Category: தலைமை கழகம்

தோழர் மாதவன் இல்லம் படத்திறப்பு நிழற்படங்கள்

படத்திறப்பு ! திருப்பூர் மாஸ்கோ நகர் மாதவன் அவர்களின் மறைந்த தந்தையார் படம் கழக தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. திருப்பூர் கழக தோழர்கள் மாஸ்கோ நகர் மாதவன், நாகராஜ் அவர்களின் தந்தையார் திரு.சின்னராசு அவர்கள் கடந்த 27.03.2016 அன்று முடிவெய்தினார். மறைந்த திரு.சின்னராசு அவர்களின் படத்திறப்பு 03.04.2016 அன்று மாலை சாமுண்டி நகரில் உள்ள தோழர் மாதவன் இல்லத்தில் நடைபெற்றது. அன்னாரின் படத்தை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்தார். இப்படத்திறப்பு நிகழ்வில் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன்,அமைப்புச் செயலாளர் தோழர் ரத்தினசாமி,பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி,மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு, மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி,மாநகர செயலாளர் தோழர் நீதிராசன்,தோழர் அகிலன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

உடுமலை சங்கர் படுகொலை – கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தினத்தந்தி 05042016

”ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றார் கொளத்தூர் மணி” என கழக தலைவர் குறித்து உண்மைக்கு புறம்பான செய்தியை சில தொலைக்காட்சிகளும்,அதனை ஒட்டி சில முகநூல் ஜாதிவெறி பதிவர்களும் பதிவு செய்கிறார்கள் என அறிகிறோம். அந்த வழக்கின் உண்மை நிலை குறித்து தோழர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என இந்த சிறு விளக்கத்தை அளிக்கிறோம். கழகத்தின் சார்பில் சென்னைஉயர் நீதி மன்றத்தில் ஜாதி ஆணவ படுகொலைகளை ஒட்டி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அவ்வழக்கின் விவரம் : 1)ஜாதி மறுப்பு இணையருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே இதுகுறித்து உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் (லதாசிங் (உ.பி),ஆறுமுக சேர்வை (தமிழ்நாடு))வழங்கியுள்ள தீர்ப்பில் உள்ள வழிகாட்டுதல்களை தமிழக அரசு உடனே அமுல் படுத்த வேண்டும். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட உடுமைப்பேட்டை சங்கர்-கெளசல்யா இணையர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையை அணுகி பலமுறை மனு கொடுத்திருந்தும் அவர்களுக்கு...

ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் இணையரை சந்தித்து ஆறுதல்

நேற்று 04.03.2016 திங்கள் அன்று ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் அவர்களின் இணையர் கவுசல்யா அவர்களைக் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் சந்தித்து ஆறுதலும்,தைரியமும் கூறினர். உடுமலைப்பேட்டை அருகில் உள்ள குமரலிங்கம் எனும் ஊரில், கொல்லப்பட்ட தனது கணவர் சங்கர் அவர்களின் வீட்டில் வாழ்ந்து வரும் கவுசல்யா அவர்களைத் தோழர்கள் சந்தித்தனர். தலை,கைகள் மற்றும் உடல் முழுவதும் ஜாதி வெறியர்களால் கொடூரமாகக் கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார் கவுசல்யா. சங்கர் வீட்டில் கவுசல்யா வாழக்கூடாது எனும் ஒரே நோக்கத்தில் ஜாதிவெறியர்கள் சங்கரைப் படுகொலை செய்து கவுசல்யாவை கொடூரமாகத் தாக்கினார்களோ அவர்களின் நோக்கத்திற்கு எதிராக நெஞ்சுரத்துடன் சற்றும் அஞ்சாமல் அதே சங்கர் வீட்டில் மனதைரியத்துடன் திரும்ப வந்து வாழ்கிறார் கவுசல்யா. இனி ‘நான் சங்கர் வீட்டில்தான் வாழ்வேன்’...

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க அரசும் சமூகமும் செய்ய வேண்டியது என்ன? கருத்தரங்கம் திருச்சி 09042016

”ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசும் சமூகமும் செய்ய வேண்டியது என்ன ?” – இளந்தமிழகம் நடத்தும் கருத்தங்கம். நாள்: ஏப்ரல் 9, சனிக்கிழமை நேரம்: மாலை 5 மணி. இடம்: சண்முகா திருமண மண்டபம், புத்தூர் நாலு ரோடு, திருச்சி. கருத்துரை வழங்குபவர்கள்:- தோழர். கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் தோழர். எவிடென்ஸ் கதிர் எவிடென்ஸ் அமைப்பு, மதுரை தோழர். சிவலிங்கம் தலைவர், சுயமரியாதை தலித் இயக்கம், கர்நாடகா தோழர். செல்வி தலைமைக்குழு உறுப்பினர், கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.) மக்கள் விடுதலை, தமிழ் நாடு தோழர். நந்தலாலா மாநில துணைத் தலைவர், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தோழர். தமிழ் நாசர், செயற்குழு உறுப்புனர், இளந்தமிழகம் இயக்கம்

சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு 31032016

தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக திவிக தலைவர் கொளத்தூர் மணி, தபெதிக பொது செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், தவாக நிறுவனர் வேல்முருகன், விசிக செய்தி தொடர்பாளர் வன்னியரசு, பேராசிரியர் சரசுவதி, திருமுருகன் காந்தி, பாக்கர், சுப.உதயகுமார், மணியரசன், செந்தில், புகழேந்தி, சந்தானம், தோழர் தியாகு மற்றும் ஒத்த கருத்துடைய தோழர்கள் இன்று 31032016 மதியம் 12.30 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் 1.முகாமிலிருக்கும் ஈழத் தமிழருக்கு பாதுகாப்பு. 2.ஏழுவர் விடுதலை. 3.ஜாதி ஆணவ கொலைகளுக்கு தனி சட்டம் இயற்றுதல். இவற்றை உள்ளடக்கி நடை பெற்றது. செய்தி குகநந்தன் லிங்கம்

