Category: பெரியார் முழக்கம்

பணி நீக்கம் ரத்து;  கோரிக்கை வெற்றி!

பணி நீக்கம் ரத்து; கோரிக்கை வெற்றி!

பார்ப்பன துணை வேந்தர் மீனா, முனைவர் மணிமேகலையை பணி நீக்கம் செய்து பிறப்பித்த ஆணையை தமிழக ஆளுநர் பல்கலை வேந்தர் என்ற முறையில் ரத்து செய்துள்ளார். கழகம் போராட்டம் நடத்திய அன்றே இந்த வெற்றிச் செய்தி கிடைத்துள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆளுநர் மாளிகையில் நேரடியாக கோரிக்கை மனுவை வழங்கினர். பல்வேறு தரப்புகளிலிருந்து தரப்பட்ட அழுத்தங்களின் காரணமாக கோரிக்கை வெற்றிப் பெற்றுள்ளது. பெரியார் முழக்கம் 16022012 இதழ்

பாரதிதாசன் பல்கலை கழகத் துணைவேந்தரின் பார்ப்பனப் போக்கைக் கண்டித்து திருச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

பாரதிதாசன் பல்கலை கழகத் துணைவேந்தரின் பார்ப்பனப் போக்கைக் கண்டித்து திருச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மகளிரியல் துறை இயக்குநர் பேராசிரியர் முனைவர் மணிமேகலையை  தற்காலிக நீக்கம் செய்ததைக் கண்டித்தும், தற்காலிக நீக்க ஆணையை ரத்து செய்யக் கோரியும், பாரதிதாசன் உயராய்வு மையம், பெரியார் உயராய்வு மையம் ஆகியவற்றை முடக்க முயற்சி செய்ததைக் கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகம் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.  10.02.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் திருச்சி புகைவண்டி சந்திப்பு எதிரே பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் எஸ்.எஸ். முத்து தலைமையில் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பார்ப்பன அம்மையாரான துணைவேந்தர் மீனா அவர்கள் பொறுப்பேற்ற நாளில் இருந்து தொடர்ந்து செயல்படுத்திவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு விரோதமான செயல்பாடுகளை விளக்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் உரையாற்றினர். பெரியார் தி.க மாவட்டச் செயலாளர் கந்தவேல் குமார் வரவேற்புரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் மனோகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். இந்நிகழ்ச்சியில் பாரதிய...

இராயப்பேட்டையில் எழுச்சியுடன் நடந்த தமிழ்ப் புத்தாண்டு-தமிழர் திருநாள்

இராயப்பேட்டையில் எழுச்சியுடன் நடந்த தமிழ்ப் புத்தாண்டு-தமிழர் திருநாள்

சென்னையில் கழகக் கோட்டையான இராயப்பேட்டையில் வழக்கம்போல் தமிழர் திருநாள் பொங்கல் விழா பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 13.1.2012 அன்று வி.எம். தெரு பெரியார் சிலை அருகில் எழில் குலுங்க அமைக்கப் பெற்ற மிகப் பெரும் மேடையில் வீரமங்கை செங்கொடி பறையுடன் நிற்கும் படம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இதே பொங்கல் விழா மேடையில் தனது பறை முழக்கத்தை நடத்தியவர் தோழர் செங்கொடி. பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளோடு உற்சாகமாக விழா தொடங்கிற்று. தொடர்ந்து ஆதித் தமிழர் கலைக் குழுவினர் பறை இசை மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். பெரியார் அம்பேத்கர், பிரபாகரன் கொள்கை போற்றும் எழுச்சிப் பாடல்களைப் பாடினர். கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடந்த வாழ்த்துரையில் கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், இயக்குனர் கவுதமன், அற்புதம்மாள், கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். அன்பு. தனசேகரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். டிங்கர்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்வுகள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்வுகள்

உடன்குடி : 17.01.2012 மாலை தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸ்-சோனாபாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கழகத் தலைவர் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சீமான் (நாம் தமிழர் கட்சி), பேராசிரியர் ஜக்மோகன் (உலக சீக்கிய செய்திகள்), ம.செந்தமிழன் (திரைப்பட இயக்குனர்), பாமரன் (எழுத்தாளர்), அற்புதம் அம்மாள், பேராசிரியர் அறிவரசன், முனைவர் சுப. உதயகுமார் (அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி: 18.01.2012 மாலை 7 மணியளவில் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நடைபெற்ற ஈழம்-கூடங்குளம்-முல்லைப் பெரியாறு ஆகியவற்றில் இந்திய அரசின் துரோகத்தை விளக்கி, கழகத்தின் சார்பாக பொதுக் கூட்டம் நடைபெற்றது. கோ.அ.குமார் (மாவட்ட செயலாளர்) தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அம்புரோசு, துணைத் தலைவர் வே.பால்ராசு முன்னிலை வகித்தனர். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பால் பிரபாகரன் உரையாற்றினார். இறுதியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். இந்திய...

குஜராத் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா?

குஜராத் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா?

குஜராத்தில் முஸ்லீம்கள் மீதான இனப் படுகொலையை நடத்தி சர்வதேச அளவில் கண்டனத்துக்குள்ளானவர் மோடி.  உச்சநீதிமன்றம் அவரை ‘நீரோ’ மன்னருக்கு இணையானவராக கூறியது. (ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது, ரோம் மன்னர், அதுபற்றி கிஞ்சித்தும் கவலைப்படாது ‘பிடில்’ வாத்தியக் கருவியை மீட்டுக் கொண்டிருந்தார் என்று வரலாறு கூறுகிறது) இப்போது, அவர் ‘மதச் சார்பின்மை’ வேடம் போடுகிறார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பிரதமர் பதவியை தட்டிப் பறித்துவிட கனவு கண்டு வருவதால் இத்தகைய நாடகங்களை நடத்தி வருகிறார். இப்போது முஸ்லிம் மக்களிடம் “கடந்த காலத்தை மறந்து விடுங்கள். உங்களின் தேவைகளுக்கான கோரிக்கைகளை குறைத்துக் கொண்டு பெரும் பான்மை சமூகத்துடன் (இந்துக்களுடன்) கலந்து விடுங்கள்; மத அடையாளங்களை கை விடுங்கள்; பிறகு குஜராத் முன்னேறுவதை நீங்கள் பார்ப்பீர்கள்” என்று பேசி வருகிறார். உதட்டளவில் முஸ்லிம்களிடம் பரிவு காட்டு வதாக அவர் பேசினாலும், அவரது ஆட்சியின் செயல்பாடுகளில் மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை. குடியிருப்பு பாதுகாப்பு சட்டத்தில் மோடி...

நன்கொடை

நன்கொடை

4.12.2011 அன்று சேலம் கழகத் தோழர் இரா.வீரமணி – இலட்சுமி இணையரின் மகள் அருள்மொழி-ஸ்ரீதர் ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தேறியது. விழா மகிழ்வாக ரூ.10,000/-, ‘புரட்சிப் பெரியார் முழக்க’ வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டது. 5.2.2012 அன்று சுவாமி மலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்த தங்கள் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’ வளர்ச்சி நிதியாக கழகத் தோழர் சி.கோடிசுந்தரம்-கனிமொழி (எ) நா. சரசுவதி இணையர் ரூ.10,000/- நன்கொடையாக வழங்கினர். மணவிழா பதிவு 26.1.2012 அன்று கோபியில் கழக அலுவலகத்தில் சொக்கையா – மணிமேகலை வாழ்க்கை ஒப்பந்தப் பதிவு, பதிவாளர் மற்றும் கழகத் தோழர்கள் விசய சங்கர் (ஒன்றிய பொறுப்பாளர்), அர்ச்சுனன் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), செகநாதன் மற்றும் கழகத் தோழர்கள் முன்னிலையில் நடந்தது. கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றியுடன் பெற்றுக்...

