Category: திவிக

என்றென்றும் நினைவில் நிற்கும் மாநாடு

என்றென்றும் நினைவில் நிற்கும் மாநாடு

சென்னை மாவட்டக் கழக மாநாட்டுப் பணிகள் தொடங்கியது முதல் கடும் மழை கொட்டிக் கொண்டே இருந்தது. திருப்பூர், கோவை, விழுப்புரம், தூத்துக்குடி, நாகை, விருதுநகர், மாவட்டங்களிலிருந்து தோழர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாநாட்டில் பங்கேற்கும் ஆர்வத்துடன் கடும் இடர்ப்பாடுகளை யும் கடந்து வந்திருந்தனர். கழகப் பொருளாளர் இரத்தினசாமி, முதல் நாளே மாநாட்டுப் பணிகளில் பங்கேற்க சென்னை வந்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நவம்பர் 17ஆம் தேதி சென்னை வந்தவர், 19 நாள்களுக்குப் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி காலையில் தான் மேட்டூர் புறப்பட்டுச் சென்றார். மலேசியாவில் பினாங்கு துணை முதல்வர் இராமசாமி ஏற்பாடு செய்த ஈழத் தமிழர் உரிமை மாநாட்டில் பங்கேற்க தோழர் கொளத்தூர் மணி, நவம்பர் 19ஆம் தேதி சென்னையிலிருந்து பினாங்கு பயணமானார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாடு கடந்த தமிழீழ அரசின் தமிழகப் பிரதிநிதி பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்....

கொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

கொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

திராவிடர் விடுதலைக்கழகம், சென்னை மாவட்டத்தின் சார்பாக மக்களைப் பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” 01.12.2015 செவ்வாய்க் கிழமை சென்னை மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்த சிறப்பான மாநாட்டில் கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம், பட்டி மன்றம், கருத்துரை ஆகியன இடம் பெற்றன. சென்னையில் காலத்தின் அவசியம் கருதி பல்வேறு தடங்கல்களை முறியடித்து கழகத் தோழர்களின் பெரு முயற்சியால் இம்மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டின் முந்தைய நாள் இரவிலேயே கடும் மழை பெய்தது. கடும் மழைக்குமிடையே தோழர்கள் மாநாட்டு பணிகளை மேற்கொண்டார்கள். காலையிலேயே மாநாடு துவங்கும் நேரத்திலேயே கடும் மழை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கழக மாநாட்டின் கருத்துரைகளைக் கேட்க தோழர்கள், தோழமை அமைப்புகள், பொது மக்கள் வருகை என 200க்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிறைந்தது. காலை...

கழகம் – ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ நீட்டிய உதவிக் கரம்

உதவிக்கரம் நீட்டியோர் திராவிடர் விடுதலைக் கழகம், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இணைந்து நடத்திய நிவாரணப் பணிகளுக்கு உதவிட முன்வந்தோர் பட்டியல்: திருப்பூர் வணங்காமண் ஆடையகம் சார்பில் ஊமை அழகிரி 150 புதிய சட்டைகள், 150 வேட்டிகள்; மேட்டூர் கழகம் சார்பில் அரிசி மூட்டைகள், தண்ணீர் பாக்கெட், பருப்பு, ரொட்டி, மருந்துகள், தனி வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை ஆனந்தன் 225 பெட்சீட்டுகள் வழங்கினார். திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்கள் ஏராளமாக அரிசி மூட்டைகள், ரொட்டி, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அனுப்பினர். குவைத்திலிருந்து செந்தில் ரூ.50,000; தஞ்சையிலிருந்து மணி வண்ணன் ரூ.25,000; சூலூர் பனிமலர் ரூ.10,000; சென்னை பாண்டியன் ரூ.4000; அமெரிக்காவிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் ரூ.44,000. குறிஞ்சி நாடன் ரூ.3,000; வளர் தங்கம் குடும்பத்தார் ரூ.2000. செந்தில் (எப்.டி.எல்.) வழியாக உதவியோர் ரூ.8,600. தேனி ஆசிரியர் மணிமேகலை ரூ.5000. சுவீட்சர்லாந்து இளம் இராயல் விளையாட்டுக் கழக சார்பில்...

சாதி கொடுமைகளுக்கு எதிரான மாநாடு 12122015 மதுரை

12 டிசம்பர் 2015 அன்று காலை 9.30 மணி அளவில் சாதி கொடுமைகளுக்கு எதிரான மாநாடு நடைபெற்றது. எவிடென்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்து இருக்கும் இந்த மாநாடு மதுரை – கே.புதூரில் அமைந்து உள்ள டி நோபிலி அரங்கில் நடைபெற்றது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சாதி வேறுபாடுகள் கூடாதென சட்டம் வலியுறுத்தினாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வரமுடியாதவர்களாக பெரும்பகுதி மக்கள் இருக்கின்றனர் என்றார் சாதி, மத ஆதிக்கம் அரசியலிலும், ஆட்சியிலும் நுழைவது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். எவிடன்ஸ் அமைப்பு சார்பில் மதுரை கோ.புதூர் டிநோபிலி அருள் பணி மைய அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தீண்டாமை கூடாது என்கிறது. அதன் பிறகு வந்த குடியுரிமைச்...

