Category: பெரியார் முழக்கம்

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா விளக்கம்  மாநில சுயாட்சியை ஏற்ற காங்கிரஸ், பிறகு சுதந்திர இந்தியாவில் கைவிட்டது ஏன்?  நாமக்கல்லில் ஜூலை 3இல் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் நிகழ்த்திய உரை:

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா விளக்கம் மாநில சுயாட்சியை ஏற்ற காங்கிரஸ், பிறகு சுதந்திர இந்தியாவில் கைவிட்டது ஏன்? நாமக்கல்லில் ஜூலை 3இல் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் நிகழ்த்திய உரை:

ஒரு நீண்ட தலைப்பை ஒரு குறுகிய நேரத்தில் உரையாற்ற வேண்டும் என்ற நெருக்கடியோடு உங்கள் முன்னால் நான் நிற்கின்றேன். ஒரு அரை நூற்றாண்டாக “மாநில சுயாட்சி”யைப் பேசுகின்ற ஒரு இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் இருந்து கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இப்போது ஏன் நடத்த வேண்டும் ? ஒரு மாதத்திற்கு முன்பாக இந்திய நாட்டின் பிரதமர் வந்தார்.  அவரை வைத்துக் கொண்டு ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இப்படி பேச முடியுமா? என்று கூறுகிற அளவிற்கு நம்முடைய தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அன்றைக்கு பேசினார். அதன் சுருக்கம் இதுதான். “பிரதமர் அவர்களே தமிழ்நாட்டின் சார்பில் நாங்கள் உங்களுக்கு மொத்த வருமானத்தில் 10ரூ தருகிறோம். வரி என்று எடுத்துக் கொண்டால் 6.5ரூ. ஆனால் நீங்கள் எங்களுக்கு தருவதோ வெறும் 1.5ரூ தான். இது கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது. என்று அன்றைக்கு பிரதமர் முன் பேச திராணி உள்ள ஒரே முதலமைச்சர் என்பதை நிரூபித்துவிட்டு, ...

நீதிமன்றங்களில் தமிழ் வர வேண்டும்!

நீதிமன்றங்களில் தமிழ் வர வேண்டும்!

நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடப்பதை விரைவு படுத்த வேண்டியது ஆட்சியாளர் கடமையாகும். அதற்கு முன்னணி வேலையாக , ஒவ்வொரு சட்டப் புத்தகத்தையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பொறுப்பையும் செலவையும் ஆட்சியாளர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்ப் புலவர்களாய் உள்ள சட்ட நிபுணர்கள் தமிழ்நாட்டில் பலரிருக்கின்றனர். இவர்களைக் கொண்டு ஆட்சியாளர் இக்காரியத்தைச் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடிக்கலாம். இதேபோல் ஆட்சி நிர்வாகத் துறையிலும், இங்கிலீஷ் இன்றுள்ளது, போலவே தமிழும் இயங்க வேண்டுமானால், இங்கிலீஷ் படித்த தமிழ்ப் புலமைப் பட்டதாரிகளையெல்லாம் சர்க்கார் பணிமனைகளிலெல்லாம் ஏராளமாக நியமிக்க வேண்டும். இவர்களுக்குக் கொடுத்தவை போக மீதி இடங்களைத்தான் மற்ற பட்டதாரிகளுக்குக் கொடுக்க வேண்டும். நல்ல இங்கிலீஷ் படிப்புள்ள தமிழாசிரியர்களையும் சர்க்கார் பணிமனைகளில் பொறுப்புள்ள பதவிகளில் அமர்த்த வேண்டும். ‘விடுதலை’ 01.09.1956 பெரியார் முழக்கம் 07072022 இதழ்

நுபுர் சர்மா வெறிப் பேச்சுக்கு வெளியுறவு அமைச்சர் ஆதரவு

நுபுர் சர்மா வெறிப் பேச்சுக்கு வெளியுறவு அமைச்சர் ஆதரவு

நாடு முழுவதும் மதவெறியைப் பற்ற வைத்து, கலவரத்தை உருவாக்கிய பாஜகவின் முன்னாள் பேச்சாளர் நுபுர் சர்மா, தேசத்தின் முன்னால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் கண்டிப்பாக கூறியிருக்கிறது. இத்தனை கலவரங்களுக்கும் அந்த ஒரு பெண் தான் காரணம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதோடு, நாட்டில் நடைபெறுகிற வீடுகள் இடிப்பு, தீ வைப்பு கலவரம் என அத்தனைக்கும் காரணம், அவர் ஒருவர்தான் என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. தன் மீது பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என்று அவர் வைத்த கோரிக்கையையும், உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் இவ்வளவு கடுமையான கருத்துக்களை தெரிவித்ததற்குப் பிறகும் கூட, நுபுர் சர்மா மீது பாஜக இதுவரை எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. கைது செய்யவும் இல்லை. இந்த நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், “முஸ்லிம் நாடுகள் இந்தப் பிரச்சனையை எதிர்மறையாக பிரச்சாரம் செய்கின்றன” என்று கூறினாரே தவிர...

வடலூர் வள்ளலார் சபை வைதீகத்துக்கு எதிரானது: உயர்நீதிமன்றத் தீர்ப்பு

வடலூர் வள்ளலார் சபை வைதீகத்துக்கு எதிரானது: உயர்நீதிமன்றத் தீர்ப்பு

வைதீக வேத மரபை எதிர்த்து வள்ளலார் உருவாக்கியது தான் வடலூர் சத்திய ஞான சபை. சத்திய ஞான சபையிலும் சிவன் சிலையை வைத்து அதை வைதீகத் தலமாக மாற்றுவதற்கான சதிச் செயலில் பார்ப்பனர்கள் ஈடுபட்டார்கள். குறிப்பாக சபாநாத ஒளி சிவாச்சாரியார் என்ற ஒரு வேத பண்டிதர், அங்கு சிவலிங்கம் போன்ற சிலைகளை வைத்து வழிபட துவங்கியபோது, 2006ஆம் ஆண்டு அதை எதிர்த்து, தொண்டர் குலப் பெருமான். என்ற ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில், வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்குமாறு அறநிலையத் துறையை விசாரிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அப்போது அறநிலையத்துறை கொடுத்த விளக்கம் மிகவும் முக்கியமானது. 1882 ஆம் ஆண்டு வகுத்த வழிபாட்டு விதிகளின் படி, உருவ வழிபாடு வள்ளலார் சத்திய ஞான சபையில் கூடாது. ஒளி மட்டுமே ஏற்றப்பட வேண்டும். ‘அருட்பெரும் ஜோதி, தனிப் பெரும் கருணை’ என்ற தாரக மந்திரத்தை மட்டுமே ஒலிக்க வேண்டும். வேதம், இதிகாசம்,...

தலையங்கம் மொழி – மதம் குறித்த முதல்வரின் தெளிவான பார்வை

தலையங்கம் மொழி – மதம் குறித்த முதல்வரின் தெளிவான பார்வை

நியூயார்க் நகரில் நிகழும் வடஅமெரிக்க தமிழ்ச் சங்க மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி வழியாக நிகழ்த்திய உரை மிகவும்  ஆழமானது; குறிப்பிடத் தக்கது. மொழி – மதம் குறித்து அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் உரை அது. மொழி – உலகம் முழுதும் வாழும் தமிழர்களை இணைக்கும் ஒரே கருவி என்று கூறியுள்ள முதலமைச்சர், தமிழர்கள் ஒற்றுமையை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்துவதை ஏற்க முடியாது. அத்தகைய முயற்சிகள் தீவிரம் பெற்று வருகின்றன என்று சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார். மொழியின் பெருமை – இனப் பெருமை பேசுவது தவறு இல்லை. அத்தகைய வரலாறும் பெருமையும் நமக்கு இருக்கிறது. அந்த வரலாறு இல்லாதவர்களால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை. திராவிட இயக்கம் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கிறது. திராவிட மாடல் ஒரு கருத்தியல் கோட்பாடாக நாம் வளர்த்தெடுக்கிறோம். இதை எதிர்க்கிறவர்கள், கடந்த ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்து வருவோர் தான்; அவர்கள் கற்பனைகளை வரலாறுகளாக எழுத முயலுகிறார்கள்...

பெரியாரின் கனவு நனவாகும் மாட்சி!

பெரியாரின் கனவு நனவாகும் மாட்சி!

உற்பத்தி சேவைத் துறைகளில் பணியாற்றும் பெண்களில் தமிழ் நாடே முதலிடம் வேலைக்குப் போகும் பெண்களில் இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ந்திருக்கிறது. இந்தியா முழுமைக்கும் மொத்தம் 15.93 சதவீதப் பெண்கள் வேலைக்குப் போகும் நிலையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது 7.08 இலட்சம் பெண்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இரண்டா வது இடத்தில் கருநாடகம் இருந்தாலும் கருநாடகத்தைவிட மூன்று மடங்கு தமிழ்நாட்டில் அதிகம். 2017-2018ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலைகளுக்கான ஆண்டறிக்கை இத்தகவலைத் தெரிவித்துள்ளது. பெண்களையும் உள்ளடக்கிய தொழில் கொள்கைகளை தமிழ்நாடு அரசு உருவாக்கி அமுல்படுத்துவதே இதற்குக் காரணம். இரவு நேரப் பணிகளுக்கு அனுமதி; அதற்கான பாதுகாப்பு; உயர் தொழில் நுட்பத் திறன் பயிற்சி பயிற்சி; குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் (இதற்கு ஒன்றிய ஆட்சி 10 கோடி மான்யம் வழங்குகிறது); பெண்கள் தங்கும் விடுதி வசதிகள்; உதிரி பாகங்கள் தயாரிப்புப் பூங்கா போன்ற திட்டங்களால் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தமிழ்நாட்டில் பெண்களின் பங்கேற்பு அதிகமாக இருக்கிறது....

