Category: பெரியார் முழக்கம்

வாழ்க்கை இணையேற்பு விழா தோழர் நீலாவதி – சந்திரமோகன் நிலக்கோட்டை 02042017

கழகத்தின் எல்லா குழந்தைகள் பழகு முகாம்களிலும் கலந்துகொண்டு உளவியல், தன்நம்பிக்கை வகுப்புகளை திறம்பட எடுத்துவருபவரும், நிலக்கோட்டை தொழிர் சங்கத் தலைவர் தோழர் செல்வராசு அவர்களின் மகளுமான தோழர் நீலாவதி, சந்திர மோகன் ஆகியோரின் வாழ்க்கைதுணையேற்பு விழா பவுத்த நெறிப்படி, 02042017 அன்று காலை 9-00 மணியளவில் சிறப்புற நடந்தேறியது. வாழ்த்தரங்கம் தமிழ்நாடு இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் முனைவர் செ.கு.தமிழரசன் தலைமையில் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தகைவர் ஆசிரியர் சிவகாமி, திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் முகில்ராசு, முனைவர் பள்ளப்பட்டி மணிமாறன், கும்பகோணம் இணைப்பதிவாளர் தோழர் ரமணிதேவி ஆகியோரும் கலந்துகொண்டு சிறபித்தனர்.

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்- புத்தக அறிமுக விழா தஞ்சாவூர் 01042017

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்- புத்தக அறிமுக விழா தஞ்சாவூர் 01042017 தஞ்சை பசு.கவுதமன் பெரியாரின் மொழி, கலையும் பண்பாடும், இலக்கியம், தத்துவம், சித்திரபுத்திரன் கட்டுரைகள் என்ற ஐந்து தலைப்புகளில் தொகுத்து, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட உள்ள 3,750 பக்கங்கள் கொண்ட தொகுப்புகளைக் குறித்த அறிமுகக் கூட்டத்தை அந்நிறுவனமும், தஞ்சை இலக்கிய வட்டமும் இணைந்து    1-4-2017 அன்று மாலை 6-00 மணியளவில், தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில் நடத்தினர். தஞ்சை இலக்கிய வட்டத் த்ஹொழர் சண்முக சுந்தரத்தின் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவரும் மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவருமான தோழர் ஆர்,நல்லக்கண்ணு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்குறைஞர் இராஜ்குமார் (தி.மு.க), பேராசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அறிமுக உரையாற்றினர். கூட்டத்தின் இறுதியில் தொகுப்பாசிரியர் பசு கவுதமன், அவருக்கு துணை நின்ற அவரது வாழ்விணையர் அறிவுச்செல்வி ஆகியோர் பாராட்டப் பட்டனர்....

“இனி கருஞ்சட்டை குடும்பம்தான் எனது உறவுகள்”

முடிவெய்திய கழகத் தோழர் முனியாண்டி படத்திறப்பில் அவரது துணைவியார் இந்துமதி உருக்கமான பேச்சு வேலூர் மாவட்டம் மகேந்திரவாடி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் க. முனியாண்டி (45) கடந்த பிப்.22 ஆம் தேதி உடல்நலக் குறைவில் முடிவெய்தினார். நெமிலி கழகத் தோழர் திலீபனோடு உற்ற தோழராக களப்பணியாற்றியவர் முனியாண்டி. அவரது படத்திறப்பு நிகழ்வு கடந்த மார்ச் 25ஆம் தேதி பகல்  11 மணியளவில் நெமிலி தனபாக்கியம் திருமண மண்டபத்தில் நிகழ்ந்தது. முனியாண்டியைப் போலவே அவரது துணைவியார் இந்துமதி, கிராமத்தில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் உறுதியாக பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவர். படத்திறப்பு நிகழ்ச்சிக்கு அவரே தலைமை ஏற்றார். பெரியாரிய கொள்கை உணர்வோடு அவர் பேசியது உணர்வுபூர்வமாக இருந்தது. அவர் தனது உரையில் : – “எங்களுக்கு சுயமரியாதை திருமணம்தான் நடந்திச்சி. இதுநாள் வரைக்கும் எங்களுக்குள்யே சண்டை வந்ததே இல்ல. இங்க பேசின எல்லோ ரும் சொன்னா மாதிரி எங்க வீட்டுக் காரருக்கு...

பாரூக் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள்

இசுலாமிய அடிப்படைவாதிகளால் ஃபாரூக் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து 29.03.2017, புதன்கிழமை மாலை 5.00மணிக்கு சேலம் மாவட்டம், நங்கவள்ளி பேருந்து நிலையம் அருகே கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நங்கவள்ளி நகர துணைத் தலைவர் க.மனோஜ்குமார் தலைமையேற்க, நகர பொறுப்பாளர்கள் இராசேந்திரன், கண்ணன், செந்தில், உமாசங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, தலைமைக்குழு உறுப்பினர் சக்திவேல், நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் அன்பு, திருச்செங்கோடு நகரகழகத் தோழர் தனலட்சுமி, ராசு வெங்கடேசு (ஈரோடு), திராவிடர் பண்பாட்டு நடுவத்தின் பொறுப்பாளர் முல்லைவேந்தன் உரையாற்றினர். திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் நிறைவாக பேசினார். மத தீவிரவாதங்கள் தலைதூக்குவது, தமிழகத்தின் தனித்துவத்தை குலைத்து விடும் என்பதை விளக்கி உரையாற்றினார். பழ. உமாசங்கர் நன்றி கூறினார். மேட்டூரில் – கழகத் தோழர் பாரூக் படுகொலையைக் கண்டித்துக் கழகத்தின் சார்பில் 27.3.2017...

காவேரிப்பட்டினம் – அரசு மருத்துவமனை வளாகத்தில் ‘விநாயகன்’ வழிபாடு : மாவட்டக் கழகம் எதிர்ப்பு

கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ வளாகத்தில் அரசாணைகளுக்கு எதிராக விநாயகன் சிலையை திடீரென வைத்து பூஜைகளை நடத்தி வருகிறார்கள். அங்கே மருத்துவராக பணியாற்றும் வட்டார மருத்துவ அலுவலர் இரா. அரிராம் என்பவரே முன்னின்று இந்த பூஜைகளை நடத்திக் கொண்டிருக் கிறார். தகவல் அறிந்து கிருட்டிணகிரி மாவட்ட கழகத் தலைவர் தி.குமார் தலைமையில் கழகத் தோழர்கள் மார்ச் 28ஆம் தேதி காலை மருத்துவ அலுவலர் அரிராமைச் சந்தித்து, அரசு வளாகங்களில் கோயில் கட்டுவது சட்டப்படி தவறு என்பதை சுட்டிக் காட்டி மனு ஒன்றை அளித்தனர். மனுவை அளித்து விட்டு வெளியே வரும்போது முன்கூட்டியே தகவல் அறிந்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். காரர்கள்  மாவட்ட தலைவர் குமார் மற்றும் தோழர்களை சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் வாக்குவாதம் செய்தனர்.  தனது உயிருக்கோ, உடைமை களுக்கோ ஆபத்து ஏற்படுமானால் அதற்கு மருத்துவர் அரிராம் மற்றும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.காரர்களே பொறுப்பு என்று காவேரிப்பட்டினம்...

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிலை இதுதான்!

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிலை இதுதான்!

