகூவல்

இந்து இராஷ்டிரம் அமைக்க மன்னராட்சியை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் ஆபத்துகள் எதிர்நோக்கியுள்ள நிலையில் பா.ஜ.க. அணியை வீழ்த்த மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்று சேலத்தில் கூடிய (ஏப்.29, 30, 2023) திராவிடர் விடுதலைக் கழக மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. இது தமிழ்நாடு; இளம் தலைமுறை எச்சரிக்கை மாநாட்டுத் தீர்மானங்கள்: வேத மத ஆட்சியின் ஆபத்து : 1) தமிழ்நாட்டில்  நீண்டநெடுங்காலமாக பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதை, சமூகநீதி, பெண்ணுரிமைக் கொள்கைகளை சீர்குலைத்து வேத பார்ப்பனிய ஆட்சியை இந்துத்துவம் என்ற பெயரில் கொண்டுவர ஒன்றிய பாஜக ஆட்சி திட்டமிட்டு செயல்பட்டு வரும் நிலையில் அந்த ஆபத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் வேத பார்ப்பனியம் ஆட்சிக்கு வந்தால் நாம் அடிமையாகி படுகுழியில் தள்ளப்படுவோம் என்றும் நமது முன்னோர்கள் பெற்று தந்த தன்மான உணர்வை இழந்து கீழ் மக்கள் ஆகிவிடும் ஆபத்து உருவாகிவிடும் என்பதையும் இம்மாநாடு தமிழர்களுக்குச்...

மாநாட்டு மலர் வெளிவருகிறது

மாநாட்டு மலர் வெளிவருகிறது

சேலம் மாநாட்டில் கருத்தரங்கம், ஆய்வரங்கம், வரலாற்று அரங்கங்களில் கருத்தாளர்கள் நிகழ்த்திய உரைகள் முழுமையாக தொகுக்கப்பட்டு சேலம் மாநாட்டு மலராக விரைவில் வெளிவர இருக்கிறது. உரையாற்றிய கழகத் தோழர்கள் தங்களது உரையை எழுத்து வடிவில் விரைவாக அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். பெரியார் முழக்கம் 04052023 இதழ்

சனாதனத்துக்கு தமிழ்நாட்டில் சவக்குழி!

சனாதனத்துக்கு தமிழ்நாட்டில் சவக்குழி!

மாநாட்டின் இறுதி நிகழ்வாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சனாதன எதிர்ப்பு உறுதி மொழியை வாசிக்க, தோழர்கள் உறுதி எடுத்தனர். உறுதி மொழி விவரம்: இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாட்டில் அந்த கொள்கை உணர்வோடும் இலட்சிய துடிப்போடும் ஆயிரக் கணக்கில் கூடியிருக்கிற இளைஞர் களாகிய நாங்கள் கீழ்கண்ட உறுதியினை ஏற்கிறோம். ஜாதியற்ற தமிழர்களாக வாழ்ந்த நமது சமூகத்தை ஆரியம் ஊடுருவி வர்ணாசிரம சனாதனத்தால் வீழ்த்தியது. 1916இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம், பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கம் இரண்டும் இணைந்து உருவான திராவிடர் கழகம் தொடர்ந்து வந்த திராவிட ஆட்சிகள் ஆகியவற்றின் உழைப்பால் திராவிடர் என்ற பெருமையோடு நாம் தலை நிமிர்ந்தோம். பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுத்து நம்மை இழிமக்களாக்கிய ஆரிய சனாதனத்திற்கு எதிரானது எங்கள் திராவிடம். ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான சமத்துவம் சம நீதியே எங்கள் திராவிடம். ஆனால் சனாதன ஒன்றிய ஆட்சி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சமத்துவத்தை...