பா.ஜ.க. வேட்பாளரை பா.ம.க. ஆதரிப்பது சமூக நீதியா?

பா.ஜ.க. வேட்பாளரை பா.ம.க. ஆதரிப்பது சமூக நீதியா?

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு திரௌபதி முர்மு என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண். இது சமூக நீதியின் வெளிப்பாடு என்று சிலர் பேசத் துவங்கியிருக்கிறார்கள். இந்த வாதத்தில் நேர்மை இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. இதற்கு முன் குடியரசுத் தலைவராக நிறுத்தப்பட்டவரும் தலித் தான். ஆனால் அவர் குடியரசுத் தலைவராக இருந்து சமூக நீதியைக் காப்பாற்றினாரா? சொல்லப் போனால் கோவிலுக்குள் செல்லக்கூட அவரை சனாதானம் அனுமதிக்கவில்லை என்பது தான் சோகமான வரலாறு. இந்தத் தேர்தலை எப்படிப் பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ள கருத்து மிகச் சரியானது, ஆழமானது. இந்தியாவில் அரசியல் சட்டம் சீர்குலைக்கப்பட்டு, ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் படுகொலைக்குள்ளாக் கப்பட்டு, மதத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிற நேரத்தில், இதை எதிர்த்து நான் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன், அந்த போராட்டத்தின் ஒரு...

எங்கள் தத்துவ பிதாமகன் பெரியார் காட்டிய வழியில் எங்களை தனிநாடு கேட்கத் தள்ளி விடாதீர்கள்! எச்சரிக்கிறார் ஆ. இராசா

எங்கள் தத்துவ பிதாமகன் பெரியார் காட்டிய வழியில் எங்களை தனிநாடு கேட்கத் தள்ளி விடாதீர்கள்! எச்சரிக்கிறார் ஆ. இராசா

திமுகவின் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு 03.07.2022 அன்று காலை தொடங்கி நடைபெற்றது. மாநாட்டு நிகழ்வில், கருத்தரங்கில் ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ தலைப்பில் திமுக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா பேச்சு. தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு விட்டு திராவிட முன்னேற்றக் கழகம் “மாநில சுயாட்சி” கொள்கைக்கு வந்து விட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருக்கக் கூடிய தந்தை பெரியார் சாகும் வரை தனித் தமிழ்நாடு கேட்டார். அவர் இறப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்னால், செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்தநாளன்று ‘விடுதலை’யில் ஒரு அறிக்கை எழுதினார். அதில் கூறினார்: “இந்தியாவில் இருக்கும் வரை இந்து மதம் என்னை சூத்திரனாக வைத்திருக்கும். இந்தியா வில் இருக்கும் வரை இந்து மதம் என்னை பஞ்சமனாக வைத்திருக்கும். அது மட்டுமில்லை இந்தியாவில் இருக்கும் வரை என்னுடைய தமிழனுக்கு பொருளாதார வளர்ச்சி வராது,  உத்தியோகத்தில் பங்கு கிடைக்காது, எந்த ஏற்றமும்...

திருப்பூர் பெரியார் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு மண விழா

திருப்பூர் பெரியார் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு மண விழா

கிறிஸ்டினா – மகாதேவன் சாதி மறுப்பு  இணையேற்பு நிகழ்வு, திருப்பூர் அம்மாபாளையம்  தந்தை பெரியார் படிப்பகத்தில்  28.06.2022 அன்று  மாலை 6.00 அளவில் நடைபெற்றது . திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் இராசு தலைமை வகித்தார். திருப்பூர் மாநகரத் தலைவர் தனபால்  வரவேற்பு கூறினார். மாநகர அமைப்பாளர் முத்து,வேலம்பாளையம் பகுதி பொறுப்பாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் மன்றம் தலைவர் சிவகாமி, ஆதித் தமிழர் பேரவை வழக்கறிஞர் அணி  கனகசபை,  தமிழ்நாடு மாணவர் கழகம் திருப்பூர் மகிழவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க,  யாழினி தமிழ்நாடு மாணவர் கழகம், மாதவன் நகர செயலாளர் திவிக, திலகவதி அம்மாபாளையம், மணிகண்டன், ஸ்ரீஜா, சண்முகம், சூப்பர் ஸ்டார் மக்கள் முன்னேற்ற கழகம் திருப்பூர் ஆகியோர் உட்பட தோழர்கள் மற்றும் மணமகன் உறவினர்கள் வாழ்த்தினார்கள். இணையர், கிறிஸ்டினா – சகாதேவன் நன்றி கூறினர். இறுதியாக இணையர், கழக வளர்ச்சி நிதியாக ரூபாய் இரண்டாயிரம் மாவட்டத்...

களப்பணியாளர் பயிலரங்கம்: ஒரு வேண்டுகோள்

களப்பணியாளர் பயிலரங்கம்: ஒரு வேண்டுகோள்

2022 ஜூலை 23, 24, 25 ஆகிய மூன்று தினங்கள் கழகக் களப்பணி யாளர்களுக்கான பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் களப்பணியாற்றும் தோழர்கள் பங்கு பெறலாம். தோழர்கள் மாவட்ட பொறுப்பாளர்களின் ஒப்புதலுடன் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மாவட்டப் பொறுப்பாளர்கள் 07.07.2022 தேதிக்குள் தங்கள் மாவட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் தோழர்கள் பட்டியலை 97894 56485 என்ற எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்புங்கள். குறைந்த அளவில் தோழர்களை வைத்து விரிவாக இப் பயிலரங்கம் நடத்திட தலைவர்,பொதுச் செயலாளர் இருவரும் திட்டமிட்டுள்ளதால் விரைவாக பெயர் பட்டியல் அனுப்பவும். அதிக தோழர்கள் இருப்பின் தலைமைக் குழு தேர்வு செய்யும் தோழர்கள் பயிலரங்கத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். பயிலரங்கம் திருச்சியில் ‘டி.எம்.எஸ்.எஸ்.’ நிறுவனத்துக்கான பயிற்சி அரங்கில் நடைபெறும். – பால்.பிரபாகரன்,  பரப்புரைச் செயலாளர்,  திராவிடர் விடுதலைக்கழகம்   பெரியார் முழக்கம் 30062022 இதழ்

சனாதனம் : ஆளுநர் ரவியின் முரண்பாடு

சனாதனம் : ஆளுநர் ரவியின் முரண்பாடு

‘சனாதன தர்மத்தை’ப் பரப்பி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அந்த தர்மம், “வேதங்களை ஆழ்ந்து படித்த ரிஷிகள், முனிவர்கள் தந்தது” என்று பேசினார். ஆளுநர் இதற்காக நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். இப்போது, “சனாதன தர்மம் மதத்தோடு தொடர் புடையது அல்ல; அது பாரத தேசத்தின் முதுகெலும்பு” என்று குரலை மாற்றியிருக்கிறார். பெரியார் மண் இப்படி அவரை மாற்றிப் பேச வைத்திருக்கிறது. பெரியார் முழக்கம் 30062022 இதழ்

அன்று குலக் கல்வி; இன்று தேசியக் கல்வி (2) குலக் கல்வியை முறியடிக்க பெரியார் தொண்டர்கள் போட்ட இரத்தக் கையெழுத்து – மு. செந்திலதிபன்

அன்று குலக் கல்வி; இன்று தேசியக் கல்வி (2) குலக் கல்வியை முறியடிக்க பெரியார் தொண்டர்கள் போட்ட இரத்தக் கையெழுத்து – மு. செந்திலதிபன்

கோவை காரமடையில் தேசியக் கல்வியையும் குலக் கல்வியையும் ஒப்பிட்டும் குலக் கல்வி எதிர்ப்பு வரலாற்றை விளக்கியும் பொறியாளர் மு. செந்தி லதிபன் ஆற்றிய உரை. இராஜகோபாலாச்சாரி – தன்னிச்சையாகக் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த போராட்ட வரலாறு மற்றும் அரசியல் சூழலை விளக்கு கிறார். (சென்ற இதழ்த் தொடர்ச்சி) கம்யூனிஸ்ட் கட்சியின் துரோகம் : சட்ட மன்றத்தில் குலக்கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து ஒரு நிபுணர் குழு அமைத்து பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வரப் பட்டது. தீர்மானத் திற்கு ஆதரவாக 139 வாக்குகள் பதிவாகின. எதிராக 137 வாக்குகள் எதிராக விழுந்தன. 2 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜாஜி அரசு தோல்வி அடைந்தது. எனவே ராஜாஜி அரசு பதவி விலக வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் குரல் கொடுத்தன. அந்த நேரத்தில் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி...

கடவுளைக் காப்பாற்றிக் கொண்டு ஏழ்மையை ஒழிக்க முடியுமா?