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் (2011-2016) பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 94 சதவீதம் வழக்குகள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் விடுதலையிலேயே முடிந்திருக்கின்றன. ஜே.பி. அஜீஅரவிந்த் என்ற சமூக செயல்பாட்டாளர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், காவல் துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவுக்கு (சமூகநீதி மற்றும் மனித உரிமைக்கான காவல்துறை இயக்குனரகம்) எழுதிக் கேட்டு இத்தகவல்களைப் பெற்றுள்ளார். 6 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் 1,934 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டிக்கப்பட்ட வழக்குகள் 108 மட்டுமே. காவல்துறை இந்த வழக்குகளை நடத்துவதில் ஆர்வம் காட்டாததும், காவல்துறையில் நிலவும் தலித் மக்களுக்கு எதிரான ஜாதிய மனப்பான்மையும் இதற்கு முக்கிய காரணம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரி ‘தலித்’ சமூகத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும் என்று சட்டம் கூறினாலும் சட்டம் இந்த விதியை கட்டாயப்படுத்தவில்லை. நீதித் துறையில் தலித் நீதிபதிகள் பிரதிநிதித்துவம் குறைந்து வருவதும்...

காவிச் சட்டையும் கருப்புச் சட்டையும் ஒன்றே தானாம்! கூறுகிறது தவ்ஹீத் ஜமாஅத்

காவிச் சட்டையும் கருப்புச் சட்டையும் ஒன்றே தானாம்! கூறுகிறது தவ்ஹீத் ஜமாஅத்

பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும், திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து மத, இறை மறுப்பாளராக இருந்தார் என்பதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் வெறிகொண்ட அவரது இஸ்லாமிய நண்பர்களே பாரூக்கை படுகொலை செய்து காவல்துறையிடம் சரணடைந் துள்ளார்கள். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய கலை இலக்கியவாதிகள் இந்த படுகொலையை கண்டித்துள்ளனர். ‘தமிழ்இந்து’ நாளேடு, தமிழகத்தில் உருவாகி வரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்று தலையங்கம் தீட்டியது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு இலக்கிய வாதிகளின் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி,  இந்திய தவ்ஹீத், விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. பெரியார் இயக்கக் கொள்கையை பேசியதற்காக 31 வயது இளைஞர் ஒருவரை இழந்து நிற்கிறது திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் பாரூக்கை இழந்த நிலையிலும் இஸ்லாமியர் களுடனான உறவு எப்போதும் நீடிக்கும் என்றும், பார்ப்பன – ஜாதிய – இந்துத்துவா கொள்கைகளே திராவிடர் விடுதலைக் கழகத்தின் முதன்மையான...

மேட்டூர் – குருவாரெட்டியூர் கழகப் பொதுக் கூட்டங்கள்: சாக்கோட்டை இளங்கோவன் சிறப்புரை

மேட்டூர் – குருவாரெட்டியூர் கழகப் பொதுக் கூட்டங்கள்: சாக்கோட்டை இளங்கோவன் சிறப்புரை

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் 20.3.2017 அன்று மேட்டூர் சதுரங்காடியில் நடைபெற்றது. மேட்டூர் நகர தலைவர் செ. மார்ட்டின் தலைமை வகிக்க, தலைமை செயற்குழு உறுப்பினர் அ. சக்திவேல், சென்னை இரண்யா ஆகியோர் உரைக்குப் பின் சாக்கோட்டை இளங்கோவன் சிறப்புரையாற்றினார். மேட்டூர் டி.கே. ஆர். இசைக்குழுவின் பறைமுழக்கம் மற்றும் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மீ. அம்ஜத்கான் நன்றியுரையாற்ற கூட்டம் நிறைவுற்றது. குருவையில் : ஈரோடு வடக்கு மாவட்டம் குருவரெட்டியூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “ஆணவ கொலைகளும், அண்மைகால பெண்கள் கொலைகளும்; தீர்வை நோக்கி” எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் 19.03.2017 ஞாயிறு அன்று குருவை பெரியார் திடலில் உள்ள அரங்கநாதன் நினைவரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர்.  பகுத்தறிவு இசைக்குழுவின் சார்பாக பறையாட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக சோதி தலைமையேற்க வேல்முருகன் வரவேற்புரை...

அரசுத் திட்டங்கள் தோல்வி: நெருக்கடிகள் அதிகரிப்பு மோடி ஆட்சியில் முடக்கப்படும் வேலை வாய்ப்புகள்

அரசுத் திட்டங்கள் தோல்வி: நெருக்கடிகள் அதிகரிப்பு மோடி ஆட்சியில் முடக்கப்படும் வேலை வாய்ப்புகள்

“இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 35 வயதுக்கு குறைவான வயதுடையவர்கள் 65 சதவீதம். இந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து இவர்களின் திறன்களை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’’. இது 2013-ம் ஆண்டு இறுதியில் ஆக்ராவில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது. “தற்போது இந்தியாவில் 5 கோடி பேர் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். 2020-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேரின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்’’ என்று தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கடந்த மாதம் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையிலேயே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 2020-ம் ஆண்டுக்குள் 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியுமா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு...

‘இனமுரசு’ சத்தியராஜ், தோழர் பாரூக் குடும்ப நிதியாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கினார்

‘இனமுரசு’ சத்தியராஜ், தோழர் பாரூக் குடும்ப நிதியாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கினார்

‘இனமுரசு’ நடிகர் சத்தியராஜ், பகுத்தறிவு கருத்துக்களை பேசிய காரணத்தினால் இசுலாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் ஃபாருக் குடும்ப நிதியாக ரூ. 1,00,000/= (ரூபாய் ஒரு லட்சம்) காசோலையாக சென்னை மாவட்டக் கழக பொறுப்பாளர்களிடம் வழங்கினார். திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன்,  செந்தில், எப்.டி.எல்., ஆகியோர் நடிகர்சத்யராஜ் இல்லம் சென்று காசோலையைப் பெற்றுக் கொண்டனர். பெரியார் முழக்கம் 06042017 இதழ்

“எங்கள் கழகத்தில் இணைவதைவிட அவருடைய பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்”

“எங்கள் கழகத்தில் இணைவதைவிட அவருடைய பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்”

இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு பலியான கழகத் தோழர் பாரூக்கின் தந்தை, திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயல்பட  விருப்பம் தெரிவித்தாலும் அவர் கழகத்தில் இணைவதைவிட அவரது பாதுகாப்பையே நாங்கள் முக்கியமாகக் கருதுகிறோம்” என்று கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர். இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்டுள்ள செய்தி: “பாரூக்கின் தந்தை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைத்துக் கொள்ள முன் வந்தாலும் கோவை மாவட்ட கழகத்தின் தோழர்கள் பாரூக்கின் தந்தை பாதுகாப்பே முக்கியம். அது பற்றித் தான் நாங்கள் கவலைப்படுகிறோம் என்று கூறினார்கள். இப்போது எங்கள் கவலை எல்லாம் பாரூக்கின் இரண்டு குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் கல்வி வழங்க வேண்டும் என்பதுதான். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது ஒரு குழந்தையின் விருப்பம். அது குறித்தே நாங்கள் சிந்தித்து வருகிறோம். மற்றபடி பாரூக்கின் தந்தை எங்களது கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எங்கள்...

பாரூக்கின் தந்தை ஹமீது உருக்கமான  பேட்டி “திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்”

பாரூக்கின் தந்தை ஹமீது உருக்கமான பேட்டி “திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்”

 ‘கொள்கைக்காகவே பலியான மகனுக்காகப் பெருமை அடைகிறேன்’ “பெரியார் என்ற தலைவர் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; அவரது கொள்கைகள் பற்றி தெரியாது. ஆனால் அவரின் பகுத்தறிவுக் கொள்கைகள்தான் இன்றைய தேவையாக இருக்கிறது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு (மார்ச் 31) அளித்த பேட்டியில் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் தந்தை ஆர் ஹமீது (54) கூறியிருக்கிறார். “தந்தை பெரியாரின் கொள்கைகளை நான் படிக்கத் தொடங்கி விட்டேன்” என்றும் அவர் கூறினார். கோவை உக்கடம் பகுதியில் மக்கள் நெருக்கடி மிகுந்த பிலால் எஸ்டேட் எனும் குறுகிய வீதியில் அவரது சிறிய வீட்டில் அமர்ந்து பேசிய அவர், “நான் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைவது என்று முடிவு செய்துள்ளேன்” என்றார். “மூட நம்பிக்கை களுக்கு எதிராக நான் போராடப் போகிறேன். ஆனால் மதங்களுக்கு எதிராகப் பேசுவதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. நம்முடைய ‘ஆன்மா’தான் கடவுள் என்று நம்புகிறேன்” என்றார்...