அரசியலில் பங்கேற்காத இந்த இயக்கத்தை நோக்கி திரண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தைப் பார்த்து வியக்கிறேன் – மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் முழக்கம்

அரசியலில் பங்கேற்காத இந்த இயக்கத்தை நோக்கி திரண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தைப் பார்த்து வியக்கிறேன் – மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் முழக்கம்

  சனாதனத்தை வேரறுப்போம், வெறுப்பு அரசியலை வீழ்த்துவோம், மாநில உரிமைகளைக் காப்போம் என்ற முழக்கங்களோடு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநில மாநாட்டில்” கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமையடை கிறேன். இந்த இரண்டு நாள் மாநாடு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு முன்னணி பேச்சாளர்கள் எல்லாம் பங்கேற்று கருத்துரை வழங்கியிருக்கிறார்கள். இந்த மாநாட்டை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி இருக்கக்கூடிய அண்ணன் கொளத்தூர் மணி அவர்களுக்கும் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திவிகவுடன் எனக்கு நெருக்கம் குறிப்பாக இந்த மேடையில் நம்முடைய கொள்கையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிற ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இளைஞர்களுக்கு நம்முடைய கருத்துக்களை கொள்கைகளை விளக்கக்கூடிய ஒரு முயற்சியாக திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் சார்பாக நடந்த “திராவிட மாடல் பயிற்சிப் பாசறை” கடந்த ஆறு மாதங்களில் “திராவிட இயக்க வரலாறு”,...

சுயமரியாதை எங்கள் அடையாளம்  சனாதனம் எமக்கு அவமானம்

சுயமரியாதை எங்கள் அடையாளம் சனாதனம் எமக்கு அவமானம்

திராவிடர் விடுதலை கழகம் நடத்திய சனாதனத்துக்கு எச்சரிக்கை விடும் இளைஞர் மாநாட்டிலிருந்து (ஏப்ரல் 29, 30 – 2023) சில செய்தித் துளிகள் : மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி. செந்தில்குமார், தேர்தல் களத்தில் தனது வெற்றிக்கு வாக்காளர்களிடம் வாக்குகளைச் சேகரித்த கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு நன்றி கூறியதோடு தன்னுடைய அரசியல் கட்சி திமுக என்றாலும் சமுதாய அமைப்பு – திராவிடர் விடுதலைக் கழகம் தான் என்று பெருமையுடன் குறிப்பிட்டார். சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் தமிழ்நாடு முழுதும் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பயிற்சி முகாம்களில் ‘உயிர் தோற்றம்’ குறித்து தாம் பேசியதையும் தனது தேர்தல் வெற்றிக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கடுமையாக உழைத்ததை யும் நினைவு கூர்ந்தார். மேடையில் அமைக்கப்பட்ட பதாகையில் ‘சுயமரியாதை எங்கள் அடையாளம்; சனாதனம் எமக்கு அவமானம்’ என்று ஒரு பக்கத்திலும். ‘பன்முகத் தன்மையை சிதைக்காதே; ஒற்றைப்...

சனாதன சக்திகளுக்கு எச்சரிக்கை வரலாறு படைத்தது சேலம் மாநாடு  ஆர்ப்பரித்து அணிவகுத்த கருஞ்சட்டைகள்  வைக்கம் போராட்டம் முடியவில்லை

சனாதன சக்திகளுக்கு எச்சரிக்கை வரலாறு படைத்தது சேலம் மாநாடு ஆர்ப்பரித்து அணிவகுத்த கருஞ்சட்டைகள் வைக்கம் போராட்டம் முடியவில்லை