இராமகோபாலன்  வெளியிடாத அறிக்கை

இராமகோபாலன் வெளியிடாத அறிக்கை

கருநாடாக சட்டசபையில் மூன்று பா.ஜ.க. அமைச்சர்கள்  அலைபேசியில் ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். அதற்காக அவர்கள் பதவி இழந்துள்ளனர். அவர்கள் பக்தி பரவசத்தோடு ‘விநாயகன்’, ‘இராமன்’ பிறந்த கதைகளையும், ‘சிவன்’ திருவிளையாடல் களையும் காட்சி வடிவத்தில் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றே கருதுகிறோம். அதற்காக இப்படியா அவர்கள் பதவியை பறிப்பது? இது மத விரோதம்! தெய்வக் குற்றம்! பெரியார் முழக்கம் 23022012 இதழ்

‘பால்ய விவாகக்’ கொடுமைகள்

‘பால்ய விவாகக்’ கொடுமைகள்

பெண்கள் சிறுமியாக இருக்கும் போதே திருமணம் செய்து விடும் ‘பால்ய விவாகம்’ எனும் சமூகக் கொடுமையை பார்ப்பனியம் ‘இந்து சமூக வாழ்க்கை’ என்ற பெயரில் சமூகத்தில் திணித்தது. பிறகு பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தக் கொடுமை பாhப்பனர் எதிர்ப்பையும் மீறி சட்டத்தால் தடுக்கப்பட்டது. பிறகு பெண்களின் திருமண வயதை 18 ஆக நிர்ணயித்து, இந்தியாவில் சட்டம் கொண்டுவரப்பட்டது. என்றாலும், பார்ப்பனியம் திணித்த இந்த சமூகக் கொடுமை தொடரவே செய்கிறது. உலகில் நடக்கும் ‘சிறுமிகள்’ திருமணங்களில் இரண்டாவதாக ‘பாரத புண்ணிய’ பூமியான இந்தியா இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் 47 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்யப்படுகிறார்கள். உலகில் இதில் முதலிடம் பெறுவது வங்க தேசம். (66 சதவீதம்) இந்தியாவில் பீகார் முதலிடம் பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்யப்பட்டு விடுகிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் 15 வயதிலேயே திருமணம் செய்யப்பட்டு விடு...

மத நம்பிக்கையாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாமாம்

மத நம்பிக்கையாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாமாம்

“மத நம்பிக்கையாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதற்கு தடையில்லை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் தெரிவித் துள்ளார் (“னுடிநள nடிவ யெச யீநசளடிளே றாடி hயஎந சநடபைiடிரள கயiவா கசடிஅ தடிiniபே வாந யீயசவல”). மார்க்சிஸ்ட்டுகள் நாத்திகர்களாக இருந்தாலும், மதம் தோன்றி யதற்கான காரணம் சமூகத்தில் அதன் செயல்பாடு பற்றிய புரிதல் இருத்தல் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கட்சி ஏடுகள் மார்க்சிஸ்ட்டுகள், மதச் சடங்குகளிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், கட்சியின் செயல் பாடுகளில் மாற்றங்கள் வரத் தொடங்கியுள்ளன. கேரளாவின் சி.பி.அய்.(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். மனோஜ், மத வழிபாடுகளில் பங்கேற்றதை கட்சி எதிர்த்ததால், தனது மத நம்பிக்கையை கைவிட முடியாது என்று, 2009 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து அவர் விலகினார். இரண்டு வாரங்களுக்கு முன்பு திருவனந்த புரத்தில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டை யொட்டி நிறுவப்பட்டிருந்த கண்காட்சியில் மார்க்ஸ், லெனின், சேகுவேரா...

பன்னாட்டு நிறுவனங்களை கொழுக்க வைக்க தமிழக மக்கள் மீது மின் கட்டணச் சுமையா?

பன்னாட்டு நிறுவனங்களை கொழுக்க வைக்க தமிழக மக்கள் மீது மின் கட்டணச் சுமையா?

வீடுகள், சிறு வணிக-தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மின் கட்டணத்தை அடுத்த மாதம் முதல் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகக் கூட்ட அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 20 வருடங்களில் அரசுக்கு சொந்தமாக புதிய மின் நிலையங்களை உருவாக்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு உற்பத்தி சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டது. மின்சார உற்பத்தி தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது. தனியார் மின் நிலையங்களில் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. நம் மின்சாரத் துறை கடுமையான நட்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது. விரிவாகச் சொல்வதானால் 1994-95 இல் தமிழக அரசின் உற்பத்தி, மொத்த தமிழகத் தேவையில் 65ரூ ஆக இருந்தது. மத்திய அரசு தொகுப்பிலிருந்து மீதமுள்ள 34.5ரூ பெறப்பட்டது. தனியாரிடம் இருந்து வெறும் 0.5ரூ மின்சாரம் வாங்கப்பட்டது. இந்த காலங்களில் வருவாய் மின்சார வாரியத்திற்கு அதிகமாகவும், உபரியாகவும் இருந்தது. இதைக் கொண்டு புதிய மின் உற்பத்தி திட்டங்களைக் கொண்டு வர இயன்றது. மேலும்...

பெரியார் கருத்து செயல் வடிவம் பெறுகிறது:  ‘போரா’ சமூகத்தின் பொது சமையல் அறைத் திட்டம்

பெரியார் கருத்து செயல் வடிவம் பெறுகிறது: ‘போரா’ சமூகத்தின் பொது சமையல் அறைத் திட்டம்

வீட்டுக்கு வீடு சமையலறைகள் வேண்டாம்; பொது சமையலறை உருவாக வேண்டும் என்று கூறியவர், தந்தை பெரியார். அவரது கருத்து இப்போது செயல்படத் தொடங்கியிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தில் சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்ட பிரிவு ‘தாவூத் போரா’ என்ற சமுதாயப் பிரிவாகும். அவர்களின் மதத் தலைவரான டாக்டர் சையதுனா முகம்மது புர்கானுதீன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பொதுச் சமையல் அறைத் திட்டத்தை முன் வைத்தார். இதனால் சமையல் அறையில் முடக்கப்படும் பெண்களின் ஆற்றலை வேறு பணிகளில் திருப்பிவிட முடியும் என்றார். புதுடில்லியில் ராஜ்காட் பகுதியில் 2200 போரா சமூகக் குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பப் பெண்கள் தங்கள் வீடுகளில் சமையலறையை இழுத்துப் பூட்டிவிட்டு, பொது சமையல் கூடத் திட்டத்துக்கு வந்து விட்டனர். நகரத்தில் 5 பொது சமையல் கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எல்லா குடும்பத்துக்கும் ஒரே தரத்திலான உணவு, பொது சமையல் கூடத்தி லிருந்து வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணங்கள் குடும்பத்திடமிருந்து பெறப்படுகின்றன. நிர்ண...

உலகத் தமிழர்கள் சாதியை ஒழிக்க  மலேசியா பகுத்தறிவு மாநாடு அறை கூவல் பினாங்கில் பெரியாருக்கு சிலை

உலகத் தமிழர்கள் சாதியை ஒழிக்க மலேசியா பகுத்தறிவு மாநாடு அறை கூவல் பினாங்கில் பெரியாருக்கு சிலை

மலேசியத் தமிழர் தன்மான இயக்கம் சார்பில் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு ஜன.27, 28, 29 தேதிகளில் கோலாலம்பூரிலுள்ள ‘பேர்ல் இன்டர் நேஷனல்’ ஓட்டலில் சிறப்புடன் நடந்தது. மாநாட்டுக் குழுத் தலைவர் முனைவர் பெரு. அ. தமிழ்மணி, செயலாளர் ரெ.சு. முத்தையா உள்ளிட்ட மாநாட்டுக் குழுவினர் மலேசிய அரசு ஆதரவுடன் இந்த மாநாட்டை நடத்தினர். மலேசியாவில் தமிழ் அமைச்சர்கள் டத்தோ ஜி. பழனிவேலு, டத்தோ சுப்ரமணியம், டத்தோ சரவணன், முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேல் சிறப்பு விருந்தினராக மாநாட்டில் பங்கேற்றுப் பேசினர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஜன. 28 ஆம் தேதி ‘பெரியார் காட்டிய பகுத்தறிவுப் பாதை’ என்ற தலைப்பில் நிறைவுரையாற்றினார். மா.பெ.பொ. கட்சி அமைப்பு செயலாளர் தோழர் ஆனைமுத்து, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தொல். திருமாவளவன், வழக்கறிஞர் இள. புகழேந்தி, இயக்குனர் வேலு பிரபாகரன், ஓவியா, பேராசிரியர் அ. மார்க்ஸ், கவிஞர் ஆதவன் தீட்சன்யா, முனைவர் இளங்கோவன்,...