துர்கா பூஜை கொண்டாட்டம்: கல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம்

துர்கா பூஜை கொண்டாட்டம்: கல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம்

துர்கா பூஜைகளை நடத்தும்  அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் சாலைகளை ஆக்கிரமித்து பந்தல்களைப்போட்டு ‘குண்டர்’களைப்போல் செயல்படுகிறார்கள் என்று கல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செப். 17 ஆம் தேதி பாலியல் தொழிலாளர்களான பெண்களின் அமைப்பான ‘தர்பார் சமன்வே மகிளா கமிட்டி’ துர்கா பூஜை நடத்துவதற்கு கல்கத்தா காவல்துறை போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து பெண்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சானிப் சட்டர்ஜி துர்கா பூஜைக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டார். அப்போது சாலையின் குறுக்கே பெரிய பந்தல்களைப் போட்டு பூஜைகள் நடத்தும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குவது ஏன்? அமைச்சர்கள் குண்டர்களைப்போல் செயல் படுகிறார்கள் என்று குறிப்பிட்டதோடு இத்தகைய துர்கா பூஜை கொண்டாட்டங்கள் போக்குவரத்துகளுக்கு இடையூறு இல்லாமல் ஒழுங்குபடுத்தப்பட  வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.   பெரியார் முழக்கம் 26092013 இதழ்

தாழ்த்தப்பட்ட பெண் ரவிக்கை அணிவதை பெரியார் எதிர்த்தாரா? திரிபுவாதங்களுக்கு மறுப்பு: பெரியாரே விளக்குகிறார்

தாழ்த்தப்பட்ட பெண் ரவிக்கை அணிவதை பெரியார் எதிர்த்தாரா? திரிபுவாதங்களுக்கு மறுப்பு: பெரியாரே விளக்குகிறார்

தாழ்த்தப்பட்ட பெண்கள் இரவிக்கை அணிவதையே பெரியார் எதிர்த்ததாக உண்மைக்கு மாறான ஒரு செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது.  பெரியார் வாழ்ந்த காலத்திலேயே இந்த செய்தியை பரப்பியபோது, அதை மறுத்து பெரியார் ஆற்றிய உரை ‘விடுதலை’ 15.12.1968 இல் இடம் பெற்றுள்ளது. உரை விவரம்: இன்றைய தினம் பெருமை மிக்க மேயர் (வேலூர் நாராயணன்) அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி யடைகின்றேன். இன்று காலை இருமலுக்காக டாக்டரைப் போய்ப் பார்த்தேன். அவர் மருந்து கொடுத்தார். அதைச் சாப்பிட்டேன். சாயந்திரம் திடீரென்று கைகால் எல்லாம் நடுக்கமேற்பட்டது. மார்பு துடிப்பு 150க்கு வந்துவிட்டது. சாதாரணமாக 72-75 தான் இருக்க வேண்டும். கைகால் விரல்கள் மடக்கினால் வலிக்க ஆரம்பித்தது. உடனே டாக்டரிடம் சென்று காண்பித்தேன். அவர் காலையில் கொடுத்த மருந்தீன் ரீ-ஆக்ஷன் தான் அது வேறொன்றுமில்லை. உங்களுக்கு வயது அதிக மானதால் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும். வேறொன்றுமில்லை என்று...

தலையங்கம் வடக்கு மாகாண தேர்தல் முடிவுகள்

தலையங்கம் வடக்கு மாகாண தேர்தல் முடிவுகள்

25ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்தில் வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்று மாகாண நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டணி. ஓய்வு பெற்ற இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி சி.வி. விக்னேசுவரன் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். ராஜபக்சேயின் அய்க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 7 இடங்களையும் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றி யுள்ளன. இது இலங்கையை ஆளும் ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக தமிழர்கள் வழங்கிய தீர்ப்பு என்பதில் இரண்டு வித கருத்துகளுக்கு இடமில்லை; போருக்குப் பிறகு ராஜபக்சே தமிழர் பகுதியில் மேற்கொண்ட ‘புனரமைப்பு’ நட வடிக்கைகளை ஊதிப் பெருக்கியும் அரசு செயல்பாடுகளால் தமிழர்கள் ராஜபக்சே ஆட்சியின் மீது கொண்டிருந்த வெறுப்பு குறைந்துவிட்டது என்றும் திட்டமிட்டு சில பார்ப்பன ஏடுகள் பரப்பிய கருத்துகள் உண்மையல்ல என்பதையும் இத்தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த மாற்றம் தமிழர் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கொண்டு வரப் போவதும் இல்லை...

பொருளாதார நெருக்கடிக்கு கோயில் தங்கத்தை பயன்படுத்துக: திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

பொருளாதார நெருக்கடிக்கு கோயில் தங்கத்தை பயன்படுத்துக: திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 17.9.2013 செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் கோவில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை எடுத்து நாட்டின் பொருளா தாரத்தை சரி செய்யக் கோரி திருப்பூர் ரயில் நிலையம் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மண்டல அமைப்புச் செயலாளர் விஜயன், செயலவைத் தலைவர் சு. துரைசாமி, மாவட்ட செயலாளர் க.அகிலன், மாநகர செய லாளர் ஜீவா நகர் குமார், மாநகர அமைப்பாளர் நீதி ராசன், மாநகரத் தலைவர் சண்முகம், முகில்ராசு, உடுமலை நகர அமைப்பாளர் மலரினியன், உடுமலை ஒன்றிய அமைப்பாளர் குணசேகரன், மணிகண்டன், நகுலன், பிரசாத், மதுரை மணிகண்டன், தமிழ்நாடு மாணவர் கழகம் ராஜா, பாண்டித்துரை, சௌந்தர், விக்னேஷ், கௌதம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். முன்னதாக பெரியாரின் 135 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு முன்னதாக இந்நிகழ்வுக்கு...

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வலியுறுத்துகிறார் பகுத்தறிவுப் பரப்புரையாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் தேவை

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வலியுறுத்துகிறார் பகுத்தறிவுப் பரப்புரையாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் தேவை

மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கு நீதிமன்றங் களே துணை போவதை சுட்டிக்காட்டியுள்ள உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி எஸ். சந்துரு, பகுத்தறிவுப் பரப்புரை செய்வோரை பாதுகாக்க சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ‘தி இந்து’ (செப். 22) தமிழ் நாளிதழில் இது குறித்து அவர் எழுதியது: மராட்டிய மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இயக்கம் நடத்திய தபோல்கரின் படுகொலை அறிவியல் பூர்வமாக சிந்திப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடெங்கும் மூடர் கூடங்கள் உருவாவதை தடுக்க சட்டங்கள் வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. மராட்டியத்தில் மூட நம்பிக்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்வோரை பாதுகாக்க புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களை அரசே தண்டித்த வரலாறுகளும் உண்டு. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந் தில் மக்கள் பெருக்கத்துக்கு எதிராக குடும்பக் கட்டுப்பாட்டை அன்னிபெசன்ட் அம்மையார் வலியுறுத்தினார். அவர் கிறிஸ்துவ மதத்துக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி சிறையில் அடைத்தனர். 1925 இல் டார்வினின் பரிணாம...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