புதுச்சேரியில் முற்றுகைப் போராட்டம் 16122015

புதுச்சேரி அரசில் அரசுச் செயலாளராகப் பணியாற்றும் ராக்கேஷ் சந்திரா என்னும் அதிகாரி ஏராளமான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் ஆவார். மருத்துவக் கல்லூரி இடங்களில் 50% இடங்கள் அரசு ஒதுக்கீட்டு அளித்தாக வேண்டும் என்ற விதியை 50 இடங்கள் அளித்தாக வேண்டும் என்று திரித்துக் கூறி இடஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கிடைக்காமல் செய்தவர். ஆசிரியப் பணித் தேர்வில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்றோரையும் ஒதுக்கீட்டுக் கணக்கில் வைத்து ஏராளமான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வேலை வாய்ப்பைப் பறித்தவர். மேலும் சம்பள விகிதம் அதிகமாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை கெசட்டட் பதவி எனக் கூறி இடஒதுக்கீட்டில் வராது என்று நியமனங்களில் ஊழல் செய்தவர். புதுவைக் காகித ஆலைக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை, அவ்வாலை இயங்காததால் அர்டசுக்குத் திருப்பி அளிக்கவேண்டும் என்ற ஒப்பந்த விதிகளுக்கு முரணாக, அரசின் அனுமதியின்றியே தனியாருக்கு விற்றதால் 7.5 கோடி ஊழல் என்று 2014 ஜூலை மாதமே ஏமாற்றுதல் (420), அதிகார துஷ்பிரயோகம்...

பிரச்சார பயண நிறைவு பொதுக்கூட்டம் நம்பியூர் 13122015

ஈரோடு (வடக்கு) மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ”எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” என்னும் பயண நிறைவு விழாப் பொதுக்கூட்டம், 13-12-2015 அன்று மாலை நம்பியூர் பேருந்து நிலைய திடலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நம்பியூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ரமேசு தலைமை தாங்கினார். தோழர் செல்வகுமார் வரவேற்புரையாற்றினார்.மேட்டூர் டி.கே.ஆர். பகுத்தறிவு இசைக்குழுவினரின் சாதியொழிப்பு, பகுத்தறிவு பாடல்களுடன் தொடங்கியது. கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரோடு இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் கோபி இளங்கோ, பேச்சாளர் கோபி வேலுச்சாமி ஆகியோர் உரையாற்றினார். அந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற உறுப்பினர்களுக்கு, அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, கழகத் தலைவர் வழியாக வழங்கினார்.

சங்ககிரி ராச்குமார் திருமண வரவேற்பு

திரைப்பட இயக்குநரும், சீரிய பகுத்தறிவாளருமான தோழர் சங்ககிரி ராச்குமார்- தோழர் திலகவதி ஆகியோரின் திருமண வரவேற்பு சங்ககிரி மீனாட்சி திருமண மண்டபத்தில் 13-12-2015 அன்று நடைபெற்றது. வரவேற்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், வட அமெரிக்க சியோட்டல் தமிழ்ச் சங்கத் தலைவர் அதியமான், திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சன், சன் டி.வி. ராஜா, இசையமைப்பாளர் தாஜ்நூர் , ஈரோடு மருத்துவர் சக்திவேல் உட்பட கழகத் தோழர்களும், திரைப்படத் துறையினரும் கலந்து கொண்டனர்

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி புரிய விரும்புவோர் கவனத்திற்க்கு ! கடலூர் ஒட்டிய கிராமப்புறங்களுக்கு இப்போது வரை நிவாரண பொருட்கள் சரியாக சென்றடையவில்லை. அக்கிராமங்கள் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்ப்ட்டுள்ளது. அளிக்கப்படும் நிவாரண பொருட்களும் பல்வேறு காரணங்களால் அங்கு சென்று சேர்வதில்லை.கடலூரிலேயே பொருட்களை கொடுத்து செல்வது,உள்கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலை,மேலும் பொருட்களை கொண்டு செல்லும் வழியில் சிலரால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள் ஆகிவற்றால் மக்களுக்கு பொருட்கள் சரியாக கொண்டு சென்று வழங்கப்படாததல் இன்னும் அம்மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர். திராவிடர் விடுதலைக் கழக தோழர்களும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.பொருட்களை சேகரித்து வைக்க இப்போது வடலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர்,மூத்த பெரியார் தொண்டர் தோழர் கலிய மூர்த்தி அவர்களின் வடலூர்,ராதா திருமண மண்டபத்தில் நிவாரண பொருட்கள்...

கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி

கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி

திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் சார்பில் கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி ! சேலம் மாவட்டம் கொளத்தூர் பொது மக்களிடம் திரட்டப்பட்ட வெள்ள நிவாரண உணவு பொருட்கள் திராவிடர் விடுதலைக் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் லோகு. அய்யப்பன் உதவியோடு கடலூர் ஆண்டித்தோப்பு, வழிசோதனை பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அன்பழகன், ராமச்சந்திரன், தயலப்பன், சரவணன், கீர்த்தியரசு, எல்.ஐ.சி.வேலு, விஜயபூபதி, பால்.பாலு ஆகிய தோழர்கள் முன்னின்று செயல்பட்டனர்.

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி 5 ம் நாள் (09.12.2015) நேற்று கழகத் தோழர்களோடு இணைந்து தமிழ்நாடு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் அவர்கள் வெள்ள மீட்புப் பணியாற்றினார்.

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணம்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணம் ! திருப்பூர் மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள் கழக தோழர்களால் கடலூருக்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டு ஏற்கனவே அங்கு கிராம பகுதிகளில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கழக தோழர்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்கு வழங்க்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் வழங்கப்பட்ட பொருட்கள்,பொருளுதவி செய்தவர்கள் விவரம் : சந்திரசேகர் சி எம் டி கார்மெண்ட்ஸ் —அரிசி 100 கிலோ அருண்,சதிசு மற்றும் நண்பர்கள் ப்ளூ ஜே மென்ஸ் பௌட்டிக் — 300 சப்பாத்தி; 280 தண்ணீர் குவளை; 200 பிஸ்கட் பாக்கட். சிவகுமார் ஈரோ லுக் ஸ்டிக்கர்ஸ் – 25 கிலோ அரிசி; 50 நாப்கின்ஸ் அபிநயா, சவிதா, மனோஜ், அக்சதா, பாரதி விழி தற்காப்பு பயிற்சி கூடம் சூலூர்—- பிஸ்கட் 2 பெட்டிகள்(2௦௦ பாக்கட்); துணிகள் ; 50 கிலோ அரிசி. முத்துச்சாமி...