பழனியில் பெரியார் படிப்பகம் திறப்பு

பழனியில் பெரியார் படிப்பகம் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அ.கலையம்புத்தூர் திராவிடர் விடுதலை கழகத்தின் தந்தை பெரியார் படிப்பகத் துவக்க விழா 28.02.2017 அன்று காலை 10.00 மணிக்கு வண்டிவாய்க்கால் பகுதியில் சிறப்பாக நடைப்பெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி படிப்பகத்தை திறந்து வைத்தார். திவிக சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, வி. ஜான்சன் கிறிஸ்டோபர் (மாவட்ட செயலாளர் விசிக), பாஸ்கர் (மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி), து. சுரேஷ், மள்ளர் (சிறைவாசிகள் மீட்பு இயக்கம்), கரு. இரணியன் (தமிழ்ப் புலிகள்) மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் சிறப்புரை யாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் படிப்பகத்தைப் பயன்படுத்துதல் பற்றியும், அதன் பலன் பற்றியும் கருத்துரை வழங்கி நிறைவு செய்தார். படிப்பகம் உருவாக ஒத்துழைத்த பகுதி கழகத் தோழர்கள் பா.ராஜசேகரன், ஆ.திருச் செல்வம், ஜான்குட்டி, மா.கார்த்திக், வே.ஆனந்தன், ஆ.மாரியப்பன் (எ) துரையன், சு.சங்கிலிபாலன், மு.கார்த்திக்ராஜா, மு.அரங்கநாதன், க.மாரிமுத்து, த.சபரி நாதன் அனைவருக்கும்...

சங்கராச்சாரிகளின் ‘குடுமிபிடி’ சண்டைகள்

சங்கராச்சாரிகளின் ‘குடுமிபிடி’ சண்டைகள்

ஆதிசங்கரர் என்ற கேரள பார்ப்பனர், புத்தமதத்தை வீழ்த்தி அழிப்பதில் பெரும்பங்காற்றியவர். அவர் நான்கு சங்கர மடங்களை மட்டுமே உருவாக்கினார். பத்ரிநாத், சிருங்கேரி, துவாரகா, பூரி ஆகிய நான்கு மடங்களே அவை. காஞ்சிமடம், ஆதிசங்கரர் நிறுவியது அல்ல; அது கும்பகோணத்திலிருந்து காஞ்சிக்கு மாற்றப்பட்டு, ஆதி சங்கரர் உருவாக்கியதாக பொய்யாக ஆவணங்களை உருவாக்கினார்கள். இப்போது சங்கரமடங்கள் என்றும் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டவை என்றும் 50க்கும் மேற்பட்ட சங்கராச் சாரிகள் வந்து விட்டனர். டேராடூன் நகரிலிருந்து செயல்படும் சமூக செயல்பாட்டாளர் அஜய்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள சங்கராச்சாரிகள், சங்கர மடங்கள் குறித்த தகவல்களை மனித வளத்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்களிடம் கேட்டார். இது குறித்த எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்று அமைச்சகங்கள் கூறிவிட்டன. ஆக எந்த சங்கரமடமும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்பது தெரிகிறது. காசியில், ‘அகில இந்திய அக்ஹரா பிரஷாத்’ என்ற அமைப்பு இருக்கிறது....

நீட் தேர்வைக் கண்டித்து தக்கலையில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வைக் கண்டித்து தக்கலையில் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம். சார்பாக  நீட் தேர்வைக் கண்டித்து தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் 4.3.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்டச் செயலாளர் தமிழ்மதி தலைமை தாங்கினார். நீதி அரசர் (தலைவர். பெ.தொ.க) முன்னிலை வகித்தார். விஸ்ணு வரவேற்புரை நிகழ்த்தினார். பால் பிரபாகரன் (கழக பரப்புரைச் செயலாளர்) கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி தோழர்கள் மேசியா (ப.நா.புரம்), போஸ் (சமூக ஆர்வலர்),  முரளீதரன் (பொது பள்ளிக்கான மாநில மேடை செயலாளர்),  இரமேஷ், இராஜேஷ் குமார், இராதா கிருஷ்ணன், ஜான் மதி, சூசையப்பா, அனி ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர்கள் அனைவரும் மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை முழங்கினர்.  மஞ்சு குமார் நன்றியுரையுடன் முடிந்தது. பெரியார் முழக்கம் 09032017 இதழ்

நந்தினிக்கு நீதி கேட்டு மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

நந்தினிக்கு நீதி கேட்டு மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 8.2.2017 புதன் அன்று மாலை 4 மணிக்கு மேட்டூர் பெரியார் பேருந்து நிலையம் முன்பு அரியலூர் தலித் சிறுமி நந்தினி கூட்டுப் பாலியல் பலாத்காரப் படுகொலையை செய்த இந்து முன்னணியினரை கைது  செய்ய வலியுறுத்தி நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி. கோவிந்தராசு (சேலம் மேற்கு மாவட்டம் கழக செயலாளர்) தலைமையில், க. இராதாகிருட்டிணன் (ஆதித் தமிழர் பேரவை), க. ராஜாத்தி (அனைத்திந்திய மாதர் சங்கம்), செ. கருப்பண்ணன் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), மா. சிவக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகியோர் உரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி கண்டன உரையாற்றினார். சு. குமரப்பா எழுச்சியாக முழக்கங்களை முழங்கினார். அ.சுரேசுகுமார் (நகர செயலாளர்) நன்றி கூறினார். கூட்டத்தில் மேட்டூர் நகர தலைவர் செ. மார்ட்டின், மாவட்ட அமைப்பாளர்கள் டைகர் பாலன், அ.அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் சு.சம்பத்குமார்,...

நெடுவாசலில் கழகத் தலைவர்

நெடுவாசலில் கழகத் தலைவர்

03.2017 அன்று சனிக்கிழமை நெடு வாசலில் ஹைட்ரோ, கார்ப்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிக்கும் கிராம மக்கள் உடன் களத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து உரையாற்றினார். உடன் கழக மாநில பொருளாளர் திருப்பூர் சு, துரைசாமி, திருச்சி பேராவூரணி மற்றும் கழகத் தோழர்கள். பெரியார் முழக்கம் 09032017 இதழ்

மத பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள்!

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோதுதான் இஸ்லாமியர் களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை நடந்தது. பாபர் மஸ்ஜிதில் பூஜை முடிந்து, சபர்மதி துரித வண்டியில் திரும்பிய கரசேவகர்கள், இரயிலில் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டனர். 56 பயணிகள் கொடூரமாக இறந்தனர். இந்த சதியை செய்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று குஜராத் காவல்துறையும் அரசும் குற்றம் சாட்டியது. சிறப்பு நீதிமன்றம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு 2011இல் அளித்த தீர்ப்பில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி குற்றம்சாட்டப்பட்ட 63 பேரை விடுதலை செய்தது. இரயில் பெட்டியை வெளியிலிருந்து எரிப்பதற்கான வாய்ப்புகளே இல்லை; தீ – இரயில்...

சாதியும் காதலும் – கவிஞர் இரவிபாரதி

சாதியும் காதலும் – கவிஞர் இரவிபாரதி

உன் சாதி பிறக்கும் முன் என் காதல் பிறந்தது உன் சாதியைவிட என் காதலே சிறந்தது உன் சாதியை காக்கவே எங்கள் காதலை அழிக்கிறாய் நீ பிறந்த சாதிக்காய் பெற்ற மகளை கொல்கிறாய் கூலி கேட்டு போராடிய போது வரவில்லையே சாதி வெண்மணியில் கருகியபோது எட்டி பார்க்காத சாதி திருமணம் என்ற உடன் வந்து விடுகிறதே சாதி சாதிய திருமணம் உன் சொத்தை கொள்ளையடிக்கும் சாதி மறுப்பு திருமணம் சமத்துவம் வளர்க்கும் பற்றிப் படரும் சாதிநோய்க்கு பெரியாரியலே அருமருந்து சாதி நோய்ப்பிடித்த தமிழனே அதை மனம் கோணாமல் நீ அருந்து. (சென்னை காதலர் நாள் விழாவில் வழங்கியது)

ஜக்கி அவர்களே! பதில் சொல்லுங்கள்!

ஜக்கி அவர்களே! பதில் சொல்லுங்கள்!

ஜக்கி வாசுதேவ் – தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகிறார். அவரது பேட்டி தொடர்பான பல கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. ‘ஆதியோகி சிவன்’ சிலை – அதைப் பார்ப்பவர்கள் நினைவி லிருந்து நீங்கவே நீங்காது; அந்த வகையில் 112 அடியில் வடிவமைத்திருக்கிறோம் என்கிறார். அப்படியானால் உருவ வழிபாடே கூடாது என்று இதுவரை இவர் கூறிவந்த கருத்துக்கு விடை கொடுத்து விட்டாரா? ஆதியோகி சிலை கடவுள் சிலை அல்ல; அது சிவன் சிலையும் அல்ல என்கிறார் ஜக்கி. அப்படியானால் அந்த சிலையில் சிவனின் அடையாளத்தைக் குறிக்கும் – கழுத்துப் பாம்பு; தலையில் சந்திரன் உருவங்கள் இடம் பெற்றிருப்பது ஏன்? எனது மய்யம் அமைந்த பகுதியில் ஒரு அங்குலம்கூட வனப்பகுதி கிடையாது; இந்தப் பகுதிகளில் நடமாடும் மான்களை வேட்டையாடி மான் கறி சாப்பிட்டவர்கள், எங்கள் கட்டிடம் வந்த பிறகு, அது கிடைக்காமல் போனதால் எங்களை எதிர்க் கிறார்கள் என்கிறார். அப்படியானால் மான்கள் நடமாடக்கூடிய, அதன்...