 ‘வினாயகன்’ சிலை பால் குடிப்பதாக புரளி. கோயில்களில் பக்தர்கள் கூட்டம். – செய்தி பால் குடித்த வினாயகன், சிறுநீர் கழித்தானா? தீண்டாமையில்லாத கிராமமாக பொள்ளாச்சி வட்டத்திலுள்ள சிங்கா நல்லூரை தமிழக அரசு தேர்வு செய்து பரிசு வழங்குகிறது. – செய்தி எப்படியோ தீண்டாமை இல்லாத ஒரு கிராமத்தை அரும்பாடுபட்டு கண்டு பிடித்து விட்டீர்களே! மகத்தான சாதனை போங்க! மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கு எல்லாம் சட்டங்களைக் கொண்டு வர முடியாது.          – ‘துக்ளக்’ சோ அப்போ, மூடநம்பிக்கைகளைப் பாது காப்பதற்கு சட்டம் கொண்டு வரலாமா? மயிலாடுதுறை – மயூரநாதசாமி கோயில் கோபுரத்தில் தங்கக் கலசம் திருட்டு; போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப் பட்டது.          – செய்தி கவனம்! மோப்ப நாய் மாமிசம் சாப்பிடாத ‘சைவ’மாகவும், ‘அக்மார்க்’ இந்துவாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அறநிலையத் துறை அனுமதிக்காது. வினாயகன் சிலை வைப்பதில் தகராறு; கோவையில் சிவசேனை நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய விசுவ இந்து பரிஷத்தினர்...

மதத்தை மறுக்கும் ‘இஸ்லாமிய’ நாத்திகர்கள் கடும் கண்டனம்

மதத்தை மறுக்கும் ‘இஸ்லாமிய’ நாத்திகர்கள் கடும் கண்டனம்

இஸ்லாமிய மதத்தை மறுத்து நாத்திகர் பண்பாட்டுக் கழகம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு சார்பாக சென்னை பாரூக் நினைவு கூட்டத்தில் அலாவுதீன் பதிவு செய்த கண்டனம்: பாரூக் பிறந்த சமூகம் சார்ந்த இஸ்லாம் சமயத்திலிருந்து வெளியேறி எம்மில் பெரும்பாலான நண்பர்களைப் போலவே தன்னையும் மதமற்றவராக இஸ்லாமிலிருந்து வெளியேறியவர் என்று அறிவித்துக் கொண்டார். அதோடு அல்லாமல் இஸ்லாம் என்பது அர்த்தமற்ற – அபத்தமானது. விமர்சனங்களுக்கும், விசாரணைகளுக்கும் அப்பாற்பட்டது அல்ல என்ற கருத்துகளையும் வலிமையாக வலியுறுத்தி வந்தார். பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர் இந்து மதவெறியர்களுக்கு இணையாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பாமர இஸ்லாமிய மக்களை திட்டமிட்டு அரணாக்கிக் கொண்டு, தங்களது சொந்த இலாபத்திற்காக மதத்தின் பெயரால் மக்கள் அனைவரையும் பிளவுபடுத்தும் ஆபத்தான செயலில் ஈடுபடுவதையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். தந்தை பெரியார் உள்ளிட்ட பகுத்தறிவாளர்களின் அறிவார்ந்த கருத்துக்களை கேட்க, படிக்கக் கூடாத மக்களாக முஸ்லிம்களை கையாளும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளையும் பயங்கரவாதிகளையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவ...

பாரூக்கின் தந்தை அளித்த பேட்டி

கத்தியால் வெட்டிய போதும் கடவுள் இல்லை என்று கூறியிருக்கிறார் என் மகன். பாரூக்கின் தந்தை ‘தமிழ் இந்து’ நாளேட்டுக்கு அளித்த பேட்டி: கோவை உக்கடம் லாரிப்பேட்டைக்கு அருகில் உள்ள பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ளது, கடவுள் மறுப்பில் தீவிரம் காட்டியதால் கொல்லப்பட்ட ஃபாரூக்கின் சிறிய வீடு. ஃபாரூக்கின் மனைவி ரஷீதா(31) குர்ஆன் துவா செய்து கொண்டு இருந்தார். அவரைச் சுற்றிலும் கண்ணீருடன் உறவினர்கள். ‘‘நாங்கள் யாரும் எம் மார்க்கத்துக்கு விரோதிகள் அல்ல. தினமும் 5 வேளை நமாஸ் செய்பவர்கள். தவறாது நோன்பு மேற்கொள்பவர்கள். ஃபாரூக்கின் பிள்ளைகள் அப்ரீத்(13), ஹனபா(8) ஆகியோர் இஸ்லாமிக் அராபிக் பள்ளியில்தான் 1, 6-ம் வகுப்பு படிக்கிறார்கள். எந்த நிலையிலும் மார்க்கத்தைத் தாண்டி நடக்குமாறு ஃபாரூக் எங்களிடம் கூறியதில்லை. அதனால், அவரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் நாங்கள் எதிராக நிற்கவில்லை. அதற்காக கொலைகூட செய்வார்களா? வேதத்தை முழுமையாகப் படித்து, புரிந்துகொள்ளாதவர்களாலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். கடவுள் எதையும் மன்னிக்கக் கூடியவர்....

சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு ‘தமிழ் இந்து’ தலையங்கம்

‘தமிழ் இந்து’ நாளேடு மார்ச் 24ஆம் தேதி பாரூக் படுகொலைக் குறித்து எழுதிய தலையங்கம். கோவையில் நடந்திருக்கும் இளைஞர் ஃபாருக் கொலை அதிர்ச்சியைத் தருகிறது. இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்பது அதிர்ச்சியைத் தாண்டி ஆழ்ந்த கவலையை உருவாக்கு கிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செய லாற்றிவந்த ஃபாருக், சமூகத்தின் சாதி, மதப் பாகுபாடு களையும் மூடநம்பிக்கைகளையும் சாடிவந்தவர். தொடர்ந்து இறைமறுப்புக் கொள்கைகளைப் பேசிவந்தவர். அவருடைய செயல்பாட்டின் காரணமாகவே நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகத்துக்கு நாத்திகப் பிரச்சாரம் புதிதல்ல. அதற்கென்று நீண்ட நெடிய மரபு இங்கு இருக்கிறது. குறிப்பாக, நவீன அரசியல் வரலாற்றில் சாதிக்கு எதிராக இங்கு பெரியார் தொடங்கிய கலகம் அதன் மையத்திலேயே கடவுளுக்கும் மதத்துக்கும் எதிரான குரலைத் தாங்கியது. ஆத்திகர்கள் இதற்குக் காலம் முழுவதும் கடுமையாக எதிர்வினையாற்றி வந்திருக்கிறார்கள். ஆனால், அது ஆகப் பெருமளவில்...

இதுவே கழகத்தின் நிலைப்பாடு “இனி தோழமையை முடிவு செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான்!”

பெரியார் இயக்கத்துடனான தோழமையை முடிவு செய்ய வேண்டியது, இஸ்லாமியர் அமைப்புகள்தான் – இதுவே கழகத்தின் நிலைப்பாடு என்று சென்னையில் பாரூக் படத்திறப்பு நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் இறை மறுப்பாளராக இருந்த ஒரே காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் படுகொலைக்கு கண்டனக் கூட்டம் கருத்தரங்கமாக சென்னையில் மார்ச் 26 மாலை இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் கழக சார்பில் நிகழ்ந்தது. ‘பாரூக் படுகொலையும் நமது நிலையும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகரன், ‘சேவ் தமிழ்’ செந்தில், திருமுருகன் காந்தி (மே 17) வழக்கறிஞர் திருமூர்த்தி, இஸ்லாமியராக பிறந்தாலும், இஸ்லாமிய மதக் கருத்தியலை மறுக்கும் தோழர்கள் நடத்தும் நாத்திகர் பண்பாட்டுக் கழகம் சார்பில் அலாவுதின் ஆகியோர்...

