அனிதா இல்லத்தில் சென்னை பயணக் குழுவினர்

சென்னை பரப்புரைக் குழுவினர் அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள அனிதா இல்லத்துக்கு 25.8.2018 மாலை 4 மணியளவில் சென்றனர். அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் அனைவரையும் வரவேற்றார். அனிதா இல்லத்துக்கு அருகே புதிதாகத் திறக்கப்பட இருக்கும் அனிதா நினைவு நூலகக் கட்டிடத்துக்கு சென்றனர். அங்கே ‘நீட்’ தேர்வை ஒழித்து, அனிதாவின் கனவை நனவாக்குவோம் என்று உறுதி ஏற்றனர். கழக வெளியீடுகளை நூலகத்துக்கு வழங்கி தோழர்கள் விடைபெற்றுத் திரும்பினர்.

உறுதிமொழி காணொளி

பெரியார் முழக்கம் 30082018 இதழ்

You may also like...