வைக்கம் நூற்றாண்டையொட்டி வைக்கம் போராட்டம் முடியவில்லை எனும் தலைப்பில் ஜாதி – தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்க கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்தவெளி மாநாட்டில் முன்மொழிந்த தீர்மானம் வைக்கம் போராட்டம் முடிந்து 100 ஆண்டுகள்உருண்டோடிவிட்டன. வைக்கத்தில் மகாதேவன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தீண்டப்படாத மக்கள் நடமாடும் உரிமைக்காகத் தொடங்கிய போராட்டம் ஒரு வருடம் 7 மாதங்கள் நீடித்தது. பிற்காலத்தில் கோயில் நுழைவு உரிமைக்கும் வழிவகுத்த இந்தப் போராட்டத்தை பெரியார், டி.கே. மாதவன் உள்ளிட்ட தலைவர்கள் வழி நடத்தினார்கள்.  போராட்டத்தில் பங்கேற்றதற்காக கிரிமினல் சட்டப் பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டு இரண்டு முறை சிறை ஏகி கடுங்காவல் தண்டனைக்கு உள்ளாகிய ஒரே தலைவர் பெரியார்தான். வைக்கம் வீதிகளில் நடமாடும் உரிமை கிடைத்தாலும் நாடு முழுதும் வைக்கங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வளர்ச்சிப் பாதையில் வழிகாட்டும் தமிழ்நாட்டில் கிராமங்களில் ஜாதி தீண்டாமைக் கொடுமைகள் நீடிக்கவே செய்கின்றன. ஜாதிய...

வரலாற்று ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு நடத்தும் முடிவுக்கு பெரியார் வந்து சேர்ந்த காரணிகள்

வரலாற்று ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு நடத்தும் முடிவுக்கு பெரியார் வந்து சேர்ந்த காரணிகள்

காங்கிரசில் இருந்த காலத்திலேயே அவரை இயக்கியது சுயமரியாதை உணர்வு தான். இராமாயணம், மனுசாஸ்திரத்தைத் தீயிட வேண்டும் என்று காங்கிரஸ் மாநாட்டிலேயே பேசினார். ¨        கள் இறக்கும் தொழிலைச் செய்பவன் மேல் ஜாதி; கள் குடிப்பவன் மட்டும் கீழ் ஜாதியா? என்று கேட்ட பெரியார், சீமைச் சாராயம் குடித்த பிரிட்டிஷ் துரைகளிடம் கைகட்டி நின்றவர்கள் இந்த பெரிய ஜாதி தான் என்று அம்பலப்படுத்தினார்.   பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. (சென்ற இதழ்த் தொடர்ச்சி) திருப்பூரில் 1922ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது, பெரியார் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். “எல்லோருக்கும் கோயில் நுழைவு உரிமை வேண்டும் நாடார் உள்ளிட்ட அனைவருக்கும்” என்கிறார். அப்போது நாடாரும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்த காலம், பெரியார் தென்...

அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்? தேன்மொழி

அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்? தேன்மொழி

பிறப்பும் கல்வியும் :  1920ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 10ஆம் நாள், வேலூரில் பிறந்தவர் காந்திமதி (மணி யம்மையின் இயற் பெயர்). அவரின் அப்பா கனகசபை விறகுக் கடை வைத்திருந்தார். அம்மா பத்மாவதி. காந்திமதி வேலூர், கொசப் பேட்டை அரசுப் பெண்கள் இடைநிலைப் பள்ளியில் படித்தார். மே 15, 1943ஆம் ஆண்டில் கனகசபை இறந்துவிட, எவ்வித வைதிகச் சடங்குகளும் இன்றி, தமிழ்ப் பாடல்களைப் பாட வைத்து இறுதிக் காரியங்கள் நடத்தினார் கனகசபையின் நண்பரான அண்ணல் தங்கோ. (தனித்தமிழ்ப் பற்றாளரான அண்ணல் தங்கோ அவர்கள்தான் காந்திமதி என்னும் பெயரைத் தமிழ்ப் பெயராகவும், காந்திமதியின் அரசியல் ஈடுபாடு கருதியும் க.அரசியல்மணி என மாற்றி அமைத்தவர் ஆவார்.) அந்த நிகழ்ச்சிக்குப் பெரியாரும் வந்திருந்தார். அதன்பின்,1943 ஜூலை மாதத்தில் முழுநேரப் பணியாளராக பெரியாரிடம் வந்துசேர்ந்தார். பெரியார் அவரை, குலசேகரன்பட்டினம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் படிப்பில் சேர்த்தார். தேர்வு எழுத மதுரை சென்றபோது அவருடைய உறவினர் ஒருவரை...