பாரூக் படுகொலை: இஸ்லாமிய எழுத்தாளர்கள் – ஜனநாயக சக்திகள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் இஸ்லாமிய அடிப்படை வாதம் தலைதூக்குவது மோசமான விளைவுகளை உருவாக்கி விடும் என்று இஸ்லாமிய எழுத்தாளர்கள், ஜனநாயக சக்திகள் கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் பாரூக்கின் படுகொலை – பல இஸ்லாமிய சிந்தனை யாளர்கள், முற்போக்கு இஸ்லாமிய குழுவினரிடம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உருவாக்கியிருப்ப தோடு, அரை நூற்றாண்டுக்கு மேலாக திராவிடர் இயக்கத்துக்கும் இஸ்லாமியர்களுக்கிடையே நிலவிய நட்பு உறவையும் சிக்கலாக்கி இருக்கிறது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு  (மார்ச் 24, 2017) எழுதியிருக்கிறது. கீரனூர் ஜாகிர் ராஜா, நாவல் சிறுகதைகளை எழுதி வரும் இலக்கியவாதி. தன்னுடைய நாவல்களில் பகுத்தறிவு, முற்போக்கு கருத்துகளை எழுதி வருகிறார். ‘மீன்காரத் தெரு’  என்ற அவரது நாவலில் திண்டுக்கல் கீரனூர் இஸ்லாமியர்களிடையே நிலவும் வர்க்க குழு பாகுபாடுகளை சித்தரித்திருந்தார். தொழில் வணிகத்தில் வசதியுடன் வாழும் ‘இராவுத்தர்’ பிரிவினர், மசூதிகளில் சேவை பணி செய்யும் வசதி யற்ற ‘லப்பை’ பிரிவினருடன் திருமண உறவுகளை தடை...

மதுரையில் இரயில் மறியல்

மதுரையில் இரயில் மறியல்

தமிழகத்தை சுடுகாடாக்கும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை நிறுத்தக் கோரியும் சிங்கள அரசின் தமிழக மீனவர் படுகொலையைக் கண்டிக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் இரயில் மறியல் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மதுரையில் நடைபெற்றது. மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மா.பா. மணி கண்டன் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதில் எஸ்.டி.பி.அய். மாவட்ட செயலாளர் அபுதாகிர், பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப் பாளர் காசு.நாகராசன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் கிட்டு ராசா, ஆதித் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம், கோபால் ராமகிருஷ்ணன் மற்றும் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட தோழமை அமைப்புத் தோழர்களும் கலந்து கொண்டனர். பெரியார் நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு ஆளும் மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டவாறே இரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற 22 தோழர்கள் காவல் துறையினரால் தடுத்து கைது செய்யப்பட்டனர். மாலை தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம்...

பறிபோகிறது, தமிழர் வேலை வாய்ப்புகள் தபால் ஊழியர் பணிநியமனத்தில் இந்திக்காரர்களின் மோசடி

பறிபோகிறது, தமிழர் வேலை வாய்ப்புகள் தபால் ஊழியர் பணிநியமனத்தில் இந்திக்காரர்களின் மோசடி

தமிழ்நாட்டில் உள்ள தபால் நிலையங்களில் தபால்காரர் பதவிகளை நிரப்பக்கோரி கடந்த ஆண்டு 21.10.2016 அன்று தமிழ்நாடு  தபால் வட்டத்தின் சார்பில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பதவிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் இருந்து ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து நுழைவுத்தேர்வும் எழுதினர். இத்தேர்வில் தமிழில் கட்டாயமாக 25 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதவேண்டும்.இதன் முடிவுகள் நான்கு நாட்களுக்கு முன்னர் இணையத் தில் வெளியிடப்பட்டது. தமிழில் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால் மற்ற தாள்களில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழில் தோல்வி அடைந்து இருந்தனர். ஏதோ, தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கு தேர்வு நடப்பதுபோல் அவ்வளவு கடினமாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு, தமிழில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றவர்களின் பட்டியலைப் பார்த்ததும் நம்மவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவர்கள் யாரும் தமிழ்நாட்டில் இல்லை, தமிழர்களும் இல்லை அனைவரும் அரியானா, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஒருவருக்கும் தமிழ் தெரியவில்லை தொடர்பு கொண்ட சற்று நேரத்திற்கு பின் இவர்களின் அலைபேசிகள்...

தக்கலை – நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி ஆர்ப்பாட்டம்

தக்கலை – நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி ஆர்ப்பாட்டம்

தக்கலையில்  : குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. கழக மாவட்டச் செயலாளர் தமிழ் மதி தலைமைத் தாங்கினார். நீதி அரசர் (தலைவர்.பெ.தொ.க) முன்னிலை வகித்தார். விஸ்ணு வரவேற்புரை நிகழ்த்தினார். பால் பிரபாகரன் (கழக பரப்புரைச் செயலாளர்) கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தோழர்கள் மேசியா (ப.நா.புரம் ச.ம.தொ.செயலாளர்,வி.சி.க,), போஸ் (சமூக ஆர்வலர்), முரளீதரன் (பொது பள்ளிகான மாநில மேடை செயலாளர்), இரமேஸ், இராஜேஸ் குமார், இராதாகிருஷ்ணன், (ஆஊருஞ(ஐ), ஜாண் மதி, சூசையப்பா, அனி ஆகியோர் உரையாற்றினர். மஞ்சு குமார் நன்றியுரையுடன் முடிந்தது. பெரியார் முழக்கம் 30032017 இதழ்

தமிழ்நாடு மாணவர் கழகம்  ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் முத்து கிருட்டிணன் மரணத்துக்கு நீதி விசாரணை கோரியும், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிரப்பக் கூடிய இடஒதுக்கீட்டுக்குரிய இடங்களில் நீட்  தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் மார்ச் 19 பகல் 12 மணியளவில் நடந்தது. மத்திய கைலாஷ் அருகே மாணவர்கள் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டபோது காவல்துறை கைது  செய்தது. பாரி சிவக்குமார் தலைமையில் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 20 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

பாரூக் கொலையைக் கண்டித்து இராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

பாரூக் கொலையைக் கண்டித்து இராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, கோவைத் தோழர் பாரூக், இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர அமைப்பாளர் இரா.பிடல்சேகுவேரா தலைமை ஏற்க, ம.தி.மு.க.நகரச் செயலாளர் நா.ஜோதிபாசு,   சி.பி.ஐ . எஸ். மணிமாறன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் பாலகிருஷ்னன் ஆகியோரது கண்டன உரையைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் வைரவேல்,  மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி, ஈரோடு மாவட்ட செயவாளர் வேணுகோபால் மற்றும் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் கண்டன உரையாற்றினர். திருப்பூர் தோழர் சங்கீதா நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

பாரூக் படுகொலை: பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாரூக் படுகொலை: பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கழகத் தோழர் பாரூக் படுகொலையைக் கண்டித்து மார்ச் 25 மாலை 5 மணியளவில் பெரம்பலூர் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. என். செல்லத்துரை (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ் முத்து, குணராசு, வீ. ஞான சேகரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), கிருட்டிணசாமி (அம்பேத்கர் அறக்கட்டளை), அக்ரி. ஆறுமுகம் (தி.க.), சித்தார்த்தன் (தி.க.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். பாரூக் குடும்பத்துக்கு தோழர்கள் ரூ.13,000 நிதியை மாவட்ட தலைவர் தாமோதரனிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

ஈரோடு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம்

ஈரோடு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம்

இஸ்லாம் அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவை தி.வி.க. தோழர்  பரூக் ,  ஈரோடு மாவட்டம் (தெற்கு) சார்பாக 19.03.2017 அன்று மாலை 7 மணிக்கு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ப.குமார் தலைமை ஏற்க, மறைந்த தோழருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. காவை இளவரசன், கோபி வேலுச்சாமி ஆகியோர் இரங்கலுரையாற்றினர். தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