9 வது நாளாக திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த வெள்ள மீட்புப்பணி

9 வது நாளாக திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த வெள்ள மீட்புப்பணி

9 வது நாளாக (10.12.2015) சென்னை திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த வெள்ள மீட்புப்பணி ! வெள்ள நிவாரணப்பணியில் தொடர்ந்து 9 வது நாளாக பணி செய்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் 10.12.2015 அன்று நிவாரண பணிகள் மேற்கொண்ட இடங்கள் : குன்றத்தூர்,பெருங்குடி,கல்குடி நிவாரண பொருட்களுடன் 1500 பேருக்கு உணவும் வழங்கப்பட்டது. தோழர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட வெள்ள நிவாரணப்பொருட்கள் விவரம் : ‘கோபி ‘ : ஆயில் -850 கிலோ , மைதா – 1 மூட்டை, அரிசி – 10 மூட்டை, அரிசி – 5 மூட்டை, நாப்கின் – 100 பீஸ், மருந்து – 1 பெட்டி, பாய் – 1 கட்டு, பிஸ்கட் – 2 பெட்டி, ஈரோடு : பெட்சீட் – 150, துணி – 1 பண்டல்.

மதுரையில் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாடு

சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாடு இடம் : டி நோபிலி அருள் பணி மையம், மெயின் அரங்கம்,கே.புதூர்,மதுரை – 7. மாநாடு – காலை 10.00 முதல் 1.00 மணி வரை. தலைமை : தோழர் இரா.நல்லக்கண்ணு இந்திய கம்னியூஸ்ட் கட்சி துவக்க உரை : தோழர் ஜி.ராமகிருஷ்ணன் மாநில செயலாளர், மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி, சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு : எவிடன்ஸ்.

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி 5 ம் நாள் (09.12.2015)

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி 5 ம் நாள் (09.12.2015) நேற்று கழகத் தோழர்களோடு இணைந்து தமிழ்நாடு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் அவர்கள் வெள்ள மீட்புப் பணியாற்றினார்.

திவிக கொளத்தூர் சார்பில் கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி !

திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் சார்பில் கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி ! சேலம் மாவட்டம் கொளத்தூர் பொது மக்களிடம் திரட்டப்பட்ட வெள்ள நிவாரண உணவு பொருட்கள் திராவிடர் விடுதலைக் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் லோகு. அய்யப்பன் உதவியோடு கடலூர் ஆண்டித்தோப்பு, வழிசோதனை பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அன்பழகன், ராமச்சந்திரன், தயலப்பன், சரவணன், கீர்த்தியரசு, எல்.ஐ.சி.வேலு, விஜயபூபதி, பால்.பாலு ஆகிய தோழர்கள் முன்னின்று செயல்பட்டனர்.

சேலத்தில் 19122015 அன்று பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

சேலத்தில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” திராவிடர் விடுதலைக்கழகம்,சேலம் மாவட்டம் நடத்தும் மக்களைப்பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” ‘காலை முதல் இரவு வரை முழு நாள் மாநாடு’ நிகழ்சி நிரல். நாள் : 19.12.2015 சனிக்கிழமை, இடம் : நேரு கலையரங்கம் சேலம். தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கம். காலை 10 மணி – ‘கருத்தரங்கம்.’ நண்பகல் 2 மணி – ‘பட்டிமன்றம்.’ ———————————————————– மாலை 6 மணி, இடம் : போஸ் மைதானம் சேலம். இளவரசன் – கோகுல்ராஜ் நினைவரங்கம், ”திறந்த வெளி மாநாடு.”

தொடர்ந்த 7 வது நாள் (08.12.2015) வெள்ள மீட்புப்பணி !

தொடர்ந்த 7 வது நாள் (08.12.2015) வெள்ள மீட்புப்பணி !

சென்னை திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த 7 வது நாள் (08.12.2015) வெள்ள மீட்புப்பணி ! வெள்ள நிவாரணப்பணியில் தொடர்ந்து அயராது பணி புரியும் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் நேற்றும் உழைக்கும் சாதாரண ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் நிவாரண பணியாற்றினார்கள். நிவாரண பணிகள் மேற்கொண்ட இடங்கள் : அடையாறு பாலம்,மலர் நகர், ஓட்டேரி சத்யா நகர், மயிலாப்பூர் ரூதூர் புரம்,நாடான் தோட்டம். மேலும் உணவு தயாரிப்பில் தோழர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நான்காவது நாளாக 08122015 அன்று கடலூரில் நிவாரண உதவி

நான்காவது நாளாக 08122015 அன்று கடலூரில் நிவாரண உதவி

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி புரிய விரும்புவோர் கவனத்திற்க்கு ! கடலூர் ஒட்டிய கிராமப்புறங்களுக்கு இப்போது வரை நிவாரண பொருட்கள் சரியாக சென்றடையவில்லை. அக்கிராமங்கள் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்ப்ட்டுள்ளது. அளிக்கப்படும் நிவாரண பொருட்களும் பல்வேறு காரணங்களால் அங்கு சென்று சேர்வதில்லை.கடலூரிலேயே பொருட்களை கொடுத்து செல்வது,உள்கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலை,மேலும் பொருட்களை கொண்டு செல்லும் வழியில் சிலரால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள் ஆகிவற்றால் மக்களுக்கு பொருட்கள் சரியாக கொண்டு சென்று வழங்கப்படாததல் இன்னும் அம்மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர். திராவிடர் விடுதலைக் கழக தோழர்களும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.பொருட்களை சேகரித்து வைக்க இப்போது வடலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர்,மூத்த பெரியார் தொண்டர் தோழர் கலிய மூர்த்தி அவர்களின் வடலூர்,ராதா திருமண மண்டபத்தில் நிவாரண பொருட்கள்...

வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பு !