12 மணி நேர வேலை சட்டம்; அரசு திரும்பப் பெற வேண்டும்

12 மணி நேர வேலை சட்டம்; அரசு திரும்பப் பெற வேண்டும்

1948ஆம் ஆண்டு இயற்றபட்ட தொழிற்சாலை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு. தொழிலாளர் களின் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தி அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த சட்டத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தரும் விளக்கம் ஏற்றுக் கொள்வதாக இல்லை. பல தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்போது இப்படி கடநஒiடெந hடிரசள என்ற ஒரு சட்ட திருத்தத்தை அவர்கள் கோருகின்றனர். அதற்காகவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது, தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை, அவர்கள் விரும்பினால் வேலை செய்யலாம் என்று ஒரு விளக்கத்தை அவர் வழங்கியிருக்கிறார். முதலாளிகளிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு அவர்கள் தொழிலாளிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதில்...

புத்தகங்கள் வெளியீடு! புதிய தலைப்புகள்! 42 புத்தகங்கள்!

புத்தகங்கள் வெளியீடு! புதிய தலைப்புகள்! 42 புத்தகங்கள்!

ரூ.4000/- மதிப்புள்ள நூல்கள் ரூ.3000/-க்கு சலுகை விலையில் சேலத்தில் ஏப்.29.30 ல் நடைபெறும் “இது தமிழ்நாடு,இளைய தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டை முன்னிட்டு நிமிர்வோம் வெளியீட்டில் புத்தகங்கள் வெளியிடப் படுகின்றன. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் எழுதி 2022 டிசம்பர் மாதம் நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 37 தலைப்புகளும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி, உரைகள் ஆகியவை 3 புத்தகங்களாகவும், திமுக துணைப் பொதுச்செயலாளர் மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ இராசா கருத்தரங்க உரை நூல் வடிவில் “எங்களை தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்” எனும் நூலும் ஆகியவற்றோடு “நான் பார்ப்பனர்களுக்கு அல்ல, பார்ப்பனீயத்துக்கே எதிரானவன்” (எனும் அம்பேத்கரின்  மேற்கோள் குறித்து) வெளியான ஆங்கில புத்தகத்தின் தமிழ் வடிவம். எட்வின் பிரபாகரன் மொழிப் பெயர்ப்பில். இவை அனைத்தும் சேர்த்து மொத்தமாக 42 புத்தகங்களாய் வெளியிடப்பட உள்ளது.இவற்றின் மொத்த பக்கங்கள் 4211 இதன் விலை ரூ. 4000/- மாநாட்டு திடலில் அனைத்து...

டெல்லி ”இந்தியன் எக்ஸ்ப்பிரஸ்”  சிறப்புக் கட்டுரை “தாய் வீட்டில்” வி.பி.சிங் சிலை

டெல்லி ”இந்தியன் எக்ஸ்ப்பிரஸ்” சிறப்புக் கட்டுரை “தாய் வீட்டில்” வி.பி.சிங் சிலை

வி.பி.சிங் சிலை சென்னையில் தமிழக அரசு நிறுவுவதை விவரித்து அருண் ஜனார்த்தன் டெல்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் (ஏப்.24) சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம். வி.பி.சிங் அமுல்படுத்திய மண்டல் பரிந்துரைக்கு  ஆதரவு தந்த கட்சிகளில் ஒன்று திராவிட முன்னேற்றக் கழகம். வி.பி.சிங் அமைச்சரவையில் திமுக இடம்பெற்ற போதும் சரி வி.பி. சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போதும் சரி, அவருடைய மண்டல் பரிந்துரைகளை முழுமையாக ஆதரித்து நின்ற கட்சி திமுக. மண்டல் தூதுவர் என்ற புகழ்பெற்ற வி.பி.சிங் வரலாறு இந்தி மொழிகளில் மட்டுமே இடம்பெற்றிருந்த போது வடமாநிலங்களிலிருந்து வெகு தொலை வில் இருக்கும் தமிழ்நாடு அவருக்கு முழு உருவச்சிலை அமைக்க முடிவெடுத்திருக் கிறது. தமிழ்நாட்டு மக்களின் நன்றி உணர்வை வெளிப்படுத்த அவருக்கு சிலை அமைக்கப் போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித் துள்ளார். இதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அவர் வீழ்த்தி இருக்கிறார். சமூக நீதியை மையமாக...