கடவுளைக் காப்பாற்றிக் கொண்டு ஏழ்மையை ஒழிக்க முடியுமா?

பொருளாதார ஏழைமை, செல்வ பேதம் ஒழிய வேண்டுமானால் அவைகளின் உற்பத்தி ஸ்தானம், அதாவது தோன்றுமிடமும், காப்பு இடமும் ஒழிக்கப்பட வேண்டும். ஏழைமைக்கும் செல்வத்திற்கும் கர்த்தாவும், காவலும் கடவுளாய் இருக்கிறது. அப்படிப்பட்ட கடவுளைக் காப்பாற்றிக் கொண்டு, அல்லது அக் கடவுள் ஆணைக்கு அடங்கினவனாய் இருந்து கொண்டு, கடவுள் தன்மையை – செயலை – கட்டளையை நீ எப்படி மீற, சமாளிக்க, தாண்ட முடியும் என்று சிந்தித்துப் பார். அதனால்தான் மனித சமுதாய சமத்துவத்திற்கும் மதம் ஒழிக்கப்பட வேண்டியது எப்படி அவசியமோ, அதுபோல் பொருளாதார சமத்துவத்திற்கும், அதாவது பொருளாதாரச் சமத்துவம் வேண்டுமானால் பொருளாதாரப் பேதத்துக்கும் பேதத் தன்மைக் காப்புக்கும் ஆதாரமாய் இருக்கின்ற கடவுள் தன்மை ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும். ‘குடி அரசு’ – 10.03.1945 பெரியார் முழக்கம் 30062022 இதழ்

பக்தர்களை ஏமாற்றி ரூ. 20 கோடி கொள்ளை; அப்சல்பூர் அர்ச்சகர்கள் தலைமறைவு

பக்தர்களை ஏமாற்றி ரூ. 20 கோடி கொள்ளை; அப்சல்பூர் அர்ச்சகர்கள் தலைமறைவு

அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில் பெயரில், அந்தக் கோயிலின் அர்ச்சகர்களே போலி இணையதள முக வரிகளை உருவாக்கி பக்தர்களிடமி ருந்து ரூ. 20 கோடி அளவுக்கு கொள்ளை யடித்த சம்பவம் நடந்துள்ளது. கல்புர்கி மாவட்டம் அப்சல்பூரில் இருக்கும் தாத்தரேயா கோயில் தென் னிந்தியாவில் பிரசித்தி பெற்ற கோயில் களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்தக் கோயிலில் இளம் அர்ச்சகர்களாக பணிபுரிந்து வந்த வல்லப் பூஜாரி, அன்குர் பூஜாரி, பிரதிக் பூஜாரி, கங்காதர் பூஜாரி மற்றும் சரத் பட் ஆகிய 5 பேர், சிறப்பு பூஜைக்கு ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் இதற்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த  வேண்டும் என்றும் கூறி பக்தர்களிடம் பணவசூல் செய்து வந்துள்ளனர்.  கோயிலுக்கு என்று இருக்கும் அதிகாரப் பூர்வ இணையதளத்தின் ‘லிங்கை’ப் பகிராமல், தாங்கள் தனியாக உருவாக்கிய இணையதளத்தின் ‘லிங்கை’ப்  பகிர்ந்துள்ளனர். இந்த வகையில்...

உட்கட்சி மோதல் : அ.தி.மு.க. பாடம் கற்குமா?

உட்கட்சி மோதல் : அ.தி.மு.க. பாடம் கற்குமா?

ஊடகங்கள் நான்கு நாட்களாக கொண்டாடி மகிழ்கின்றன. ஈபிஸ், ஓபிஎஸ் – ஓபிஎஸ், ஈபிஎஸ். இந்த மோதல் செய்தி தான் தமிழ்நாட்டு மக்களின் ஆதார சுருதியான பிரச்சனைப் போல் சித்தரிக்கப்பட்டு வருகின்றன. இரண்டு தரப்பினரும் ஒரே கருத்தைக் கூறிக்கொண்டு வருகின்றன. “இது புரட்சித் தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டிருக்கிற இயக்கம், தொண்டர்கள் தான் முடிவெடுப்பார்கள், இதை யாராலும் அசைக்கவோ, ஆட்டவோ முடியாது” இது இரு தரப்பும் பேசுகிற வசனம். ஊடகங்கள் இதையே திருப்பித் திருப்பி பரப்புகின்றன. தவிர, இதனுடைய வரலாற்றுப் பின்னணியைப் பற்றி ஆராய்வதற்குத் தயாராக இல்லை. சரி பார்ப்போம். புரட்சித் தலைவிகளின் விசுவாசிகள் என்று இரண்டு பேரும் கூறுகிறார்கள். அந்த புரட்சித் தலைவி ஜெயலலிதா கூட கடைசி காலத்தில், எம்.ஜி.ஆர். படத்தை போடுவதற்குக் கூட எதிர்ப்புத் தெரிவித்தவர் தான். எம்ஜிஆரை ஓரம் கட்டியவர் தான். அதற்குப் பிறகு புரட்சித் தலைவியின் தலைமையின் கீழ் கட்சியை...

சனாதனவாதிகள் அப்படி பெரியாரிஸ்ட்டுகள் இப்படி

சனாதனவாதிகள் அப்படி பெரியாரிஸ்ட்டுகள் இப்படி

“மதம் மாறுவது தேச விரோதம், ஆனால், வாக்காளர்களுக்கு துரோகம் செய்து விட்டு கட்சி மாறுவது மட்டும் தேச பக்தியா?” என்று ஒரு பா.ஜ.க. ‘ஜீ’யிடம் கேட்டேன். அவரிடம் பதில் இல்லை. “‘சனாதன தர்மம்’ என்கிறீர்கள், அதற்கு என்ன அர்த்தம்” என்று கேட்டேன்; “என்றும் மாறாதது, நிலையானது” என்றார். “அப்படி யானால் ஆட்சிகள் மாறுவதே சனாதனத்துக்கு எதிரானதா” என்று கேட்டேன்; “இது என்ன விதண்டாவாதம்?” என்றார். “சரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளைக் கவிழ்க்கலாம்; அதற்கு எம்.எல்.ஏ.க்களை விலை பேசலாம்; சொகுசு ஓட்டல்களில் அடைத்து வைக்கலாம்; இதுவே பாரத பண்பு என்று உங்களது வேதமும் முனிவர் களும் ரிஷிகளும், எந்த புனித நூலிலாவது பறை சாற்றியிருக்கிறார்களா?” என்று கேட்டேன். “இதுக்குப் போய் அவுங்களையெல்லாம் இழுக்காதீங்கன்னு” கொஞ்சம் ஆவேசமாகவே கேட்டார். “ரிஷிகளும் முனிவர்களும் காட்டிய ஆன்மீகப் பாதையில்  தான் உங்க பா.ஜ.க. நடைபோடு கிறதா” என்று  கேட்டேன்; கோபம் கொப் பளித்தது; “ஆமாம். அதில் என்ன...

தமிழ்நாடு கிராமங்களில் தலைவிரித்தாடும் ஜாதி வெறி

தமிழ்நாடு கிராமங்களில் தலைவிரித்தாடும் ஜாதி வெறி

தமிழ்நாட்டுக்  கிராமங்கள் இன்னும் ஜாதி ஆதிக்கப் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கின்றன. தீண்டப்படாத மக்கள் என்று சொல்லப்படுகிற தலித் மக்கள் சுடுகாட்டிற்கு கூட போக முடியாத நிலை உள்ளது. நன்னிலம் அருகே ஒரு முதியவர் (தலித்) இறந்துவிட்டார். அவர் சடலத்தை ஊர் வழியாகக் கொண்டு செல்ல முடியாமல் பாய்ந்து வருகிற முழங்கால்  அளவு தண்ணீரில், சடலத்தை சுமந்து வருகிற காட்சியை ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே பேட்டை அடுத்த ராஜாநகரம் என்ற கிராமத்தில், ஆதி திராவிட வகுப்பைச் சார்ந்த 100 குடும்பங்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு இலவச வீட்டு மனைகளை வழங்கி யது. ஆனால், அரசே வழங்கிய அந்த வீட்டு மனைகளை இவர்களால் பயன் படுத்திக் கொள்ளவே முடியவில்லை. 25 ஆண்டுகளாக அருகில் உள்ள வேறு ஜாதியினர் இவர்களை குடிவைக்க விட மாட்டோம் என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே வருகின்றனர். தற்போது மனித உரிமை...

நடிகர் மாதவனின் பஞ்சாங்க உளறலுக்கு விஞ்ஞானி பதிலடி

நடிகர் மாதவனின் பஞ்சாங்க உளறலுக்கு விஞ்ஞானி பதிலடி

பொய்யான வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி  நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்டு “ராக்கெட்ரி – நம்பி விளைவு”  என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ளார். இந்தப்  படம், ஜூலை 1ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி, சென்னையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய நடிகர்  மாதவன், “அமெரிக்கா, ரஷ்யா, சீனா  மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலகோடி  செலவழித்து செவ்வாய்க் கிரகத்துக்கு செயற்கைக் கோளை அனுப்பி வெற்றி பெற்றன. ஆனால், இந்தியா 2014ஆம் ஆண்டு சிறிய எஞ்சினை வைத்துக்கொண்டு செவ்வாய்க்கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பியது. செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பிய களம் 32ஆவது முறையில்தான் வெற்றி பெற்றது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தவும், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைய வும் நமது முன்னோர்கள் உருவாக்கிய பஞ்சாங்கத்தின்படியான நட்சத்திர மற்றும் கோள்களின் வரைபடம்தான் (ஊநடநளவயைட ஆயயீ) இந்தியக் குழுவுக்கு உதவியது” என்று கூறியிருந்தார். இந்தத் தகவலை “விஞ்ஞானி நம்பி ...

பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஜாதியே! – முனைவர் கலையரசன்

பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஜாதியே! – முனைவர் கலையரசன்

ஜாதியின் மூன்று தடைகள் பொருளாதார வளர்ச்சியை அனைவருக்கும் கொண்டு செல்லக்கூடிய மாற்றத்துக்கு மூன்று அம்சங்கள் தடையாக இருக்கின்றன. ஒன்று நில உரிமைகளில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள்; இது உற்பத்தியையும் பாதிக்கிறது. இரண்டாவது உயர்கல்வியை வரலாற்று ரீதியாக ஒரு பிரிவினர் மட்டும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டு அனைவருக்கும் கிடைத்து விடாமல் மறுத்து வருதல்; மூன்றாவது நவீன தொழில் மற்றும் அறிவியல் துறைகளில் நிகழும் ஜாதியப் பாகுபாடு; இப்போது ‘உயர் ஜாதி’ அறிவுஜீவி வர்க்கம் தங்களுக்கான ‘உறவுத் தொடர்புகளை’ வலிமையாக்கிக் கொண்டு மேற்குறிப்பிட்டத் துறைகளை தங்கள் பிடிக்குள் வைத்திருக்கிறது. – ‘கலையரசன்-ஏ’ கட்டுரையிலிருந்து இந்தியாவில் பொருளாதாரம், வேலை வாய்ப்பு களில் வளர்ச்சியை நோக்கி முன்னேறிச் செல்வதில், ஜாதி தடையாக நிற்கிறது என்பதை விளக்கி ‘கூhந னுசயஎனையைn ஆடினநட’ புத்தகத்தை எழுதிய முனைவர் கலையரசன் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஜூன் 23, 2022) ஓர் ஆய்வு கட்டுரையை எழுதியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக பொருளாதார...

நன்கொடை

நன்கொடை

மேட்டூர் புதுச்சாம் பள்ளி கழகத் தோழர் செந்தில் குமார், கழகத் தலைவரை சந்தித்து கழக வளர்ச்சி நிதிக்காக ரூ.2500/- வழங்கினார். பெரியார் முழக்கம் 23062022 இதழ்

திருப்பூரில் ‘பிரியாணிபாளையம்’ உணவகம் திறப்பு

திருப்பூரில் ‘பிரியாணிபாளையம்’ உணவகம் திறப்பு

திருப்பூரில் பிரியாணிபாளையம் ரெஸ்ட்டாரெண்ட் அண்ட் கேட்டரிங் திறப்பு விழா பல்லடம் ரோடு, ஹோட்டல் டி.ஆர்.ஜி. பில்டிங்கில் 17.06.2022 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உணவகத்தை திறந்து வைத்தார். உணவகத்தின் முதல் விற்பனையைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி துவங்கி வைத்தார். முதல் விற்பனையை திருப்பூர் மாநகர மேயர் தினேஷ் குமார் பெற்றுக் கொண்டார். அடுத்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கிட்ஸ் கிளப்குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் சேர்மன் மோகன் கார்த்திக், கழகப் பொருளாளர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, திருப்பூர் மாவட்ட திவிக தலைவர் முகில் ராசு, கூநுமுஞஹ தலைவர் ஸ்ரீகாந்த் மற்றும் செயலவை உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்....

கொளத்தூர் மணி 75ஆவது பிறந்த நாள் குடும்ப விழாவாக நடந்தது

கொளத்தூர் மணி 75ஆவது பிறந்த நாள் குடும்ப விழாவாக நடந்தது

கிராமப் பிரச்சாரங்கள், கழகத்  தோழர் சந்திப்புக் கூட்டங்களை அதிகரிக்க கழகத் தலைவர் வேண்டுகோள் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மற்றும் குடும்ப விருந்து நிகழ்ச்சி மேட்டூர் தூய மரியன்னை சமுதாயக் கூடத்தில்  கொளத்தூர் மணி தலைமையில் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்தில் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக நகர, கிளைக் கழக, ஒன்றியப் பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களும், தோழர்களும் கழகத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும், இயக்க வளர்ச்சி குறித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். கலந்துரையாடல் கூட்ட இடைவேளையில் கழகத் தலைவருக்கு 75ஆவது பிறந்த நாள் விழா கேக் வெட்டப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதன் பின்பு தலைவருக்கு சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ரூ.75,000/- வழங்கப்பட்டது. பிறகு குடும்ப விருந்து நிகழ்வு மதியம் 2.00 மணிக்கு நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட...

அன்று குலக் கல்வி; இன்று தேசியக் கல்வி குலக் கல்விப் போராட்ட வரலாறு என்ன? மு. செந்திலதிபன்

அன்று குலக் கல்வி; இன்று தேசியக் கல்வி குலக் கல்விப் போராட்ட வரலாறு என்ன? மு. செந்திலதிபன்

ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை காங்கிரசுக்குள் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், செங்கல்வராயன், பத்திரிகையாளர் டி.எஸ். சொக்கலிங்கம் மற்றும் ஜி.டி. நாயுடு, ஜெ.சி. குமரப்பா எதிர்த்தனர். ‘கல்கி’ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியும் ம.பொ.சி.யும் ஆதரித்தனர். கோவை காரமடையில் தேசியக் கல்வியை யும் குலக் கல்வியையும் ஒப்பிட்டும் குலக் கல்வி எதிர்ப்பு வரலாற்றை விளக்கியும் பொறியாளர் மு. செந்திலதிபன் ஆற்றிய உரை. இராஜகோபாலாச்சாரி – தன்னிச்சையாகக் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த போராட்ட வரலாறு மற்றும் அரசியல் சூழலை விளக்கு கிறார். 5ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் தொழில் படிப்புக்குச் செல்ல வேண்டுமாம். 10 வயதில் தந்தை தொழிலை தானே கற்றுக் கொள்ள தள்ளப்படுவார்கள். அதற்கு அரசே குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் தொழிற்பயிற்சி அளிக்கப்படும். எப்போது? 10 வயதில் அப்பன் தொழிலை பிள்ளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆச்சாரியார் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தையே புதிய கல்விக் கொள்கையில்...

இயந்திரமுறைத் தொழில் தேவையே !

இயந்திரமுறைத் தொழில் தேவையே !

கால்கள் இருக்க, கட்டை வண்டிகள் இருக்க இயந்திரத்தின் மூலமாய்த்தான் – அதாவது இரயில் மூலம் பிரயாணம் செய்தோம்; மோட்டாரில் பிரயாணம் செய்தோம்; ஆகாயக் கப்பலிலும் பிரயாணம் செய்தோம்; அவைகளையே எல்லா மக்களும் போக வரப் போக்குவரத்துச் சாதனமாக்கவும் ஆசைப்படுகிறோம்; மற்றவர்களும் ஆசைப்படுகிறார்கள். ஆகவே, இதை மனிதத் தன்மையுடன் கூடிய குற்றமற்ற இயற்கை உணர்ச்சி என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, இது எவ்விதக் குற்றமுள்ளதும், அநியாயமானதும் என்று சொல்லி, இதற்காக யாரையும் கண்டிக்கவும் முடியாது. ஜீவ சுபாவமே ஆசையின் உருவமாகும். ஆகவே, இயந்திரம் வேண்டாம் என்பது இயற்கையோடும் முற்போக்கோடும் போராடும் ஒரு அறிவீனமான பிற்போக்கான வேலையாகுமே தவிர, மற்றபடி பயனுள்ள வேலையாகாது. குடி அரசு – 14.12.1930 பெரியார் முழக்கம் 23062022 இதழ்

வினா – விடை

வினா – விடை

அ.தி.மு.க. பொதுக் குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு வழக்கு. – செய்தி அதெல்லாம் கலவரம் செய்கிறவர்களை ஜெயக்குமாரே பாத்துக்குவார்; சட்டையைக் கழற்றி பின்னால் கைகளைக் கட்டி மண்டபத்தை விட்டே வெளியே தளளிடுவாரு. சாமி சிலைகளை மியூசியங்களில் வைக்கக் கூடாது. – முன்னாள் அய்.ஜி. மாணிக்கவேல் ‘சாமி’களே வெளிநாட்டு மியூசியங்களுக்கு பயணமாகும்போது, நாம் என்ன சார், செய்ய முடியும்? சொல்லுங்க… கிராமங்களில்தான் நமது பண்பாடே உயிருடன் இருக்கிறது. – ஆளுநர் ரவி அதற்கு ஆளுநர் மாளிகையில் நமது அரசியல் பண்பாடு குழி தோண்டி புதைக்கப்படுவதையும் சேர்த்துச் சொல்லுங்க. ‘பிராமணர்’களை இழிவுபடுத்துவது தொடர்ந்தால், போராடத் தயங்க மாட்டோம். – பிராமணர் சங்கத் தலைவர் ஆடிட்டர் கணேசன் ஆமாம்; நீங்கள் தானே போராட வேண்டும். கடவுளா, உங்களுக்காகப் போராடுவார்? அவர் ‘கல்லாக’த்தான் இருப்பார். 4 ஆண்டுகளுக்குப் பின் ‘அக்னி வீரர்கள்’ முடிவெட்டலாம்; வாட்ச்மேன் ஆகலாம். – ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டி இதுக்கெல்லாம் கூட இராணுவப் பயிற்சி...

