Category: ஒலிப்பதிவுகள்

மிருகத்துக்கும் மதச்சாயம்

மிருகத்துக்கும் மதச்சாயம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிசத் அமைப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறது. அம்மாநிலத்தில் சிலிகுரி என்ற பகுதியில் பெங்கால் சவேரி என்ற உயிரியல் பூங்கா உள்ளது. அந்த பூங்காவில் ஆண் சிங்கத்துக்கு அக்பர் என்றும், பெண் சிங்கத்துக்கு சீதா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிங்கங்களும் திரிபுராவில் இருந்து வந்தவை. இதற்கு திரிபுராவிலேயே பெயர் சூட்டப்பட்டுவிட்டது. ஆண் சிங்கத்துக்கு அக்பர் என்ற இஸ்லாமியப் பெயரையும், பெண் சிங்கத்துக்கு சீதா என்ற ராமாயண பாத்திரப் பெயரையும் சூட்டியிருப்பது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக இருக்கிறது. எனவே பெண் சிங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்பதுதான் விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் கருத்து. அக்பர் ராமாயணத்துக்கு எதிரானவரா? இந்துமதத்துக்கு எதிரானவரா? என்பதையும் வரலாற்றுரீதியாக நாம் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. ராமாயணத்தை சமஸ்கிருத மொழியில் இருந்து பாரசீக மொழிக்கு மொழிப்பெயர்க்க வேண்டும் என்று உத்தரவிட்ட மன்னர் தான் அக்பர். ...

பாஜகவின் சவப்பெட்டிக்கு ஆணி அடிக்கிறார் ஆளுநர்!

பாஜகவின் சவப்பெட்டிக்கு ஆணி அடிக்கிறார் ஆளுநர்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் ஒரு நாடகத்தை சட்டப்பேரவையில் அரங்கேற்றி இருக்கிறார். அரசு எழுதிக்கொடுத்த உரையை படிக்காமல் தனது உரையை இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே முடித்துக் கொண்டார். அவர் எதையுமே முழுமையாக படிப்பதில்லை. அது திராவிடம் என்றாலும் சரி, வள்ளுவர் என்றாலும் சரி, சனாதனம் என்றாலும் சரி எதையும் அவர் முழுமையாக படிக்காமல் தனக்கு தெரிந்ததையெல்லாம் பேச வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒருவர். அதேபோல அரசே எழுதிக்கொடுத்து சட்டப்படி படிக்க வேண்டிய ஆளுநர் அதில் எனக்கு முரண்பாடு இருக்கிறது என்று கூறி தானே ஒரு உரையை எழுதிப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார் போல. அப்படியானால் தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் எதாவது ஒன்றில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதலமைச்சராகி, அவர் அமைக்கிற அமைச்சரவையில் ஒரு உரையை தயாரித்த பின்னர் அவர் விரும்புகிற உரையை படிக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி, அமைச்சரவையின் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய ஒரு ஆளுநர் தமிழ்நாடு அரசின் உரையில் தனக்கு...

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

குஜராத் கலவரத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் விடுதலை செல்லாது என்றும் அவர்களை மீண்டும் இரண்டு வார காலத்துக்குள் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் 08.01.2024 அன்று அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பில், குற்றவாளிகளின் விடுதலைக்கு பின்னால் இருக்கிற அரசியலையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒன்றிய ஆட்சியும், குஜராத் ஆட்சியும் இணைந்து குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர் என்று கூறிய உச்சநீதிமன்றம் இதில் நடந்திருக்கிற மோசடிகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. இதில் ஃபிராடு நடந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் பயன்படுத்திய வார்த்தையை சுட்டிக்காட்ட வேண்டும். அது என்ன ஃப்ராடு? இந்த வழக்கு குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது. எனவே குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் முடிவு மகாராஷ்டிரா மாநில அரசுக்குத்தான் உண்டே தவிர குஜராத் மாநில அரசுக்கு சட்டப்படி கிடையாது. ஆனால் குஜராத் மாநில அரசு எப்படி இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யமுடிந்தது? தண்டனை...

“தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சமூக நீதிக் குரல்”

“தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சமூக நீதிக் குரல்”

அரசுப்பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு முன்பு மாணவர்கள் சமூகநீதி பாடல் பாட வேண்டுமென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஒரு ஆணையை பிறப்பித்திருக்கிறார். உண்மையிலேயே இது வரவேற்கத்தக்க ஒரு முடிவாகும். பாடத்திட்டத்தில் தமிழ்நாட்டின் வகுப்புரிமை போராட்ட வரலாறு, சுயமரியாதை இயக்க வரலாறு இவைகளையும் சேர்த்தால் இளம் தலைமுறைக்கு வரலாறுகளை எடுத்துச்சொல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பது நமது உறுதியான கருத்து. உத்தரப் பிரதேசத்தில் மாணவர் வருகைப் பதிவேட்டை ஆசிரியர் பதிவு செய்யும்போது, அங்குள்ள பல பள்ளிகளில் மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கூறுவதாக சில படங்கள் முகநூலில் வந்துகொண்டிருக்கின்றன. இது உத்தரப் பிரதேசத்தின் நிலை. தமிழ்நாட்டில் கலைஞர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒன்றை அறிமுகப்படுத்தினார். நீராருங் கடலுடுத்த என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் இப்போது, அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தொடக்கப் பாடலாகப் பாடப்பட்டு வருகிறது. அதற்குமுன்பு அவரவர் விரும்புகின்ற கடவுள்களின் பாடல்கள்தான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு...

கொலைக் களத்துக்கு இந்துக்களை அனுப்பும் பாஜக அரசு

கொலைக் களத்துக்கு இந்துக்களை அனுப்பும் பாஜக அரசு

இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என்று சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா அரசு தொடர்ந்த வழக்கில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வது உண்மை தான் என்று கூறி சர்வதேச நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.  இந்த சூழ்நிலையில் உத்திரபிரதேசத்தில் நடக்கும் பாஜக ஆட்சி வேலைக்கான ஒரு பரிமாற்றத்திற்கு ஒரு ஒப்பந்தத்தை போட்டுள்ளது. அதனடிப்படையில் உத்தரபிரதேசத்தில் இருந்து இஸ்ரேலுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பிவருகிறார்கள். இஸ்ரேலில் நடந்த போரின் காரணமாக அங்கே பல நிறுவனங்களில் பணியாளர்களே இல்லாத சூழ்நிலையில் உத்தரபிரதேச அரசு இந்த ஒப்பந்ததை போட்டுக்கொண்டு உபியில் இருந்து இஸ்ரேலுக்கு ஆட்களை அனுப்பி வருகிறது. பலரும் இந்த ஆபத்தான சூழ்நிலையில் இனப்படுகொலை நடக்கிறது என்று குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு நாட்டுக்கு உயிர் போனாலும் பரவாயில்லை, இங்கே வேலை கிடைக்காது, அதனால் அங்கே போகிறோம் என்று ஏராளமான இளைஞர்கள் இஸ்ரேலை நோக்கி சென்றுள்ளனர். இப்படி வேலைக்கு சென்றுள்ள இளைஞர்களை பேட்டி கண்டு இந்து ஆங்கில நாளேடு ஒரு முழுப்பக்க...