ஜாதி மறுப்பு இணையர்களுக்கு மதுரையில் பாராட்டு விழா

மதுரை : காதலர் தினத்தையொட்டி மதுரை மாவட்டக் கழக சார்பில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் வாசுகி வரவேற்புரையாற்றினார், மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.பா.மணி அமுதன் தலைமை தாங்கினார்.

ஆதித்தமிழர் கட்சித் தலைவர் கு.ஜக்கையன், அதிமமுக பொதுச் செயலாளர் பசும்பொன்.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் வெ.கனியமுதன், தமிழ்ப்புலிகள் கட்சி தென்மண்டல பொறுப்பாளர் கனகராஜ் ஆகியோர் உரையாற்றினார்..

முன்னதாக ஜாதி மறுப்பு இணையர்களுக்கு தமிழ்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் இன்குலாப் ஆகியோர் நினைவுப் பரிசினை வழங்கினர்.

தொடர்ந்து ஜாதி மறுப்பு இணையேற்பு நடத்தி சட்ட போராட்டம் நடத்தும் தோழர்களான கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரனுக்கு ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் நினைவுப் பரிசு வழங்கினார்.

தமிழ்நாடு ஜாதி மறுப்பு இணையர் நலச் சங்க செயலாளர் ரமேசு பெரியாருக்கு அதிமமுக பொதுச் செயலாளர் பசும்பொன் பாண்டியன் நினைவுப் பரிசு வழங்கினார்..

விழாவில் பங்கேற்ற ஜாதி மறுப்பு இணையர்கள் மற்றும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்கும் தோழர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில் ஜாதி மறுப்பு இணையர்கள், கண்ணன் காமாட்சி, பரத், மருது பாண்டி, முருகேசன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 22022024

You may also like...