கழக கட்டமைப்புக்கு நன்கொடை

கழக கட்டமைப்புக்கு நன்கொடை

திருச்சி, உய்யகொண்டான் திருமலை, சண்முகா நகர், பணி நிறைவு வனச் சரக அலுவலர் இல. கோவிந்தசாமி கழகக் கட்டமைப்பு நிதியாக ரூ. 10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) கழகத் தலைவர் கொளத்துர் மணியிடம் வழங்கினார். நன்றியுடன் பெறப்பட்டது. பெரியார் முழக்கம் 23032017 இதழ்

சென்னையில் தோழர்கள் சாலை மறியல்

சென்னையில் தோழர்கள் சாலை மறியல்

ஃபாரூக் கொலையுண்டார் என்ற செய்தியறிந்து அடுத்த சில மணி நேரங்களிலே சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அண்ணாசாலையில் சாலை மறியலில் ஈடு பட்டனர். தோழமை அமைப்புகள் மே 17, இளந்தமிழகம், த.பெ.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். “கடவுள் உண்டு என்று கூறும் உரிமை உனக்கு உண்டு என்றால் இல்லை என மறுக்கும் உரிமை எமக்கு உண்டு. கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை” என்று தோழமை அமைப்புகளே உணர்ச்சிகரமாக முழக்கமிட்டனர். பெரியார் சிலை அருகே 30 நிமிடம் சாலைபோக்குவரத்து நின்றது. காவல்துறை 70க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து இரவு விடுதலை செய்தது. தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் உமாபதி முன்னிலையில் இந்த மறியல் நடந்தது. பெரியார் முழக்கம் 23032017 இதழ்

மாணவர் முத்துகிருட்டிணன் இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர், தோழர்கள்

மாணவர் முத்துகிருட்டிணன் இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர், தோழர்கள்

கழகத் தலைவர் கொளத் தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் உள்ளிட்ட தோழர்கள், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தற் கொலை செய்ததாகக் கூறப்பட்ட ஆய்வு மாணவர் முத்துகிருட்டிணனின் இல்லம் சென்று அவரது குடும்பத் தாரை சந்தித்து ஆறுதல் கூறினர். மதுரை மக்கள் கண் காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றி திபேன், அவரது குழுவினருடன் வந்து  ஆறுதல் கூறினார். ஆய்வு மாணவர்  சேலம் முத்து கிருட்டிணனன் உடல் 16-3-2017 அன்று  காலை 6.00 மணியளவில் சேலம், அரிசிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாவட்ட செயலாளர் டேவிட், மாநகரத் தலைவர் பாலு, செயலாளர் பரமேசு, மூணாங்கரடு சரவணன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் திருச்செங்கோடு வைரவேல், ஆத்தூர் மகேந்திரன் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் காலை 8.00 மணிக்கே மாணவர் முத்து கிருட்டிணன் இல்லம் வந்துவிட்டனர்....

ஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று குண்டு வைத்தோம்: அசீமானந்தா ஒப்புதல் ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை

ஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று குண்டு வைத்தோம்: அசீமானந்தா ஒப்புதல் ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை

இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் ரம்சான் தொழுகையில் 5000 இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்த போது குண்டு வெடித்தது. இதில் 3 பேர் இறந்தனர் 17 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல் இதில் இஸ்லாமியர்களே குற்றவாளி என்று கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு குண்டு வைத்தது இந்து தீவிரவாதிகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது கண்டறியப்பட்டது. தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கை விசாரித்தது. சிறப்பு நீதிமன்றம் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர், அசீமானந்தாவை விடுதலை செய்து விட்டு 3 பேரை மட்டும் குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அசீமானந்தா டெல்லி உயர்நீதி மன்றத்தில் பல தாக்குதல்களை நானே திட்டமிட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலமே தந்திருந்தார். ‘காரவான்’ ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன் அம்பாலா சிறையில் அசீமானந்தாவை பேட்டி கண்டார். 2013ஆம் ஆண்டு நான்கு முறை சந்தித்து, 9 மணி நேரம் 26 நிமிடம் பதிவு செய்தார். தனது பயங்கரவாத...

இஸ்லாமிய அமைப்புகள்-இயக்கங்கள்-கடும் கண்டனம்

ஃபாரூக் படுகொலையைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள், இயக்கங்கள், தோழர்கள் வெளியிட்ட அறிக்கையிலிருந்து சில பகுதிகள்: கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு கடந்த 16ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு கோவை, உக்கடம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் பாரூக், சில நபர்களால் கொலை செய்யப்பட்டு இறந்தார். இச்செயலை கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாமிய வழிகாட்டுதலை மீறி யாரேனும் சில முஸ்லிம்கள் இந்தக் கொடூரத்தை செய்திருப்பார் களேயானால் அவர்களை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த நடவடிக்கை இஸ்லாமிய வழிமுறையும் இல்லை என்பதை இந்த நேரத்தில் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். மேலும் குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தோழர் பாரூக் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிக்கிறோம். இக்கூட்டமைப்பு சார்பில் அனைத்து உண்மை குற்றவாளிகளையும் கைது  செய்து...

கழகத் தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

கழகத் தோழர் ஃபாரூக் கடந்த 16.03.2017 அன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பாரூக் அவர்களுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பம் உள்ளது. பெரிய பொருளாதார பிண்ணனி இல்லாத நிலையிலும்கூட தன் குடும்ப வருமானத்திற்கான உழைப்பின் இடையேயும் சமூகம் குறித்த கவலையோடு சிந்தித்து அதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சமுதாய பணியாற்றியவர். தோழர் ஃபாரூக்கின் எதிர்பாராத படுகொலையை அடுத்து அவரின் குடும்பம் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்துள்ள இச்சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து தோழர் ஃபாரூக்  குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வோம். வாய்ப்பு உள்ள தோழர்கள் தங்களால் இயன்ற நிதியை கீழ் உள்ள கழகத்தின் பொருளாளர் துரைசாமி  வங்கிக்கணக்கில் செலுத்தியுதவுமாறு வேண்டுகிறோம். K.S.Duraisamy – Savings A/c No : 10235169636. IFSC Code : SBIN0009314.  State bank of india, Veerapandi...

கொள்கைத் தோழர் – கோவை ஃபாரூக் உயிரைப் பறித்தது – இஸ்லாமிய அடிப்படைவாதம்

கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாருக், பெரியார் கொள்கையை ஏற்று கடவுள்- மத மறுப்பாளராக வாழ்ந்ததோடு தனது முகநூலிலும் தனது மதத்தின் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டு வந்தார். இறை மறுப்பாளராக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இஸ்லாமிய அடிப்படைவாத வெறியில் ஊறிப்போன ஒரு கும்பல் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தது. கடந்த 16ஆம் தேதி இரவு உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இந்த கொடூர சம்பவம் இரவு 11.15 மணியளவில் நடந்தது. பழைய இரும்புப் பொருள்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார் ஃபாரூக். தொழில் தொடர்பாக பேச விரும்புவதாக தனக்கு வந்த தொலைபேசி அழைப்பை ஏற்று, பேசிய நபர் வரச் சொன்ன இடத்துக்கு தனது மோட்டார் பைக்கில் புறப்பட்டார். சுத்திகரிப்பு நிலையம் அருகே பின்னாலிருந்து வந்த ஒரு கும்பல் தாக்கி கொடூரமாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. வழியில் சென்றவர்கள் அலறல் சத்தம் கேட்டு உதவிக்கு...