ஊழல் மின்சாரம் ஆவணப்பட வெளியீடு சென்னை 02042016

”ஊழல் மின்சாரம்” – ஆவணப்படம் வெளியீடு. நாள் : 02.04.2016 மாலை 5 மணி. இடம் : இக்சா அரங்கம் (கன்னிமாரா நூலகம் எதிரில்), எழும்பூர் சென்னை. கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். தலைமை : சா.காந்தி, தமிழ்நாடு மிந்துறை பொறியாளர்கள் அமைப்பு. ஆவணப்படத்தை வெளியிடுபவர் : தோழர்.ஆர் நல்லக்கண்ணு, (இந்திய பொதுவுடமைக் கட்சி) மேலும் தோழமை அமைப்புகளைச்சார்ந்த தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் தேன்கனிகோட்டை 27032016

பொதுக்கூட்டம் ! கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம். நாள் : 27.03.2016. மாலை 4.00 மணி. இடம் : தேன்கனிக்கோட்டை,பேருந்து நிலையம். சிறப்புரை : ”தோழர் கொளத்தூர் மணி,” தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் லோகு.அய்யப்பன், தலைவர்,பாண்டிச்சேரி திராவிடர் விடுதலைக் கழகம். பொதுக்கூட்டம் முன்னதாக ‘புத்தர் கலைகுழு’வினரின் கலைநிகழ்ச்சி நடைபெறும் !  

சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுக – பொதுக்கூட்டம் சென்னை 22032016

“சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுக” என இன்று 22.3.16 மாலை 5 மணிக்கு அம்பேத்கர் திடலில் தோழர் நல்ல கண்ணு தலைமையேற்க தோழர்கள் சுந்தர மூர்த்தி, செந்தில், தெய்வமணி, அருண பாரதி, தமிழ்நேயன், நாகை திருவளளுவன் உரையாற்றினர். அவரகளை தொடர்ந்து தோழர் பொழிலன் தமிழக மக்கள் முண்ணனி, பொதுச் செயலர், கோவை இராமகிருஷ்ணன் தந்தை பெரியார் திராவிடர் கழகம், கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் கழகம் உரையாற்றிய பின் நிறைவாக தோழர் தியாகு பேசிய பிறகு பொதுக் கூட்டம் இரவு 10.00 மணியளவில் நிறைவடைந்தது செய்தி குகநந்தன் லிங்கம்

சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு – பயிலரங்கம் தூத்துக்குடி 13032016

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த 13.03.2016 அன்று தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி ஒன்றியத்தில் வைத்து, “சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு” என்ற தலைப்பில் ஒருநாள் பயிரங்கம் நடைபெற்றது. பயிற்சியளித்தவர் மாநில பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள். காலை 9 மணிக்கு தொடங்கிய பயிலரங்கம் மதியம் 1:30 மணிவரை நடந்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் 2:30க்கு தொடங்கிய பயிலரங்கம் மாலை 6 மணிவரை நடைபெற்றது. இந்த இருவேளைகளிலும், சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு என்ன என்பதைப்பற்றி பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள் மிக அழகாக, தெளிவாக விளக்கி கூறினார். பயிலரங்கம் முடிந்த பிறகு தோழர்கள் தங்களது கருத்துகளையும், சந்தேகங்களையும் பரப்புரை செயலாளரிடம் கேட்டு விளக்கம் பெற்றனர். இப் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் தேநீரும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. தோழர்களுக்கு மதிய உணவாக சுவையான மாட்டுக்கறி பிரியாணி பரிமாறப்பட்டது. இப்பயிலரங்க...

தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள் -கருத்தரங்கம் மேட்டுப்பாளையம் 20032016

தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ”தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள்” எனும் கருத்தரங்கம் பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் பிறந்த நாளான 20.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு மேட்டுப்பாளையம் அன்னபூர்ணா அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் தோழர் ஆசிரியர் சிவகாமி அவர்கள் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை புறநகர் மாவட்ட தலைவர் தோழர் பா.இராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கழக மாநில பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி,மாநகர் மாவட்டத் தலைவர் தோழர் நேரு தாசு,மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் நிர்மல் குமார்,பகுத்தறிவாளர் கழக தோழர் கள்ளக்கரை சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவியர் தோழர் தூரிகை சின்னச்சாமி அவர்கள் கைரேகையிலேயே வரைந்த கை’நாட்டுக்காக’ உழைத்த காமராஜர் எனும் ஓவியத்தை கருத்தரங்கில் கழக தலைவர் அவர்களிடம் வழங்கினார். ”கல்வி கற்காத காமராஜரின் கல்விப்புரட்சி” எனும் தலைப்பில் கழக தலைவர் ‘தோழர் கொளத்தூர்...

ஜாதி ஆணவக்கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுக – பொதுக்கூட்டம் சென்னை 22032016

சென்னையில் பொதுக்கூட்டம் ! திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நட்டநடுத் தெருவில் சங்கர் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த காணொளி கண்டிருப்பீர்கள். சங்கரின் காதல் துணைவி கௌசல்யாவையும் கொடூரமாகத் தாக்கியது கௌசல்யாவின் தந்தை அனுப்பிய கூலிப்படை! இதைத்தான் ஆணவக் கொலை என்கிறோம். இதற்கு எதிராகத்தான் தனிச்சட்டம் கோருகிறோம். நம் கண்கள் கண்ட இப்படுகொலை நம்மையெல்லாம் நிலைகுலையச் செய்தது. படுகொலை செய்யப்படும் அளவுக்கு சங்கர் செய்த குற்றம் காதலித்ததும் அவரையே மணமுடித்ததும் எந்த அச்சுறுத்தலுக்கும் மீறி எதிர்காலத்தை காதல் துணையோடு எதிர்கொண்டதும் மட்டும்தான். மட்டும்தான். காதலித்ததிலிருந்து எதிர்கொண்டிருந்தது வரை இந்தச் சமூகம் எவ்வகையிலெல்லாம் அவர்களுக்குத் துணை நின்றது? குறிப்பாக சாதி ஒழிப்பை இலட்சியமாய்க் கொண்ட நாம் என்ன செய்தோம்? சாதி ஒழிப்பிலேயே அவரவர் காட்டும் வழிமுறைகளும் கண்ணோட்டங்களும் கோட்பாடுகளும் வேறு வேறாக இருக்கின்றன. அவற்றை பற்றி நாம் நமக்கும் மாறி மாறி விவாதித்துக்  கொண்டிருக்கிறோம். ஆனால், இளவரசனுக்குப் பிறகு, கோகுல்ராஜுக்குப் பிறகு காதலர்க்குத்...

பெரியாரியல் விளக்கப் பொதுக்கூட்டம் மேட்டூர் 18032016

பெரியாரியல் விளக்க பொதுக்கூட்டம் – மேட்டூர் – 18.03.2016. 18-03-2016 வெள்ளிக்கிழமை மாலை 6-00 மணியளவில், சேலம் மாவட்டம் மேட்டூர் சதுரங்காடி திடலில் ‘பெரியாரியல் விளக்கப் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது. மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டம், கழகத் தோழர்களின் பறை இசையோடு துவங்கியது. தொடர்ந்து மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவினர் (பாடகர்கள்; முத்துக்குமார், கோவிந்தராசு, அருள்மொழி. இசை; குமரப்பா, சீனி, காளியப்பன்) பகுத்தறிவு மற்றும் ஜாதி ஒழிப்புப் பாடல்களை பாடினர். பொதுக்கூட்டத்திற்கு நகரத் தலைவர் செ.மார்ட்டின் தலைமை ஏற்க, நகர துணைச் செயலாளர் குமரப்பா வரவேற்பு உரை ஆற்றினார். கொளத்தூர் குமரேசன், மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி ஆகியோர் உரைகளுக்கு பின், புலவர் செந்தலை ந.கௌதமன் அவர்கள் உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக நகர பொருளாளர்...

தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள் கருத்தரங்கம் மேட்டுப்பாளையம் 20032016

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும், ”தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள்” கருத்தரங்கம். பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் பிறந்த நாளில், இடம் : அன்னபூர்ணா அரங்கம்,மேட்டுப்பாளையம். நேரம் : மாலை 4.30 மணி. நாள் 20.03.2016 ஞாயிற்றுக்கிழமை. தலைமை : ஆசிரியர் சிவகாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் மாநில அமைப்பாளர். வரவேற்புரை : பா.இராமச்சந்திரன்,புறநகர் மாவட்ட தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். முன்னிலை : திருப்பூர் துரைசாமி, மாநில பொருளாளர், திராவிடர் விடுதலைக் கழகம். நேரு தாசு,மாநகர் மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். நிர்மல் குமார்,மாநகர் மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். கள்ளக்கரை சுந்தரமூர்த்தி,பகுத்தறிவாளர் கழகம், கருத்துரை : ”கல்வி கற்காத காமராஜரின் கல்விப்புரட்சி” எனும் தலைப்பில் கழக தலைவர் ‘தோழர் கொளத்தூர் மணி’ அவர்கள். ”தமிழகத்தில் தந்தை பெரியாரின் சமுதாயப்புரட்சி” எனும் தலைப்பில் ‘ரெயின்போ வெங்கட்ராமன்’, மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர். நன்றியுரை...

செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை 17032016 விடுதலை இராசேந்திரன்

கும்முடிப்பூண்டி இலங்கைத் தமிழர் முகாமில் சுபேந்திரன் அவர்களின் கால்கள் ஆய்வாளர் டெல்லிபாபுவால் உடைக்கப்பட்டது. முகாம் தலைவர் சிவக்குமார் அவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கி இழிவுபடுத்தியுள்ளார்கள். இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் செய்தியாளர் சந்திப்பு நேற்று 17.03.2016 வியாழன் அன்று காலை 11 மணியளவில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. அனைத்து ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் கலந்து இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். கால்கள் உடைபட்டுள்ள சுபேந்திரன் அவர்களை அவரின் துணைவியார், மகள் மற்றும் சிவகுமார் ஆகியோர் நேரில் வந்திருந்து செய்தியாளர்களிடம் தங்களுக்கு ஏற்பட்டதை முழுமையாக விளக்கினர். தோழர் தியாகு நமது கோரிக்கைகள் குறித்து விளக்கினார். மற்ற கேள்விகளுக்கும் பதிலளித்தார். திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை, தமிழக மக்கள் முன்னணி வழக்குரைஞர் பாவேந்தன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் க.அருணபாரதி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர்...

தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம்!

தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம்!

முற்றுகைப் போராட்டம்! காவல்துறையின் தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில். உடுமலை சங்கர் அவர்களை ஜாதி வெறியர்கள் ஆணவப் படுகொலை செய்ததை கண்டித்தும், தொடர்ந்து நடைபெறும் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்கத் தவறும் செயல்படாத காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவை கண்டித்தும், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க கடுமையான தனிச் சட்டம் இயற்றக்கோரியும் முற்றுகைப் போராட்டம். நாள் : 16.03.2016.புதன் கிழமை காலை 10 மணி. இடம்: காவல்துறை இயக்குனர் (I.G.) அலுவலக வளாகத்தில் உள்ள தீண்டாமை ஒழிப்பு பிரிவு அலுவலகம்,மயிலாப்பூர், சென்னை. தொடர்புக்கு: தோழர் உமாபதி, செல் : 7299230363 சென்னை மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். ஜாதி வெறி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அணிதிரள்வோம் வாருங்கள்.

ஜாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூரில் புகார்

முகநூலில் ஜாதிவெறிப் படுகொலைகளுக்கு ஆதரவாகவும் மேலும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பதிவுகளை செய்து ஜாதி கலவரங்களை  தூண்டும் ஜாதிவெறியர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு தலைமையில் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் மாப்பிள்ளை சாமி,தோழர் அகிலன்,தோழர் தனபால் உள்ளிட்ட தோழர்கள் திருப்பூர் மாவட்ட இணையதள குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.  

‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்’ என்கிறது தமிழ்த் தேசியம்; ‘ஆடு மேய்ப்பவரை ஐ.ஏ.எஸ். ஆக்கியது’ பெரியாரியம்: பால்பிரபாகரன் பேச்சு

திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், கல்வி நிலையங்களில் நிலவும் ஜாதிய பாகுபாடுகளை நீக்க வலியுறுத்தியும், கண்டன பொதுக்கூட்டம் பாவூர் சத்திரம் பேருந்து நிலையத்தில் மார்ச் 3ம் தேதி மாலை 5 மணியளவில் கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் குரும்பலாபேரி மாசிலாமணி தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. துவக்கத்தில் மாவட்ட அமைப்பாளர் அன்பரசு வரவேற்றார். திராவிடர் விடுதலைக்கழக நிர்வாகிகள் சங்கர், லெட்சுமணன், பெரியார் திலீபன், தங்கதுரை, சபாபதி, மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய மோடி அரசை கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட தலைவர் பால்வண்ணன், கீழப்பாவூர் மதிமுக ஒன்றிய செயலாளர் இராம உதய சூரியன், கீழப்பாவூர் திமுக ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன், கழகத் தோழர் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக கல்வி வேலை வாய்ப்புகளில்...

வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது – கவிதை நூல் வெளியீடு கோவை 13032016

”வெள்ளக்காக்கா மல்லாக்கப்பறக்குது” கவிதை நூல் வெளியீட்டு விழா ! கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நூலை வெளியிட்டு உரையாற்றுகிறார். நாள் : 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை,காலை 9.30 மணி. இடம் : அண்ணாமலை அரங்கம்.சாந்தி திரையரங்கம் அருகில், ரயில் நிலையம் எதிரில்,கோவை. வரவேற்புரை : தோழர் இனியன் நேருதாசு, மாநகர மாவட்ட தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். நூல் வெளியீட்டு அறிமுக உரை : ”தோழர் கொளத்தூர் மணி” அவர்கள் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் முதல் பிரதி பெற்றுக்கொள்பவர்: கோவிந்தம்மாள் அவர்கள். மதிப்புரை : கவிஞர் புவியரசு, எழுத்தாளர் பாமரன், எழுத்தாளர் இரா.முருகவேள். நன்றியுரை : தோழர் நிர்மல், மாநகர மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.

மதுரை அகதி முகாமில் ரவிச்சந்திரன் குடும்பத்தினரிடம் கழகத் தலைவர் ஆறுதல்

மதுரை திருமங்கலம் அருகில் உச்சம்பட்டியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 06032016 ஞாயிற்றுக் கிழமையன்று அங்கு சோதனையிடவந்த வருவாய் அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, ரவிச்சந்திரன் அங்கு வந்துள்ளார். தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அப்போது அவர் தெரிவித்தார். ஆனால், அதனை ஏற்காத அதிகாரி, வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த ரவிச்சந்திரன், அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து ரவிச்சந்திரன் உயிரிழந்தார் இறந்த ரவீந்திரனின் குடும்பத்திற்கு போதுமான நிவாரணம் அளிக்க வேண்டுமென்றும் அந்த வருவாய் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த முகாமில் உள்ள அகதிகள் கோரி போராட்டம் நடத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அங்கு சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னார்....

பெரியார் நடத்திய போராட்டங்களும் தமிழர் அடைந்த பயன்களும் ஆனைமலை பொதுக்கூட்டம் – 05032016 – நிழற்படங்கள்

பொள்ளாச்சி ஆனைமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற கழக பொதுக்கூட்டம் ! ”பெரியார் நடத்திய போராட்டங்களும்,தமிழர்கள் அடைந்த பலன்களும்” எனும் தலைப்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்திற்கு தோழர் அரிதாசு அவர்கள் தலைமை தாங்கினார்.தோழர்கள் அப்பாதுரை,இரா.ஆனந்த்,விவேக்சமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி,மாநில அமைப்புச்செயலாளர் ஈரோடு ரத்தினசாமி,மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி,தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், தோழர் சூலூர் பன்னீர் செல்வம்,மடத்துக்குளம் மோகன்,நேருதாசு,நிர்மல், வே.வெள்ளியங்கிரி, த.ராஜேந்திரன்,சீனிவாசன்,யாழ்மணி,மணிமொழி,சுந்தரமணி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். பள்ளத்தூர் நாவலரசு – மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு பகுத்தறிவுப்பாடல்கள் இடம்பெற்றன. தோழர் கோ.சபரிகிரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.  

உடுமலை – பேராசிரியர் இந்திரஜித் நினைவேந்தல் – நிழற்படங்கள்

முனைவர் க. இந்திரசித்து படத்திறப்பு ! உடுமலையில் கடந்த 27.01.2016 அன்று மறைந்த பேராசிரியர் முனைவர் க.இந்திரசித்து அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 05.03.2016 அன்று நண்பகல் 12 மணியளவில் உடுமலைப் பேட்டை சிங்கப்பூர் நகரில் உள்ள முனைவர் இந்திரசித்து அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. முனைவர் இந்திரசித்து அவர்கள் படத்தை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். முனைவர் இந்திரசித்து அவர்களின் இணையர் திருமதி. வீ.வளர்மதி அவர்கள் முனைவரின் நினைவுகளை கூடியிருந்த தோழர்களிடம் நெகிழ்சியோடு பகிர்ந்து கொண்டார். முனைவரின் மகள் கவிஞர் தமிழ்மகள்,முனைவரின் இணையர் திருமதி. வீ.வளர்மதி அவர்கள்,கவிஞர் கார்கோ ஆகியோர் எழுதிய இரங்கற்பாக்கள் வாசிக்கப்பட்டன. தோழர்கள் இலெனின் பாரதி, உடுமலை அருட்செல்வன், தோழர் பொள்ளாச்சி காசு.நாகராசன் பேரா.கண்டிமுத்து, தோழன் இராசா,தோழர் கொழுமம் ஆதி, உடுமலை துரையரசன், பேரா.பொன்னரசன், முனைவர் சி.டி.கோபால், சிவசக்திராமசாமி,திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர் தம்பி பிரபாகரன் உள்ளிட்ட தோழர்கள் இந்நிகழ்வில் கலந்து...

கோபியில் காவல்துறை தடைகளைத் தகர்த்து, பார்ப்பன மத சூழ்ச்சிகளை தோலுரித்த கழக மாநாடு

பார்ப்பன கும்பல் தங்களது மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள கல்வியை காவி மயமாக்கி சமஸ்கிருதத்தைத் திணித்து,இந்துத்துவ போர்வையில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குஎதிராக சதிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றன. ஜாதி அமைப்பே இந்துமதத்தின் அடிப்படை தத்துவமாகும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் இந்துக்கள் தான் என கூறும் பார்ப்பனர்கள் அவர்களை பல்வேறு ஜாதிகளாக கூறுபோட்டு அவர்களின் உரிமைகளை பறிக்கின்றனர். இந்த நாட்டில் ஜாதியம் தான் பார்ப்பனியம் என சரியாக பிளந்து காட்டியவர் பெரியார். இந்த சமூகத்தில் ஜாதியமைப்பை நியாயப்படுத்தும் பாசிச தத்துவமான பார்ப்பனியத்தின் கோரமுகத்தை வெகு மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள் ஈரோடு,சேலம், சென்னை, சங்கராபுரம், மதுரை, கோபி செட்டிபாளையம் போன்ற நகரங்களில் நடத்தப்பட்டுள்ளன. ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில், ‘மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு’ பிப்ரவரி 28ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோபி...

புரட்சி முழக்கம் – இதழ் வெளியீடு மதுரை 06032016

மதுரை காலேஜ் ஹவுஸ் (ரயில் நிலையம் அருகில்) 06.03.2016, மாலை 5 மணிக்கு புரட்சிப் புலிகள் நடத்தும் முப்பெரும் விழாவில் கழக தலைவர் தோழர் ‘கொளத்தூர் மணி’ அவர்கள் கலந்து கொண்டு “புரட்சி முழக்கம்” எனும் இதழை வெளியிட்டார்.

கெயில் குழாய் பதிப்பின் ஆபத்து குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு !

20-2-2016 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கெயில் குழாய் பதிப்பின் ஆபத்தை விளக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் தோழர் கி.வெ.பொன்னையன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பார்கள் தோழர் பிரவின், தோழர் திருமுருகன் மற்றும் கெயில் குழாய் பதிப்பால் பாதிக்கப்பட்ட தோழர் பொன்னம்மாள் தோழர் வசந்தாமணி ஆகியோர் பங்குபெற்றனர்.

முதல்வருக்கு குடிசைப் பகுதி குழந்தைகள் கடிதம் எழுதும் போராட்டம்

20.2.2016 அன்று தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தமிழக முதல்வருக்கு குடிசைப் பகுதி குழந்தைகள் கடிதம் எழுதும் போராட்டம் காலை 11 மணிக்கு நடைபெற்றது. • சென்னையில் குதிரைப் பந்தயம், முதலாளிகளுக்கு கோல்ப் விளையாட பல ஏக்கர் அரசு நிலம். • சென்னையில் ஏழை எளிய குடிசை மக்களுக்கு ஒரு சென்ட் நிலம் இல்லையா? • தமிழக அரசே! ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! • வாழ்வாதாரத்தை பறிக்காதே! கல்வி வேலை வாய்ப்பை முடக்காதே! • குடிசைப் பகுதி மக்களுக்கு அவர்கள் வாழ்விடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடு! • உச்சநீதிமன்ற உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட மக்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருப்பிடத்தை அமைத்து கொடு! • பார்ப்பன பனியா கும்பலுக்கு வெண்ணை! ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுண்ணாம்பா?” – என்று முதல்வருக்கு கடிதம் எழுதும் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப் போராட்டத்தில்...

பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு மதுரை 27022016

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் மதுரையில் வரும் 27.2.2016 சனிக்கிழமை அன்று ”மக்களை பிளவு படுத்தும் பார்பன மதவாத எதிர்ப்பு மாநாடு ” நடக்கவிருக்கிறது. பறை இசை மற்றும் பள்ளத்தூர் நாவலரசு அவர்களின் இசை நிகழ்ச்சியோடு தொடங்கி கழக தலைவர் தோழர் ”கொளத்தூர் மணி ”அவர்கள், கழக பொதுசெயலாளர் தோழர் ”விடுதலை ராஜேந்திரன்” அவர்கள் , எஸ்டிபிஐ கட்சி தலைவர் தோழர் ”தெகலான் பாகவி” அவர்கள், தமிழ் புலிகள் கட்சி தலைவர் தோழர் ”நாகை திருவள்ளுவன்” அவர்கள், ஆதி தமிழர் பேரவை தெற்கு மாவட்ட செயலாளர் தோழர் ”இரா .செல்வ குமார்” அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளார்கள் அனைவரும் வருக

தோழர் திலீபன் மகேந்திரனை தாக்கிய காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தோழர் திலீபன் மகேந்திரனை தாக்கிய புளியந்தோப்பு காவல்துறையை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் 13022016 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

தொடர் முழக்க கண்டன ஆர்பாட்டம் ! – OBC இடஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) 27% இடஒதுக்கீடு 23 ஆண்டுகள் கடந்த பின்பும் 12% மட்டுமே நிரப்ப்ப்பட்டுள்ளது. இதை முழுமையாகவும் முறையாகவும் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிரப்பக்கோரி 13.2.2016 அன்று காலை சென்னை வள்ளுவர் கோட்ட்த்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட(OBC) ஊழியர்கள் நலச்சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மத்திய அரசை கண்டித்து தொடர் முழக்க கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த பேரமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். பேராசிரியர் டாக்டர் முரளிதரன் விரிவாக இடஒதுக்கீட்டிலும், அய்.அய்.டி போன்ற உயர் கல்வி நிறுவன்ங்களில்லும் நடைபெறும் மோசடிகளை தனது உரையில் தோலுரித்து காட்டினார். அடுத்து சங்கர் IAS அகாடமியின் தலைவர் திரு.சங்கர் அவர்கள் சிவில் சர்வீல் தேர்வுகளில் எப்படி முறைகேடுகளை இவ்வரசுகள் மேற்கொள்கின்றன இதனால் உயர் சாதியினர் எப்படி பலன் அடைகிறார்கள் என்பதை சுருக்கமாக விளக்கினார். நிறைவாக கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தமது கண்டன உரையில் இடஒதுக்கீட்டை...

நீண்டகால முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

மனித நேய மக்கள் கட்சி சார்பில் நேற்று 07.02.2016 அன்று மாலை மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசே அரசியலமைச்சட்டம் 161 அய் பயன்படுத்து ! 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அபுதாஹீர் உள்ளிட்ட முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய் ! பேரறிவாளன் உள்ளிட்ட வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய் ! என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, மக்கள் கண்காணிப்பகம் தோழர் ஹென்றி டிபேன், தோழர் எவிடன்ஸ் கதிர், தமிழ் தேச மக்கள் கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர் தோழர் புகழேந்தி, சி.பி.அய்( எம்.எல்) மக்கள் விடுதலை தலைவர் தோழர் அருண்சோரி ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர் மம

கல்வி நிறுவனங்களும் ஜாதிப் பாகுபாடும்’ கருத்தரங்கம் மதுரையில் 03022016

3-2-2016 அன்று மாலை 5-00 மணிக்கு, மதுரை, தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் துரைராஜ் பீட்டர் அரங்கத்தில், எவிடன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பில், ‘கல்வி நிறுவனங்களும் ஜாதிப் பாகுபாடும்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். தோழர் முத்து அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கங்களை விளக்கி எவிடன்ஸ் நிறுவன செயல் இயக்குநர் கதிர் தொடக்கவுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் கவின் மலர், சமூக ஆர்வலர் ஜோசுவா ஐசக், பேராசிரியர் செம்மலர் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் நிறைவுரை ஆற்றினார். கருத்தரங்கில் ரோகித் வெமுலாவின் மரணம் குறித்தும், மத்திய பா.ஜ.க ஆட்சியின் தலித், சிறுபான்மையோர் விரோத போக்கு குறித்தும், ஏற்கனவே உயர் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த மரணங்களைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகளைச்...

கல்வி நிறுவனங்களும் ஜாதியப் பாகுபாடும் – மதுரையில் கருத்தரங்கம்

”கல்வி நிறுவனங்களும்,ஜாதியப் பாகுபாடும்” கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் ! எவிடன்ஸ் அமைப்பின் சார்பில், நாள் : 03.02.2016. மாலை 4.30 மணி. இடம் : துரைராஜ் பீட்டர் ஹால், தமிழ்நாடு இறையியல் கல்லூரி,அரசரடி,மதுரை. தோழர்கள் எவிடன்ஸ் கதிர், ஹென்றி டிபேன், கவின் மலர், செம்மலர் ஆகியோர் உரையாற்றுகிறார்கள் ! சமத்துவம் மலர இணைந்து செயல்படுவோம். அன்புடன் அழைக்கிறோம்.

உற்சாக உணர்வலைகளோடு நடந்த கழக செயலவை

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் திருச்சியில் கரூர் புறவழிச் சாலையிலுள்ள இரவி ‘மினி ஹாலில்’ கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் பகல் 11 மணியளவில் தொடங்கியது திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் ஆரோக்கியசாமி, கடவுள்-ஆத்மா மறுப்பு கூறினார். முடிவெய்திய கழகத் தோழர் மல்ல சமுத்திரம் கண்ணன், மூத்த பெரியார் தொண்டர் பட்டுக்கோட்டை சதாசிவம், ரோகித் வெமுலா ஆகியோர் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து, நிகழ்ச்சிகள் தொடங்கின. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாக கடந்த ஜூலை மாதம் நடந்த தர்மபுரி செயலவைக்குப் பிறகு, கழக நிகழ்வுகளை சுட்டிக்காட்டி கழகக் கொள்கைகளை வெகு மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை தீவிரமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், செயலவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 40 தோழர்கள் கருத்துகளை முன் வைத்தனர். கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு...

பிப்.1இல் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்!

பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்க மாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்துக்கு நீதி கேட்போம்! கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் 24.01.2016 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 7 சதவீதத்தையும் தாண்டாத இடஒதுக்கீடு மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு ஆணை அமுலுக்கு வந்து 23 ஆண்டுகள் –கடந்த பிறகும் குரூப் ஏ, குரூப் பி போன்ற முதல்நிலைப் பதவிகளில் 7 சதவிகிதத்தைக் கூட எட்டவில்லை என்று அண்மை யில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டு கின்றன. அரசு உயர் அதிகாரப் பதவிகளை கைப்பற்றிக் கொண்டிருக்கும் – பார்ப்பன – உயர் ஜாதி அதிகார வர்க்கம் – அவற்றோடு இணைந்து நிற்கும் நடுவண் ஆட்சிகள் – பார்ப்பன உயர்ஜாதி கட்டுப் பாட்டில் உள்ள உச்சநீதிமன்றம் ஆகியவை சமூக நீதிக்கான...

படுகொலை குறும்படம் வெளியீடு

22-1-2016 வெள்ளி மாலை 6-00 மணியளவில், சேலம், மனிபால் மருத்துவமனை அருகே அமைக்கப் பட்டிருந்த நம்மாழ்வார் அரங்கில் சேலம் தோழர் பொன்.சண்முகவேல் இயக்கிய ‘படுகொலை’ என்ற குறும்படத்தை இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் சி. மகேந்திரன் வெளியிட, தோழர் பாலு மற்றும் அக்குறும்படத்தில் நடித்துள்ள சிறுவன் கவின்பூபதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர், ஒரு விவசாயியின் தற்கொலையைக் காட்சிப் படுத்துவதன் வழியாக, வேளாண்மையில் ஆதிக்கம் செலுத்துகிற கார்ப்பரேட்டுகளின் இலாப வெறி, இயற்கைச் சூறையாடல், நீர்நிலைகளின் அவல நிலை, பொதுச் சமூகத்தின் அக்கறையின்மை போன்ற செய்திகளைச் சொல்கிறது அந்தக் குறும்படம். குறும்படத் திரையிடலைத் தொடர்ந்து, எழுத்தாளர் அஜயன்பாலா, சேலம் பியூஸ் மானுஷ், அ.முத்துகிருஷ்ணன், பவா செல்லதுரை, கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், சி.மகேந்திரன் ஆகியோர் படம் சொல்லும் செய்திகள் மீதான தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். குறும் படத்தில் பங்காற்றியோர் பாராட்டப்பட்டனர். இயக்குநர் சண்முகவேல் நன்றியுரையுடன் நிகழ்வு...

“நான் பிறந்த ஜாதிதான் எனக்கு மோசமான விபத்து” – ரோகித் வெமுலா

பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்க மாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்துக்கு நீதி கேட்போம்! ‘ஏகலைவன்’ என்ற ஆதிவாசிக்கு ‘துரோணாச்சாரி’ என்ற பார்ப்பன குரு வில்வித்தை கற்றுத் தர மறுத்தான். ஏகலைவனோ, துரோணாச்சாரி உருவத்தை செய்து, அதையே குருவாகக் கருதி வித்தையைக் கற்றுத் தேறினான். உண்மை அறிந்த துரோணாச்சாரி, “கீழ் ஜாதிப் பயலே; வில்வித்தை கற்கும் உரிமை உன் குலத்துக்குக் கிடையாதுடா! குருதட்சணையாக உன் கட்டை விரலை வெட்டித் தா” என்று கேட்டான். ஏன் தெரியுமா? கட்டை விரலை வெட்டி விட்டால் வில்லிலிருந்து அம்புகளை விடவே முடியாது அல்லவா? இது வரலாறு அல்ல; ஆனால் புராணக் கதைகளின் வழியாக பார்ப்பனர்கள் சமூகத்துக்கு உணர்த்தும் பாடம்! ‘ஏகலைவன்’கள் கதை முடிந்துவிட்டதா? இல்லை. இல்லவே இல்லை. பார்ப்பன துரோணாச்சாரிகளின் வாரிசுகள் அய்.அய்.டி., அய்.அய்.எம்., அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம், மத்திய பல்கலைக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை இன்றும்...

பெரியார் குடும்பத்தின் ‘’மாப்பிள்ளை’’ சுயமரியாதை வீரர் தாதம்பட்டி இராஜு முடிவெய்தினார்

பெரியார் குடும்பத்தின் ‘’மாப்பிள்ளை’’ சுயமரியாதை வீரர் தாதம்பட்டி இராஜு முடிவெய்தினார் வாழ்வின் இறுதி வரை சுயமரியாதைக் கொள்கைக்காரராகவே வாழ்ந்து காட்டிய ”தாதம்பட்டி இராஜூ”, தனது 94ஆவது வயதில் சென்னையில் 19.01.2016 அன்று காலை முடிவெய்தினார்.. தாதம்பட்டி இராஜூ, தந்தை பெரியாரின் மூத்த சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மருமகன் ஆவார். ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மகள் செல்லா என்ற நாகலட்சுமியை திருமணம் செய்து கொண்டவர். செல்லா,மறைந்த ஈ.வெ.கி. சம்பத்தின் சகோதரி ஆவார். இளம் வயதில் கப்பற்படையில் பணியாற்றிய அவர், 1946இல் நடந்த கப்பற் படை எழுச்சிப் போராட்டத்தில்பங்கேற்றார். பிறகு, பெரியார் வாழ்ந்த காலத்தில் ‘விடுதலை’ நாளேட்டின் அலுவலக மேலாளராக 10 ஆண்டு காலம் பணிபுரிந்தார். இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்காக வடமாநிலத் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிட தோழர் வே.ஆனைமுத்து அவர்கள், வடமாநிலங்களுக்கு சென்றபோது, அவருடன் சென்றவர்களில் ஒருவர் தாதம்பட்டி இராஜு.ஆங்கிலத்தில் புலமை மிக்கவர். வயதுமுதிர்ந்த நிலையிலும் இளைஞரைப்போல் தமிழகம் முழுதும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அவரது வழக்கம். 2003ஆம்...

பட்டுக்கோட்டை சதாசிவம் இறுதி நிகழ்வு

19.01.2016 அன்று முடிவெய்திய தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் (வளவன்) அய்யா அவர்களின் இறுதி நிகழ்வு 20.01.2016 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. அய்யாவின் உடல் பட்டுக்கோட்டையில் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. 20.01.2016 அன்று கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் கழக தோழர்கள்,திராவிடர் கழகம்.தந்தை பெரியார் திராவிடர் கழகம்,தி.மு.க உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள்,உறவினர்கள்,நண்பர்கள் ஆகியோர் பங்கேற்ற இறுதி ஊர்வலம் நடைபெற்றது.அய்யாவின் உடல் பட்டுக்கோட்டையில் உள்ள அவரது இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ் சித்தார்த்தன்,திருவாரூர் மாவட்ட தலைவர் ராயபுரம் கோபால்,பகுத்தறிவாளர்கழகத்தின் தரங்கை சா.பன்னீர் செல்வம்,பட்டுக்கோட்டை அண்ணாதுரை, இராம.அனபழகன்,மாங்காடு மணியரசு,சின்னத்தூர் சிற்றரசு, தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி,பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன்,ப.சு.கவுதமன், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ்,ஈரோடு மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், மேட்டூர்...

பெரியாரியல் பேரொளி தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் முடிவெய்தினார்

கழகத் தோழர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார் ”பட்டுக்கோட்டை சதாசிவம் !” பெரியார் கொள்கைக்காகவே வாழ்ந்த பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை வளவன் எனும் சதாசிவம் (76), ஜனவரி 19, 2016 பிற்பகல் 3 மணியளவில் தஞ்சை மருத்துவமனையில் கழகத் தோழர்களிட மிருந்து விடைபெற்றுக் கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களோடு நெருக்கமாக வாழ்ந்து வந்தார் சதாசிவம். மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் தங்கி, அவ்வப்போது கழக நிகழ்ச்சிகளுக்கும் ஊருக்கும் சென்று வருவார். கழகத் தோழர்கள் உடல்நலிவுற்ற அவருக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து வந்தனர். தஞ்சை நகராட்சியில் பணியாற்றிய காலத்திலேயே தனது சொந்த செலவில் திராவிடர் கழகம் சார்பாக கிராமப் பிரச்சாரங்களை தொடர்ந்து நடத்திய பெருமைக்குரியவர். இந்தப் பயணத்தின் வழியாக பல பேச்சாளர்களை உருவாக்கியவர். பரப்புரைத் திட்டங்களையும் மக்களிடம் சென்றடையத்தக்க வகையில் கருத்துகளை வடிவமைத்துத் தருவதிலும் ஆற்றல் மிக்கவர். கடும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கொள்கை மீதான உள்ள...

”ஜாதி மறுப்பு” வாழ்க்கை துணையேற்பு விழா!

‘ஜனவரி 17’ – சுயமரியாதைச் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளில் ! (சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற நாள்) ‘வீ.விஜயமாலா – ம.மனோகர்’ இடம் : சிசுவிஹார் சமூக நலக்கூடம், ,நாகேஸ்வரா பூங்கா பின்புறம், மயிலாப்பூர்,சென்னை. நேரம் : மாலை 6 மணி. தலைமை : தோழர் கொளத்தூர் மணி,தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். முன்னிலை : தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச் செயலாலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். வாழ்த்துரை : தோழர் அஜிதா,வழக்கறிஞர்.

‘வீரப்பன் வழக்கு’ குறித்த ஒரு பார்வை !

‘கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பு’ கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் 2000 ஆம் ஆண்டு காட்டுக்குள் கடத்தி சென்று வைத்திருந்தார். அப்போது ராஜ்குமாரை மீட்க ‘தமிழக அரசின் தூதுவர்களாக’ அந்த ஆண்டு நவம்பர் மாதம் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, அய்யா பழ.நெடுமாறன், பேரா.கல்யாணி முதலியோர் காட்டுக்குள் சென்று ராஜ்குமார் குழுவினரைப் பத்திரமாக மீட்டு வந்தனர். ‘அமைப்பு தொடக்கம்,பத்திரிக்கையாளர் சந்திப்பு’ நடிகர் ராஜ்குமார் மீட்புக்கு செல்லவேண்டாம் என்ற தனது அறிவுரையை மீறி சென்றதால், திராவிடர்க் கழகப் பொதுச்செயலாளர் வீரமணி, கொளத்தூர் மணியிடம் திராவிடர் கழகத்தில் இருந்து விலகிக்கொள்வதாகக் கடிதம் எழுதிவாங்கிக் கொண்டார். அதன் பின்னர் அதுவரைத் தனிதனியாக செயல்பட்டுவந்த, ஆனூர் ஜகதீசன் தலைவராகவும், விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளராகவும் இருந்து இயங்கிவந்த பெரியார் திராவிடர்க் கழகம், திருவாரூர் தங்கராசு, கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் நடத்தி வந்த தமிழ்நாடு திராவிடர்க் கழகம், புதுவையில் லோகு. அய்யப்பன் தலைமையில் இயங்கிவந்த இராவணன் படிப்பகம்,...

பாலின மாற்றுத் திறனாளிகள் என்றழைக்க கழகத் தலைவர் கோரிக்கை

Self Balancing Scooter Self Balancing Scooter Sale 01012016 அன்று மாலை 6-00 மணியளவில், கோபி இராமாயம்மால் திருமண மண்டபத்தில் மரித்துவர் எம். இராசேந்திரன் தலைமையில், தமிழர் உரிமை இயக்கத்தின் சார்பாக – பல தடைகளைத் தாண்டி காவல்துறையில் உதவி ஆய்வாளராகத் தேர்வு பெற்றிருக்கிற திருநங்கை பிரித்திகா யாஷினிக்குப் பாராட்டுவிழா நடைபெற்றது. அந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர்க் கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், புலவர் புலமைப்பித்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். எழுத்தாளர் பாமரன், இய்க்குநர் வ.கவுதமன், மாநில மகளிர் ஆணையத்தின் மேனாள் தலைவர் முனைவர். இராமாத்தாள், மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன், தமிழ்நாடு பி.யூ.சி.எல் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பாலமுருகன், தமிழினப் பாதுகாப்பு இயக்கத்தின் கி.வே.பொன்னையன், கொடிவேரிப் பாசனதாரர்கள் சங்கத் துணைத்தலைவர் அ.இரா.பிரதாபன் , கோவை பொறியாளர் கு.பன்னீர்செல்வம் ஆகியோர் பாராட்டுரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது உரையில், திருநங்கையரில் சிலர் மாநகர மேயராக, 1998இலேயே மத்தியபிரதேசத்தில்...

ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கங்கள்… பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள் 2015இல் கழகம் கடந்து வந்த பாதை

ஜாதிய ஒடுக்குமுறைகள், தீண்டாமை வன்கொடுமைகளுக்கு, எதிராக களம் கண்ட திராவிடர் விடுதலைக் கழகம், இவற்றிற்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் ஜாதியை எதிர்த்து, 2015ஆம் ஆண்டு முழுதும் கிராமம் கிராமமாக பரப்புரை இயக்கங்களை நடத்தி முடித்திருக்கிறது. ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்துடன் பரப்புரை இயக்கங்களைத் தொடர்ந்து ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்’ என்ற முழக்கத்தை முன் வைத்து அடுத்தகட்ட பரப்புரை நடத்தியது. பல்லாயிரம் துண்டறிக்கைகள் மக்களிடம் வழங்கப்பட்டன. பார்ப்பன மதவாத சக்திகளுக்கு எதிரான மாநாடுகள்; மதவெறிக்கு எதிரான போராட்டங்கள் என்று திராவிடர் விடுதலைக் கழகம் 2015இல் நிகழ்த்திய களப்பணிகளின் தொகுப்பு. ஜனவரி: ஜன.12இல் சென்னையில் தமிழ்ப் புத்தாண்டு விழாவை கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கழகம் முன்னின்று நடத்தியது. காந்தியை கொலை செய்த கோட்சே பார்ப்பனருக்கு சங்பரிவாரங்கள் சிலை வைத்து பெருமை சேர்க்கக் கிளம்பின. இதை எதிர்த்து கோட்சே சிலை எதிர்ப்பு மாநாட்டை கழகம் ஈரோட்டில் நடத்தியது...