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில், 05.03.2017 அன்று மாலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடந்தது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், தியாகு, தந்தை பெரியார் தி.க. மாவட்ட செயலாளர் ச. குமரன், தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பா. புகழேந்தி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை பொதுச் செயலாளர் பாலன், குமுக விடுதலைத் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பாளர் சேகர், சோசலிச மையம் செல்வி மற்றும் பாப்புலர் பிரன்ட் எஸ்.டி.பி.அய். மனிதநேய மக்கள் கட்சியினர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 09032017 இதழ்

வாக்குறுதியை மீறும் இலங்கை அய்.நா. என்ன செய்யப் போகிறது?

வாக்குறுதியை மீறும் இலங்கை அய்.நா. என்ன செய்யப் போகிறது?

2015ஆம் ஆண்டு அய்.நா.வில் இலங்கை அரசே கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இப்போது நினைவுகூர வேண்டும். காமன்வெல்த் நாடுகள், பன்னாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன் போர்க் குற்றங்கள் குறித்து ஒரு கலப்பு விசாரணை, தீர்ப்பாயத்தை அமைப்போம் என்பதே அத்தீர்மானம். மனித உரிமை ஆணையத்தில் இடம் பெற்றிருந்த 47 நாடுகளில், இந்தியா உள்ளிட்ட 37 நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்தன. இப்போது பன்னாட்டு விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம் என்கிறது இலங்கை. தமிழர்கள் பிரச்சினைக்கு அந்த அரசு மேற் கொள்ள வேண்டிய விசாரணை ஆணையம் நியமித்தல், இராணுவத்தைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட தீர்வுத் திட்டங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அய்.நா. காலஅவகாசம் தந்தது. இப்போது பிப்.24 முதல் மார்ச் 27 வரை நடைபெறவிருக்கும் அய்.நா. கூட்டத்தில் அப்படி ஒரு அறிக்கையை தாக்கல் செய்யாமல், மேலும் தங்களுக்கு கால அவகாசம் கேட்கிறது இலங்கை. தமிழர் பிரச்சினையை தள்ளிப் போட்டுக் கொண்டே போக வேண்டும் என்பதே இதில்...

கழகத் தொடர் போராட்டம் வெற்றி மயிலைப் பகுதி மதுக்கடை மூடப்பட்டது

கழகத் தொடர் போராட்டம் வெற்றி மயிலைப் பகுதி மதுக்கடை மூடப்பட்டது

24.3.2017 அன்று தமிழக அரசு 500 மதுபானக் கடைகள் சென்னை மண்டலத்தில் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. மந்தைவெளி செயின்ட் மேரிஸ் பாலத்தின் அருகிலுள்ள பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபானக் கடையை (கடை எண்.912) மூட தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் பகுதி பொது மக்கள் பல போராட் டங்கள் நடத்தி வந்தனர். இப்போது இந்தக் கடை தமிழக அரசு அறிவிப்பால் மூடப்பட்டது.  இதன் மகிழ்வாக கழகம் சார்பில் தோழர்கள், ஊர் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். பெரியார் முழக்கம் 02032017 இதழ்

தலித் மக்கள் உரிமைகளை பறித்த ‘வாஸ்து’ நம்பிக்கை

தலித் மக்கள் உரிமைகளை பறித்த ‘வாஸ்து’ நம்பிக்கை

வாஸ்து மூடநம்பிக்கை ஜாதிவெறிக்கு துணை போவதோடு அரசின் நலத் திட்டங்களையே முடக்குகிறது என்பதற்கு  சான்றாக தெலுங்கானாவிலிருந்து ஒரு செய்தி வந்துள்ளது. தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், அரசு செலவிலேயே திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5 கோடி தங்க நகைகளை காணிக்கையாக்கினார். அரசு செலவிலேயே தனது ஆலோசகராக, ஒரு வாஸ்து பண்டிதரை நியமித்துக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் அலுவலகத்தையும் சொந்த இல்லத்தையும் ஒன்றாக்கி, அரசு செலவிலேயே 25 கோடி செலவில் வாஸ்து முறைப்படி மாளிகை ஒன்றையும் எழுப்பியிருக்கிறார். அதே தெலுங்கானா மாநிலத்தில்தான் இப்படி ஒரு கூத்தும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏழை மக்களுக்கு இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு கட்டும் திட்டம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது. திப்பண்ணப்பேட்டை எனும் இந்த கிராமத்தில் இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, 2.27 ஏக்கர் இடத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கின. கிராமத்தில் 20 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 16 பயனாளிகள் ‘தலித்’ பிரிவினர். கிராமத்தின் பிரதான சாலை அருகே கட்டப்படும்...

வாழ்வாதாரத்தினை அழிக்கும் ‘அய்ட்ரோ கார்பன்’ திட்டம்

வாழ்வாதாரத்தினை அழிக்கும் ‘அய்ட்ரோ கார்பன்’ திட்டம்

மீத்தேன் திட்ட செயல்பாட்டுக்கான அனுமதியை ரத்து செய்து விட்டதாக மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு அறிவித்தது. இதனால் காவிரி டெல்டாவில் போராட்டங்கள் அடங்கியிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மீத்தேன், ஷேல் கேஸ் போன்ற இன்னொரு வடிவில் இயற்கை எரிவாயு எடுக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் பெயர் ஹைட்ரோ கார்பன் திட்டம் என சொல்லப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என நெடுவாசல் பகுதியில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த திட்டம் மீத்தேன் திட்டத்தின் மறு வடிவம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இப்போது மோடி அரசு அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முன்னர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை மையப்படுத்தி 760 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் 500 மீட்டர் ஆழத்தில் படிந்துள்ள மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் எரிவாயுவை வெளிக்கொணரும் வகையில் காவிரிப் படுகையில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தை அளித்திருந்தது மத்திய அரசு....

திருப்பூரில்  நந்தினிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்பாட்டம்

திருப்பூரில் நந்தினிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் 10.02.2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.30 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் பாலுறவு வன்முறை படுகொலைக்கு உள்ளான நந்தினி சாவுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜசேகரை கைது செய் ! வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்று ! நந்தினி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கு ! தலித் மக்களின் பாதுகாப்பை உறுதி செய் ! – என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தோழமை இயக்கத்தைச் சேர்ந்த பேரவையின் மாவட்டச் செயலாளர் சோழன், திருவள்ளுவர் பேரவை அருண் குமார், இஸ்லாமிய அமைப்பின் ரஹ்மான், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, மாவட்ட செயலாளர் நீதிராசன், மாநகர செயலாளர் மாதவன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். தோழர் சங்கீதா, கொளத்துப் பாளையம் இராமசாமி, முத்து, தனபால், கருணாநிதி, அகிலன், பரிமளராசன்...

முகமூடி போட்டு பாபர் மசூதியை இடித்த கும்பல்

முகமூடி போட்டு பாபர் மசூதியை இடித்த கும்பல்

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) மத நம்பிக்கைகள் உணர்வுகளோடு பிணைந்து கிடக்கின்றன. இந்த உணர்வுகளை மதவெறியாகக் கட்டமைக்கப்படுவது மிக மிக எளிது. பகுத்தறிவை மறுக்கும் வெற்று உணர்வுகள் அவ்வளவு ஆபத்தானவை. ‘நாம் எல்லோரும் இந்து; அதுவே நமக்குப் பெருமை அதுவே நமது அடையாளம்; அதுவே நமக்கான நாடு’ என்று பேசுவதும் உணர்வுகளைத் தூண்டி அதை வெறியாக மாற்றுவதும் தான் சங்பரிவார்களின் தொடர்ந்த வேலைத் திட்டமாக இருக்கிறது. அதற்காகவே அவர்கள் நிகழ்வுகளை திட்டமிட்டு உருவாக்கு கிறார்கள். இந்த உணர்வுகளை ஒரு முனைப் படுத்துவதற்கு ஒரு எதிரியை கட்டமைக்க வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது. இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள். பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரி நாடு என்ற இவர்களின் முழக்கம்,...

கடவுள் – மதங்களை ஒரு பெண் மறுக்கக் கூடாதா?

கடவுள் – மதங்களை ஒரு பெண் மறுக்கக் கூடாதா?