வி.பி.சிங் சிலை : தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும்

வி.பி.சிங் சிலை : தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறார். சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் அவர் அறிவித்திருக்கிறார். சட்டமன்றத்தில் பாஜக உட்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்றாகும். “இந்திய அரசியலில் ஓர் அதிசயம் வி.பி.சிங்”, தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல் தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை சமூக நீதிக் கொள்கைக்காக பலிகடாவாக கொடுத்தவர் வி.பி.சிங். நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தை அவர் கோரும் போது 27ரூ மக்களின் சமூக நீதி ஆணையின் அடிப்படையில் நான் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை கோருகிறேன். இதில் நம்பிக்கையுள்ளவர்கள் எனக்கு வாக்களிக்கட்டும், எதிர்ப்பவர்கள் என்னை எதிர்த்து வாக்களிக்கட்டும். பிரதமர் பதவியைத் தூக்கியெறிந்து விட்டு நான் வெளியே வரத் தயாராக இருக்கிறேன் என்று நாடாளுமன்றத்திலே பிரகடனப்படுத்தி அதன் வழியாக பதவியைத் தூக்கி எறிந்து விட்டு சமூக நீதியை...

காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்களை தோழர்கள் சந்தித்து நிதி திரட்டினர்

காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்களை தோழர்கள் சந்தித்து நிதி திரட்டினர்

சேலம் கழக மாநாட்டை ஒட்டி நன்கொடை திரட்டும் பணி ஏப்ரல் 17, அந்தியூரில் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் ஈரோடு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி முன்னிலையில் நடைபெற்றது. வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் மாநாட்டு நிதியை வழங்கினார்கள். அந்தியூரில் ரூ.13,030 நன்கொடை திரட்டப்பட்டது. பங்கேற்றோர் : இராம.இளங்கோவன், நாத்திகஜோதி, காவை ஈசுவரன், சித்துசாமி, இளவரசன், இளம்பிள்ளை தங்கதுரை, தங்கமாபுரிபட்டினம் ராமசந்திரன், நங்கவள்ளி கிருஷ்ணன், பிரபாகரன், வனவாசி உமாசங்கர், நந்தினி , கே.ஆர்.தோப்பூர். அஜித்குமார் ஆகியோர். சேலம் மேற்கு : தனிநபர் வசூல் பணி சுசீந்திரன், சாரா தலைமையில் ஏப்ரல் 17 ஆம் தேதி சங்ககிரியில் நடைபெற்றது. சங்ககிரி பேரூராட்சி தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர், காவல்துறை உயர் அதிகாரி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் மாநாட்டு நிதி வழங்கினார்கள். ரூ. 25,300 வசூலானது. இளைஞர்கள் அதிகளவில் பெரியாரிய இயக்கத்தில் இருப்பதை பார்த்து அரசு அதிகாரிகள் பாராட்டி...