மதுரையில் பெரியார் நினைவு நாள்

மதுரையில் பெரியார் நினைவு நாள்

24.12.2011 அன்று காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து மாவடட தலைவர் வழக்கறிஞர் அ. பெரியசாமி தலைமையில் ஊர்வலமாகச் சென்று பெரியார் சிலைக்கும், சாதி ஒழிப்பு போராளி களுக்கும், தமிழ்நாடு விடுதலைக்குப் போராடி உயிர்நீத்த தோழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டனர். ஊர்வலத்தில் மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்ப்பித்தன், வெண்மணி, மாவட்ட செயலாளர் விடுதலை சேகர், பா. ஸ்டா லின் மற்றும் வழக்கறிஞர்கள், பொற்கொடி, பாரதி, பகத்சிங், இராசேந்திரன், விஜய பாரதி, மதி, வேல்முருகன், தமிழ்ப் புலி மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண் டனர். பெரியார் முழக்கம் 05012012 இதழ்  

ஒட்டப் பிடாரத்தில்

ஒட்டப் பிடாரத்தில்

10.12.2011 அன்று மாலை 6 மணியளவில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் மரண தண்டனைக்கு எதிரான விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ச.கா. பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, மாவட்ட செயலாளர் கோ.அ.குமார், ம.தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் வீரபாண்டி செல்லச்சாமி, ம.தி.மு.க. மீனவரணியின் நக்கீரன் ஆகியோர் உரையாற்றினர். தலைமை செயற்குழு உறுப்பினர் பால். பிரபாகரன் விளக்கவுரையாற்றினார். பெரியார் முழக்கம் 05012012 இதழ்  

கயத்தாறில் தூக்கு தண்டனை எதிர்ப்புக் கூட்டம்

கயத்தாறில் தூக்கு தண்டனை எதிர்ப்புக் கூட்டம்

மரண தண்டனைக்கு எதிரான விளக்கப் பொதுக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறில் பால் பண்ணை எதிரில் கழக சார்பில் 3.12.11 அன்று நடந்தது. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, மாவட்டச் செயலாளர் கோ. அ. குமார், ம.தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் கணபதி பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். கழக ஆலோசனைக் குழு உறுப்பினர் பால் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். நிகழ்வில், மாவட்ட பொருளாளர் க.மதன், மாநகர தலைவர் சா.த. பிரபாகரன், மாநகர துணைத் தலைவர் ரவிசங்கர், மாநகரச் செயலாளர் பால். அறிவழகன், நெல்லை மாவட்டச் செயலாளர் சி.ஆ.காசிராசன், தோழர்கள் சண்முகராசு, ம.திலீபன், இரா.சிங்கணன் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள், தமிழ்ப் புலிகள் அமைப்பின் நெல்லை மாயா ஆகியோரும், ம.தி.மு.க. தோழர்களும் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட இணைச் செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 05012012 இதழ்

‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம் தனித் தமிழ்நாடு பெறுவதே – நமது ஒரே இலக்காக வேண்டும்!

‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம் தனித் தமிழ்நாடு பெறுவதே – நமது ஒரே இலக்காக வேண்டும்!

29.1.56 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வேலூர் டவுன் ஹாலில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு: தமிழ்நாட்டிற்கு இந்திய அரசாங்கம் இழைத்து வரும் கொடுமைகளைக் கவனித்தால் மிகவும் முக்கியமாக நான்கைந்து விஷயங்களில் நாம் கிளர்ச்சி செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். அவைகளில் ஒன்றாக தமிழ்நாட்டுடன் இணைக்கப் பட வேண்டிய தமிழர்கள் பெரும்பான்மையும் வசித்து வரும் தேவிகுளம்-பீர்மேடு போன்ற பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்பதே. ஆனால் இது அவசியமற்றதாகி விட்டது.காரணம் தலைக்கே ஆபத்து வருகையில் தலைப்பாகையைப் பத்திரப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதைப்போல் நம்முடைய அடிப்படையான நாட்டுக்கே கேடு வருகையில் இப்போது தேவிகுளம்-பீர்மேடு என்று கதறுவதில் பலன் இல்லை. முதலில் நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு நாட்டைக் காப்பாற்றி அதன் பிறகு வேண்டுமானால், தேவிகுளம், பீர்மேடு பற்றிய கவலை கொள்ளலாம். இன்றைய தினம் நாட்டையே பறி கொடுக்கும் நிலைமை யில் தட்சிண பிரதேசம் என்று...

ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி.!

ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி.!

காங்கிரசுக்குள்ளேயே இருந்து கொண்டு 1946 ஆம் ஆண்டு ‘தமிழரசுக் கழகம்’ என்ற அமைப்பை உருவாக்கிய ம.பொ.சி., முதலில் ‘சுதந்திர தமிழரசு’ அமைப்பதே இதன் லட்சியம் என்று அறிவித்தார். பிறகு 1953 இல் வெளியார் சுரண்டல் இல்லாத தமிழகம் அமைந்தாலே போதும் என்று தனது கொள்கையை சுருக்கிக் கொண்டார். மாநிலங்களை சுதந்திரமான உறுப்பு நாடுகளாக பிரிட்டிஷ் அரசே அங்கீகரித்ததால் தான், ‘சுதந்திரத் தமிழகம்’ என்ற கோரிக்கையை தாம் முன் வைத்ததாகவும், இந்தியாவிலிருந்து, தமிழகம் தனியே பிரிந்து நிற்கிறது என்று பொருளில் கூறவில்லை என்றும் பிறகு சுய விளக்கம் அளித்தார். ‘இந்து’ பார்ப்பன நாளேட்டுக்கு ம.பொ.சி. எழுதிய ஒரு கடிதத்தில் , “என் ஆயுளில், இது வரை சுதந்திர தமிழ்க் குடியரசு தேவை என்று பேசியதே இல்லை; (தனிநாடு கேட்கும்) இந்த மாதிரியான பிளவு முயற்சிகளை எதிர்ப்பதற் காகவே தமிழரசு கழகம் தொடங்கப்பட்டது” என்று, தான் தனிநாடு கேட்பதாக ‘இந்து’ வெளியிட்ட செய்தியை மறுத்தார்....

பார்ப்பனர்களுக்கு – நோபல் பரிசு விஞ்ஞானி அறைகூவல் மூடநம்பிக்கைகளை மூட்டை கட்டுங்கள்

பார்ப்பனர்களுக்கு – நோபல் பரிசு விஞ்ஞானி அறைகூவல் மூடநம்பிக்கைகளை மூட்டை கட்டுங்கள்

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணா, மூடநம்பிக்கைகளை கைவிட்டு, அறிவியலை நம்புவதற்கு முன்வருமாறு பார்ப்பனர்களிடம் அறைகூவல் விடுத்துள்ளார். மயிலாப்பூரில் பார்ப்பன நிறுவனமான பாரதிய வித்யாபவனில், மூடநம்பிக்கைக்கு எதிராக நோபல் பரிசு பெற்ற ஒரு பார்ப்பனர் துணிவுடன், தமது கருத்துகளை முன் வைத்தது, பார்ப்பனக் கோட்டையில் வீசப்பட்ட அறிவு வெடிகுண்டாகும். அந்த அரங்கில் படித்த வைதீகப் பார்ப்பனர்கள் பெருமளவில் குழுமியிருந்தனர். பார்ப்பன தொழிலதிபரும் ராஜகோபாலாச்சாரி தொடங்கிய ‘சுதந்திரா’ கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவருமான எஸ்.வி. நரசிம்மன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவுக்கு நோபல் பரிசு பெற்ற பார்ப்பன விஞ்ஞானி தமிழகத்தைச் சார்ந்த வெங்கட்ராமன் ராம கிருஷ்ணனை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயிரியல் தொழில் நுட்பத் துறையில் ஆய்வாளராக பணியாற்றும் அவர், வேதியலில் தமது கண்டுபிடிப்புக்காக 2009 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர். அறிவியலுக்கு எதிராக பழமை சிந்தனைகளை வைதீகக் கருத்துகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு,...