‘ஆனந்தவிகடன்’ மார்ச்  2017 இதழில், சபிதா எழுதிய கட்டுரையிலிருந்து. ‘கணவனை மதிக்காத மனைவியை, படுக்கையைவிட்டு விலக்கி, அடித்துக் கட்டுப்படுத்த லாம்’ என்கிறது குர்ஆன் 4:34. “பெண்ணைப் படைத்த போதே அவளை பொய் சொல்லும் குணத்துடனும், நகைகளுக்கு ஆசைப்படுபவளாகவும், கோபம், தற்குறித்தனம், சிறுமதி, ஏமாற்று, கெட்ட நடத்தை போன்ற சகல துர்குணங்களுடனும் ஆண்டவன் படைத்துவிட்டான். அவளிட மிருந்து தன்னைக் காத்துக் கொள்ள ஆண் கடுமையான முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்கிறது மனுசாஸ்திரம். “பெண்களுக்கு, உண்மைக் கும் பொய்க்கும் வேறுபாடு பார்க்கத் தெரியாது. அவர்கள் மணலைப் போல உறுதியற்ற வர்கள்; பாம்பைப் போல கொடூர மானவர்கள்” என்கிறது பௌத்தம். “பாவ உடம்பைப் பெற்ற பெண் – கடவுளை ஆணில்தான் காண வேண்டும்” என, கிறிஸ்துவம் சொல்கிறது. இப்படியான மத மற்றும் சமயங்களின் தாக்கம்தான் ‘சீறும் பாம்பை நம்பு – சிரிக்கும் பெண்ணை நம்பாதே!’ என ஆட்டோவின் பின்னால் இன்று வரை எழுத வைக்கிறது; சக...

ஈஷாவின் முன்னாள் சீடர் அம்பலப்படுத்துகிறார் ‘குரு’ வேடம் போடுவோர் எவரையும் நம்பாதீர்!

ஈஷாவின் முன்னாள் சீடர் அம்பலப்படுத்துகிறார் ‘குரு’ வேடம் போடுவோர் எவரையும் நம்பாதீர்!

ஜக்கி வாசுதேவ் உரைகளால் ஈர்க்கப்பட்டு, பிறகு தெளிவு கிடைத்த பிறகு அதிலிருந்து வெளிவந்த அனுபவத்தை வாசுகி பாஸ்கர் என்ற முன்னாள் சீடர் முகநூலில் இவ்வாறு பகிர்ந்துள்ளார். ஈஷா மையம் சட்டத்துக்கு புறம்பாக நடப்பது மட்டுமே நாம் ஈஷாவை எதிர்ப்பதற்கு காரணமாக இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அது அரசியல். சட்டப் பிரச்சினை, பாரதப் பிரதமர் மோடியே சிவனை திறந்து வைக்க வருவதால் சட்டப் பிரச்சினைகள் வலுவிழந்து போகுமென்பதை குழந்தைகூட கணிக்கும். ஜக்கிவாசுதேவ் இந்து மத அடையாளத்தோடு இருப்பதால், இதை எதிர்ப்பது, இந்து மதத்திற்கு எதிரான வழக்கமான பிரச்சாரமாக வும் நிறையப் பேர் நினைக்கக் கூடும். நாம் எவ்வளவு விளக்கினாலும் அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியாது. ஆனாலும் நாம் ஒருவரை ஆதரிக்க, எதிர்க்க வலுவான காரணம் இருக்க வேண்டும். ஜக்கியின் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற புத்தகம் ஒரு நண்பர் மூலம் எப்படியோ எனக்கு வந்து சேர்கிறது. ஒருவித வெறுப்போடு தான்...

புரோகிதத் தொழில் ‘கார்ப்பரேட்’ நிறுவனமாகிறது

புரோகிதத் தொழில் ‘கார்ப்பரேட்’ நிறுவனமாகிறது

‘வேதங்களுக்கு காலம் இல்லை; அது கடவுளால் உருவாக்கப்பட்டது; அநாதியானது’ என்று இப்போதும் பார்ப்பனர்களும் ஆர்.எஸ்.எஸ்.சும் கூறிக் கொண்டிருக்கின்றன. அது பழைமையானது என்பதற்காகவே அர்ச்சகர்கள் ‘பஞ்சகச்சத்தோடு’ கீழே மட்டும் மறைத்துக் கொண்டு மேலாடை இல்லாமல், உச்சிக்குடுமி, பூணூல் கோலங்களோடு வலம் வருகிறார்கள். ஆனால், வேத காலங்களில் தோன்றாத நவீன பைக்குகளையும், கார்களையும் கூச்சநாச்சமின்றி பயன்படுத்து கிறார்கள். இந்து மத சாஸ்திரம், கடல் தாண்டக் கூடாது என்றாலும், அதையும் மீறி விமானங்களில் ‘சாஸ்திரமாவது; புடலங்காயவது’ என்று கருதி பறக் கின்றனர். இந்த இரட்டை வாழ்க்கையை சுட்டிக் காட்டினால், ‘இந்து விரோதி’, ‘பிராமண துவேஷி’ என்கிறார்கள். இப்போது, ‘புரோகிதம்’ கார்ப்பரேட் தொழிலாகவே மாறியிருக்கிறது. இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேடு (பிப்.27) விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. பல கோடி ரூபாய் முதலீட்டில் ‘ஹரிவரா’ என்ற கார்ப்பரேட் கம்பெனி ஒன்று இப்போது செயல்படத் தொடங்கி இருக்கிறதாம். இதன் நிறுவனரும் நிர்வாக அதிகாரி யுமான அருண்குமார் சோமாஸ்...

கோவை முழுதும் ‘மோடி’ எதிர்ப்பலைகள் கருப்புக் கொடி: கழகத்தினர் கைது

கோவை முழுதும் ‘மோடி’ எதிர்ப்பலைகள் கருப்புக் கொடி: கழகத்தினர் கைது

வெள்ளியங்கிரி வனப் பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து 4 இலட்சம் சதுர அடியில் யோகா மய்யம் நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் என்ற மோசடி ‘குரு’, ‘ஆதியோகி சிவன்’ என்ற ஒரு சிலையை திறந்து வைத்துள்ளார். இந்த சட்ட மீறலுக்கும் ஆன்மீக மோசடிக்கும் ஏற்பு வழங்குவதுபோல பிரதமர் மோடி இந்த சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் 24.2.2017 அன்று கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். பிற்பகல் 4.30 மணியளவில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கருப்புக் கொடிகளுடன் தோழர்கள் திரண்டு, மோடிக்கும் ஜக்கி வாசுதேவுக்கும் எதிரான முழக்கங்களை எழுப்பினர். 5 மணியளவில் தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 15 பெண்கள் உள்பட 150 தோழர்கள் கைது செய்யப் பட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் கழகத் தோழர்களை ஏற்றி...

பணிந்தது அதிகாரம் ஈரோட்டில் கழகத்தின் வெற்றி!

பணிந்தது அதிகாரம் ஈரோட்டில் கழகத்தின் வெற்றி!

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும், ஈரோடு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப் பாளரும் மத விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என உறுதி அளித்ததால் கழகம் அறிவித் திருந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. இராமாநுஜரின் ஆயிரமா வது ஆண்டு ஜெயந்தி விழா என்ற பெயரில் 18.02.17 அன்று ஈரோடு, பெருந்துறை ரோடு பரிமளம் மகாலில் நிகழ்வு ஒன்று நடக்க இருந்தது. இந்நிகழ்வில், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும், ஈரோடு மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரும் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு பதாகைகளில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாட்டில், இதுபோன்ற மதம் சம்பந்தப்பட்ட விழாக்களில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்வது கூடாது என வலியுறுத்தி, நிகழ்வு நடைபெற உள்ள ஈரோடு பரிமளம் மகால் முன்பு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அனைத்து முற்போக்கு இயக்கங்களை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாரி களுக்கும்...