‘இந்து’ சமூகத்தைப் பற்றிக் கவலைப்படாத பா.ஜ.க.வினர், சர்வசக்தி ‘இந்து’ கடவுளுக்காகக் கூப்பாடு போடுவது ஏன்?

‘இந்து’ சமூகத்தைப் பற்றிக் கவலைப்படாத பா.ஜ.க.வினர், சர்வசக்தி ‘இந்து’ கடவுளுக்காகக் கூப்பாடு போடுவது ஏன்?

இந்த செய்தியை படித்தவுடனேயே நெஞ்சம் பதறிப்போனது. கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் இது நடந்திருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த சரண்யா நர்சிங் படித்தவர். சென்னை தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் உடன் பணியாற்றுகிற வேறு ஜாதியைச் சேர்ந்த மோகன் என்பவரைக் காதலித்திருக்கிறார். திருமணத்தை சரண்யா சகோதரர் ஏற்றுக் கொள்ளவில்லை. இருவரும், அய்ந்து நாட்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். சரண்யாவின் உடன் பிறந்த அண்ணன் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டது போல் நடித்து, தனது வீட்டிற்கு விருந்திற்கு வருமாறு அழைத்திருக்கிறார். அண்ணனுடைய பாசத்திற்கு மயங்கி தங்கையும் வந்திருக்கிறார். விருந்து3 முடிந்து ஊருக்கு கிளம்பும் போது, வீட்டின் வாசலிலேயே வைத்து தங்கையையும், தங்கையின் கணவர் மோகனையும், திருமணமான அய்ந்தே நாட்களில் வெட்டி சாய்த்திருக்கிறான் உடன் பிறந்த சகோதரன். இரண்டு பேருமே இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். ஆனாலும், இந்து மதத்தின் ‘ஜாதி வெறி’யும் ஆண் ஆதிக்கத் திமிரும் இவர்களின் இரத்தத்தை பலியாக கேட்டிருக்கிறது....

தலையங்கம் நாட்டை எரிய வைக்கிறது, ‘அக்னிபாத்’

தலையங்கம் நாட்டை எரிய வைக்கிறது, ‘அக்னிபாத்’

குலக் கல்வித் திட்டத்தை தன்னிச்சையாகத் திணித்த இராஜ கோபாலாச்சாரி, இராமானுஜர் யாரைக் கேட்டு தனது சித்தாந்தத்தை உருவாக்கினார் என்று திமிரோடு கேட்டதுதான் நினைவுக்கு வருகிறது. மோடியின் அக்னி பாத் என்ற இராணுவத்துக்கு ஒப்பந்த  அடிப்படையில் ஆள் சேர்க்கும் திட்டத்தை இராஜாஜி, ஹிட்லர் பாணியில் கொண்டு வந்தார். இப்போது திரும்பிப் பெற முடியாது என்று திமிரோடு பேசுகிறது, ஒன்றிய ஆட்சி; நாடே பற்றி எரிகிறது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளோடு (அதையும் முடிக்காத நிலையில்) கற்றலுக்கு மூடு விழா நடத்தும் வடநாட்டு இளைஞர்கள் பெரும்பாலும் நம்பி இருக்கும் ஒரே வேலை வாய்ப்பு இராணுவத்தில் அடிமட்ட சிப்பாய்கள் அல்லது சேவை செய்யும் பணியாட்கள் வேலை தான். அவர்களின் ஒற்றை வேலை வாய்ப்பையும் குலைக்கும்போது பதற்றமும் எதிர்ப்பும் பற்றிக் கொண்டு விட்டது. 2016-2019 நிலவரப்படி, இராணுவத்தில் சேருவதில் இந்தியா விலேயே முதலிடம் வகிப்பது உ.பி. (18,906 பேர்), தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரி மற்றும் நேபாளத்தைச் சேர்த்து...

இயக்க வளர்ச்சி – தீவிர கொள்கைப் பரப்பலுக்கான திட்டங்களை விவாதித்தது, கழகத் தலைமைக் குழு

இயக்க வளர்ச்சி – தீவிர கொள்கைப் பரப்பலுக்கான திட்டங்களை விவாதித்தது, கழகத் தலைமைக் குழு

17.6.2022 அன்று திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி இல்ல வளாகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் பகல் 11.30 மணியளவில்  தொடங்கியது. 17 உறுப்பினர் களில் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் உட்பட 14 பேர் பங்கேற்றனர். இயக்க செயல்பாடுகள், ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற தலைப்பில் நடந்த வீதிக் கூட்டங்கள், மண்டல மாநாடுகள், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் பலரும் கருத்துகளைத்  தெரிவித்தனர். மாலை 7 மணி வரை கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. கழகத்தின் தொடக்க நாளான ஆகஸ்டு 12ஆம் தேதி ஆண்டுதோறும் பரப்புரைப் பயண நிறைவு மாநாடாக இதுவரை நடத்தப் பட்டது. கொரானா காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக பயணங்கள் நடத்த முடியவில்லை. 2022, ஆகஸ்டு 12 – கழகம் தொடங்கி 10ஆம் ஆண்டு நிறைவு பெறுவதால், 10 ஆண்டு நிறைவு விழாவோடு...

‘பீமா கோரே கான் – எல்கர் பரிஷத் வழக்கு: சிறைப்படும் நீதி’ நூல் வெளியீடு

‘பீமா கோரே கான் – எல்கர் பரிஷத் வழக்கு: சிறைப்படும் நீதி’ நூல் வெளியீடு

‘பீமா கோரே கான் – எல்கர் பரிஷத் வழக்கு: சிறைப்படும் நீதி’ நூல் வெளியீட்டு நிகழ்வு, 11.06.2022 மாலை 5.30 மணியளவில் சென்னை தியாகராயர் அரங்கத்தில் நடை பெற்றது. பீமா கோரே கான் அரசியல் சிறைப்பட்டோர் விடுதலைக் குழு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு பேராசிரியர் சரசுவதி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் து. ராசா நிகழ்வில் பங்கேற்று நூலை வெளியிட்டுப் பேசினார். தமிழ்நாடு சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு குடியரசு கட்சித் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.கு. தமிழரசன், வன்னி அரசு (வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர்) மற்றும் தி.வி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர்கள் கருணானந்தம், அ. மார்க்ஸ், சிவக்குமார், நெல்லை முபாராக் (எஸ்.டி.பி.அய்), நாகூர் மீரான் (பி.எஃப்.அய்.), வழக்கறிஞர் ப.பா. மோகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றுப் பேசினர். முன்னதாக விரட்டுக் கலையைச் சார்ந்த...

தோழர்தமிழரசு நினைவேந்தல்

தோழர்தமிழரசு நினைவேந்தல்

பெரியார் தொண்டர், கழக களப்பணியாளர் கோ.தமிழரசு இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு 11.06.22 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது. மயிலாப்பூர் பெரியார் படிப்பகத்தில் அறிவரசுவின் நினைவுகள் பகிரப்பட்டு கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டு அறிவரசு  படத்திற்கு கழகத் தோழர் இரண்யா மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து 9:30 மணியளவில் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், அறிவரசு படத்திற்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வுகளில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், மாவட்டத் தலைவர் வேழ வேந்தன், மாவட்ட செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 16062022 இதழ்

மருத்துவர்கள் தமிழரசி-அ.கிருபாகரன் ஜாதி மறுப்பு மணவிழா

மருத்துவர்கள் தமிழரசி-அ.கிருபாகரன் ஜாதி மறுப்பு மணவிழா

கழகத் தோழர் சி.சிகாமணி – ச.மோகனம்பாள் இணையரின் மகள் மருத்துவர் சி.தமிழரசி – மருத்துவர் அ.கிருபாகரன் ஆகியோரது இணையேற்பு நிகழ்வு 08.06.2022 அன்று மாலை 7 மணியளவில், வேப்பேரி ரித்திங்டன் சாலையில் உள்ள லுஆஊஹ கட்டடத்தில் நடைபெற்றது. புத்தர் கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கோவன் தலைமையில் மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்விற்கு, மக்கள் அதிகாரம் ப.வினோத் வரவேற்பு கூறினார். சேத்துப்பட்டு க.இராசேந்திரன் முன்னிலை வகித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று வாழ்க்கை இணையேற்பை நடத்தி வைத்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்,  முனைவர் தொல்.திருமாவளவன், கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர், சமூகநீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு தலைமை செயலக ளுஊ/ளுகூ நலச்சங்கம் மீனலோசனி, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன்,...

முனைவர் ஜெயரஞ்சன் கேள்வி திராவிட மாடலை எதிர்ப்பவர்கள் ஆரிய மாடலை ஆதரிக்கிறோம் என்று கூறத் தயாரா?

முனைவர் ஜெயரஞ்சன் கேள்வி திராவிட மாடலை எதிர்ப்பவர்கள் ஆரிய மாடலை ஆதரிக்கிறோம் என்று கூறத் தயாரா?