திராவிடர் விடுதலைக் கழகம் (Mettur, kolathur) காவலாண்டியூர் கிளை சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் நிதி சேகரித்து சென்னை அனுப்பட்டுவருகிறது. 08.12.2015 வெள்ள நிவாரண சேகரிப்பின் போது செட்டியூரில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது பங்களிப்பு நிதியாக ரூ.50 ஐ தோழர் கொளத்தூர் தா.செ.பழனிச்சாமி அவர்களிடம் அளித்தார்.சேரிக்கப்பட்ட நிவாரண பொருட்களுடன் கழக தோழர்கள்.

சென்னை வெள்ள மீட்புப்பணி 6 வது நாள் (07.12.2015)

சென்னை வெள்ள மீட்புப்பணி 6 வது நாள் (07.12.2015)

திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் சென்னையில் வெள்ள மீட்ப்புப்பணியில் கழக தோழர்கள் தொடர்ந்து வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எளிய மக்களுக்கு பணிகளை செய்து வருகிறார்கள்.நேற்றும் கழக தோழர்கள் உணவு,உடை குடிநீர்,பிஸ்கட்டுகள்,மருந்து பொருட்களை மக்களுக்கு வழங்கினார்கள்.நேற்று 2000 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் கழக தோழர்கள் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இடங்கள் : அமிஞ்சிக்கரை,டி.பி.சத்திரம், துரைப்பாக்கம்,கண்ணகி நகர், மயிலாப்பூர்,கணேச புரம், மேற்கு சைதாப்பேட்டை மாந்தோப்பு வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் நேற்று சென்னை நிவாரண பணிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பொருட்கள் : சப்பாத்தி – 500, ஜாம் – 200 பாக்கெட், பிஸ்கட் 2 பாக்ஸ்,

கடலூர் கிராம பகுதிகளுக்கு பொருள் உதவி செய்ய விரும்பும் தோழர்களுக்கு !

வரலாறு காணாத மழை காரணமாக சென்னையைப்போலவே கடலூரும் மிகுந்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. இங்குள்ள உழைக்கும் சாதாரண கிராம பகுதி மக்கள் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.இந்த கிராமப்புற மக்களுக்கு நிவாரண பொருட்கள் சரிவர கிடைக்காத நிலை உள்ளது. கடலூர் ஒட்டிய உள் கிராமங்களில் பாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் தங்கள் பணிகளை மிகுந்த சிரமங்களுக்கு இடையே செய்துவருகிறார்கள். தோழர்களின் இப்பணிக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் உதவிகள் கிடைத்து வருகின்றன. மேலும் இந்த கடலூர் கிராம பகுதிகளுக்கு பணி யாற்றும் கழக தோழர்களுக்கு பொருட்களாக உதவி செய்ய விரும்புபவர்கள், கீழ் காணும் பாதை வழியாக பொருட்களை கொண்டு சென்று கொடுக்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.கடலூர் பகுதிகளுக்கு நிவாரன பொருட்களை கொண்டு செல்வோர் கடலூரிலேயே நின்றுவிடுவதால் உள்கிராமங்களுக்கு பொருட்கள் சேருவதில் மிகவும் தாமதமும்,சரிவர கிடைக்காத நிலையும் உள்ளது. எனவே கடலூர் உள் கிராமப்பகுதிகளில் பணி செய்யும் கழக தோழர்களுக்கு நிவாரண பொருட்களை...

கடலூரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள மீட்புப்பணி !

கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் பகுதி கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் கோவையிலிருந்து கடலூருக்கு கொண்டு செல்லப்பட்டு கழக தோழர்கள் அதனை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சாதாராண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் வழங்கினார்கள். கடலூர் கிராம பகுதிகளில் தொடர்ந்து கழக தோழர்கள் வெள்ள மீட்புபணியில் ஈடுபட்டுள்ளார்கள். கட்லூர் கொண்டு செல்லப்பட்ட நிவாரண பொருட்களுக்கு உதவி செய்தவர்கள், ஜி.ஆர்.டி..கல்லூரி – 15,000 மதிப்புள்ள பொருட்கள். கழக ஆதரவாளர் தோழர் முத்துரத்தினம் மற்றும் போர்டு நிறுவன ஊழியர்கள் – 10,000 மதிப்புள்ள பொருட்கள். கழகதோழர்கள் – 15,000 இணைந்த கரங்கள் அறக்கட்டலை கோவை,வடவெள்ளி மருதமலை சுப்ரமணிய சாமி திருக்கோயில் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு – 50,000 மதிப்புள்ள பொருட்கள். பொருட்கள் விவரம் : பேஸ்ட் 100, பிஸ்கட் 8 பெட்டி, நாப்கின் 2 பாக்ஸ், பால்பவுடர் 1 பாக்ஸ், அரிசி 150 கிலோ, பெட்சீட் 100,...

தொடர்ந்து வெள்ள மீட்புப் பணியில் சென்னை திவிக

தொடர்ந்து வெள்ள மீட்புப் பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் ! சென்னையில் தொடர்ந்து வெள்ள மீட்புபணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கழக தோழர்கள் எளிய மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். அந்தவகையில் 06.12.2015 அன்று கழக தோழர்கள் பணி செய்த இடங்கள், சூளைமேடு நமச்சிவாயபுரம், சேத்துப்பட்டு அப்பாராவ் தோட்டம், திருவல்லிக்கேணி செல்லம்மாள் தோட்டம், எம்.ஜி.ஆர்.நகர் ஏரிக்கரை,காமராஜர் சாலை, குறுக்குப்பேட்டை சத்தியமூர்த்தி வாணி நகர். நேற்று நன்கொடையாக பெறப்பட்டு வழங்கப்பட்ட பொருட்கள், தோழர் ராசய்யா தமிழன் அவர்களிடமிருந்து, தண்ணீர் பாட்டல் – 1000 பிஸ்கட் – 500 கட்டுகள், போர்வை – 100, மருந்துப்பொருட்கள் – 100. ஈரோடு மாவட்டம், எண்ணெய் – 60 லிட்டர்

பாபர் மசூதியை மீட்க கருச்சட்டை ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோபியில் நடத்திய ”பாபர் மசூதியை மீட்க கருச்சட்டை அணிந்து ஆர்பாட்டத்தில்” 06.12.2015 அன்று கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.  

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் !

கோபி தமிழர் கூட்டமைப்பு சார்பாக 06.12.2015 அன்று நடைபெற்ற புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு மாமேதை அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து களத்தில் வெள்ள நிவாரணப்பணிகளில் திராவிடர் விடுதலைக் கழகம்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் இடைவிடாது தொடர்ந்து தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள். 04.12.2015 கழக தோழர்களால் உணவு தயாரிக்கப்பட்டு 1000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 05.12.2015 1000 பேருக்கான உணவை தோழர்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது மேலும் பிஸ்கட்,பிரட்,குடிநீர்,உடைகள்,போர்வை,நேப்கின்கள்,மருந்துப்பொருட்கள் ஆகியவை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நன்கொடைகளாக பெறப்பட்டு தோழர்களால் விநியோகிக்கப்பட்டுள்ளது.மேலும் பாதிப்படைந்த மக்களுக்கு தொடர்ந்தும் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று தமிழ் நாட்டின் பல்வேறு பகுதி தோழர்களால் மழை நிவாரண பணிக்காக அனுப்பப்பட்ட பொருட்களின் விவரங்கள் : தஞ்சாவூர் மாவட்டம் : அரிசி மூட்டை – 35, மைதா – 1 மூட்டை, நேப்கின் – 1000, பிரிட்டானியா – 6 பெட்டி, சன் பிளவர் ஆயில் – 1 கேன், மளிகை சாமான் – 1 மூட்டை, கரூர் மாவட்டம் : தமிழர் முண்ணனி அமைப்பினர் அனுப்பிய பொருட்கள், நைட்டி,லுங்கி,போர்வைகள் அடங்கிய பண்டல்கள்...

வெள்ள மீட்பு பணியில் திராவிடர் விடுதலைக் கழகம்

சென்னையில் பெய்துள்ள வரலாறு காணாத பெருமழையின் காரணாமாக அனைத்து தரப்பு மக்களும் தாங்கொணா துயரத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற வெள்ள மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.இந்த மக்கள் பணியில் திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. சாதாரண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் பணிகளை செய்து வரும் கழக தோழர்கள் உணவு தயாரித்து வழங்குதல்,உடைகளை விநியோகித்தல், படகு மூலம் வீடுகளில் சிக்கிகொண்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கழகத்தின் இப்பணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிதியாகவும், உடைகள்,உணவு பொருட்களாகவும் தோழர்கள் பலர் வழங்கிவருகிறார்கள். நிதியாக, கடலூர் பகுதிக்காக கத்தார் நாட்டைச் சேர்ந்த தோழர் காதர் மீரான் அவர்கள் வழியாக ரூ 1,10,000 (ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்) வழங்கியுள்ளார்கள். அத்தொகை கடலூர் ஆலப்பாக்கம் பகுதிக்காக செலவிடப்படுகிறது. சென்னை பகுதிக்காக குவைத்தில் உள்ள கழக...

கடும் மழையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

கடும் மழையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

திராவிடர் விடுதலைக்கழகம்,சென்னை மாவட்டத்தின் சார்பாக மக்களைப்பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” 01.12.2015 செவ்வாய்க்கிழமை சென்னை மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்த சிறப்பான மாநாட்டில் கலை நிகழ்ச்சி,பட்டி மன்றம்,கருத்தரங்கம்,கருத்துரை ஆகியன இடம்பெற்றன. சென்னையில் மழை வரும் சூழல் நிலவிய போதும் காலத்தின் அவசியம் கருதி பல்வேறு தடங்கல்களை முறியடித்து கழக தோழர்களின் பெரு முயற்சியால் இம்மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டின் முந்தைய நாள் இரவிலேயே கடும் மழை பெய்தது. கடும் மழைக்குமிடையே தோழர்கள் மாநாட்டு பணிகளை மேற்கொண்டார்கள்.காலையிலேயே மாநாடு துவங்கும் நேரத்திலேயே கடும் மழை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கழக மாநாட்டின் கருத்துரைகளைக் கேட்க தோழர்கள்,தோழமை அமைப்புகள்,பொது மக்கள் வருகை என 200க்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிறைந்தது. காலை 10 முதல் நிகழ்வாக சம்பூகன் கலைக்குழுவினரின்...

பிரான்சில் மாவீரர் நாள் – கழகத் தலைவர் உரை

தமிழீழ மக்களின் ஏற்பாட்டில் பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் கழகத்தலைவர் அண்ணன் கொளத்தூர்மணி அவர்கள் கலந்துக்கொண்டு 27112015 அன்று மாவீரர் தின உரை நிகழ்த்தினார்.. (உரை ஒலிப்பதிவு கேட்க) பின்பு பாரீசில் புலிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் 

கொளத்தூர் புலியூரில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு! கொளத்தூர் புலியூரில் ! திராவிடர் விடுதலைக் கழகம் வீரவணக்கம் செலுத்தியது. 27.11.2015 மாலை 6.05 மணிக்கு மாவீரர் வீரவணக்க பாடல் ஒலிக்க மறைந்த மாவீரர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் கொளத்தூர் கும்பாரப்பட்டி புலியூரில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தோட்டத்தில் அமைந்துள்ள தளபதி ரோய் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் 500க்கு மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சி மன்னார்குடி 27112015

திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சி மன்னார்குடி நடைபெற்றது. மன்னார்குடி நவ 27 இளமை சுகங்களை எல்லாம் துறந்து விட்டு, எதிர்கால சந்ததிகளுக்காக தம் நிகழ்காலத்தைப் பணயம் வைத்துப் போராடி தம் இன்னுயிரை ஈகம் செய்தோர் பல்லாயிரக்கணக்கானோர். ஆண், பெண் என்கிற பாலின வேறுபாடின்றி, ஏழை, பணக்காரன் என்கிற பொருளிய வேறுபாடுகளின்றி, உயர்சாதி ரூ கீழ்சாதி என்கிற சமூக வேறுபாடுகளின்றி, தரைப்படை, வான்படை, கடற்படை, தற்கொலைபடை என உலகின் எந்த நாட்டு விடுதலைப்படைக்கும் இல்லாத தனிச்சிறப்புகளுடன் களம் கண்டு மாண்ட அம்மாவீரர்கள் நினைவைப்போற்றும் நாளே நவம்பர் 27. 1982ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று பிரபாகரனின் மடியில் தலைவைத்தபடியே உயிர்விட்ட சங்கர் என்கிற சத்தியநாதன் முதற்களப்பலியான அம்மாவீரனின் மறைந்த நாளே (நவம்பர் 27) மாவீரர் நாள். அந்நாளில் இலட்சியத்துக்குத் தன்னையே ஈந்தரூநாட்டு விடுதலைக்கு உயிரை கொடுக்க முன்வந்த – தமிழ்மக்களின் நல்வாழ்வுக்காக வாழ்வை இழந்த மாவீரர்களுக்கும், தமிழ் பொதுமக்களுக்கும் மரியாதை செலுத்திட உலகம்...

மாவீரர் நாள் வீரவணக்கம்

இளமை சுகங்களை துறந்து, எதிர்கால சந்ததிகளக்காக, தம் நிகழ்காலத்தைப் பணயம் வைத்து, தம் இன்னுயிரை ஈகம் செய்த… மாவீரர்களுக்கும், தமிழ் பொதுமக்களுக்கும் வீரவணக்கம்!   தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடம், புலியூர் பிரிவு, கொளத்தூர் மாலை 5 மணி, நவம்பர் 27

முஸ்லிம்கள் மீது பழிபோடும் பார்ப்பனியம்  ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

முஸ்லிம்கள் மீது பழிபோடும் பார்ப்பனியம் ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்து பார்ப்பன-பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், ‘எங்கள் பார்வையில் மக்களைப் பிளவுப் படுத்தும் பார்ப்பனீய மதவாதம்’ என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘இசுலாமியர் பார்வையில்’ என்கிற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசினார். அவரது உரையின் தொடர்ச்சி – முஸ்லீம்கள் வீடுகட்டினால் யார் வேண்டு மானால் வாடகைக்கு வரலாம். ஆனால், பார்ப் பனர்கள் வீட்டில் வேறுயாரும் வசிக்க முடியாது. இந்த நாட்டில் அனைத்து பயங்கரவாத செயல்களையும் செய்வது பார்ப்பனீயம். ஆனால், பழியை சுமப்பது முஸ்லீம்கள்.  இந்த சூழ்ச்சி அரசியலை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அடுத்த குற்றச்சாட்டு,  முஸ்லீம்கள் தீவிர மதநம்பிக்கை உடையவர்கள் அவர்களது குரானில் நான்கு பெண்டாட்டிகளைத் திருமணம் செய்ய சொல்லியிருக்கிறது. எவ்வளவு வேண்டுமானலும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என சொல்லியிருக்கிறது. அதனால் அவர்கள் அந்த மதக் கருத்தை பின்பற்றி நிறைய திருமணம்...

சுழலும் வரலாற்றுச் சக்கரம் – மேதகு பிரபாகரன் மாவீரர் நாள் உரை

சுழலும் வரலாற்றுச் சக்கரம் – மேதகு பிரபாகரன் மாவீரர் நாள் உரை

மனிதனை மனிதன் அடிமை கொள்கிறான்; அழிக்க முயல்கிறான்; மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கிறான். அன்று தொட்டு இன்றுவரை மனிதனே மனிதனின் முதன்மையான எதிரியாக விளங்கி வருகிறான். ஒருவனது சுதந்திரத்தை இன்னொருவன் விழுங்கிவிட எத்தனிக்கும்போது, தர்மம் செத்து விடுகிறது; உலகில் அதர்மமும் அநீதியும் பிறக்கிறது. சாதி என்றும், வர்க்கம் என்றும், இனம் என்றும் பிளவுகள் எழுந்து மனிதரிடையே முரண்பாடு தோன்றுகிறது; மோதல்கள் வெடிக்கின்றன. இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும் இருக்கும் வரை, சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை, விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி. ஏனெனில், சுதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரமும் சுழல்கிறது. ஒடுக்கப்படும் உலக மக்களில் ஒரு பிரிவினராக நாமும் சுதந்திரம் வேண்டிப் போராடி வருகிறோம். எல்லா விடுதலைப் போராட்டங்களையும்விட எமது போர்க்குரல், இன்று உலக அரங்கில் மிகப் பெரிதாக ஒலிக்கிறது. எமது சுதந்தரப் போர் ஏனைய விடுதலைப் போராட்டங்களைவிட...

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை” தொடர்பான மலேசியா கருத்தரங்கம்

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை” தொடர்பான மலேசியா கருத்தரங்கம்

மலேசியாவின், பினாங்கு மாநில துணை முதல்வர் முனைவர் பேராசிரியர் இராமசாமி அவர்களின் ஒருங்கிணைப்பில், பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்கத்தின் சார்பாக, 21-11-2015 அன்று நடைபெறவிருந்த “ஈழத்தில் நடந்த இனப்படுகொலை” தொடர்பான கருத்தரங்கில் உரையாற்ற சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியை, 20-11-2015 அன்று மலேசிய திராவிடர் கழகத்தின் சிலாங்கு மாநிலத் தலைவர் தோழர் பரமசிவம், செயலாளர் தோழர் பொன்வாசகம், பொருளாளர் தோழர் அன்பழகன், பெரியாரிய எழுத்தாளர் கவி ஆகியோர் அவர் தங்கியிருந்த அறைக்கு வந்து சந்தித்தனர். அடுத்து, அவரை தங்கள் மகிழுந்தில் அழைத்துக் கொண்டு, கி.பி. 11ஆம் நூற்றாண்டில் இராசராச சோழனும், இராசேந்திர சோழனும் கடல் வழியாய் வந்து கால்பதித்த கடாரத்துக்கு ( இன்றைய கெடா மாநிலம் ) அழைத்து சென்று , அங்கு நடக்கும் அகழ்வாய்வு இடங்களையும், புஜாங்க் பள்ளத்தாக்கு எனும் மலை, ஆறு, பள்ளத்தாக்காக உள்ள இயற்கை அழகு கொஞ்சும் பகுதிக்கும் அழைத்து சென்றனர். அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள...

ஈழம் தீர்வா?

ஈழம் தீர்வா?

“ஈழம் தீர்வா?” எனும் தலைப்பில் மலேசியாவில் உள்ள பினாங்கு மாகணத்தில் 21.11.15 அன்று நடைபெற்ற சர்வ தேச மனித உரிமை கழகத்தின் “இலங்கை மீதான போர் குற்ற அறிக்கையும் அதன் பிந்தைய நிலையும் ” எனும் கருத்தரங்கில் ”இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்காலம்” எனும் நான்காம் அமர்வில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் உரையாற்றினார். மேலும் அக் கருத்தரங்கில் மதிமுக பொது செயலாளர் வைகோ,இலங்கை வடக்கு மாகாண அவை உறுப்பினர் ஆனந்தி சசீதரன், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி உள்ளிட்ட பல்வேறு தமிழீழ ஆதரவு தலைவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

இலங்கை மீதான போர் குற்ற அறிக்கையும் அதன் பிந்தைய நிலையும் – மலேசியாவில் கழக தலைவர் உரை நிகழ்த்துகிறார் !

மலேசியாவிலுள்ள பினாங்கு மாநிலத்தில் இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச மனித உரிமைகள் கழகத்தின் ‘இலங்கை மீதான போர் குற்ற அறிக்கையும் அதன் பிந்தைய நிலையும்’ எனும் கருத்தரங்கில் பேசுகிறார். 21.11.2015 சனிக்கிழமை மாலை 03.30 மணிக்கு நடைபெறும் ”இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்காலம் ” எனும் நான்காம் அமர்வில் ”ஈழம் தீர்வா?” எனும் தலைப்பில் கழக தலைவர் உரையாற்றுகிறார். இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும்,இலங்கை வடக்கு மாகாண அவை உறுப்பினர் ஆனந்தி சரீதரன் அவர்களும் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் திரு ராமசாமி அவர்களும் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகிறார்கள்.

”இன்றைக்கும் தேவை பெரியார்” விளக்கப் பொதுக்கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 15.11.2015.மாலை 5.00 க்கு விழுப்புரம் மாவட்டம்.திருவெண்ணெய் நல்லூர்,மணக்குப்பம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரியார் மாணவர் பேரவையைச் சேர்ந்த தோழர் ஆனந்த் பெரியார் அவர்கள் தலைமை தாங்கினார். தோழர் கணேஷ் ராஜா அவர்கள் வரவேற்புரையாற்றினார். மணிகண்டன்,பழனி,புஷ்பராஜ்,ஆறுமுகம்,பாலகுரு,நாராயணன்,கார்த்தி,பாபு,சக்திவேல்,ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர் காவை இளவரசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்சியுடன் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் பகுத்தறிவு கருத்துக்களுடன் தோழர் காவை இளவரசன் அவர்களின் நிகழ்ச்சி மிக சிறப்பாக அமைந்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கழக வழக்கறிஞர்கள் தோழர் திருமூர்த்தி,வழக்கறிஞர் துரை அருண்,கழக தலைமை செயற்குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார்,கழக தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி ஆகியோர் உரையாற்றினார்கள் நிறைவாக கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் ”இன்றைக்கும் தேவை பெரியார்” எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார். மேலும் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர்...

சென்னையில் டிச.1இல் “மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

ஈரோட்டில் இந்து பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம், கடந்த நவம்பர் 8ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தி முடித்தது. தொடர்ச்சியாக சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் டிசம்பர் முதல் தேதி சென்னையில் ‘மக்களைப் பிளவு படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு’ மாநாட்டை நடத்த திட்டமிட்டு, தோழர்கள் களப்பணிகளில் இறங்கியுள்ளனர். சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. மாலை மண்டபத்துக்கு அருகே உள்ள முத்துரங்கன் சாலையில் திறந்தவெளி மாநாடு நடைபெறுகிறது. தந்தை பெரியார் தனது இறுதி பேருரையை நிகழ்த்திய இடமும் இதுவேயாகும். சம்பூகன் கலைக் குழுவின் எழுச்சி இசை நிகழ்ச்சியோடு காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. பார்ப்பன மதவெறி கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட தபோல்கர்-பன்சாய்-கல்புர்கி நினைவரங்கில், ‘பார்ப்பனியம் பதித்த இரத்தச் சுவடுகள்’ என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில், ‘பெண்ணியத்தில்’ என்ற தலைப்பில் பேராசிரியர் சரசுவதி, ‘புராணங்களில்’...

‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம் முகமூடியைக் கிழித்தது ஈரோடு மாநாடு 

‘இந்து’, ‘இந்துத்துவம்’ என்ற கூச்சல் களுக்குப் பின்னால் பதுங்கிக் கிடப்பது பார்ப்பனர்களும் பார்ப்பனியமும்தான் என்ற உண்மையை வரலாற்றிலிருந்தும் பா.ஜ.க. பரிவாரங்களின் ஆட்சி அதிகார செயல்பாடு களிலிருந்தும் ஏராளமான தகவல்களை முன் வைத்தது, ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘இந்து’ பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு. மாநாட்டில் உரையாற்றிய பலரும் உண்மையான எதிரிகளை அடையாளப் படுத்தும் சரியான மாநாடு என்று பாராட்டினர். வெற்று ஆரவாரங்கள் – தனி நபர் துதிகள் இல்லாமல் தொடக்கம் முதல் இறுதி வரை அறிவார்ந்த கருத்துகளையும் சிந்தனைகளையும் முன் வைத்ததும், மாநாட்டுப் பார்வையாளர்கள் இறுதிவரை செவிமெடுத்ததும் இந்த நாட்டின் சிறப்பாகும். மாநாட்டு நிகழ்ச்சிகள் பற்றிய ஓர் தொகுப்பு: ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் “இந்து பார்ப்பன-பயங்காரவாத எதிர்ப்பு மாநாடு” நவம்பர் 8 ஞாயிறு பகல் 11 மணியளவில் ஈரோடு பவானி ரோடு கே.கே.எஸ்.கே. திருமண மண்டபத்தில் பார்ப்பன...