மோடி எதிர்ப்பை இருட்டடித்த ஊடகங்கள்

மோடி எதிர்ப்பை இருட்டடித்த ஊடகங்கள்

மோடிக்கு கோவையில் கருப்புக் கொடி காட்டி பல்வேறு இயக்கங்கள் காட்டிய எதிர்ப்பு களை ஊடகங்கள் திட்டமிட்டு இருட்டடித்தன. 3 நாட்கள், நாளேடுகளுக்கு ஈஷாவின் ஜகத்குரு பல கோடி ரூபாயை வாரி இறைத்து தந்த விளம்பரங்களும், தொலைக் காட்சிகளுக்கு தந்த விளம்பரங் களுமே ஊடகங்களின் இருட்டடிப்புக்கு முக்கிய காரணம். பெரும் முதலாளிகளும் அரசியல் தலைவர்களும் நடத்தும் அச்சு ஊடகங்களும் தொலைக் காட்சிகளும் வருமானத்தை முன் வைத்தே செயல்படுவதால் மக்கள் எதிர்ப்புகளை புறந்தள்ளி விட்டனர்; மக்களைவிட விளம்பரங்களுக்கு பணத்தை வீசும் ‘ஆன்மிகக்  குரு’க்களின் ‘ஆசீர்வாதங்களே’ அவர்களுக்கு முக்கியத் தேவை போலும்! பெரியார் முழக்கம் 02032017 இதழ்

களப்பணிகளில் கழகத் தோழர்கள் திருச்சியில் கழகக் கூட்டம்

களப்பணிகளில் கழகத் தோழர்கள் திருச்சியில் கழகக் கூட்டம்

கழக சார்பில் திருச்சியில் 21.01.2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பார்ப்பன இந்தியாவின் துரோகம், தமிழீழத்தில், முல்லைப் பெரியாறில், கூடங்குளம் அணு உலையில் – என்ற தலைப்பில் பொதுக் கூட்டம், சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். முன்னதாக புதியவன் (மாவட்ட இணைச் செய லாளர்) வரவேற்புரை ஆற்றினார். துரை தாமோதரன் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியும் நடத்தினார். பால் பிரபாகரன் உரை யாற்றினார். மாவட்ட பொருளாளர் மனோகரன் நன்றி கூறினார். மாவட்ட அமைப்பாளர் மீ.இ. ஆரோக்கியசாமி தலைமையேற்று நடத்தி வைத்தார். கூட்டத்திற்கு முன்பு தமிழீழ இனப்படுகொலை, அணு உலையால் ஏற்படும் பாதிப்பு மற்றும் முல்லைப் பெரியாறு உரிமைகளை விளக்கும் புகைப்படங்கள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.கொட்டும் பனியை பொருட் படுத்தாமல் பொது மக்கள், கழகத் தலைவரின் நீண்ட ஆழமான உரையை ஆர்வமாக கேட்டனர். மாவட்ட தலைவர் டாக்டர் எஸ்.எஸ். முத்து, முத்துச்...

அணுஉலை எதிர்ப்பு இயக்க மாநாட்டுத் தீர்மானங்கள் தனியார் மின் உற்பத்தியை அரசுடைமையாக்குக!

அணுஉலை எதிர்ப்பு இயக்க மாநாட்டுத் தீர்மானங்கள் தனியார் மின் உற்பத்தியை அரசுடைமையாக்குக!

அணுஉலை எதிர்ப்பு இயக்க மாநாட்டில் மக்கள் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மனித குலத்திற்கு எதிரான அணுசக்தி எனும் பேராபத்திற்கு எதிராக கூடங்குளம் திட்டம் அறிவிக்கப்பட்ட 1988 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து போராடும் கூடங்குளம் மக்களின் போராட்டத்தை இம்மாநாடு உயர்த்திப் பிடிக்கிறது. கூடங்குளம் அணுஉலையைத் திறக்க விடாமல் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைத்து இயக்கங்களும் உறுதியாகத் துணை நிற்கும். இப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, பொய்ப் பிரச்சாரத்திற்கு பலியாகாமல் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து அணி திரள வேண்டும் என தமிழக மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. நிலவி வரும் கடும் மின்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு பொது மக்களின் அளவற்ற சுமையைக் குறைக்கத்தக்க வகையில் மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரத்தை தமிழக அரசு கோரிப் பெற வேண்டும் எனவும், நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்கி கூடுதல் மின்சாரத்தைப் பெறவும் தமிழக அரசை இம்மாநாடு வேண்டுகிறது. அதிகரித்து வரும் மின் தேவையை நீக்க...

பன்னாட்டு நிறுவனங்களை கொழுக்க வைக்க தமிழக மக்கள் மீது மின் கட்டணச் சுமையா? (2)

பன்னாட்டு நிறுவனங்களை கொழுக்க வைக்க தமிழக மக்கள் மீது மின் கட்டணச் சுமையா? (2)

மத்திய அரசின் தனியார் மயக் கொள்கையை 1990 ஆம் ஆண்டுகளில் கொண்டு வந்த காங்கிரஸ் – மன்மோகன் கூட்டணியும், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மின்சார ஒழுங்குமுறை வாரியத் தின் (மின்சார வாரியத்திற்கான நீதிமன்றம்) நடவடிக்கையே இதற்குக் காரணமாகும். தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமக்கு மின் உற்பத்தியில் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று கேட்கும் போதெல் லாம் அந்தத் தொகையையும், சில சமயங்களில் அதற்குக் கூடுதலான தொகையையும் மின்சார ஒழுங்குமுறை வாரியம் நம் மினசாரத் துறையிட மிருந்து வாங்கிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கை பெரும்பாலான நமது நலனுக்குப் புறம்பாகவே அமைந்துள்ளது. நம்மைக் கடன் சுமையில் ஆழ்த்தும் செயலையே அது செய்திருக்கிறது. அதோடு நிற்காமல், பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போதுமான மின்சாரம் அளிப்ப தாலும், மிகச் சலுகை விலையில் தடையில்லா மின்சாரம் வழங்குவதாலும் ஏற்படும் நட்டம் அனைத்தையும் நம்மிடமிருந்து வசூலிக்கும் செயலிலும் அது ஈடுபட்டு வருகிறது. வேறு எவருக்காகவோ சலுகை அளிக்க...

பெருமாள் மலையில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பெருமாள் மலையில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம் கருப்புச் சட்டைகளின் வரலாற்றில் அழியா புகழ் கொண்ட பெருமாள் மலையில் நடந்தது. பெருமாள் மலைக்கு ஒரு வரலாற்று சிறப்பு உண்டு என்பது 1985 ஆம் ஆண்டு பக்தர்கள் சிலரால் கடவுளின் சக்தி என்ற முழக்கத்தோடு சென்னிமலை கோவில் படிக்கட்டில் மாட்டுவண்டி ஏற்றினார்கள். அதே சென்னிமலையில் இது கடவுளின் சக்தி அல்ல; மனித சக்தி தான் என்று கூறி பெரியாரிஸ்டுகள் மாட்டு வண்டி ஏற்ற முயன்றபோது காவல்துறை தடுத்தது. அதன் பின்னர் சென்னிமலையைவிட செங்குத்தான படிகளைக் கொண்ட பெருமாள்மலையில் தோழர்கள் மாட்டுவண்டி ஏற்றி கடவுள் சக்தி என்ற புரட்டை முறியடித்தனர். அத்தகைய சிறப்பு மலை பெருமாள் மலை பகுதிக்கு உண்டு. கூட்டத்திற்கு பொ.இராசண்ணா தலைமையேற்க, மாவட்ட தலைவர் நாத்திகசோதி, அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். கிருட்டிணகுமார் வரவேற்புரை நிகழ்த்த, ஈசுவரமூர்த்தி, பகுத்தறிவாளர் பேரவை ப. சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவை....

ஓடுகிறார்…. ஓடுகிறார்… நாராயணசாமி ஓடுகிறார்

ஓடுகிறார்…. ஓடுகிறார்… நாராயணசாமி ஓடுகிறார்

கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் தலைவர் எஸ்.வி. உதயகுமாருக்கு வெளிநாட்டுப் பணம் ரூ.150 கோடி வந்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து, பொதுக் கூட்டங்களிலும் பேசி வந்தார். அமைச்சர் நாராயணசாமியின் இந்த அவதூறுக்கு எதிராக உதயகுமார், மத்திய அமைச்சர் நாராயண சாமிக்கு தனது வழக்கறிஞர் இராதாகிருடடிணன் வழியாக தாக்கீது அனுப்பியிருந்தார். உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் நாராயணசாமி, தொண்டு நிறுவனங்கள் வழியாக உதயகுமாருக்கு பணம் வருவதாகத் தாம் கூறவே இல்லை என்றும், தான் கூறாத ஒன்றை கூறுவதாக உதயகுமார் கூறி, தன்னை களங்கப்படுத்துவதாகவும், தனது வழக்கறிஞர் வழியாக பதில் அனுப்பியுள்ளார். இதன் மூலம்  ‘வீரம்’ பேசிய நாராயணசாமி, தலைகுப்புற சரணடைந்துள்ளார். “உங்களுடைய கட்சிக்காரர் உதயகுமார் கூறியிருப்பதுபோல், அமைச்சர் நாராணசாமி, அவருக்கு எதிராக, எந்தப் புகாரையும் கூறவில்லை. அவர் நடத்தும் தொண்டு நிறுவனம் வரியாக ரூ.150 கோடி பெற்றதாக அமைச்சர் நாராயணசாமி ஒரு...