பேரணி ; ஓர் அறிவிப்பு

பேரணி ; ஓர் அறிவிப்பு

எச்சரிக்கைப் பேரணியில் சிறப்பாக – மிடுக்காக அணிவகுத்து வரும் மாவட்டத்திற்கு பரிசுகள் வழங்கி மாநாட்டில் கவுரவிக்கப்படும். தோழர்களே! பரிசுகளைத் தட்டிச் செல்ல தயாராகுவீர்! எந்த மாவட்டம் முந்துகிறது என்று பார்க்கலாம். – திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 27042023 இதழ்

இளைய தலைமுறையின் எச்சரிக்கை மணி – சேலத்தில் ஒலிக்கப் போகிறது

இளைய தலைமுறையின் எச்சரிக்கை மணி – சேலத்தில் ஒலிக்கப் போகிறது

திராவிட இயக்க வரலாற்றுப் பக்கங்களில் சேலம் பல முத்திரைகளைப் பதித்து நிற்கிறது. 1944இல் நீதிக் கட்சி – திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்றது சேலத்தில் தான். 1971இல் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், இந்தியா முழுதும் பேசும் பொருளாகியது. இராமன் உள்ளிட்ட வேத மதக் கடவுள்களை ஊர்வலத்தில் அவமதித்ததாகக் குற்றச்சாட்டு; பெரியார் அஞ்சவில்லை. ஆம்; அப்படித்தான் செய்தேன்; சூத்திரனாக இருக்க மாட்டேன் என்ற உணர்ச்சியுள்ள ஒவ்வொருவரும் இதைத் தான் செய்வார்கள் என்றார் பெரியார். அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் இப்பிரச்சினையை முன்வைத்து காங்கிரசாரும் பார்ப்பனர்களும் தி.மு.க.வை தோற்கடிக்க தீவிரமாக செயல்பட்டனர். ஆனால் 184 இடங்களில் தி.மு.க. வெற்றி வாகை சூடியது. “நீங்கள் உலகப் புகழ் பெற்று விட்டீர்கள்; என் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியது” என்று பெரியார், கலைஞருக்கு தந்தி மூலம் பாராட்டினார். தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடு; வேத மரபு எதிர்ப்பு மாநாடுகளை திராவிடர் விடுதலைக்...

சென்னையில் மாநாடு விளக்கக் கூட்டம்

சென்னையில் மாநாடு விளக்கக் கூட்டம்

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும்”இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு!” விளக்கக் கூட்டம் ஏப்ரல் 13, மாலை 6 மணியளவில் அயனாவரம், ஜாயின்ட் ஆபிஸ் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேத்துப்பட்டு இராசேந்திரன் தலைமை வகித்தார். வட சென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்டத் தலைவர் வேழவேந்தன் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்தார். நாத்திகனின் மந்திரமா? தந்திரமா ? நிகழ்ச்சி கூட்டத்தின் தொடக்கமாக நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் திருப்பூர் மகிழவன் மாநாட்டின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து, சென்னை கழகச் செயலாளர் இரா.உமாபதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். திமுக பொதுக்குழு உறுப்பினர் சைதை மா.அன்பரசன் நிறைவுரையாற்றினார். பெரியார் முழக்கம் 20042023 இதழ்

கழகம் எடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

கழகம் எடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

வேலூர்: புரட்சியாளர் அம்பேத்கர் 132ஆவது பிறந்தநாள் விழா வேலூர் மாவட்டக் கழக சார்பில் மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில் குடியேற்றம், கொண்டசமுத்திரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர்  விடுதலைக் கழகம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இணைந்து மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு அனைவரும் ஜாதி ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். நண்பகல் 12 மணிக்கு வேலூர் மாநகரில் விசிக ஒருங்கிணைத்த “ஜனநாயகம் காப்போம்! சனாதனத்தை வேரறுப்போம்!”பேரணியில் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நண்பகல் 2 மணிக்கு ராமாலையில் திராவிட் மற்றும் பகுதித் தோழர்கள் ஒருங்கிணைப்பில் அம்பேத்கருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் சிறப்பு உணவு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு  வேலூர் மாவட்டம் புட்டவாரபள்ளி கிராமத்தில் அமல்ராஜ், ஒருங்கிணைப்பில் பொதுமக்களோடு இணைந்து அம்பேத்கர்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.   இரவு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது....