சென்னையில் ஆணவப் படுகொலை!

சென்னை : வேளச்சேரி அருகே உள்ள பள்ளிக்கரணையில் பிரவீன் என்கிற ஆசிக் என்ற இளைஞர் 24.02.2024 அன்று ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.

தகவலறிந்து சென்னை மாவட்டக் கழகத்தின் அறிவுறுத்தலின் படி மடிப்பாக்கம் பகுதிச் செயலாளர் ம. கி. எட்வின் பிரபாகரன், அட்டி அருண் ஆகியோர் பிரவீனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இதில் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், மக்கள் குடியரசு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜான் மண்டேலா ஆகியோர் பங்கேற்றனர்

பின்னர் வழக்கறிஞர் ரமேஷ் பெரியார், அருள் ஜெகன், ஏதுசாமி, மோகன் உள்ளிட்ட தோழர்களை சந்தித்து ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.

சென்னை போன்ற மாநகரங்களிலேயே ஆணவப் படுகொலை செய்யும் அளவுக்கு ஜாதியவாதிகளுக்கு துணிச்சல் அதிகரித்திருப்பது கவலைக்குரிய ஒன்று. ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ்நாடு அரசு இதுகுறித்து உடனடியாக பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது.

பெரியார் முழக்கம் 29022024

You may also like...