சங்கரன் கோயில் இடைத் தேர்தல்:  ம.தி.மு.க. வேட்பாளருக்கு கழகம் ஆதரவு

சங்கரன் கோயில் இடைத் தேர்தல்: ம.தி.மு.க. வேட்பாளருக்கு கழகம் ஆதரவு

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் குறித்து கழகத்தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரியார் திராவிடர் கழகம், களத்தில் நின்ற எந்த அணியையும் ஆதரிக்க இயலாத நிலையில் தேர்தலில் விலகி நின்றது. இப்போது சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் தனித்தனியாக களம் இறங்கியுள்ளன. போட்டியிடும் கட்சிகளில் முல்லைப் பெரியாறு உரிமை, கூடங்குளம் எதிர்ப்பு, ஈழத் தமிழர் பிரச்சனை, தூக்குத் தண்டனை எதிர்ப்பு போன்ற தமிழர் உரிமைகளுக்காக முனைப்புடன் போராடி, வாதாடி வரும் அமைப்பான ம.தி.மு.க., தனது கட்சியின் வேட்பாளரை (தோழர் சதன் திருமலைக்குமார்) நிறுத்தியுள்ளது. தமிழர்களின் உரிமைக்கான களங்களில் உறுதியுடன் முனைப்பாகப் போராடிவரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நிறுத்தியுள்ள வேட்பாளரை ஆதரித்து வெற்றிப் பெறச் செய்ய வேண்டுமாய் சங்கரன்கோயில் தொகுதி வாக்காளர்களை பெரியார் திராவிடர் கழகம் கேட்டுக் கொள்கிறது. ம.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டங்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் ஒரு நல்வாய்ப்பு எனக் கருதி...

‘இடிந்தகரை’ மக்கள் குரல் தமிழகத்தின் போர்க்குரலானது அணுசக்திக்கு எதிராக ஆர்ப்பரித்த மக்கள்

‘இடிந்தகரை’ மக்கள் குரல் தமிழகத்தின் போர்க்குரலானது அணுசக்திக்கு எதிராக ஆர்ப்பரித்த மக்கள்

இடிந்தகரை பொது மக்கள் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கடந்த பல மாதங்களாக நடத்தி வந்த போராட்டம் தமிழக மக்களின் ஒருமித்த உரிமைப் போராட்டமாக உருவெடுத் துள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி தலைநகர் சென்னையில் திரண்ட மக்கள் சக்தி இதை உறுதி செய்துவிட்டது. அணுமின் சக்திக்கு எதிராக நடக்கும் போராட்டம் கூடங்குளம், இடிந்தகரை கிராம மக்களின் போராட்டமல்ல; தமிழக மக்களின் போராட்டம் என்பதை சென்னையில் பிப்.26 ஆம் தேதி நடந்த எழுச்சி மிக்க கருத்தரங்கம், மாபெரும் பேரணி, கடலலைபோல் மக்கள் திரண்டிருந்த திறந்த வெளி மாநாடு – ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியது. நாட்டில் பணபலம், அதிகார பலத்துடன் உலா வரும் தேர்தல் அரசியல் பகாசுர கட்சிகளின் பங்களிப்பின்றி வெகு மக்கள் இயக்கங்களுடன் இணைந்து மக்கள் நடத்திய இந்த அணுஉலை எதிர்ப்பியக்க மாநாடு, உலகம் முழுதும் நடந்து வரும் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தில் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும். பல்லாயிரக்கணக்கில் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் பல்வேறு...

பனிமலர்-சதீஷ் சாதி மறுப்பு மணவிழா

பனிமலர்-சதீஷ் சாதி மறுப்பு மணவிழா

கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் இரா.பன்னீர்செல்வம் – தமிழ்ச் செல்வி ஆகியோரின் மகளும், சூலூர்  கழகத் தோழர் வீரமணியின் தங்கையுமான ப. பனிமலர் – இரா. சதீஷ் நாராயணன் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 27.2.2012 அன்று பேராசிரியர் சரசுவதி தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்க்கைத் துணை ஏற்பு நிகழ்வை நடத்தி வைத்தார். பொதுச் செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன், கு.இராமகிருட்டிணன், பேராசிரியர் புரட்சிக்கொடி, சூலூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சூ.ர. தங்கவேலு, வழக்கறிஞர் தடா சந்திரசேகர், வழக்கறிஞர் மகாலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இது ஒரு சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணமாகும். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 08032012 இதழ்

கழகத் தோழர் இரா. டேவிட் – இரா. தீபாஸ்ரீ    வாழ்க்கைத் துணை ஏற்பு விழா

கழகத் தோழர் இரா. டேவிட் – இரா. தீபாஸ்ரீ வாழ்க்கைத் துணை ஏற்பு விழா

22.1.2012 அன்று காலை 11.30 மணிக்கு சேலம் மேற்கு மாவட்டசெயலாளர் தோழர் இரா. டேவிட் – இரா. தீபாஸ்ரீ இணையரின் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையேற்க, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார். இவ்விழாவில் ம.தி.மு.க சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக் கண்ணன், சேலம் சங்கீதா மெடிக்கல் பாலசுப்ரமணியன், சேலம் மேற்கு மாவட்ட கழகத் தலைவர் சக்திவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். பெரியார் முழக்கம் 08032012 இதழ்

டில்லியின் அதிகார ஆணவம்

டில்லியின் அதிகார ஆணவம்

‘தேசிய பயங்கரவாத தடுப்பு மய்யம்’ ஒன்றை உருவாக்க மத்திய உள் துறை அமைச்சகம் மேற் கொண்ட முயற்சிக்கு காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்கள் கடுமையாக எதிர்த்ததால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. மத்திய உளவு நிறுவனமே மாநிலங் களில் நேரடியாக தலையிட்டு பயங்கர வாத நடவடிக்கைகளை மேற்கொள் வதற்காகவே இந்த அமைப்பு உரு வாக்கப்பட்டுள்ளது. மாநில முதல மைச்சர்களை கலந்து ஆலோசிக்கா மலே ‘சட்டாம் பிள்ளைத்’தனமாக மத்திய அரசு செயல்பட்டது. மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் காங்கிரசோ, பா.ஜ.க.வோ, மத்தியில் அமைச்சரவை அமைக்க முடியாது என்ற நிலை வந்த பிறகும் காங்கிரஸ் ஏதோ, அகில இந்திய அளவில் செல்வாக்குள்ள கட்சி போல கற்பனைக் கனவில் மிதந்து கொண் டிருக்கிறது. உண்மையில் சோனியா காந்தி, இப்படி ஒரு கற்பனையில் மூழ்க்கிக் கிடந்தவர்தான். 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு நம்பிக்கை யில்லா வாக்கெடுப்பில் கவிழ்ந்தபோது சோனியா, தன்னிடம் 272 நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆதரவு...

நெடுமானூரில் கழகக் கூட்டம்

நெடுமானூரில் கழகக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 12.2.2012  ஞாயிறு மாலை 6 மணியளவில் கழகக் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நெடுமானூரில் நடைபெற்றது. தெ.செ. நாவாப் பிள்ளை தலைமை தாங்கினார். மு. திரு நாவுக்கரசு, பெரியசாமி, ரா. சிவராமன், ச. வசந்தகுமார் ஆகியோர் முன்னலை வகிக்க, ச.கா. இளையராசா வரவேற்புரையாற்றினார். செ. பிரபு, திருமால், நா.வெற்றிவேல், ந. அய்ய னார் ஆகியோர் கருத்துரையாற்றினர். இறுதியாக காவை இளவரசன் ‘மந்திரமல்ல தந்திரமே’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நிகழ்த்தினார். விழுப்புரம் கணேசன், பெரியார் வெங்கட், கி.ஆசைத்தம்பி, க.இராமர், கல்லை சங்கர் உள்பட ஏராளமான தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அ.ரமேசு நன்றி கூறினார். விழுப்புரம், கடுவனூர் கிளை கழகத் தோழர்களால் உருவாக்கப் பட்டது திராவிடன் சடுகுடு குழு. 18.1.2012 புதன் அன்று பொங்கல் விழாவை முன்னிட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 20 குழுவினர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிப் பெற்ற அணியினருக்கு முதல் பரிசுத்...

திருப்பூரில் கழகம் நடத்திய பொங்கல் விழா

திருப்பூரில் கழகம் நடத்திய பொங்கல் விழா

கழகம் சார்பாக திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் மூன்றாம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தை பொங்கல் விழா 22.1.2012 காலை நடைபெற்றது. அலமேலு பாலாஜி மருத்துவமனை மருத்துவர் மனோகர் பொங்கல் வழங்கி விழாவைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாலை 6 மணி வரை நடைபெற்றது. முல்லை பெரியாறு நாயகன் கர்னல் பென்னிகுயிக் படத்திற்கு சு. துரைசாமி (மாவட்ட தலைவர்) மாலை அணிவித்து துவக்கி வைத்தார். க. அகிலன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இரவு 7 மணிக்கு முல்லைப் பெரியாறு சிக்கலும் தீர்வும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.  தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். கழகத் தோழர்கள் மாஸ்கோ நகர் சம்பூகன், விசயன், பாடகர் தியாகு, மாநகரச் செயலாளர் முகில்ராசு, கிளாகுளம் செந்தில், கோபிநாத், மாதவன், தம்பி, பாலு, நீதியரசன், சாமுண்டிபுரம் மூர்த்தி, தண்டபாணி,...

உண்மைகளை மறைக்கும் இலங்கை விசாரணை ஆணையம்

உண்மைகளை மறைக்கும் இலங்கை விசாரணை ஆணையம்

இலங்கை தனக்குத் தானே ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்துக்கொண்டதற்குக் காரணம் சர்வதேச அளவில் உருவான அழுத்தம்தான். டப்ளின் நகரில் செயல்படும் மக்கள் ‘நிரந்தரத் தீர்ப்பாயம்’ – அதைத் தொடாந்து பான்கி மூன் நியமித்த மூவர்குழு விசாரணை அறிக்கைகள் – இலங்கை அரசின் போர்க் குற்றத்தை உறுதிப்படுத்தின. அய்ரோப்பிய நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பின. இதைத் தொடர்ந்து வேறு வழியின்றி இலங்கை அரசு ஒரு விசாரணை ஆணையம் அமைக்கும் நிலைககு தள்ளப்பட்டது. ஏற்கனவே இலங்கை அதிபர் நியமித்த பல ஆணையங்கள் உருப்படியாக எந்த விளைவுகளையு ம் ஏற்படுத்தாத நிலையில், மீண்டும் இலங்கை ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது கண் துடைப்பு என்றே சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறின. இந்த விசாரணை ஆணையத்தின் தலைவரான சி.ஆர். டி.சில்வா, இலங்கை அரசின் தலைமை சட்ட அதிகாரியாவார். 2006-2009 ஆம் ஆண்டில் இலங்கை அதிபர் ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க ஒரு...

அணுஉலை ஆபத்து விளக்கக் கூட்டம்

அணுஉலை ஆபத்து விளக்கக் கூட்டம்

வடசென்னை பெ.தி.க. சார்பில் கடந்த 22.2.12 அன்று புரசைவாக்கம் பகுதியில் அணுஉலை ஆபத்து என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கழக தலைவர் கொளத்தூர் மணி, துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர்கள், சுந்தரராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வடசென்னை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் குமாரதேவன் வரவேற்புரையாற்ற, மாவட்ட தலைவர் எ.கேசவன் தலைமையேற்க சமர்பா குமரன் மற்றும் நாத்திகன் இன எழுச்சிப் பாடல்கள் நிகழ்ச்சி தொடங்கியது. பெரியார் முழக்கம் 08032012 இதழ்

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி

1912 பார்ப்பன ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த காலம் இது! நூற்றுக்கு மூவராக மட்டுமேயிருந்த பார்ப்பனர்கள் அரசு உயர் பதவிகள் அனைத்திலும் மிகப் பெரிய அளவில் இடம் பெற்று ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக, ஒரு கணக்கெடுப்பின்படி டிப்டி கலெக்டர்களில் 55ரூ, சப்ஜட் களில் 83ரூ, மாவட்ட முன்சீப்களில் 72ரூ பார்ப்பனர்களாகவே இருந்தனர். உயர் பதவியிலுள்ள பார்ப்பனர்கள் தமக்குக் கீழ் உள்ள பார்ப்பனரல்லாதாரைப் பாரபட்சமாக நடத்துதல், பதவி உயர்வு பெறவிடாமல் அழுத்தி வைத்தல், சுய ஜாதி அபிமானத்துடன் அவர்களை இழிவுபடுத்துதல் ஆகிய கொடுமைகளைப் புரிந்து வந்தனர். இக்கொடுமைகளையும், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளியில் எடுத்துச் சொல்லக்கூட திராணி அற்றவர்களாகப் பார்ப்பனரல்லாத அரசு அலுவலர்கள் இருந்தனர். இந்த நிலையில் சென்னை ரெவின்யூபோர்டு அலுவலகத்திலும், மற்றும் சில அரசு அலுவலகங்களிலும் பணி புரிந்த சில பார்ப்பனரல்லாத எழுத்தர்களும் அலுவலர்களும் தங்கள் குறைகளை வெளியிடவும் பார்ப்பன ஆதிக்கத்தால்தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடவும், “சென்னை அய்க்கிய சங்கம்” என்ற...

மதுரைப் பகுதியில் சட்டவிரோத ‘பால்ய’ திருமணங்கள்

மதுரைப் பகுதியில் சட்டவிரோத ‘பால்ய’ திருமணங்கள்

மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுமிகளுக்குத் திருமண வயது வரும் முன்பே ‘பால்ய விவாகம்’ நடத்தும் கொடுமை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சில குறிப்பிட்ட சாதிப் பிரிவைச் சார்ந்தவர்கள், பள்ளிப் படிப்பு படிக்கும் போதே, பெண்கள் ‘காதலில்’ சிக்கி விடுவார்கள் என்று அஞ்சியும் அதனால் தங்களின் குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என்றும், அதைத் தவிர்க்கவே இளம் வயதில் திருமணம் செய்து வைத்து விடுவதாகவும் கூறுகிறார்கள். உசிலம்பட்டி அருகே வி.கல்லுப்பட்டியைச் சார்ந்த 8வது படிக்கும் 13 வயது சிறுமிக்கு அவரைவிட 17 வயது அதிகமுள்ள மணமகனுக்கு அடுத்த சில வாரங்களில் திருமணம் நடைபெற உள்ளது. இது தங்களின் சாதி வழக்கமாகத் தொடர்ந்து வருகிறது என்கிறார்கள். பெண்ணின் தாய்க்கு 11 வயதிலும், பெண்ணின் மூத்த சகோதரிக்கு 12 வயதிலும் திருமணம் நடந்ததாம். ‘எங்களுக்கு குடும்ப கவுரவமும் உறவுகளுமே முக்கியம்’ என்கிறார், 70 வயது மூதாட்டி கருப்பாயி. தாய்மாமனுக்கு பெண் கேட்க முழு உரிமை உண்டு. “எனக்கு பெண்...

பெண்ணுரிமையை மறுக்கும் தனியுடைமை

பெண்ணுரிமையை மறுக்கும் தனியுடைமை

இப்போது இங்கு பெண்ணுக்குத் தாலி கட்டப்பட்டது. இதற்கு என்னதான் தத்துவார்த்தம் சொல்லப்பட்டாலும் இந்தத் தாலி கட்டுவதானது, “இந்தப் பெண் இந்த மாப்பிள்ளையினுடைய சொத்து” என்கின்ற அறிகுறிக்கு ஆகத்தான். இந்தத் தத்துவம் சுலபத்தில் மாறிவிடும் என்று நான் கருத முடியவில்லை. தாலி கட்டாத கல்யாணம் நடந்த போதி லும் மணப்பென் மணமகனுடைய சொத்து என்பது மாறிவிடும் என்று நான் நினைக்க முடியவில்லை. ஏனெனில், இத் திருமணத்துக்குச் சம்மந்தப் படாத கற்பு என்பது ஒன்று பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப் பட்டிருக்கிறது. கற்பு என்பதைச் சுகாதாரத்தையும், சரீரத் தத்துவத்தையும், பொது ஒழுக்கத்தையும் பொறுத்து நான் ஆதரிக்கிறேன் என்றாலும் இன்று அந்த முறையில் கற்பு கையாளப்படுவதில்லை. உதாரணம் என்னவென்றால் கற்பு ஆண்களுக்கு வலியுறுத்தப்படுவதில்லை என்பதிலிருந்தே உணர்ந்து கொள்ளலாம். அதற்கு உதாரணம் என்னவென்றால் இந்துக் கடவுள்கள் என்பவற்றிற்கும்கூட ஆண் கடவுள்களுக்குக் கற்பு வலியுறுத்தப்படுவதில்லை. ஆதலால், அந்த – அதாவது ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கின்ற கற்பு...