இந்தியாவிலே மாநில அரசு குடிநீர் வாரியம் தொடங்கியது கலைஞர் ஆட்சியில் தன். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வருமான இலக்கு இல்லாமல் அனைவருக்கும் ரேஷன் கார்டு திட்டங்களை அமுலாக்கியதும் தமிழ்நாடு தான் – என்றார் முனைவர் ஜெயரஞ்சன். திராவிட மாடல் பயிற்சிப் பாசறை தொடக்க விழா 5.6.2022 அன்று கலைஞர் அரங்கில் நடந்ததது. திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் பங்கேற்று ஆற்றிய உரையின் தொடர்ச்சி: அடுத்ததாக நீர்ப் பாசனத்தை எடுத்துக் கொண்டால், குடிநீராக இருக்கட்டும்; பாசனத் திற்கான நீராக இருக்கட்டும்; இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் குடிநீர் வடிகால் வாரியத்தைத் தொடங்குகிறார். ஏனென்றால், அன்று குடிநீர் கிடைப்பதே மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. எங்கெல்லாம் குடிநீர் தட்டுப்பாடு இருந்ததோ, ஆழ்குழாய் கிணறுகளின் மூலமாக டாங்குகளில் தண்ணீர் ஏற்றி, எல்லோருக்கும் குடிக்க தண்ணீர் கிடைக்க வழி செய்தார். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், எல்லா ஊர்களிலும் தண்ணீர் ஒரே மாதிரியாக இருக்காது. சில ஊர்களில்...

போராடாமல் இருக்க முடியாது

போராடாமல் இருக்க முடியாது

கடவுள், மத உணர்ச்சியானது மக்களின் சுதந்திரத்திற்கும், சமத்துவ வாழ்விற்கும், இவ்வளவு இடையூறுகளுக்கும், தாரதம்மியங்களுக்கும் இடந்தராதிருக்குமானால் – நான் அவைகளைப் பற்றி இவ்வளவு கவலை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. கடவுள், மதப் பிரச்சாரத்தின் பேரால் வயிற்றுப் பிழைப்பு நடத்துபவர்களின் பரிதாபத்திற்காகவாவது நான் சும்மா விட்டுவிடுவேன் என்பதை நம்புங்கள். ஏனெனில், ஒரு மனிதன் அனாவசியமாய் – அர்த்தமும் குறிப்பும் அற்ற வார்த்தைக்காக, பைத்தியம் பிடித்திருந்தாலொழிய போராடிக் கொண்டிருக்க முடியாது. ஆனால் அதனால் பாமர மக்கள் சமூகத்திற்கு விளையும் கெடுதியைப் பார்க்கும்போது, உண்மையான உணர்ச்சியுள்ளவன் அதை ஒழிக்கப் போராடாமல் இருக்க முடியாது. குடி அரசு – 20.11.1932 பெரியார் முழக்கம் 16062022 இதழ்

நீண்டகாலமாக தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சட்ட மசோதாக்கள்

நீண்டகாலமாக தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சட்ட மசோதாக்கள்

1)         தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகம் (திருத்தம்) மசோதா, 2020 (வேந்தருக்கு பதிலாக ஆய்வு மற்றும் விசாரணை அதிகாரத்தை அரசாங்கத் திற்கு வழங்குதல்) 2)         தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகம் (திருத்தம்) மசோதா, 2020 (ஆய்வு அதிகாரத்தை அரசாங்கத் திற்கு வழங்குதல்) 3)         தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (இரண்டாவது திருத்தம்) சட்டம், 2022.   (சில விதிகளை திருத்தவும், பதவிக் காலத்தை குறைக்கவும்) 4)         தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2022    (உயர்கல்வித் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநில பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்) 5)         சென்னை பல்கலைக்கழக (திருத்த) மசோதா, 2022                (பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நியமிப்பதற்கும், நிதிச் செயலாளரை பல்கலைக்கழகத் தின் சிண்டிகேட் உறுப்பினராக சேர்ப்பதற்கும்) 6)         தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழக மசோதா,...

தலையங்கம் எல்லை மீறும் பா.ஜ.க. சங்பரிவாரங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தலையங்கம் எல்லை மீறும் பா.ஜ.க. சங்பரிவாரங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

உலகின் இஸ்லாமிய நாடுகளோடு இந்திய உறவுகளை கடுமையாகப் பாதிக்கக் கூடிய வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய பா.ஜ.க.வின் அதிகாரபூர்வ பேச்சாளர் இருவர் மீதும் ஒன்றிய ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியிலிருந்து நீக்கிவிட்டு ஏதோ அவர்கள் கட்சியோடு தொடர்பே இல்லாத சிறு குழு என்பது போல் நாடகமாடுகிறது. இந்தியா முழுதும் கொதித்து எழுந்து போராடும் இஸ்லாமியர்கள் மீது கடும் அடக்குமுறைகள், தடியடிகள், துப்பாக்கி சூடுகளை நடத்துவதோடு, உ.பி. பா.ஜ.க. ஆட்சி ஜனநாயக வழியில்  போராடியவர்களின் வீடுகளை புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளுகிறது. ஜார்கண்டில் அப்பாவியான 16 வயது முஸ்லீம் இளைஞனைப் பிடித்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பார்க்க முடியாத அளவுக்கு நெஞ்சம் பதை பதைக்கிறது. மதங்களை விமர்சிக்கவே கூடாதா என்று பகுத்தறிவு அறிவியல் வெளிச்சத்தில்  கேள்வி கேட்டால் விமர்சிக்கும் உரிமை உண்டு என்பதே நமது உறுதியான கருத்து. அதே நேரத்தில் இஸ்லாமிய வெறுப்புணர்வோடு ‘இந்துத்துவா’ அரசியல் பார்வையில்...

அரசு தலையீடு கூடாதாம்; நீதிமன்றம் தலையிடலாமாம்!

அரசு தலையீடு கூடாதாம்; நீதிமன்றம் தலையிடலாமாம்!

2022ஆம் ஆண்டிலும் இப்படி ஒரு அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. தில்லை நடராசன் கோவிலில் முறைகேடுகள் நடப்பதை ஒட்டி அதிகாரிகள், கணக்கு வழக்குகளை சரி பார்க்க சென்ற போது, “அதை கேட்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை” என்று தீட்சதர்கள் அவர்களை திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். அறநிலையத்துறைக்கும் தில்லை கோவிலுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. அந்த சட்டத்திலிருந்து, உச்சநீதிமன்றத்தின் வழியாக நாங்கள் விதி விலக்கு பெற்றுவிட்டோம். எனவே உங்களிடம் நாங்கள் கணக்குகளை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. என்று அவர்கள் வாதிடுகிறார்கள். இந்தக் கோவில் தீட்சதர்களால் கட்டப்பட்ட கோவிலா ? நிச்சயமாக இல்லை. கோவிலுடைய தல புராணமே கூறுகிறது, “இந்தக் கோவிலைக் கட்டியவன், சிம்ம வர்மன் என்கிற மன்னன். நடராசன் அந்த மன்னனின் கனவில் தோன்றி, கோவிலைக் கட்டுமாறு கூறியதாகவும், அதனடிப்படையில் அவன் கோவிலைக் கட்டியதாகவும், நடராசனே சிம்ம வர்மன்  என்ற பெயரை இரணிய வர்மன் என்று மாற்றியதாகவும்”அவர்களே தல புராணத்தை எழுதி வைத்துள்ளார்கள். அதற்குப்...

அரசியல் சட்டத்தின் மாண்புகளுக்கு எதிராக சனாதனப் பெருமைப் பேசுகிறார், ஆளுநர் ரவி!

அரசியல் சட்டத்தின் மாண்புகளுக்கு எதிராக சனாதனப் பெருமைப் பேசுகிறார், ஆளுநர் ரவி!

மோடி அமைக்கத் துடிக்கும் இந்து ராஜ்யத்தின் தூதுவராக தமிழக ஆளுநர் ஆர்.எஸ். ரவி, சனாதனப் பெருமையைப் பேசுவதோடு, இந்தியா இந்துக்களின் நாடு என்று அரசியல் சட்டத்தின் மாண்புகளைக் குலைத்து வருகிறார். ஆளுநர் பேச்சு அறிவியலுக்கும் அரசியல் சட்டத்துக்கும் எதிரானது. அவரது பேச்சுக்கு மறுப்பு: ரிஷிகளும் முனிவர்களும் உருவாக்கியதே நமது தேசம் என்கிறார் ஆளுநர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வருகைக்கு முன்பு இந்தியா என்ற தேசமே உருவாகவில்லை. மன்னர்கள்தான் பேரரசுகளாக சிற்றரசுகளாக ஆட்சி செய்து வந்தனர். கிழக்கிந்திய கம்பெனியும் அதற்குப் பிறகு வந்த பிரிட்டிஷ் காலனி ஆட்சியும் உருவாக்கியது ‘இந்தியா’. சுதந்திரத்துக்குப் பிறகு சமஸ்தானங்களை விரட்டி இந்தியாவுடன் சேர்த்தார்கள். சுதந்திரத்துக்கு முன்பு பாகிஸ்தான் பிரிந்து சென்றது. சுதந்திர இந்தியா தனக்கான அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொண்டது. அந்த சட்டப்படி பதவிக்கு வந்தவரே ஆளுநர். ரிஷிகளும், முனிவர்களும் எந்த தேசத்தை உருவாக்கினார்கள்? அவர்கள் உருவாக்கியதாகப் புராணங்களில் எழுதப்பட்டுள்ள கற்பனைகளை வரலாறுகளாக திரிக்கலாமா? இப்போது ஆளுநர்,...