இந்து பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டு தீர்மானங்கள்

மாநாட்டு தீர்மானங்கள் ! 08.11.2015 அன்று கழகதலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 1) பீகார் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியும் பாஜக பரிவாரங்களும் மதவாத வெறுப்புக் கருத்துக்களை முன்வைத்து வெற்றி பெற்று விடலாம் என திட்டமிட்ட முயற்சிகளை முறியடித்து நிதிஷ்குமார் தலைமையிலான சமூக நீதி சக்திகளுக்கு பெறும் வெற்றியை குவித்துள்ள பீகார் மக்களுக்கு வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. 2) குறைந்த விலையில் நிறைந்த புரதச் சத்தை வழங்கும் மாட்டிறைச்சி உணவை கேரள மக்கள் விரும்பி உண்பது போல, தமிழர்களும் தங்கள் உணவுப் பழக்கமாகக் கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி உணவை முன்வைத்து நடக்கும் பொதுநிகழ்வுகளுக்கு தமிழக அரசின் காவல்துறை தடை விதிப்பதற்கும்,கெடுபிடி காட்டுவதற்கும் வன்மையான கண்டனத்தை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. 3)...

ஜாதி ஆணவ படுகொலை, மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் – வேலூர் 06112015

வேலூரில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 06.11.2015 வெள்ளிகிழமை காலை வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த கோரியும்,மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.ராசேந்திரன்,கழக பரப்புரை செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.  மாவட்ட அமைப்பாளர் ப.திலீபன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சிவா,கெளதமன், மன்னார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் தோழர் விழுப்புரம் அய்யனார், விடுதலைசிறுத்தைகள் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் சந்திரகுமார், SDPI மாவட்ட தலைவர் தோழர் முகமது ஆசாத், ஆதித் தமிழர்பேரவை மாவட்ட செயலாளர் தோழர் செந்தில், தமிழ்நாடு அம்பேத்கர் மன்றம் தோழர் மேயர் சுந்தர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தோழர் சிங்கராயர்,...

தீபாவளி என்றால் என்ன? – பெரியார்

தீபாவளி என்றால் என்ன? – பெரியார்

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். 2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார். 3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றி யுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது. 4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது. 5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது. 6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத் தினான். 7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகா சூரனுடன் போர் துவங்கினார். 8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான். 9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். 10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!...

கழகத்தின் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் : உயர்நீதிமன்றம் அனுமதி

கழகத்தின் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் : உயர்நீதிமன்றம் அனுமதி

6.11.2015 அன்று வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாட்டிறைச்சி வைத்திருந்ததாக உத்திரபிரதேசத்தில் கொல்லப்பட்ட அக்லக் படுகொலையை கண்டித்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ள மாட்டிறைச்சிக்கான தடையை நீக்கக் கோரியும், தொடரும் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோரியும், 30.10.2015 அன்று வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி கழகத்தின் சார்பில் வேலூர் சத்துவாச்சேரி காவல்நிலையத்தில் 21.10.2015 அன்று மனு அளிக்கப்பட்டது. மனு அளித்த அன்றைய நாளே வேலூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சட்டம் அமுலில் இருப்பதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்தால் பதட்டமான சூழல் உருவாகும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு 29.10.2015 அன்று விசாரணைக்கு வந்தது. 30.10.2015 அன்று அரசு தரப்பின் விளக்கங்களைக் கேட்ட நீதிமன்றம் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட...

காட்டாறு செய்திக்கு மறுப்பு

காட்டாறு செய்திக்கு மறுப்பு

//அடுத்த தலைமுறைக்கு அறிவாயுதம்’ என்ற அறிவிப்பை நாம் வெளியிட்ட நேரத்தில்,திராவிடர் விடுதலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dvkperiyar.comஎன்ற தளத்திலும் பணிகள் தொடங்கிவிட்டன. அதில் 1925 முதல் 1938 வரை குடி அரசு,பகுத்தறிவு, புரட்சி, ஏடுகளில் வெளியான ஏறத்தாழ 2631 கட்டுரைகள் யூனிகோட் மற்றும் பி.டி.எஃப் வடிவங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தைப் பாராட்டுகிறோம்// http://www.suyamariyathai.org/indexnews.php?nid=213 இது குறித்து சில வார்த்தைகள் இனி வரும் காலத்தில் கையடக்கமான தந்தி போன்ற சாதனம் அனைவரிடமும் இருக்கும்” என்று கூறிய சமூக விஞ்ஞானி பெரியாரின் எழுத்துக்களை அடுத்த தலைமுறையிடம் சேர்க்கும் பொருட்டு, பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுகளையும் தொகுத்து 1925 முதல் 1938 வரை 27 தொகுதிகளாகவும், 1930ல் பெரியாரால் வெளியிடப்பட்ட ரிவோல்ட் என்ற ஆங்கில இதழை ஒரு தொகுதியாகவும் தொகுத்து திராவிடர் கழகத்தின் வழக்குகளால் 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி கிடந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பெற்று 2007ல் வெளியிட்ட அன்றே அனைத்து தொகுப்புகளையும் அப்போதைய பெரியார் திராவிடர் கழகத்தின் இணைய தளமான periyardk.org பதிவேற்றம் செய்யப்பட்டது. ஓரிரு மாதங்களில் யூனிகோடாகவும்...