அயன்புரம் தினகரன்-ஜெயந்தி இணையரின் நன்கொடை

அயன்புரம் தினகரன்-ஜெயந்தி இணையரின் நன்கொடை

கழக இணையர்கள் அயன்புரம் என்.தினகரன் – ஜெயந்தி ஆகியோரின் திருமண நாளான ஜனவரி 7 ஆம் தேதி கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து கழக ஏட்டின் வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினர். கழகத் தோழர் தினகரன், இப்போது அங்கோலா நாட்டில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் தாயகம் திரும்பியுள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 12012012 இதழ்

‘பெல்’ தங்கராசுவை நேரில் சந்தித்து தோழர்கள் நலம் விசாரித்தனர்

‘பெல்’ தங்கராசுவை நேரில் சந்தித்து தோழர்கள் நலம் விசாரித்தனர்

உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துவரும் திருச்சி தோழர் ‘பெல்’ தங்கராசு அவர்களை தூவாக்குடியிலுள்ள அவரது இல்லத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் புதியவன், தாமரைக்கண்ணன், குணா, டாக்டர் தமிழ்ச்சுடர் ஆகியோர் 26.12.2011 அன்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். பெல். தங்கராசு நலம் பெற்று வருகிறார். பெரியார் முழக்கம் 12012012 இதழ்

சூலூரில் கருத்தரங்கம்

சூலூரில் கருத்தரங்கம்

சூலூர் ஒன்றிய பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழர் விடுதலை இயக்கத்தின் சார்பில் டிசம்பர் 25 இல் மனுதர்ம எரிப்பு நாள் மற்றும் கீழ்வெண்மணி படுகொலை நாளில் சமூகநீதிக் கருத்தரங்கம் வே. ஆனைமுத்து அவைக் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அ.ப. சிவா தலைமை தாங்கினார். பொறியாளர் ந. பன்னீர் செல்வம் தொடக்கவுரையாற்றினார். வே. மதி மாறன், ‘பெரியார்-அம்பேத்கர் இன்றைய தேவை’ என்ற தலைப்பில் மூன்று மணி நேரம் பேசினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தோழர்களின் கேள்விகளுக்கு பதி லளித்தார். நிகழ்ச்சியில் 50க்கும் மேற் பட்ட தோழர்கள் கலந்து கொண்டு கருத்துகளைக் கேட்டனர். இறுதியாக தோழர் பேரறிவாளன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 12012012 இதழ்

சூலூர் தோழர்கள் தயாரித்துள்ள குறும்படம் ‘துக்கம்’

சூலூர் தோழர்கள் தயாரித்துள்ள குறும்படம் ‘துக்கம்’

சூலூர் ஒன்றியக் கழகம் சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம் 24.12.2011 மாலை 6 மணியளவில் கண்ணம்பாளையம் தேர்நிலை திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் எழுதி இயக்கி நடித்த ‘துக்கம்’ குறும்படம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வெ.அ.நாராயணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். அ.ப.சிவா குறும்படத்தைப் பற்றி அறிமுகவுரையாற்றினார். குறும்படத்தை எழுத்தாளர் வே.மதிமாறன் வெளியிட தமிழ்நாடு மாணவர் கழகத்தினுடைய மாநில அமைப்பாளர் பன்னீர்செல்வம், திருப்பூர் மாவட்டத் தலைவர் சு. துரைசாமி, கண்ணம்பாளையம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் மௌனசாமி, 6வது வார்டு உறுப்பினர் இராமத்தாள் கணேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியின் நடுவில் ‘துக்கம்’ குறும்படம் திரையிடப்பட்டது. பெரும்பாலான மக்கள் குறும்படத்தைப் பார்த்தனர். மேற்கு மண்டலத்தில் நிலவும் தீண்டாமையின் ஒரு வடிவத்தை சுட்டிக்காட்டும் இந்தப் படம் பொது மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தோழர்கள் கா.சு.நாகராசன், நீலவேந்தன், வே.மதிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர் மா....

கழக புதிய வெளியீடுகள்: திருச்சியில் அறிமுகம்

கழக புதிய வெளியீடுகள்: திருச்சியில் அறிமுகம்

திருச்சி மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக 26.12.2011 மாலை 6 மணிக்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள அய்க்கப் அரங்கத்தில் பார்ப்பன – இந்திய தேசியத்தை பயன்படுத்தி மலையாளிகளின் துரோகம் தமிழீழம் 2. முல்லைப் பெரியாறு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் டாக்டர் எஸ்.எஸ். முத்து தலைமையேற்றார். இந்திய அரசியல் சட்ட எரிப்பு வீரர்கள் முத்துச்செழியன், இளந்தாடி துரைராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கந்தவேல் குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தொடர்ந்து கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு’, ‘அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி’ என்ற நூல்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த டாக்டர் ரொகையா வெளியிட, விடுதலை சிறுத்தைக் கட்சி மாவட்ட செயலாளர் தமிழாதன், புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர் சங்கர், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் திராவிடன்...

எல்லை மீட்புப் போராட்டம்: பெரியார்-ம.பொ.சி. கடிதத் தொடர்புகள் உணர்த்தும் உண்மைகள்!

எல்லை மீட்புப் போராட்டம்: பெரியார்-ம.பொ.சி. கடிதத் தொடர்புகள் உணர்த்தும் உண்மைகள்!

நான் அதற்கு திராவிட பார்லிமெண்டரிக் கட்சித் தலைவர் நண்பர் சுயம்பிரகாசம் ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரால் உள்ள கட்சிக்குத் தலைவராய் இருந்துவரும் சர்.பி.டி. ராஜன் மற்றும் கம்யூனிஸ்டு, சோஷ்யலிஸ்ட் தோழர்களைக் கேட்டு அவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றேன். அவர் அதற்கு “கண்ணீர்த் துளிகளைச் சேர்க்கலாமா” என்றார். நான் இப்போது, “அவர்கள் தேவையற்றவர்கள். அவர்களால் ஆகக் கூடியது ஒன்றும் கிடையாது. சும்மா கூட்டத்திற்காகிலும் ஆள் சேர்ப்பது சரி யில்லை. கொஞ்சமாக இருந்தாலும் பொறுக்கி எடுத்த திறமைசாலிகளாக இருந்தால் போதும். உபயோகமற்றதுகளை எல்லாம் சேர்த்து  கொண் டால் வீண் கயவாளித்தனத்துக்கு இடமாகிவிடும்” என்று சொல்லிவிட்டேன். பிறகு வீட்டிற்கு வந்தவுடன் தொலைபேசியில் நண்பர் ம.பொ.சி. என்னைக் கூப்பிட்டார். ‘என்ன விசயம்’ என்று கேட் டேன். அதற்குள் வீட்டிற்குப் போனவுடன் என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை. “நான் கம்யூனிஸ்டுக்காரர்களைக் கேட்டேன், அவர்கள் மேலிடத்தை விசாரித்து சம்மதம் பெற்ற பின்பு தான் கலந்து கொள்வோம் என்றனர். சோஷியலிஸ்டுகள் சரி...

இந்து பஞ்சாங்க கணிப்புகள் அறிவியலுக்கு எதிரானவை

இந்து பஞ்சாங்க கணிப்புகள் அறிவியலுக்கு எதிரானவை

தமிழக முதல்வர் ஜெயலலிதா-இந்துத்துவ உணர்வோடு தமிழ்ப் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றினாலும் தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே என்பதை ஆணித்தரமாக விளக்கும் கட்டுரை இது. கட்டுரை ஆசிரியர் ‘சோதிடப் புரட்டு’ நூலை எழுதிய கனடா வாழ் சிந்தனையாளர் நக்கீரன். பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது அவற்றைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்ள மாட்டான். இந்த அறுபது ஆண்டுகளை கடவுளர்களோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் புராணிகர்கள் உருவாக்கி விட்டார்கள். நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்குப் புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவ’ ஆண்டிலிருந்து தான் தொடங்க...