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூரில் பா.ஜ.க.வினர் அரசு கல்லூரிகளின்  பெயர்களை முறைகேடாக பயன்படுத்தி துண்டறிக்கைகளை அச்சிட்டு “செல்பி வித் அண்ணாமலை” என்று விளம்பரப்படுத்தி கல்லூரி களுக்குள் அத்து மீறி நுழைய திட்டமிட்டு இருந்தார்கள். அண்ணாமலையைக் கூட்டி வந்து சாலைகளில் கூட்டமாக கூட காவல்துறையிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமலும், அனுமதியும் பெறாமலும் சட்டம் ஒழுங்கை மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வினர் பேசினால் பரப்புரையில் ஈடுபட்டால் என்ன பேசுவார்கள் என்பதை பொதுமக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது, கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் குளிர் காய்வது போன்ற  பொது அமைதியை குலைக்கும் வகையில் தான் இவர்களின் பேச்சுக்கள் இருக்கும். இச்செய்தி பரவிய உடன் திராவிடர் விடுதலை கழகத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் ராசு, திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு இந் நிகழ்விற்கு கழகத்தின் கடும் கண்டனத்தை பதிவு...

தலையங்கம் பாராட்டுகிறோம், தர்மபுரி ‘எம்.பி.’யை!

தலையங்கம் பாராட்டுகிறோம், தர்மபுரி ‘எம்.பி.’யை!

அரசு கட்டிடம் கட்டும் நிகழ்வைத் தொடங்க முஸ்லீம் மத சடங்குகளை மட்டுமோ அல்லது கிறிஸ்துவ மத சடங்குகளை மட்டுமோ செய்திருந்தால் அதை ஏற்பார்களா? கலவரம் நடத்தி சூறையாடப்பட்ட ‘சக்தி’ இன்டர்நேஷனல் பள்ளி, ‘செயின்ட் ஜான்’ பள்ளியாக இருந்திருந்தால், ஒன்றிய அரசின் மகளிர் ஆணையம் அடுத்த சில மணி நேரத்திலே விசாரணைக்கு வந்திருக்கும்! பா.ஜ.க.வும் இந்து முன்னணியும் இப்போது மவுனம் காப்பதுபோல இருந்திருப்பார்களா? ஆனால், அரசு நிகழ்ச்சிகளில் புரோகிதர்களை மட்டும் வைத்து சடங்கு செய்தால் அது இயல்பானதாக கடந்து போய் விடுகிறார்கள். பொதுப் புததி அவ்வாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. அரசும் – மதமும் விலக்கி வைக்கப்பட வேண்டும். அதுவே மதச் சார்பின்மை என்று சொன்னால் மதத்தை விலக்குவது கூடாது; அனைத்து மதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்று பதில் கூறுகிறார்கள். அப்படித்தான் நடக்கிறதா? 1968இல் அண்ணா முதலமைச்சராக வந்தவுடன் தலைமைச் செயலாளராக இருந்த சி.ஏ. இராமகிருட்டிணன், அரசு  அலுவலகங்களில் படிப்படியாகக் கடவுள் படங்களை...

‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத்தின் வரலாறு

‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத்தின் வரலாறு

தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று முதலமைச்சர் அண்ணா பெயர் சூட்டிய நாள் 18.07.1967. அன்று சட்டமன்றத்தில் அண்ணா, தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதை தமிழ்நாடு நாள் என்று தமிழ்நாடு அரசு கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஒருமனதுடன் நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணா மிகுந்த கவலையுடன் செயல்பட்டார். இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பு, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்குப் பிறகு, அரசியல் சட்டத்திலே மாற்றங்களை செய்ய முடியுமா என்பது குறித்து, இந்திய அரசியல் உயர் மட்டத் தலைவர்களிடம் அவர் கலந்து ஆலோசித்தார். அதில் எந்த தடையும் இருக்காது என்று உறுதியைப் பெற்று அவர் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். குறிப்பாக அவர் ஒரு நிகழ்வையும் சுட்டிக்காட்டினார். “பத்து நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் இந்த மாநிலத்தைப் பற்றி பேச வேண்டிய வாய்ப்பு கிடைத்த நேரத்தில், அங்குள்ள உள்த்துறை அமைச்சர் சவான் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்று கூறியே...

‘கருவறைத் தீட்டை’ நியாயப்படுத்தும்  ஆகம விதிகளுக்குத் தடை போட வேண்டும்

‘கருவறைத் தீட்டை’ நியாயப்படுத்தும் ஆகம விதிகளுக்குத் தடை போட வேண்டும்

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், அனைத்து ஜாதி இந்துக்களும் அர்ச்சகராகும் பிரச்சனையை கையில் எடுத்து உரிய முறைப்படி அவர்களுக்கு அர்ச்சனை செய்யும் நியமனங்களை வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் இதை வெளிப்படையாக எதிர்க்க முடியாத நிலையில், இப்போது வெளி மாநிலத்தி லிருந்து ஆட்களைப் பிடித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கின்றனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜெகத்குரு இராமநாத ஆச்சாரியார் சுவாமி என்பவரும் டெல்லி, உத்திர பிரதேசம், பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 8 பேரும் தமிழ்நாட்டைச் சாராதவர்கள் இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் தமிழ்நாடு அரசு நியமித்த ஒரு உத்தரவுக்கு எதிராக வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழக்குத் தொடர உரிமையில்லை, எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியதை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஏற்க தயாராக இல்லை. ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும். அந்த நீதிபதி ஆகம விதிகளை...

காமராசர் திராவிட மாடலின் முன்னோடி

காமராசர் திராவிட மாடலின் முன்னோடி

காமராசரின் 120 ஆவது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட உத்தரவிட்டுள்ளது. கல்விக் கண் திறந்த கல்வி வள்ளல் காமராசர். கடவுள் வாழ்த்துகளை கைவிட்டுவிட்டு, ‘காமராசர் வாழ்த்துப் பாடலை பாட வேண்டும்’ என்று சொன்னத் தலைவர் பெரியார். அவருக்கு மிகப் பொருத்தமாக இந்த நாளில் தமிழ்நாடு அரசு ஒரு திட்டத்தை துவக்கியிருக்கிறது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராமப்புற வளர்ச்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு துவக்கி இருக்கிறது. இந்தியை எதிர்த்தார் காமராசர். மத்திய அரசு, மாநில அரசு வேலைத் தேர்வுகளில் இந்தி கட்டாயமான ஒரு பாடமாக இருக்கக் கூடாது என்று 1955இல் நேருவை சந்தித்து ஆலோசித்து விட்டு அவர் அறிவித்தார். அதற்கு காரணம், பெரியார் இந்தியை எதிர்த்து தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்தது தான். 1966இல் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 10...

கோவை அண்ணா சிலை முன்பு கலைஞர் பிறந்த நாள் நிகழ்வு

கோவை அண்ணா சிலை முன்பு கலைஞர் பிறந்த நாள் நிகழ்வு

3.6.2022அன்று காந்திபுரம் அண்ணா சிலை முன்பு திராவிட இயக்கத் தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை லோகு தலைமையில் கொள்கை முழக்கங்கள் எழுப்பிக் கொண் டாடப்பட்டது. கோவை மாநகரத் தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. பெரியார் முழக்கம் 09062022 இதழ்

சடங்குகள் இன்றி கோவை கழகத் தோழர் இல்லத் திறப்பு

சடங்குகள் இன்றி கோவை கழகத் தோழர் இல்லத் திறப்பு

கோவையில் கடந்த ஜூன் 5ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ‘டிட்டோ போட்டோஸ்’ புகைப்பட நிறு வனம் நடத்தும் சிவராஜ் கண்ணுமா இல்லத்தை புலவர் செந்தலை கவுதமன் திறந்து வைத்தார். இல்லத் திறப்பு நிகழ்ச்சியில் பார்ப்பனர்களின் வைதீக சடங்கு சம்பிரதாயங்கள் தவிர்க்கப்பட்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலராலும் பேசுப் பொருளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, கோவை மாவட்டச் செயலாளர் வெள்ளிங்கிரி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி மற்றும் திருப்பூர் கோவை மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 09062022 இதழ்

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல்: திராவிட மாடல் விளக்கக் கூட்டம்

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல்: திராவிட மாடல் விளக்கக் கூட்டம்

கழக செயல்வீரர், தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன்  முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் நமக்கான அடையாளம் திராவிட மாடல் விளக்கப் பொதுக்கூட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 01.06.2022, புதன் கிழமை மாலை 6 மணியளவில் கணியூர் பெரியார் திடலில்  நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணியளவில் மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் கழகக் கொடி ஏற்றப்பட்டது.  முனைவர் பேராசிரியர் சுந்தரவள்ளி (தமுஎகச) கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மடத்துக்குளம் மோகன் இணையர் ஜோதிமணி மகள் அறிவுமதி மற்றும் கழக நிர்வாகிகள் தோழர்கள் கணக்கன், சிவானந்தம், ஐயப்பன், சரவணன், வெள்ளிங்கிரி, ஆனந்த், நீலாம்பூர் கருப்புசாமி, பாண்டியநாதன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மாலை 6 மணி அளவில் கணியூர் பெரியார் திடலில் நமக்கான அடையாளம் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. யாழினி –  ஆனைமலை வினோதினி ஆகியோர் கொள்கைப் பாடல்களை...

விரிவான தகவல்களுடன் முனைவர் ஜெயரஞ்சன் உரை கிராமப்புற விவசாயிகளை நிலப்பிரபுக்கள் பிடியிலிருந்து மீட்க – கலைஞர் நிறைவேற்றிய சாதனை சட்டங்கள்

விரிவான தகவல்களுடன் முனைவர் ஜெயரஞ்சன் உரை கிராமப்புற விவசாயிகளை நிலப்பிரபுக்கள் பிடியிலிருந்து மீட்க – கலைஞர் நிறைவேற்றிய சாதனை சட்டங்கள்

திராவிட மாடல் பயிற்சிப் பாசறை தொடக்க விழா 5.6.2022 அன்று கலைஞர் அரங்கில் நடந்ததது. திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் பங்கேற்று ஆற்றிய உரை: 1967இல் ஆட்சிக்கு வந்த பிறகு நமக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தது. சமூகநீதி இயக்கம் எதற்காகப் போராடியதோ, அதை எல்லாம் செயல் வடிவம் கொடுக்கக் கூடிய ஓர் அரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. ஆனால், அண்ணா முதலமைச்சராக இருந்தது ஒன்றரை ஆண்டுகள்தான். அவர் மறைந்த பிறகு, அந்த அரும்பணியும், அந்த அரிய வாய்ப்பும் டாக்டர் கலைஞரிடம் வந்து சேர்ந்தது. 1976 ஆம் ஆண்டுவரை அவர் செய்த காரியம் இருக்கிறதே, தமிழ்ச் சமுதாயத்தையும், தமிழ்ப் பொருளாதாரத்தையும், தமிழக அரசியல் செயல் படுகின்ற விதத்தை எந்த அளவிற்கு மாற்றியமைத் திருக்கின்றார் என்பதைப் பார்த்தால், வியப்பாக இருக்கும். தமிழகத்தில் மட்டும்தான் வளர்ச்சி என்பது ஜனநாயகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்குப் பொருள் என்னவென்று சொன்னால், நிலம் என்பது ஒரு சிலரிடம் மட்டும்தான்...

அ.இ.அ.தி.மு.க.வில் பா.ஜ.க. எதிர்ப்புக் கலகம்

அ.இ.அ.தி.மு.க.வில் பா.ஜ.க. எதிர்ப்புக் கலகம்

ஓபிஎஸ் யும், இபிஎஸ் யும் அஇஅதிமுகவை தமிழ்நாடு பாஜகவிடம் விலை பேசி கொண்டிருக்கும் போது முதுகெலும்புடன் துணிச்சலாக குரல் கொடுத்துள்ளார் அக்கட்சியின், முன்னாள் அவைத் தலைவர் பொன்னையன். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். ‘அஇஅதிமுகவை பலியாக்கி தமிழ்நாட்டில்  தன்னை வளர்த்துக்கொள்ள பார்க்கிறது பாஜக’ என்று கூறியவர் அதன் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கோ, அஇஅதிமுகவிற்கோ, திராவிடக் கொள்கைக்கோ நல்லது அல்ல. என்று கூறியுள்ளார். கட்சியின் தொழில்நுட்ப அணி பாஜகவை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். காவிரி முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜக இரட்டை வேடம் போடுவதையும், தமிழ்நாடு பாஜக கள்ள மவுனம் சாதிப்பதையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஏதோ மக்கள் பிரச்சனையில் கவலை உள்ளவர் போல தினமும் நாடகம் நடத்தி வருகிறார் அண்ணாமலை. ஆனால், அக்கட்சியின் உண்மையான முகம் என்பதோ வேறு. பார்ப்பனியத்தையும், மதவெறியையும் பாதுகாப்பது தான் பாஜக வின் உண்மையான முகம். காசியிலும், மதுராவிலும் உள்ள...

இஸ்லாமிய வெறுப்பு அரசியல்: உலகின் முன் தலைகுனிந்து நிற்கிறது – ஒன்றிய ஆட்சி

இஸ்லாமிய வெறுப்பு அரசியல்: உலகின் முன் தலைகுனிந்து நிற்கிறது – ஒன்றிய ஆட்சி

ஒன்றிய பாஜக ஆட்சி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகளின் கடும் எதிர்ப்பை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக இந்திய ஒன்றியத்தில் நடைபெறுகிற இஸ்லாமிய எதிர்ப்பு பேச்சுக்கள், வெறுப்புக் கருத்துகள் தற்போது உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. வர இருக்கின்ற இஸ்லாமியர்களை எதிரி களாக கட்டமைத்து இந்துக்கள் வாக்குகளை திரட்டி விடலாம் என்று பாஜக காய் நகர்த்தி வருகிறது. அதற்கான திட்டங்களும் அரங்கேற்றப்பட்டு  கொண் டிருக்கின்றன. காசி, மதுராவில் உள்ள மசூதிகள், இந்துக்கள் கோவில்களை இடித்து கட்டப்பட்டுள்ளன என்று புதிதாக  உருவெடுத்துள்ளன. ஸ்ரீரங்கப் பட்டினத்திற்குள் நுழையப் போவதாக விஷ்வ இந்து பரிஷத் காரர்கள் அறிவித்து போராட்டமும் நடத்தி முடித்திருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுக்கள் தீவிரமாக முடிக்கிவிடப் பட்டிருக்கின்றன. பாபர் மசூதி இடித்துவிட்டு அயோத்தியில் இராமர் கோவிலை கட்டலாம் என்று திட்டமிட்டவர்கள், மசூதி இடித்தவர்களையும் காப்பாற்றிவிட்டு, மசூதி இடித்தது நியாயம், அங்கே கோவில் இருந்தது என்பதற்கான தீர்ப்பையும்...

தலையங்கம் ஆதீனம் – ஆளுநர் – அண்ணாமலை

தலையங்கம் ஆதீனம் – ஆளுநர் – அண்ணாமலை

தமிழ்நாட்டில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மாநில உரிமைகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழுத்தமாகக் குரல் கொடுத்து வருவது, பா.ஜ.க. மற்றும் சங்பரிவாரத்திற்கு கடும் அதிர்ச்சியையும் எரிச்சலையும் உருவாக்கி வருவதை உணர முடிகிறது. அண்மையில் பிரதமர் மோடி பங்கேற்ற ஒரு நிகழ்வில் தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய ஆட்சி முடக்கி வைத்துள்ளதை பட்டியலிட்டுப் பேசியது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத்  தேர்தலை சந்திக்கும் நிலையில் தமிழ்நாட்டின் உரிமைக் குரல் பிற மாநிலங்களுக்கும் பரவிடக் கூடும் என்ற அச்சத்தில் தமிழ்நாட்டின் தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி, பா.ஜ.க. – பார்ப்பனிய சனாதன ஆதரவுத் தளமாக மாற்றுவதற்கான காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. அண்மையில் மதுரையில் ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சார்ந்த விசுவ இந்து பரிஷத், மதுரை ஆதீனம், ஜீயர்கள், சாமியார்களைக் கூட்டி ஒரு மாநாட்டை நடத்தியுள்ளது. தமிழக அரசை மிரட்டியுள்ளதோடு, திராவிடர்  இயக்கக் கோட்பாடுகளையும் கண்டித்து ‘துறவிகள்’ பேசியிருக்கிறார்கள்....

கியான்வாபி பள்ளிவாசல் பிரச்சனை என்ன ?

கியான்வாபி பள்ளிவாசல் பிரச்சனை என்ன ?

காசி நகரில் இருந்த சிவன் கோயிலை இடித்துவிட்டுத்தான் முகலாய மன்னர் அவுரங்கசீப் கியான்வாபி பள்ளிவாசலை கட்டினார். எனவே அந்த பள்ளிவாசலை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது இந்துத்துவ அமைப்புகளின் வாதம். வாரணாசி என்ற காசியில் கியான்வாபி பள்ளிவாசலும் காசி விஸ்வநாதர் கோவிலும் அருகருகே அமைந்துள்ளன. இரண்டிற்குமான இடைவெளி வெறும் பத்து மீட்டர் மட்டுமே. பெரும்பாலும் ஒரே வாசல் வழியாகவே இரண்டு வழிபாட்டுத் தலங்களுக்கும் மக்கள் சென்று வருகின்றனர். மத ஒற்றுமையின் அடையாளமாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு இடத்தை மத மோதலுக்கான காரணியாக இந்துத்துவ சக்திகள் மாற்றுகின்றனர். 1936இல் அப்பகுதி இந்துக்களுடன் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து பள்ளிவாசல் இடத்தில் தங்களுக்கான உரிமையைக் கோரி பனாரஸ் நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் வழக்கு தாக்கல் செய்தனர். முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை நீதிமன்றம் 1937 இல் உறுதிப்படுத்தியது. 1991 இல் இந்த பள்ளிவாசல் இடத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று சோம்நாத் வியாஸ் என்பவர் வழக்கு தொடுத்தார். 1937...